மான்சி கதைகள் by sathiyan
#41
சத்யன் “ அடிப்பாவி இத்தனைநாளா சொல்லாம ஏமாத்திட்டயே” என்றவாறு அவள் வயிற்றில் முத்தமிட்டு “ மான்சி எனக்கு உன்னைய மாதிரியே இன்னோரு பையன் தான்டி வேனும், அப்புறமா ரெண்டு பொண்ணு பெத்துக்கலாம், அப்புறம் மறுபடியும் ரெண்டு பையன், அப்படியே ரெண்டு ரெண்டா மெதுவா முன்னேறலாம்” என்று சத்யன் குறும்பு பேச..

“ ஓய் சத்தி என்னவே எனக்கு காலம்பூரவும் புள்ளையார் வேஷம் போட்டு பாக்கப்போறியா,, அதான் நடக்காது, இது பொண்ணுதான், ஒன்னைய மாதிரியே ஒரு பொண்ணு அப்பறம் வேனா மத்ததெல்லாம் யோசிக்கலாம், விட்டா ஒரு பஞ்சாயத்து யூனியனே ஆரம்பிச்சுடுவ போலருக்கே” என்று அவனுக்கு பதில் சொன்னாள் மான்சி

மறுபடியும் மறுபடியும் அவள் முந்தானையை விலக்கி வயிற்றைத் திறந்து அதிசயத்தை பார்ப்பது போல் பார்த்த சத்யன் “ ம்ம் இந்த சந்தோஷத்தில் மனசு நெறஞ்சாலும் வயிறு பசிக்குதே மான்சி என்ன செய்யலாம்” என்று அவளை பார்த்து பரிதாபமாக கேட்க

அவன் அப்படி கேட்டதும் தாயாகப்போகும் மான்சிக்கு இயல்பான தாய்மை உணர்வு வ்ந்துவிட “ அய்யோ சத்தி மன்னிச்சுக்கோ எனக்கு மறந்து போச்சு,, வா வா சோறு போடுறேன்” என்று அவசரமாக கட்டிலை விட்டு இறங்கினாள் மான்சி


அன்று இரவு சத்யன் நிறைய அவளிடம் பேசினான், இத்தனை நாட்களாக அவளிடம் பேசவே நேரமில்லை, இத்தனை நாட்களாக இரவில் உடலால் இணைந்துவிட்டு களைத்தவர்கள், பகலில் உழைப்பையும், பணத்தையும் தேடி களைத்தார்கள்

மனைவியை அணைத்தபடி சத்யன் சொன்ன விஷயங்கள் அத்தனையும் மான்சிக்கு அவன்மீது இரக்க உணர்வை ஏற்படுத்தியது

“ மான்சி எனக்கு மொதல்ல மித்ராவ பிடிக்காமல் தான் கல்யாணம் பண்ணேன், கல்யாணம் ஆனப்பிறகு நம்மளுக்கு வாய்த்தது அவ்வளவுதான்னு நெனைச்சு அவகூட வாழ ஆரம்பிச்சேன், எத்தனையோ முறை அவ என்னை கேவலப்படுத்தும் போதெல்லாம் எனக்குள்ள இயல்பா இருக்கும் நம்ம நாட்டு கலாச்சாரம் தான் பொருத்து போக உதவுச்சு, பொண்டாட்டி சரியில்லேன்னு சாக்கு சொல்லிட்டு கட்டுன பொண்டாட்டிய விவாகரத்து பண்ணறத விட அவளை எப்படியவாது திருத்தி சேர்ந்து வாழனும்னு நெனைச்சேன் மான்சி,, அதனாலதான் எவ்வளவோ அவமானங்களை தாங்கினேன், அவ வயித்துல மனு உண்டானப்போ அந்த கருவை காப்பாத்த நான் பட்ட கஷ்டம் சொல்ல மாளாது, ஏன்னா குழந்தை பிறந்தா நிச்சயம் அவ குணங்கள் மாறும், நல்லபட புருஷன் குழந்தைன்னு வாழ ஆரம்பிப்பான்னு நெனைச்சு தான் மனு அவசியம் பிறக்கனும்னு நெனைச்சேன், ஆனா மனு பிறந்ததும் தான் அவளோட திமிர் அதிகமாச்சு மான்சி, எல்லாத்தையும் தாங்கிக்கொண்ட என்னால அவளை இன்னொருத்தன் கூட பார்த்ததும் தாங்கமுடியலை, அவங்களை கொலை செய்யத்தான் கத்தியை எடுத்தேன், அப்புறமா மனுவை மனசுல நெனைச்சு அதை கைவிட்டுட்டு கிளம்பி வந்துட்டேன், வந்த இடத்தில் உன்னை ஒரு தேவதையா பார்த்தேன், கல்யாணமும் பண்ணிகிட்டேன், ஆனா ஒவ்வொரு நிமிஷமும் என் அடி மனசுல அவ என்ன செய்வாளோ என்ற பயம் இருந்துகொண்டே தான் இருக்கு, ஏன்னா இன்னும் அவளுக்கும் எனக்கும் விவாகரத்து ஆகலை மான்சி, அந்த பயம்தான் எனக்கு, இதுக்காக நானா அவளைத் தேடிப்போகவும் பிடிக்கலை, அந்த ஆண்டவன்தான் நமக்கு ஒரு வழிவிடனும் மான்சி” என்று சத்யன் இரவெல்லாம் பலகதைகள் பேசினான்,

நடு இரவில் அவன் உறங்கினாலும், மான்சி உறங்காமல் அவனை அணைத்தபடி கிடந்தாள்,, சத்யன் சொன்ன விஷயங்கள் அவளையும் பயப்படுத்தியிருந்தது ,
அவளின் உடல் பலகீனம் மனதையும் ஆட்டுவிக்க, எதற்கும் அஞ்சாத தைரியமான மான்சி எங்கே சத்யனை மித்ராவிடம் இழந்துவிடுவோமோ என்ற பயத்தில் விடியவிடிய அவனை இறுக்கி அணைத்துக்கொண்டு கிடந்தாள்

மறுநாள் காலை எழுந்த சத்யன் தன்னை விடாமல் அணைத்துக்கொண்டு இருக்கும் மான்சியை விலக்க மனமின்றி அப்படியே கிடந்தான், பாட்டி வந்து கதவை தட்டியதும் மனமில்லாமல் அவளை எழுப்பினான்


மான்சியின் முகத்தில் இருந்த பயம் அவளின் மனநிலையை சொல்ல, அவளை தன் நெஞ்சோடு அணைத்த சத்யன் “ இதோபார் கண்ணம்மா யார் வந்தாலும், என்ன நடந்தாலும், என் உயிர் உன்மடியில் தான் போகனும், போகும், நீ என் உயிரில் கலந்தவள் மான்சி, உன்னை பிரிஞ்சா என் உயிரும் போயிடும், அதனால குழப்பமில்லாமல் இரு வர்றது வரட்டும் சமாளிப்போம்” என்று அவளுக்கு ஆறுதல் சொன்னான்

இத்தனை நாட்களாக மோகத்தின் வேகத்தில் தெரியாத மித்ராவின் சங்கதி இப்போது மான்சிக்கு பூதகரமாக தெரிந்தது, ஆனால் என்ன நடந்தாலும் சத்யனையும் மனுவையும் விட்டுத்தர முடியாது என்று மட்டும் உறுதியாக எண்ணிக்கொண்டாள்

அவர்களின் பயத்தை மெய்ப்பிப்பது போல அன்று மாலை ஒரு கார் வந்து அவர்களின் வீட்டு வாசலில் நிற்க்க, அதிலிருந்து மித்ராவின் மேனேஜர் இறங்கினார்

“ எனது அற்புதமான கவிதையின் வயிற்றில்..

“ ஒரு அழகுக் கவிதை!

“ இந்த கவிதைக்கு சந்தமாக நானும்..

“ சாசுவதமாக அவளும் இருப்போம்!

“ இதுபோன்ற குட்டிக் கவிதைகள்,,

" நிறைய எழுதுவதில் பெரும்..

" புரட்சிசெய்ய எனக்கு ஆசை!

“ ஆனால் இரண்டு கவிதைக்கு மேல்..

“ எனக்கு வேண்டாம் என்கிறாள் அவள்!
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#42
என் மனைவியாக மான்சி - அத்தியாயம் - 6

சத்யன் தனது வீட்டின் முன்பு கார் வந்து நின்றதை நிலத்தில் இருந்துப் பார்த்துவிட்டு குழப்பத்துடன் வீட்டை நோக்கி வந்தான், மேஸ்திரியிடம் வேலை செய்தவர்களுக்கான கூலியை கணக்கு பார்த்து கொடுத்துக்கொண்டிருந்த மான்சியும் கார் வந்ததை கவனித்துவிட்டாள்

அவள் நெஞ்சில் திக்கென்று நெருப்பு பற்றியது, இரவு பேசிய பேச்செல்லாம் நினைவில் வந்து வானுயரத்திற்கு உயர்ந்து நின்று பயமுறுத்தியது, தலைசுற்றுவது போல் இருக்க அங்கிருந்த தண்ணீரை முகத்தில் வாறியடித்து முகத்தை கழுவி தனது பலகீனத்தை போக்கியவள் நிமிர்ந்து வேதனையுடன் சத்யனை பார்த்தாள்

காரை நோக்கி போன சத்யன் ஏதோவொரு நினைவில் அப்படியே நின்று திரும்பி மான்சியைப் பார்த்தான், அவளும் அவனையே துயரத்துடன் பார்த்துக்கொண்டு இருந்ததைப் பார்த்ததும் சத்யன் நெஞ்சில் கோவென்று இரைச்சல் எழுந்தது, வா என்பது தனது இருகைகளையும் அவளை நோக்கி விரித்து நீட்டினான்,

அடிபட்ட குழந்தை தனது தாயை நோக்கி அழுகையுடன் ஓடுவதைப் போல மானசி அவனை நோக்கி வேகமாக ஓடினாள், மான்சி போய் அவன் கைகளுக்குள் போய் சரணடைந்ததும் இருவருக்குமே சற்று நிம்மதியாக இருக்க இருவரும் எதுவுமே பேசாமல் காரை நெருங்கினர்


காரில் இருந்து இறங்கி பாட்டியிடம் விசாரித்துக்கொண்டு இருந்த மேனேஜர், சத்யனைப் பார்த்ததும் வரவழைத்த புன்னகையுடன் அவனைப்பார்த்து “ எப்படி இருக்கீங்க சத்யன்?” என்ற சம்பிரதாய கேள்வியுடன் அவனை நெருங்கியவர், அவனுடன் இருந்த மான்சியையும் அவர்களின் நெருக்கத்தையும் பார்த்து ஒரு விநாடி தயங்கி நிற்க்க..

அவரின் பார்வையை புரிந்து மான்சி சத்யனிடமிருந்து விலகி நிற்க, சத்யன் அவள் விலகாதவாறு தோளைப்பிடித்து தன்னுடன் சேர்த்துக்கொண்டு “ வாங்க சார்,, நான் நல்லாருக்கேன், இவ என்னோட மனைவி,, பெயர் மான்சி” என்று மனைவியை அறிமுகம் செய்தவன் மான்சியிடம் திரும்பி, “ மான்சி பால் இருந்தா காபி போட்டு எடுத்துட்டு வா,, நான் இவர்கூட பேசிகிட்டு இருக்கேன்” என்று சொல்லி அவளை வீட்டுக்குள் அனுப்பிவிட்டு மேனேஜருடன் வீட்டுக்குள் போய் கூடத்தில் அமர்ந்தான்

“ சொல்லுங்க சார் என்ன விஷயமா வந்துருக்கீங்க” என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தான்

மேனேஜர் அவனையும் அந்த வீட்டையும் ஒரு முறை சுற்றிப் பார்த்துவிட்டு “ சிறிய வீடுதான், ஆனால் ரொம்ப நிறைவாக வாழுறீங்கன்னு தெரியுது சத்யன், உங்க வாழ்க்கை மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன் சத்யன்” என்று மேனேஜர் அக்கரையுடன் சொன்னதுதான் சத்யனுக்கு மூச்சே வந்தது,

மேனேஜர் பெரியதாக எந்த பிரச்சனையையும் சுமந்து வந்திருக்க மாட்டார் என்ற நிம்மதி வர “ உங்களோட ஆசிர்வாதத்திற்கு நன்றி சார், என்ன விஷயம் சொல்லுங்க, என்னால எதுவும் ஆகவேண்டுமா? ” என்று சத்யன் கேட்டான்

ஒரு நீண்ட பெருமூச்சுடன் தான் சொல்ல வந்ததை ஆரம்பித்தார் மேனேஜர் “ சத்யன் உங்களுக்கு முன்னாடியே தெரிஞ்ச விஷயம்தான் , மேடத்தோட அலட்சியத்தால் கம்பெனியில் பயங்கர நஷ்டம், அவங்க அப்பாவும் உதவமாட்டேன்னு சொல்லிட்டார், ஏற்கனவே மேடத்தோட தேவைகளுக்கு பணம் பத்தாமல் நிறைய கடன் வாங்கியிருந்தாங்க, அது உங்களுக்கு தெரியுமான்னு தெரியலை, ஆனா இப்போ அந்த கடனுக்காக வீட்டை அடமானம் போட்டுட்டாங்க, இப்போ கம்பெனி ஸ்டாப்ஸ்க்கு சம்பளம் ரெண்டு மாசமா பாக்கி இருக்கு, மேடம் போன வாரம் மங்களூர் போய் அவங்களோட தாய்வழிப் பாட்டிக்கிட்ட கம்பெனியை ரன் பண்ண பணம் கேட்டாங்களாம்,, அவங்க தரமறுத்துட்டாங்க, அதோட கோபமா வந்துட்டாங்க, ஆனா இப்போ கம்பெனியை கைமாத்த வேண்டிய நிலைமை சத்யன், அதுக்கு உங்க பேர்ல இருக்கும் உங்களோட ஏழு பர்ஸன்ட ஸேர்ஸை நீங்க மேடத்துக்கு எழுதி குடுக்கனும், அதுக்காகத்தான் வந்தேன் சத்யன்” என்று மேனேஜர் சொல்லவந்ததை சரியாக சொல்லி முடித்தார்

சத்யன் சிறிதுநேரம் அமைதியாக இருந்தான், அப்போது மனுவை இடுப்பில் வைத்துக்கொண்டு மான்சி ஒரு தட்டில் வைக்கப்பட்ட காபி டம்ளரோடு வர,, சத்யன் மகனை அவளிடமிருந்து வாங்கி மடியில் வைத்துக்கொள்ள மான்சி காபியை இருவருக்கும் கொடுத்தாள்
Like Reply
#43
காபி டம்ளரை எடுத்துக்கொண்ட சத்யன் “ நீ குடிச்சியாம்மா?” என்று மான்சியை பார்த்து கேட்க

“ ம் எடுத்து வச்சிருக்கேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே போனாள்

மேனேஜர் காபியை குடித்து முடித்ததும் “ இவ்வளவு தானே சார் வேறு எதுவுமில்லையே?” என்று சத்யன் கேட்க

ஒரு நிமிடம் தயங்கிய மேனேஜர் பிறகு ஒரு கவரை எடுத்து அவனிடம் நீட்டி “ இதுலயும் கூட உங்களோட கையெழுத்தை வாங்கிட்டு வரச்சொன்னாங்க,, மொதல்ல இதை சொல்ல எனக்கு தயக்கமா இருந்தது, ஆனா இப்போ உங்க குடும்பத்தை பார்க்கும்போது இதுதான் உங்களுக்கு முதல் தேவைன்னு நெனைக்கிறேன் சத்யன்” என்று மேனேஜர் சொல்ல

சத்யன் கவரை பிரித்து பார்த்தான், உள்ளே இருந்த கணமான பேப்பர்களை வெளியே எடுத்து பிரித்து படித்துப்பார்த்தான், ஒவ்வொரு பக்கமும் புரட்டும் போதும் அவன் முகம் பிரகாசமானது, மடியில் இருந்த மகனை கீழே இறக்கி விட்டு அந்த பேப்பர்களை தொடையின் மீது வைத்துக்கொண்டு சரசரவென கையெழுத்துப் போட்டுவிட்டு மடித்து கவரில் போட்டு மேனேஜரிடம் கொடுத்துவிட்டு அவரை கையெடுத்துக்கும்பிட்டான் சத்யன் 


அவன் கைகளை பற்றிய மேனேஜர் “ என்னை எதுக்கு கும்பிடுறீங்க சத்யன் உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும், உங்ககிட்ட விவாகரத்து வாங்காமல் கம்பெனியை வித்தா உங்களுக்கும் உங்க மகனுக்கும் பங்கு கொடுக்க வேண்டியிருக்குமேன்னு அவங்க சுயநலமா சிந்திச்சு எடுத்த முடிவு இப்போ உங்களுக்கு அவசியமான ஒன்றாக போய்விட்டது சத்யன், நீங்க கம்பெனி சம்மந்தப்பட்ட பேப்பர்களிலும் சைன் போட்டுட்டா நான் கிளம்புவேன் சத்யன்” என்று மேனேஜர் சொல்ல

சத்யன் அவர் கொடுத்த மற்ற தஸ்தாவேஜுகளில் முழுமனதுடன் கையெழுத்திட்டான்

மேனேஜர் கிளம்பி போனதும், சத்யன் பாட்டியிடம் மேனேஜர் கொண்டு வந்த மொத்த தகவலையும் சொல்ல, பாட்டிக்கு நிம்மதியாக இருந்தது, மான்சி கர்ப்பிணியாக இருக்கும் இந்த நேரத்தில் வந்த இந்த செய்தியால் அவருக்கு பெரும் நிம்மதி

மான்சி சத்யனிடம் எதுவும் கேட்கவில்லை, சத்யனும் எதுவும் சொல்லவில்லை, சாப்பாடு முடிந்து மகனை தோளில் போட்டு தூங்க வைத்த சத்யன், மகன் தூங்கியதும் அவனை மாமியாரிடம் கொடுத்துவிட்டு சத்யன் அறைக்குள் வந்தான்

