மான்சி கதைகள் by sathiyan
#81
“ ம் உங்களை பத்தி ஓரளவுக்கு தெரியும் சத்யன்... என் பிளாட் ஓனர் பவானியம்மா சொல்லிருக்காங்க” என்றவர் “ உங்கம்மா கொஞ்சநாளைக்கு முன்னாடி தவறிப்போய்ட்டாங்கன்னு சொன்னங்க ரொம்ப வருத்தப்படுறேன் சத்யன்” என்று வருத்தமான குரலில் பரணி சொன்னதும்

சத்யனுக்கு ஆச்சிரியமாக இருந்தது இந்த ஊரில் இப்படி ஒரு மனிதரா என்று நினைத்தவன் “ பரவாயில்லை சார் உடம்பு சரியில்லாமத்தான் இறந்துபோனாங்க” என்று சகஜமாக பேசினான் சத்யன்

“நான் உங்களை சார்ன்னு கூப்பிடலை அதேமாதிரி நீங்களும் என்னை சார்ன்னு கூப்பிடாதீங்க... அங்கிள்னு கூப்பிடுங்க இல்லேன்னா பெயர் சொல்லி கூப்பிடுங்க” என பரணிதரன் நட்பாய் உத்தரவுப்போட்டார்

சத்யன் அவரைப்பார்த்து சிநேகமாக சிரித்தபடி “ ம் சரிங்க அங்கிள்... வாங்க அந்த பெஞ்சில் போய் உட்கார்ந்து பேசுவோம்” என்று சிமிண்ட் பெஞ்சை நோக்கி போனான்

சவியை மறுபடியும் விளையாட விட்டுவிட்டு சத்யனோடு பெஞ்சில் அமர்ந்த பரணிதரன்... உலக விஷயங்கள் பற்றி நிறைய பேசினார்... சத்யனுக்கு அவரை ரொம்பவே பிடித்து போனது...

இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிக்கொள்ள ஆரம்பித்தனர்… இருவருக்கும் வயதை மீறிய ஒரு நட்பு துளிர்விட ஆரம்பித்தது... நிறைய பொது விஷயங்களை பேசினார்.. மற்றபடி அவரவர் சொந்த விஷயங்களில் பற்றி இருவரும் விவாதிக்கவில்லை

பரணிதரனுக்கு ஒரு மகன் திருமணமாகி அருணாச்சலப் பிரதேசம் கட்டாக்கில் மனைவி குழந்தைகளுடன் இருப்பதும்... மகள் குடும்பத்துடன் பரணிதரனும் அவர் மனைவி காஞ்சனாவும் இருக்கிறார்கள் என்பதுவரை சத்யனுக்கு தெரியும்

அடுத்தவர் மூக்குநுனியை தொடாத அவரின் நாகரீகமான நட்பு சத்யனை அவர்பால் ஈர்த்தது... சத்யன் இப்போதெல்லாம் மாலைவேளைகளில் பரணிதரனுடன் பேசுவதற்காகவே ஆபிஸில் இருந்து சீக்கிரமாக வர ஆரம்பித்தான்....

அந்த வார இறுதிநாளில் சவியை விளையாட விட்டுவிட்டு இருவரும் பூங்காவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்

“சத்யன் நான் ஒன்னு கேட்டா நீங்க தப்பா நினைக்கக்கூடாது” என்று பரணிதரன் மெதுவாக ஆரம்பிக்க

“ என்ன அங்கிள் இப்படி கேட்டுட்டீங்க நீங்க என்ன கேட்டாலும் நான் தப்பா நினைக்கமாட்டேன் தாராளமா கேளுங்க அங்கிள்” என்று சத்யன் சொன்னான்

“ வேற ஒன்னுமில்ல சத்யன் நீங்க ட்ரிங்க்ஸ் சாப்பிடுவீங்கன்னு தெரியும்.. ரெண்டு மூனு முறை உங்களை சனிக்கிழமை டைம்ல பார்ல பார்த்திருக்கேன்... நீங்க விரும்பினா ரெண்டுபேரும் ஒன்னா ஸேர் பண்ணி ட்ரிங்க்ஸ் சாப்பிடலாம்... ஏன்னா எனக்கு மிலிட்டரி கோட்டாவில நிறைய சரக்குகிடைக்கும் அதனாலதான் கேட்டேன் சத்யன்... உங்களுக்கு பிடிக்கலைன்னா வேண்டாம் ” என பரணிதரன் கூறியதும்

சத்யனுக்கு சிரிப்பு வந்துவிட்டது “அட என்ன அங்கிள் இதுக்குப்போயா இவ்வளவு சங்கடம்... ம்ம் இன்னிக்கு சனிக்கிழமை எங்க வச்சுக்கலாம் சொல்லுங்க எங்கயாவது பார்லயா’.. என்றவன் திடீரென முகம் மலர “ ஏன் அங்கே இங்கே போகனும் என் வீட்டுலயே வச்சுக்கலாம் அங்கிள் ப்ளீஸ்” என்று சத்யன் கெஞ்சுவது போல கேட்க 


அவன் தோளைத் தட்டி சிரித்த பரணி “ம்ம் உங்க வீட்லயே வச்சுக்கலாம் சத்யன்.. எல்லாம் ரெடியாத்தான் இருக்கு”என்று உற்சாகமாக கூறினார்

அப்போது அவர்களுக்கு பின்னால் இருந்து “ அப்பா சவி எங்கப்பா நேரமாச்சு சாப்பாடு கொடுக்கனும்” என்று கிடாரின் மெல்லிய நாதம் போல ஒரு தேன் குரல் கேட்க

சத்யன் சட்டென திரும்பி பார்த்தான் அங்கே ஒரு பெண் ம்ஹூம் அவளை வானத்து தேவதை என்றுதான் சொல்லவேண்டும்... அவ்வளவு அழகாக இருந்தாள்...
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#82
லேசாக அழுத்தி தொட்டால் கன்றி சிவந்துவிடும் போல் ஒரு நிறம்....
வெளியே தெரிந்த உடல் பாகங்களில் அவள் உடலில் ஓடிய பச்சை நரம்புகள் அப்பட்டமாக தெரிந்தது...
பால் ரோஸ் நிறத்தில் அடர் சிவப்பில் ரோஜாக்களை வாரியிறைத்த காட்டன் சேலையுடுத்தி... அதற்கு மேட்ச்சாக அடர் சிவப்பில் ரவிக்கை போட்டு...
தலைமுடியை தளர பின்னி தொங்கவிட்டிருந்தாள்...
காதிலும் கழுத்திலும் இருந்த சிறு நகைகள் அவள் அழகை மேலும் பன்மடங்காக்கி காட்டியது...
அவளின் அழகு விழிகள் கதை பேசியது.. கவிதை சொன்னது ...
செயற்கை முறையில் திருத்தப்படாத.. வில்லைப்போல் வளைந்த.. நேர்த்தியான புருவங்கள்
கூர்மையான மூக்கு எதிராளியை வீழ்த்திவிடுவது போல நேராக இருந்தது...
கீழுதடு சற்று குவிந்தும் மேலுதடு சற்று விரிந்தும் பார்ப்பவர்களை பைத்தியமாக அடிக்கச் செய்யும் போல இருந்தது....
காற்றில் கலைந்து அவள் நெற்றியில் விழுந்த அந்த கற்றை கூந்தலின் அழகுக்காக இந்த உலகத்தையே விலைபேசலாம்....
அவள் அழகும் நளினமும் யாரையும் வீழ்த்திவிடும்...

ஆனால் அப்படி வீழ்த்திவிடக் கூடாது என்பதற்காகவே அவள் ரொம்ப அடக்கமாக தன்னை காட்டிக்கொள்வது போல் சத்யன் மனதில் பட்டது ...

அந்தளவுக்கு பாந்தமாக எந்தவித ஒப்பனையும் இல்லாமல் ரொம்ப எளிமையாக இருந்தாள்...

சத்யன் இதுவரை அப்படி ஒரு பெண்ணை பார்த்ததேயில்லை என்பது போல் அவள் அழகை தன் விழியிலே உள்வாங்கி தன் மனதில் நிறைத்தான்...

ஏனோ அவளை பார்த்ததுமே இனி பிரித்து எடுக்க முடியாதபடி சத்யனின் மனதில் ஆழப்பதிந்து விட்டாள்

அப்போது அவன் தோளைத் தொட்ட பரணிதரன் “சத்யன் இவதான் என் மகள் மான்சி... சைந்தவியோட அம்மா... ஒரு தனியார் வங்கியில் கிளார்க்காக இருக்கிறா” என்றவர் மான்சியை பார்த்து “மான்சி இவர் சத்யன் நம்ம எதிர் பிளாட்டில் இருக்கிற பேச்சிலர் மேன்” என்று இருவருக்கும் அறிமுகம் செய்துவைத்தார்

மான்சி சத்யனின் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்காமல் ‘ஹாய் குட்ஈவினிங் சார்” என்று சொல்லிவிட்டு தன் மகளைத் தேடி பூங்காக்குள் நுழைய

சத்யன் அவளுக்கு பதில் வணக்கம் சொல்லும் சம்பிரதாயத்தை கூட மறந்து திகைத்து போய் நின்றிருந்தான் ... “இவளா இந்த அழகு தேவதையா சைந்தவியின் அம்மா” சத்யனால் நம்பமுடியவில்லை .

“ என்ன சத்யன் அப்படி பார்க்கறீங்க.. இவளா சவியோட அம்மான்னு தானே... நூறுசதம் உன்மை சத்யன்... மாப்பிள்ளை சொந்தம் என்றதால கொஞ்சம் சின்ன வயசிலயே மேரேஜ் பண்ணிட்டோம்” என்று பரணிதரன் சத்யனின் வியப்புக்கு விடை சொல்ல

சத்யனால் “ஓ அப்படியா” என்று ஒற்றை வார்த்தை மட்டுமே சொல்லமுடிந்தது


மான்சியின் பின்னாலே பரணீதரனும் தன் பேத்தியை தேடிப்போக.. சத்யன் அவரிடம் “நான் கிளம்பறேன்” என்று கூற

“ம் கிளம்புங்க சத்யன் இன்னும் ஒன் அவர்ல நான் உங்க பிளாட்டுக்கு வர்றேன்” என்று பரணி கண்சிமிட்டி சொல்ல .. சத்யன் பதிலுக்கு சிரித்துவிட்டு தன் பிளாட்டுக்கு போனான்

சத்யன் மனதில் மான்சியை பற்றிய எண்ணங்களே வலம் வந்தன... அவள் ஏன் என் முகத்தை நிமிர்ந்து கூட பார்க்கலை... ஒருவேளை தன் புருஷன் முகத்தை தவிர வேற யார் முகத்தையும் நிமிர்ந்து பார்க்கமாட்டாளே...

