Romance கண்ணான கண்ணே
#21
Super romantic update boss
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
Nice going...
Like Reply
#23
Nice romantic update
Like Reply
#24
Good update
Like Reply
#25
Kadhaludan thodarungal.
Like Reply
#26
update !!! update !!! update !!!
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#27
ஒரு வழியாக மேலே ஏறி மூச்சு வாங்கினேன்.
சாத்திரங்களை தூக்கி போட்டு என்னவனுக்காக எதுவும் செய்யும் மனநிலையிலேயே இருந்தேன். இனிமேல் இவன் தான் எனக்கு சாமி தெய்வம் எல்லாம்..
“கொஞ்சம் நேரம் உக்காந்துக்கலாமா?” மூச்சிரைக்க கேட்டேன்..
“ஹ்ம்ம் உக்காந்துக்கலாமே..” வார்த்தையில் லேசாக குதுகலம் தெரிந்தது.
பரணின் ஓரத்தில் லேசான ஒரு திட்டு இருந்தது.
ஒருவர் மட்டுமே அமரமுடிந்த திட்டு அது.. இதில் எங்கு அமர்வது. காலை சூரியன் ஓட்டின் வழியே ஆங்காங்கே ஊடுருவி பாய&, மெல்லிதான சூடு பரண் எங்கும் பரவிக்கிடந்தது..
யார் அமர்வது என்று ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க.
“pls நீங்களே உக்காந்துக்கொங்க, அவர் முகத்தை பார்த்து சொன்னேன்..
“அப்போ நீ"
“நான் நின்னுக்குறேன்..”
“வேண்டாம்”
“அப்போ கீழே உக்காந்துக்குறேன்”
“சரி வா உக்காரலாம்” தரையில் உட்கார அமர்ந்தார்..
“ஆ.. டிரஸ் அழுக்காயிடும்..”
“உனக்கு nighty அழுக்காகாதா” மெல்லிய புன்னகையோடு கேட்டார்.
இவர் என் மேல் காட்டும் அன்பு எனக்கு உள்ளூர சந்தோசம் தந்தது. அவரை விட்டு தள்ளி உட்கார வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் இருக்கவில்லை, ஆனால் அவரை தரையில் உட்கார வைக்க எனக்கும் மனம் வராத காரணத்தினாலேயே இவ்வளவும் செய்தேன்.. இனி வேறு வழியில்லை.. காதல் ஒரு பருவப்பெண்ணை என்னென்ன பாடுபடுத்துகிறது.
பரண் மேல் வேறு ஏதாவது வேஸ்ட் துணி இருக்குமா என்று தேடினேன். அப்பாவின் கிழிந்த பழைய லுங்கி இருந்தது.. அதை எடுத்து அவரிடம் காட்டினேன். தொடைச்சிட்டு உக்காந்துக்கலாம்.
புன்னகைத்து.. thumbs up காட்டினான்..
வெயில் விழாத ஒரு மூலையில் நாங்கள் இருவரும் கால் நீட்டி அமரும் அளவுக்கு தூசியை தொடைத்தேன்.. லுங்கியை ஓரமாக வைத்துவிட்டு.. இருவரும் அமர்ந்தோம்..
நாங்கள் அமர்ந்த இடம் வெயிலின் கீற்றுகள் விழாததால்.. வெப்பத்திலும் ஒரு குளிர்மை தெரிந்தது.
அவருக்கு வலது பக்கத்தில் அமர்ந்து அவர் முகத்தை பார்க்க.. என் கண்களை பார்க்க திராணி இல்லாதவரை போன்று.. என் கண்களை நேராக பார்க்காதவராய், “உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் காவ்யா. ஒவ்வொரு நிமிஷமும் மிஸ் பண்ணினேன்” அவர் குரல் இடறியது..
“hey.. ஒண்ணுமில்லப்பா.. அதான் இப்போ இங்க இருக்கேன் ல..”
ஆண்கள் missing என்பதை என்னவென்று அர்த்தம் கொள்கிறார்கள் என்றே எனக்கு தெரிந்திருக்கவில்லை.. பெண்களுக்கும் ஆண்களுக்கும் இருக்கும் மனவியல் ரீதியிலான வித்தியாசங்களில் இதுவும் ஒன்று. இன்றும் அந்த சந்தேகம் இருக்கவே செய்கிறது..
நான் சொன்ன பிறகும்.. அவர் ஆருதலடைந்தது போல் தெரியவில்லை. என் தோளும் அவர் தோளும் மென்மையாக அழுந்தியிருக்க, அவர் கைகளை கோர்த்தால் கொஞ்சம் சமாதானமடைவாரோ என்று தோன்றியது. ஆனால் நானாக எப்படி கோர்ப்பது.. பெண்ணாயிற்றே... தவறாக நினைக்க வாய்ப்பிருக்கிறதல்லவா...
“இப்போ பரவாயில்லே” மிக நீண்ட மௌனத்திற்கு பின் அவர் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் இவை.
‘பரவாயில்லை என்றால் சந்தோஷமாக இல்லையா..’ மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்.
குழந்தையின் பசியாற்றாத தாயின் மனம் எவ்வாறு நொடிந்து போகுமோ, அந்த அளவு என் மனமும் என் கணவரின் மனநிலையை அறிந்து கவலையடைந்தது.