மான்சி கட்டிலில் ஒருக்களித்து படுத்திருந்தாள், சத்யன் கட்டிலை நெருங்கி அவளைத் தூக்கி உட்கார வைத்து தன் நெஞ்சோடு சேர்த்து அணைக்க, மான்சியும் தனது முழு வலுவோடு அவனை இறுக்கிக்கொண்டாள், அவன் நெஞ்சில் மாற்றி மாற்றி முத்தமிட்டாள், பாதி அழுகையும் பாதி சிரிப்புமாக சத்தி சத்தி என்று பிதற்றினாள், நின்றிருந்த அவனை தன்னோடு இழுத்தபடி கட்டிலில் சரிந்தாள்

தன்மேல் கிடந்த சத்யனை புரட்டி விட்டு அவன்மீது ஏறி வயிற்றில் அமர்ந்து குனிந்து அவன் முகமெல்லாம் முத்தமிட்டாள்,, அது காதலால் கொடுத்த முத்தமா, அல்லது சத்யனின் விடுதலைக்கு கிடைத்த பரிசா, என்று இருவருக்குமே புரியவில்லை, அவளை தடுக்காமல் சத்யன் சுகமாக மல்லாந்து கிடந்தான்,

மான்சி கண்ணீர் வழிய வழிய முத்தமிட்டாள், சத்யனின் முகத்தில் அவளின் கண்ணீரும் எச்சிலும் ஒன்றாய் கலந்து பளபளத்தது, மாலை காரை பார்த்ததில் இருந்து அவள் மனம் தவித்த தவிப்பையெல்லாம் முத்தமாக, மொத்தமாக கொட்டினாள், அவனின் வாயோடு வாய் வைத்து உறிஞ்சி முத்தமிட்டபடியே அவளின் வலது கை அவன் கைலியை தள்ளிவிட்டு அடிவயிற்றை தடவி இன்னும் சற்று கீழே இறங்கி அங்கிருந்த ரோமங்களை வருடி விரலில் சுருட்டி வெடுக்கென்று இழுக்க, சத்யன் சிலிர்ப்புடன் அவளிடம் தன் வாயை கொடுத்துவிட்டதால் பேசமுடியாமல் “ ம்ம்ம்ம்” என்று முனங்கினான்,

மான்சி அவன் வாயிலிருந்து தன் வாயை எடுக்காமலேயே, கையை இன்னும் உள்ளே விட்டு அவனின் உறுப்பை எட்டிப்பிடித்தாள், அதன் முழுநீளத்தையும் தனது விரலால் அளந்தவள், மெதுவாக அசைக்க ஆரம்பித்தாள், அவளின் கைக்குள்ளே அடங்காமல் விரைத்து துடிக்க ஆரம்பித்தான் சத்யனின் போர் வீரன்
Like Reply
#44
சட்டென்று அவளை விலக்கிவிட்டு எழுந்து அமர்ந்த சத்யன், தன் வயிற்றில் இருந்தவளை அணைத்து “ மான்சி நீ இப்போ இருக்குற நிலைமையில எதுவும் வேண்டாம் மான்சி, உடம்பு இன்னும் கொஞ்சம் பலமானதும் வச்சுக்கலாம் மான்சி” என்று காதலோடு சொல்ல

ம்ஹூம் என்று தலையாட்டி மறுத்த மான்சி “ அதெல்லாம் ஒன்னும் ஆகாது சத்தி சேறு மெதிக்க வந்த வசந்தா அக்காகிட்ட கேட்டேன் அதெல்லாம் ஒன்னும் ஆகாதுன்னு சொன்னாங்க, எப்படினாலும் என் புள்ள என்னையப் போல வலுவாதான் உள்ள ஒக்காந்துருக்கும், அதனால நீ பயப்பட வேனாம், இப்போ நீ வர்றியா, இல்ல நான் மேல ஏறவா?” என்று மான்சி மிரட்டலாக கேட்க

சிரிப்புடன் அவளை அணைத்தபடியே கட்டிலில் விழுந்து புரண்டு அவளுக்கு மேலே வந்த சத்யன்,, அவள் கொடுத்த முத்தங்களை விட ஒன்றாவது அதிகமாக கொடுக்கும் முயற்சியில் இறங்கினான், அவனுக்கு மான்சியின் மனது புரிந்தது, சற்றுமுன் அவளிடம் இருந்த இறுக்கத்தை அவனும் பார்த்தான் தானே, வந்தவர் எங்கே குடும்பத்தை பிரித்துவிடுவாரோ என்ற பயத்தில் அவள் இருந்ததை இவனும் கவனித்தான்,

சத்யனுக்கு ஆச்சர்யமாக இருந்தது, எவ்வளவு வீரமான தனது மனைவி இவ்வளவு காதல் கோழையாக இருக்கிறாளே என்று எண்ணியபடி அவள் முதுகை தடவி ஆறுதல் படுத்திவிட்டு கட்டிலை விட்டு இறங்கி தலை வழியாக தனது லுங்கியை கழட்டி எறிந்தான்

அவனையே கண்கொட்டாமல் பார்த்த மான்சி, தனது உடைகளை தளர்த்தி அவனுக்கு வகைசெய்து கையை நீட்டி ‘ வா சத்தி” என்று கண்களில் மையலோடு கூப்பிட

நிறைவான மனதுடன் அவள்மீது படர்ந்தான் சத்யன், மான்சியே வையைவிட்டு அவன் உறுப்பை பற்றி தனக்குள் நுழைத்துக்கொண்டாள், பிறகு அவன் உதட்டில் முத்தமிட்டு “ ம்ம் ஆரம்பி சத்தி” என்று உத்தரவிட்டாள்

சத்யன் நிதானமாக இயங்கினான் அவனின் வேகத்தை மான்சியின் தாய்மை நிலை கட்டுப்படுத்தியது, ஆனால் மான்சி சற்று அதிகமான உச்சத்தில் இருந்தாள், அவனை முத்தமிட்டு, முதுகை தட்டிக்கொடுத்து, அவனுக்கு இணையாக இடுப்பை உயர்த்தி அவன் உறுப்பில் மோதி அவனை உற்ச்சாகப்படுத்தினாள்

அன்றைய உறவு முடிந்து நிறைவுடன் இருவரும் அணைத்துகிடந்த போது, சத்யன் தன் காதல் மனைவியின் கலைந்த கூந்தலை வருடியவாறு “ இன்னிக்கு ரொம்ப பயந்துட்ட தானே மான்சி,, மேனேஜரை பார்த்ததும் எனக்கும் பதட்டமாத்தான் இருந்துச்சு, ஆனா நான் பதட்டத்தை காட்டினா நீ இன்னும் பயந்து போய்டுவியோன்னு தவிச்சுப்போய்ட்டேன் மான்சி, நல்லவேளையா எந்த பிரச்சனையும் இல்லாம நிம்மதியாச்சு” என்ற சத்யன் ஒரு நீண்ட பெருமூச்சை விட


அவன் நெஞ்சில் இருந்த மான்சி “ ஆமா சத்தி ரொம்ப பயந்துதான் போனேன், எப்படியும் நாம கும்புடுற தெய்வம் நம்மளை காப்பாத்தும்னு ஒரு நம்பிக்கையோட இருந்தேன், அதனாலதான் உன்கிட்ட நான் எதையுமே கேட்கலை சத்தி,, எனக்கு உன்மேல ஆசை அதிகம் சத்தி, அது எப்படி சொல்றதுன்னு தெரியலை சத்தி, நாளைக்கே என் பொணம் போறாதா இருந்தா கூட மொதல் நாள் உன்கூட படுத்து எழுந்துதான் என் பொணம் போகும் சத்தி, உன்கூட ரொம்ப நாள் வாழனும்னு எனக்கு ஆசை, யாருக்காகவும் எதுக்காகவும் உன்னைய விட்டு கொடுக்க மாட்டேன், இன்னிக்கு அவ ஏதாவது பிரச்சனை பண்றதுக்கு அந்த ஆளை அனுப்பியிருந்தான்னு வை,, எங்கண்ணனுக்கு ஏற்ப்பட்ட கதிதான் அவளுக்கும்” என்று மான்சி மெதுவாக பேசினாலும் அவள் குரலில் இருந்த அழுத்தம் சத்யனை திகைக்க வைத்தது

தன்மீது மான்சி கொண்டுள்ள காதலின் அளவை நிர்ணயிக்க முடியாது என்றாலும், அந்த காதலின் வேகம் சத்யனை திகைக்க வைத்தது, இவளின் அன்புக்கு இணையாக இந்த உலகத்தில் எதுவுமேயில்லை என்று பெருமையாக நினைத்தான்,

மறுநாள் பொழுது இருவருக்கும் இனிமையாக விடிந்தது, ஒரு நல்ல இல்லறம் அவர்களுக்கு கிடைத்தது, செய்யும் தொழில் ஏற்ப்பட்ட முன்னேற்றம் அவர்களின் வாழ்க்கையில் எதிரொலித்தது, மான்சி ஆலிலை வயிறு வளர்ந்தது போலவே அவர்களின் வசதிவாய்ப்புகளும் வளர்ந்தது

மித்ராவின் பிரச்சனை முடிந்தது என்ற நிம்மதியில் சந்தோஷம் சற்று அதிகமாகவே அவர்களிடம் குடியேறியது, மான்சிக்கு சத்யனும் மனுவுமே உலகம் என்றானது, தனக்கு என்ன நேர்ந்தாலும் அவர்களுக்காகவே வாழ்ந்தாள்

அதிலும் மனுவின் மேல் தாய்ப்பாசத்தை கொட்டி வளர்த்தாள், சத்யனுக்கு பகலில் தாயாகவும் இரவில் தாதியாகவும் இருந்தாள்
Like Reply
#45
மான்சியின் வயிறு பெரியதாக ஆக ஆக சத்யன் அவளுடன் உறவை தவிர்த்தான்,, ஆனால் மான்சி அவனை விடமாட்டாள், சத்யனின் சிறு அசைவை கூட சரியாக கணக்கிட்டு செயல்பட்டாள், அவர்களின் உறவுக்கு அடையாளமாக அந்த வீட்டில் சந்தோஷம் மட்டுமே குடிகொண்டிருந்தது

மனைவின் ஆலோசனை இல்லாமல் சத்யன் விரலைக்கூட அசைக்க மறுத்தான், சூளையில் வேலை செய்பவர்கள் “ சரியான பொண்டாட்டி தாசன்ப்பா” என்று மறைமுகமாக கிண்டல் செய்யும் அளவிற்கு சத்யன் மான்சி பைத்தியமாக இருந்தான்

மான்சியும் தனது கணவனையும் மகனையும் தவிர உலகில் வேறு ஜீவராசிகளே இல்லை என்பதுபோல வாழ்ந்தாள், பாட்டிக்கு பயம், எங்கே இவர்கள் மீது ஊர் கண் பட்டுவிடுமோ என்று பயம், தினமும் இவர்களுக்கு திருஷ்டி சுற்றிப்போடுவதை தனது வழக்கமாக்கி கொண்டார்

சத்யன் கிடைத்த லாபத்தில் தனது காதல் மனைவிக்கு நகைகளும் புடவைகளும் வாங்கி பரிசளித்தான், ஆனால் அவளோ சத்யனை ஒரு முதலாளியாகவே மாற்றிவிட்டு தான் அவனுக்கு வேலைக்காரியாக இருப்பதே சிறப்பு என்பது போல் இருந்தாள்

சத்யனுக்கு தனது மனைவியை பார்த்தால் எப்போதுமே ஒரு பிரமிப்பாக இருக்கும்,, இவளால் எப்படி என்னையும் என் மகனையும் மட்டுமே உலகம் என்று வாழமுடிகிறது என்று நினைப்பான்,, அவளின் காதலின் முன்பு தனது காதல் வெறும் ஜீரோ என்று எண்ணிக்கொள்வான்

மான்சியின் பிரசவநாள் நெருங்க நெருங்க அவள் அலட்சியமாக வளையவந்தாள் என்றால் இவன் தவிப்புடன் அவள் பின்னாலேயே சுற்றினான், அவள் வேகமாக நடந்தால் கூட பயத்துடன் “ மெதுவா நடையேன்டி,, இப்புடி டங்கு டங்குன்னு நடந்தா உள்ள இருக்குறது வெளியவந்து குதிச்சிட போகுது” என்று கத்துவான்,, அவள் அலட்சியமாக சிரிப்பாள்,

தனது பெரிய வயிற்றை தூக்கிக்கொண்டு மகனை இடுப்பில் வைத்துக்கொண்டு அவள் நடக்கும் அழகுக்கு எப்போதும் சத்யன் ரசிகன்,, மகனை கொடு என்றால் கூட தராமல் தன் இடுப்பில் வைத்துக்கொண்டு சோறு ஊட்டுவாள்


‘ இரவில் வயிறு ரொம்ப இடிக்குதுடி’ இன்னிக்கு வேண்டாம் என்று சத்யன் ஏமாற்றத்துடன் சொன்னால்.... ‘இதோ இப்புடி பண்ணு சத்தி வயிறு முட்டாது’ என்று அவனுக்கு வழிசொல்லி கொடுத்து சந்தோஷத்தை கொடுப்பாள்

இரவு முழுவதும் அவளை அணைத்தபடி தூங்கியே பழக்கப்பட்ட சத்யனுக்காக அசையாமல் அப்படியே அணைத்துக்கொண்டு கிடப்பாள்
அவளை பிரசவத்திற்கு மருத்துவமனையில் அனுமதித்த போது துளிகூட கண்ணீர் விடாமல், அழுதுகொண்டிருந்த சத்யனுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு பிரசவ வார்டுக்குள் போனாள்,

அவள் பிள்ளை பெற்று கண்விழித்து பார்ப்பதற்குள் சத்யன் பலமுறை செத்து பிழைத்தான், அவன் ஆசைப்படி அழகான பெண் குழந்தையை பெற்று அவனுக்கு கொடுத்தவள் பிள்ளை அவன் ஜாடையில் இல்லாமல் தன்னைப்போல் இருக்கிறது என்று சினுங்கினாள்

மகளை கையில் ஏந்திய சத்யனுக்கு பெருமை பிடிபடவில்லை, தாய்மையுடன் பேரழகியாக தெரிந்த தன் மனைவியை அத்தனை பேர் முன்னிலையிலும் கூச்சமின்றி முத்தமிட்டான், மான்சியும் வெட்கமின்றி மறு கன்னத்தை அவனின் முத்தத்திற்காக காட்டினாள்

சத்யன் தன் மனைவி மகளுடன் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்தபோது மனுவுக்கு தங்கச்சியை மடியில் வைக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, சத்யன் தனது குட்டி மகளை மகன் மடியில் கிடத்திவிட்டு அவர்களை பார்த்து கண்கலங்கினான்

அழகான மனைவி, அறிவான மகன், குட்டி தேவதையாக மகள் என்று சத்யனின் வாழ்க்கை ஒரு வட்டத்துக்குள் வந்தது,,

என் கணவன் ஆணழகன் என்று மான்சி கர்வப்படும் அளவிற்கு சந்தோஷம் சத்யனை அழகனாக மாற்றியிருந்தது,,

மான்சியும் தாய்மையின் அழகில் பூரித்து, மஞ்சளும் குங்குமமும் முகத்தில் மிளிர சந்தனச்சிலையாக மாறியிருந்தாள்

ஒரு பூவைப் போல அவன் தன் மனைவியை தாங்கினான் சத்யன், குழந்தை பிறந்த பத்தாவது நாளே குழந்தையுடன் சத்யன் அறையில் வந்து படுத்துவிட்டாள் மான்சி, அவள் குழந்தைக்கு பாலுட்டுவதை மறைமுகமாக ரசிக்கும் சத்யன் அவள் கவனித்துவிட்டாள் என்றால் அசடுவழிய சிரிப்பான்

ஒரு வருடத்திற்கு முன்பு நீ சந்தோஷமாக வாழ்வாய் என்று யாராவது சொல்லியிருந்தால் சத்யன் நம்பியிருக்க மாட்டான், இன்று சந்தோஷத்தை மொத்த குத்தகைக்கு எடுத்திருந்தான்

வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் கணக்கு போட்டு வாழ்ந்தான் சத்யன்
Like Reply
#46
ஆனால் இறைவனின் கணக்கு எப்படி இருக்கும் என்று யாரறிவார்

“ வாழ்க்கையின் பாதையை நிர்னயிக்க யாரால் முடியும்!

“ கடவுளால் மட்டும்தான் என்று சொல்வது மடமை!

“ நமது பாவ புண்ணியங்களின் விகிதப்படி தான்"

“ வாழ்க்கையின் பாதை நிர்ணயம் செய்யப்படும்!