பெரிய இவ மாதிரி என் முகத்தை பார்க்காம திருப்பிக்கிட்டு போறா.... ம்ம் தான்தான் ரொம்ப அழகுங்குற கர்வம் அதிகம் போல’ என நக்கலாக நினைத்தான்
Like Reply
#83
‘அப்படி அழகானவ மாதிரி என்ன பண்ணா .. இருக்கிற அழகையே வெளியே தெரியாதபடி மேக்கப் இல்லாம எவ்வளவு சிம்பிளா இருக்கா அவளைப்போய் கர்வம்பிடிச்சவன்னு சொல்லிறியே இது சரியில்லை’ என்று அவன் மனம் உடனே அவனை குத்தியது

‘எது எப்படியோ அடுத்தவன் பொண்டாட்டியை ரசிக்கிறதே தப்பு... இதுல அவ அழகை பற்றி ஆராச்சி பண்றது அதைவிட தப்பு’ என்று நினைத்த சத்யன் தன் வேலைகளில் கவணம் செலுத்த முயன்றான்

பரணி வருகிறேன் என்று சொன்னதால் தாருமாறாக கிடந்த பொருட்களை, அவன் துணிகளை எல்லாவற்றையும் எடுத்து அதன் இடங்களில் வைத்தான்... பிரிஜ்ஜில் ஐஸ்கட்டிகள் தயார் செய்தான்...

டைனிங் டேபிளை சுத்தப்படுத்தி இரண்டு கண்ணாடி டம்ளர்களை எடுத்து வந்து வைத்துவிட்டு... பிரிஜ்ஜில் இருந்து சில முட்டைகளை எடுத்து கிச்சனில் கொண்டுபோய் வைத்தான்... அவர் வந்ததும் ஆம்லேட் போட்டுக்கொள்ளாம் என்று நினைத்தான்

ஆனாலும் அவன் அடி மனதில் அந்த ரோஸ்நிற காட்டன் சேலை தேவதை, மான்சி என்ற அந்த அழகு புயல் கரையைக் கடக்காமல் நிலையாக மையம் கொண்டுவிட்டாள்...

இதுமுறையா என்று கேள்வி கேட்ட மனதை எதைஎதையோ சொல்லி அடக்கினான்

மறுபடியும் மறுபடியும் ஞாபகம் வந்த அந்த குவிந்த சிவந்த உதடுகளை மறக்கமுடியாமல் சத்யன் தலையை சிலுப்பிக் கொண்டான்...

ச்சே இதென்ன அடுத்தவன் மனைவியை போய் இப்படியெல்லாம் நினைக்கிறோமே என்று சங்கடப்பட்டான்

அப்போது வெளியே அழைப்புமணி ஒலிக்கும் சத்தம் கேட்க சத்யன் அவசரமாக எழுந்து போய் கதவை திறந்தான் .. பரணீதரன் தான் கையில் ஒரு பையுடன் நின்றிருந்தார்

“ம் வாங்க சார் உங்களுக்காகத்தான் வெயிட் பண்றேன்” என்ற சத்யன் அவருக்கு வழிவிட்டு நின்று பிறகு கதவை அடைத்துவிட்டு வந்தான்

கையில் இருந்தவற்றை டைனிங் டேபிளில் வைத்த பரணீதரன் வீட்டை ஒரு முறை சுற்றி பார்வையிட்டார்

“ ம் தனியாளாக இருந்தாலும் வீட்டை நல்லா வச்சிருக்கீங்க சத்யன்” என்றவர் பையை பிரித்து உள்ளே இருந்தவற்றை எடுத்து டேபிள் வைத்தார்

“ சத்யன் ஐஸ் கியூப்ஸ் இருக்கா இல்லை என் வீட்டில் இருந்து எடுத்துட்டு வரவா” என்று சத்யனை கேட்க

“ ரெடியா தான் இருக்கு சார்” என்ற சத்யன் ஐஸ் கட்டிகளை எடுத்து வந்து வைத்துவிட்டு கிச்சனுக்குள் போய் முட்டையை ஆம்லேட் போட ரெடி பண்ண கூடவே பரணியும் வந்து உதவி செய்தார்

இருவரும் வந்து சேரில் அமர்ந்து ரம் பாட்டிலைத் திறந்து டம்ளர்களில் கலந்து அருந்த தொடங்கினர்... மூன்றாவது ரவுண்டு தொடங்கும் போது சத்யன் மெதுவாக பேச்சு கொடுக்க ஆரம்பித்தான்

“ அங்கிள் சவியோட அப்பா எங்க வேலை செய்றார்... நான் அவரை பார்த்ததேயில்லையே.. எங்கயாவது வெளிநாட்டில் இருக்காரா அங்கிள்” என சத்யன் தன் கிளாசில் ஐஸ் துண்டுகளை போட்டபடி கேட்க

பரணி சிறிது நேரம் மவுனமாக இருந்தார் பிறகு தன் கைகளில் இருந்த மதுவை ஒரே மடக்கில் குடித்துவிட்டு “ அவன் இப்போ உயிரோடு இல்லை சத்யன் ... இறந்து போய் மூனு வருஷமாச்சு” என்றதும்

“என்ன சார் சொல்றீங்க” என்று அதிர்ச்சியுடன் சத்யன் எழுந்து நின்றுவிட்டான்...
Like Reply
#84
ஆனால் அவன் மனதில் அதுவரை இருந்த ஏதோ ஒன்று விடைபெற்று செல்ல... மனம் லேசாகி விண்ணில் பறப்பதுபோல் இருக்க...

ச்சே ஒருவருடைய மரணத்தில் போய் சந்தோஷப் படுகிறேனே நானெல்லாம் என்ன மனுஷன் என்று சத்யன் தன்னையே சாடினான் 


“ஆமாம் சத்யன் சைந்தவி மான்சி வயித்தில ஆறுமாசம் கருவா இருந்தப்பவே மோகன் ஒரு ஆக்ஸிடெண்ட்ல இறந்துட்டான்... மோகன் என்னோட ஒன்னுவிட்ட அக்கா பையன்... நல்லா பொருத்தமெல்லாம் பார்த்துதான் கல்யாணம் பண்ணோம்... ரெண்டுபேரும் எட்டுமாசம் தான் சேர்ந்து வாழ்ந்தாங்க...

மோகன் இப்போ மான்சி வேலை செய்ற பேங்கில் கேசியரா இருந்தான்... ஒருநாள் ஈவினிங் பைக்ல வரும்போது எதிரில் வந்த ஆம்னி பஸ்ஸில் மோதி ஸ்பாட்டிலேயே உயிர் போயிடுச்சு... அப்போ நாங்க லால்குடியில் இருந்தோம்... தகவல் தெரிஞ்சு நாங்க வந்து பார்கிறப்போ மோகனை பார்சல் பண்ணிட்டாங்க என் மகள் உயிர் இருந்தும் பிணம் மாதிரி கிடந்தாள் சத்யன்” என்ற பரணி தன் கைகளால் முகத்தில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பிக்க

சத்யனுக்கு ஒரு நிமிடம் என்ன செய்வது என்றே புரியவில்லை இவ்வளவு கம்பீரமான மனிதருக்குள் இப்படியொரு உணர்வுபூர்வமான மனிதரா என்று நினைத்தான்..

எவ்வளவு கம்பீரமாக இருந்தாலும் தன்னுடைய துக்கத்தை யாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது என்பதை புரிந்த சத்யன் அவசரமாக எழுந்து டேபிளை சுற்றி அவரிடம் வந்தான்

அவர் கைகளை பற்றிக்கொண்டு “ அங்கிள் ப்ளீஸ் கன்ட்ரோல் பண்ணிக்கோங்க.. உங்களுக்கு தெரியாதது இல்லை... மரணம் என்பது மனிதனுக்கு நிச்சமான ஒன்னு.. அது சிலருக்கு முன்பே நிர்ணயிக்கப்படுகிறது... சிலருக்கு வாழ்ந்து முடிந்தபின் நிர்ணயிக்கபடுகிறது... உங்களுக்கு நான் இதை மட்டும்தான் சொல்ல முடியும் அங்கிள்... ஏன்னா நானும் இதைப்போல நிறைய கஷ்டங்களை அனுபவித்து இருக்கேன்” என்ற சத்யன் தனது சேரை அவருக்கு அருகில் இழுத்து போட்டுக்கொண்டு அமர்ந்து தன்னை பற்றிய விவரங்களை சொல்ல ஆரம்பித்தான்

தமிழ்ச்செல்வி மேல் வந்த தன்னுடைய முதல் காதல்... அந்த காதல் தன் அப்பா மூலமாகவே கருகியது... தமிழ்ச்செல்வியை தன் அப்பாவே திருமணம் செய்துகொண்டது... அதே துக்கத்தில் இருந்து உயிரைவிட்ட தன் தாயாரின் மரணம்... என்று சத்யன் இதுவரை யாரிடமும் சொல்லாத அத்தனை விஷயங்களையும் பரணீதரனிடம் சொன்னான்

பரணி அவனையே சிறிதுநேரம் பார்த்துக்கொண்டே இருந்துவிட்டு “ என்னோட துக்கத்தை சொல்லி உங்களோட மனசை கிளறிவிட்டுட்டேன்னு நெனைக்கிறேன் சத்யன்.. மன்னிச்சிடுங்க சத்யன்” என்று வருத்தமான குரலில் கூற

“அய்யோ என்ன அங்கிள் மன்னிப்பு அதுஇதுன்னு கேட்டுகிட்டு... இன்னும் சொல்லப்போனா இவ்வளவு நாளா பாரமாக அழுத்திக்கிட்டு இருந்தெல்லாம் போய் எனக்கு இப்போதான் மனசுக்கு நிம்மதியா இருக்கு” என அவரை தேற்றுவது போல் சத்யன் கூற

இருவரும் அடுத்த ரவுண்டு ஆரம்பித்தனர் “ அங்கிள் நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க... நீங்க ஏன் உங்க டாட்டர்க்கு மறுபடியும் மேரேஜ் பண்ண முயற்சிக்கலை... ஏன் கேட்கிறேன்னா இந்த காலத்தில் யாரும் இப்படி இருக்கிறதில்லை.. உடனே மறுமணம் பண்ணிக்கிறாங்க அதனால்தான் கேட்டேன் அங்கிள்” என்று சத்யன் தயங்கி தயங்கி கேட்க

“நீங்க கேட்டதில் தப்பில்லை சத்யன்... ஆனா மான்சி இதுக்கு ஒத்துக்கவே மாட்டேங்கறா.. நானும் அவ அம்மாவும் எவ்வளவோ எடுத்து சொல்லி பார்த்துட்டோம் அவ ஏத்துக்கலை... அதுக்கும் ஒரு காரணம் இருக்கு சத்யன் அவளுக்கு சின்ன வயசிலிருந்தே ஒருவிதமான மனவியாதி... அதாவது எதுக்கெடுத்தாலும் பயப்படுறது சின்னசின்ன விஷயத்துக்கெல்லாம் பயந்து கத்த ஆரம்பிச்சுடுவா”..கொஞ்சம் நிறுத்தி கையில் இருந்த மதுவை தொண்டையில் சரித்துகொண்டு மறுபடியும் ஆரம்பித்தார் பரணி
Like Reply
#85
“இதுனால அவளோட படிப்பு ரொம்ப பாதிச்சது... நாங்க யாராவது அவ கூடவே இருக்கனும்... அவ பெரியவளானதும் இது இன்னும் மோசமாயிருச்சு.. இது எதனாலேன்னு எங்களுக்கே புரியாம திருச்சியில் ஒரு மனநல டாக்டரை பார்த்தோம்... அவங்க மான்சிக்கு நிறைய டிரீட்மெண்ட் கொடுத்து அவளை கொஞ்சம் மாத்தினாங்க... என்ன காரணத்தால மான்சிக்கு இப்படி வந்ததுன்னு மட்டும் டாக்டர் எங்களுக்கு சொல்லவேயில்லை.. அப்புறம் மான்சிக்கு கல்யாணம் பண்ணிட்டா நல்லதுன்னு டாக்டர் சொன்னதால மோகனை பேசி முடிச்சோம்” ...