தைரியமாக அவர் வலதுகையை என் இடக்கையால் கோர்த்தேன்..
“என்னாச்சுங்க” என்று வலதுபக்கம் சாய்ந்து என் இடது தோளில் மென்மையாக உதடுகளால் அழுத்தி ஆழமான ஒரு முத்தம் தந்தான்.
முத்தத்தின் அழுத்தம் என்னை திக்குமுக்காட செய்தாலும், அவனுக்கு இப்போது என்ன வேண்டும் என்பது எனக்கு தெளிவானது..
அவனுக்கு இப்போது என் அருகாமை தேவைப்படுகிறது... அரவணைப்பு தேவைப்படுகிறது....
என் காதல் தேவைப்படுகிறது....
இன்னொரு முத்தம் அதே இடத்தில்...
இந்தமுறை என்னையறிமாமலேயே என் நரம்புகள் புடைக்க என் உடல் முறுவலித்தது. ஒரு நிமிட நரம்பின் முறுக்கல்கள் இளக, அவன் காதில் கிசுகிசுத்தேன்.. “I love you மாமா”.
காதல் நரம்புகள் எல்லாம் ரத்தத்தால் நிறைய.. உடல் உஷ்ணமடைய துவங்கியது இருவருக்கும்.. அவர் கழுத்தில் வியர்வை அரும்புகள் முளைக்க, என் அக்குளிலும் வியர்வை துளிர்விடுவதை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது.
திடீரென கோர்த்திருந்த என் கைகளை பிரித்தவன் கைகளை உயர்த்தினான். நான் கேள்வியோடு அவன் கண்களை நோக்க, தன் வலது கையால் என்னை சுற்றி வளைத்துப்பிடித்தான். என் உடலெல்லாம் வெடித்துக்கிளம்பிய ஹார்மோன்கள் என் கன்னத்தில் சிவப்பாய் படிந்து, வெட்கமாய் வெளிப்பட்டன.
அவன் வலதுகை இப்போது என் வலது இடுப்பில் படிந்தது.
ஆண் வாசம் படாத என் பொன்மேனிக்கு ஆணின் மென்மையான அழுத்தமே மிகப்பெரிய சுகத்தையும் அவஸ்தையையும் தருகிறது.. என்னை சேர்த்தணைக்க சிறு பலத்துடன் அவன் என் இடுப்பை அணைக்க, எனக்கு சகலமும் வியர்த்துப்போனது..
அவன் வாய்க்கு பக்கத்திலிருந்த என் பஞ்சு கன்னத்தில் பல் படாமல் கவ்வ.. நான் என்னை இழந்து கண்கள் செருகினேன்.
என் முகத்தை திருப்பி மறு கன்னத்தையும் கவ்வ, என் மென்னுடல் என் காதலனால் ஆக்கிரமிக்கப்படுவதை ரசித்தேன்..
நான் கிறங்கி அவன் நெஞ்சில் முகம் புதைக்க, என் அகன்ற மென்மார்புக்கூடுகள் அவன் நெஞ்சில் அடைக்கலம் புகுந்திருந்தன.
என் கன்னம் வருடிய அவன் உதடுகள், என் உதட்டை உரச, நான் அரைமயக்க நிலையிலிருந்து கண் திறந்தேன்... என் நிலையை உணர்ந்தவளாய் என் வலதுகையால் அவன் நெஞ்சை அழுத்தி அவன் நெஞ்சில் தஞ்சமடைந்திருந்த என் மார்புக்கூட்டை மெல்ல விடுவிக்க முயன்றேன்..
எவ்வளவு நேரம் கடந்திருந்தது என்று தெரியவில்லை, என் nighty வியர்வையில் பூத்திருந்தது. நானும் பூத்திருந்தேன்.. நல்ல களைப்பு, வலது கால் மடக்கி, இடது கால் நீட்டியிருக்க, nighty இடது கால் முட்டி வரை நகர்ந்திருந்தது.
என் பார்வை அங்கே போவதை உணர்ந்த அவர், என் முடிகளற்ற கால்களை பார்த்து “கால் ரொம்ப அழகா இருக்கு காவ்யா” என்றார்.
வெட்கச்சிரிப்பு என் முகத்தில் படர, nighty ஐ இழுத்து விட்டேன்..
“தொட்டு பார்க்கவா?” ஏக்கத்தோடு கேட்டார்.
ஒரு கணம் அவர் கண்களை பார்த்தேன். அவ்வளவு ஏக்கம் தெரிந்தது.
“நைட்” மெல்ல சொன்னேன்.
சொன்ன பிறகு... ‘ஐயோ.. நானா சொன்னேன்’ என்று நாக்கை கடித்துக்கொண்டேன்..
“அப்போ.. நைட் என்னென்ன தொட்டு பார்க்கலாம்” கிண்டலான காதலுடன் என்னை கேட்க, என்னை வெட்கம் பிடுங்கி தின்றது..
மிகவும் யோசித்து.. “இப்போ எதுவும் வேண்டாம்..” என்றேன் சிரிப்போடு.
“ஏன்??” வினவிக்கொண்டே அவன் இடது கையை என் வயிற்றில் மெல்ல அழுத்த, என் நாக்கு சுழன்று போனது. வார்த்தைகள் வெளியே வரவில்லை.
