அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
முன்கதை மிகவும் நீண்டு கொண்டே போகிறது. கதை கூடிய சீக்கிரம் நிகழ்காலத்திற்கு வந்தால் நன்றாக இருக்கும்.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(12-08-2020, 10:20 PM)Fun_Lover_007 Wrote: முன்கதை மிகவும் நீண்டு கொண்டே போகிறது. கதை கூடிய சீக்கிரம் நிகழ்காலத்திற்கு வந்தால் நன்றாக இருக்கும்.
மன்னிக்கனும் நண்பா, குறைந்தபட்சம் ஒரு மூன்று அல்லது நான்கு பாகங்கள் ஆகலாம், நிகழ் காலத்துக்கு கதை வருவதற்கு. அதே போல ஹார்டு கோர் காமம் இனிமேல் இக்கதையில் இடம் பெறாது. அடுத்த கதை மனதில் ஒன்று உள்ளது, அதில் கண்டிப்பாக, ஹார்டு கோர் காமம் வாசகர்களின் விருப்பம் நிறைவேற்ற முயற்சி செய்கிறேன். ஏமாற்றம் அடைந்திருந்தால் அதரக்காகவும் சேர்த்து மன்னிப்பு கோருகிறேன்.
[+] 3 users Like Doyencamphor's post
Like Reply
(14-08-2020, 01:35 PM)Doyencamphor Wrote: மன்னிக்கனும் நண்பா, குறைந்தபட்சம் ஒரு மூன்று அல்லது நான்கு பாகங்கள் ஆகலாம், நிகழ் காலத்துக்கு கதை வருவதற்கு. அதே போல ஹார்டு கோர் காமம் இனிமேல் இக்கதையில் இடம் பெறாது. அடுத்த கதை மனதில் ஒன்று உள்ளது, அதில் கண்டிப்பாக, ஹார்டு கோர் காமம் வாசகர்களின் விருப்பம் நிறைவேற்ற முயற்சி செய்கிறேன். ஏமாற்றம் அடைந்திருந்தால் அதரக்காகவும் சேர்த்து மன்னிப்பு கோருகிறேன்.

good decision. go with love.
Namaskar  காதல் காதல் காதல்  Namaskar  
Like Reply
Brother Innaiku update irukka
Like Reply
Suppan innaiku paadam solvana.
Like Reply
Suppan innaiku varuvanaaa..
Like Reply
நாளை இரவுக்குள் அடுத்த பதிப்பு இருக்கும் நண்பா.
Like Reply
Nandri
[+] 1 user Likes praaj's post
Like Reply
(17-08-2020, 09:05 PM)Doyencamphor Wrote: நாளை இரவுக்குள் அடுத்த பதிப்பு இருக்கும் நண்பா.

Cool bro
Like Reply
Waiting bro
Like Reply
Brother waiting for your update
Like Reply
Ji innaikku iravukkul nu sonninga.
Innaiku mudiya oguthu ji.
Like Reply
Waiting waiting waiting
Like Reply
Still waiting for the update
Like Reply
All are waiting nanba..
Like Reply
Update???
Like Reply
Bro waiting for the update
Like Reply
பாகம் - 27

டேய்!! உண்மையிலேயே பைசன் பாக்கலாமா?”, சந்தேகத்தோடு, என் அருகில் இருந்த நேத்ரா கேக்க

கண்டிப்பா பாக்கலாம்!!, ஒரு பெரிய கூட்டமே வந்திருக்காம்!!, போட்டோஸ் பாத்தேல” நான், அவள் சந்தேகத்துக்கு விடையளிக்க, பரப்பலாறு அணை வியூவ், வலது புறம் தெரிய, இருட்டும் முன், பழனி மலையின் கிழக்கு சரிவில், ஆடலூர் அருகே இருக்கும் எங்கள் காஃபி எஸ்டேட்டை அடைந்து விடும் முனைப்பில், காரை விரட்டினேன். மது, பின் சீட்டில் அமர்ந்து இருந்தாள், நேத்ரா சண்டையிட்டு எறிக்கொள்ள, இன்னும் கோபத்தோடு இருப்பது போல நடித்துக் கொண்டிருந்தாள். நேத்ராவுக்கு காடும், காட்டு விலங்குகளும் பிடிக்கும் என்பதால், நேற்று, எங்கள் எஸ்டேட் அருகே, மேனேஜர் எடுத்து எனக்கு அனுப்பிய, காட்டெருமை கூட்டத்தின் போட்டவை, அவளுக்கு நான் அனுப்ப, அவளின் நச்சரிப்பாள், இன்று இந்த பயணம். காலையிலேயே தாத்தாவிடம் சொல்லி எல்லா ஏற்பாடுகளும் செய்தாக்கிவிட்டது. மொபைலில் நான் அனுப்பிய போட்டோக்களை பார்த்துக் கொண்டிருந்தவள்

நீ உண்மையிலேயே இதுக்கு முன்னாடி பைசன் பாத்திருக்கியா?”, நான் சொன்னதை நம்பாமல் கேட்டவளிடம்

டார்லிங்!! நான் எட்டாவது வரைக்கும் கொடைக்கானல்தான் படிச்சேன்!! எங்க ஸ்கூல் கிரவுண்டுக்கே வரும், அடிக்கடி. அதுவும் இல்லமா, இந்த பழனி ஹில்ஸ்ல எங்களுக்கு ரெண்டு எஸ்டேட் இருக்கு, பைசன் என்ன, த்ரீ, ஃபோர் டைம்ஸ், சிறுத்ததையே பாத்திருக்கேன்!!”, நான், என் பெருமையை பீத்த, ஒரு மணி நேரத்தில் எங்கள் எஸ்டேட்டை அடைந்தோம்

---------------------------- 

நான்கு மணி நேரம் கழித்து 

உண்மையிலேயே, சீட்டா நம்மள அட்டாக் பன்னும்னு பயந்துட்டேன் டா!!”, என்றாள் மது பரவசத்தில் 

ஆமா பா!! நானும் அப்படித்தான் நினைச்சேன், பட், அது நம்ம பாத்து, பயந்து, தெரிச்சு ஓடிருச்சு!!” மதுவிடம் இருந்த அதே பரவசத்தோடு நேத்ராவும் சொல்ல,