“ஆனா சத்யன் மோகனுக்கு மான்சியை பத்தின விஷயங்களை சொல்லித்தான் ரெண்டுபேருக்கும் கல்யாணம் பண்ணோம்... அவங்க ரெண்டுபேரும் நல்லாத்தான் வாழ்ந்தாங்க... ஆனால் மோகன் அடிக்கடி மான்சியோட குறைகளை சுட்டி காண்பிச்சு கிண்டல் பண்ணிகிட்டே இருப்பான்... இதனாலேயே மான்சி நாங்க இங்கே வரும்போதெல்லாம் எனக்கு ஏன் கல்யாணம் பண்ணீங்கன்னு அழுவா.. நாங்களும் எதையாவது ஆறுதலா சொல்லிட்டு போவோம்....

"இந்த பயத்தினால தான் மான்சி மறுபடியும் மேரேஜ்க்கு ஒத்துக்க மாட்டேங்குறா சத்யன் எங்க வர்றவன் தன்னோட குறையை கிண்டல் பண்ணுவானோ என்ற பயம்தான் செகன்ட் மேரேஜ்க்கு மறுப்பதற்கு ஒரே காரணம் சத்யன்" என்று பரணி தனது பேச்சை முடித்துக்கொள்ள... சத்யன் வேறு எதுவும் அவரிடம் கேட்கவில்லை

சத்யன் மனதில் மான்சி ஆழமாக பதிய ஆரம்பித்து வெகு நேரமாகிறது ... அன்றிலிருந்து அவளை ரகசியமாக பார்த்து ரசிப்பதை தனது வேலைகளில் ஒன்றாக ஆக்கிக்கொண்டான் ... அவள் தெருவில் இறங்கி நடக்கும் போது இவன் மனம் அவள் பின்னாலேயே போக ஆரம்பித்தது 



அதன்பிறகு சத்யன் மான்சியை பற்றிய விவரங்களை பரணியிடம் இருந்து பேச்சுவாக்கில் சேகரித்தான் ... மாலைவேளைகளில் இருவரும் பூங்காவில் அமர்ந்து பேசும்போது சத்யன் அவர் தன்னை கண்டுபிடிக்காதவாறு மான்சியை பற்றி விசாரிப்பான்.. அன்றும் அப்படித்தான் ஆரம்பித்தான்

“ ஏன் அங்கிள் நீங்க சொல்றதை வச்சு பார்த்தா... உங்க பேமிலி ஒரளவுக்கு வசதியானதா தெரியுது... அப்படியிருக்க சவியோட அம்மா ஏன் இந்த மாதிரி ஒரு சாதரண வேலைக்கு போகனும்... என்ன மிஞ்சிப் போனா ஒரு எட்டாயிரம் சம்பளம் கிடைக்குமா” என்று சத்யன் கேட்க

அய்யோ சத்யன் மான்சி சம்பளத்துக்காக வேலைக்கு போகலை… அவ மனசுல இருக்கிற பயம் தாழ்வுமனப்பான்மை இதெல்லாம் போகனும்... எல்லாரிடமும் சகஜமாக பழகனும் என்றுதான் நாங்க அவளை வேலைக்கு அனுப்புறதே”...

“மோகன் வேலை செய்த பேங்கிலேயே மான்சி வேலை குடுத்தாங்கன்னு தான் இப்போ அனுப்புறோம்... இல்லேன்னா நிச்சயமா அவளை வெளியவே அனுப்ப மாட்டோம்.... அவ சம்பளம் லால்குடியில் என்னோட பண்ணையாளுக்கு குடுக்கிறேன் சத்யன்” என்று பரணி சொன்னதும்

“அப்படின்னா இப்போ அவங்ககிட்ட ஏதாவது மாற்றம் தெரியுதா அங்கிள்” என்று சத்யன் ஆர்வத்துடன் கேட்க

“ம் நிறைய மாற்றம் சத்யன் இப்பல்லாம் அவளே தனியா ஏங்க வேனும்னாலும் போறா.... போன மாசம் ஒரு அவசர வேலையா நானும் என் ஒய்பும் சவியை கூட்டிக்கிட்டு லால்குடி போய்ட்டோம்... இவ மட்டும் தனியாத்தான் இங்க இருந்தா ... எங்க ஹவுஸ் ஓனர் பவானியம்மா வந்து அடிக்கடி பார்த்துகிட்டாங்க சத்யன்”... என்ற பரணி சவி வேறு ஒரு குழந்தையுடன் சண்டையிட வேகமாக எழுந்து போய் தடுத்து சவியை கூட்டிவந்தார்

“ம் வெட்டியா அந்த பையன் கிட்ட சண்டைக்கு போறா சத்யன் இவளை என்ன பண்ணலாம் சொல்லுங்க” என்று தன் பேத்தியை கொஞ்சிக்கொண்டே பரணி கேட்டதும்

சத்யன் அவரிடமிருந்து சவியை வாங்கி தன் தலைக்கு மேலே தூக்கி ஒரு சுற்று சுற்றி பிறகு கீழே இறக்கி “ இதுபோல தலையை சுத்தி கீழே போட்டுடலாமா இந்த செல்லத்தை” என்று சத்யன் சவியை கொஞ்சினான்
Like Reply
#86
“அங்கிள் நீங்க ட்ராயிங் வரைவீங்களாமே தாத்தா சொன்னாங்க என்னையும் வரைஞ்சு தர்றீங்களா” என்று சவி தன் மழலை குரலில் சத்யனிடம் கேட்க

“ம் கண்டிப்பா வரைஞ்சு தர்றேன் நீ என்னோட வீட்டுக்கு இன்னிக்கு நைட் தாத்தா கூட வா அப்போ வரைஞ்சு தர்றேன்... சரியா குட்டிம்மா” என்று சத்யன் சொன்னதும்

“அங்கிள் உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது நான் பாப்பா இல்ல குட்டிம்மா இல்ல சைந்தவி சைந்தவி சைந்தவி” என சவி செல்லக் கோபமாக கூற

“அங்கிள் அனேகமா சவி கோர்ட்ல டபாலியா தான் வேலைக்கு போவான்னு நெனைக்கிறேன்... ஏன்னா அவ பேரையே மூனு தடவை சொல்றாளே” என்று சத்யன் பரணியிடம் கிண்டல் செய்ய

“இல்ல நான் டாக்டராத்தான் ஆவேன்” என்று சவி கைகால்களை உதறியபடி கூற
சரி சரி நீ டாக்டராவே ஆகு ஆனா எல்லாருக்கும் மூணு மூணு ஊசியா போடு என்று சத்யன் நக்கல் செய்ய

பரணியும் சிரித்துவிட்டு “ உங்களோட நட்பு கிடைச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு சத்யன்” என்று மனம்விட்டு சொல்ல

“ம் எனக்கும்தான் அங்கிள்... ரொம்ப நாளைக்கு அப்புறம் சிரிச்சு சந்தோஷமா இருக்கேன்... சரிங்க அங்கிள் நான் வீட்டுக்கு கிளம்பறேன் இன்னிக்கு ஒரு முக்கியமான ஒரு நிருவனத்தோட ஆர்டர் வந்திருக்கு அது விஷயமா சில விவரங்கள் சேகரிக்கனும் அங்கிள் அதான் ” என்று சத்யன் தயங்கியபடி சொல்ல

“அதுக்கு ஏன் சத்யன் தயங்குறீங்க மொதல்ல பிஸினஸை பாருங்க... இதோ நானும் வர்றேன்” என்று பேத்தியை தூக்கிக்கொண்டு அவனுடன் பேசியபடி நடந்தவர்

“கொஞ்சம் நில்லுங்க சத்யன் உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கனும் அதை நீங்க எப்படி எடுத்துக்குவீங்களோன்னு சங்கடமா இருக்கு” என்று பரணி தயங்கியபடியே கூற

“என்ன அங்கிள் தயங்காம கேளுங்க”

“ஒன்னுமில்ல சத்யன் வீக்யெண்டில் நீங்க நைட்ல வீட்டுக்கு வர்றதில்லை... அதிலே ஒன்னும் தப்பு இல்ல ஏன்னா உங்க வயசு அப்படி... ஆனா வாழ்க்கையில் ஒரு சேப்டி இருக்கனும் சத்யன்.. அதனாலதான் சொல்றேன் தப்பா எடுத்துக்காதீங்க சத்யன்” என பரணி கூறியதும்

சத்யன் சிறிதுநேரம் தலைகுனிந்து நின்றுவிட்டு பிறகு நிமிர்ந்து அவர் முகத்தை நேராக பார்த்து “ இதுவரைக்கும் சேப்டியா தான் இருந்திருக்கேன் ஆனா இனிமேல் அதுபோல் நடக்காது சார்.. இதை நீங்க நம்பனும்” என்று கூற

“தட்ஸ் குட் சத்யன்.. நீங்க வீட்டுக்கு போங்க நான் இன்னும் கொஞ்சநேரம் கழிச்சு இந்த வாலுப் பொண்ணோட வரறேன்” என்று முகம் மலர கூறினார்

சத்யன் எளிதில் அவர் தன்னை புரிந்துகொண்ட உற்சாகத்துடன் வீட்டுக்கு போனான் 


அன்று இரவு எட்டு மணிக்கு பரணியும் சைந்தவியும் சத்யன் பிளாட்டுக்கு வர... சத்யன் சைந்தவியை தன் கையில் வாங்கிகொண்டு “வாங்க அங்கிள்” என்று உள்ளே போனான்

சைந்தவியை ஒரு சேரில் உட்காரவைத்து விட்டு ஒரு பேப்பரும் பென்சிலும் எடுத்து சவியின் முகத்தை அவுட்லைனாக வரைந்து அதில் பென்சிலாலேயே வண்ணம் தீட்டி சைந்தவியிடம் கொடுக்க

அவள் அதை வாங்கி பார்த்துவிட்டு “ என்ன அங்கிள் இதுதானா நான் ஒரே கறுப்பா இருக்கேனே” என்று சினுங்க

“இல்லடா செல்லம் அங்கிள் நாளைக்கு உன்னை அழகா வரைஞ்சு தர்றேன் இன்னிக்கு அங்கிளுக்கு நிறைய வேலையிருக்கு சரியா” என்று சத்யன் குழந்தையை சமாதானப்படுத்தினான்
Like Reply
#87
Super bro
Like Reply
#88
பரணி எழுந்துவந்து சைந்தவியை தூக்கிக்கொண்டு “சரி சத்யன் நீங்க உங்க வேலையை கண்டினியூ பண்ணுங்க நாங்க கிளம்புறோம்” என்று வாசலை நோக்கி போனவர் மறுபடியும் வந்து

“என்ன சத்யன் ரொம்ப டல்லா இருக்கீங்க இன்னிக்கு நிறைய ஒர்க்கா” என அன்புடன் விசாரிக்க

“ ஒர்க் அதிகம் இல்ல அங்கிள் ஆனா ஈவினிங்ல இருந்து ஒரே தலைவலி அதான்” என்று சத்யன் நெற்றியை தடவிக்கொண்டே கூற

