அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
பாகம் - 35 

ப்ச்" என்றபடி ஃபோனை வெறித்தேன். இத்தோடு பத்தாவது முறையாக என் அழைப்பை துண்டித்துவிட்டாள். அனுப்பிய மெசேஜ்க்கும் பதில் இல்லை. படத்துக்கு போகலாம், நேரா தியேட்டர் வந்திடு என்று சொல்லியவள், படம் ஆரம்பிப்பதற்கு இன்னும் பத்து நிமிடமே இருக்க, இன்னும் வரவில்லை, அழைத்தால் ஃபோனயும் எடுக்கவில்லை.

ஹாய்" என்ற சத்த கேட்டு திரும்பிப் பார்த்தேன். என்னை பார்த்து ஒரு பெண் சிரித்துக் கொண்டிருந்தாள். எங்கேயோ பார்த்த முகம், ஆனால் நினைவில் வரவில்லை. அதை காட்டிக் கொள்ளாமல் நானும் திரும்ப ஒரு "ஹாய்" சொன்னேன்.

மணி தான?” அவள் கேட்க, நான் தலையாட்டினேன்.

ஜினாலி உன்ன பத்தி நிறைய சொல்லிருக்கா!!” எண்ணப்பத்தி இரண்டு பெண்கள் பேசியிருக்கிறார்கள் என்று அறிந்ததும், உற்சாகம் ஆனேன். ஆண்களின் இயல்பும் அதுதானே.

என்ன இந்த பக்கம்!!” நன்றாக தெரிந்தவள் போல பேசினாள்

மூவி பார்க்கதான்!! ஃப்ரெண்ட்ஸ்க்கு வெயிட்டிங்!!” ஒட்டுதல் இல்லாமல் பதில் சொன்னேன், சுற்றிலும் பார்வையை செலுத்தியபடி

என்ன மூவி?” சொன்னேன்.

நானும் அந்த மூவிக்குதான் டிக்கெட்ஸ் வாங்கினேன்!! பட் ஃப்ரெண்ட் வரலனு டிராப் ஆயிட்டான்!! அதுதான் படம் பார்க்கலாமா? இல்ல திரும்ப போகலாமானு யோசிச்சிட்டு இருக்கேன்!!” நான் எதுவும் கேக்கக்காமலே அவள் பதில் சொல்ல, அப்பொழுது தான் நியாபகம் வந்தது, அந்த பெண் ஜினாலியின் கஸீன். என் பிறந்தநாள் பார்ட்டி அன்று இவள் தான் என்னுடன் ஆடிக்கொண்டிருந்த ஜினாலியை அழைத்து சென்றது.

ப்ராப்ளம் எதுவும் இல்லனா, ஜாயின் அஸ்!!” அவள் யாரென்று தெரிந்ததும், சாதரணாமாக கேக்க,

ரியல்லி!! எனக்கு தனியா படம் பார்க்க புடிக்காது!! சேம்டைம், இன்னைக்கு இந்த படம் பார்த்தே ஆகணும்னு தான் அந்த டாக்-க நம்பி டிக்கெட்ஸ் புக் பன்னினேன். ஆர் யு சூர்? உன் ஃப்ரெண்ட்ஸ் தப்பா எடுத்துக்க மாட்டாங்களே?” அவள் வாயெல்லாம் பல்லாக கேட்க,

நாட் அன் இஷ்யு, உங்க டிக்கெட்ஸ் குடுங்க" அவள் டிக்கெட்ஸ் வாங்கி, அவளும் எங்களுடன் சேர்ந்து அமர ஏதுவாக எங்கள் இருக்கையை மாற்றி வாங்கிக் கொண்டு வந்து, அதை அவளிடம் சொல்ல,

தாங்க்ஸ்!! ரியல்லி தாங்க யு!! ஐ ரியல்லி காண்ட் வாட்ச் அ மூவி அலோன்!!" என்று நன்றியை, உற்சாகமாக காட்டினாள். அவள் அப்படி உற்சாகம் கட்டிக் கொண்டிருக்கும் நேரம்தான் மதுவும், நேத்ராவும் வந்தார்கள். நான் மதுவைப் பார்த்து புன்னகை பூக்க, அது முழுதாக பூக்கும் முன்பே

கால் எடுக்கலனா பிசியா இருக்கேனு அர்த்தம்!! பொறுக்க முடியாதா? நொய்யி!! நொய்யி!! திரும்ப திரும்ப கால் பண்ணுறே!!” பொறிந்து தள்ளியவள், நான் பதில் அளிக்கும் முன்பே

லேட் ஆச்சு!! போகலாம்!!” நேத்ராவைப் பார்த்து சொல்ல, நேத்ரா என்னைப் பார்த்து அடக்க முடியாமல் சிரித்தாள். அவர்கள் இருவரும் முன்னால் செல்ல, என் அருகில் நின்றவளோ கேள்வியாக என்னைப் பார்க்க, “இதெல்லாம் ஒண்ணுமே இல்ல" என்பது போல தோளை உலுக்கி காட்டிவிட்டு, அவளையும் அழைத்துக் கொண்டு தியேட்டர் உள்ளே சென்றேன். மது ஆன்லைனில் புக்கிங்க செய்த சீட்டில் அமரப்போக, நான் புக்கிங்கை மாற்றியதை சொன்னேன். அப்பொழுத்து தான் எனது அருகில் இருந்தவளை கவனித்தனர், இருவரும். இவள் "ஹாய்" சொல்ல, இருவரும் "ஹாய்" சொல்லிவிட்டு, சீட்டில் சென்று அமர்ந்தோம்.

முதல் சீட்டில் மது அமர, அவளுக்கு அடுத்து நான் அமர்ந்து கொண்டேன். இவள் நேத்ராவை முந்திக்கொண்டு என் அருகில் அமர, என்னைப் பார்த்து நாக்கலாக சிரித்துக் கொண்டே சென்ற நேத்ரா அடுத்து அமர்ந்து கொண்டாள். படம் ஆரம்பித்து இரண்டு நிமிடத்தில், என் கையை கிள்ளினால் மது.

யார் அந்த பொண்ணு?” நான் மதுவின் பக்கம் சாய, அவள் கேட்டாள்.

ஜினாலியோட கஸீன்!!” வேற வழி இல்லாமல் சொல்லும் போதுதான், எனக்கு நானே சூனியம் வைத்துக்கொண்டதை அறிந்தேன். அதற்கு பிறகு மது எதுவும் பேசவில்லை.

அவளோட ஃப்ரெண்ட் கடைசி நிமிஷத்துல வரலனு சொல்லிட்டானாம், அதுதான் நம்ம கூட ஜாயின் பன்னிக்கவானு கேட்டா!!” அவள் வேறு எதுவும் கேட்காததால் நானாக விளக்கம் கொடுக்க, அவள் நான் சொன்னதை கண்டுகொண்டாதாக கூட தெரியவில்லை. அப்பொழுத்து தான் மற்றொன்று நினைவுக்கு வந்தது, ஜினாலியின் கஸீன் பெயர் கூட தெரியாது எனக்கு, அவள் சொல்லவும் இல்லை, நான் கேட்கவும் இல்லை. ஒரு பத்து நிமிடம் இருக்கும், பெயர் தெரியாத அவள் அலைபேசியில் அழைப்பு வர, எடுத்து பேசிவிட்டு, என்னிடம் திரும்பியவள், டிக்கெட்-டை கேட்டாள். நான் கேள்வியுடன் பார்க்க

என் ஃப்ரெண்ட் வந்துட்டான்!!” என்றவளை மீண்டும் கேள்வியுடன் பார்க்க, சிரித்தவள் ஃபோனை நோண்டி, பின் என்னிடம் காட்டினாள்.

“Movie with a ******” அவள் சிரித்தவாறு எடுத்த செல்ஃப்பியில் நான் எங்கோ வெறித்தவாறு இருந்தேன். “இத எப்போ எடுத்தா?” என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் போதே, என் கையில் இருந்து டிக்கெட்-டை பிடிங்கிக் கொண்டு வெளியே சென்றாள், நான் அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தேன். தலையில் "நாங்" என்று விழுந்த கொட்டில், சுயநிலை உணர, தலையை தேய்த்துக் கொண்டே மதுவைப் பார்த்தால், அவள் என்னை முறைத்துக் கொண்டிருந்தாள். அவளும் பார்த்திருப்பாள் போல. பின் நேத்ராவை அழைத்தவள், அவளை எனக்கு அடுத்து அமரச் செய்தாள்.

யார் டா அந்த பொண்ணு?” அருகில் அமறந்தவுடன் நேத்ராவும் கேட்க, மதுவிடம் சொன்னதையே இவளிடமும் சொன்னேன். சிரித்தவள்,

ஃபோன எடுக்கலனு, உடனே ஒரு ஃபிகர கரெக்ட் பண்ணிட்டே, பெரிய ஆலுதான் டா நீ!!” நக்கலடித்த நேத்ரவை பாவமாக பார்த்தேன்.