சத்யனுக்கு ஒரு மாத குழந்தையாக இருக்கும் மகளை கொஞ்சவும், ஒரு ரோஜாப்பூவை போல் சிரிக்கும் தங்கையை விட்டுவிட்டு ஸ்கூலுக்கு போகமாட்டேன் என்று அடம்பிடிக்கும் மகனை சமாதானம் செய்வும் தாய்மையில் ஜொலிக்கும் தனது மனைவியை காணவும் இருக்கும் வேலையைப் போட்டுவிட்டு அடிக்கடி வீட்டுக்கு ஓடி வந்தான்

தன் அழகு மகளுக்கு தன் தாயின் பெயரான மீனா என்ற பெயரைச் சேர்த்து, ரதிமீனாள் என்று பெயர் வைத்தான்,, அந்த பெயர் மான்சிக்கு ரொம்ப பிடித்துவிட, அதற்காக சத்யனுக்கு ஒரு அன்பு முத்தத்தை ஆசையோடு வழங்கினாள்

அவனுக்கு மகள் பிறந்ததும் இன்னும் கர்வம் அதிகமானது, தனது அழகான குடும்பத்தை நினைத்து சத்யன் கர்வப்படாத நாளே இல்லை, ஆனால் மகனையும் மகளையும் கொஞ்சும் தன் மனைவி தன்னை கண்டுகொள்ளாமல் இருக்கிறாளே என்ற ஏக்கமும், இரவில் மகளை நடுவே போட்டுக்கொண்டு தூக்கத்தில் பாலை கொடுத்துவிட்டு முந்தானையை சரியாக மூடாமல் உறங்கும் மனைவியைப் பார்த்துக்கொண்டு வெகுநேரம் விழித்திருப்பது சத்யனின் வழக்கமாயிற்று,

அன்றும் அப்படித்தான் மனைவி மகளுக்கு பால் கொடுக்கும் அழகை வேடிக்கை பார்த்தவன், “ ஏன் மான்சி பாப்பா ரொம்ப சின்னதா இருக்காளே இவ்வளவு பாலையும் குடிப்பா, நெறைய வீனாப் போகுதில்ல” என்று அவளின் மார்பையே உற்றுப்பார்த்துக் கொண்டு கேட்க

பட்டென்று முந்தானையை இழுத்து மூடியவள் “ ம் மிச்சத்தை கறந்து பால் சொஸைட்டி டிப்போவுக்கு ஏத்தப் போறேன்” என்று நக்கலாக பதில் சொன்னவள் “ ஓய் கண்ணு போடாத சத்தி, அப்புறம் புள்ளைக்கு மேலுக்கு ஏதாச்சும் வந்துரப்போவுது” என்று அவனை அதட்டினாள்

பிள்ளைபெற்று ஒரு மாதமே ஆனவளிடம் வேறு எதை கேட்கமுடியும் என்று ஆதங்கத்துடன் சூளைக்கு கிளம்பினான் சத்யன்

அன்று இரவு என்னேரம் தூங்கினானோ நடு இரவில் மகளின் அழுகுரல் கேட்டு கண்விழித்தான், பக்கத்தில் இருந்த மகளை பார்த்தான், படுக்கையை நனைத்துவிட்டு அழுதாள் ரதி, மான்சி அயர்ந்து உறங்கியதால் அவளை எழுப்ப மனமின்றி ,, சத்யன் மகளை கவனமாக தூக்கி வேறு துணியை மாற்றி படுக்க வைத்தான்

மறுபடியும் குழந்தை பசியால் சினங்க, சத்யன் மனைவியை பார்த்தான், இரவு பால் கொடுத்துவிட்டு ரவிக்கையின் கொக்கிகளை போடாமல் வெறுமென முந்தானையால் மூடிக்கொண்டு தூங்கினாள், குழந்தையை அவளருகில் நகர்த்தி முந்தானையை விலக்கி நீட்டிக்கொண்டிருந்த காம்பின் அருகே குழந்தையின் வாயை எடுத்துச்சென்றான்
இதற்குமேல் உன் உதவி தேவையில்லை என்பதுபோல் உடனே காம்பைக் கவ்விக்கொண்டு உறிஞ்ச ஆரம்பித்தது குழந்தை, குழந்தையின் உறிஞ்சுதலில் உணர்வு வந்த மான்சி கண்ணைத்திறவாமலே குழந்தையின் தலையை தன் மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டாள்

அடியில் இருந்த வலது மார்பில் குழந்தை பால் குடிக்க, மேலே இருந்த இடது மார்பின் காம்பில் பால் தானாக வழிந்தது, ஏற்கனவே இரண்டு மாதமா காய்ந்து கிடந்த சத்யனுக்கு அந்த காட்சி தலைக்குள் சுர்ரென்று ஏறியது, வேகமாக கையை நீட்டி மெதுவாக அவளின் மார்பை வருடிவிட்டான்

மான்சி கண்களை மூடியபடியே “ ஏவே சத்தி என்னப் பண்ணற,, கையை எடு” என்று அதட்ட, சத்யன் படக்கென்று கையை எடுத்துக்கொண்டான்

அந்த காட்சியைப் பார்த்தால் தானே மனசு அலை பாயுது, என்ற எண்ணத்தில் சத்யன் சுவர் பக்கமாக திரும்பி படுத்துக்கொண்டான்,, சற்று நேரத்தில் அவன் தோள்களை மான்சியின் விரல்கள் தடவியது,, அவன் தோள்களை தழுவியவாறு முதுகோடு தன் மார்புகளை வைத்து அழுத்தினாள், அவன் முதுகில் அழுந்திய அவளின் மார்புகளில் பால் கசிந்து சத்யன் முதுகை ஈரப்படுத்தியது


“ என்னா சத்தி தூக்கம் வரலையா?” என்று கிறக்கமாக கேட்டாள்

உடனே திரும்பி படுத்த சத்யன், “ ஆமாம் மான்சி முழுசா ரெண்டு மாசமாச்சுடி ஏதாவது கொஞ்சம் தயவுபண்ணேன் ப்ளீஸ்” என்று பரிதாபமாக கெஞ்சினான்
அவனை உற்றுப்பார்த்தவள் “ ம்ஹும் நமக்கு பத்து மாசத்துக்கு ஒரு புள்ள பொறக்கனும்னு விதி இருந்தா அதை யாரல மாத்தமுடியும், ம்ம் நடத்து சத்தி” என்று அவனுக்கு சிக்னல் கொடுக்க

அடுத்த விநாடியே அவள்மீது படர்ந்திருந்தான் சத்யன், அவனை இறுக்கி அணைத்த மான்சி “ என்ன வேனும்னு கேட்க வேண்டியது தானே சத்தி,, எனக்குத்தான் புள்ளைகள கவனிக்கவே நேரம் சரியா இருக்கு, நீ ஞாபகப்படுத்த வேண்டியதுதானே?” என்று கேட்க
Like Reply
#47
அவசரஅவசரமாக அவளை பிரித்துக்கொண்டிருந்த சத்யன் “ பாப்பா வந்து ஒரு மாசம் தானே ஆச்சு அதான் ரொம்ப சங்கடமா இருந்துச்சு” என்று அவளுக்கு பதில் சொன்ன சத்யன், மகள் வைத்த மீதியை உறிஞ்சி இவன் பசியை அடக்க முயன்றான்

தன் மார்பில் முட்டி மோதிக்கொண்டிருந்தவனின் தலைமுடியை கோதிவிட்டபடி “ அதெல்லாம் ஒன்னும் ஆகாது, நான் தாங்குவேன் நீ ஆரம்பி சத்தி” என்று கூறி அவன் முகத்தை இழுத்து உதட்டில் முத்தமிட்டு ஆரம்பித்து வைக்க, சத்யன் வேகமாக தொடங்கி, மூச்சு வாங்க வாங்க முடித்தான்

நீண்ட நாள் காத்திருப்பு என்பதால் சீக்கிரத்தில் அவனது ஆண்மை ஆக்ரோஷமாய் வெடித்துவிட களைப்புடன் அவள் பக்கத்தில் சரிந்த சத்யன்..திருப்தியான உறவில் மனநிறைவோடு அவனை அணைத்தாள் மான்சி


காலிக் குடமானாலும் சரியாமல் தன்மீது அழுந்தி கிடந்த அவள் மார்புகளை வருடியப் படி “ இப்போ பாப்பா எந்திருச்சு அழுதா என்னப் பண்றது மான்சி” என்று சத்யன் அப்பாவியாக கேட்க

“ பரவாயில்லையே இப்பவாவது மகளோட ஞாபகம் வந்துச்சே” என்று கிண்டல் பேசியவள் “ அதெல்லாம் அதுக்குள்ள ஊறிடும்” என்று மெல்லிய குரலில் கூறினாள்

“ அப்படின்னா தினமும் பாப்பாக்கு கொஞ்சம் போதுமா?” என்று ஆர்வமாய் கேட்டவனின் தலையில் நறுக்கென்று ஒரு குட்டு வைத்து

“ அடங்கமாட்டவே நீ” என்று சிரித்தாள் மான்சி,

மறுநாள் சூளைக்கு பலலட்சம் செங்கல் கேட்டு பெரியதாக ஒரு ஆர்டர் வர சத்யன் அதில் கவணம் செலுத்தினான், மான்சி சூளையறுகே வராவிட்டாலும் வீட்டில் இருந்தபடியே அவனுக்கு பெரிதும் உதவினாள்

காலையில் மகனை ஸ்கூலில் விட்டுவிட்டு வீட்டுக்கு வரும் சத்யன் சாப்பிட்டுவிட்டு சூளைக்கு போனான் என்றால் திரும்பி வீட்டுக்கு வர இரவு பத்து மணி ஆனது,,
குழந்தைக்கு ஆறு மாதம் ஆனதும் பாட்டியுடன் தனது அம்மாவையும் வீட்டிலேயே நிறுத்திவிட்டு மகளை அவர்களின் பொறுப்பில் விட்டுவிட்டு கணவனின் வேலையில் பங்கெடுத்துக்கொள்ள கிளம்பினாள்

குழந்தையை விட்டுவிட்டு அவள் வந்தது சத்யனுக்கு கஷ்டமாக இருந்தாலும், அவன் வேலையில் பாதி குறைந்த போது நிம்மதியாக இருந்தது

இருவரின் உழைப்பும் பணமாக வீடு வந்து சேர்ந்தபோது, எல்லாவற்றையும் மறந்து குடும்பத்தில் குதூகலம் நிலவியது, படித்த படிப்பு கொடுக்காத சந்தோஷத்தையும் நிம்மதியையும் உழைப்பு கொடுத்தது சத்யனுக்கு,
______________________________

ஒருநாள் சத்யன் சூளையின் அருகே அமர்ந்து கட்டை வியாபாரிக்கு இறக்கிய விறகுக்கு பணத்தை எண்ணி கொடுத்துக்கொண்டு இருந்தபோது அவன் மாமியார் வீட்டிலிருந்து வேகமாக வந்து “ தம்பி தபால்காரர் ஏதோ கவர் கொண்டு வந்திருக்காரு, நீங்கதான் கையெழுத்துப்போட்டு வாங்கனுமாம்,, மான்சி உங்கள கூட்டியார சொல்லுச்சு ” என்று பதட்டமாக சொல்ல

என்ன கவராக இருக்கும் என்ற குழப்பத்தோடு வீட்டை நோக்கி போனான், இவன் வீட்டை நெருங்கவும் மான்சி குழந்தையை தோளில் போட்டுக்கொண்டு வெளியே வரவும் சரியாக இருந்தது

“ என்னா சத்தி நோட்டீசு,, தபால்காரர் கோர்ட்ல இருந்து வந்திருக்குன்னு சொல்றாரு, எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை அதான் ஒன்னைய கூட்டியாரச் சொன்னேன் சத்தி” என்று கலவரமாக மான்சி சொல்ல

சத்யனுக்கும் குழப்பம்தான் கோர்ட் நோட்டீஸ் வருமளவிற்கு இப்போது எந்த பிரச்சனையும் இல்லையே,, பின்ன இது என்ன, என்ற யோசனையுடன் கையெழுத்துப் போட்டு கவரை வாங்கினான் சத்யன்
Like Reply
#48
ஒரு சிறு பதட்டத்துடன் கவரை பிரித்துப் படித்தவனின் முகத்தைப் பார்த்துவிட்டு, கையில் இருந்த குழந்தையை தன் அம்மாவிடம் கொடுத்துவிட்டு வேகமாக சத்யனை நெருங்கி அவன் கையைப் பற்றி “ என்னா செய்தி சத்தி, ஏன் இப்படி அதிர்ச்சியா நிக்கிற எதுனா சொல்லு சத்தி” என்று அவனை உலுக்கினாள்

அதிர்ச்சியில் இருந்து மீலாதவனாய் சத்யன் மான்சியைப் பார்க்க, அவனது வெறித்தப் பார்வை வயிற்றில் கலவரத்தை ஏற்படுத்த “ என்னாச்சு சத்தி” என்றாள் தீனமாக
கையில் இருந்த பேப்பரை அவளிடம் நீட்டி “ நம்மளை வாழவிடமாட்டான்னு நெனைச்சேன் மான்சி, அது சரியாப்போச்சு, சனியன் ஏன் அமைதியா இருக்குன்னு குழம்புனேன், ஆனா அதோட வேலையை காட்டிடுச்சு ” என்றவன் கலங்கிய கண்களுடன் மான்சியை இழுத்து தன் நெஞ்சோடு அணைத்தான்,,

இவள் எப்படி இதை தாங்குவாள் என்று சத்யனுக்கு பயமாக இருந்தது,, அன்று காலையில்தான் தன் வயிற்றில் அந்த குடும்பத்தின் மூன்றாவது வாரிசு உருவாகி வளர்வதை அழுத்தமாக முத்தமிட்டு அவனுக்கு சொல்லியிருந்தாள், இந்த சமயத்தில் இந்த பேரதிர்ச்சியை சொன்னாள் அவள் எப்படி தாங்குவாள் என்று சத்யனுக்கு வேதனையாக இருந்தது, எனக்காகவும் மனுவுக்காவும் இவள் எதையும் தாங்குவாள் தான், ஆனால் நாங்களே இல்லை என்றால் எப்படி தாங்குவாள், என்று எண்ணி குழம்பினான் சத்யன்

ஏதோ பெரிய பிரச்சனை என்று அறிவுக்கு உறைக்க,, அவனிடமிருந்து திமிறிக்கொண்டு வெளியே வந்தவள் அவன் சட்டையை கொத்தாகப் பற்றி “ என்னன்னு சொல்லு சத்தி, எனக்கு ஒன்னுமே புரியலை,, அவளுக்கும் நமக்கும் தான் ஒன்னுமேயில்லன்னு ஆயிருச்சே, நீதான் எல்லாத்துலேயும் கையெழுத்து போட்டு குடுத்துட்டியே சத்தி, அப்புறமா என்னப் பிரச்சனை” என்று மான்சி கண்ணீரை அடக்கியவாறு கேட்க

அவளிடம் இதைச்சொன்னால் தாங்குவாளா? என்ற குழப்பம் மேலிட மறுபடியும் அவளை தன் கைக்குள் இழுத்தான் “ பெரிசா ஒன்னுமில்லடா கண்ணம்மா,, எதுவாயிருந்தாலும் சமாளிப்போம், வாழ்க்கையில இவ்வளவு ஜெயிச்சோம், அந்த பேயை ஜெயிக்க எவ்வளவு நேரம் ஆகப்போகுது” என்று அவளுக்கு ஆறுதல் சொல்வதுபோல் தன்னை தேற்றிக்கொண்டான்

ஆனால் அவன் வார்த்தைகளில் இருந்த நம்பகத்தன்மை மான்சியை மேலும் கலவரப்படுத்தியது, அவன் சட்டை காலரைப் பற்றிக்கொண்டு “ அய்யோ எனக்கு ஒன்னுமே புரியலையே,, எதுவா இருந்தாலும் தயவுசெஞ்சு சொல்லு சத்தி” கண்ணீருடன் கெஞ்சினாள்



இனிமேல் அவளிடம் சொல்லாவிட்டால் தான் ஆபத்து என்ற முடிவுடன் “ மான்சி நம்ம மகன் மனுவை கொண்டு வந்து கோர்ட்ல ஒப்படைக்கச் சொல்லி கோர்ட் நோட்டீஸ் வந்திருக்கு மான்சி” என்று சத்யன் விஷயத்தை போட்டு உடைத்தான்,

அவனை புரியாமல் பார்த்த மான்சி “ ஏன் சத்தி,, ஏன் நம்ம புள்ளய கோர்ட்ல கொண்டு போய் ஒப்படைக்கனும்” என்று அடைத்தக் குரலில் கேட்டாள்

அவளுக்கு விளக்கிச் சொன்னால் தான் புரியும் என்ற எண்ணத்தில் அவளை அணைத்தபடியே திண்ணையில் வந்து அமர்ந்த சத்யன் அவள் கைகளை இறுக்கமாகப் பற்றி “ மான்சி நீ மொதல்ல ஒரு விஷயத்தை தெளிவா புரிஞ்சுக்கனும்,, உலகத்தில் தீர்வு இல்லாத பிரச்சனைன்னு எதுவுமில்லை, எல்லாத்துக்கும் ஒரு வழியிருக்கும்,, அதனால நான் சொல்லப் போறதை கேட்டு மனசு குழம்பாதே,, நான் இரண்டாவது கல்யாணம் பண்ணிகிட்டு மகனை கடத்தி வந்து நீயும் நானும் கொடுமை பண்றதாகவும், தன்னோட மகனை கொண்டு வந்து தன்னிடம் ஒப்படைக்கச் சொல்லி மித்ரா சென்னை ஐகோர்ட்ல ஆட்கொணர்வு மனு தாக்கல் பண்ணிருக்கா, அதனால வர்ற பத்தாம் தேதி மனுவை கொண்டு வந்து கோர்ட்ல ஒப்படைக்கச் சொல்லி கோர்ட்ல இருந்து நோட்டீஸ் வந்திருக்க, இவ்வளவு தான் விஷயம்” என்று சத்யன் சொல்லி முடிக்கும் போது அவனது கண்ணீர் கன்னத்தில் வழிய அதை மான்சி பார்ப்பதற்குள் அவசரமாக சட்டையில் துடைத்தான்

இப்பவும் புரியாமல் அவனைப் பார்த்த மான்சி “ என் புள்ளைய வா சத்தி கொண்டு வந்து ஒப்படைக்க சொன்னாக” என்றாள்

‘ஆமாம்’ என்று தலையசைத்து சத்யன் அவளை தன் தோளில் சாய்த்தான் “ ஆனா பிள்ளை புருஷன் யாருமே வேனாம்னு ஒதுக்கி வச்சவ இப்ப ஏன் இப்படி ஒரு நோட்டீஸ் குடுக்கனும், அதுதான் எனக்கு குழப்பமா இருக்கு” என்று சத்யன் கூற

“ ஏன் சத்தி நாம புள்ளைய குடுக்கலைன்னா கோர்ட்ல என்ன செய்வாங்க” என்றாள் மான்சி புரியாக் குழந்தையாக

“ கோர்ட்டை அவமதிச்ச குற்றத்துக்காக அபதாரம் போட்டு பிடிவாரண்ட் போடுவாங்க மான்சி” என்றான் சத்யன்

“ அப்படின்னா புள்ளைய தூக்கிகிட்டு இப்பவே நாம எங்கயாவது போயிடலாம் சத்தி” என்றாள் மான்சி குரலில் உறுதியுடன்