“ஏதாவது சாப்பிட்டீங்களா சத்யன்.. இல்ல என் வீட்ல இருந்து எடுத்துட்டு வரவா” என பரணி வற்புறுத்தி கேட்க

“ அதெல்லாம் வேண்டாம் அங்கிள்.. ஹோட்டல்ல இருந்து டிபன் வாங்கிட்டு வந்திருக்கேன்” என்று சத்யன் மறுத்ததும்

“சரி சத்யன் நீங்க சாப்பிட்டு நல்லா தூங்கி ரெஸ்ட் எடுங்க நான் கலையில பார்க்கிறேன்” என்று கூறிவிட்டு பரணி சவியுடன் வெளியேறினார்

சத்யனுக்கு தலைவலி அதிகமாக வாங்கி வந்த டிபனை சாப்பிடாமலே படுத்துவிட்டான்

மறுநாள் காலை ஒன்பது மணிவரை சத்யனை வீட்டைவிட்டு வெளியே வர காணாமல் பரணி சத்யன் வீட்டு கதவை தட்டினார்

வெகுநேரம் கழித்து சத்யன் வந்து கதவை திறந்து விட்டு “வாங்க அங்கிள்” என்று அழைத்துவிட்டு திரும்பி போக

“ என்ன சத்யன் இப்பதான் எழுந்திருச்சீங்களா.. ஆபிஸ் போகலையா உடம்பு எதுவும் சரியில்லையா” என்று அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்க

சத்யன் சோர்வுடன் சோபாவில் விழுந்து “ ஆமா அங்கிள் நைட்டெல்லாம் ஒரே பீவர்... மாத்திரை எடுத்துகிட்டும் சரியாகளை அங்கிள்” என நலிந்த குரலில் கூற

“என்ன சத்யன் நீங்க ஒரு வார்த்தை எனக்கு போன் பண்ணி சொல்லியிருக்கலாம்ல.. நான் உடனே வந்திருப்பேன்” என்ற பரணி வேகமாக வந்து சத்யன் நெற்றியில் கைவைத்து பார்த்தார்

சத்யனின் நெற்றி நெருப்பாய் சுட பரணி சட்டென்று கையை எடுத்துவிட்டு “வாங்க சத்யன் ஆஸ்பிட்டல் போகலாம்” என்றவர்

அவன் கையைப் பற்றி தூக்கியவர் மறுபடியும் கையை விட்டுவிட்டு அவன் முகத்தை உற்று பார்த்தார்

“சத்யன் உங்களுக்கு சிக்கன் பாக்ஸ் வந்திருக்குன்னு நெனைக்கிறேன்.. முகமெல்லாம் ஒருமாதிரியா இருக்கு... கொஞ்சம் இருங்க நான் என் ஒய்பை கூட்டிட்டு வர்றேன்” என்று அவசரமாக பரணி வெளியே ஓடினார்

தன் முகத்தை கையால் தடவிப்பார்த்த சத்யன் எந்த மாற்றமும் தெரியாமல் போக அப்படியே சோர்வாய் சோபாவிலேயே படுத்துக்கொண்டான்
Like Reply
#89
சிறிதுநேரத்தில் பரணியும் அவர் மனைவி காஞ்சனாவும் வந்து சத்யனை பார்த்தனர்

“ஆமாங்க அம்மைதான் போட்டுருக்கு ஆனா சின்னம்மைதான் ஒருவாரம் பத்துநாள்ல சரியாயிடும்... நீங்க போய் நம்ம வீட்ல இருந்து நல்லா சலவை பண்ணதா உங்க வேட்டி ரெண்டு எடுத்துட்டு வாங்க... நான் இவரு படுக்க ஏற்பாடு பண்றேன்” என காஞ்சனா வேகமாக கூற

பரணி உடனே தன் வீட்டுக்கு போய் இரண்டு வேட்டியை எடுத்துக்கொண்டு வர அதில் ஒன்றை சத்யனை இடுப்பில் கட்டிக்கொள்ள சொல்லிவிட்டு ... மற்றொன்றை தரையில் விரித்து படுக்க வைத்தனர்

“ நீங்க போன் பண்ணி உங்க ஆபிஸ்க்கு லீவு சொல்லிட்டு இங்கேயே இவரை பார்த்துக்கங்க.. அப்படியே வாட்ச்மேன் கிட்ட சொல்லி கொஞ்சம் வேப்பிலை எடுத்துட்டு வரச்சொல்லுங்க... நான் போய் இவருக்கு சாப்பிட கஞ்சி வச்சு எடுத்துட்டு வர்றேன்” என்று காஞ்சனா வெளியே போக

தரையில் வேட்டியை விரித்து படுத்திருந்த சத்யன் “ என்னால உங்களுக்கு ரொம்ப சிரமம் சார்” என்று சோகமாய் முறுவலிக்க

"என்ன சத்யன் இப்படி சொல்றீங்க எனக்கு ஒன்னுன்னா நீங்க பாத்துக்க மாட்டிங்களா" என்ற பரணி தன் செல்லை எடுத்து உயிர்பித்து தனது அலுவலகத்தை தொடர்புகொண்டு தனது விடுமுறையை கூறிவிட்டு ... மறுபடியும் கால் செய்து கீழே இருந்த வாட்ச்மேனிடம் கொஞ்சம் வேப்பிலை எடுத்து வருமாறு கூறினார்

சத்யனுக்கு பரணீதரனை பார்க்கும்போது தனது தாயாரே மறு உருவில் வந்தது போல் இருந்தது 


சத்யன் தனது ஆபிஸ்க்கு போன் செய்து தன் நிலைமையை சொல்ல .... அவர்கள் எல்லாவற்றையும் தாங்களே பார்த்து கொள்வதாகவும் அவனை நன்றாக ஓய்வெடுக்கம் படி கூறினர்

வாட்ச்மேன் வேப்பிலை எடுத்து வர அதை சத்யனின் தலைக்கு அடியில் வைத்தார் பரணி... சத்யனின் சிவந்த முகம் இப்போது ரத்தச்சிவப்பாக மாறியிருந்தது.... கண்களை முடிக்கொண்டு படுத்திருந்தான் சத்யன்

காஞ்சனா சத்யனுக்கு கஞ்சி வைத்து எடுத்து வந்து டேபிளில் வைத்துவிட்டு வீட்டை சுத்தம் செய்தாள் அவளுடன் பரணியும் சேர்ந்து எல்லாவற்றையும் சுத்தமாக்கி ஒதுங்க வைத்தார் ...

அதையெல்லாம் பார்த்து சத்யனுக்கு சங்கடமாக இருந்தது “ அய்யோ அங்கிள் நீங்க ஏன் அதையெல்லாம் பண்றீங்க இன்னும் கொஞ்சநேரத்தில் வேலைக்காரம்மா வந்துடுவாங்க ஆன்ட்டி” என்று சத்யன் மெதுவான குரலில் கூற

அவன் கூறியதை காதில் வாங்காமல் தம்பதிகள் இருவரும் எல்லாவற்றையும் முடித்துவிட்டு கைகால்களை கழுவிக்கொண்டு வந்தனர்..

பரணி கஞ்சியை எடுத்துவந்து சத்யன் முன்னால் வைக்க காஞ்சனா அதை ஒரு சிறிய கிண்ணத்தில் ஊற்றி சத்யனிடம் கொடுத்தாள்

சத்யன் மறுக்காமல் வாங்கி குடித்துவிட்டு “ ரொம்ப நன்றி ஆன்ட்டி” என்று நெகிழ்ந்து போய் சொல்ல

“ மொதல்ல இப்படி நன்றி சொல்லறதை விடுங்க சத்யன் ... இந்தமாதிரியான ஒருத்தருக்கொருத்தர் உதவி செய்துக்கனும் இல்லேன்னா அப்புறமா நாமெல்லாம் மனுஷனா பொறந்து என்ன பிரயோஜனம் சத்யன்... நீங்க எந்த சங்கடமும் இல்லாம இயல்பா இருங்க அதுபோதும்” என பரணி சத்யனை அதட்டினார்

“ நீங்க இவர் கூடவே இருந்து பார்த்துக்கங்க நான் போய் மத்தியம் சமையலை பார்கிறேன்... இவருக்கு சரியாகிற வரைக்கும் ஹோட்டல் சாப்பாடே குடுக்ககூடாது அதனால நான் காரம் இல்லாம சமையல் செய்து எடுத்துட்டு வர்றேன் ” என்று சொல்லிவிட்டு காஞ்சனா போய்விட


“ அங்கிள் எனக்கு சரியாகிற வரைக்கும் நான் உங்கவீட்டு சாப்பாடே சாப்பிடுறேன்... ஆனா நீங்க நாளையில இருந்து வேலைக்கு போங்க நான் தனியா இருந்துக்குவேன் அதான் ஆன்ட்டி எதிர் வீட்டில் இருக்காங்களே” என்று சத்யன் வற்புறுத்தி சொல்ல

“ சரி சத்யன் அதை நாளைக்கு பார்க்கலாம் இப்போ நீங்க நல்லா தூங்குங்க” என்று பரணி ஒரே வார்த்தையில் கூறிவிட்டு நியூஸ் பேப்பரில் தனது கவனத்தை செலுத்தினார்

அதன்பிறகு வந்த இரண்டு நாட்களும் பரணியும் காஞ்சனாவும் சத்யனை கவனமாக பார்த்து கொண்டனர்...

அம்மை தொற்று என்பதால் சத்யன் பிடிவாதமாக சைந்தவியை இங்கே அழைத்து வரக்கூடாது என்று சொல்லிவிட்டான்

ஆனால் சத்யன்தான் காய்சலும் பலகீனமும் அதிகமாக எழுந்து உட்கார கூட மிகவும் சிரமப்பட்டான்....

மாலை வேளைகளில் காஞ்சனா குளித்துவிட்டு சத்யன் வீட்டுக்கு வந்து விளக்கேற்றி வைத்துவிட்டு சில சாமி பாடல்களை பாடினாள்

சத்யனுக்கு உடல் உபாதைகள் ஒருபக்கம் என்றாலும் மான்சியை பார்த்து இன்றோடு நாலுநாள் ஆயிருச்சே என்று வருத்தம்தான் அதிகமாக இருந்தது....

அன்று காலையில் அவள் வேலைக்கு போகும் நேரத்தில் மெதுவாக எழுந்து பால்கனிக்கு வந்து பார்த்தான் ஆனால் நீண்ட நேரமாகியும் அவள் வரவில்லை ... சத்யன் ஏமாற்றத்துடன் வந்து படுத்துக்கொண்டான்

நான்காவது நாள் பரணியின் ஆபிஸில் செக்கியூரிட்டி சம்மந்தமாக முக்கியமான மீட்டிங் என்பதால் லீவு கிடைக்காமல் பரணி ஆபிஸ்க்கு கிளம்பிவிட்டார்... சத்யனிடம் வந்து சொல்லிவிட்டுதான் போனார்
Like Reply
#90
எல்லாமே என் மான்சி - அத்தியாயம் - 3

அன்று காலையில் காஞ்சனா கொடுத்த இரண்டு இட்லியை கஷ்டப்பட்டு விழுங்கிவிட்டு சோர்வுடன் சத்யன் படுத்துவிட்டான்

நல்ல உறக்கத்தில் தன்னருகில் ஒரு வித்தியாசமான வாசனையை உணர்ந்து சத்யன் சட்டென கண்விழித்து பார்த்தான் .. அவன் கண்களையே நம்பமுடியாமல் மறுபடியும் கண்களை அழுத்தமாக மூடி திறந்தான்

மான்சிதான் அவனருகே மண்டியிட்டு அமர்ந்து தன் கையி்ல் இருந்த உணவுகளை கவனமாக கீழே வைத்துகொண்டிருந்தாள்...