எனக்கு தெரியும், நேத்ரா நாக்கலாக சொன்னதை, மது கடும் கோபத்தில் கேட்பாள் என்று. அப்படி கேட்டாள் என்ன பதில் சொல்லவது என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, திரும்பி வந்தாள் ஜினாலியின் கஸீன், அவளை பின் தொடர்ந்து அவளை விட உயரம் கம்மியாக ஒருவன். இருவரும் எங்களை கடந்து சென்று அமர்ந்தனர். அவர்கள் கடந்து செல்லும் போது, அவள் சும்மா போகாமல், என்னை பார்த்து கண்ணடித்துவிட்டு செல்ல, நேத்ரா சிரித்தாள், எப்படியும் மது பார்த்திருப்பாள் என்று நம்பியதால், அவள் புறம் திரும்பவில்லை. நேத்ராவைப் பார்த்து முறைத்தேன்.

என்னடா ஜோடியா ரெண்டு பெரும் முறைக்கிறீங்க?” நேத்ரா கேட்க, நான் திரும்பி மதுவைப் பார்த்தேன், மீண்டும் என்னை முறைத்துக் கொண்டிருந்தாள். ஏதாவது சொல்லி சமாளிப்போம் என்று வாயெடுக்க, வாயில் விரல் வைத்து, படத்தை பார்க்கும் படி செய்கை செய்தாள். ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு, படத்தில் பார்வையை பதிக்க, மீண்டும் நேத்ரா சிரித்தாள். சிறிது நேரம் கழித்து, மெதுவாக கையை நகர்த்தி, மதுவின் கையை பற்ற, என் எதிர் பார்ப்புக்கு மாறாக, விரல் கோர்த்துக் கொண்டவள், நகர்ந்து என் தோளில் சாய்ந்து கொண்டாள். என் மனது கொஞ்சம் நிம்மதி கொண்டது. ஓடிக்கொண்டிருந்த படத்தில் மனம் ஒட்டவில்லை. மொபைல் எடுத்து நோண்ட, அப்பொழுத்துதான் அந்த மெயில் வந்தது.

ஸ்பெயினில் உள்ள ஒரு மிக பிரபலமான டென்னிஸ் பயிற்சியாளர். பயிற்சியாளர் என்பதை காட்டிலும் அவர் ஒரு வழிகாட்டி. அக்கடமி வைத்து நடத்தாமல், ஒன் டூ ஒன் என்ற முறையிலேயே பயிற்சி அளிப்பவர். பயிற்சிக்கு கேட்டு வரும் அனைவரையும் ஒப்புக்கொள்ளவும் மாட்டார் என்று கேள்வி. அவர் தேர்ந்தெடுக்கும், அவருக்கு நம்பிக்கை கொடுக்கும் அளவுக்கு விளையாடுபவர்களுக்கு தான் அவரிடம் பயிற்சி பெரும் வாய்ப்பு கிட்டும். எத்தனை நாட்கள், எந்த விதமான பயிற்சி, என்று அனைத்தையும் அவர்தான் முடிவு செய்வார். எப்படி இருந்தாலும் அடுத்த கட்டமாக தொழில்முறை டென்னிஸ் தான் என்று முடிவு செய்துவிட்டதால், அவரிடம் பயிற்சி பெற முயற்சிக்கலாம் என்று முயற்சி செய்ததில், அவருக்கும் நான் ஆடும் முறை பிடித்துப் போனதால், அவரும் எனக்கு பயிற்சி தர சம்மதித்திருந்தார். விசா விதிமுறைகளுக்காக, அவரிடம் இருந்து வந்த கடிதத்தை தான் தாங்கி வந்திருந்தது அந்த மின்னஞ்சல்.

அந்த மின்னஞ்சலை படித்தும் சந்தோஷப்படுவதா? இல்லை வருத்தபடுவதா? என்று தெரியவில்லை. மதுவை விட்டு எப்படியும் ஒரு மாத காலமேனும் பிரிந்திருக்க வேண்டும். உண்மையில் அந்த சமயம் நான் இருந்த மனநிலையில் அவளைத்தவிர எதுவுமே பெரிதாக தோன்றவில்லை, இன்றும் தான்!!. மதுவை தொட்டு அழைக்க, “ப்ச்' என்றவாறு என்னை முறைத்தவள், இருண்டு போயிருந்த என் முகத்தை கண்டவுடன், கொஞ்சம் பயத்துடன் என்ன என்று கேட்க, நான் மொபைலை அவளிடம் கொடுத்தேன். வாங்கிப் படித்தவளின் கண்கள் கலங்கியது, ஆனால் நொடியில் சுதாகரித்துக் கொண்டவள், என்னைப் பார்த்து சிரித்தாள், அடுத்த கணம் அனைத்துக் கொண்டாள்.

என் முதுகில் தட்டிக் கொடுத்தவள், சில நிமிடம் கழித்து, “போலாம்" என்று சொல்லி எழுந்து கொள்ள, நடப்பது எதுவும் தெரியாமல், .

என்னாச்சு?” குழப்பமாய் கேட்டாள் நேத்ரா

சொல்றேன்!! போலாம்!!” என்று மது கூற, எழுந்து வெளியே வந்தோம். வெளியே வரும் பொழுதே மது நேத்ராவிடம் மின்னஞ்சல் பற்றி கூற,

சூப்பர் டா!!” என்று என்னை கட்டிப்பிடித்து வாழ்த்து கூறியவள், பின்

அதுக்கு எதுக்கு, படத்த விட்டுட்டு பாதில வந்தோம்?” என்று கேட்டுவிட்டு, எங்கள் இருவரையும் பார்த்தவள்

எப்பா சாமி!! முடியல!!” சலித்துக் கொண்டவள்

"கொஞ்ச நாள் கூட பார்க்காம இருக்க முடியாதோ?” நாக்கலாக அவள் கேடக்கும் பொழுத்து, பார்க்கிங்கில் இருந்த காரின் அருகே வந்திருந்தோம். நேத்ரா அப்படி கேட்கவும், என் அருகில் வந்து, லேசாக அனைத்த மது, முடியாது என்பது போல நெதராவைப் பார்த்து தலையாட்ட, அவளை அனைத்துக் கொண்டு நானும் அதையே செய்தேன். எங்களின் செய்கையை பார்த்து சிரித்த நேத்ரா

நானும் பாக்குரென், எவ்வளவு நாள் இப்படியே கொஞ்சிக்கிட்டு இருக்கீங்கணு!!” என்றாள் இடுப்பில் கைவைத்து.

சாகுற வரைக்கும்!!” என்ற என்னை இன்னும் கொஞ்சம் இருக்கிக்கொண்டாள் மது. நெஞ்சில் கைவைத்து, கண்களை மேலே சூழட்டி, மயக்கம் வருவது போல அவள் நடிக்க,

உனக்கு பொறாமை!!” நானும் இருக்கி அனைத்துக் கொண்டேன்.

அய்யே!! ரெம்பத்தான்!! என்ன டிராப் பண்ணிட்டு, இந்த ஏழவ கன்டினியூ பண்ணுங்க!!”

முடியாது!! நடந்து போ!!” நான் சொல்ல, நேத்ரா என்னைப்பார்த்து முறைத்தாள். எங்கள் இருவரையும் பார்த்து சிரித்த மது, காரை திறக்க, என்னை முறைத்து கொண்டே எறினாள் நேத்ரா.

காரில் சென்று கொண்டிருக்கும் போதே மது அவள் அம்மாவிடம் கால் செய்து நேத்ராவுடன் தங்கிப் படிக்கப் போவதாக சொல்ல, முதலில் மறுத்திருப்பார்கள் போல, பின் நேத்ராவும் பேச ஒத்துக்கொண்டார்கள். நேத்ராவை டிராப் செய்து விட்டு கிளம்பும் போது, அவள் மதுவின் காதில் ஏதோ கிசுகிசுத்துவிட்டு சென்றாள்.

"என்ன சொன்னா?" கார் கிளம்பியாவுடன் மதுவின் கையை பற்றிக்கொண்டு கேட்க

உங்கிட்ட இருந்து தள்ளியே இருக்க சொன்னா" என்னைப் பார்த்து சிரித்தாள். அவள் கையை விட்டுவிட்டு, அமைதியாக இருக்க,

எங்க போலாம்?” என் கையை பற்றி விரலோடு விரல் கோர்த்துக் கொண்டாள்

வீட்டுக்கு போலாம், வீட்ல தான் யாருமே இல்லையே!!” நான் சொல்ல, மறுப்பாக தலையசைத்தாள்.

இன்னும் நாலு நாள் இருக்கு, ட்யூஸ்டே தான் திரும்பி வருவாங்க" மீண்டும் நான் வற்புறுத்தினேன்.

வேண்டாம் டா!! உங்க வீட்ல வாட்ச்மேன், வேலக்காரங்க எல்லாம் இருக்காங்க!! தேவை இல்லாம டவுட் வரும்!!” அவள் மறுத்தாள்.