அந்த சூழ்நிலையிலும் சத்யனுக்கு அவளை நினைத்து பெருமையாக இருந்தது,, இத்தனை நாள் உழைத்து சம்பாதித்த அத்தனையையும் விட்டுவிட்டு புள்ளைய தூக்கிகிட்டு எங்காவது போய்டலாம் என்று அவளது வார்த்தை அவனுக்கு உள்ளத்தை குளிர செய்தது, இதோ இவளோட இந்த தூய்மையான அன்பு எந்த பிரச்சனையில் இருந்தும் தன்னை வெளியே கொண்டு வரும் என்ற நம்பிக்கை உண்டானது
Like Reply
#49
“ இல்ல மான்சி நாம என்ன தப்பு செய்தோம்,, ஏன் பயந்து ஓடனும்,, அவளை எதிர்த்துப் போராடுவோம் மான்சி, எப்பவுமே உண்மையும் நேர்மையும் தான் ஜெயிக்கும்,, கோர்ட் கொடுத்துள்ள கெடு இன்னும் ஐஞ்சு நாள் இருக்கு நான் அதுக்குள்ள யாராவது நல்ல வக்கீலா பார்த்து என்ன செய்யலாம்னு ஆலோசனை கேட்டு வர்றேன்,, இன்னிக்கு நைட் சென்னைக்கு கெளம்புறேன் மான்சி” என்ற சத்யன் மனைவியை அணைத்தபடியே வீட்டுக்குள் நுழைந்தான்

அன்று முழுவதும் மான்சி பச்சைத்தண்ணி கூட குடிக்கவில்லை, ரதிக்கு பசியாற்றவில்லை, தன் வயிற்றில் இருக்கும் கருவுக்கு உணவளிக்கவில்லை, பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த மனுவை தூக்கி மடியில் வைத்துக்கொண்டு கண்களில் வழியும் கண்ணீரைக் கூட துடைக்காமல் பித்துப்பிடித்தவள் போல் அப்படியே அமர்ந்திருந்தாள் , அவள் அம்மாவும் பாட்டியும் கூறிய ஆறுதல் மொழிகள் எதுவுமே அவள் காதுகளில் விழவில்லை

தனக்கு தெரிந்த ஒருவரிடம் சென்று கோர்ட் நோட்டீஸ் விஷயமாக ஆலோசனை கேட்டுவிட்டு வீட்டுக்கு வந்த சத்யன் மான்சியின் நிலையைப் பார்த்து கலங்கினான், அவளை எவ்வளவு அணைத்து ஆறுதல் படுத்தினாலும் கண்ணீர் நிற்க்கவில்லை


திடீரென்று ஏதோ யோசனை தோன்றியவள் போல முகம் பளிச்சிட “ ஏன் சத்தி இப்போ நம்மகிட்ட எப்படியும் இருபது லட்சரூபாய்ககு சொத்து இருக்குன்னு அன்னிக்கு சொன்னியே, அதையெல்லாம் அவளுக்கு குடுத்துடு சத்தி, அவதான் பணமில்லாம கஷ்டப் படுறான்னு அந்த மேனேஜர் சொன்னாரே, அதனால பணத்தை வாங்கிக்கிட்டா புள்ளைய கேட்கமாட்டா சத்தி” என்று மித்ராவின் குணத்தை முழுவதும் தெரியாமல் உற்சாகமாய் பேசினாள் மான்சி

அவளின் பரிதாபமாகப் பார்த்த சத்யன் “ இந்த பணம் அவளோட ஒரு மாச செலவுக்கு ஆகாது மான்சி,, நிச்சயம் அவ வேற எதுக்கோதான் இந்த பிரச்சனையை கிளப்பியிருக்கா,, மொதல்ல அது என்னன்னு பார்க்கலாம்,, நீ கொஞ்சம் தைரியமா இருந்தாத்தான் எனக்கு நிம்மதியா இருக்கும் மான்சி, நீ அழாம தைரியமா இரும்மா ப்ளீஸ் ” என்று சத்யன் வேண்டிக் கேட்க

அதற்கும் கண்ணீருடனே தலையசைத்தாள் மான்சி

அன்று இரவு சத்யன் சென்னைக்கு கிளம்பினான்,, வாசல் வரை வந்த மான்சி அவன் கைகளைப் பற்றிக்கொண்டு “ சத்தி எனக்கு என் புள்ள வேனும் சத்தி, அவனுக்காக நான் எதையும் இழக்கத் தயார் சத்தி, என் புள்ளைய யாரும் என்கிட்ட இருந்து பிரிக்காம பாத்துக்க சத்தி” என்று கண்ணீருடன் வேண்டினாள்

அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று சத்யனுக்கு புரியவில்லை, சிறு வயது மகன் என்றால் தாயுடன் இருக்கும்படி தான் கோர்டில் தீர்பாகும் என்ற உண்மையைச் சொல்லி அவளை கலவரப்படுத்தாமல் “ எல்லாம் நல்லதே நடக்கும் மான்சி, நீ தைரியமா இரு ” என்றவன் அவள் வயிற்றில் கைவைத்து “ இதுக்காவது ஏதாச்சும் சாப்பிடு மான்சி” என்று சொல்லிவிட்டு கிளம்பினான்

அவன் கண்ணைவிட்டு மறையும் வரை அங்கேயே நின்றவள், மனு வந்து புடவைத் தலைப்பைப் பிடித்து இழுத்து “ அம்மா பசிக்குது” என்றதும், அவனை வாறியெடுத்து நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள்

மனுவுக்கு சாப்பாடு ஊட்டிவிட்டு,, ரதிக்கு பால் கொடுத்துவிட்டு பெரியவர்களுக்கும் சாப்பாடு கொடுத்தாள், பிள்ளைகளை பக்கத்தில் போட்டுக்கொண்டு உறங்கியவளுக்கு இரவெல்லாம் கொடும் கனவுகள், பாதி இரவில் எழுந்து அமர்ந்து மனுவைத் தூக்கி தன் நெஞ்சில் போட்டுக்கொண்டு தட்டியபடி விடியவிடிய விழித்திருந்தாள்

மறுநாள் மான்சிக்கு எந்த வேலையும் ஓடவில்லை,, சத்யன் கொடுத்துவிட்டு போன செல்போனையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள், அன்று மாலை ஆறு மணிக்கு சத்யனிடமிருந்து போன் வந்தது, அவசரமாக ஆன்செய்து காதில் வைத்தவள் “ சொல்லு சத்தி நீ பாத்த வக்கீலு என்னா சொன்னாரு?” என்று கேட்டாள்

எதிர் முனையில் சிறிதுநேர அமைதிக்குப் பிறகு “ நான் இப்போ வீட்டுக்குத்தான் வரப்போறேன் மான்சி,, ரயில்வேஸ்டேஷனில் தான் இருக்கேன், வீட்டுக்கு வந்து விஷயத்தை சொல்றேன்,,என்றவன் “ நீ சாப்பிட்டயா மான்சி” என்று அக்கரையுடன் கேட்டான்

“ அட சாப்பாடு என்னா சாப்பாடு, ஒருநாள் சாப்பிடலைன்னா செத்தாப் போயிடுவேன்,, மொதல்ல நம்ம புள்ளைய பாதுக்குற வழியப் பாரு சத்தி,, சரிசரி நீ கிளம்பி வா,, வந்து என்ன நடந்துச்சுன்னு சொல்லு ” என்று கூறி இணைப்பை துண்டித்தாள்

மறுநாள் காலை சத்யன் வந்து சொல்லப்போகும் செய்திக்காக இரவிலிருந்து விழித்துக் கிடந்தாள் அந்த தாய்




" அம்மா "

" இந்த வார்த்தைக்குத் தான் எவ்வளவு சக்தி"

" உச்சரிக்கும் போதே எனது உயிர் சிலிர்த்து..

" விழியோரத்தில் நீராய் கசியும் அன்பு!

" என் தாயின் வார்த்தைகளுக்கு...

" ஒரு தனி மொழியை உருவாக்கி...

"அந்த மொழிக்கு ஒரு பெயர் வைத்தால்..

" அந்த மொழியின் பெயர்தான் அன்பு!

" ஆயிரம் தலையணைகளை அணைத்துக்கொண்டு தூங்கினாலும்..

" என் தாய்மடி போல் இன்பம் எதிலும் இல்லையே!

" ஆம் நான் படுத்துக்கொண்டு சொர்கத்தை காண்பேன்"

" என் தாயின் மடியில்!
Like Reply
#50
என் மனைவியாக மான்சி - அத்தியாயம் - 7
மறுநாள் காலை சத்யன் தனது வீட்டுக்கு வந்தபோது, வீடே ஏதோ துக்கம் நடந்த வீடுபோல் இருந்தது, குளித்து முடித்து எப்போதும் கூந்தலில் பூவும் முகத்தில் மஞ்சள் குங்குமமும் மிளிர நடை பயிலும் மான்சி, இன்று ஒரு சோகப் பதுமையாக காட்சியளித்தாள்

சத்யன் குளித்துவிட்டு வரும்வரை யாரும் எதுவும் கேட்கவில்லை,, ஈரத்தலையை துடைத்தபடி வந்தவனை ஏறிட்ட மான்சியிடம் “ மான்சி சாப்பிட ஏதாவது இருக்கா,, ரொம்ப பசிக்குது” என்று சத்யன் பரிதாபமாக கேட்க

பட்டென்று முகம் மாற “ சத்தி நேத்து நீ சாப்பிட்டயா?” என்று கேட்டாள் மான்சி

அவள் முகத்தைப் பார்க்காமல் வேறுபக்கம் திரும்பிய சத்யன் “ இல்லம்மா, இங்கே அங்கேன்னு அலையவே சரியா இருந்துச்சு, ரெண்டு மூணு கூல்டிரிங்ஸ் தான் வாங்கி குடிச்சேன்” என்று சத்யன் தெம்பில்லாக் குரலில் கூறிய அடுத்த நிமிடம்

அவன் நெஞ்சில் சாய்ந்த மான்சி, “ ஏன் சத்தி நமக்கு மட்டும் இப்படி நடக்குது,, நீ ஏதாச்சும் சாப்பிட்டுருக்கலாம்ல ” என்று மான்சி குலுங்கி அழுதாள்


அவள் முதுகை வருடிய சத்யன் “ இங்க நீங்க எல்லாரும் கண்டிப்பா சாப்பிட்டிருக்க மாட்டீங்க, அப்புறம் எனக்கு மட்டும் எப்புடி மான்சி சாப்பிட மனசு வரும்” என்று சத்யன் உருக்கமாக பேச

அப்போது “ ஏய் மான்சி மொதல்ல தம்பிக்கு சோத்தைப் போடு, மத்ததெல்லாம் பொறவு பேசலாம்” என்று மான்சியின் அம்மா அதட்டலாக சொல்லிவிட்டு இடுப்பில் பேத்தியை வைத்துக்கொண்டு கண்ணில் வழிந்த நீரை முந்தானையால் துடைத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினாள்

உடனே சுதாரிப்புடன் விலகிய மான்சி சத்யனின் கையைப் பற்றி இழுத்தபடி சமையலறைக்கு போனாள், அவன் தோளை அழுத்தி உட்கார வைத்துவிட்டு “ இரு சத்தி சோத்தைப் போட்டு எடுத்துட்டு வர்றேன்” என்று போனாள்

சில நிமிடங்களில் கையில் சாப்பாட்டுத் தட்டுடன் வந்தவள் அவன் எதிரே அமர்ந்து சாதத்தைப் பிசைந்து “டிபன் எதுவும் செய்யலை, அதனால காலையில மனுவுக்கு சாப்பாடு குடுக்க சோறு குழம்பே செய்துட்டாங்க அம்மா,, ம் வாயை திற சத்தி” என்று கையில் சோற்று உருண்டையுடன் அவன் வாயை நெருங்கினாள்

மனைவியின் கைச்சோற்றுக்காக வாயைத்திறந்த சத்யன், தொண்டை அடைக்க அடைக்க சோற்றுடன் கண்ணீரையும் சேர்த்து விழுங்கினான், அவசரஅவசரமாக அவனுக்கு சோற்றை ஊட்டிய மான்சி, அவனையும் மீறி அவன் கண்களில் வழிந்த கண்ணீரைப் பார்த்து “ வேனாம் சத்தி நீ அழுவாத, நீ அழுதா நா சுத்தமா தாங்கமாட்டேன், வேனாம்லே” என்று சொல்லும்போதே அவளுக்கும் கண்ணீர் மடைதிறக்க, சத்யன் அவள் கைகளை எடுத்து தன் கன்னங்களில் ஒற்றிக்கொண்டு குலுங்கினான்
Like Reply
#51
இருவரின் கண்ணீர்த்துளிகளும் கீழேயிருந்த சாப்பாட்டுத் தட்டில் சொட்டியது, ஓரளவுக்கு கட்டுக்குள் வந்த சத்யன் தட்டை எடுத்து சாதத்தை பிசைந்து மனைவிக்கு ஊட்டினான், அவனுடைய அன்போ,, அவளின் வயி்ற்று பசியோ, எதுவோ ஒன்று அவன் கொடுத்த சோற்றை மறுக்காமல் உண்ண வைத்தது
தட்டில் இருந்த சோறு காலியாக, சத்யனே எழுந்து போய் மறுபடியும் சோற்றைப் போட்டுக்கொண்டு வர, இருவரும் மாற்றி மாற்றி சாப்பிட்டனர்,, சாப்பிட்டு முடித்து சத்யன் தன் தோளில் இருந்த ஈரத்துண்டால் மனைவியின் முகத்தை துடைத்துவிட்டு அவளை அணைத்துக்கொண்டு தன் அறைக்கு போனான்

அவளை கட்டில் அமர்த்திவிட்டு சத்யன் தரையில் அமர்ந்து அவள் மடியில் தலைசாய்த்து அவளின் இடுப்பை கைகளால் சுற்றிவளைத்துக் கொண்டான்,,
தன் மடியில் சாய்ந்த சத்யனின் தலைமுடியை தனது விரல்களால் அலைந்தவள்

“ இப்ப சொல்லு சத்தி,, என்னதான் ஆச்சு, என் சக்களத்திக்கு என்னாதான் வேனுமாம், எதுக்கு இப்ப என் புள்ள மேல குறி வைக்குறா” என்று மான்சி ஆத்திரத்தை அடக்கிய குரலில் கூறினாள்

பேசுவதற்கு வசதியாக அவள் மடியில் கவிழ்ந்திருக்கும் தலையை புரட்டி பக்கவாட்டில் திருப்பிக்கொண்டு “ நான்தான் முன்னமே சொன்னேனே நம்மளோட பணமோ , அல்லது நானோ மனுவோ அவளுக்கு தேவையில்லை, அதைவிட பெரிசா எதுக்கோ ப்ளான் பண்றான்னு” என்றவன் நிமிர்ந்து அமர்ந்து “ ஆமாம் மான்சி அவளுக்கு மறுபடியும் கோடிக்கணக்கில் சொத்து கிடைச்சிருக்கு, ஆனா அந்த சொத்தை அனுபவிக்க மனு அவகூட இருக்கனும்” என்று சத்யன் சொல்ல

அவனை புரியாமல் பார்த்த மான்சி “ கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லு சத்தி,, அவ்வளவு பணம் எப்புடி கெடச்சுது” என்றாள்

எழுந்து அவளருகே கட்டிலில் அமர்ந்த சத்யன் “ அன்னிக்கு மேனேஜர் வந்தப்ப ஒரு விஷயம் சொன்னாரே, அவளோட தாய்வழி பாட்டிக்கிட்ட போய் மித்ரா பணம் கேட்டதும் அவங்க இல்லேன்னு சொன்னதும், இப்போ அவ பாட்டி இறந்து போய்ட்டாங்க,, ஆறு மாசம் ஆகுது, அவங்களோட சொத்துக்களில் மித்ராவோட பங்கை மனுவோடு பெயரில் எழுதி அவனுக்கு இருபத்தியொரு வயசு ஆகும்வரை கார்டியனா அவளை நியமிச்சுருக்காங்க, மனு பெரியவனா ஆகும்வரை அந்த சொத்தால வர்ற வருமானத்தை மித்ரா அனுபவிக்கலாம் ஆனா விற்க முடியாது, இந்த சொத்து விவரம் தெரிஞ்சதும் தான் இப்படியொரு வழக்கு பதிவு பண்ணிருக்கா, அவளோட குறி சொத்துதான், மனு இல்லை” என்று சத்யன் சொல்லிகொண்டு இருக்கும் போதே பாதியில் மடக்கிய மான்சி

“ இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும் சத்தி” என்றாள்

“ நான் நேத்து போனதுமே நேரா மேனேஜர் வீட்டுக்குத்தான் போனேன், அவர் சொன்ன தகவல்தான் இது , அவருதான் ஒரு வக்கீல் கிட்ட ஆலோசனைக்கு கூட்டிப்போனாரு” என்றான் சத்யன்

“ வக்கீல் என்ன சத்தி சொன்னாரு” என்று மான்சி ஆர்வமாக கேட்க 

சிலவிநாடிகள் தயக்கத்துக்குப் பிறகு “ அவர்கிட்ட எல்லாத்தையும் சொன்னேன், அவர் என்ன சொல்றார்னா,, மான்சி நம்ம கல்யாணம் ஒரு மைனஸ் பாயிண்ட் நமக்கு ,எப்படின்னா அவ எவ்வளவுதான் கெட்டு சீரழிஞ்சாலும் இன்னும் வேற எவனையும் கல்யாணம் பண்ணிக்காம இருக்குறது அவளுக்கு லாபம் , இப்போ அவ நம்ம கல்யாணத்தை ரொம்ப ஸ்ட்ராங்கா சொல்லியிருக்கறதால நாலு வயது மகன் இரண்டாவது திருமணம் செய்த அப்பாகிட்ட இருக்குறதை விட அவன் அம்மாகூட இருக்குறது தான் நல்லதுன்னு கோர்ட் நிச்சயம் சொல்லும்னு லாயர் சொல்றார் ,,ஆனா அவளைப் பற்றி, அவளோட நடத்தையைப் பற்றி நாம வழக்கு போட்டு, அவகிட்ட இருந்தா அவனோட வாழ்க்கை சீரழிஞ்சு போய்டும்னு வாதாடி மகனை நம்மகிட்ட ஒப்படைக்கச் சொல்லலாம், அதுவரைக்கும் நாம பொருத்துதான் ஆகனுமாம் மான்சி” என்று சத்யன் மெல்லிய குரலில் நடந்தவற்றை சொல்ல

அவனையே கூர்ந்துப் பார்த்த மான்சி “ அப்படின்னா நம்ம புள்ளைய கோர்ட்ல ஒப்படைச்சே ஆகனுமா சத்தி?” என்று கேட்கும்போதே அவளின் கண்கள் கண்ணீரை கொட்டிவிடும் போல் இருந்தது,