“ச்.. ச் சும்மா”
“சும்மா எல்லாம் முடியாது”
அவன் அருகாமையும், அணைப்பும், அவன் ஆண்மையின் வாசமும் இன்னும் கொஞ்சம் நேரம், இன்னும் கொஞ்சம் தூரம் என்று என் மனதை அலைபாய விட்டன.
“மென்மையான என் வயிற்றை தடவிய அவன் கைகள், என் தொப்புளை சுற்றி மையம் கொள்ள, அவன் கைகளை பிடித்துக்கொண்டேன்....
“pls பா.. நைட் பாத்துக்கலாம்..”
“அதான் ஏன்?”
“time ஆகியிருக்கும்”
அவன் மொபைல் எடுத்து பார்க்க, 12.15 pm ஆகியிருந்தது. அப்பா வரும் நேரம். ‘நல்ல வேளை’ என்று நிம்மதி பெருமூச்சு விட்டேன்.
விலக மனமிலாமல் அவன் என்னை விட்டு விலக, வியர்வையில் ஊறி nighty ல் ஒட்டியிருந்த தூசிகளை தட்டிவிட்டேன்.
“நல்ல வேளை ரூம் ல் ac போட்டாச்சு.” சிரித்துக்கொண்டே என்னை பார்த்து கண்ணடித்தான்.
அதன் அர்த்தம் புரிந்த நானும் சிரிக்க, மெல்ல இருவரும் கீழே இறங்கினோம்.
தாம்பத்ய உறவின் பால பாடங்களை சுகித்ததை போல் உணர்ந்த எனக்கு, இன்னும் சந்தேகங்கள் வலுத்தன, ‘இரவு தீர்த்துக்கொள்ளலாம்’ என்று மனதில் சிரித்துக்கொண்டேன்.
“அவளது பார்வையிலும் பேச்சிலும் தெறிக்கும் சில துளிகள் ஆண்மையை ரசித்து..
அவளுள்ளே கிளர்ந்தெழும் பெண்மையில் மூழ்கிவிடத்தான் துடிக்கிறான்..” – எங்கோ படித்த கவிதை
இன்றிரவு மணம் வீசுவேன்
[+] 3 users Like Kavya1988's post
Like Reply
#28
Fantastic update
Like Reply
#29
Very romantic update
Like Reply
#30
Awesome update
Like Reply
#31
Nice update
Like Reply
#32
Very interesting update
Like Reply
#33
அன்று நாள் முழுவதும் உற்சாகமாக இருந்தது. எல்லாம் hormone செய்யும் வேலை. மதியம் சாப்பாட்டுக்கு கீழே இறங்கியவன் ஓரக்கண்ணில் பார்த்தான். எனக்கு சிரிப்பு வந்தது. அவனும் ஓரக்கண்ணில் பார்த்து சிரித்தான். அவன் என்னை தீண்ட வாய்ப்பில்லாதபடி நான் பவ்யமாக அம்மா அருகில் அமர்ந்துகொண்டேன். ஒரு கேள்வியுடன் என்னை பார்த்தான். என்ன என்று எனக்கு புரியவில்லை. சாப்பிட்டு முடித்து, லேசாக தலையாட்டி சிரித்தான். அவன் படியேறி அறைக்கு செல்லும்வரை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். அறையின் வாசலை அடைந்தவன் வெடுக்கென்று திரும்பி உள்ளங்கையில் விரலால் அமிழ்த்துவதை போல சைகை செய்தான். செல்போன்-ஐ தான் சொல்கிறான் என்று புரிந்தது.
அவசரமாக சாப்பிட்டு முடித்து அறைக்குள் சென்று செல்போன்- ஐ எடுத்து பார்த்தேன்.
“கோவமா??” குறுந்தகவல் அனுப்பியிருந்தான்.
“ச்சே ச்சே..”
“I love you காவ்யா”
என் மனதுக்குள் அமைதியான ஆனந்தம்.. “I love you too அழகா..” பதிலளித்தேன்..
“கண்ணழகி” அவன் புகழ்ச்சியில் லயித்தேன்
“ஹ்ம்ம்” வார்த்தைகள் ஜனனிக்காமல் மரித்துப்போயின..
“evening black டீ கெடைக்குமா?”
அவன் எதை சொல்கிறான் என்று புரிந்தது. “ஹ்ம்ம்.. ஓகே பா. அப்பா கிட்ட எடுத்துட்டு வர சொல்றேன்” பதிலளித்துவிட்டு வாய்மூடி சிரித்தேன்..
“வேண்டாம்.. நீயே எடுத்திட்டு வா..”
‘ஹ்ம்ம்.... தைரியத்த பாரேன்’ என்று மனம் கேட்டது.
‘இந்த தைரியத்த நீ தானே குடுத்த காவ்யா’ என் பெண் மனம் அவனுக்காக பரிந்து பேசியது.
‘நீ தான் அவனுக்கு உரிமையை கொடுத்தாய். உண்மை தானே.. நீ அவனுக்கு உரியவள் தானே..’
மனதின் போராட்டங்கள்.. என்னுள்ளும் அவனுடன் பழக கொள்ளை ஆசை தான்.. ஆனால் எல்லை மீறினால்... நாளை நடக்க வேண்டியவை இன்றே நடந்தால்.. சாமிக்குத்தம் ஆகிவிடும்....