நான் மட்டும் உன் ரூம்ல தங்கினேன் இல்ல!!” என்றேன், அவள் சொன்னதின் அர்த்தம் புரியாமல்.

அது வேற!! இது வேற!!, புரிஞ்சுக்கோ!!” என்றவாறு காரை ரோட்டின் ஓரத்தில் நிறுத்தினாள். நான் அமைதியாக அவளைப் பார்க்க

நம்ம ரூம் போலாமா?” அவள் புருவம் உயர்த்தி கேட்டாள். நான் குழப்பமாக அவளைப் பார்த்தேன்.

ரெஸிடென்சி, ரூம் நம்பர் 303?” குறும்பாக சிரித்தவள், என்னைப் பார்த்து கண்ணடித்தாள்.

கிடைக்கலானா?”

முதல்ல செக் பண்ணு!! இல்லன உன் வீட்டுக்கு போகலாம்!!

குதூகலம் ஆனனேன். அவள் சொன்னதில் எது நடந்தாலும் எனக்கு ஓகே தான். ரெஸிடென்சியில் எங்கள் ரூம் கிடைக்கவில்லை, மதுதான் சின்ன ஏமாற்றம் அடைந்தாள். நான் மகிழ்ச்சியாகவே இருந்தேன். அரைமணி நேரத்தில் என் அறையில் இருந்தோம்.

இந்தா இத போட்டுக்க!!” எனது பாக்ஸர் ஒன்றை எடுத்துக் கொடுக்க, என்னை முறைத்தாள்.

சாத்தியமா பக்கத்துல கூட வர மாட்டேன்!! வேணும்னா கெஸ்ட் ரூம்ல தூங்கிக்கோ" இன்னும் பாக்ஸரை நீட்டிக்க கொண்டே சொல்ல, முறைப்பை நிறுத்தாமல், என்னை கொஞ்சம் தள்ளிவிட்டு என் வாட்ரோப் ஆராய்ந்தவள், ஒரு டிராக் பாண்ட்டும், டீ-ஷர்ட்டும் எடுத்துத்துவிட்டு என்னை ட்ரெஸ்ஸிங் ரூம்மில் இருந்து வெளியே தள்ளினாள். சிரித்துக் கொண்டே வெளியேறிய நான், அவளிடம் சொல்லிவிட்டு சாப்பாடு எடுத்து வந்தேன். அறைக்குள் வந்த நான் அவளை பார்த்து நாக்கலாக சிரிக்க,

என்ன சிரிப்பு?”

இல்ல யாரோ டிராக் பாண்ட் போடப்பபோறேன் சொல்லிட்டு, வேண்டாம்னு சொன்ன என் பாக்ஸர போட்டுருக்காங்க" நாக்கல சிரித்துக் கொண்டே

அது ஹாய்ட் ஜாஸ்திய இருக்கு" என்றாள், நான் கொண்டு வந்து வைத்த தோசையை எடுத்து தட்டில் வைத்துக் கொண்டே

மடிச்சு விட்டுக்கலாமே?" நக்கல் குறையாமல் நான் கேட்க, கையில் இருந்த தட்டை காஃபி டேபிளில் வைத்துவிட்டு, என்னைப் பார்த்து திரும்பி

நல்ல ஐடியா!!, இரு நான் போய் மாத்திட்டு வரேன்" என்று குறும்பாக என்னைப் பார்த்து சொன்னவள், ட்ரெஸ்ஸிங் ரூம் கதைவை நோக்கி நடக்க, பயந்து சென்று அவள் இடுப்பை பற்றி தூக்கிய நான்,

வேண்டாம், இதுவே நல்லாதான் இருக்கு!!” சோபாவில் அமர்ந்து, அவளை என் மடியில் அமர்த்திக்கொண்டு, காதோரம் சொல்ல,

இல்ல!! எனக்கு இது பிடிக்கல!!, நான் போய் டிராக் பாண்டே போட்டுக்குறேன்!!" அவளும் என்னுடன் குழைய, அவள் பின்னங்கழுத்தில் முகம் புதைத்து முத்தமிட, முதலில் சிணுங்கியவள், பின் துள்ளி எழுந்தாள்.
என்ன சொன்னேன்?” எழுந்தவள், என்னைப் பார்த்து முறைத்துக் கொண்டு கேட்க,

என்ன சொன்ன?” திருப்பிக் கேட்டேன், அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு. முறைத்தவள்,

கையும், காலையும் வச்சுக்கிட்டு சும்மா இருக்கணும் இல்ல!!.... கொன்றுவேன்!!” தூண்டிவிடுவது போல மிரட்டினாள். நான் நல்லபிள்ளை போல தலையாட்ட, சிரித்தவள், தோசை இருந்த தட்டை எடுத்து, சட்னி வைத்துக் கொண்டு, என் அருகில் வந்து அமர்ந்தாள். நான் அவளையே பாத்துக் கொண்டிருக்க, தோசையை பிய்த்து, சட்னி தொட்டு என்னை நோக்கி நீட்ட, நான் வாய் திறந்து வாங்கிக் கொண்டு, எழுந்தேன்,

எங்க போற?”

எனக்கும் பசிக்குது!! நானும் ஒரு பிளேட்ல எடுத்துட்டு வரேன்!!”

ஒண்ணும் வேண்டாம்!! வா!! நானே ஊட்டி விடுறேன்!!” அவள் சொல்ல, நெகிழ்ந்தேன். இருந்தும் அவள் சொன்னது காதில் விழாதது போல சென்று, தோசை இருந்த ஹாட் பாக்ஸ் மற்றும் சட்னியை எடுத்துக் கொண்டு திரும்ப, முறைத்துக் கொண்டிருந்தாள். சிரித்துக் கொண்டே திரும்பவும் வந்து சோபாவில் அமர்ந்து, எடுத்து வந்ததை அருகிலேயே தரையில் வைத்துவிட்டு, முறைத்துக் கொண்டிருக்கும் அவளைப் பார்த்து, “" காட்டினேன். சிரித்தவள், அடுத்த வாய் ஊட்டினாள். நான் வேண்டும் என்றே அவள் விரல்களை கடிக்க, தலையில் வலிக்காமல் கொட்டியவள்,

சின்ன பாப்பா, கடிக்காம வாங்கு!!” அடுத்த வாய் ஊட்டினாள்.

அப்போ நான் உன் பாப்பா இல்லையா?” அவள் ஊட்டியதை வாங்காமல், உதடு சுளித்து, வேண்டும் என்றே சோகமாக கேக்க, லேசாக அணைத்தவள், ஐந்து விரல்களாலும் என் இரு உதடுகளையும் குவித்து பிடித்து கிள்ளி, அந்த விரல்களில் முத்தமிட்டவள்,

என் பாப்பாதான்!! ஆனா இப்போ கடிக்கமாக சாப்பிடு!!” மண்டும் ஊட்டினாள்.

நீயும் சாப்பிடு!!” நான் அவள் குடுத்ததை மென்று கொண்டே கொஞ்ச, சிரித்தவள், அவளும் சாப்பிட்டுக் கொண்டே எனக்கும் ஊட்டினாள். சாப்பிட்டுவிட்டு, அதே சோபாவில் அவள் மடியில் நான் தலைவைத்து படுத்திருக்க, என் தலை முடியில் விரல்களை நுழைத்து, அதை வட்டமாக சுத்திக் கொண்டிருந்தாள். நீண்ட நேரம் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

மது!!”

ம்ம்!!”

மதுதுது!!”

சொல்லு"

நீ அழகா இருக்க!!” நான் அவளைப் பார்த்து சொல்ல, அதுவரை சோபாவில் தலை சாய்த்து படுத்திருந்தவள், குனிந்து என் முகத்தைப் பார்த்தால்.

அப்படியா?” கண்களில் குறும்போடு, உதட்டில் சின்ன நக்கல் சிரிப்போடு,

நிஜமா!! நீ செம்ம அழகா இருக்க!!”

அப்புறம்!!” அந்த நக்கல் சிரிப்பு இன்னும் கொஞ்சம் கூடியது.

போ!! உன்கிட்டே போய் சொன்னேன் பாரு!!” என்று அவள் முகத்தை பிடித்து பின்னால் தள்ளிவிட்டு, ஒரு சாய்ந்து அவள் வயிற்றில் முகம் புதைத்து படுத்துக் கொண்டேன். அவளின் வயிற்றின் அசைவில் அவள் சிரிப்பது தெரிந்தது. செல்லமாக அவள் வயிற்றில் கடிக்க,

குசுது டா!! எரும!!” என்று சொல்லி என் தலையைப் பிடித்து தள்ளினாள்.