சும்மா!! பொய், இங்க சீட்டாவே கிடையாது" என்றேன், பார்க்க முடியாத ஏமாற்றத்தில், நான் 

அப்போ, நீ முன்னாடியே பார்த்திருக்கேன்னு, வரும் போது சொன்னதெல்லாம், பொய்யா கோபாாால்?” மது நாடக தன்மையோடு என் காலை வார, நான் அசடு வழிந்தென். இருவரும் , ஹை ஃபைவ் அடித்துக் கொண்டு என்னைப் பார்த்து சிரித்தார்கள்

சும்மா இரவு டின்னர் சாப்பிட்ட உடன், எஸ்டேட் ஜீப்பில் ஒரு ரவுண்ட் போக, அவர்கள் இருவரும் சிறுத்தை என்று சொல்ல, முன்னால் சீட்டில் அமர்ந்திருந்த நான் பார்க்கும் முன் அது ஓடி மறைந்தது. இருவரும், சிறுத்தையை பார்த்ததை பற்றியே பேசிக்கொண்டிருக்க, எனக்கு தூக்கம் வருவதாக சொல்லி, என் ரூம்க்கு சென்று படுத்தேன். எப்படியும் குட்நைட் சொல்லவாவது, மது வருவாள் என்று எதிர் பார்த்தபடியே தூங்கிப்போனேன்

---------------------------------

மறுநாள் காலை

டேய், எரும!! எழுந்திரு டா!! எவ்வளவு நேரம் எழுப்புறது!!” என் போர்வையை, மது உருவினாள், சில் என்ற குளிர், என் உடலை தாக்க, எழுந்து அமர்ந்து, அவள் கைகளில் இருந்து போர்வையை பறித்து, என்னை மூடிக்கொண்டு

வெயில் வரட்டும்!! அப்புறம் போலாம்!!” பாதி கண்ணை திறந்து, அவளைப் பார்த்துக் கொண்டு கெஞ்ச

சாப்பாடு வந்துருச்சு!!, சீக்கிரம் ரெடி ஆகி வா!! டென் மினிட்ஸ் டைம்!! இல்லனா பச்ச தண்ணிய, தலைல ஊத்திருவேன்!!” என்று என்னை மிரட்டி விட்டு, அவள் வெளியே செல்ல, அங்கும் இங்கும் ஆடியது, அவளது குதிரைக் கொண்டை. அவளது குதிரைக் கொண்டையின் ஆட்டம் என்னை காலையிலேயே உசுப்பேத்த, நான் கிளம்பி ரெடி ஆகி, வெளியே சென்று, வராண்டாவில், அவள் அருகே அமர்ந்தேன், பதினைந்து நிமிடம் கழித்து

எரும!! பூரி ஜில்லுனு ஆயிடுச்சு!!” கரித்துக் கொண்டே, என்னைப் பார்த்தவள், பின் 

டேய்!! குளிக்கலையா?, ச்சீ" என்று முகம் சுளித்தாள்

கொடைக்கானல் வந்தா, ஃபர்ஸ்ட் டே குளிக்க கூடாது, இது எங்க பண்பாடு!!” என்று, நான் சிரித்துக் கொண்டே கூற,

அழுக்கு பையா!!” மது சலித்துக் கொண்ட சமயம், சூடாக இன்னொரு ஹாட் பாக்ஸ் நிறைய பூரியை, வேலையாள் கொண்டு வந்து குடுத்தார். சாப்பிட்டு முடித்து, காபியை குடித்துக் கொண்டே நான் மதுவைப் பார்க்க, என்னை கண்டுகொள்ளாமல், காபியை குடித்தவாரே, மீண்டும் நேற்று இரவு பார்த்த, சிறுத்தையை, பற்றியே பேசிக் கொண்டிருந்தனர், நேத்ராவும், மதுவும்

ஒரு பிளாக் நிற, ஜீன்ஸ்சும், தடித்த, குளிர் தாங்கக் கூடிய, முழுக்க கை, ரவுண்ட் நெக் காலர் வைத்த ஒரு கிரே கலர், டி-ஷர்ட் போட்டிருந்தாள், மது. மொத்த டி-ஷர்ட்டும் தொள தொளவென்று இருக்க, கழுத்தையும், இடுப்பையும் இருக்கி பிடித்திருந்தது. அவளது முகத்தில் ஏனோ இன்று கூடுதல் எழில், அவள் அழகு என்னை கட்டிப் போட்டதென்றால், அவளது சின்னஞ்சிறு அசைவுக்கு ஏத்தவாறு, அலை அலையாக நாலாபுறமும் நாட்டியமாடும், அவளது குதிரை கொண்டை மயிர் கற்றொ, என்னை இதுவரை நான் எட்டியிரத கிளர்ச்சியில் தள்ளியது. கையில் இருந்த காபியை பருகியவாரே, கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன், என்னவளை

என்ன டார்லிங்?!! அவளையே பாத்துகிட்டு, காபியோட சேர்த்து காப்பையும், முழுங்கிறாத!!” என்று ஏதோ பெரிய ஜோக் அடித்துவிட்டதாக நிணைத்து சிரித்த நேத்ராவை, கேவலமாக ஒரு பார்வை பார்க்க, என் தலையில் தட்டிவிட்டு, எழுந்து, அவர்கள் அறையை நோக்கி, கை கழுவ சென்றாள். அவள் சொன்னதையும், அடித்ததையும் கண்டு கொள்ளாமல், நான் மதுவையே பார்த்துக் கொண்டிருந்தேன், கன்னங்கள் பூரிக்க. நேத்ராவின் எள்ளலுக்கு சிரித்தவள், கண்களில் காதலோடு என்னைப் பார்த்து, "என்ன?” என்று புருவம் உயர்த்தி கேட்டாள், மது