அவன் செய்யும் செல்லச்சீண்டல்களும் தீண்டல்களும் நான் ரசித்து அனுமதித்ததே.... ஆனால் ஒருநாள் மட்டும் பொறுத்துக்கொள்வாயா? என்று மனம் அவனிடம் வேண்டியது.
மெல்ல பதிலை அனுப்பினேன், “evening வெளிய எங்கயாவது போலாமா?”
“தோப்புக்கு.. நல்லா இருக்கும்.. மாந்தோப்பு இருக்கு..”
“போலாமே”
“But, நீங்க தான் அப்பா கிட்ட கேக்கணும்.”
“கண்டிப்பா கேக்கறேன்..” ஒரு புன்னகை smileyயுடன் முடித்தான்.
“அப்போ black டீ?”
எனக்கு சிரிப்பு வந்தது.. ‘குறும்புக்காரன்..’ மனம் அவனை கொஞ்சியது..
“இன்னைக்கு ஒரு நாள் கீழ வந்து குடிச்சுக்கோங்க”
நமக்காக நாம் விரும்பும் ஒரு ஆண்மகன் ஏங்குகிறான்.. என்று நினைக்கும் போதே சந்தோசம் தொற்றிக்கொண்டது.. அப்படியே உறங்கிப்போனேன்
மாலை 4 மணி..
அவர் இன்னும் கீழே வரவில்லை..
நான் இளம் பச்சை நிறத்தில் ஒரு cotton சுடிதார் எடுத்துக்கொண்டேன்.
அழகான cotton உள்ளாடைகள் எடுத்துக்கொண்டேன்.
துண்டை எடுத்துக்கொண்டு குளியலறை சென்றேன். மதிய உறக்கத்தால் உடல் மிதமான சூட்டுடன் இருக்க.. மேனியில் விழுந்த நீரினால் உடல் ஜில்லிட்டது. இந்த மிதமான குளிர் எனக்கு பிடித்திருந்தது.
அம்மா கதவை தட்டினாள்.. “காவ்யா சீக்கிரம் வாடி..”
“எதுக்கு மா”
“மாப்ள வெளிய எங்கயாவது சுத்திப்பாக்கணும் னு ஆசைபடறார்.. நம்ம தோப்புக்கு கூட்டிட்டு போ..”
“ஏன் மா நீ வேற” உள்ளுக்குள் மகிழ்ந்தாலும் பொய்க்கோபம் காட்டினேன்.
“pls டி”
“ஹ்ம்ம் சரி சரி..”
“சீக்கிரம் வா”
“சரி மா”
குளித்து முடித்து துண்டால் உடலை ஒற்றி எடுத்தேன். சுடியை அணிந்துகொண்டு.. கண்ணாடி முன்னால் நின்றேன்... பவுடர் போட்டு போட்டு வைத்தேன்... ஏதோ ஒன்று .... நீண்ட நேர யோசனைக்கு பிறகு மனதில் அலாரம் அடித்தது... கும்குமம்.. அதை தலை வடுகில் லேசாக வைத்தேன்... சுடிதாருக்குள் சிக்கியிருந்த தாலியை வெளியே எடுத்துபோட்டு கண்ணில் வைத்துக்கொண்டேன். சாமிகும்பிட்டு திரும்ப கண்ணாடியை பார்த்து ok பண்ணிக்கொண்டேன்.
அறையை விட்டு வெளியே வர, அவர் ஜீன்ஸ் T-shirt ல் ஜம் என்று இருந்தார். என்னை பார்த்து சிரித்தார். நானும் திருப்பி புன்னகைக்க.. அப்பா பைக் சாவியை அவரிடம் தந்தார். “இங்கேயிருந்து 10 நிமிஷம் தான் மாப்பிள்ள.. காவ்யா க்கு வழிதெரியும்.. இருட்டறதுக்கு முன்னாடி வந்திடுங்க..”
“சரி மாமா..” என்றார்.
நான் பைக் ல் ஒரு பக்கமாக கால் போட்டு அமர.. மெல்ல பைக் ஐ கிளப்பினார். அவர் இடது தோளில் பிடித்துக்கொண்டேன்.
திருமணம் முடிந்த இந்த நாட்களில் பல விஷயங்கள் எங்களுக்குள் மாறியிருந்தது. அவரை கண்டதும் படபடக்கும் இதயம் இப்போது இல்லை. மாறாக படபடத்துக்கொண்டிருக்கும் இதயம் அவரைக்கண்டதும் சீராகிறது. அவரைக்கண்டால் பயம் இல்லை. மாறாக தைரியம் வருகிறது. அவர் விரல் பட்டால் துடிக்கும் உடல் இல்லை. அவர் தீண்டலுக்காக எங்கும் உடலாக மாறியிருந்தது. அவர் என்னவர் என்கிற உரிமை உறுதியாக இருந்தது. அவர் கண்ணைப்பார்த்ததும் clean bowled ஆகும் காவ்யா இல்லை. அவர் கண்ணை ஆசையுடன் ரசிக்கும் காவ்யா நான்.
தோப்பு வந்தது..
சுப்பிரமணி மாமா தான் தோப்பிலேயே தங்கி தோப்பை பார்த்துக்கொள்கிறார்....
எங்களுக்காக காத்திருந்தார்.. அப்பா சொல்லியிருக்கலாம்..
“வாம்மா..... இளநீர் வெட்டி வெச்சிருக்கேன்..” இளநீரை நீட்டினார். நானும் அவரும் ஆளுக்கொன்று வாங்கிக்கொண்டோம். மாந்தோப்பில் அங்கங்கே தென்னை நட்டு வைத்திருந்தோம்.