அவள் முகத்தை தன் கைகளில் ஏந்திய சத்யன் “ வேற வழியில்லை கண்ணம்மா,, நாம புள்ளைய ஒப்படைக்க மறுத்தா, நம்ம மேல சீட்டிங் கேஸ் போடுவாங்க,, நாம உள்ள போய்ட்டா அத்தோட நம்ம மகனை மறந்துட வேண்டியதுதான்,, இல்ல இல்ல மனுவை ஒப்படைக்க வேண்டிய இந்த நாலு நாளைக்குள்ள எதிர் வழக்கு பதிவு செய்யலாம்னு நெனைச்சாலும் , மாத்தி மாத்தி இப்படி வழக்கு போடுறதால , வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்வரை இரண்டு தரப்புக்கும் பொதுவா பிள்ளையை ஏதாவது விடுதியில் வச்சிருக்க கோர்ட்டே ஏற்பாடு செய்யவும் வாய்ப்பிருக்குன்னு வக்கீல் சொல்றாரு மான்சி, அது இன்னும் மோசம் கண்ணம்மா, மனுவோடு மனநிலையை ரொம்ப பாதிக்கும்னு வக்கீல் சொல்றாரு, அதனால் மனுவை கோர்ட்டில் ஒப்படைச்சே ஆகனும் மான்சி, இப்போதைய சூழ்நிலைக்கு அதுதான் வழி வேறு எந்த வழியும் கிடையாது,, வக்கீலும் மேனேஜரும் ரொம்ப நேரம் அலசி ஆராஞ்சு பார்த்துட்டாங்க கண்ணம்மா ” என்று சத்யன் தனது இயலாமையை வார்த்தைகளாக சொல்ல,, அந்த வார்த்தைகள் மான்சியின் நெஞ்சில் கூர் ஈட்டியாய் குத்தியது


சிறிதுநேரம் அங்கே ஒரு மயானத்தின் அமைதி நிலவ, இருவரும் ஒருவரையொருவர் தொட்டுக்கொண்டு தங்கள் மனதின் பலகீனத்தை மறைத்தவாறு அமர்ந்திருந்தனர்

அந்த அமைதியை மான்சியே கலைத்து “ அப்போ மனுவை அவ வீட்டுக்கு அனுப்புறதைத் தவிர வேற வழியில்லையா சத்தி?,, அப்புறம் அவனோட வாழ்க்கை என்னாகும் சத்தி, அவளோட நடத்தை அவன் மனசுல பதிஞ்சுட்டா என்னாகும் சத்தி” என்று மான்சி கலவரமாய் கேட்க

எதையோ சொல்லவந்து மறுபடியும் தயங்கிய சத்யனைப் பார்த்து “ என்ன விஷயம் சத்தி தயங்கமா சொல்லு, இதுக்குமேல இடியே விழுந்தாலும் நான் தாங்குவேன் சத்தி” என்று மான்சி அவன் கையைப்பிடித்து கெஞ்சினாள்
Like Reply
#52
“ அது வந்து மான்சி,, கோர்ட்ல தீர்ப்பு நமக்கு சாதகமா வர்ற வரைக்கும் நம்மபையன் நம்ம கண்கானிப்பில் இருக்கனும்னா, மித்ராவோட வீட்டுலயே மனுகூட யாரவது தங்கனும்னு சொல்றாரு மேனேஜர்,, ஆனா அதுக்கு மித்ரா நிச்சயம் சம்மதிக்க மாட்டா, நாம வேனா ஒரு மனு தாக்கல் பண்ணி கோர்ட்ல பர்மிஷன் கேட்கலாம்னு வக்கீல் சொல்றார், எனக்கும் அதுதான் நல்ல யோசனையா தோனுது, நம்ம வழக்கு ஜெயிச்சு தீர்ப்பு வரும்வரை நம்ம புள்ளைய பாதுக்காக்கனும் அதனால இதுதான் சரியான வழி, வக்கீலும் ரொம்ப நல்ல மனுஷன் வயசானவர், நம்ம நிலைமை புரிஞ்சு கரெக்டா எல்லாத்தையும் செயல் படுத்துறார், நேத்தே எதிர் நோட்டீஸ் தாக்கல்ப் பண்ண எல்லா ஏற்பாடும் செய்துட்டார், இன்னிக்கு தாக்கல் பண்ணிடுவாங்க, மேனேஜர் கிட்ட இருந்து எல்லாத்தையும் பார்த்துக்கறதா சொல்லிருக்கார் மான்சி, நீ தைரியமா இரு” என்று சத்யன் மான்சியிடம் தைரியம் கூற.

மான்சி அமைதியாக இருந்தாள், அதேசமயம் பற்றியிருந்த அவன் கையை அழுத்தமாக பற்றியிருந்தாள், சத்யனுக்கு அவள் அமைதி சங்கடத்தை ஏற்ப்படுத்த “ கலங்காதே மான்சி எல்லாம் நல்லபடியா முடியும்” என்றான்

அவன் கையை விடுவித்த மான்சி ஒரு பெருமூச்சுடன் “ கலக்கம் எல்லாம் இல்லை சத்தி, அடுத்து என்னப் பண்றதுன்னு யோசிச்சுக்கிட்ட இருக்கேன் ” என்று உறுதியான குரலில் மான்சி கூற

அவளை ஆச்சரியமாக பார்த்த சத்யன் “ எல்லாம்தான் ஏற்பாடு பண்ணிட்டேனே மான்சி, ஞாயித்துக்கிழமை மனுவைக் கூட்டிக்கிட்டு செங்கோட்டை எக்ஸ்பிரஸ்ல கிளம்ப வேண்டியதுதான் பாக்கி” என்றான் சத்யன்

அவனை ஏறிட்ட மான்சி “ இன்னும் எவ்வளவோ இருக்கு சத்தி,, என் தங்கச்சி புவனாவுக்கு போன் போட்டு அவளையும் அவ புருஷன் ராமுவையும் வரச்சொல்லனும்,, அவங்க வந்தா சூளையை கவனிச்சுக்குவாங்க, என் தாய்மாமாவுக்கு தகவல் சொல்லி புவனாகூட சூளையை பாத்துக்க சொன்னா தட்டாம செய்வாரு, நான் இன்னிக்கே ரதிக்கு தாய்பாலை மறக்கடிச்சுட்டு, வேற ஏதாவது ஊட்டி விட்டுட்டு பழக்கனும், ரதிய எப்படி கவனிச்சுகறதுன்னு பாட்டிக்கிட்டயும், எங்கம்மாகிட்டயும் சொல்லிட்டா அவங்க பாத்துக்குவாங்க” என்று மான்சி ஒரு முடிவுடன் சொல்லிகொண்டே போக,

அவளை நிறுத்திய சத்யன் “ எதுக்கு மான்சி இதெல்லாம்” என்றான்

அவனை நேராக பார்த்த மான்சி “ என்னா சத்தி இப்படி கேட்குற, மனு கூட நானும் நீயும் போகனும்ல, அவ வீட்டுல தங்கனுமே சத்தி, அதுக்கு ஏத்தாப்பல எல்லா ஏற்பாடும் பண்ணாத்தான நாம அங்க போய் இருக்குறத பாக்கமுடியும்” என்று மான்சி விளக்கிச் சொல்ல

சத்யன் முகத்தில் திகைப்புடன் “ நீயும் நானும் மித்ரா வீட்ல தங்க வேண்டாம் மான்சி, நான் திலகம்மாவ பார்த்து பேசிட்டு வந்திருக்கேன், அவங்க மறுபடியும் அவகிட்ட வேலைக்கு சேர்ந்து மனுவை பார்த்துக்கிறேன்னு சொல்லிருக்காங்க, நாம அவவீட்டுல தங்கவேண்டாம் மான்சி, அவ நம்மளை ரொம்ப கேவலமா நடத்துவா மான்சி மேனேஜரும் வக்கீலும் இதைத்தான் சொல்றாங்க” என்று சத்யன் சொன்னான்

அவனை கோபமாக பார்த்த மான்சி “ என்னா சத்தி இப்புடி சொல்ற, ஒரு வேலைக்காரம்மாவோட பாதுகாப்புல நம்ம புள்ளைய விட்டுட்டு நம்மளால நிம்மதியா இருக்கமுடியுமா, மேனேசருக்கும் வக்கீலுக்கும் என்னய்யா தெரியும், நமக்கு நம்ம புள்ள வேனும்னா எல்லாத்தையும் தாங்கித்தான் ஆகனும், நீவேனா அவ வீட்டுக்கு வரவேனாம் ,, நான் அவ வீட்டுலதான் தங்கப்போறேன், என் மகனை என் பாதுகாப்புலதான் வச்சுக்குவேன், அவ வீட்டுல தங்குறது உனக்கு அவமானமா இருந்தா நீ வராதே சத்தி, எதுவானாலும் நான் சமாளிச்சுக்கிறேன், கோர்ட்டுல தீர்ப்பு வர எத்தனை வருஷமானாலும் சரி நான் என் புள்ளையோடத்தான் கடையநல்லூர் வருவேன், அவ வீட்டுல அவ என்னை செருப்பால அடிச்சு நாய்த் தட்டுல சோறு போட்டாலும் நான் என் புள்ளைய விட்டுட்டு வரமாட்டேன் சத்தி, யார் சொன்னாலும் என் முடிவ மாத்திக்க மாட்டேன், ரெண்டாவது பொண்டாட்டி தங்கக்கூடாதுன்னு கோர்ட் சொன்னா, நான் அந்த வீட்டுல கக்கூஸ் கழுவு ஒரு வேலைக்காரியா இருக்ககூட சம்மதம்னு சொல்லுவேன் சத்தி, என் புள்ளைக்காக எதையும் தாங்குவேன் சத்தி,, இதுதான் என் முடிவு” என்று முடிவாக சொல்லிவிட்டு மான்சி கட்டிலில் இருந்து எழுந்திருக்க

சத்யன் ஒரு தெய்வத்தை தரிசிக்கும் பக்தனைப் போல அவளை பயபக்தியோடு பார்த்தான், அவளுக்கு தன்மீது எவ்வளவு பாசமும் காதலும் இருக்கிறது என்று சத்யனுக்குத் தெரியும், அப்படிப்பட்ட என்னையும் அவ பெத்த குழந்தையையும் விட்டுட்டு மித்ரா வீட்டுல போய் மனுவுக்காக ஒரு வேலைக்காரியா இருக்கிறேன்னு சொல்றாளே, இவளைப் போல ஒரு தாய் இருப்பாளா? அண்ணனின் தவறுக்காக அவனை கொலையே செய்தவள், இன்று மித்ரா பணத்துக்காக செய்யும் அநீதியை பொறுத்துக்கொண்டு இருக்கிறேன் என்று சொல்வதற்கு காரணம் வெறும் தாய்ப்பாசம் மட்டும் தான், தாய்ப்பாசம் ஒரு பெண்ணை இப்படிக்கூட மாற்றமுடியுமா?, மகனுக்காக என்னையே வரவேண்டாம் என்கிறாளே, எவ்வளவு கோபமும் வேகமும் உள்ளவ, இன்னிக்கு மகனுக்காக இவ்வளவு பொறுமையானவளா மாறிட்டாளே, இவளைப் போல ஒருத்திக் கிடைச்சதுக்கு நான் இன்னும் எத்தனை ஜென்மத்துக்கு புண்ணியம் செய்னும்னு தெரியலை ’ என்று வியப்புடன் எண்ணியவன் கதவை நோக்கி உறுதியுடன் போன மான்சியின் கையைப் பற்றி இழுத்து தன் நெஞ்சில் சாய்த்து இறுக்கி அணைத்துக்கொண்டான்
Like Reply
#53
அதுவரை உறுதியாக இருந்த மான்சி அவன் நெஞ்சில் விழுந்ததும், கோழையாகி குலுங்கினாள், சத்யன் அவளை அணைத்து ஆறுதல் படுத்தி “ என்னை வரவேண்டாம்னு சொல்றியே மான்சி, உன்னையும் மனுவையும் அங்க விட்டுட்டு நான் எப்படி நிம்மதியா இருப்பேன் மான்சி, எந்த கஷ்டமானாலும் ரெண்டு பேரும் சேர்ந்தே அனுபவிப்போம், அதுவும் நீ இருக்குற நிலைமையில என்னால உன்னை ஒருநாள் கூட அங்க தனியா விடமுடியாது கண்ணம்மா,, ஞாயித்துக்கிழமை கெளம்புறதுக்கு தேவையான எல்லா ஏற்பாடும் பண்ணிடு மான்சி, ஆனா ரதிக்கு ஆறுமாசம் தான் ஆகுது, அதுக்குள்ள அவளுக்கு தாய்ப்பாலை மறக்க வைக்குறதுதான் ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருக்கு மான்சி” என்று சத்யன் வருத்தமாக சொல்ல

“ அதுக்கு என்னப் பண்றது, எப்புடி இருந்தாலும் நான் இருக்குற நிலைமையில இன்னும் ரெண்டு மூனு மாசம்தான் குடுக்க முடியும்” என்றவள் அவனிடமிருந்து விலகி, “ சத்தி உன் போனை குடு புவனாவுக்கு போன் பண்ணலாம்” என்று கேட்க

“ இல்ல மான்சி இங்க இருக்குற சிவகிரி தான நானே நேர்ல போய் விஷயத்தை சொல்லி கூட்டிட்டு வர்றேன், நீ வேனா முத்துமாரிக்கு போன் பண்ணி அவ புருஷனையும் வரச்சொல்லு எல்லாரும் இங்கே இருந்து ஏவாரத்த பாக்கட்டும், நான் பார்ட்டிக்கிட்ட சென்னையில இருந்து போன் பேசிக்கிறேன்” என்றவன் புவனாவின் வீட்டுக்கு கிளம்ப தயாரானான்

சத்யன் மான்சியின் ப்ளான் படி எல்லாமே சரியாக நடந்தது, ஊரிலிருந்து வந்த புவனாவும் ராமுவும் தாங்கள் இருந்து சூளையை பார்த்துக்கொள்வதாகவும் தைரியமாகப் போய் மனுவுடன் வீடு திரும்புமாறு சொன்னார்கள்,

ஆனால் மான்சியின் நிலைமைதான் மோசமானது, ஆறுமாத குழந்தைகளுக்கு பாலை மறக்க வைத்ததன் பலன், இவளுக்கு பால் கட்டிக்கொண்டு கடுமையான காய்ச்சலில் போய் முடிந்தது, கழுத்துக்கு கீழே பாரமாய் வலியெடுக்க, அவள் அம்மாவும் பாட்டியும் ஏதேதோ கைவைத்தியம் செய்து அவளை எழுந்து உட்கார வைத்தார்கள்,
கிளம்பும் நாளன்று கடையநல்லூரில் பாதி மக்கள் ரயில்நிலையத்திற்கு வந்து சத்யன் மான்சி மனு ஆகிய மூவரையும் வழியனுப்பி வைத்தார்கள்,காய்ச்சலால் துவண்டு போன மனைவியை அழைத்துக்கொண்டு மகனுடன் ரயிலில் கிளம்பினான் சத்யன்,

அன்றைய பயணம் முழுவதும் மனைவியை மடியிலும், மகனை தோளிலும் படுக்க வைத்துக்கொண்டு விடியவிடிய கண்மூடாமல் விழித்து கிடந்தான் சத்யன், மான்சிக்கு மித்ரா வீட்டில் ஏற்படும் அவமரியாதையை அவள் பொறுத்துக்கொள்வாள், ஆனால் என்னால் எப்படி தாங்கமுடியும்?, என்ற கேள்வி அவனுக்குள் மறுபடியும் மறுபடியும் எழுந்தது

சென்னையில் இறங்கியதும், மான்சியின் உடலில் ஒரு நடுக்கம் பரவ, சத்யன் அவளை தோளோடு அணைத்துக்கொண்டு ரயிலைவிட்டு இறங்கினான், முதல்நாளே போன் செய்து மேனேஜர்க்கு தகவல் சொல்லியிருந்ததால், அவரும் வக்கீலும் இவர்களை அழைத்துச்செல்ல காரில் வந்திருந்தனர்

மான்சியைப் பார்த்து இருவருமே கையெடுத்துக் கும்மிட்டனர்,, பணத்துக்காக பெற்ற பிள்ளையை தத்து கொடுக்கும் இந்த காலத்தில், மூத்தாள் மகனுக்காக போராடும் இப்படியொரு தாயா என்ற வியப்பு அவர்களின் முகத்தில் வெளிப்படையாக தெரிந்தது

மேனேஜரின் வீட்டில் இவர்களுக்கு தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கு, இருவரும் குளித்து சாப்பிட்டு முடிக்கவும், வக்கீல் காரோடு வரவும் சரியாக இருந்தது, அனைவரும் காரில் ஏறி கோர்ட்டுக்கு போனார்கள்

மான்சி மனுவை மடியைவிட்டு இறக்கவில்லை, காரில் இருந்து இறங்கும்போது மகனைத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு இறங்கினாள், மனுவுக்கு என்ன புரிந்ததோ அவள் கழுத்தை விடாமல் கட்டிக்கொண்டான்,

கோர்ட் வளாகத்தில் இருந்த பெஞ்சில் சத்யன் மான்சி மனு மூவரும் அமர, மேனேஜரும் வக்கீலும், ஒரு அறைக்குள் நுழைந்தனர், நிறைய மக்கள் இப்படியும் அப்படியுமாக பரபரப்பாக போய் வந்தனர், மான்சி குனிந்த தலை நிமிரவில்லை,

அவள் முகத்தையே பார்த்த சத்யனுக்கு ஏதோ புரிவது போல் இருக்க, மான்சியிடமிருந்து மனுவை வாங்கிக்கொண்டு நடுங்கும் அவள் கையை அழுத்தமாகப் பற்றிக்கொண்டான், மான்சி தனது இரண்டு கைகளுக்குள் அவன் கையை வைத்து அழுத்திக்கொண்டு தனது பதட்டத்தை தணிக்க முயன்றாள்