நான் எதுவும் சொல்லாமல், தலையை மட்டும் இருபுறமும் அசைத்தேன், கண்களால் அவளை பருகிக் கொண்டு. கண்களில் காதல் பொங்க, உதடு குவித்து ஒரு முத்தத்தை என்னைப் பார்த்து காற்றில் பறக்கவிட, மீண்டும் தலையை மட்டும் இருபுறமும் அசைத்தேன். கண்களில் குறும்போடு, சுற்றி பார்த்துக் கொண்டே எழுந்தவள், என் மடியில் உக்கார, அவளுக்கு வசதியாக, கையில் இருந்த காப்பி, கப்பை கீழே வைத்தேன். என் மடியில் அமர்ந்தவள், நேத்ரா சென்ற திசையை பார்க்க, அவளது, தலை அசைவில், அவளின் குதிரைக் கொண்டை, என் முகத்தை தழுவிக் கொண்டது. அவள் மயிரகற்றின் தீண்டலையும், அதன் வாசத்தையும், கண்களை முடி, பெரு மூச்செடுத்து, என் அணுக்களில் எல்லாம் நிரப்பிக் கொண்டிருக்க, அவள் மயிர்கற்று என் முகத்தை விட்டு அகன்றது

ஏமாற்றத்தில், முடியிருந்த கண்களை திறக்கும் முன், அவளது தேன் சொட்டும், ஈர இதழ்கள், என் இதழ்களை தீண்டி, தின்ன, திறக்க முயன்ற கண்களை மூடிக்கொண்டு, அவள் இடையை என் கைகளால் பின்னி, அவளை இன்னும் என்னோடு சேர்த்து அனைத்துக் கொண்டேன். என் பின்னந்தலை முடிகளை அவளது ஒரு கை பற்ற, அவசர அவசரமாக, என் வாயினுள் நுழைந்து, நாலா பக்கமும், நாவினால் தீண்ட, ஒரு கையை, அவளது டி-ஷர்ட்க்குள் நுழைத்து, அவளது உடல் சூட்டை உணர்ந்தேன். ஏதோ சத்தம் கேட்க, பட்டென அவள் எழுந்து, ட்-ஷர்ட்டை சரி செய்தவாரே, அறையினுள் நோக்க, நான் அரைமயக்கத்தில் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்
வெட்க சிரிப்பு சிரித்தவள், என்னை நோக்கி குனிய, அவள் முகத்தை ஏந்த சென்ற என் கைகளை, தடுத்து பிடித்தவள், மேலும் குனிந்து உன் உதடுகளில், அவள் உதடுகளை ஒற்றி எடுத்து, என்னைப் பார்த்து "போதுமா?” என்று செய்கையில் கேட்டாள். "இன்னும் வேணும்" என்பதைப் போல, கண்களை மூடி, அண்ணார்ந்து, என் உதடுகளை அவளை நோக்கி காட்ட, அரை நொடிக்கும் குறைவாகவே நீடித்த, ஐந்தாறு முத்தங்களை இட்டவள், முத்தத்தை விட மெதுவாக என் உதடுகளில், கையால் அடித்து, அவள் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள். நான் கண் கொட்டாமல் அவளையே, பார்த்துக் கொண்டிருக்க, கை கழுவிவிட்டு வந்த நேத்ரா, மதுவை மறைத்துக் கொண்டு என் முன் நிக்க, நான் நிமிர்ந்து அவளைப் பார்த்தேன்.

இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு, என்னை முறைத்துக் கொண்டு இருந்தாள். அவளப் பார்த்து அசட்டு சிரிப்பு ஒன்றை உதிர்த்தேன், என்னவள் தந்த முத்தத்தின் கிறக்கத்தில்

எப்பா...… சாமி!! முடியல!!, கண்ணாலேயே பேசுரேனு, சவாடிக்காத!!” முகத்தில் எரிச்சலுடன், நான் மீண்டும் சிரித்தேன்.

காட்டேறுமே கட்டுறேன்னு கூட்டிட்டு வந்துட்டு!!, நீங்க பண்ணுற கருமத்த, எல்லாம் பாக்கா முடியல!! ஏறுமைய பாக்காட்ட கூட பரவா இல்ல!! இந்த கருமத்த பாக்க வச்சு என்ன சாவடிக்காத!!” அவள் தலையில் அடித்துக் கொள்ள, எழுந்த நான்

எங்களப் பார்த்து பொறாம படுறியா டார்லிங்!!” என்று, அவள் கன்னத்தை கிள்ள போக, என் கையை தட்டி விட்டவள்

ஆமா சாமி, பொறாம தான் படுறேன்!!” தலையை குணிந்தவாறு கை எடுத்துக் கும்பிட

ரெடி ஆகுங்க!!, நான் போய் வண்டி ரெடியானு கேட்டுட்டு வர்றேன்!!”, நேத்ராவின் கன்னத்தை கிள்ளி விட்டு, சொல்ல

கொஞ்சுர வேலை எல்லாம் அவகிட்ட வச்சுக்கோ!!” என்று கிளம்பிய, என் முதுகில் அடித்து விட்டு, அவள் சொல்ல, ஒரு பத்தடி சென்று, திரும்பி அவளைப் பார்த்துக் கொண்டே, மேட்டுக்குடி, கவுண்டமணி ஸ்டைலில்,

உன்னதான் கொஞ்சுவேன்!! என்னா இப்போ, நீ தான என் டார்லிங்!!”, என்று சொல்லி, கவுண்டமணி போலவே ஒரு ரொமான்டிக் லுக் விட, நேத்ரா என்னை முறைக்க, கண்டு கொள்ளாமல் அவளைப் பார்த்து, காற்றில் ஒரு முத்தத்தை பறக்க விட, என் மேல் எறிவதற்கு ஏதாவது கிடைக்குமா என்று சுற்றி தேடினாள், நான் ஓட்டம் பிடித்தேன். ஆனால் அதற்கு முன் மதுவின் ரொமான்டிக் லுக்கை கவனிக்க தவறவில்லை.