மீண்டும் அவள் வயிற்றில் முகம் புதைக்க, இந்த முறை கொஞ்சம் பலம் கொடுத்தே தள்ளினாள். அவள் தள்ளியதில் நான் தரையில் விழுந்தேன். விழுந்தவன் திரும்பி அவளை முறைக்க, அவளோ என் நிலையைப் பார்த்து மேலும் சிரித்தாள். பொய்யாக கோபம் கொண்டு, எழுந்து கட்டிலில் படுத்துக் கொண்டேன்.

ஓய்!!” அவள் அழைக்க, குப்புற புரண்டு, தலையணையில் முகம் புதைத்தேன்.

ஓய்!!” மீண்டும் அழைத்தாள். போர்வையை எடுத்து போர்த்திக் கொண்டேன்.

சரி!! வேண்டாம்னா போ!!” போர்வையை விலக்கி எட்டிப் பார்த்தேன். அணிந்திருந்த டீ-ஷர்ட்டை தூக்கிப் பிடித்து, இடையை தாரளாகமாகவே காட்டினாள். நான் இமைக்கவும் மறந்து குழைவான அவள் இடையைப் பார்த்துக் கொண்டிருக்க, பிடித்திருந்த டீ-ஷர்ட்டை கீழே இழுத்துவிட்டாள். நான் நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்க்க, என்ன என்பது போல அவள் புருவத்தை உயர்த்தி கேட்க, நான் இருபுறமும் தலையாட்டினேன், என்னை அறியாமலே.

வழியுது!!” நாக்கலாக சொன்னவள், நாக்கால் ஒரு பக்க கன்னத்தை வெளியே தள்ளி, பல் தெரியாமல் சிரித்தாள்.

அதெல்லாம் ஒண்ணும் வழியல!!”

" என்றவள், தலையை மேலும் கீழும் ஆட்டியவாரே ஏதோ யோசனையில் சிறிது நேரம் நின்றவள்,

அப்போ சரி!! உன் நஷ்டம்!!”

,, எது?” அவள் எங்கே வருகிறாள் என்று புரிந்தாலும், அவள் விளையாடும் விளையாட்டில் நானும் கோதவில் இறங்கினேன்.

இல்ல!! ஜொள்ளு விட்டா அதுக்கு ஒரு ட்ரீட்மெண்ட் கொடுக்கலாம்னு நினைக்கச்சேன்!!” கட்டிலின் மறு பக்கம் நோக்கி நடந்தாள்.

ஒண்ணும் வேண்டாம்!!. இனிமே கல்யாணத்துக்கு அப்புறம் தான் எல்லா ட்ரீட்மெண்டும்!!” சொல்லும் போதே கண்டிப்பாக இன்று ட்ரீட்மெண்ட் இருக்கும் என்பது எனக்கு தெரியும்.

நான் சொன்னதும், "சரி" என்பது போல தலையாட்டியவள், விளக்கை அனைத்து விட்டு, நிறைய இடைவெளி விட்டே படுத்துக்கொண்டாள், எனக்கு முதுகு காட்டி. வீட்டிற்க்கு தான் செல்கிறோம் என்று முடிவான போதே, ஒண்ணும் கிடையாது என்று சொல்லிவிட்டு தான், ஒத்துக்கொண்டாள். எனக்கு கூட அதில் உடன்பாடுதான், அவள் டீ-ஷர்ட்டை உயர்த்தி, இடையை காட்டும் வரை. இருந்தாலும் "அவளுக்கு மட்டும்தான் டீஸ் செய்ய தெரியுமோ?” என்று உள்ளே இருந்து ஒரு கேன பய கேட்க, நானும் விரைத்துக் கொண்டேன்
[+] 3 users Like Doyencamphor's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
நெடு நேரம் இருவரும் பேசிக்கொள்ளவில்லைஅறையில் படர்ந்த அமைதி!!, என் அருகேஎன் அறையில் மது!! என் மனதை போட்டு பிழியஎன் விறைப்பெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்ததுஇருந்தாலும் இல்லாத மன உறுதியை இழுத்து பிடித்து அமைதிகாக்கஇனிமேலும் முடியாது என்று தோன்றவேஒரு பெரு மூச்சை விட்டுவிட்டுஎன்ன சொல்லி ஆரம்பிக்கலாம் என்று யோசனையில் இருக்கும் போதுதான்அவள் கேட்டாள்



சார்க்கு இன்னைக்குதான் நான் அழகா தெரிஞ்சேனோ?” அவளே ஆரம்பித்தாள்



"அதென்னசார்ம்ம்??” மெலிதான புன்னகை என் உதடுகளில் குடி கொண்டது



திடீர்னு எப்படி உன் கண்ணுக்கு அழகா தெரிஞ்சேன்??!!” நான் கேட்டதை அவள் கண்டு கொள்ளவில்லை



திடீர்னு எல்லாம் இல்ல!! எப்போவுமே நீ அழகுதான்!!” நான் அவளப் பார்த்து ஒரு சாய்ந்து படுத்துக் கொண்டேன்



!!...... அப்போ நீ நாம லவ் பண்ணுறதுக்கு முன்னால என்னை சைட் அடிச்சிருக்கியா?”



நீ என்ன லவ் பண்ணுறதுக்கு முன்னாலையேஉன்ன சைட் அடிச்சிருக்கேன்!!” நான் விட்டேத்தியாக சொல்லபட்டென்று என்னைப் பார்த்து படுத்தவள்கண்கள் விரியஎன்னை விழுங்குவது போல பார்த்தாள்



"ஃபர்ஸ்ட் டைம் உன்ன பார்த்த அப்பவே உன்ன சைட் அடிச்சேன் தெரியுமா?" அவளைப் பார்த்து சொல்லிவிட்டு



"ஒரு ஒயிட் ப்லோரல் லாங் ஸ்கர்ட்மேரூன் கலர் ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் போட்டுருந்த!! அழகா இருந்த!! அப்புறம் நீ வேற என்ன தம்பியா தத்தெடுத்துக்கிட்டியா....” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே என் உதடுகளை கவ்வியவள்என் உயிரையே உறிஞ்சுவது போல முத்தமிட்டாள்என் மீது படர்ந்தவளை அனைத்துக்கொண்டு நானும் முத்தமிடஎன் கன்னங்களில் அவளது சூடான கண்ணீர்அவள் தோள்களைப் பற்றிஅவள் முகம் பார்த்தேன்அழுது கொண்டிருந்தாள்நான் குழப்பமாக பார்த்துக் கொண்டிருக்கும் போதேஎன் நெஞ்சில் முகம் புதைத்து மீண்டும் அழநான் அவளைப் புரட்டி போட்டுவிட்டுஎழுந்து அமர்ந்து அவளைப் பார்த்தேன்


அவள் அழுகிறாள் என்று தெரிந்த அடுத்த கணமே என் கண்களும் கலங்கியிருக்ககலங்கிய என் கண்களைப் பார்த்தவள்சிரித்துக் கொண்டே அவள் கண்ணீரை துடைத்துவிட்டுஎன்னை நோக்கி இரு கைகளையும் நீட்டினாள்நான் குழப்பத்தில் அவளப் பார்த்துக் கொண்டிருக்கஉதடு குவித்து முத்தமிட்டவள், "வாஎன்பது போல தலையாட்டமீண்டும் கலங்கிய அவள் கண்களைப் பார்த்துக் கொண்டேஅவள் அணைப்பிறக்குள் சென்றேன்அவள் தோள் வளைவில் என் முகத்தை புதைத்துக் கொள்ளஎன் கையை பற்றிஅவள் மேல் போட்டுக்கொண்டாள்அவள் மகிழ்ச்சியில் அழுதிருக்கிறாள் என்பது புரிந்ததால்நான் எதுவும் சொல்லாமல் அவள் கழுத்தினில் முகம் புதைத்துஒரு காலை அவள் மேல் போட்டு இன்னும் அனைத்துக் கொண்டேன்

ஒரு நீண்ட அமைதிஅவள் உடலின் கதகதப்பில் கிறங்கிக்கிடந்தேன்

மது!!” அவளிடம் இருந்து பதில் இல்லை

மது!!” தூங்கிவிட்டாளோ என்று நிணைத்துஅவள் தோளில் ஒரு விரலால் சுரண்டினேன்

ம்ம்!!” 

எதுக்கு அழுத?”

ஒண்ணும் இல்ல!!”