அவள் தோள் பக்கமாக சரிந்த சத்யன் “ மான்சி பதட்டப்படாதே, நாம நம்மளோட மகனுக்காக வந்திருக்கோம், வேற எதைப்பத்தியும் யோசிக்காதே, பழசையெல்லாம் மறந்துடு மான்சி, தைரியமா இரு” என்று சத்யன் தைரியம் கூறி அவளுடைய பதட்டத்தை தணிவிக்க முயன்றான்
Like Reply
#54
கலங்கிய கண்களுடன் அவனை நிமிர்ந்து பார்த்த மான்சி “ இல்ல சத்தி இந்த கோர்ட்டு, இந்த மாதிரி போலீஸ்காரவுக, கறுப்புக் கோட்டு போட்ட வக்கீலுக, இந்த பரபரப்பு எல்லாமே எனக்கு ஏற்கனவே அறிமுகமானது தான் சத்தி, அன்னிக்கு எனக்கு குற்றம் செய்த உணர்வே இல்லை, கையில விலங்கை மாட்டிகிட்டு அசால்ட்டா ஒக்காந்திருந்தேன்,, ஆனா இன்னிக்கு அதெல்லாம் என் புள்ளைய பாதிக்குமோன்னு எனக்கு ரொம்ப பயமாயிருக்கு சத்தி,, அப்போ இருந்த தைரியம் இப்ப இல்ல சத்தி, ரொம்ப கோழைத்தனமா இருக்கு என் மனசு, எதுக்கெடுத்தாலும் முணுக்குனு கண்ணுல தண்ணி வந்துடுது, நா அன்னிக்கு செய்த வதம் இன்னிக்கு பூதம் மாதிரி என்னை பயமுறுத்துது, என்னையப் பத்தி யாருக்காச்சும் தெரிஞ்சா அப்பறம் மனுகூட என்னைய இருக்க விடமாட்டாங்க சத்தி ” என்று கண்ணீர் வழியாமல் அடக்கியபடி மான்சி மெல்லிய குரலில் சொல்ல

சத்யனுக்கு,, அவளுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை, அவள் சொல்வது முற்றிலும் உண்மை மான்சியைப் பற்றிய உண்மைகள் யாராவது மித்ராவிடம் சொல்லிவிட்டால் அதன்பிறகு இந்த வழக்கின் போக்கே மாறிவிடும், மறுபடியும் மகனை மித்ராவிடமிருந்து மீட்பது என்பது ஒரு அதிசய நிகழ்வுதான், ஆனால் இதையெல்லாம் சொல்லி, ஏற்கனவே கலவரத்தில் இருக்கும் மனைவியை மேலும் கலவரப்படுத்த விரும்பாத சத்யன் அவள் கையை ஆறுதலாக அழுத்தி

“ அதெல்லாம் யாருக்கும் எதுவும் தெரியாது மான்சி,, தெரியவும் வாய்ப்பில்லை, அப்படி உன்னைப்பத்தி மித்ராவுக்கு ஏதாவது தெரிஞ்சிருந்தா கோர்ட் நோட்டீஸ்ல அதை பத்தி குறிப்பிட்டு இருப்பாங்க, அப்படி எதுவுமில்லை, அதனால நீ தைரியமா இரு மான்சி, நான் உன்கூட இருப்பேன், நாமதான் ஜெயிப்போம் ” என்று சத்யன் சொல்லிகொண்டு இருக்கும்போதே மேனேஜர் அங்கே வர இருவரும் மேற்கொண்டு எதுவும் பேசிக்கொள்ளவில்லை,

சத்யனின் பக்கத்தில் அமர்ந்தவர் “ மித்ரா மேடம் வந்துட்டாங்க சத்யன்,, கார்ல வெயிட் பண்றாங்க, நான் உங்களுக்கு உதவியா இருக்குறது தெரிஞ்சிருக்கும் போலருக்கு, என்னை பார்த்தும் எதுவுமே பேசலை, கார் க்ளாசை ஏத்திவிட்டுட்டாங்க” என்று மேனேஜர் சிறு வருத்தத்துடன் கூறினார்

சத்யனுக்கு அவரின் நிலைமையைப் பார்த்து சங்கடமாக இருந்தது, பலவருடங்களாக மித்ராவின் கம்பெனியில் மானேஜராக இருந்தவர், இன்று கம்பெனி கைமாறியதும் வேலையிலிருந்து நின்றுவிட்டு, வீட்டில் பிள்ளைகள் வருமானத்தில் இருப்பவர், சத்யனின் நேர்மையான குணம் கம்பெனியில் வேலை செய்யும் காலத்தில் இருந்தே பிடித்துப்போய் எப்போதும் அவனிடம் தனிப்பட்ட அன்பு வைத்திருப்பவர், மனு சத்யன் மான்சியிடம் வளர்ந்தால் மட்டுமே ஒரு நல்ல பிள்ளையாக இருக்கமுடியும் என்ற காரணத்திற்காக மனு விஷயத்தில் முழுமூச்சாக இறங்கி இருப்பவர், அதிலும் மான்சியைப் பார்த்தபிறகு அந்த தாய்க்கு உதவவேண்டும் என்று உளமார நினைப்பவர், மொத்தத்தில் ஒரு நல்ல குடும்பத்தலைவர் நல்ல மனிதர்,

“ எங்களாலதான் சார் உங்களுக்கு இவ்வளவு கஷ்டம், ஆனா நீங்க இல்லேன்னா இந்த பிரச்சனையை நான் எப்படி சமாளிச்சுருப்பேனோ தெரியாது” என்று சத்யன் சொல்ல

“ அதெல்லாம் ஒன்னுமில்ல சத்யன், எனக்கும் மனு வயசுல ஒரு பேரன் இருக்கான், ப்யூச்சர்ல மனுவோட லைப் நல்லாயிருக்கனும் என்ற ஒரே விருப்பம் தான், அதுவுமில்லாம ஒரு நல்ல தாய்க்கு உதவிய மனநிம்மதி கிடைக்கும் அவ்வளவு தான் சத்யன்” என்று மான்சியை பார்த்துக்கொண்டே அவர் சொல்ல,, மான்சி அவரைப்பார்த்து கையெடுத்துக் கும்பிட்டாள்

ஒரு புன்னகையுடன் அதை ஏற்றுக்கொண்டவர், சட்டென்று பரபரப்புடன் எழுந்து நின்றார்,

ஆம் மித்ரா காரைவிட்டிறிங்கி அந்த வளாகத்தில் நடந்து வந்துகொண்டு இருந்தாள்,, அவளின் தோற்றத்தைப் பார்த்து சத்யன் திகைத்துப் போனான், முன்பு இருந்ததை விட பாதியாக மெலிந்த தோற்றம், எலும்பெடுத்த முகம், அதை மறைக்க அளவுக்கதிகமான ஒப்பனை, உடல் மெலிவால் அவள் போட்டிருந்த சல்வார்கம்மீஸ் கொஞ்சமும் பொருந்தாது தொளதொளவென்று இருந்தது, அவள் உடலில் எப்போதும் ஜொலிக்கும் வைரங்கள் இப்போது இல்லை, பலநாள் நோய்வாய்ப்பட்டவள் போல எந்தவிதமான பரபரப்பும் இல்லாத மிகவும் தளர்ந்த நடை, ஆனால் பழைய கர்வம் மட்டும் முகத்தில் மாறவேயில்லை,, இவர்களின் அருகே வந்தபோது நடை தடைபட நின்று நிமிர்ந்து சத்யனை ஏறிட்டாள், அவள் பார்வையில் ஒரு வெறுப்பு, பிறகு மான்சியிடம் திரும்பிய பார்வையில் ஒரு அலட்சியம், சத்யன் தோளில் இருந்த மனுவை அவள் பார்க்கவேயில்லை, நிமிடநேர பார்வைக்கு பிறகு நேராக போய்விட்டாள்

சத்யனுக்கு நம்பவே முடியவில்லை ,, என்னாச்சு இவளுக்கு, ஏன் இப்படி ஆயிட்டா, குடி அதிகமாகி உள்ளுருப்புகளை பாதிச்சுருச்சா? என்று அவன் யோசிக்கும்போதே, அவன் கையை சீண்டிய மான்சி “ சத்தி இவளா மித்ரா,, ஏன் இப்படியிருக்கா, என்னமோ சீக்குப் புடிச்ச கோழி மாதிரி இருக்காளே, இவ எப்படி நம்ம புள்ளைய பாத்துக்குவா,, இவளை பாத்துக்கவே நாலு ஆள் வேனும் போலருக்கே சத்தி” என்று ஒரு பெண்ணுக்கு பெண்ணாய் மான்சி பேசினாள்

“ ஏன் இப்படியானான்னு எனக்கு தெரியலை மான்சி, நமக்கு ஏன் அந்த கதை வந்த வேலையைப் பார்ப்போம்” என்று சத்யன் விட்டேற்றியாக பேச, அவன் மனநிலை புரிந்து மான்சி வேறு எதுவும் கேட்கவில்லை

சற்று நேரத்தில் இவர்களின் வக்கீல் வந்து இவர்களை அழைத்துக்கொண்டு ஒரு பெரிய அறைக்குள் செல்ல,, அங்கே கறுப்புக் கோட் அணிந்த நான்கு பேரும், ஒரு பெரிய மேசைக்குப் பின்னால் நீதிபதி ஒருவரும் அமர்ந்திருக்க மேசைக்கு வலதுபக்கம் இருந்த சேரில் மித்ரா அமர்ந்திருந்தாள்,
Like Reply
#55
சத்யமூர்த்தி என்பது நீங்களா?” என்று சத்யனைப் பார்த்து நீதிபதி கேட்க..

“ ஆமாம் சார்” என்றான் சத்யன்

மேசைக்கு இடதுபுறம் இருந்த சேரை அவனுக்கு உட்காரும்படி காட்டிவிட்டு “ ஏன்பா விவாகரத்து ஆகி ரெண்டாவது கல்யாணம் ஆனவன் பிள்ளையை அதோட தாய்கிட்ட ஒப்படைக்கனும்னு உனக்கு தெரியாதா” என்று நீதிபதி தனது கேள்வியை ஆரம்பித்து வைக்க

சத்யனுக்கு பதிலாக அவனது வக்கீல் பேச,, மித்ராவுக்கு பதிலாக அவளது வக்கீல் வாதம் செய்தார், சத்யனுடைய வக்கீல் மித்ராவின் கேவலமான நடத்தையை முன்நிறுத்தி பேச,, மித்ராவின் வக்கீல் அதை மறுத்து, சத்யனின் இரண்டாவது திருமணத்தைப் பற்றி பேசி எதிர்வாதம் செய்தார்

இரண்டு தரப்பையும் பேசவிட்டு சிறிதுநேரம் கவனித்த நீதிபதி சத்யனைப் பார்த்து “ உங்கள் முன்னால் மனைவியின் நடத்தை சரியில்லை என்று நீங்கள் சொல்லும் காரணத்தை சரிவர நிரூபித்தப் பிறகு உங்கள் மகனை அழைத்துச்செல்லாம், அதுவரைக்கும் குழந்தை தன் தாயோடு இருப்பதுதான் நன்று” என்றவர் சத்யனின் வக்கீலிடம் திரும்பி “ இவர் தரப்பு எதிர் நோட்டீஸ் தாக்கல் பண்ணிருக்கீங்களா?” என்று கேட்க

அவர் பணிவுடன் வணங்கி “ வெள்ளிக்கிழமை தாக்கல் செய்துவிட்டேன் ஐயா,, வரும் வழக்கு பதிமூன்றாம் தேதி விசாரனைக்கு வருகிறது” என்று பதில் சொன்னார்

“ அப்ப சரி நீங்க பிள்ளையை அழைத்துப்போய் உங்க பாதுக்காப்பில் வச்சுக்கலாம், இந்த வழக்கு ஒரு முடிவுக்கு வரும்வரை சத்யன் குழந்தையைப் பார்க்க நீங்க அனுமதிக்கனும்” என்று மித்ராவைப் பார்த்து கூறிவிட்டு நீதிபதி தனது இருக்கையில் இருந்து எழுந்துகொள்ள..

சத்யனின் வக்கீல் அவசரமாக அவரை நெருங்கி “ ஐயாகிட்ட இன்னோரு அனுமதி கேட்டு ஒரு மனு குடுத்திருக்கோம், அதை கொஞ்சம் பார்த்து அனுமதி வழங்கனும்” என்று கூற

நீதிபதி தனது உதவியாளர் போன்ற ஒருவரை பார்க்க, அந்த நபர் மேசையில் இருந்த கத்தைப் பேப்பர்களில் இருந்து தேடியெடுத்து ஒத்தைப் பேப்பரை எடுத்து அவரிடம் கொடுக்க, நீதிபதி அதை மேலோட்டமாக படித்துவிட்டு, மித்ராவைப் பார்த்து “ குழந்தை தன்னைவிட்டு பிரிந்து இருக்கமாட்டான் என்பதால் இந்த வழக்கு முடியும்வரை குழந்தையுடன் தங்குவதற்கு தனக்கு அனுமதி வேனும்னு சத்யன் கேட்டுருக்கார், முறையா இதுக்கு நாங்க ஒப்புதல் கொடுத்துதான் ஆகனும், ஆனாலும் உங்களின் பதிலை எதிர்பார்க்கிறேன்” என்று கேட்க

மித்ரா தனது வக்கீலைப் பார்த்தாள், அவர் மித்ராவின் காதருகே குனிந்து ஏதே ரகசியமாக சொல்ல, மித்ரா நிமிர்ந்து நீதிபதியிடம் “ சரி வந்து தங்கட்டும்,, நான் என் வீட்டில் அனுமதிக்கிறேன்” என்று சொன்னாள்

உடனே நீதிபதி எழுந்து தனது உதவியாளரிடம் ஏதோ சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினார், அவரின் உதவியாளர் சத்யன் மித்ரா இருவரிடமும் சில கையெழுத்துக்களை வாங்கிக்கொண்டு அவரும் போய்விட,

அதுவரை எல்லாவற்றையும் விழிவிரிய வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த மான்சியிடம் வந்த மித்ராவின் வக்கீல் “ குழந்தையை குடும்மா” என்று கையை நீட்ட,, மானசி கலவரத்தோடு சத்யனைப் பார்த்தாள்

உடனே அவளருகே வந்த சத்யன் “ சார் நாங்களும் அங்கேதானே வரப்போறோம்,, அதனால குழந்தையை நாங்களே அழைச்சிட்டு வர்றோம், நீங்க வற்புறுத்தாதீங்க குழந்தை அழப்போறான்” என்று சொல்ல, அவனுக்கு உதவியாக அவனது வக்கீலும் வந்தார்

மித்ரா எதுவும் சொல்லாமல் அந்த அறையைவிட்டு வெளியேற, பிறகு சத்யன் தன் மனைவி மகனுடன் வெளியே வந்து வக்கீலின் காரில் மித்ராவின் வீட்டுக்கு போனான்

மித்ரா வீட்டுக்கு வெளியே கார் நிறக்க, சத்யனும் மான்சியும் இறங்கிக்கொண்டார்கள், அவர்களுடன் இறங்கிய மேனேஜர் “ எந்த உதவி தேவைப்பட்டாலும் தயங்காம கேளுங்க சத்யன், குழந்தையையும் முக்கியமா உங்க மனைவியையும் இங்கே தனியா விட்டுட்டு ஒரு நிமிஷம் கூட எங்கேயும் போகாதீங்க, எது வேண்டுமானாலும் எனக்கு கால் பண்ணுங்க நான் வந்து பார்த்துக்கிறேன்,, நான் போய் உங்களோட பெட்டியை எடுத்துட்டு வர்றேன் சத்யன்,, டேக் கேர் சத்யன் ” என்று ஒரு தகப்பனைப் போல் அக்கரையுடன் பேசிவிட்டு அங்கிருந்து காரில் ஏறி கிளம்பிவிட்டார்

சத்யன் கால்கள் கூச மான்சியுடன் அந்த வீட்டின் வாசற்படியில் காலைவைத்தான், அங்கிருந்து வெளியேறிய நாள் அவன் கண்முன் நிழல் படமாக ஓடி மறைந்தது, மகனை தோளில் தாங்கி மனைவியின் தோளை அணைத்து சத்யன் அந்த வீட்டுக்குள் நுழைந்தபோது அவர்களை வரவேற்க அங்கே யாருமில்லை, சத்யன் வாசற்படியிலேயே நின்றான்

அப்போது உள்ளேயிருந்து ஓடிவந்த, சத்யனிடமிருந்து திலகம் மனுவை வாங்கிக்கொண்டு “ வாங்கய்யா, நேத்தே வந்து வேலையில சேர்ந்துட்டேன்,, வேலைக்கு யாருமே இல்லாததால நான் வந்து கேட்டவுடனே சேர்த்துக்கிட்டாங்க” என்றவள் மான்சியிடம் திரும்பி “ மகாலட்சுமி மாதிரி இருக்கீங்கம்மா,, நீங்களும் சத்யன் அய்யாவும் பலநூறு வருஷம் நல்லாருக்கனும்” என்று வாழ்த்தினாள்
Like Reply
#56
சென்னைக்கு வந்து முதன்முதலாக கிடைத்த வாழ்த்து மான்சி முகத்தை மலரச்செய்தது,

“ ஐயா இப்பத்தான் மித்ரா அம்மா மாடிக்கு போனாங்க, உங்களை நம்ம பழைய டிரைவர் தங்கியிருந்த அவுட்டவுஸ்ல தங்கச் சொன்னாங்க” என்று சொல்லிவிட்டு உள்ளேபோய் மறுபடியும் கையில் ஒரு சாவியுடன் வந்து சத்யனிடம் கொடுத்தாள்

சத்யன் நன்றி சொல்லிவிட்டு சாவியுடன் தோட்டத்தில் இருந்த அவுட்டவுஸ்க்கு போனான், கதவை திறந்து சத்யனும் மான்சியும் உள்ளே போனார்கள், எந்த பொருளும் இல்லாமல் வீடு துடைத்து வைத்தது போல் இருந்தது,

அவர்களின் பின்னாலேயே வந்த திலகம், ஒரு பாயை விரித்துவிட்டு “ இதுல உட்காருங்க,, நான் போய் குடிக்க தண்ணி கொண்டு வர்றேன்” என்று சொல்ல

அவசரமாக அவளை தடுத்த சத்யன் “ தண்ணி எல்லாம் வேண்டாம்மா,, எங்களுக்கு தேவையானதை வெளிய இருந்து வாங்கிட்டு வந்து குடுத்தாப் போதும்” என்று சொல்லிவிட்டு இரண்டு ஆயிரம் ரூபாய் தாளை திலகத்திடம் கொடுத்து “ யாரையாவது கூட்டிட்டு போய் எல்லாத்தையும் வாங்கிட்டு வாங்க” என்றான்