---------------------------------------------
[+] 4 users Like Doyencamphor's post
Like Reply
பாகம் - 28 

கட்டெருமமனுசங்கள அட்டாக் பண்ணாதா னா?” ஜீப் ஒட்டிக் கொண்டிருந்தஎங்கள் எஸ்டேட் சூப்பர்வைசரரைப் பார்த்துகேட்ட நேத்ராஅவர் பதில் சொல்லும் முன்

எனக்கு மூச்சே வரலநீங்க அவ்வளவு பக்கத்துல போனதும்!!” என்றுவியப்புபயம்சந்தேகம் என அனைத்தையும் குழைத்துமுகத்தில் ஒரு பெரும் காட்டெருமை கூட்டத்தை கண்டசந்தோஷத்துடன்

இல்லா மா!!, குட்டி இல்லாத கூட்டம் எப்பவும் மனுசங்களப் பார்த்த கண்டுக்காது!! பாக்கத்தான் பெருசா இருக்கும்!! ஆனா ரெம்ப சாதுவான மிருகம்”தன் அனுபவத்தில் அவர் கூறதலையாட்டியவள்பின்னாடி திரும்பி என்னைப் பார்த்தவள் 

தாங்க்ஸ் டா!! சந்தேகத்தோட தான் வந்தேன்நேத்து!!, உன் புண்ணியத்துல ரெண்டே நாள்லசீட்டாவையும் பத்தாச்சுபைசனும் பத்தாச்சுஅவள் சொல்லஜீப் வலைவில் திரும்பிஒரு மலை முகடில் இருந்து கீழ் இறங்கஎங்கள் எஸ்டேட் ஆபீஸ் கண்ணில் தெரிந்தது

அவ்வளவு தானாவந்துட்டோமா?” நேத்ரா சோகத்தோடு கேக்க

ஏய்இங்க இருந்து நடந்து போலாமா!!” என் அருகில் இருந்த மது கேட்டாள் 

ஏய்சூப்பர் ஐடியா!!,...... ஓகே நடந்து போலாம்,.... அண்ணா வண்டி கொஞ்சம் நிறுத்துங்களேன்?”, நேத்ரா சொல்லவண்டியை நிறுத்தியவர் 

இல்லமாபாக்குறதுக்குதான் பக்கமா இருக்கும்மூணு கிலோமீட்டர்!! இங்க இருந்து!!” அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதேமதுவும்நேத்ராவும்இறங்கிக்கொள்ளஅவர் திரும்பி என்னைப் பார்த்தார்

மூணு கிலோமீட்டர்னுசாதரணாமா நினைக்காதீங்கஊர்ல நடக்குற மாதிரி இல்லமலைல நடக்குறது ரெம்ப கஷ்டம்ஏற்கனவே டுவேலோ க்லாக் ஆச்சு!! ரெம்ப பசிக்கும்!!”னு நான் எடுத்து சொல்ல

போட சோத்து மூட்ட!! நீ போ!! நாங்க நடந்துதான் வருவோம்!!” என்று சொல்லிய நேத்ராமதுவின் கையை பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்

வேறு வழி இல்லாததால்நானும் அவர்களுடன் நடந்து வருவதாக சொல்லிஇறங்கிக் கொண்டேன்அவர்கள் முன் செல்லஒரு பத்தடி இடைவெளியில் அவர்களை தொடர்ந்து சென்றேன்மதுவின் நடைக்கு ஏற்றவாறு ஆடும் அவளது குதிரைக் கொண்டையை ரசித்துக் கொண்டுஅடர்த்தியானஒரு ஒழுங்கின்மை இல்லாமல்சிலுப்பிக் கொண்டு இருக்கும் முடி அவளுக்குஅந்த ஒழுங்கின்மையையே அழகு!!, பேரழகு!!. என்னவோ இன்று காலையில் இருந்து அவள் கொண்டையிலேயே என் மனம் லயத்துக் கிடந்ததுஅவள் மயிகற்றின் ஆட்டத்துக்குஎன் மனமும் ஆடியதுசிறிது நேரம் கழித்துதற்செயலாகஅவள் மயிரகற்றில் இருந்துகீழ் இறங்கி என் பார்வைஅவளது எடுப்பான புட்ட அசைவில் நின்றது

அவள் அணிந்திருந்த டீ-ஷர்ட்அவள் இடையை கவ்வி பிடித்திருக்கஅவளது அணிந்திருந்த ஜீனிஸ்-ல் எடுப்பான பின்புறம்ஏகத்துக்கும் ஆட, “டேய்தம்பிஇது தப்புடா!!”என்று என் மனசாட்சி என்னை கடிந்து கொண்டதுபெரும் முயற்சிக்கு பின் பார்வையைசுற்றிலும் இருந்த இயறக்கையை நோக்கி திருப்பிசிறிது நேரத்து மேல் முடியாமல் போகவேநடையில் கொஞ்சம் வேகம் கூட்டிஅவர்களுடன் சேர்ந்து நடந்தேன்மனம் கொஞ்சம் அமைதி பெறஅப்படியெல்லாம் விடமாட்டேன் என்பதுபோலஅடுத்த காரியத்தை செயல்படுத்தியது காலம்ஒரு நூறடி அவர்களுடன் சேர்ந்து நடந்திருப்பேன்நேத்ராமதுவின் காதில் ஏதோ ரகசியம் சொல்லிவிட்டு ஓட

எரும மாடு!! சாவடிக்கிறேன் உன்ன!! நில்லுடி”னு 

அவளப் பார்த்து கத்திக் கொண்டேமது அவளை கொஞ்ச தூரம் துரத்தினாள்மீண்டும்நான் தவிர்க்க முயன்ற அதே காட்சிஎன்னமுன்பிருந்ததை விட தற்போது தூரம் கொஞ்சம் அதிகம்ஏனோ முன்பிருந்த குற்ற உணர்ச்சி இப்போது இல்லைஎன் மது தான் என்றாலும்உள்ளே கொஞ்சம் படபடவென்று அடித்துக் கொண்டாலும்அவளது நடையில் ஒய்யாரமாக ஆடும் அவளது குதிரை கொண்டையா?, இல்லை ஒயிலாக ஆடும் அவளது எடுப்பான பின் புறமாஎது அழகுஎன்று சிந்தித்தாவாரேஅவள் நடையின் அழகைரசித்துக் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தேன்சிறிது தூரம் கழித்துஇருவரும் ஒரு பாறையில் அமர்ந்து கொள்ளஅவர்கள் அருகே சென்று 

"என்னாச்சு?” என்றுநான் கேக்க 

எப்பா!! முடியல!!.... கொஞ்ச நேரம் ரெஸ்ட்டு!!” என்ற நேத்ராஏதோ மயக்கம் வருவது போலவிழிகளை உருட்டிகண்களை முடிமதுவின் மீது சாய்ந்து கொண்டாள்அவளைப் பார்த்து சிரித்து விட்டுமதுவின் முகம் பார்த்தேன்அவளது முகமும் சோர்வாகவே இருந்தது

சரி!! நீங்க இங்கேயே இருங்கநான் கீழ போயி வண்டிய வரச்சொல்றேன்!!” 