தொப்பினூடாக மெல்ல நடந்தோம். season இல்லாததால், மாமரங்கள் பூவிட்டிருந்தன.
“நீங்க சுத்திப்பாருங்க மா, என்ன வேணும்னாலும் ஒரு குரல் கொடுங்க ” என்றார்.
“சரிங்க மாமா” என்று விட்டு இருவரும் மெல்ல நடந்தோம்.
ஒரு பத்துமரம் தாண்டியிருப்போம். நாங்கள் பேசுவது வேறுயாருக்கும் கேட்காது என்பதை உறுதிப்படுத்திக்கொண்டேன். சுப்ரமணி மாமா வும் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இல்லை.
அவரை பார்த்தேன். பக்கத்தில் பொண்டாட்டி இருப்பது கூட தெரியாமல் சிரத்தையாக தரையில் பார்த்து நடந்தார் மனுஷன்.
“என்னையும் கொஞ்சம் பாத்து கூட்டிட்டு போங்க” என்று அவர் கைகளை பிடித்துக்கொண்டேன்.
“வா காவ்யா” என்று என் கைகளை பிடித்துக்கொண்டு கவனமாக தரையில் பார்த்து நடந்தார்.
‘என்னையும் கொஞ்சம் பார்த்து’ என்று நான் அடிக்கொடிட்டதை மனுஷன் புரிந்துகொள்ளவில்லை என்பது புரிந்தது.
‘இந்த ஆம்பளைங்களே இப்படி தானோ. பார்த்து தான் புரிந்துகொள்ளவில்லை. நான் சொன்னதையாவது கொஞ்சம் கவனமாக கவனித்திருக்கலாமல்லவா?’
என்ன செய்வது என்று யோசித்தேன். “இங்க உக்காரலாம?” கிளையை கீழேயே பரப்பிய ஒரு மாமரத்தை பார்த்துக்கேட்டேன்.
“ஹ்ம்ம்.. வா” நானும் அவரும் அமர கிளையை kerchief ஆல் தூசி தட்டினார்.
‘இதுக்கொண்ணும் கொறைச்சல் இல்லை’ ‘ஒரு பெண்ணை புரிந்துகொள்ளாத என்ன மனுஷன் யா’ என்று தோன்றியது. மறுபுறம், ‘எந்த பெண்ணையும் அறிந்திறாதவரல்லவா என்னவர் ’ என்று பெருமிதம் கொண்டேன்.
‘அமர்ந்தாயிற்று.. இனி கொஞ்சம் கைகளை கோர்த்துக்கொள்ளலாமே’ என்று என் கைகளை அவன் கைகளின் அருகில் வைத்தேன்.. இதுவும் அவனுக்கு புரியவில்லை.
சரி பேசித்தான் பார்க்கவேண்டும் என்று ஆரம்பித்தேன்.
“எதுக்கு கோவமா? ன்னு கேட்டீங்க மெசேஜ் ல”
“தோணிச்சு”
இன்று அவருடன் மனம்விட்டு பேசுவது என்று முடிவெடுத்தேன்.
“கொஞ்சம் கோவம் தான்”, “but கோவமா கவலையா ன்னு எனக்கே தெரியல..”
“புரியல மா” குழப்பத்துடன் என்னைப்பார்த்தார்.
கண்டிப்பாக புரிந்திருக்காது என்பது எனக்கு தெரியும்..
“கோவம் என் மேல.. கவலை உங்க மேல..”
“காவ்யா....” கைகளை பிடித்துக்கொண்டார்..
அவர் ஆதரவாக கைகளை பற்றிக்கொண்டதும், என் கண்களில் நீர் முட்டியது.
“நான் ஏதாவது தப்பா பண்ணிட்டனா காவ்யா?”
“அடிக்கடி black டீ கேக்குறீங்களே..” கண்களில் வந்த கண்ணீரை அடக்கிகொண்டே வெட்கத்தில் சிரித்தேன். இதைவிட இலைமறைகாயாக எனக்கு சொல்லதெரியவில்லை.
பக்கென்று சிரித்து கைகளை இறுக்கினார்.
“இல்லப்பா நான் serious ஆ சொல்றேன்..” “உங்களை எனக்கு அவ்ளோ பிடிக்கும்.. அதனால நீங்க கேட்டா முடியாது ன்னு என்னால சொல்லமுடியாது. but உங்களை இந்த நிலமைக்கு ஆளாக்கினது நானோ ன்னு ஒரு குற்ற உணர்வு..” வெடுக்கென்று அவன் அணைத்த அணைப்பு என்னை தடுமாற வைத்தது. குளமாகியிருந்த கண்கள் அதன் நீரை என்னவன் T-shirt ல் நனைக்க, நானும் அவனை கட்டிக்கொண்டேன்.
“நீ என் உயிரு காவ்யா” கட்டிக்கொண்டே அவன் கண்களை பார்த்தேன்.. “உன்ன பிரிஞ்சு ஒரு நிமிஷம் கூட என்னால இருக்கமுடியல, அதான் உன்ன பாக்க அது இது ன்னு சாக்கு சொள்ளவேண்டியதாயிடிச்சு”
அவன் சொன்னதை கேட்டதும்..‘இவனுக்காக உயிர்கூட தரலாம்’ என்று தோன்றியது.