சத்யனுக்கு இப்போது நீ பார்ப்பது உன்மைதான் என்று அவன் கண்கள் உணர்த்தியது... சத்யனுக்கு அவள் வாசனையும் அவள் அருகாமையும் ஒரு ஏகாந்த நிலையை ஏற்படுத்தியது

அந்த ஏகாந்தத்தை மறுபடியும் தனது கண்களை மூடி அனுபவித்த சத்யன்... எங்கே தான் கண்களை மூடியிருக்கும் சமயத்தில் அவள் கனவுபோல் கலைந்துபோய் விடுவாளோ என்ற பயத்தில் பட்டென கண்களை திறக்க

அப்போது மான்சியும் அவனைத்தான் பார்த்து கொண்டிருந்தாள்... அவன் கண்விழித்து தன்னை பார்த்ததும் அவசரமாக பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டாள்

“ அம்மா சாப்பாடு கொடுத்தனுப்பினாங்க எழுந்து கை கழுவிட்டு சாப்பிட வாங்க” என்று மான்சி வேறு பக்கம் திரும்பிக்கொண்டே மெதுவாக சொல்ல

அந்த தேன் குரல் சத்யனின் காதுகள் வழியாக இறங்கி அவன் மனதுடன் ரகசிய ஒப்பந்தம் செய்தது.. இனி என் குரலை நீ அடிக்கடி கேட்கலாம் என்றுதான் ஒப்பந்தம் செய்தது

சத்யனுக்கு அவள் தன்னை முதன்முதலாக நேரில் அருகில் சந்திக்கும் போது தான் இந்த நிலைமையில் இருக்கிறோமே என்று வருத்தமா இருந்தது


அய்யோ ரொம்ப நேரமாக எதுவும் பேசாமல் அவளையே பார்த்துக்கொண்டு இருக்கிறோமே அவள என்ன நினைப்பாள்.. அவளுக்கு ஏதாவது பதில் சொல்லவேண்டும் என்ற எண்ணம் வர

“ ஏன் எப்பவுமே ஆன்ட்டி தானே எடுத்துட்டு வருவாங்க... அவங்களுக்கு என்னாச்சு” என்று திரும்பியிருந்த அவளின் பக்கவாட்டு முகத்தை பார்த்து ரசித்துக்கொண்டே சத்யன் கேட்க

சிறிதுநேரம் மவுனமாக இருந்த மான்சி பிறகு “ அம்மா வரக்கூடாது அதனாலதான் என்கிட்ட சாப்பாடு குடுத்தனுப்பினாங்க” என்றாள்
Like Reply
#91
சத்யனுக்கு அவள் என்ன சொல்கிறாள் என்று புரிந்தாலும் அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் மவுனமாக இருக்க...

அவனின் மவுனத்தை தவறாக கணித்த மான்சி அவன் முகத்தை நேராக திரும்பி பார்த்து

“ ஏன் நான் கொண்டு வந்தா சாப்பிட மாட்டிங்களா... என் அம்மா ஐஞ்சு நாளைக்கு வரமாட்டாங்க நான்தான் சமையல் செய்து எடுத்துட்டு வருவேன் ” என்று படபடவென கூற

“என்ன அப்படி சொல்லிட்டீங்க மொதல்ல சாப்பாட்டை எடுத்துவைங்க எனக்கு பயங்கர பசி நான் கைகழுவிட்டு வர்றேன்” என்று புன்னகையுடன் இயல்பாக சத்யன் கூறியதும்

மான்சியும் பதிலுக்கு புன்னகைத்து “ ம் எடுத்து வக்கிறேன் நீங்க போய் கைகழுவிவிட்டு வாங்க ” என்று உணவுகளை தட்டில் எடுத்து வைக்க

சத்யன் மெதுவாக கைகளை ஊன்றி சிரமமாக எழுந்திரிக்க முயற்சிக்க... காலையிலிருந்து ஒரே நிலையில் படுத்திருந்ததால் கைகால்களை சட்டென அசைக்க முடியாமல் தடுமாறினான்

ச்சே மான்சிக்கு முன்பு இதென்னடா சங்கடம் என்று நினைத்த சத்யன் தரையில் கைகளை அழுத்தமாக ஊன்றி எழ நினைக்க ... அப்போது மான்சி அவன் கையை தன் கைகளால் வலுவாக பற்றி அவனை தூக்கி எழுப்பினாள்

சத்யனுக்கு அந்த நிலை சங்கடமாக இருந்தாலும்... அவன் மேல் வானத்து தேவதைகள் வாசனை மிகுந்த மலர்களை வாரியிறைத்து வாழ்த்து பாடினர்
அதுவரை இருந்த உடல் சோர்வு மனத்தளர்ச்சி அனைத்தும் பறந்து போக... தான் அன்றுதான் புதிதாய் பிறந்தது போல் உணர்ந்தான்

தனது மிச்ச வாழ்நாளை யாருக்காவது தாரைவார்த்து கொடுத்துவிட்டு... இவளின் கையை பிடித்துக்கொண்டே உயிரை விட்டுவிடலாமா என்று நினைத்தான்

மனமேயில்லாமல் அவள் கையை விலக்கி விட்டு மெதுவாக போய் கைகழுவிவிட்டு வந்த சத்யன் சாப்பிட தட்டின் முன் அமர்ந்தான்

மான்சி அவனுக்கு கவனமாக உணவு பரிமாற ... அவன் தட்டில் என்ன இல்லை என்பதை உடனுக்குடன் பார்த்து அவன் கேட்கும் முன்பே பரிமாறினாள்

சத்யன் எதுவுமே சொல்லாமல் அவள் வைத்ததையெல்லாம் அவளை அடிக்கடி நிமிர்ந்து பார்த்துக்கொண்டே சீக்கிரமாக சாப்பிட்டுவிட

மான்சி எல்லவற்றையும் எடுத்து டேபிளில் வைத்துவிட்டு “நான் இன்னும் கொஞ்சநேரம் கழிச்சு வர்றேன் நீங்க நல்லா தூங்குங்க” என்று கூறிவிட்டு தன் வீட்டுக்கு கிளம்பிவிட்டாள்

சத்யன் தன் வாழ்நாளின் உணவு மொத்தத்தையும் இன்றே சாப்பிட முடியவில்லையே என்று வருந்தினான் 

மான்சி அவள் வீட்டுக்கு போனதும் சத்யனின் நன்பர்கள் சிலர் அவனை பார்க்க வந்தனர்.

சத்யன் அவர்களிடம் தனது ஆபிஸ் பொறுப்புகள் சிலவற்றை தற்காலிகமாக ஒப்படைத்து அவர்களிடம் விளக்கம் சொல்லி அனுப்பினான்

சத்யன் மனதில் ஆயிரம் கனவுகள் மற்றும் ஏக்கங்களுடனும் இரவு எப்போது வரும் என்று காத்திருந்தான்.... அப்போது தானே மான்சி வருவாள்

அவன் காத்திருப்பை பொய்யாக்காமல் மான்சி இரவு உணவை எடுத்துக்கொண்டு தன் அப்பா பரணியுடன் வந்தாள்

சத்யன் பரணியை பார்த்ததும் தனது பார்வையை மான்சியின் பக்கம் திருப்பாமல் கண்ணியம் காக்க... பரணி இயல்பாக சத்யனுடன் பேசினார்

“என்ன சத்யன் இன்னிக்கு மதியம் உங்க பிரண்ட்ஸ் வந்தாங்களாமே காஞ்சனா சொன்னா” என பரணி கேட்டதும்

தன்னருகில் அமர்ந்து கீழே கிடந்த நியூஸ் பேப்பர்களை சேகரித்து கொண்டிருந்த மான்சியின் உடலிலிருந்து வந்த ஒருவித மனோகரமான மயக்கம் வாசனையில் தன்னை மறந்து கண்மூடியிருந்த சத்யன் பரணி சொன்னது காதில் விழமால் இருக்க

“என்ன சத்யன் ஏதாவது பலத்த யோசனையா” என்று பரணி மறுபடியும் கேட்க

திடுக்கிட்டாற்ப் போல் கண்விழித்த சத்யன் “என்ன சார் கேட்டீங்க” என்றான்

“இல்ல மதியம் உங்க பிரண்ட்ஸ் வந்தாங்களான்னு கேட்டேன்.... நீங்க தூங்கிகிட்டு இருந்தீர்களா சத்யன்” என பரணி கூறியதும்

சத்யன் லேசாக அசடு வழிய அவசரமாக மறுத்து “ இல்ல அங்கிள் நான் தூங்கலை சும்மா கண்மூடியிருந்தேன் அவ்வளவுதான்...என்றவன்

“ ம் பிரண்ட்ஸ் வந்தாங்க அங்கிள் ஆபிஸ வேலை சம்மந்தமாக பேச நான்தான் வரச்சொல்லியிருந்தேன்... அதான் பேசிட்டு உடனே போய்ட்டாங்க”....

“ம் ஆபிஸில் கொஞ்சம் கவணம் செலுத்துங்க சத்யன் அதுதான் உங்கள் உழைப்பு” என சத்யன் கூற

“சரிங்க அங்கிள் அப்புறம் சவி என்ன பண்றா அங்கிள் ஆறுநாளா அவளை பார்க்காம ரொம்ப கஷடமா இருக்கு... எப்போ எனக்கு சரியாகும்ன்னு தெரியலை ” என்று சத்யன் சலிப்பாக சொல்ல

“ அவ அங்கே உங்களுக்கு மேல தவிச்சுக்கிட்டு இருக்கா... இப்பக்கூட என்னை அங்கிள் கிட்ட கூட்டிட்டு போம்மான்னு ஒரே பிடிவாதம்” என்று சொன்னது மான்சிதான்

சத்யனுக்கு தன் உடலும் மனமும் அந்தரத்தில் பறப்பது போல் இருந்தது ... பின்னே மான்சியல்லவா அவனுக்கு பதில் சொன்னாள்

அவனுக்கு தன்னை பற்றி நினைக்கவே ஆச்சிரியமாக இருந்தது... சிலநாட்களுக்கு முன்புவரை இவள் யாரென்று தெரியாது... ஆனால் இப்போது என் உயிர்த்துடிப்பதே இவளுக்காத்தான்... இரவு தூங்கி காலையில் கண்விழிப்பதே இவளை காணத்தான் என்றுணர்ந்தான்
Like Reply
#92
Nice update bro
Like Reply
#93
Bro semma story .... continue bro
Like Reply
#94
(20-02-2019, 01:51 PM)Renjith Wrote: Nice update bro

(21-02-2019, 02:34 PM)Suresh55 Wrote: Bro semma story .... continue bro

thanks bro
Like Reply
#95
மான்சி சத்யனுடன் சகஜமாக பேசியது பரணிக்கு கூட ஆச்சிரியமாகத்தான்