என்று சொல்லிநடக்க எத்தனிக்கஎன் கையைப் பிடித்த மதுபார்வையாலையேஅருகே உக்கார சொன்னாள்நான் அமர்ந்ததும்என் மேல் சாய்ந்து கொண்டாள்ஏற்கனவேஅவளது ஆளை அசத்தும்அன்ன நடையில்ஒருவித கிளர்ச்சியில் இருந்த எனக்குஅவளது ஸ்பரிசமும்வாசமும்ஒரு புது மயக்கத்தை தந்ததுகுனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டேன்நேத்ரா அருகில் இருப்பதை கண்டுகொள்ளாமல்முத்தமிட்ட என்னைகண்களை உருட்டி மிரட்டுவது போல் அவள் பார்க்கநான் கண்டு கொள்ளாமல் இன்னொரு முத்தமிடஏதோ உணர்ந்தவளாக எங்களைப் பார்த்த நேத்ராபட்டென எழுந்த 

ஏய்கருமம்!! கருமம்!! பக்கத்துல நான் ஒருத்தி இருக்கிறேன்!! வெக்கம் கெட்ட ஜென்மங்கள்!!” முகத்தை எட்டு பக்கமும் சுழித்தாவாறு நேத்ரா தலையில் அடித்துக் கொண்டாள்

என் பாப்பா!! என்ன கொஞ்சுறான்நாங்க எதுக்கு வெக்கபடனும்” சிணுங்கிய மதுஎன் கையை கோர்த்து பிடித்துக் கொண்டாள்ஒரு நிமிஷம் எங்களை முறைத்துப் பார்த்தவள்பின் என்னருகில் வந்தவள்என் கையைப் பிடித்து இழுத்து

போதும்!! இதுக்கு மேலஇங்கிருந்தா நான் கொலைகாரி ஆயிடுவேன்ஒழுங்கா முன்னால நடஎன்றுஎன் முதுகில் கைவைத்து தள்ளினாள்சிறிது தூரம் சென்ற நான்திரும்பி பார்க்கதோழிகள் இருவரும்அதே இடத்தில் நின்றுஏதோ பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள்

ஒரு ஐடியா!!” நான் சொல்ல

ஒரு பொடலங்கா ஐடியாவும் வேண்டாம்!! திரும்பிப் பக்காம நடைய கட்டுமுகத்தில் ஒரு போலியான கோபத்தை அணிந்து கொண்டுநேத்ரா

அய்யயே!!,...... இங்க பாருஇப்படியே இறங்கி நடந்து போனாநாம ரூம் வந்துரும்!! என்ன அந்த செக் டேம் வரைக்கும் கொஞ்சம் சரிவா இருக்கும்அப்புறம் ஒரே ஒரு ஸலோப் ஏறுனா ரூம் தான்மெயின் ரோட்ல போறதா விட ஷார்ட் டிஸ்டன்ஸ் தான்!!” நான் சொன்ன வழியை நோக்கி கை காட்டிவிட்டுகாட்டிய திசையில்காபி செடிகளுக்கு ஊடாக நடக்க ஆரம்பித்தேன்என் பின்னால் வர முயன்ற மதுவை தடுத்தவள்

அவன் போகட்டும்நீ ஒரு டென் ஸ்டெப்ஸ் டிஸ்டன்ஸ் விட்டுஎன் பின்னால வா!!” என்று சொல்லிய நேத்ராவைநான் திரும்பிப் பார்த்து 

ரெம்ப நல்ல பண்ணுரிங்க மா!” என்று சொல்லி, “சூப்பர்என்பது போலஇரு கைவிரல்களையும் மடக்கி காட்ட

"நீ மூடிக்கிட்டுமுன்னால போ!!” என்னை விரட்டநான் அந்த இறக்கத்தில் அவர்களுக்கு வழிகாட்டிக் கொண்டு நடக்க ஆரம்பித்தேன்மனதில் மதுவின் குதிரை கொண்டை ஏற்படுத்திய கிளர்ச்சியில்இந்த இயற்கை சூழலோஅல்லதுதட்பவெப்பம் கொடுத்த இதயமான மன நிலையோஏன் என்று தெரியவில்லைமனம் முழுக்கமதுவின் மீதே மையல் கொண்டிருக்கஅந்த வேகம் என் நடையிலும் வெளிப்பட்டது

ஏய்!!, ஏய்!! உண்ணலாம் திருத்தவே முடியாதுடி,.... பண்ணி!!” நேத்ரா கத்திய சில நொடிகளில்மதுவின் கை என் தோள்களில் விழுந்தது

மெதுவா போடா!!” மது சொல்லஅவள் இருகைகளையும் பிடித்துக் கொண்டுதிரும்பி நேத்ரவாய் நாக்கலாக பார்த்து சிரித்தேன்அவள் ஒரு கல் எடுத்துஎங்களை நோக்கி ஏறியமது வின் கைகளை விட்டு விட்டு கொஞ்சம் வேகமாகஅதே நேரம் கூடுதல் கவனத்துடன் ஓடினேன்அவள் கல் அடியில் இருந்து தப்பிக்கமனதில் இருந்த மையல் மனதை விட்டு அகலாதிருக்கசெக் டேமை அடையஇருபது அடிகளே இருந்த நிலையில்நடையின் வேகத்தை குறைத்துபின்னால் வரும் மதுவின் காலடி சத்தத்தில்என் முழு கவனத்தையும் செலுத்தினேன்என் அருகில் வந்துஎன் தோளில்அவள்ஒரு கை வைத்தவுடன்அந்த கையை இழுத்துகழுத்தோடு அனைத்துகண்களை முடியவாறுஅவள் காதருகே சென்று 