எனக்கு பட்டென்று கோயிலுக்கு போகவேண்டும் என்று தோன்ற.... “கோயிலுக்கு போலாமா?” என்று கேட்டேன்
“போலாமே...” என்றான் என் கணவன்..
மெல்ல இருட்ட ஆரம்பித்திருந்தது... நல்ல வேளையாக சுப்பிரமணி மாமா அங்கு எங்குமே தென்பட வில்லை. ஆதரவாக என் கைகளை பிடித்து மெல்ல அழைத்து சென்றார். மாமா வெளியில் நின்றுகொண்டிருந்தார். “கெளம்பிட்டீங்களா மா..” என்றார்..
“ஆமா மாமா..”
“சரி மா.. பாத்து போயிட்டுவாங்க” வழியனுப்பினார்..
பைக் ல் ஏறி அமர்ந்து அவருக்கு வழிகாட்டினேன்..
கோயில் வந்ததும்... நடை சாத்துவதற்குள் அவசரமாக பூஜை பொருட்கள் வாங்கி சென்றோம்.
பூஜை முடிந்து மெல்ல கோயிலை சுற்றி வந்தோம்..
“என்ன வேண்டிக்கிடீங்க?” சிரித்துக்கொண்டே கேட்டேன்..
“எத்தன ஜென்மம் எடுத்தாலும், நீ எனக்கு மட்டுமே கெடைக்கணும் ன்னு வேண்டிக்கிட்டேன்..”
“ஆஹா..” மனம் குளிர்ந்து..
வெளியில் வந்தோம்..... “பூ வாங்கிதரீன்களா?” ஆசையாக கேட்டேன்..
பூ வாங்கி தலையில் சூடிவிட்டான்
‘வாழ்ந்தால் இவனோடு தான் வாழவேண்டும்.... சுமந்தால் இவன் பிள்ளையை தான் சுமக்கவேண்டும்’ மனம் சொன்னது.
ஆசையாக பைக் ல் ஏறி புறப்பட்டோம்..
[+] 2 users Like Kavya1988's post
Like Reply
#34
Nice update
Like Reply
#35
Update panuga kavya
Like Reply
#36
இன்று தான் சாந்திமுகூர்த்தத்திற்கு ஐயர் தேதி குறித்திருந்தார். விடிந்ததும் செல்போன் எடுத்து பார்த்தேன். அவரிடமிருந்து message வந்திருந்தது.
‘hi பொண்டாட்டி…’..
விடிந்ததும் என் ஞாபகம் வந்திருக்கிறதே என்று நினைத்து மனசு சந்தோஷமாக இருந்தது.
கொஞ்சம் நேரம் அவர் அனுப்பிய ‘hi பொண்டாட்டி’ message ஐ யே பார்த்துக்கொண்டிருந்தேன். என்னையும் அறியாமல் புன்னகைத்துக்கொண்டிருந்தேன். படுக்கையில் இருந்து எழ மனம் இல்லை. பக்கத்தில் அம்மாவும் இல்லை. வலது பக்கம் புரண்டு அம்மாவின் தலையணையை போட்டு அதன் மேல் கால் தூக்கி போட்டுக்கொண்டேன். திரும்ப மெசேஜ் ஐ எடுத்து பார்த்தேன். ‘கொஞ்சம் நேரம் மிஸ் பண்ணட்டும்’ என்று மனதில் சிரித்துக்கொண்டேன். ஆனால் உண்மையில் நான் தான் மிஸ் பண்ண ஆரம்பித்திருந்தேன். 2 நிமிடம் கூட பொறுக்க முடியவில்லை. பதில் அனுப்பினேன்… “hi புருஷா… குட் மார்னிங்”
“என்ன பண்ணிட்டிருக்கே?” பதிலனுப்பினான்.
“இன்னும் எந்திரிக்கல.. நீங்க என்ன பண்றீங்க?”
“ஒரு பேரழகியின் தரிசனத்துக்காக காத்துட்டிருக்கேன்..”
மனதில் இனம் புரியாத சந்தோஷம். பெண் மனம் தன்னை கவர்ந்த ஆண் மகனின் புகழ்ச்சிக்கு ஏங்குவது ஏனோ… என்னையும் அறியாமல் bedsheet ஐ கடிக்க ஆரம்பித்திருந்தேன்…
பதிலனுப்பினேன் “அப்போ கீழே வரவேண்டியது தானே…”
“வாசல்லையே தான் காதுகெடக்கேன்…”
“என்னது… உண்மையாவா?”
“சத்தியமா…”
எனக்கு படபடப்பானது… இவ்ளோ நேரம் chat பண்ணி டைம் வேஸ்ட் பண்ணிட்டோமோ… முழங்கால் வரை ஏறியிருந்த அரக்கு கலர் nighty ஐ இழுத்து கீழே விட்டு, bedsheet ஐ விலக்கி எழும்பினேன்… குளிக்க நேரம் இல்லை. கண்ணாடியில் முகம் பார்த்தேன்.. தலைமுடி கலைந்திருந்தது. அதை சரி செய்து முகம் கழுவினேன். சின்னதாக ஒரு போட்டு வைத்து கண்ணாடியில் பார்த்தேன். nighty ஆங்காங்கே கசங்கி இருந்தது. பீரோ வை திறந்தேன், என் துணிமணிகள் எதுவுமே இல்லை. அதிர்ச்சியாக இருந்தது. நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. ‘இன்னைக்கு இந்த கசங்கின nighty ல தான் பாக்கணும் ன்னு அவனுக்கு விதி போல’ என்று நினைத்து. மெல்ல ஹால் நோக்கி பூனை போல அடியெடுத்து வைத்தேன். மெல்ல ஹால் ல் எட்டி பார்க்க. அவன் எனக்கு முதுகு காட்டி dining table ல் அமர்ந்திருந்தான். நான் மெல்ல அவனை பார்த்து திரும்பாமல் kitchen நோக்கி நடந்தேன். அம்மா உள்ளே பிஸி ஆக இருந்தாள்.