“அப்பா நீங்க போய் சவியை பார்த்துக்கங்க... அம்மாவால அவளை சமாளிக்க முடியாது....நான் இவருக்கு நைட் சாப்பாடு எடுத்து வச்சிட்டு வர்றேன்” என்று மான்சி கூறியதும்

“சரி சத்யன் நான் வீட்டுக்கு போறேன் நீங்க ரெஸ்ட் எடுங்க” என சொல்லிவிட்டு பரணி கிளம்பினார்

மான்சி, சத்யனை சுற்றி இரைந்து கிடந்த வேப்பிலை சருகுகளை கைகளால் சேர்த்து வாறி ஓரமாய் போய் போட்டுவிட்டு அவன் எதிரில் உட்கார்ந்து மாரியம்மன் தாலாட்டு பாடல்களை தன் தேன் குரலில் பாட

சத்யன் படுத்தவாறே அதை கண்மூடி ரசித்தான்.... திடீரென கண்திறந்த சத்யனின் கண்ணெதிரில் உட்கார்ந்திருந்த மான்சியின் இடுப்புதான் தெரிந்தது

விக்கித்துப் போன சத்யன் தனது விழிகளை அந்த சுந்தரப் பிரதேசத்தை விட்டு நகர்த்த முடியாமல் அங்கேயே நிலைக்கவிட்டான்


சத்யனின் பக்கவாட்டில் அவள் உட்கார்ந்திருந்ததால் அவளின் ஆலிலை போன்ற மான்சியின் வயிறு சற்று குழிந்து இருக்க அவ்வளவு அருகாமையில் அவள் வயிற்றின் மெல்லிய ரோமங்களை கூட சத்யனால் பார்க்க முடிந்தது

சத்யன் மெதுவாக தன் பார்வையை அவள் இடுப்புக்கு மேலே உயர்த்தினான்... மான்சி கையை மடக்கி பாட்டு புத்தகத்தை வைத்திருந்ததால் அவள் இடது பக்க சேலை ஒதுங்கி அவள் இடது மார்பின் பக்கவாட்டு தோற்றம் தெரிந்தது

அதன் கணப் பரிமானம் சத்யனை மூச்சடைக்க செய்தது... அவளை சந்தித்த இத்தனை நாட்களில் சத்யனின் பார்வை அவள் முகத்துக்கு கீழே இறங்கியதில்லை... ஆனால் இன்று அவளுடைய வனப்பை கண்களால் தடவி கருத்தில் பதித்துகொண்டிருந்தான்

சத்யனுக்கு குழிந்த அந்த வயிற்றுப் பள்ளத்தில் தன் முகத்தை வைத்துக்கொள்ள வேண்டும் போல இருந்தது...
அப்படி முகத்தை வைத்துக்கொண்டு நிமிர்ந்து அவளின் அடிமார்பை தனது மூக்கால் உரச வேண்டும் போல் இருந்தது...
அப்படி மூக்கால் உரசி கொண்டே அந்த மார்பின் வனப்பை தன் கைகளால் தடவி பார்க்க வேண்டும் போல் இருந்தது...
அப்படி கைகளால் தடவி பார்த்துக்கொண்டே அந்த மார்பின் கணத்தை தூக்கி எடையை அறிய வேண்டும் போல் இருந்தது
சத்யன் கண்களாலேயே விழுங்கி தனது இரவு பசியை போக்கிக்கொண்டிருக்க...

‘அடப்பாவி இந்த நிலைமையில் பெண்களை ஏறெடுத்தும் பார்க்கக்கூடாது நீ என்னடான்னா இப்படி அவளை அணுஅணுவாக ரசிக்கிற... அதுவும் அவ சாமிபாட்டு பாடிக்கிட்டு இருக்கும் போது ச்சை என்ன மனுஷன்டா நீ ’ என்று அவன் மனம் அவனை குத்தியது

லேசான குற்ற உணர்வில் சத்யன் தவிக்க ... அவன் உணர்ச்சிகளோ எந்தவித குற்ற உணர்வுமின்றி மறுபடியும் மறுபடியும் அவள் அழகை கண்களால் தடவிப்பார்த்து ரசித்தது

மறுபடியும் அவனை குறைசொல்ல எழுந்த மனதை .. “ ஆண் கடவுளோ பெண் கடவுளோ அவர்களின் உணர்வுகளின் சங்கமமும் சேர்க்கைதான் மனிதப்பிறவி... இதில் மறுப்பேதும் உண்டா ... அப்படியிருக்க இப்போ நான் அவளை ரசிப்பதை எந்த கடவுளும் குற்றமென்று சொல்லமாட்டார்... நீ அடங்கியிரு’ என்று சத்யன் தன் மனதை அடக்கிவிட்டு அவள் அழகை அள்ளிப் பருகும் அற்புதத்தை சீராக செய்தான்

மான்சி பாடல்களை படித்துவிட்டு எழுந்துகொள்ள... அவளையே பார்த்துக்கொண்டிருந்த சத்யன் திகைத்துப்போய் சட்டென தன் பார்வையை விலக்கி திரும்பிக்கொண்டான்

“நீங்க டிபன் சாப்பிட்டீங்கன்னா நான் கிளம்புவேன்” என்று மான்சி அவன் முகத்தை பார்க்காமல்

சத்யன் எதுவும் சொல்லாமல் எழுந்து போய் கைகழுவிவிட்டு வந்து அமர மான்சி தட்டுவைத்து அதில் உணவை வைத்தாள்

சத்யனுக்கு இவ்வளவு நேரம் அவளை பார்த்ததில் மனம் பதைத்துப் போயிருந்தது... ச்சே எவ்வளவு அக்கறையோட சாப்பாடு போடுறா... இவ்வளவு நேரமா நான் இவளை என் கண்களால் சாப்பிட்டு பசியாறினேன் என்று தெரிந்தால் என்னை பற்றி என்ன நினைப்பாள்

அப்புறமா பரணி அங்கிள் என்மேல் வச்சுருக்கும் மரியாதை என்னாகும்... இனிமேல் இதுபோல நடந்துக்கக் கூடாது என்று தன் உணர்வுகளுக்கு சத்யன் கடிவாளமிட்டான்

ஆனால் உணர்வுகளுக்கு கடிவாளமிட யாராலும் முடியாது என்பது சத்யனுக்கு தெரியவில்லை

அவன் குனிந்து சாப்பிட்டாலும் அவன் நினைவுகள் அவளை தலைநிமிர்ந்து ரசித்துக்கொண்டிருந்தது

“சட்னியில உப்பு இருக்கா” என்ற மான்சியின் குரல் சத்யனின் நினைவுகளை கலைத்தது

தலை நிமிராமலேயே “ம் இருக்கு” ஆனால் அவன் நாக்கு சுவையறியாமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தது

அவனுக்கு பயம் எங்கே தலைநிமிர்ந்தால் தன் மனம் இருக்கும் நிலையில் ஏதாவது தவறாக நடந்து கொண்டுவிடுவமோ என்றுதான்

அவன் உணவு பரிமாறும் அவள் விரல்களை பார்த்தான்... எவ்வளவு அழகான காந்தல் விரல்கள் ... அந்த விரல்களின் நுனியில் முத்தமிட்டால் எப்படி இருக்கும் என்று அவன் நினைத்தான்
Like Reply
#96
இப்போது கடவுள் அவனெதிரே வந்து அந்த விரலை முத்தமிட உனக்கு ஒரு சந்தர்பம் அளிக்கிறேன் ஆனால் அதற்க்கு நீ என்ன திருப்பி தருவாய் என்று கேட்டால் ... சத்யன் உடனே உயிரைத்தருவேன் என்பான்
சத்யன் இப்போதெல்லாம் மான்சி வரும் நேரங்களில் சசின்னசின்னதாக திருட்டுத்தனமான வேலைகள் செய்ய ஆரம்பித்தான்

அவள் வரும் நேரங்களில் வேன்டுமென்றே கண்களை மூடிக்கொண்டு அசந்து தூங்குவது போல் நடிப்பான்

அவள் இவனருகில் வந்து சார் என்று அழைத்தால் எழ மாட்டான்.. 
இரண்டாவது முறையாக சத்யன் எழுந்திருங்க என்று அழைத்தும் தான் எழுந்திருப்பான்

தரையில் உட்காரமுடியவில்லை என்று சொல்லி டேபிள் சேரில் அமர்ந்து சாப்பிடுவான்... ஏன்னென்றால் அப்போ தானே அவள் நின்றுகொண்டு உணவு பறிமாறும் அழகை தலைகவிழ்ந்தபடி ரசிக்க முடியும்

அப்படி ரசிக்கும் போதுதானே அவள் கவணிக்காமல் இருக்கும்போது அவள் இடுப்பையும் வயிற்றயும் பார்த்து அதன் நடுவில் இருக்கும் அழகுத் தொப்புளையும் ரசிக்க முடியும்

இப்போதெல்லாம் சத்யன் அவள் புடவைக்குள் மறைந்திருக்கும் தொப்புளை தன் கண்களால் தடவிக்கொண்டுதான் ஒரு வாய் உணவுகூட சாப்பிடுவது

சத்யனை அவள் ஆழகுத் தொப்புளை பற்றி ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுதச்சொன்னால்... அந்த கட்டுரையை பிழையில்லாமல் நூறு பக்கத்துக்கு எழுதுவான் அவ்வளவு தேறிவிட்டான்

இந்த கூத்தெல்லாம் ஐந்து நாட்கள்தான் நடந்தது அதன்பிறகு கஞ்சனா வந்துவிட சத்யனின் ஏமாற்றத்தை அளவிட யாராலும் முடியாது... அவளை காணாமல் அந்தளவுக்கு சோர்ந்து தளர்ந்து போய்விட்டான்

அவன் உடல் நன்றாக தேறிவிட ஒன்பதாவது நாள் அவன் பரணி காஞ்சனா உதவியுடன் தலைக்கு குளித்தான்

அன்று மாலை மான்சியும் சைந்தவியும் சத்யன் வீட்டுக்கு வர சைந்தவி ஓடிவந்து சத்யன் மடியில் உட்கார்ந்து கொண்டாள்

தன் மடியில் அமர்ந்த சவியை தூக்கிப் போட்டு பிடித்த சத்யன் “ ம் என் செல்லத்தை பார்க்காம பத்துநாளா எனக்கு பைத்தியம் புடிச்ச மாதிரி ஆயிருச்சு” என்று கொஞ்சினான்

“எனக்கும்தான் அங்கிள் உங்களை பார்க்கனும்னு ரொம்ப ஆசையா இருந்துச்சு.. அதான் இன்னிக்கு அம்மா வந்தவுடனேயே கூட்டிட்டு போகச்சொல்லி அழுதேன் அப்புறமாதான் கூட்டிட்டு வந்தாங்க” என்று சைந்தவி தன் மழலை மொழியில் படபடவென பேச

சத்யன் குழந்தையை வாரியணைத்து முத்தமிட்ட படியே மான்சியை பார்க்க... அவள் முகத்தில் புன்னகையுடன் இவர்கள் கொஞ்சுவதையே பார்த்துக்கொண்டிருந்தாள்

புன்னகை சிந்தும் அவள் இதழ்களை பார்த்த சத்யன்... நாம் என்றைக்கு இந்த ஈர இதழ்களில் தன் உதட்டால் முத்தக் கவிதை எழுத போகிறோமோ என்று ஏங்கினான்

அதன்பின் சத்யன் உடல் நிலை சரியாகி தன் ஆபிஸ்க்கு போக ஆரம்பித்தான்... ஆனால் சரியாக மான்சி கிளம்பும் நேரத்துக்கு தனது நேர அட்டவணையை மாற்றிக்கொண்டான்

இருவரும் ஒன்றக லிப்டில் பயனிக்கும் அந்த நிமிடங்களுக்காக சத்யன் முதல்நாள் இரவிலிருந்தே கற்பனையில் மிதக்க ஆரம்பித்துவிடுவான்

லிப்டில் கூட்டம் அதிகமாக இருந்தால் சத்யன் பாடு இன்னும் கொண்டாமாகிவிடும் ... அவளை கூட்டத்தில் பாதுக்காப்பவன் போல் நெருக்கமாக நின்று கொள்வான்...