அதன் பின்பு நான் ஒன்றும் கேட்கவில்லைகேட்டாலும் இன்று சொலுவள் என்று தோன்றவில்லைமற்றொரு நாள் கேட்டுக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்பேச்சை மாற்றலாம் என்று 

நம்ம வீட்ல எல்லோரும் அவ்வளவு மக்கா?!!” நிமிர்ந்து அவளைப் பார்த்து கேட்டேன். "ஏன்?" என்று பார்வையால் வினவினாள்

நாம பொண்டாட்டிபுருஷன் மாதிரி கொஞ்சிக்கிட்டு இருக்கோம்!! ஆனா அத கூட இன்னும் அவங்க கண்டுபிடிக்கல!!” நான் கேட்கலேசாக சிரித்தவள்சிறிது கிழே அவள் உடலை நகர்த்திஎன் முகத்துக்கு நேராக அவள் முகத்தை கொண்டுவந்தவள் 

அப்படியா?” என்றால் என் கண்ணோடு கண் கோர்த்து

இல்லையா?” திருப்பிக் கேட்டேன்அவள் பார்வையால் ஏற்பட்ட மோன நிலையில்

என்ன நினைத்தாலோ என் நெற்றியில் அழுந்த நீண்ட நேரம் முத்தமிட்டவள்அப்படியே என் முகத்தை இழுத்து அவள் கழுத்தில் அழுத்திஎன்னை இருக்கிக் கொண்டாள்மீண்டும் ஒரு நீண்ட அமைதிஅவளை அனைத்துக் கொண்டிருந்த ஒரு கையைஅவள் அணிந்திருந்த டீ-ஷர்ட் இடைவெளியில் விட்டு அவள் வெற்று முதுகை தடவஅவளிடம் இருந்து ஒரு சிறு முனங்கள்விரலால் அவள் முதுகெங்கும் கோலம் வரையலேசாக என் தலையில் கொட்டினாள்

அப்போ ஒண்ணும் கிடையாதா?” நான் பொருமையில்லாமல் புலம்ப

யாரோ கல்யாணத்துக்கு அப்புறம் தான் ட்ரீட்மெண்ட்னு சொன்னாங்க!!” என் தலையில் முத்தமிட்டாள்என்ன சொல்வதென்று தெரியாமல்அவள் முதுகில் ஒரு விரலால் சுரண்டிக் கொண்டிருக்க

கொஞ்சம் மேல சுரண்டுஅங்கதான் ஏதோ உருத்துதுகடுப்பான நான்அவள் சொன்ன இடத்தில்விரலில் அழுத்தம் கொடுத்துஅவளுக்கு வலிக்கும் படி சுரண்ட 

ஆஆ.... எரும!!” என்று என்னை மல்லாக்க தள்ளிஅடித்தவள் 

உன்ன என்ன பண்ணுறேன் பாரு!!” என்று என் மீது ஏறி அமர்ந்தாள்

அவள் பண்ணுவதாக சொன்னதை இருவரும் சேர்ந்து பண்ணிவிட்டுஇளப்பாறிய பின்புஎப்பழுதும் போல அவள் கையில் தலை வைத்து அடுத்த நிகழ்விர்க்கு தயாராக இருக்க 

“I Love You!!” காதலுடன் கொஞ்ச 

“me too!!” அதே காதலுடன் நான் மிஞ்சினேன்

“I Love You!!” அடித்தாள்

எதுக்கு இன்னைக்கு நான் கால் பண்ணினப்ப எடுக்கல?”

“I Love You!!” அடித்தாள்

எதுக்கு தியேட்டர் வந்த உடனே முகத்த தூக்கி வச்சுக்கிட்டு போன?”

“I Love You!!” அடியின் அழுத்தம் கூடியது

இப்போ எல்லாம் என் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணவே மாட்டேங்குற!!”

“I Love You!!” மீண்டும் நிதானத்துக்கு வந்தது அடியின் அழுத்தம்

“I Love You!!” அடித்தாள்நான் அவளைப் பார்த்து சிரித்தேன்

“I Love You!!” அடித்தாள்

“I Love You!!” அடித்தாள்அவளின் இரு கண்களில் முத்தமிட்டுஅவளை இழுத்து அணைக்க

போடா எரும!! என்று என் முதுகெல்லாம் அடித்தாள்அவள் அடிகள் நின்றதும்அவளை விட்டுவிட்டுமீண்டும் அவள் கழுத்தில் முகம் புதைத்துஅவள அனைத்துக் கொள்ளஅவளும் அனைத்துக் கொண்டாள்

பாப்பா!!” என் முடிகளை கோதிக்கொண்டே 

ம்ம்கொட்டாமல் அவள் தொண்டை குழியில் முத்தமிட்டேன்

பாப்பா!! இது தான் லாஸ்ட்!!, இனிமே கல்யாணத்துக்கு அப்புறம் தான்!!” 

ம்ம்உம்கொட்டினேன்

மின்னஞ்சல் தாங்கி வந்த எங்கள் பிரிவை மறந்துஎங்கள் காதல் பால் வெளியில்பள்ளி கொண்டோம்.
[+] 6 users Like Doyencamphor's post
Like Reply
Very Nice story Bro thanks for update Bro
Like Reply
Koodal athigamaga erukku kaadhal scene kuraikirathey nanba. Konjam kathalum athigamaga vaiyungalen.
Like Reply
Thanks for the update brother.
Keep continue and fast updates.
Like Reply
Super bro hot update continue bro
Like Reply
Fantastic update.
Like Reply
Nice Bro !!!
Like Reply
Update panunga bro
Like Reply
Kindly update brother
Like Reply
Waiting for next episode.
Like Reply
Will update tomorrow evening
[+] 1 user Likes Doyencamphor's post
Like Reply
Waiting bro ur hot update
Like Reply
(23-10-2020, 08:51 PM)Doyencamphor Wrote: Will update tomorrow evening

Thanks brother
Like Reply
Kindly update bro
Like Reply
Brother still waiting for the update
Kindly update
Like Reply
Update update update
Like Reply
அடுத்த பாகம் எழுதி முடித்துவிட்டேன். திருத்தம் செய்ய வேண்டியது தான் மிச்சம். நாளைக்கு உறுதியாக பதிவு இருக்கும்.
Like Reply
(31-10-2020, 03:15 AM)Doyencamphor Wrote: அடுத்த பாகம் எழுதி முடித்துவிட்டேன். திருத்தம் செய்ய வேண்டியது தான் மிச்சம். நாளைக்கு உறுதியாக பதிவு இருக்கும்.

Ok brother we are waiting... Kindly update
Like Reply
பாகம் - 36


திரும்பத் திரும்ப அழைத்து சோர்ந்து விட்டேன். சரி குளித்து விட்டு வரலாம் என்று குளியல் அறைக்குள் புகுந்து கொண்டேன். தேசிய ஜூனியர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்காக ஹைட்ரபாத் வந்து இருந்தேன். நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதில் இருந்து மதுவிடம் கெஞ்சி கொண்டிருக்கிறேன், இறுதிப்போட்டிக்கு வரச்சொல்லி. ஆனால், எனக்கு ஏதோ சர்ப்ரைஸ் வைத்திருப்பதாகச் சொல்லி வர மறுக்கிறாள். என்னைத் தவிர அத்தனை கேட்டகிரியில் இருந்த தமிழக வீரர்கள் அனைவரும் வெளியேறி இருக்க, கோச்சிங் ஸ்டாப்பை தவிர எல்லோரும் ஏற்கனவே கிளம்பி சென்றிருந்தனர். அந்த தனிமை கூட காரணமாக இருக்கலாம், மதுவை இவ்வளவு தூரம் வற்புறுத்த. எனக்கும் தெரியும் அவ்வளவு முக்கியமானதாக இல்லாவிட்டால், அவள் வரமாட்டேன் என்றெல்லாம் சொல்ல மாட்டாள் என்று. இறுதிப் போட்டியை விடவும், அவள் கொடுக்கப் போகும் சர்ப்ரைஸ் என்னவென்று தெரிந்துகொள்ளவே இப்பொழுது ஆவலாய் இருந்தேன்.

குளித்துவிட்டு தலை துவட்டிக் கொண்டு இருக்கும் போது, என் போன் அடித்தது, அழைத்தது மது தான். எப்படியும் விடாமல் அழைத்ததுக்கு திட்டுவாள் என்று தெரிந்து, அதற்கும் சேர்த்து ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு அட்டெண்ட் செய்தேன்.

"சாரிடா இப்பதான் வந்தேன்!!” என்று என் எதிர்பார்ப்புக்கு மாறாக சாந்தமாகவே பேசினாள்.

"இல்ல!! தூங்குறதுக்கு முன்னாடி உன்கூட பேசலாம்னு பார்த்தேன்!!” என்று நானும் விட்டோத்தியாக பதில் சொன்னேன்.

"டின்னர் ஆச்சா?”

"வரும்போதே, சாப்பிட்டு வந்துட்டேன்!! தூங்க வேண்டிய தான்!!” என்றவாறு மொபைலை எடுத்துக்கொண்டு மெத்தையில் விழுந்தேன்.

எப்பொழுதும் எங்கள் உரையாடலில் இருக்கும் காதலோ, குழைவோ, கொஞ்சலோ கொஞ்சமும் இல்லை. சிறிது நேரம் அவளும் பேசவில்லை நானும் பேசவில்லை வெறுமனே மொபைலை இருவரும் பார்த்துக் கொண்டிருந்தோம்.

"ஏன்டா இப்படி பண்ற!!” புன்சிரிப்புடன் கேட்டாள்

"நான் என்ன பண்றேன்?” உணர்ச்சி இல்லாத முகத்துடன் திருப்பி கேட்டேன்.