“அம்மா.. என் டிரஸ் எல்லாம் எங்கடி”
“என்னது டி ஆ… ” சாம்பார் கரண்டியை ஓங்கினாள்.
இவன் பக்கத்துல இருந்தா கொஞ்சம் ஓவராக எமோசன் ஆகுரமோ… என்று தோன்றியது.
“கொஞ்சம் வாய கொறசுக்கோ காவ்யா… ரெண்டு நாள் ல இன்னொரு வீட்டுக்கு வாழப்போற பொண்ணு நீ… இனிமே நீ மாப்ள ரூம் ல தானே படுப்பே.. அதான் உன் டிரஸ் எல்லாம் suitcase ல போட்டு மாப்ள ரூம் ல வச்சாச்சு”
“ஓ…..” மனதில் சந்தோசம் இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. இன்று இரவிலிருந்து எங்களை யாரும் பிரிக்க முடியாது.
ஒரு சின்ன cup ல் அம்மாவிடம் coffee வாங்கிக்கொண்டு ஹால் க்கு நடந்தேன்… அவனை நேராக கண்களில் பார்த்தேன்.. வாய் திறந்து சிரித்தான்.. nighty ஐ பார்த்து கிண்டலடித்து சிரிக்கிறானோ. எதிரில் அமர்ந்தேன்.. “என்ன” மிரட்டல் தொனியில் புருவம் உயர்த்த…
“ப்ஸ்” ஒன்னுமில்லையே என்று தோள்களை உலுக்கினான்.
கண்களை சுருக்கி முறைப்பது போல் சிரித்தேன்…
என் கண்கள் பார்த்து சிரித்தான்..
“வெளிய எங்கயாவது போலாமா?” கிசு கிசுப்பாக கேட்டான்..
நான் தான் கேட்பேன்.. இன்னைக்கு என்ன புதுசா..“என்னாச்சு…” அவன் கண்களை கூர்மையாக பார்த்தேன்.. ‘எதாவது மனம் விட்டு பேச நினைக்கிறானோ?’ மனதில் ஆயிரம் கேள்விகள்.
“சும்மா தான்.. மதியம் வரைக்கும் இங்கயவே இருக்கணும்…”
“ஏன்…??” கேள்வி எழுப்பினேன்..
“நம்ம ரூம் ல AC போடறாங்க…”
“ஓ… ஆமா ல”
“ஹ்ம்ம்.. போலாமா எங்கயாச்சும்?” திரும்ப கேட்டான்..
“ஹ்ம்ம்.. அப்பா கிட்ட தான் கேக்கணும்…”
“இந்த தடவ நீ கேளு…” கேப்பியா என்பது போல் கேள்வியாக என்னை பார்க்க…
“இருங்க அம்மா கிட்ட bit அஹ போடுறேன்…” சொல்லிவிட்டு மெல்ல kitchen நோக்கி நடந்தேன்…
மதியத்துக்கான சமையலில் அம்மா தீவிரமாக இருந்தாள்..
“ஏய் கல்யாணி… அவருக்கு ஏதோ பொருள் வாங்கணுமாம்… டவுன் போயிட்டு வரவா?” சிரித்துக்கொண்டே தோளில் கிள்ளினேன்..
“மாப்ள உக்காந்திருக்காப்ல பேரு சொல்லி கூப்பிடறியா…” என்று அடிக்க கை ஓங்கினாள்…
விடுக்கென்று ஒரு அடி பின்னால் வந்து ‘வெவ்வே’ என்று கொங்கணம் காட்டினேன்..
“சரி.. கேட்டதுக்கு பதில் சொல்லு…”
முறைத்தாள்… “இன்னைக்கு சாந்தி முஹுர்த்தம் டி…”
‘எனக்கும் தெரியுமே…’ மனம் சொன்னது.. “அதுக்கு…?”
“வீட்ட விட்டு வெளிய போகக்கூடாது ன்னு தெரியாதா…”
“ஓ…” எனக்கு உண்மையிலேயே தெரியாது… இப்போது அவனிடம் என்ன சொல்வது என்றும் தெரியவில்லை…
வெளியே வந்தேன்… பதில் எதிர்பார்த்து காத்திருந்தான் என்னவன்…
“இன்னைக்கு வெளிய போகமுடியாதாம் ல”
“ஓ…” அவனுக்கும் தெரிந்திருக்கவில்லை.