அவள் வாசனை இவன் முகத்தில் மோதும்... அவள் வெளுத்த தோள் வளைவைவிட்டு தன் பார்வையை அகற்ற மாட்டான்.... இவ்வளவையும் மான்சிக்கு துளிகூட சந்தேகம் வராதவாறு செய்வான்

ஏய் ரொம்ப பொறிக்கித்தனம் பண்றே என்று எச்சரிக்கும் மனதை ... எது பொறிக்கித்தனம் கடவுள் படைத்த இந்த அழகு சுரங்கத்தை ரசிப்பதா ... இந்த அழகை ரசிப்பது பொறிக்கத்தனம் என்றால் ஊரில் அழகான் பூக்கள் மலரும் எல்லா பூங்காக்களையும் அழித்துவிட வேண்டும்

அவளை பார்த்ததால் சத்யன் தான் பிறந்ததற்கான பிறவிப்பயன் அடைந்துவிட்டதாக எண்ணினான்...

மாலை வேளைகளில் மான்சி வரும் நேரத்தில் சரியா கணக்கிட்டு அவனும் வந்துவிடுவான் ... கீழ் பிளாட்டில் வசிப்பவர்கள் வளர்க்கும் நாயிடம் மான்சிக்கு எப்பவுமே பயம் அதிகம்

அதனால் எப்பவுமே பரணி அவள் வரும் நேரத்திற்கு கீழே வந்து காத்திருந்து அவளை கூட்டிச்செல்வார் .... ஆனால் இப்போது சத்யன் உடன் வருவதால் பரணி கீழே வருவதில்லை

சத்யன் இதுவரை அந்த நாய்க்கு ஒராயிரம் முறை நன்றி சொல்லியிருப்பான்... அந்த நாய் எப்போதாவது குரைத்தால் சத்யனுக்கு இன்னும் சந்தோஷமாகிவிடும் ... ஏனென்றால் அப்போது தானே பயத்தில் இவன் கைகளை பற்றிக்கொள்வாள்
Like Reply
#97
சத்யனின் வாழ்க்கை பயனத்தில் மான்சியின் பங்கு என்ன என்று தெரியாமலேயே சத்யன் அவளை நினைத்து ஏக்கத்துடன் காத்திருந்தான்

அவனுக்கு மான்சி உடனே வேண்டும் எல்லாவற்றுக்குமோ வேண்டும்... அன்பு ,காதல் சுகம், சந்தோஷம்,பாசம், பரிவு, சண்டை, சச்சரவு, எல்லாமே மான்சியுடன்தான் இனிமேல் நடக்க வேண்டும் என்று நினைத்தான்

ஆனால் இவனுடைய அனைத்து நடவடிக்கைகளை பற்றியும் பரணிக்கு தெரியும் என்பதால் ... முன்பு இவன் சனிக்கிழமை இரவு நேரங்களில் வீடுதிரும்பாததை பற்றி இவனிடமே நேரடியாக கேட்டவரிடம் போய் மான்சியை பற்றி எப்படி பேசுவது என்று குழம்பினான்

அதுவுமில்லாமல் மான்சிக்கு இருக்கும் இரண்டாவது திருமணத்தை பற்றிய வெறுப்பும் அவனுக்கு பயத்தை கொடுத்தது... நாம் பாட்டுக்க ஏதாவது சொல்லி அப்புறமா இப்போது இருக்கும் இந்த சின்னச்சின்ன சந்தோஷங்கள் கூட தன் வாழ்வில் இல்லாமல் போய்விட போகிறது என்று சத்யன் பயந்தான்

சனியன்று மாலை சத்யன் வீட்டுக்கு சைந்தவியுடன் வந்தார் பரணி.... சத்யன் சைந்தவியை வாங்கிக்கொண்டு உள்ளே போய் அவளுக்காக வாங்கி வைத்திருந்த சாக்லேட்டை கொடுத்தான்

சவி அவன் கன்னத்தில் முத்தமிட்டு அந்த சாக்லேட்டை வாங்கி பாதி கடித்துக்கொண்டு மீதியை அவன் வாயில் வைக்க... சத்யன் சிரித்தபடி அதை ரசித்து சுவைத்தான்

“ சத்யன் வரவர நீங்க அவளுக்கு ரொம்ப செல்லம் குடுக்கறீஙக.... எப்பப்பாரு சாக்லேட்டா தின்றா பல்லு என்னாகப்போகுதோ” என்று பேத்தியைப் பார்த்து குறைசொல்ல

“தாத்தா நான் பாதிதான் சாப்பிட்டேன் மீதியை அங்கிள் கிட்ட குடுத்திட்டேன்... அங்கிள் நீங்க தாத்தாகிட்ட வாயை திறந்து காமிங்க” என்ற சவி சத்யனின் தாடையை பிடித்து ஆட்டி வாயை திறக்க சொல்ல சத்யன் வாயைத்திறந்து காட்டி

“ அங்கிள் இவ பொய் சொல்றா என் வாயில சாக்லேட் இல்லை பாருங்க “ என்று சத்யன் சிரிக்க

சவி அவன் கன்னத்தில் தட்டி “ அய்யோ பொய் அங்கிள் பொய் சொல்றாரு தாத்தா” என்றாள்

பரணி இவர்கள் விளையாட்டை பார்த்து சிரித்தபடி “ இவளை விட்டுட்டு நீங்க எப்படிதான் ஒருவாரம் இருக்கப்போறீங்களோ தெரியலை சத்யன்... அதேபோல இவ எப்படி உங்களை விட்டு இருப்பான்னு தெரியலை” என்று பரணி சொன்னதும்

“ஏன் அங்கிள் எங்கயாவது வெளியூர் போறீங்களா” என்று தனது குரலின் அதிர்ச்சியை மறைக்க முயன்றபடி சத்யன் கேட்க

“ஆமாம் சத்யன் கட்டாக்ல இருக்கிற இவ மாமன் வாசு ஆஸ்ட்ரேலியா போறானாம் அதனால அவன் போறதுக்கு முன்னால ஒருவாரம் எங்க எல்லார்கூடயும் இருக்கனும்னு கிளம்பி வரச்சொல்லியிருக்கான்... பிளைட்டுக்கு அவனே டிக்கெட் எடுத்து அனுப்பிட்டான் ... நாளைக்கு விடிய காலையில கிளம்புறோம் சத்யன்" என்று பரணி சொல்லி முடித்ததும்

சத்யனுக்கு ரொம்பவே ஏமாற்றமாக இருந்தது .... அப்போ இன்னும் ஒருவாரத்துக்கு மான்சியை பார்க்கவே மு டியாதா... இந்த ஒருவாரம் அவள் இல்லாமல் என் வாழ்வு சக்கரம் எப்படி சுழலும் ... அவன் நினைவுகள் ஏக்கத்துடன் தவிக்க

" நாங்க கட்டாக் போனதும் நீங்கதான் மான்சியை அடிக்கடி பார்த்துக்கனும்... பவானியம்மா கிட்டயும் சொல்லியிருக்கேன்... எதுக்கும் நீங்களும் சும்மா ஒரு பார்வை பார்த்துக்கங்க" என்று பரணி மறுபடியும் கூற

"என்ன அங்கிள் சொல்றீங்க அவங்க உங்ககூட கட்டாக் வரலியா" என சத்யன் கேட்கும்போது இந்த உலகமே அவன் வாய்க்குள் தெரியும் போல அந்தளவுக்கு வாயை பிளந்துகொண்டு கேட்டான்

" மான்சிக்கும் சேர்த்துதான் வாசு டிக்கெட் அனுப்பியிருக்கான்... ஆனா அவளுக்கு பேங்கில் இது ஆடிட்டிங் நேரங்கிறதால லீவு கிடைக்கலை... அவ டிக்கெட்டை கேன்ஸல் பண்ணிட்டு நான் காஞ்சனா சவி மூணு பேர் மட்டும் போறோம்... கொஞ்சம் மான்சியை பார்த்துக்கங்க சத்யன்... முன்பு போல அவளுக்கு இப்பல்லாம் பயம் கிடையாது என்றாலும் ... தனியா விட்டுட்டு போறோம் அதான் சொல்றேன்" என்று பரணி கவலையான குரலில் கூற

சத்யன் வேகமாக அவர் அருகில் வந்து அவர் கையை பற்றிக்கொண்டு " என்ன அங்கிள் இப்படியெல்லாம் பேசறீங்க.. என் உயிரைக்கொடுத்தாவது அவங்களை பாதுகாப்பேன் அங்கிள் நீங்க பயப்படாம நல்லபடியா போய்ட்டு வாங்க" என்று சத்யன் பரணிக்கு தைரியம் சொன்னான்

" ரொம்ப நன்றி சத்யன் இதை உங்ககிட்ட நான் முன்னாடியே எதிர்பார்த்ததுதான்" என்ற பரணி சைந்தவியை தூக்கிக்கொண்டு தனு வீட்டுக்கு போனார்

சத்யனின் சந்தோஷத்துக்கு அளவேயில்லை... சிறுபையன் போல் விசிலடித்துக்கொண்டு சோபாவில் ஏறி குதித்தான்... வாய்க்கு வந்த சினிமா பாடல்களை தப்புதப்பாக பாடினான் ... இன்னும் ஒருவாரத்துக்கு மான்சியை நான் பார்த்துக்கொள்ள வேண்டும் .. இதை நினைக்கும் போதே அவனுக்கு முதுகில் இறக்கை முளைத்து வானில் பறப்பது போல இருந்தது 
Like Reply
#98
மறுநாள் அதிகாலையிலேயே சத்யனும் எழுந்து பரணியை வழியனுப்ப விமான நிலையம் கிளம்பினான்

டாக்ஸியில் சைந்தவி சத்யனைவிட்டு கீழே இறங்கவேயில்லை ...
சத்யனுக்கு இந்த அன்பு குழந்தையை விட்டு தான் எப்படி ஒருவாரம் இருக்கப்போகிறோமோ என்று இருந்தது

அவர்களை வழியனுப்பிவிட்டு வரும்போது சத்யனும் மான்சியும் மட்டும் டாக்ஸியில் வந்தனர் ...