பாப்பா!!...... உன் போனீ டெய்ல் பாத்ததுல இருந்துகண்ட்ரோல் பண்ண முடியல!! பாப்பா!!” என்று கெஞ்சியஅடுத்த நொடிஅதிர்ச்சியில்பிடித்திருந்தவளை தள்ளிவிட்டு விட்டுபின்னால் நகரஇருபது அடியில் பதினைந்து அடியை பல்டி அடித்து கடந்திருந்தேன்சில நொடிகளில்

டேய்!!,.... அய்யயோ!!” என கத்தியவாறு மது என்னை நோக்கி ஓடி வரசுதாகரித்துஒரு காபி செடியை பிடித்துஎழுந்த நான்வலது காலை ஊன்றவீண் என்று தெறித்த வலியில் அப்படியே உக்காரஎன் அருகே உக்காரந்துஎன்னை ஆதரவாய் தாங்கியவள்

என்னடா ஆச்சுஎங்க வலிக்குது!! நான் தான்அப்போவே சொன்னேன்ல மெதுவா நடனு!!” பரிவுடன் கடிந்து கொண்டாள் மதுஎன்மேல் இருந்த மண்ணை தட்டியவாறு

அவன் ஸ்லிப் ஆகி எல்லாம் விழலஎன்று எங்கள் அருகில் வந்த நேத்ராஎன்னைப் முறைத்துக் கொண்டு சொல்ல

"பின்ன?" மது நேத்ரவைப் பார்த்து கேட்டாள்நான் கண்களே நேத்ராவை பார்த்து வேண்டாம் என்று கெஞ்சசிரித்தவள்,

நான்தான் ஸ்லிப் ஆனேன்!!, என்ன பிடிக்கிறேன்னுசார் ஸ்லிப் ஆகிட்டாரு!!” என்று சொன்னதும் தான்எனக்கு மூச்சே வந்ததுஏனென்றால்சற்று முன் மது என்று நிணைத்து கொஞ்சியது நெதராவை
[+] 3 users Like Doyencamphor's post
Like Reply
பாகம் - 29

வேண்டவே வேண்டாம்!! நாளைக்கு கோயம்புத்தூர்ல, ஹாஸ்பிடல் போய் பாத்துக்கலாம்!!” என் கால வீக்கத்தை தடவி விடுறேன், என்று வந்தவரைப் பார்த்து, உறுதியாக மறுத்துவிட்டு, ரூம்க்குள் சென்றேன்.


அத என்கிட்டே குடுங்க" என்று சொல்லி, அவர் கொண்டு வந்திருந்த எண்ணையையை கையில் வாங்கிக் கொண்டு, என் பின்னலையே ரூம்க்குள் வந்தாள், மது.

ஏண்டா!! அவரு மதியம் தடவி விட்டதுக்கு, அப்புறம் வீக்கம் கொறஞ்சுருக்கு இல்ல!!”

ஐய்யோ!! வேண்டவே வேண்டாம்!! ரெம்ப வலிக்கிறே மாதிரி பண்ணுறாரு!!”

சரி, கால கொஞ்சம் கீழ தொங்கப்போடு!!” என்று, கட்டிலில் அமர்ந்து இருந்த என்னைப் பார்த்து சொன்னவள், சேரை இழுத்து கட்டில் அருகே போட்டு, அதில் அமர்ந்து கொண்டு என்னைப் பார்த்தாள்.

வேண்டாம் மது!! கை வச்சாலே வலிக்குது!! நாளைக்கு ஹாஸ்பிடல் போய் பாத்துக்கலாம்!!” என்று, நான் அவளிடம் கெஞ்ச, அவள் என்னை வைத்த கண் வாங்காமல் முறைக்க, அதன் அர்த்தம் புரிந்து கொண்டு காலை அவளை நோக்கி நீட்டினேன். காலைப் பிடித்து மடியில் வைத்தவள், கிண்ணத்தில் இருந்த எண்ணையை எடுக்க,

இந்த டவல் போட்டுக்கோ, டிரஸ் எல்லாம் ஆயில் ஆயிடும்" என்று,

அருகில் இருந்த டவலை எடுத்துக் கொடுக்க, சிரித்துக் கொண்டே வாங்கி மடியில் விரித்து, எண்ணையை வீங்கிய காலில் தடவி, அவள் பூ போன்ற விரல்களால் நீவிவிட்டாள் . அவள் கொஞ்சம் அழுத்தி தடவ “ஆஆஆ" என்று நான் கத்தியவாறு, காலை எடுத்துக் கொண்டேன்

வலிக்குது எரும!!” என்றேன் வலியில்.

சாரிடா!! மெதுவா தடவுறேன்!!” என்று, காலை பற்றி மீண்டு மடியில் வைத்தவள், என் முட்டியில் குனிந்து முத்தமிட்டு, “சாரி" என்று மீண்டும் கொஞ்சியவள், நீவிவிட்டாள், வலிக்காமல். நான், அவளை பார்க்க, அவள் கவனம் முழுவதும் வீங்கிய என் காலில் இருந்தது

எப்படி வீங்கி இருக்கு பாரு!! சொல் பேச்சு கேக்கலைனா இப்படித்தான்" என்று, ஏதோ சிறுபிள்ளையிடம் பேசுவது போல, கொஞ்ச, நான் கண் இமைக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன், மனது முழுவதும் காதலோடு. நிமிர்ந்து என்னைப் பார்த்தவள் 

வலிக்குதா?” என்று கேக்க, உதடு குவித்து அவளைப் பார்த்து ஒரு முத்தமிட்டு, இல்லை என்று தலையாட்டினேன். அவளும் என்னைப்பார்த்து ஒரு முத்தமிட, இருவரும் காதலோடு சிரித்துக் கொண்டு, பார்வையாலேயே ஒருவரை ஒருவர் விழுங்கிக் கொண்டிருக்க, சத்தம் கேக்க, என் காலை நோக்கி அவள் பார்வை செலுத்த, நான் வாசலை நோக்கினேன். எஸ்டேட்டில் வேலை செய்யும் ஒரு அக்காதான், கையில் வெண்ணீருடன் வந்தார்கள்

ஒத்தடம் குடுக்க சொல்லி, மாணிக்கம் அண்ணே சொன்னாரு" என்று சொன்னவளைப் பார்த்து 

இங்க வச்சுட்டு போங்க கா!! நான் குடுத்துக்கிறேன்!!” என்று மது சொல்லவும், கையில் இருந்த வெண்ணீரையும், மடியில் கட்டியிருந்த உப்பையும் வைத்து விட்டு, எங்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றார்கள், அந்த அக்கா

ஒத்தடம் குடுக்க, ஆம்பளைய அனுப்ப மாட்டாரா? உங்க சூப்பர்வைசர்?” அவள் முகத்தில் போய் கோபம் சூடிக்கொண்டாள்.