"டேய்!!.... புரிஞ்சுக்கோடா!! ரொம்ப கஷ்டம் டா!!” கெஞ்சினாள்.

"இப்போ நான் எதுவுமே சொல்லலையே!!” இப்போது என் குரலில் கொஞ்சம் வருத்தம்

"பாப்பா!!”

".............…" பதில் சொல்லவில்லை நான்

"பாப்பா!!” கொஞ்சினால் மீண்டும்,

".............…" பதில் சொல்லவில்லை

"ஏன்டா இப்படி படுத்துற!!” என்று சொன்னவள், ஒரு பெருமூச்சு விட்டாள்.

"நான் எதுவுமே சொல்லலையே!!” என்றேன், முறைத்தாள், நானும் முறைத்தேன். கண்களை மூடி மீண்டும் ஒரு பெருமூச்சு விட்டாள்.

"ப்ளீஸ் பாப்பா!!.... நாளைக்கு எனக்கு எக்ஸாம்!!....மூட் அவுட் பண்ணாத....நல்ல பாப்பா இல்ல!!....கொஞ்சம் சிரிச்சு பேசேன்!!” கெஞ்சினாள், கொஞ்சினாள்

"எனக்கும்தான் நாள் கழிச்சு பைனல்ஸ்!! என்னையும் மூடு அவுட் பண்ணாத!! ப்ளீஸ் எக்ஸாம் முடிஞ்ச உடனே கிளம்பி வந்துட்டேன்!!” நானும் கெஞ்சினேன். சிரித்தாள், நான் மீண்டும் முறைத்தேன்.

"மவனே....நேர்ல மட்டும் இருந்தேன்!!....அந்த முறைக்கிற கண்ண நோண்டி எடுத்துடுவேன்!!” அவள் விரல்களால் என் கண்ணை தோண்டி எடுப்பது போல சைகை செய்ய, அதற்கு மேலும் பொறுக்க மாட்டாமல் சிரித்து விட்டேன். அவளுடன் இருக்கமாக பேச எனக்கு தெரியவில்லை.

"ஹப்பா!!” இரு கைகளையும் நெஞ்சில் வைத்து சொன்னவள், முத்தங்களை பறக்க விட்டாள் என்னைப் பார்த்து.

"பிரிபரேஷன் முடிஞ்சிடுச்சா?”

"கொஞ்சம் டென்ஷனா தான் இருக்கு!!” என்றாள், கீழ் உதடை கடித்தாள்.

"எக்ஸாம் முடிச்சிட்டு வந்த உடனே எனக்கு கால் பண்ணு!!” என்றேன்,

"தூக்கம் வருதா?”

"இல்ல!! பட் கொஞ்சம் டயர்டா இருக்கு!!” உண்மையிலேயே அசதியாக தான் இருந்தது.

"கொஞ்ச நேரம் பேசலாமா!!”

"நீ மட்டும் எக்ஸாம் எழுதி முடிச்சதும், இங்க கிளம்பி வரேன்னு சொல்லு!! நைட் ஃபுல்லா பேசலாம்!!” நான் புருவத்தை உயர்த்தி, பற்களை காட்டினேன்.

"எனக்கு மட்டும் உன்கூட இருக்கணும்னு ஆசை இருக்காதா? அன்னைக்கு எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்குடா!!”

"அப்படி என்ன முக்கியமான வேலை?”

"அதுதான் சொன்னேனே!! ஒரு சர்ப்ரைஸ் உனக்கு" கண்ணடித்தாள்

"எனக்கு ஒரு சர்ப்ரைஸ் மண்ணும் வேண்டாம்!! நீ தான் வேணும்!!”

"பாப்பா!!”

"ம்ம்!!”

"ஐ லவ் யூ!!” நான் பதில் சொல்லாமல் அவளை பார்த்துக் கொண்டிருக்க

"டேய் me too ஆவது சொல்லுடா!!” கெஞ்சினாள், நான் மாட்டேன் என்று தலையசைத்தேன்.

"போடா எருமை!!” சிரித்தேன்

"பாப்பா!! குட் நைட்!!” என்று நான் சொல்ல

"வேண்டாம்!! வேண்டாம்!! போன வைக்காத!!” அவசர அவசரமாக சொன்னாள்

"பாப்பா! டயர்டா இருக்கு பாப்பா!! உண்மையிலேயே எனக்கு தூக்கம்!!” கண்ணை
கட்டிக்கொண்டு வந்தது தூக்கம்

"சரி நீ அப்படியே வச்சுட்டு தூங்கு!! நான் பார்த்துகிட்டே இருக்கேன்!!” அவள் ஆசையாக சொல்ல, மொபைல் சார்ஜரில் போட்டு, என் முகம் தெரியுமாறு வைத்துவிட்டு, நானும் அந்த ஸ்கிரீனில் தெரியும் அவள் முகத்தைப் பார்த்துகொண்டு இருந்தேன், எப்போது தூங்கினேன் என்று தெரியாமல் தூங்கிவிட்டேன்.

********

மறுநாள் மதியம் 2 மணி.

அன்று பயிற்சி கட்டாயம் இல்லாவிட்டாலும் கூட, காலையிலே சென்று பயிற்சி செய்துவிட்டு, சிறிது நேரம் நான் இறுதி போட்டி ஆடப்போகும் கோர்ட்டில் நின்று, வெறுமனே அதன் நீள அகலங்களை கண்களால் அளந்துவிட்டு, அறைக்கு வந்தேன்.

ஏன் என்று தெரியவில்லை காலையில் இருந்தே உள்ளம் கொஞ்சம் படபடப்பாகவே இருந்தது. நாளை போட்டியின் போது, யாராவது உடன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று என் மனம் எங்கியது. அந்த "யாராவது" என்ற கட்டத்துக்குள் மதுவையும், தாத்தாவையும் தவிர யாரையும் மனம் அனுமதிக்கவில்லை. தாத்தாவை தொந்தரவு செய்ய மனதில்லை, மதுவை அழைத்துக்கொண்டுதான் இருக்கிறேன் என்றாலும், அவளும் வரமுடியாது என்று உறுதியாக சொல்லிவிட்டாள்.

என் மனதின் ஏக்கத்தில் இருந்து விடுபடவே கட்டாயம் இல்லாவிட்டாலும், காலையில் பயிற்சிக்கு சென்றேன். திரும்ப அறைக்கு வந்து, கதவை அடைத்துக் கொண்டிருக்கும் போதே, என் மொபைல் சிணுங்கியது. முகத்தில் புன்முறுவலுடன் அழைப்பை எடுக்க,

"என்னடா பண்ணுறே?" என்றாள் மது.

"இப்போதான் ரூம்க்கு வந்தேன்!! எக்ஸாம் நல்ல எழுதினியா?”

நினைச்சத விட, நல்லா எழுதியிருக்கேன்!!”

சரி!! வீடியோ கால் வா!!” என்று நான் சொல்ல

"வேண்டாம்!! வேண்டாம்!!” அவசர அவசரமாக மறுத்தாள். நான் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கவே

"டேய்!! இப்ப தான்டா வந்தேன்!! குளிக்க போறேன்!! பாத்ரும்ல இருக்கேன்!!” குரலில் வெட்கம்.

"அப்ப கண்டிப்பா வீடியோ கால் பண்ணனும்!!” அவளின் வெட்கம் என் எண்ண ஓட்டங்களை திசைதிருப்ப, சிரித்தேன்

"எருமை!! எருமை!!” என்று அவள் திட்டியதற்கும் சிரித்தேன்

"எத்தன மணிக்கு மேட்ச் உனக்கு?”

"நேத்தே சொன்னேனே!! மறந்துட்டியா?”

"அதெல்லாம் ஞாபகம் இருக்கு!! எப்பவுமே ஈவினிங் தானே இருக்கும்!!, எந்த லூசுப் பய 9மணிக்கு மேட்ச் வச்சான்? அதுதான் சின்ன டவுட்!!”

"மெடல் டிஸ்ட்ரிபியூஷன் பண்றதுக்கு ஏதோ லோக்கல் மினிஸ்டர் வர்றாராம்!! அவருக்கு ஈவினிங் வேற எங்கேஜிமெண்ட் இருக்குதாம். அதான் ரெண்டு மணிக்கு ஃபங்ஷன் ஆரம்பிச்சு நாலு மணிக்குள்ள முடிச்சிடுவாங்கனு நினைக்கிறேன்!!”

என்னிடம் பேசிக்கொண்டே குளித்தவள், டிரஸ் மாற்றிவிட்டு வீடியோ கால் செய்தாள்.

அதுக்குள்ள குளிச்சிட்டியா?” தொடுதிரையில் தெரிந்த அவளின் முகத்தை ரசித்துக் கொண்டே கேட்டேன்.