அந்த வீட்டில் எதுவுமே சாப்பிடக்கூடாது என்ற அவனின் மனஉறுதி புரிய பணத்தை வாங்கிக்கொண்டு “ சரிங்கய்யா இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லாத்தையும் வாங்கிட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு போனாள் திலகம்

மான்சி தரையில் அமர்ந்து கொண்டு வந்திருந்த பையில் இருந்து பிஸ்கட் பாக்கெட்டையும் தண்ணீர் பாட்டிலையும் எடுத்து வைத்துவிட்டு மகனை அழைத்து மடியில் வைத்துக்கொண்டு பிஸ்கட்டை ஊட்ட ஆரம்பித்தாள்

சற்று நேரத்தில் மேனேஜர் அவர்களின் பெட்டியை எடுத்துவந்து கொடுத்துவிட்டுப் போக, அவர் போன சற்றுநேரத்தில் ஒரு ஆட்டோவில் தேவையான பொருட்களுடன் திலகம் வந்து இறங்கினாள்,, இருந்த பொருட்களை வைத்து சிம்பிளாக சமையல் செய்து சாப்பிட்டனர்

சத்யன் மான்சி எதிர்பார்த்தது போல் மித்ராவின் தரப்பிலிருந்து எந்த பிரச்சினையும் வரவில்லை,, மகனை கேட்டுகூட அனுப்பவில்லை, மனு சத்யன் மான்சியிடமே இருந்தான், அன்று இரவு இருவரும் புரியாத குழப்பத்துடனேயே தூங்கினார்கள்

மறுநாள் காலை மனுவை மித்ரா தூக்கி வரச்சொன்னதாக தோட்டக்காரன் வர, அவனிடம் கொடுக்க மறுத்து மான்சியே மகனை தூக்கிக்கொண்டு மித்ரா வீட்டுக்கு போனாள்,, ஹாலில் அமர்ந்திருந்த மித்ரா மான்சியை ஏறெடுத்தும் பார்க்காமல் திலகத்திடம் ஏதோ மெதுவாக சொல்ல, திலகம் வந்து மனுவை வாங்கிக்கொண்டு, மித்ராவின் அருகே உட்கார வைக்க, அவளின் உருக்குலைந்த தோற்றத்தைப் பார்த்து குழந்தை மிரண்டது

பக்கத்தில் இருந்த மேசையிலிருந்து புதுய உடை மற்றும் குழந்தைக்குத் தேவையான நகைகள் எல்லாவற்றையும் எடுத்து திலகம் குழந்தைக்கு போட்டுவிட ,, ஏதுமறியா குழந்தை அதை குதூகலத்துடன் கொண்டாடியது,, ஆனால் குழந்தையின் கொண்டாட்டத்தை பார்த்து கூட மித்ராவின் முகம் மாறவில்லை, சோபாவில் தலைசாய்த்து விட்டத்தை வெறித்துக்கொண்டு இருந்தாள்

எல்லாவற்றையும் போட்டுக்கொண்டு குழந்தை மான்சியை நோக்கி ஓடிவந்தது, அப்போது சத்யனும் அங்கே வர, குழந்தையின் உற்சாகம் பலமடங்காகியது,, அவர்கள் அங்கே இருக்கும் போதே ஒரு பெரிய கார் வந்து நிற்க, அதிலிருந்து நான்கைந்து ஆண்கள் இறங்கி வீட்டுக்குள் வந்தார்கள்


வந்தவர்கள் மித்ராவிடம் ஏதோ பேசிவிட்டு சிலப் பேப்பர்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டு, அவள் கொடுத்த சில பேப்பர்களை வாங்கிக்கொண்டனர், மித்ரா திலகத்தை பார்த்து கண்ணசைக்க, திலகம் மான்சியிடமிருந்து மனுவை வாங்கி மித்ராவின் அருகில் உட்கார வைக்க, அந்த பெரிய மனிதர்களிடம் மித்ரா மனுவை அறிமுகம் செய்து வைத்தாள்,

அதில் ஒருசிலர் மனுவிடம் வேடிக்கையாய் பேச குழந்தை பதிலுக்கு பேசி சிரித்தது

வந்தவர்களில் ஒருவர் எழுந்து ஒரு லெதர் பையை எடுத்து மித்ராவிடம் கொடுத்து, “ இந்த ஏழுமாத வருமானமும் அதற்கான கணக்குகளும் இதில் இருக்கு, இனிமேல் மாதாமாதம் பணம் சரியாக உங்க கைக்கு வந்துடும்” என்று சொல்ல

மித்ரா நன்றிகூறி பெற்றுக்கொண்டாள்,, சற்று நேரத்தில் வந்தவர்கள் கிளம்பிவிட, மித்ரா பையுடன் மெதுவாக மாடியேறினாள்,, எல்லாவற்றையும் பார்வையாளர்களாக நின்று வேடிக்கைப் பார்த்த சத்யனும் மான்சியும் மகனின் உடலில் இருந்த உடை மற்றும் நகைகளை கழட்டி அங்கே சோபாவில் போட்டுவிட்டு மகனை தூக்கிக்கொண்டு தாங்கள் தங்கிருந்த அறைக்கு வந்தனர்

பெற்றப் பிள்ளையிடம் இப்படி கூட பாசம் பற்றுதலே இல்லாத ஒரு பிறவி இருக்குமா என்று இருவருக்குமே சந்தேகம் வந்தது, பணம் ஒன்றே குறிக்கோளாக வாழும் மித்ரா பெண்ணினத்திற்கே கேடு என்று எண்ணினார்கள்

அன்று முழுவதும் மித்ரா தனது அறையைவிட்டு வரவேஇல்லை என்றும்,, மாலை ஐந்து மணி வாக்கில் யார் யாரோ வந்து காலையில் வந்த பணத்தை வாங்கிக்கொண்டு போனதாகவும், பணம் பற்றாமல் மிச்சமிருந்த ஒரு காரையும் யாரோ எடுத்து போய்விட்டதாக திலகம் வந்து சொன்னாள்

அன்று இரவு மான்சியும் சத்யனும் நல்ல உறக்கத்தில் இருக்கும்போது திலகம் வந்து பதட்டமாக கதவை தட்ட,, சத்யன் தூக்கம் கலைந்து எழுந்து கதவை திறந்தான்,
அங்கே பதட்டத்துடன் திலகம் நின்றிருக்க, “ என்னாச்சு திலகாம்மா,, இந்த நேரத்துல வந்துருக்கீங்க” என்று சத்யன் குழப்பத்தோடு கேட்க

திலகம் பதட்டத்துடன் “ ஐயா மித்ராம்மாவுக்கு ரொம்ப உடம்பு சரியில்லை, நேத்து நைட்டு நெறைய குடிச்சாங்க, அப்புறமா யார் யாருக்கோ போன் பண்ணி பேசுனாங்க, அப்புறம் ரூம்ல போய் கதவை சாத்திகிட்டு எதைஎதையோ உடைச்சாங்க, நானும் தோட்டக்காரனும் போய் பார்த்தோம், கட்டிலைவிட்டு கீழே விழுந்து கிடந்தாங்க நாங்க தூக்கி தண்ணி குடுத்தோம் தண்ணி உள்ள இறங்கலை, அதான் டாக்டருக்கு போன் பண்ணிட்டு இங்க ஓடியாந்தேன்” என்று அவள் சொல்லிமுடிக்க..

சத்யனை விலக்கிக்கொண்டு மான்சி வெளியே வந்து “ அய்யோ கடவுளே, கைகாலை நல்லா சூடு பறக்க தேய்ச்சு விட்டீங்களா,, சூடா எதாச்சும் எடுத்துட்டு வாங்கம்மா நானும் கூட வர்றேன்” என்று கூறிவிட்டு பதட்டமாக மான்சி வெளியே போக..

சத்யன் அவள் கையை எட்டிப்பிடித்து தன்பக்கமாக இழுத்து “ நீ எங்கப் போற மான்சி,, எல்லாம் டாக்டர் வந்து பாத்துக்குவார், நீ உள்ள போய் தூங்கு “ என்று அதட்டி அவளை உள்ளே இழுத்தான்

அவன் முகத்தை திகைப்புடன் ஏறிட்டுப் பார்த்த மான்சி “ என்ன சத்தி இப்புடி பேசுற,, பாவம் சத்தி தனியா உயிருக்கு போராடிக்கிட்டு கெடக்கா,, இப்பப்போய் அலட்சியமா பேசுறயே, நீ வேனா வரவேனாம் என்னைய விடு சத்தி நான் போய் என்னாச்சுன்னு பாக்குறேன்” என்ற மான்சி அவன் கையை உதறிவிட்டு போகமுயன்றாள்

தனது பிடியை விடாமல் அவளை உலுக்கிய சத்யன் “ ஏய் மான்சி உனக்கு அவளைப் பத்தி தெரியாது, அவ எக்கேடு கெட்டா நமக்கென்ன,, இதெல்லாம் அவளா பாத்து வச்சுகிட்டது அதனால அவதான் அனுபவிக்கனும்,, நீ போகாதேன்னு சொன்னா கேளு,, என் பேச்சை மீறிப் போய்ட்டு அவமானப்பட்டு வராதே மான்சி” என்று சத்யன் கடும் கோபத்தில் வார்த்தைகளை அடக்கி பேசினான்

அவனை நம்பாமல் பார்ப்பது போல் பார்த்த மான்சி “ என்ன சத்தி இது விரோதம் பேசுற நேரமா இது, ஆயிரம் கெட்டவளா இருந்தாலும், நீ தொட்ட உடம்பு சத்தி அது, என் புள்ளைய பெத்து குடுத்தவ அவ, அவளை,, அவ உடம்பை செல்லரிக்க விட்டுட்டு நாம வேடிக்கைப் பார்க்கலாமா, என்னோட சத்தி இப்படி பேசாதே, என்னாச்சுப்பா உனக்கு?” என்று மான்சி கேட்க

அவளுக்கு எப்படி சொல்லி புரியவைப்பது என்று புரியாமல் தவித்த சத்யன் அவள் கையைப் பற்றி “ அவ உன்னை ஏதாவது அவமானப்படுத்திட்டா என்னால தாங்க முடியாது மான்சி,, அதனாலதான் சொல்றேன்” என்று வருத்தமாக கூறினான்

“ இல்ல சத்தி மான அவமானத்தை பார்க்குற நேரம் இது இல்லை, அப்படியே தான் நடந்தா நடந்துட்டு போகட்டும் அதைப்பத்தி எனக்கு கவலையில்லை, நான் போய் அவளுக்கு என்னாச்சுன்னு பார்த்துட்டு வர்றேன்” என்றவள் திலகத்துடன் மித்ரா வீட்டை நோக்கி வேகமாகப் போனாள்

போகும் அவளை வியப்புடன் பார்த்தான் சத்யன்,, 'தியாகம் என்பதன் பொருள் தான் மான்சியா?' என்று அவன் மனம் கேட்டது





“ எனக்காவே அவள்”

“ போலியில்லா உன் முகமும்”

“ சுயநலமில்லா உன் பேச்சும்”

“ என் நெஞ்சை வருடும் உன் சிரிப்பும்”

“ எல்லாம் எனக்காக எனும்போது”

“ உனக்காக நான் என் செய்வேன்”

“ அன்பே நீ அருகில் இல்லாத நாட்களில்”

“ ஈரமில்லா ஓர் இரவைப் போல்,

“ வரண்டது என் இதயம்!

“ உன் அருகாமை இல்லாதபோது

“ காற்றில்லா ஓர் வேற்றுக் கிரகத்துள்,,

“ நுழைந்த வெறுமை,,

"துக்கத்தில் நான் துவளாமல் ,,

"உன் மடியில் தலைசாய்த்து,,

"என் தலை கோதும் உன் விரல்களோடு,,

"வாழத்தான் பிடித்திருக்கிறது எனக்கும்!

Like Reply
#57
Continue bro
Like Reply
#58
என் மனைவியாக மான்சி - அத்தியாயம் - 8

சத்யனுக்கு குழப்பமாக இருந்தது, மித்ராவின் உதவிக்கு ஓடும் மான்சியின் பின்னால் போவதா? அல்லது உள்ளே போய் மனுவுடன் படுத்துக்கொள்வதா? என்று குழம்பியபடி அங்கேயே நின்றான்,

அதேநேரம் உள்ளே மனுவின் சினுங்கள் குரல் கேட்க, சத்யன் வேகமாக வீட்டுக்குள் போனான், எழுந்து அமர்ந்து கண்ணை கசக்கிக் கொண்டிருந்த மனு “ அப்பா அம்மா எங்கப்பா?” என்று சினுங்கலுடன் கேட்க,

“ அம்மா இதோ வந்துவா,, நீ அழாதே” என்று கூறி மகனைத் தூக்கி தோளில் போட்டுத் தட்டி சமாதானம் செய்தவன்,, மனுவின் அழுகை அதிகமானதும் வீட்டைவிட்டு வெளியே வந்து கதவை சாத்திவிட்டு மகனுடன் மித்ராவின் வீட்டை நோக்கி போனான்

மாடியில் இருந்த மித்ராவின் அறைக்கதவுத் திறந்தே இருக்க, சத்யன் பெரும் தயக்கத்துடன் உள்ளே நுழைந்தான், மித்ரா தரையில் கிடக்க அவள் தலையை மான்சி தன் மடியில் தூக்கி வைத்துக்கொண்டு திலகா கொடுத்த சூடான பாலை புகட்டிக்கொண்டு இருந்தாள்

பால் ஒரு மிடறு உள்ளே போனால் இரண்டு மிடறு வெளியே வந்தது, 
ஆனால் மான்சி விடவில்லை வற்புறுத்தி புகட்டினாள், மித்ராவுக்கு கொஞ்சமாக நினைவு திரும்பியிருக்க யார் மடியில் இருக்கிறோம் என்று புரிந்து சிறு வெறுப்புடன் அடிக்கடி கால்களை உதறி புரண்டு தரையில் விழ முயன்றாள், மான்சி திலகாவைப் பார்த்து ஜாடை செய்ய, திலகம் மித்ரா புரளாமல் முழங்காலை பிடித்துக்கொண்டாள்

மித்ரா முரண்டியதில் அவளின் நைட்டி மடிந்து முழங்கால் வரை ஏறியிருக்க, அவள் கால்களைப் பார்த்த மான்சிக்கு பயங்கர அதிர்ச்சி,, கால்கள் இரண்டும் துளிகூட ரத்தமில்லாத சாம்பல் நிறத்தில் இருந்தது, கால்களில் ஆங்காங்கே சிறுசிறு கொப்புளங்கள், சில கொப்புளங்கள் வெடித்து நீரும் சீலும் ரத்தமுமாக கசிந்தது, மான்சிக்கு ஏதோ தோன்ற நைட்டியின் ஜிப்பை இறக்கி விட்டு அதை விலக்கி அவளின் மார்புகளை பார்த்தாள், மித்ராவின் மார்புகளில் கிள்ளியெடுக்கக் கூட சதையில்லை, எலும்பெடுத்த மார்பிலும் சிறுசிறு கட்டிகள் கசிந்துகொண்டு இருந்தன, மான்சி அதிர்ச்சியுடன் திலகத்தை பார்க்க..

அவளும் பயங்கர அதிர்ச்சியில் அருவருப்பில் வாந்தி வராமல் முந்தானையால் வாயைப் பொத்திக்கொண்டு இருந்தாள், அருவருப்பில் திலகம் மித்ராவை விட்டு விலகி அமர,

“ கொஞ்சம் காலை பிடிச்சு தூக்குங்க திலகம்மா, கட்டில்ல படுக்க வைக்கலாம், அப்புறம் சுடுதண்ணியும் மெல்லிசா ஒரு துணியும் எடுத்துட்டு வாங்க நல்லா தொடச்சுட்டு பவுடர் போட்டு விடலாம்” என்று கெஞ்சுதலாக மான்சி கூற

சட்டென்று விலகி அமர்ந்த திலகம் “ மன்னிச்சுடுங்கம்மா என்னால முடியாது வாந்தி வர்ற மாதிரி இருக்கு” என்றாள்

மான்சி செய்வதறியாது திகைப்புடன் மித்ராவைப் பார்க்க, அவளின் மூடி விழியோரத்தில் இருந்து இரு கண்ணீர் துளிகள் எட்டிப் பார்த்தது, பலகீனமாய் கிடந்த மித்ராவின் கண்ணீரை பார்த்ததும் மான்சி நெஞ்சை அடைத்தது, தன் மடியில் இருந்த மித்ராவின் தலையை எடுத்து தரையில் வைத்துவிட்டு எழுந்த மான்சி மித்ராவின் இரண்டு பக்கமும் கால்களை ஊன்றி அவளைத் தூக்குவதற்காக குனிந்து மித்ராவின் அக்குளில் கைவிட்டு மூச்சை தம்பிடித்து தூக்கினாள்

அப்போது அவள் கைகளை விலக்கிவிட்டு மற்றொரு கை மித்ராவை தாங்கிப் பிடித்தது, மான்சி நிமிர்ந்து பார்த்தாள், சத்யன்தான் மான்சியை தாங்கிப்பிடித்து தூக்கிக்கொண்டு இருந்தான், அவன் கண்களும் கலங்கி இருந்தது, மித்ராவை தன் கைகளில் ஏந்தி எடுத்துச்சென்று கட்டிலில் கிடத்தி விட்டு தலையணையை சரி செய்தான்


அவனருகில் வந்த மான்சியிடம் திரும்பி “ நீ போய் வென்னீர் வச்சு எடுத்துட்டு வா, நான் அதுவரைக்கும் பாத்துக்குறேன்” என்றவன் திலகத்திடம் திரும்பி “ பாத்ரூம் போய் கையை நல்லா கழுவிட்டு மனுவை தூக்கிகிட்டு வெளியே போய் அவனை தூங்க வைங்க” என்றான்

திலகம் குற்றவுணர்ச்சியுடன் தலைகுனிந்து “ மன்னிச்சுடுங்கய்யா, எனக்கு அருவருப்பு தாங்காது, அதான் கூட சேர்ந்து தூக்கலை ” என்று சொல்லிவிட்டு பாத்ரூமுக்குள் போய் கையை சோப்பு போட்டு கழுவிக்கொண்டு வெளியே வந்து சோபாவில் படுத்துறங்கிய மனுவை தூக்கிக்கொண்டு அறையைவிட்டு வெளியே போனாள்