லூசு!! இங்க எல்லாரும் என்ன சின்ன வயசுல இருந்தே தெரியும்!!” என்று அவள் தலையில் தட்ட 

அது சின்ன பையான இருக்கும் போது!! இப்போதான் எரும மாதிரி இருக்கையே!!” காலை நீவிக்கொண்டு

போது மது!!, அந்த தண்ணிய மட்டும் இங்க எடுத்து வச்சுரு, நான் ஒத்தடம் குடுத்துக்கிறேன்!!” என்று சொல்லியவாறு

காலை அவள் மடியில் இருந்து எடுக்க முயல, தடுத்தவள், துணியில் சுத்தியிருந்த உப்பை வெந்நீரில் நனைத்தவள், என் காலில் வைக்க, "சுரீர்” என்று வலிக்க, “அம்மா” என்று கத்தியவாறு, காலை பிடித்துக் கொண்டேன். துணியுடன் உப்பை தண்ணீரில் முக்கியவள், தண்ணீரை சூட்டோடு, என் காலில் வைக்க, சூடு தாங்காமல் வலியில் துடித்தேன், கண்களில் கண்ணீர் தானாகவே வழிந்தோடியது. நான் என் மூட்டியை கட்டிக் கொண்டு வலியில் துடிக்க, என் தோளில் கை வைத்த மது 

"சாரி டா, பலமா அழுத்திட்டேனா" என்க, அவள் கையை தட்டிவிட்டு 

போயிடு!!, !! அம்மா!!” என்று வலியில் கத்தினேன். கொஞ்ச நேரத்தில் காலில் இருந்த வலி குறைந்ததும் தான் மதுவின் அழுகை சத்தம் கேக்க, அவள திரும்பிப் பார்த்த நான், எழுந்து கட்டிலில் அமர்ந்து 

சாரி மது!!, தண்ணி சூடா இருந்துச்சா, அதுதான்!!” என்று அவளப் பார்த்து சொன்னதுதான், மின்னல் போல வந்து என் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதாள். கழுத்தில் விழுந்த அவளின் கண்ணீர் என் மார்பு நோக்கி ஓட, அவளை இருக்கிக்கொண்டேன்

விடு மது!! தெரியாமத்தான பண்ணுன, இப்போ வலியே இல்ல" என்று சொல்லியும், தலை அசைத்தவள், அழுவதை நிறுத்தவில்லை. அவள் எனக்காக துடித்து அழுதது, என்னையும் கலங்க செய்ய, சொல்ல முடியாத சந்தோஷத்தில், கர்வத்துடன், அவள் நெற்றில் முத்தமிட்டென்

என்ன நடக்குது இங்க?” என்ற சத்தம் கேட்டு, இருவரும் சத்தம் வந்த திசையை பார்க்க, அங்கே, அதுவரை ஃபோன் பேசிக்கொண்டிருந்த நேத்ரா, கைகளை குறுக்காக கட்டிக் கொண்டு நின்றாள்

ஒண்ணும் இல்லை!!” என்று சொன்ன மது, “பொருக்காதே இவளுக்கு!!” என்று வாய்க்குள் முணுமுணுத்தவாரே, எழுந்து மீண்டும் சேரில் அமர்ந்து, என் காலை மறுபடியும் அவள் மடியில் எடுத்து வைத்தவள், ஒத்தடம் குடுக்க ஆரம்பித்தாள். ஆனால் இந்த முறை, அவள் புறங்கையில் வைத்து, உப்பின் வெப்பத்தை, ஒவ்வொரு முறையும் உணர்ந்த பின்தான், என் காலில் ஒத்தி எடுத்தாள். மீண்டும் நேத்ராவுக்கு ஃபோன் வர, எடுத்துக் கொண்டு போனாள்.

நான் குனிந்து மதுவின் கன்னங்களில் உலர்ந்திருந்த கண்ணீரை துடைக்க, நிமிர்ந்து அவள் பார்த்த பார்வை, “யேப்பா" என் உயிரையே உரிந்து குடிப்பது போல இருக்க, என் கண்களில் கண்ணீருடன் காதலும் வழிந்தது. ஒத்தடம் குடுத்து முடித்தவள், மடியில் இருந்த துண்டை எடுத்து, என் காலின் ஈரத்தை துடைத்தவள், குனிந்து பாதத்தை முத்தமிட, என் காலை உருவிக்கொண்டேன். என் அருகில் வந்து அமர்ந்தவள், என் மடியில் தலைவைத்து, என்னைப் பார்த்து படுத்தாள், குனிந்து அவள் நெத்தியில் முத்தமிட்டேன். பின் தலையணை எடுத்துப் போட்டு, அப்படியே மல்லார்ந்து அதில் தலை வைத்து படுத்து

அங்க எதுக்கு முத்தம் குடுத்த?” நான் விட்டத்தை பார்த்தவாறு, விட்டேத்தியாக கேட்க, உருண்டு வந்து என் நெஞ்சில் கைவைத்து, அதிலேயே தலையை வைத்து 

எங்க?” என்று எதுவும் தெரியாதது போல கேட்டாள்

கால்ல, அங்க எல்லாம் கீஸ் பண்ணுவாங்களா யாராவது?” என்றேன் அவளைப் பார்த்து, என் கண்களில் எதையோ தேடியவள் 

என் பாப்பாக்கு, நான் எங்க வேணும்னாலும் கீஸ் பண்ணுவேன்!!.... ஏன் பிடிக்கலையா?” கேட்டவள், கழுத்தை மட்டும் நீட்டி, என் நாடியில் முத்தமிட்டாள். தலைக்கு கொடுத்திருந்த கைகளால் அவளை வாரி என் மீது போட்டுக் கொண்டு,

பாப்பா, பேசாம நாம கல்யாணம் பன்னிப்போமா?” அவள் பதில் ஏதும் சொல்லாமல் என்னையவே பார்த்துக் கொண்டிருந்தாள், சிறு புன்னகையோடு.