சும்மா ஜஸ்ட் வாஷ்!!” என்றாள், மெத்தையில் படுத்து கன்னத்தில் கைவைத்தவாறு. நான் அவளை கண்களால் விழுங்கிக் கொண்டிருக்க

நீ குளிக்களையா? யு லுக் டேர்டி!! பாத்தாலே தெரியுது!!” என் வியர்வைக் கரை படிந்த டீ-ஷர்ட்டைப் பார்த்து, முகம் சுழித்தாள்.

அதுக்குள்ள உன் கால் வந்துருச்சு!!”

ம்ம்!! நீ குளி!! நான் பாக்குறேன்!!” கண்ணடித்தாள்.

நடிப்பாக முறைத்தேன். குறும்பாக பார்த்தவள், புருவங்களை உயர்த்தி "என்ன" என்று கேட்க, நான் இரு புறமும் தலையாட்டினேன்.

நல்ல பிள்ளையா இப்போ போய் நீ குளிப்பியாம்!! நீ ஒழுங்கா குளிக்கிறையானு நான் செக் பண்ணுவேணாம்!!” ஏதோ சிறு குழந்தைக்கு சொல்லுவதைப் போல் அவள் சொல்ல

ம்ம்!! அப்புறம்?”

குளிச்சுட்டு வந்து, என்ன கொஞ்சுவியாம்!!” குறும்பு மாறாமல் கொஞ்சினாள். அவளின் கொஞ்சலில் என் மனது அவளது அரவணைப்பை தேட, ஏற்கனவே காலையில் இருந்து என் மனதில் இருந்த ஏக்கம் அதிகமானது. அதே ஏக்கத்துடன்

மது!!”

ம்ம்"

இங்க கிளம்பி வா!! லோன்லியா ஃபீல் பண்ணுறேன்!! பிளீஸ்!!” கெஞ்சினேன்.

மறுபடியும் ஆரம்பிக்காத!!” சலித்துக்கொண்டாள். இரண்டு நொடிக்கு முன்வரை கொஞ்சிக் கொண்டிருந்தவள், இப்பொழுது சலித்துக்கொள்ள, எனக்கு எரிச்சலானது. திரையை விட்டு பார்வையை அகற்றி அமைதியானேன்.

பாப்பா!!” என் முக மாறுதலை உணர்ந்தவள், கொஞ்சினாள்.

“..................” அவளது கொஞ்சல், இப்பொழுது எனக்கு எரிச்சலை தந்தது.

பாப்பா!!” மீண்டும் கொஞ்சினாள், குரலில் கூடுதல் குழைவுடன்.

சரி மது!! குளிக்க போறேன்!! அப்புறம் பேசுறேன்!!” உணர்ச்சி அற்ற குரலில் கூறினேன். குளிர்ந்த தண்ணீர் என் மன ஏக்கங்களை குறைக்கும் என்று எண்ணி.

ஓகே!! குளிச்சிட்டு கூப்பிடு!!”

ம்ம்" வெறுமனே கொட்டினேன் 

ஐ லவ் யு!!” கொஞ்சினாள்

நான் அப்புறம் பேசுறேன்!!” என்றேன் வெறுமையாய்.

இப்போ உனக்கு என்ன ப்ராப்ளம்?” கொஞ்சிக் கொண்டிருந்தவள் எரிச்சலானாள்.

நான் பேசுறேன்" என்று சொல்லிவிட்டு, இணைப்பை துண்டித்தேன்.

நான் துண்டித்த பத்து நொடிகளில் மறுபடியும் அழைத்தாள். மொபைலை எடுத்து சைலன்ட் மோடில் போட்டுவிட்டு குளிக்க சென்றேன். எண்ணியதைப் போலவே குளிர்ந்த நீர் என் மனதை கொஞ்சம் அமைதிக்கொள்ள செய்தது. குளித்துவிட்டு வந்து உடை மாற்றிக் கொண்டு, அப்படியே மெத்தையில் விழுந்தேன், தூங்கிப்போனேன்.

தூங்கி எழுந்ததும் மொபைல் எடுத்து பார்க்க, அது சார்ஜ் இல்லாமல் உயிரற்று கிடந்தது. அதை சார்ஜரில் போட்டுவிட்டு, டேபிளில் இருந்த கடிக்காரத்தைப் பார்க்க, மணி 5 என காட்டியது. வெளியே சென்று, ஒரு சின்ன நடை போட்டுவிட்டு, ஒரு மணி நேரம் கழித்து அறைக்கு திரும்பினேன். மொபைலை உயிர்ப்பித்த அடுத்த நொடியில் இருந்து, "டிங், டிங்" என்ற சத்ததுடன் மெசேஜும், தவற விட்ட அழைப்புகளின் நோட்டிபிகேஷன்ஸ், ஒன்றிரெண்டை தவிர அனைத்தும் மது என்றே இருக்க, சின்ன புன்னகை என் உதட்டில் தோன்றியது. “டிங்!! டிங்!!” சத்தம் ஓய்ந்ததும், மதுவிடம் இருந்த வந்த கடைசி மெசேஜைதான் முதலில் படித்தேன், என் விரல்களின் சதியால்.

“don’t act like a kid!!” என்னை பாப்பா!! பாப்பா! என்றவள் அனுப்பியிருந்த மெசேஜை படித்ததும், சற்று முன், என் உதடுகளில் இருந்த சிரிப்பு காணாமல் போக, மீண்டும் எரிச்சலானேன். அங்கிருந்த சேரில் அமர்ந்து கண்களை மூடினேன், நாளைய நாளின் முக்கியத்துவத்தை எனக்கே நினைவு படுத்தி மனதை அமைதியாக்க செய்த முயற்சியை, மொபைலின் ரிங்டோன் முறியடித்தது. மதுவாகத்தான் இருக்கும், என்னை சமாதானம் செய்யத்தான் அழைத்திருப்பாள் என்ற எதிர்பார்ப்போடு எடுத்தால், திரையில் "தாத்தா" என்று பிரதிபலிக்க, வேறு வழியில்லாமல் எடுத்து பேசினேன்.

நீண்ட நாட்களுக்கு பிறகு, வழக்கத்துக்கு மாறாக நெடு நேரம் பேசினேன் தாத்தாவுடன். இறுதி போட்டியை காண நேரில் வர முடியதாதற்கு "சாரி" சொன்னவர், நாளை இரவே எனக்காக கோவையில் வந்து காத்திருப்பதாக சொன்னது, கொஞ்சம் சந்தோஷத்தை கொடுத்தது. மறுநாள் இறுதி போட்டி என்பதால் சீக்கிரமே சாப்பிட்டுவிட்டு ஏழு மணிக்கெல்லாம் அறைக்கு வந்துவிட்டேன் தூங்குவதற்கு. மெத்தையில் விழுந்த சில நேரங்களுக்குள், என் மொபைல் அடித்தது, மது தான் அழைத்திருந்தாள். “don’t act like a kid” என்று அவள் அனுப்பிய மெசேஜ் நினைவுக்கு வர, மீண்டும் மொபைலை, சைலன்ட் மோடில் போட்டுவிட்டு, பெரும் முயற்சி செய்து உறங்கிப்போனேன்.

**********

முழு மூச்சுடன் வாமப்பில் நான் ஈடுபட்டிருந்தாலும், என் செவி பறைகள் என் மொபைலில் எப்பொழுது ரிங்டோன் அடிக்கும் என்று காத்துக் கிடந்தது. நேற்று பேசும் பொழுது, அவளை வரச்சொல்லி நான் வீம்புபிடிக்க, அவள் மறுக்கவும், சண்டையிட்டுவிட்டு ஃபோனை வைத்தவன்தான், அதன் பின், அவள் எவ்வளவோ முறை அழைத்தும் எடுக்கவில்லை. கடைசியாக நேற்று இரவு ஏழு மணிக்கு அழைத்தாள், நான் எடுக்கவில்லை, அதன்பின் அழைக்கவும் இல்லை.

மது வேறு எப்படி சொல்லி திட்டியிருந்தாலும் எனக்கு வலித்திருக்காது. “ don’t act like a kid” என்று அவள் மெசேஜைப் படித்ததும் எனக்கு வந்தே ஒரே எண்ணம் "அப்போ நான் அவ பாப்பா இல்லையா? “ என்பதுதான். அவள் அனுப்பியிருந்த அர்த்தம் வேறு என்றாலும், அதை உணர்ந்துகொள்ள என் மனம் தெளிவில்லாமல் இருந்தது. இப்பொழுது அந்த தெளிவு வந்திருந்தாலும், ஏனோ என் மனம் அவளே அழைக்கட்டும் என்று, வீம்பு பிடித்தது. அதற்கு இரண்டு காரணம், ஒன்று நானே அழைத்தாள் கண்டிப்பாக என்னை வாட்டி எடுத்துவிடுவாள், இரண்டு இன்று இறுதிப்போட்டி என்பதால், எவ்வளவு கோபம் இருந்தாலும் கண்டிப்பாக கால் செய்வாள், அப்படி செய்யும் பொழுது இன்னும் கோபத்தில் இருப்பது போல் விரைப்புடன் நடித்தால், நேற்றைக்கு நடந்ததை பெரிது படுத்தாமல் என்னை சமாதானம் செய்வதிலேயே குறியாய் இருப்பாள்.