மான்சி எதுவுமே பேசாமல் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் அமைதியாக வர

சத்யன் மான்சியை திரும்பி பார்த்து “ என்னங்க ரொம்ப டல்லாயிட்டீங்க குழந்தையை விட்டுட்டு எப்படி இருக்கறதுன்னு தானே .... ஒருவாரம் தானங்க அது கண்மூடி திறப்பதுக்குள்ள ஓடிப்போயிரும்” என்று ஆறுதல் சொல்ல

மான்சி அதற்க்கும் எந்த பதிலும் சொல்லவில்லை காரின் ஜன்னல் வழியா புலர்ந்தும் புலராத அழகான காலைப் பொழுதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு வந்தாள்

சத்யன் அதற்க்கு மேல் அவளிடம் எதுவும் பேசவில்லை... அவனுக்கு அவளுடைய முகம் வாடியிருந்தது ரொம்ப கஷ்டமாக இருந்தது...

‘ச்சே எல்லாரும் ஊருக்கு போறதுக்கு நான் சந்தோஷப்பட்டேன்... ஆனா மான்சிக்கு இதிலே ரொம்ப வருத்தம் போல இருக்கு.. என்று அவளை நினைத்து இவன் வருந்தினான்

டாக்ஸி அவர்களின் அப்பார்ட்மெண்ட்க்கு வந்ததும் சத்யன் டாக்ஸிக்கு பணம் கொடுக்க... அவனை கையசைத்து தடுத்த மான்சி

“ இருங்க பணம் நான் கொடுக்கறேன்” என்று தனது கைப்பையை திறந்து பணத்தை தேட....

சத்யன் அதற்க்குள் பணத்தை கொடுத்து டாக்ஸியை அனுப்பிவிட்டான்.. அவனை திரும்பி பார்த்து முறைத்த மான்சி வேகமா லிப்ட்டை நோக்கி போக....
சத்யனுக்கு சங்கடமாக இருந்தது அவள் பின்னாலேயே வேகமாக போய் லிப்டில் அவளுடன் சேர்ந்துகொண்டான்

மான்சி இவன் முகத்தை பார்க்காமல் திரும்பிக்கொண்டு நிற்க சத்யன் என்னடா இது கை எட்டுனது வாய்க்கு எட்டாது போல இருக்கே என்று நினைத்தான்

“மான்சி என்மேல் என்ன கோபம் நான் ஏதாவது உங்க மனசு நோகும்படி தவறா நடந்துகிட்டேனா” என்று சத்யன் வருத்தமாக கேட்க

இவன் வார்த்தைக்கு மான்சியிடம் இருந்து எந்த பதிலும் இல்லை... அதற்க்குள் அவர்கள் தளம் வந்துவிட இருவரும் லிப்ட்டில் இருந்து வெளியே வந்து அவரவர் வீட்டுபோக திரும்ப...

சத்யன் தன்வீட்டு கதவில் சாவியை நுழைத்து திறந்துகொண்டிருக்க... அவன் பின்னால் இருந்து “ ஒரு நிமிஷம் இருங்க” என்று மான்சியின் குரல் கேட்டது

சத்யன் சட்டென தலையை திருப்பி அவளை பார்த்தான்... மான்சி அவன் முகத்தை நேரடியாக பார்த்து “ உங்களுக்கு என்ன வயசு இருக்கும்” என்று கேட்க

இதென்ன இந்த நேரத்தில் சம்மந்தமில்லாமல் கேட்கிறாளே என்று மனதில் நினைத்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் “ இன்னும் நாலுமாசத்தில் முப்பது ஆரம்பிக்கும்” என்றான்

“அப்போ என்னைவிட ஏழுவயசு பெரியவர் நீங்க... அப்பறமா ஏன் என்னை வாங்க போங்கன்னு அத்தனை ங்க போட்டு கூப்பிடுறீங்க... மான்சின்னு பேர் சொல்லி கூப்பிடுங்க” என்று மான்சி முகத்தில் சிறு புன்னகையுடன் கூற

சத்யன் தன் காதுகளில் விழுந்த வார்த்தைகளை நம்பவே முடியவில்லை... இவ்வளவு நேரம் முறைத்து கொண்டு வந்தாள் இப்போது அப்படியே மாறிவிட்டாளே... ம்ஹும் இந்த பொண்ணுங்களை புரிஞ்சுக்கவே முடியாது என்று நினைத்து அவளை பார்க்க

அவள் கதவை திறந்து உள்ளே போய்க்கொண்டு இருந்தாள்... சத்யன் உடனே “ மான்சி” என்று கூப்பிட... அவள் நின்று திரும்பிப்பார்த்து என்ன என்பதுபோல் கண்ணசைக்க

“ இல்ல சும்மா உங்க பேர் எப்படி இருக்குன்னு கூப்பிட்டு பார்த்தேன்” என்று சத்யன் அசடுவழிய

அவள் உதட்டளவில் சிறு சிரிப்புடன் தலையசைத்துவிட்டு வீட்டுக்குள் போய் கதவை மூடிக்கொண்டாள்
Like Reply
#99
சத்யன் மூடிய கதவையே சிறிதுநேரம் நின்று பார்த்தான்... இது அவள் மனக்கதவு திறக்காது என்பதன் அர்த்தமா...

இல்லை இந்த கதவை தட்டினால் திறப்பது போல அவள் மனக்கதவும் என் இதயக் கரங்களால் தட்டினால் திறக்குமா.....

சத்யன் மான்சியை பற்றிய பலத்த யோசனையுடன் தன் வீட்டு கதவை திறந்து கொண்டு உள்ளே போனான் 


அதன்பிறகு வந்த மூன்றுநாட்களும் சத்யன் மான்சி உறவில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே சீராக போனது... எதிரெதிரே பார்த்துக்கொண்டால் ஒரு சிறு புன்னகையோடு அவர்களின் பயணம் தொடர்ந்தது

சத்யனின் தவிப்பு மட்டும் நாளுக்கு நாள் அதிகரிக்க ... அவளுக்காக ரொம்பவே ஏங்க ஆரம்பித்தான்.... இவளை நினைத்து நினைத்தே தன்னுடைய இளமை வீணாகிவிடுமே என்று வேதனைப்பட்டான்

ஒருபக்கம் பரணி தன்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நினைத்து சங்கடமாக இருந்தது ... மறுபக்கம் மான்சியின் மீதான சத்யனின் காதல் வானுயர வளர்ந்து... கடலளவுக்கு ஆழமாகவும் போய் கொண்டேயிருந்தது

அன்று தேதி ஒன்று என்பதால் சத்யன் அவனுடைய உழியர்களுக்கு சம்பளம் கொடுத்துவிட்டு வேலையோடு வீட்டுக்கு வந்துவிட்டான்....

வந்தவன் பால்கனியின் கதவை திறந்து அங்கே ஒரு சேரை போட்டு அமர்ந்துகொண்டு நிமிடத்துக்கு ஒருமுறை கீழே எட்டி பார்த்தபடி மான்சியின் வரவுக்காக காத்திருந்தான்...

மணி ஆறானது இன்னும் மான்சி வரவில்லை ஒருவேளை இன்று ஒன்னாம் தேதி என்பதால் பேங்கில் வேலை நிறைய இருந்ததோ என்று எண்ணியபடி அவள் வருகையை பார்த்திருக்க

மணி எட்டானது என்றதும் சத்யனுக்கு பதட்டம் அதிகரிக்க இவ்வளவு நேரம் இங்கே காத்திருந்ததற்கு பேசாமல் நாமே போய் பார்த்துவிட்டு வந்திருக்கலாமோ என்று கவலையாக இங்கும் அங்கும் நடக்க ஆரம்பித்தான்

அப்போது அவனுடைய செல் ஒலிக்க அவசரமாக அதை ஆன் செய்து பேசினான் ... எதிர் முனையில் பழக்கமில்லாத ஆண் குரல் கேட்க ஏதோ ராங் நம்பர் போல என்று நினைத்து அலட்சியமாக பேசினான்

“ சார் நீங்கதானே சத்யன் “ என்று எதிர் முனை ஆண் குரல் கேட்க

“ ஆமா சொல்லுங்க என்ன விஷயம்” என்றான் சத்யன்

“ சார் நாங்க போலீஸ் ஸ்டேஷனில் இருந்து பேசறோம் .. உங்களுக்கு மான்சின்னு யாரவது தெரியுமா” என்று எதிர் முனையில் கேட்டதும்

சத்யனுக்கு சப்தநாடியும் ஒடுங்கி விட்டது “ தெரியும் சொல்லுங்க சார் அவங்களுக்கு என்னாச்சு” என்று சத்யன் உட்சபட்ச பரபரப்பில் கேட்டான்

“ அவங்களுக்கு ஆபத்து ஒன்னும் இல்ல சார் ... ஆனா ஜி ஹச்ல அட்மிட் பண்ணிருக்கோம் உடனே வர்றீங்களா” என்று அந்த ஆண் குரல் நிதானமாக சொல்ல


சத்யனுக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது “ சார் ஆபத்தில்லேன்னு சொல்றீங்க அப்புறமா ஜி ஹச்ல அட்மிட் பண்ணிருக்கறதா சொல்றீங்க என்ன சார் நடந்தது” என்று கொஞ்சம் கோபமாக சத்யன் கேட்டதும்

“டென்ஷன் ஆகாதீங்க சார்... அவங்க பேங்கில் இருந்து கிளம்பி வீட்டுக்கு வர்றதுக்கு மின்சார ரயில்ல வந்திருக்கங்க .. அவங்களை பின்தொடர்ந்து எவனோ வந்து அவங்க ரயில் இருந்து இறங்கினதும் அவங்க பேக்கை அந்த ஆளு பிடிங்கியிருக்கான் இவங்க தராம போராடியிருக்கங்க இதனால அந்தாளு கத்தியால அவங்க வலது உள்ளங்கையில கிழிச்சிட்டான்... எங்களுக்கு உடனே தகவல் வந்தது ... நாங்க போறதுக்குள்ள அந்த பிக்பாக்கெட் எஸ்கேப் ஆயிட்டான் ... இவங்களுக்கு கையில் காயம் அதிகமா இருந்ததால நாங்க உடனே ஜி ஹச் அட்மிட் பண்ணிட்டோம்... சார் போதுமா தகவல் இனிமேலயாவது கிளம்பி வர்றீங்களா” என்று அந்த போலீஸ்காரர் நக்கலாக கேட்க

“ இதோ இன்னும் பத்து நிமிஷத்தில் அங்கே இருப்பேன் சார்” என்ற சத்யன் இணைப்பை துண்டித்துவிட்டு உள்ளே ஓடி கட்டியிருந்த லுங்கியை அவிழ்த்து எறிந்துவிட்டு பேன்ட்டை எடுத்து மாட்டிக்கொண்டு பீரோவில் இருந்து கத்தையாக பணத்தை எடுத்து பான்ட் பாக்கெட்டில் வைத்தபடி வெளியே வந்து கதவை பூட்டிகொண்டு லிப்ட்டை நோக்கி ஓடினான்

லிப்டிற்காக காத்திருக்காமல் படிகளில் இறங்க முற்பட்டவன் திடீரென்று ஞாபகம் வந்து மறுபடியும் மான்சியின் ஹவுஸ் ஓனர் பவானி வீட்டு கதவை தட்டினான் ...
உடனே கதவு திறக்கபட்ட யாரு என்றபடி பவானியம்மாள் எட்டி பார்க்க
சத்யன் அவளிடம் தனக்கு போனில் வந்த மொத்த விபரங்களையும் சொல்லி தன்னுடன் வருமாறு கூப்பிட்டான்
Like Reply
Nice bro
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)