காலைல ஊருக்கு போகணும்னு நினைச்சாலே என்னவோ மாதிரி இருக்கு!! எனக்கு உன்கூடவே இருக்கணும்!! பேசாம நாம கல்யாணம் பன்னிக்கலாம்!!” நான் பேசிக் கொண்டே போக, அவள் அமைதியாகவே இருந்தாள், என்னை பார்த்தவாறு

என்ன பாப்பா? ஏதாவது சொல்லு!!” என்று நான் கெஞ்ச, சிரித்தாள், ஆனால் பேசவில்லை. இப்பொழுது கொஞ்சம் கடுப்பானேன், என் மேல் இருந்தவளை, புரட்டி கட்டிலில் போட்டு விட்டு

அந்த பக்கம் பாத்து சிரிச்சுக்கிட்டே இரு!!” என்றவாறு

தலையணை இன்னும் கொஞ்சம்மேல எடுத்துப் போட்டு, மொத்த உடலும் கட்டிலில் இருக்குமாறு, குப்புற படுத்துக் கொண்டேன். என் மேல் விழுந்த அவள் கையை தட்டிவிட்டேன். என் முதுகில் மொத்தமாக படர்ந்தவள், என் தலையில் தலை வைத்து, என் கை விரல்களில் அவள் விரல்களில் கோர்த்துக் கொண்டாள். கொஞ்சம் நேரத்தில் அவளது சூடான கண்ணீர் என் கன்னத்தில் வழிந்தோட, பதறி திரும்ப முயற்சித்த என்னை,

பிளீஸ் பாப்பா!! அப்படியே இரு" என்று தடுத்தவள், என் கன்னத்தில் முத்தமிட்டாள். இருவரும் அப்படியே இருக்க, சிறிது நேரம் களித்து 

பாப்பா!!”

ம்ம்

உண்மையாத்தான் கேட்டியா?”

ம்ம்" என்றேன், தலையாட்டியவாறு 

எதுக்கு?”

தெரியல!!” என்று நான் சொன்னதும், என் ஒரு பக்க கன்னங்களில் என்ன முடியாத அளவுக்கு முத்தமிட்டவள்

“i love you, பாப்பா!!” என்க, என் விரல் கோர்த்துப் பிடித்திருந்த, அவள் ஒரு கையை எடுத்து, முத்தமிட்டு 

“me too, பாப்பா" என்று சொல்லி புன்முறுவல் பூக்க, தன் நெற்றியால், என் தலையை முட்டியவள், என் கன்னத்தை நறுக்கென்று கடித்தாள். “" என்று நான் கத்த 

“i love you, சொல்லு, இப்போவே கல்யாணம் பன்னிக்கலாம்" என்று சொல்லியவாரே, உருண்டு, அருகில், என் முகம் பார்த்து படுக்க, “அம்மா" என்று நான் கத்தினேன். என்கன்னங்களை கைகளில் ஏந்தி

என்னாச்சு பாப்பா?” என்று கேட்டவளைப் பார்த்து, முறைத்தவாறு

போடி!! வீங்கின கால்லையே!!, !!”, உருண்டு படுக்கும் போது, தெரியாமல் அவள் கால் என் வீங்கி காலில் பட, வலிதாங்காமல் கத்தினேன். என்ன நினைத்தாலோ, என் உதடுகளை கவ்வி என்னை அமைதி படுத்தியவள், என் கால் வலியை அவள் உதடுகளாலையே உரிந்து எடுத்தாள். நான் அப்படியே கண்களை மூடி அவள் முத்தத்தை ரசிக்க, என் உதடுகளை விடுவித்தவள்

இப்போ வலி போயிடுச்சா?” என்று கேக்க, தலையாட்டினேன், கண்களை திறக்காமலே

ஓகே!!, குட்நைட்!!, நல்லபிள்ளையா தூங்கு!!” என்று அவள் சொன்னதும், அவளை இழுத்து என் கழுத்தோடு அனைத்து, அவள் முன்னந்தலையில் முத்தமிட்டு,

குட்நைட்!! நீ இங்கையே தூங்கினா நான் நல்ல பிள்ளையா தூங்குவேன்!!”

இல்லனா?” என்று அவள் கொஞ்சும் குரலில், என்னை இருக்கிக்கொண்டு கேட்க

நீ போனதும், வெளிய போய் உக்காந்துக்குவேன்!!” நான் சிறுபிள்ளை போல சிணுங்கினேன்

சிறிது நேரம் அப்படியே என்னை இருக்கிக்கொண்டு படுத்திருந்தவள்,

பாப்பா!!” என் பின்னந்தலையை தடவிக் கொண்டே 

ம்ம்"

நேத்ரா தனியா இருப்பா!! பாவம் இல்ல!!”

இல்ல!!”, சிணுங்கினேன்.

டேய்!! சொன்னா கேக்கணும்!!”

கேக்கமாட்டேன்!!”

அடி வாங்கப் போற!!”

பரவா இல்ல, அடிச்சுக்கோ!! ஆனா இப்படி தூங்கு இன்னைக்கு" என்று சொல்லி, அவளை மேலும் இருக்கிக்கொள்ள, நிமிர்ந்து என் உதடுகளை கவ்வினாள். நானும் அவள் முத்த விளையாட்டில் கலந்து கொள்ள, என் தொளைப் பிடித்து மல்லாக்க, தள்ளி, என் மீது படர்ந்தவள், எதிர்பாராத சமயம், கட்டிலில் இருந்து துள்ளி குதித்து, “குட்நைட்" என்று சொன்னவாறு, என் அரை கதவை சாத்திவிட்டு, ஓடிப்போனாள். நான் அவளால் தூண்டி விடப்பட்ட, என் மனதை கட்டுப்பஉத்திக் கொண்டு, விட்டத்தை முறைத்தேன்
[+] 5 users Like Doyencamphor's post
Like Reply




Users browsing this thread: 10 Guest(s)