"இநாப்!!, ரிலாக்ஸ்!!” என்று கோச் சொல்ல, சிறிது நேரம் ரிலாக்ஸ் செய்துவிட்டு, கிட் பேக்கை எடுத்துக்கொண்டு ஸ்டேடியத்தை நோக்கி நடந்தேன்.

ஆட்டம் தொடங்க இன்னும் அரைமணிநேரம் இருக்க, நான் ஆடவேண்டிய கோர்ட்டுக்குள் நுழைந்து சுற்றிலும் பார்வையை படர விட்டேன். அரங்கில் பத்து சதவிகித இருக்கைகள் கூட நிரம்பவில்லை, அந்த ஆட்டத்தில் எதிராளி மகாராஷ்டிராவைச் சார்ந்தவனாக இருக்க நானோ தமிழ்நாடு, தன் மண்சார்ந்த வீரர்கள் அனைவரும் வெளியேறி இருக்க, இந்த ஆட்டத்தை காண பெரிதாக யாருக்கும் விருப்பமில்லை போலும் என்று நினைத்தவாறு எனக்கு என்று ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தேன்.

மதுவிடம் பேசாமல் இருப்பது மனதை உருத்தவே, மொபைலை கையில் எடுத்து மதுவுக்கு அழைத்தேன் சுவிட்ச் ஆப் என்றே வர, கோபம் தலைக்கேறியது. இரண்டு பெருமூச்சுகள் இழுத்து விட்டு என்னை சமன் படுத்தி கொண்டு நடக்க இருக்கும் போட்டியில் முழுதாக என் கவனத்தை திருப்பினேன்.

பரஸ்பர அறிமுகத்திற்காக அழைக்கப்படும் போதுதான், என் மொபைலில் "டிங்" என்ற சத்தம் வந்தது. எடுத்துப் பார்த்தால் நேத்ராதான் மெசேஜ் அனுப்பியிருந்தாள் வழக்கமாக எனக்கு வாழ்த்துக்கள் சொல்லி, மெசேஜை படித்துவிட்டு அது மதுவிடம் இருந்து இல்லை என்ற ஏமாற்றம் தந்த எரிச்சலில், "ப்ச்" என்றவாறு தலையை ஆட்டிவிட்டு கோர்ட்டுக்குள் நுழைந்தேன். மது கண்டிப்பாக எங்களது சண்டையில் கோபமாக இருப்பதை நேத்ராவிடம் சொல்லியிருப்பாள், நேத்ராதான் மனது கேட்காமல் மதுவுக்கும் சேர்த்து எனக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு, மதுவை சமாதானம் செய்துகொண்டிருப்பாள் என்று புரிந்தது.

ஒரு மணி நேரம் கழித்து,

ஹோவ் டூ யு ஃபீல் நோவ்?” என்று கேட்ட ரேபரீயிடம், கட்டை விரலை உயர்த்திக் காட்ட,

இட்ஸ் டைம்!!” என்று மணிக்கட்டை காட்டிவிட்டு, மேட்ச் கோர்ட் நோக்கி சென்றார்.

எழுந்தது இருபுறமும் இடுப்பை வளைத்து, வலி குறைந்திருப்பதை உறுதி செய்து கொண்டு, உடலின் ஒவ்வொரு பாகத்தையும் நீட்டி மடக்கி, மீண்டும் ஆடுவதற்கு என்னை தயார் செய்தேன். முதல் இரண்டு சுற்றுக்களை மிகவும் எளிதாக இருபது நிமிடங்களிலேயே வென்றுவிட, இரண்டாம் சுற்றின் பிற்பகுதியில் நான் அடித்த பந்தை அது எதிராளின் கோர்ட்டில் பிட்ச் ஆகும் முன்பே (a volley shot), அவன் முன் வந்து, என் பக்கத்து மற்றொரு முனைக்கு லாவகமாக திருப்பிவிட, என் உடலின் விசைக்கு எதிராக உடனே திரும்பி, பந்து இரண்டாவது முறை தரையை தொடும் முன்பே, எதிராளி திருப்பி அடிக்க முடியாத விதத்தில், அவனது baselineக்கு நெருக்கத்தில் தரையை தொடுமாறு, பலம் கொண்டு அடிக்க, அது அப்படியே நிகழந்தது.

அந்த ஷாட்டை ஆடுவதற்கு, நான் எடுத்த அதிக சீரத்தையின் காரணமாக, இடுப்பில் வலது பக்கத்தில் மிகவும் லேசாக ஆரம்பித்த வலி, அடுத்த சுற்றில் என் ஆட்டத்தின் வேகத்தை வெகுவாக பாதிக்க, மிகவும் போராடி அந்த சுற்றை தோற்றுவிட்டேன். வலியும் அதிகமாகவே, இஞ்சூரி பிரேக் எடுத்துக்கொண்டு, அணியின் பிஸியோவின் சிகிச்சையின் பலனாக மீண்டும் விளையாட கோர்ட்க்குள் வந்தேன்.

ஆர் யு ரெடி எங் மேன்" ரேபரீ மீண்டும் கேட்க, அவரைப் பார்த்து சிரித்தேன்.

குட்!! தி கேம் இஸ் கெட்டிங் இன்டரேஸிட்டின்க்!! ஐ ஹேட் இஞ்சூரி டிசைடிங்க தி வின்னர்!!” என்றார்

நான் என் கோர்ட்டில் என் பக்கத்துக்கு செல்லும் போது, எதிராளியின் டீம் மெம்பர் ஒருவர், ஏதோ நான் வேண்டும் என்றே காயமாகிவிட்டது போல் நடிப்பதாகவும், opponent-இன், ஃபார்ம் தடைபடுவதரக்கே நான் அப்படி நாடக்கமாடுவதாகவும் சொல்ல, பொறுக்க மாட்டாத நான், இருபது நிமிடங்களில் அவன் இரண்டு சுற்றுக்களை என்னிடம் தோற்றதை அவனுக்கு நினைவு படுத்த, சொற்கள் சிலம்பம் வீச, சலசலப்பானது. எதராளி மஹாராஷ்ட்ரா என்பதாலும், கடந்த ஒரு பத்து வருடங்களாக மஹாராஷ்ட்ராவின் ஆதிக்கம் தான், இந்தியா டென்னிஸ் களத்தில் வேரூன்றி இருந்ததாலும், அவர்கள் பக்க கூச்சலே மேலோங்கி இருந்தது. ரேபரீன் குறிக்கிடுக்கு பின்பே நிலைமை கட்டுக்குள் வந்தது.

மீண்டும் ஆட்டம் துவங்க, சிறிது நேரத்துக்கு முன் நடந்த சலசலப்பு, என் உடலின் வெப்பத்தை ஏகபோகமாக ஏற்றிவிட்டிருந்தது. முதல் இரண்டு சுற்றுக்களை என்னிடம் எதிர்ப்பே இல்லாமல் இழந்துவிட்டு, மூன்றாவது சுற்றில் காயத்துடன் ஆடிய என்னிடம் முப்பது நிமிடம் போராடி வென்றுவிட்டு, அபாண்டமாக பழிபொடும் எதிராளியை, ஏளனாமாக ஒரு பார்வை பார்த்தேன், அவன் பந்தை என்னை நோக்கி அடிக்கும் முன்பு.

“don’t place too much stress in your lower back!!” என்று பிஸியோவும்

“just place the ball, don’t go too hard on yourself!! play smart” என்று கோச்சும் குடுத்த, அறிவுரைகள் எல்லாம் காற்றில் பறக்க,

எதிராளி என்னை நோக்கி பந்தை அடித்த பதினைந்துஐந்து நிமிடங்களில், ஒரு புள்ளி கூட விட்டுக் கொடுக்காமல் வென்றிருந்தேன். இதற்கும் அவன் வேண்டும் தன் காலனியின் கயிற்றை வேண்டும் என்றே, பிரித்து கட்ட, இல்லாத வியர்வையை துடைக்க, இரண்டு முறை ராக்கெட் மாற்ற என, எப்படி எல்லாம் முடியுமோ, அப்படியெல்லம் காலதாமதம் செய்தான், நான் ஒவ்வொரு முறை புள்ளிகளை வெல்லும் போதும். அவனது நோக்கமெல்லாம் நான் எடுத்துக்கொண்ட வலி நிவாராணியின் தாக்கம் குறைந்தால், மீண்டும் என் ஆட்டம் ஆட்டம் காணும் என்பதுதான். கடைசி ஐந்து நிமிடங்கள் மட்டுமே இடையூறு செய்யாமல் தொடர்ந்து ஆடினான், அதுவும் ரேபரீயின் எச்சரிக்கைக்கு பின்.
[+] 2 users Like Doyencamphor's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)