“நான் உன்ன ரொம்ப மிஸ் பண்றேன் காவ்யா…” அவன் குரல் இடறியது…
ஒரு கணம் என் இதயம் நின்றே போனது…
என்னை என் கணவன் மனதார காதலிப்பதும்.. என்னை மிஸ் செய்வதும்… ஆணுக்குரிய கர்வத்தை விட்டு அதை என்னிடம் சொல்வதும்… பெண்ணுக்கே உரிய பெருமை அல்லவா…
ஒரு ஐடியா நினைவுக்கு வர… “ஒரு நிமிஷம் pa…” என்று சொல்லி அம்மாவிடம் சென்றேன்…
“அம்மா.. பரண் ல என்னோட பழைய போட்டோ அவார்ட் எல்லாம் இருக்கில்லே.. அதை அவர்ட்ட காட்டவா?” கொஞ்சம் மென்மையாகவே சொன்னேன். காரணம் என் மனம் இளகி இருந்தது..
ஒரு கணம் என்னை கூர்மையாக பார்த்தவள்.. என்னிடம் இருந்த தவிப்பை உணர்ந்திருக்க வேண்டும்.. “சரி ஏதோ பண்ணு.. அப்பா மதிய சாப்பாட்டுக்கு வர்றதுக்குள்ள கீழ வந்துரனும்…” கண்டிப்பாக சொன்னாள்… அவள் சொன்னதன் வீரியம் எனக்கும் புரிந்திருந்தது…
வெளியே சென்றேன்… என்னவன் ஏக்கத்தோடு என்னை பார்க்க… “பரண் ல என்னோட பழைய photos இருக்கு.. பாக்கலாமா?” என்றேன்… அவன் முகத்தில் ஒரு நிம்மதி…
நீங்க பரண் படிக்கட்டு கீழ wait பண்ணுங்க நான் 2 நிமிஷத்துல வந்துடறேன்.. அவசரமாக அறைக்குள் ஓடி.. bathroom க்குள் சென்று.. அவ்வளவு நேரம் அவஸ்தையை தந்த ஜெட்டி யை கழட்டி கொடியில் போட்டேன்.. நேற்று காயபோட்ட இளஞ்சிவப்பு நிற ஜட்டி யை அணிந்து nighty யை சரி செய்தேன்…
வேகமாக ஓடினேன்.. பரணுக்கு..
அவர் கீழே எனக்காக காத்திருந்தார்.. அவர் கண்களை பார்த்து சிரித்தேன்.. இருவருக்குமே மனம் இறுகியிருந்தது. உடைந்த மனதுடன் புன்னகைத்துக்கொண்டோம்..
எதையாவது பேசி இறுக்கத்தை குறைக்கவேண்டும்…
“படி கொஞ்சம் ஆடும்… நான் கீழ பிடிச்சுக்கறேன்.. நீங்க முதல்ல ஏறுங்க…”
“அப்புறம் நீ ஏறுறது கஷ்டமாயிடுமே…” கனிவாக என்னை பார்த்து புன்னகைத்தார்.
இறுக்கங்கள் தளர்ந்துகொண்டிருப்பதை உணர்ந்தேன்… ஏதோ என்னால் செய்ய முடிகிறது என்பதே மகிழ்ச்சியாக இருந்தது…
“சேர்ந்து ஏற முடியாதே…” சிரித்தேன்..
உண்மையாக மனம் திறந்து சிரித்தார்…
இதுவே எனக்கு போதும்… இனி மனம் விட்டு பேசுவார் என்ற நம்பிக்கை எனக்கு வந்தது…
“முதல்ல நீங்க ஏறிட்டு, என் கைய பத்திரமா பிடிச்சு ஏத்துங்க… ஏத்துவீங்களா?” கண்ணை குறுக்கி சிரிக்க…
“கண்டிப்பா…” அவரும் சிரிக்க…
“சரி ஏறுங்க…” எதேச்சையாக பிடிப்பது போல… அவர் arms ஐ பிடித்து இழுத்து சிணுங்கினேன்…
அவர் சிரித்துக்கொண்டே… படிகளில் ஏற… நான் கெட்டியாக பிடித்துக்கொண்டேன்… என் உயிரல்லவா அவன்…
அவர் ஏறிய பிறகு.. என் கைகளை எட்டிபிடிக்க.. நான் என் உடலை எம்பி கைகளை நீட்ட… nighty யின் கழுத்து இடைவெளி வழியே, குளிர்காற்று என் தாலி படர்ந்த மார்பிடுக்கை குளிர்வித்தது… ஏதோ தோன்றி மேலே பார்க்க.. என்னவன் என் மார்பழகை தரிசித்துக்கொண்டிருந்தான்… உள்ளுக்குள் சிரித்துக்கொண்டாலும், காணாததைபோல் இருந்தேன்…
உண்மையில் அன்றைய black டீ நிகழ்வுக்கு பிறகு என் உடலும், அவன் கண்களின் தீண்டலுக்காகவும், விரல்களின் சீண்டலுக்காகவும் ஏங்கிதுடித்தது….
(தொடரும்)
அன்பு நண்பர்களே சில குடும்ப நிகழ்வுகளால் regular ஆக எழுத முடியாமல் போனது எனக்கும் வருத்தமளிக்கிறது. காத்திருந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி…
[+] 1 user Likes Kavya1988's post
Like Reply
#37
Super sago
Like Reply
#38
அருமை சகோதரி
Like Reply
#39
Please update
Like Reply
#40
enachi?
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply




Users browsing this thread: crosslinemhr, 2 Guest(s)