மான்சி வென்னீர் எடுத்துவர போய்விட, சத்யன் மித்ராவின் முகத்தையேப் பார்த்தான், தனது அழகை பராமரிக்க கோடிக்கணக்கில் பணம் செலவழித்த மித்ரா, இன்று அருவருக்கத்தக்க நிலையில் இருப்பதை கண்டு அவன் வயிறு எரிந்தது, தனது கவர்ச்சியான மார்புகளின் மீது மித்ராவுக்கு அலாதியான கர்வம் உண்டு, இன்று அவைகள் உருக்குலைந்து இருக்குமிடம் தெரியாமல் போனது, தனது கால்கள் வழவழப்பாக இருக்கவேண்டும் என்று மணிக்கணக்கில் லோஷனின் ஊறவைத்து பராமரிப்பு செய்வாள், இன்று அவைகள் ஈர்க்குச்சியாக நீர்த்துப்போய் நடக்க முடியாமல் துவண்டுகிடந்தது, இத்தனை நாட்களாக அவள்மேல் இருந்த வெறுப்பு பரிதாபமாக மாற, சத்யன் மனம் வெதும்பி நின்றான்,,
Like Reply
#59
மான்சி கையில் வெண்ணீர் பாத்திரத்துடன் வந்தவள் சத்யனின் நிலையைப் பார்த்து பாத்திரத்தை தரையில் வைத்துவிட்டு அவனருகே வந்து “ சத்தி நீ வேனா போ சத்தி, நான் தொடச்சி சுத்தம் பண்ணி வேற துணி மாத்தி வைக்கிறேன், நீ போய் மறுபடியும் டாக்டருக்கு போன் பண்ணு சத்தி” என்று ஆறுதலாக கூறினாள்

“ இல்ல மான்சி நீ இருக்குற நிலையில் உன்னால தனியா எதுவும் பண்ணமுடியாது நானும் கூட இருந்து எல்லாத்தையும் பண்றேன், நீ கதவை சாத்திட்டு வா” என்றான்

அவன் சொல்படி மான்சி கதவை மூடிவிட்டு வர, இருவருமாய் சேர்ந்து மித்ராவின் உடையை களைந்துவிட்டு கட்டிலில் ஒரு விரிப்பைப் போட்டு அவளை கட்டிலில் கிடத்தினார்கள், டெட்டாயில் கலந்த மிதமான வென்னீரில் டவலை நனைத்து சத்யன் கொடுக்க மான்சி மித்ராவுக்கு வலிக்காமல் இதமாக துடைத்தாள்
துடைத்து முடித்து பிறகு சத்யன் கொடுத்த பவுடரை மித்ராவின் உடலில் கொட்டி பூசினாள், பிறகு சத்யன் எடுத்துவந்து கொடுத்த புது நைட்டியை இருவருமாய் மித்ராவுக்கு உடுத்தினர், சத்யன் மித்ராவை தூக்கி கட்டிலில் இருந்து இறக்கி சோபாவில் படுக்கவைத்தான், மான்சி உடனே கட்டிலில் இருந்த விரிப்புகளை எடுத்து பாத்ரூமில் கொண்டு போய் போட்டுவிட்டு வேறு புது விரிப்பை விரித்தாள், தலையணை உறைகளை மாற்றினாள், பின்னர் சத்யனிடம் வந்தாள்

“ தூக்கிட்டுப் போய் கட்டில்லயே படுக்க வைக்கலாமா சத்தி?” என்று கேட்க

“ இல்லம்மா டாக்டர் வர்ற வரைக்கும் இப்படியே இருக்கட்டும், அப்புறமா கட்டில்ல படுக்க வைக்கலாம்” என்றான் சத்யன்


சத்யன் எதிர் சோபாவில் அமர்ந்து தலையை கைகளில் தாங்கி தலை கவிழ்ந்தான், மான்சி மித்ரா படுத்திருந்த சோபாவில் ஓரமாக அமர்ந்தாள்

மித்ராவுக்கு முழு நினைவும் எப்பவோ திரும்பிவிட்டது, ஆனால் கண்களை விழிக்காமல் கிடந்தாள், அடிக்கடி விழியோரம் நீர் மட்டும் கசிந்தது, அவள் உள்ளுக்குள் விம்முகிறாள் என்பதன் அடையாளமாக தொண்டைக்குழி ஏறி இறங்கியது

மான்சிக்கு சத்யனைப் பார்க்க கவலையாக இருந்தது, அவன் முகம் இறுகிப்போய் இருந்தது, மான்சியால் அவன் மனநிலையை புரிந்துகொள்ள முடிந்தது, மெதுவாக எழுந்து அவனருகில் வந்து அமர்ந்து அவன் தோளில் கைவைத்தாள்

தலைகுனிந்திருந்த சத்யன் படக்கென்று நிமிர்ந்து மான்சியைப் பார்த்தான், அவன் கண்களில் கண்ணீர் தேங்கியிருந்தது, அவன் எதிர்பாராத தருணத்தில் கன்னத்தில் உருண்டு வழிந்தது சத்யனின் கண்ணீர்,

மான்சி பதட்டமாக அவன் கண்ணீரைத் துடைத்து “ என்ன சத்தி சின்னப் புள்ளையாட்டம் கண்ணுல தண்ணி வச்சுகிட்டு,, ம்ஹூம் நீயே இப்படி இருந்தா எப்படி ஆவுறது, அவங்ககிட்ட நாலு வார்த்தை ஆறுதலா பேசு சத்தி” என்றாள்

வேகமாக தலையசைத்து மறுத்த சத்யன் “ இல்ல மான்சி இவளை என்னால இந்த நிலையில பாக்கமுடியலை, எப்படி கர்வத்தோட தலைநிமிர்ந்து வாழ்ந்தவ தெரியுமா, இப்போ அழகு, அந்தஸ்து, பணம், சொந்தம், பந்தம்னு, எல்லாம் போய் இப்படி அனாதை மாதிரி கிடக்குறாளே, எல்லாம் இவளோட தவறான நடத்தையால தானே?,, அதனாலதானே நானும் மனுவும் இவளை விட்டுட்டு போனோம், இப்போ யாருமே உதவமுடியாத இந்த நிலையில கெடக்குறாளே இவளுக்கு தேவையா இதெல்லாம்?, அப்படி என்னதான் இவளுக்கு ஆச்சுன்னு தெரியலையே?, இப்படி உடம்பெல்லாம் சீரழிஞ்சு போகிற அளவுக்கு அப்படி என்னதான் வியாதின்னு தெரியலையே,, இவளைவிட்டு பிரிஞ்சு போன அன்னிக்குத்தான் என் மனசார இவளை முழுசா வெறுத்துட்டு போனேன் மான்சி,, அதுக்கு முன்னாடி இவளை எப்படியும் திருத்தி சேர்ந்து வாழனும்னு தான் ஆசைப்பட்டேன் ” என்று தொண்டை அடைக்க கூறிவிட்டு சத்யன் குமுற

அவன் தோளில் ஆறுதலாக கைவைத்த மான்சி “ நீ சொன்ன எல்லாமே இவங்களை விட்டு போகலை சத்தி,, சொந்தமா நாமெல்லாம் இருக்கோம், பந்தமா மனு இருக்கான்,, சத்தி தயவுசெஞ்சு பழசை பேசி நேரத்தை வீணாக்காத, இனி ஆகவேண்டியதை பார்க்கலாம்” என்றவள் “ என்னா சத்தி இன்னும் டாக்டரை காணோம்,, பேசாம நம்ம மேனேஜர் அய்யாவுக்கு போன் போட்டு ஒரு கார் எடுத்துட்டு வரச்சொல்லு, நாமலே ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகலாம்” என்று கூற..

அப்போது கதவை திறந்துகொண்டு திலகமும் அவள் பின்னால் மித்ராவின் குடும்ப டாக்டரும் வந்தனர், டாக்டரின் முகத்தில் ஒரு எரிச்சல் ஒரு அலட்சியம் இருந்தது,

சத்யனைப் பார்த்த டாக்டர் “ என்ன சத்யன் நீங்க எப்போ வந்தீங்க,, என்று ஒரு சம்பிரதாயத்துக்கு கேட்டுவிட்டு மித்ராவின் அருகே வந்து அவளை தலை முதல் கால்வரை பார்த்துவிட்டு “ நான்தான் அப்பவே சொல்லிட்டேனே, இவங்களை கவர்மெண்ட் ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆகச்சொல்லி,, மேலும் மேலும் குடி, சிகரெட், போதைன்னு இருந்தா எந்த மருந்து கொடுத்தாலும் ஒரு பர்ஸன்ட் கூட இவங்க உடல்நிலையில் முன்னேற்றம் வராது சத்யன், தாம்பரம் சாண்டோரியத்தில் இருக்கும் மருத்தவமனைக்கு ஒரு லட்டர் எழுதி தர்றேன், அதை அங்கே குடுத்து இவங்க அட்மிட் பண்ணிடுங்க இவங்க இருக்கும் வரை அங்கே பாத்துக்குவாங்க” என்று கூறிவிட்டு மித்ராவை தொட்டுக்கூட பார்க்காமல் டாக்டர் அங்கிருந்து நகர்ந்து நிற்க்க..

சத்யன் குழப்பத்துடன் “ ஏன் சார் பிரைவேட் ஆஸ்பிட்டல்ல வச்சு ட்ரீட்மெண்ட் பண்ணக்கூடாதா,, எவ்வளவு பண்ம் வேணும்னாலும் நான் செலவு பண்றேன் சார்” என்று டாக்டரிடம் கூறினான்


அவனை பரிதாபத்துடன் ஏறிட்டுப் பார்த்த டாக்டர் “ எவ்வளவு பணம் செலவு பண்ணாலும் பிரயோஜனம் இல்லை சத்யன், இவங்களை கவர்மெண்ட் ஆஸ்பிட்டல்ல சேர்கறது தான் நல்லது” என்று சொல்ல

அவரை புரியாமல் பார்த்த சத்யன் “ அப்படியென்ன வியாதி சார் இவளுக்கு வந்திருக்கு?” என்று கேட்டான்

அவனை ஆச்சர்யமாக பார்த்த டாக்டர் “ என்ன சத்யன் இன்னும் உங்களுக்கு தெரியலையா? இவங்களுக்கு ஹெச் ஐ வி வந்திருக்கு” என்று கூற

“ என்னது” என்று அதிர்ந்து போய் கேட்டான் சத்யன், மான்சியும் கண்ணீருடன் ஓடிவந்து சத்யன் கைகளை பற்றிக்கொண்டாள்
Like Reply
#60
“ ஆமாம் சத்யன், நான் எடுத்த எல்லா டெஸ்ட்களும் அதைத்தான் சொல்லுது,, ஆனா எய்ட்ஸ் நோயோடு இருபது வருஷம் உயிரோடு வாழுறவங்களை எல்லாம் நான் பார்த்திருக்கேன்,, மித்ராவுக்கு இந்த நோய் அட்டாக் ஆகி ஒன்றரை வருஷம்தான் ஆகுது, இவங்க முறையா ட்ரீட்மெண்ட் பண்ணியிருந்தா நோயைக் ஒரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வந்து ஆயுளை நீட்டித்திருக்கலாம், ஆனா இவங்களோட மற்ற கெட்ட பழக்கவழக்கங்கள் ஏற்கனேவே உடலுறுப்புகளை சேதப்படுத்தி இருந்ததால நோயின் தீவிரம் வெகு சீக்கிரத்தில் பரவிவிட்டது, இன்னும் சிலநாட்களே எனும் பட்சத்தில் இவங்களை ஆஸ்பிட்டல்ல சேர்பதைப் பத்தி நீங்கதான் முடிவு பண்ணனும், நான் லட்டர் எழுதி குடுத்துட்டுப் போறேன்” என்று சொல்லிவிட்டு தனது கைப்பொட்டியில் இருந்து ஒரு லட்டர் பேடை எடுத்து அதில் சிலவரிகளை எழுதி அதை மடித்து மான்சியிடம் நீட்டினார்
மான்சி அந்த பேப்பரை நடுங்கும் விரலில் வாங்கினாள், டாக்டர் வேறு எதுவும் சொல்லாமல் அங்கிருந்து வெளியேறினார்

சத்யனும் மான்சியும் திக்பிரமை பிடித்து அப்படியே நிற்க்க, மித்ராவின் தீனமான கேவல் ஒலி அவர்களை உலுக்கியது, இருவரும் வேகமாக மித்ராவை நெருங்க,, சத்யன் அவள் தோளில் கைவைத்து “ மித்ரா” என்று கண்ணீருடன் அழைக்க

மித்ரா கண்ணீர் வழியும் கண்களை திறக்காமலேயே “ என்னைத் தொடாதே சத்யா,, நீ இங்கேருந்து போய்டு, உன் பொண்டாட்டி பிள்ளையை கூட்டிக்கிட்டு போய்டு சத்யா, நான் இப்படியே இருந்தா இன்னும் ரெண்டு நாள்ல எனக்கு முடிவு வந்துரும் , அப்புறம் ஏதாவது வண்டி வந்து என்னை எடுத்துட்டுப் போயிடுவாங்க,, என்னை அந்த ஆஸ்பத்திரியில் மட்டும் கொண்டு போய் சேர்த்துடாத சத்யா,, இது எனக்கு தேவையான ஒன்னுதான்,, நீ இங்கருந்து போயிடு சத்யா,” என்று தேய்ந்து போன குரலில் தீனமாக கூறினாள்

அவளின் வார்த்தைகள் சத்யனின் நெஞ்சை பிசைய கவலையுடன் மான்சியை நிமிர்ந்து பார்த்தான்,,

முகத்தில் ஒரு ஜொலிப்புடன் மித்ராவின் அருகே பட்டென்று குனிந்த மான்சி “ இதோபார் மித்ரா நான் போகமாட்டேன், உன்னை இப்படியே விட்டுப்போட்டு நாங்க போகமாட்டோம்,, உனக்கென்னடி குறை, கல்லு மாதிரி உன் புருஷன், அழகான மகன் மனு, உனக்கு வேலைக்காரியா இருந்து பணிவிடை செய்ய நான்னு, இத்தனைப் பேர் இருக்கும்போது நீ ஏன்டி அனாதையா சாகனும், உன்னை அந்த ஆஸ்பத்திரிக்கு அனுப்பமாட்டேன், உன்னோட உயிர் இருக்குற வரைக்கும் நீ ராசாத்தி மாதிரி வாழ்ந்துட்டு தான் சாகனும் மித்ரா, அதுக்கு நானாச்சு” என்றாள் தீர்கமாய்

அவளின் அன்பையும் கரிசனத்தையும் தாங்கமுடியாதவள் போல மித்ரா கண்ணீருடன் தலையை இப்படியும் அப்படியுமாக அசைத்து “ வேனாம் மான்சி வேனாம்,, உனக்கு இந்த வேலை வேனாம், நீ உன் புருஷனை கூட்டிக்கிட்டு போயிடு, இந்த நாத்தம் புடிச்ச உடம்பை தொடாத, நீ எப்படிப்பட்டவன்னு எனக்கு தெரியும் மான்சி, உன்னைப்பத்தின எல்லா விஷயமும் எனக்குத் தெரியும், நீ ஒரு வாழும் தெய்வம், சத்யன் கர்ப்பக்கிரகம்னா அதுல வாழும் தகுதி உள்ள தெய்வம் நீதான் மான்சி,, நீ போய்டு, எனக்கும் உங்களுக்கும் எந்த சம்மந்தமும் வேண்டாம், இப்படியொருத்தி இருந்ததையே மறந்துடுங்க” என்று கூறிய மித்ரா சோபாவில் கையூன்றி எழுந்து அமர முயன்றாள்

உடனே அவள் தோளைத் தாங்கி தூக்கி அமர்த்திய மான்சி, “ சத்தி மித்ராவ கட்டிலுக்கு மாத்திடு சத்தி” என்று கூற



குமுறிக்கொண்டிருந்த சத்யன் மான்சியின் சொல்படி மித்ராவை கையில் ஏந்தி போய் கட்டிலில் கிடத்தினான்

மித்ராவை கட்டிலில் படுக்க வைத்து போர்வையில் அவளை மூடிவிட்டு சத்யன் சோபாவில் போய் அமர்ந்தான், அவனருகே வந்து அமர்ந்த மான்சி ” நீ வேனா போய் படு சத்தி, நான் மித்ராவை பார்த்துக்கிறேன்” என்று கூற

“ இல்ல மான்சி மனுவை திலகம் பார்த்துக்குவாங்க, நானும் இங்கேயே இருக்கேன், நீ தரையில ஏதாவது விரிச்சுப் படுத்துக்க, நான் இந்த சோபாவிலயே படுத்துக்கிறேன், பொழுதுவிடியட்டும் என்ன செய்றதுன்னு முடிவு பண்ணலாம் ” என்று சத்யன் சொல்ல,

சரியென்று தலையசைத்த மான்சி தரையில் ஒரு போர்வையை விரித்துப் படுத்துக்கொண்டாள், சிறிதுநேரம் உட்கார்ந்திருந்துவிட்டு மான்சி உறங்குவது போல் தெரிந்ததும் இவனும் சோபாவில் கால்நீட்டி படுத்துக்கொன்டான்

ஆனால் அவன் கண்களை உறக்கம் தழுவ மறுத்தது, மித்ராவை சந்தித்த நாள்முதல் நடந்தவை அனைத்தும் நிழல்ப் படமாய் நெஞ்சில் ஓடியது, இன்று மித்ராவை இந்த நிலையில் பார்த்ததும் சத்யனால் பொறுக்கமுடியவில்லை, எவ்வளவு தவறுகள் செய்தவளாயினும் அவளுடன் நாலு வாழ்ந்து ஒரு பிள்ளையைப் பெற்றவன் என்பதாலோ என்னவோ அவளின் நிலை கண்டு உள்ளம் குமுறியது, நான் மட்டும் அவளை பிரியாமல் இங்கேயே இருந்து அவளை அடித்து கண்டித்துத் திருத்தியிருந்தால் அவளுக்கு இந்த கதி நேர்திருக்காதே,, என்ற குற்றவுணர்ச்சி அவனைக்கொன்றது, கழிவிரக்கத்தில் கண்ணீர் வழிந்தது,
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)