Romance ?கலையாத❣️கனவுகள்?
#1
Heart 
உண்மையாக நடந்த நிகழ்வுகள் கொண்டு அதனுடன் கொஞ்சம் கற்பனை கலந்த காதல் கதையாக இருக்கும்.... 

பதிவு மட்டும் நான்....
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Heart 
காதல்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அர்த்தத்தை கொடுக்கும்...
சில பேருக்கு காமத்தினால் உண்டான காதலும் உண்டு, காமதுக்காகவே உண்டான காதலும் உண்டு. இன்னும் ஒரு சில பேருக்கு மட்டும் தான் கண்கள் பார்த்து அதன் பார்வையில் அர்த்தம் புரிந்து தோல் தசை போர்த்திய எலும்பு கூட்டிற்குள் இருக்கும் சிறிய இதயத்தை தட்டி எழுப்பி அதன் வேலையினை சரியாக செய்ய வைக்கும். காதல் செய்ய கண்கள் மட்டும் போதும் என்றோ படித்த கவிதைகளின் வரிகள் நினைவிற்கு வந்தது அவளின் கண்களினை முதன் முதலாக பார்த்த பொழுது....
நான் தேவா..
எனக்குள் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்த என் இதயத்தை தன் பார்வையால் தட்டி எழுப்பி அதனுடைய வேலையினை செய்ய வைத்தவள்....
காதல் என்றால் என்ன என்று தெரியாத வயதினில் காதல் கொண்டேன் அவளுடைய பார்வை வீசிய அந்த நொடியில் கண்கள் மட்டும் பேசிய மொழியில் காதல் வந்ததால் கருமம் எனக்கே கவிதையா வருதே...
அவள் கண்கள் மட்டும் போதும் அவளுடைய மொத்த அழகையும் சொல்லிவிடும். அவளுக்காக நான் அவளுக்கு மட்டுமே நான்...
வாழ்க்கைல நாம நினைக்கிறது எல்லாமே அப்படியே நடந்துவிட்டால் கடவுளுக்கு என்ன மரியாதை. அவர் என்ன நமக்கான ஒன்று எழுதி வைத்திருப்பார். அது படி தானே எல்லாமே நடக்கும். இது தெரியாமல் நான் கண்களை கண்டதும் காதல் வந்து மயங்கி விழுந்தேன் அவள் பார்வையில்.... விழுந்தது என்னமோ அவள் பார்வையில் தான் ஆனால் எழுந்தது என்னுடைய வீட்டில்...

அபி: டேய் எரும மாடு எவ்ளோ நேரம் டா தூங்குற, ஆபிசுக்கு நேரம் ஆகுது சீக்கிரம் கிளம்புடா

அபி சத்தமாக கத்தும் சத்தம் மட்டும் கேட்டது. சென்னையில் ஒரு விளம்பர கம்பனி ஒன்றில் இயக்குநராக நான் வேலை பார்க்கிறேன். அபி என்னோட பெஸ்ட் தோழி ஒரு சகோதரி மாதிரி.
என்னோட வேலை பார்க்குற 3பேரு என்னோட சேர்ந்து 4பேரு தனியா வேளச்சேரியில் வாடகை வீட்டில் இருக்கிறோம். ஆபீஸ் நாவலூர் போகும் வழியில் ஒரு கட்டடத்தில் உள்ளது.  சரி அறிமுகம் எல்லாம் போக போக பார்த்துக்கொள்ளலாம்.

தேவா: அபி நான் கிளம்பிட்டேன். அவனுங்க எங்கே

அபி: அவனுங்க போயாச்சு. நீ வந்து வண்டி எடு டா நேரம் ஆகுது. மேனஜர் இன்னைக்கும் கத்த போறான்

தேவா: சரி சரி டென்ஷன் ஆகாத ஒரு 10மினிட் போயிடலாம்..

2பேரும் 10 நிமிடத்தில் வந்து சேர்ந்தோம். என்னுடைய பைக்கினை பார்க்கிங் ஏரியாவில் விட்டுவிட்டு லிஃப்ட் உள்ள போகும் போது தான் கண்டேன் அவளையும் அவளின் கண்களையும். அவளின் பார்வையினால் என் இதயத்தை திருடி சென்றவள் என்னவள் எனக்கானவள்...
கவியாழினி என் கண்கள் முன்னே.. என்னை பார்த்ததும் முகத்தினை திரும்பி நின்று கொண்டாள். அபி அதனை பார்த்து சிரித்து  "உனக்கு டெய்லி அசிங்க படலைனா தூக்கம் வராது போல" என்று நக்கலாக பதில் சொன்னால்.
நானும் அமைதியாக இருந்து விட்டேன். 
நமக்கு தோன்றியது போல அவளுக்கும் தோன்ற வேண்டும் அல்லவா.. அதற்க்காக அவளை மிரட்டவும் விரட்டவும் இல்லையே தினமும் அவளை இதுபோல பார்ப்பது மட்டும் தானே. அவளும் எங்களுடன் அதே நிறுவனத்தில் அக்கவுண்ட்டில் பணி புரிகிறாள். ஆபீஸில் அவளை மீறி ஒரு ரூபாய் கூட வெளியே செல்லாது. வேலையில் சரியாக நடந்து கொள்வாள் கூட வேலை செய்பவர்களிடம் எப்படி நடக்கமுமோ அப்படி நடந்து கொள்வாள். அளவுக்கு மீறிய பேச்சு அவளிடத்தில் இருந்தது இல்லை. தேவைக்கேற்ப மட்டும் பேசுவாள். அமைதியாக இருப்பாள், ஜாலியாக எல்லோரிடமும் பேசுவாள் சந்தோஷமாக இருப்பாள். ஆனால் என்னிடம் மட்டும் விலகியே இருப்பாள்.
எவ்வளவு நாட்கள் இப்படியே இருப்பாய் என் யாழினி.. நீ நான் என்று இல்லாமல் நாம் என்று எப்போ ஆக போகிறோம். சொல்லடி என் காதலியே....
[+] 5 users Like Thamizhan98's post
Like Reply
#3
Heart 
பதிவு -2 (கடந்து வந்த பாதை - 2014)
பிப்ரவரி 13 இரவு 11.59 இன்னும் ஒரு நிமிடத்தில் காதலர் தினம் பிறக்கின்ற நேரம் வாழ்த்துக்கள் அனுப்பலாமா வேண்டாமா என்ற நினைப்புடன் எஸ்எம்எஸ் type செய்து வைத்துவிட்டு யோசித்துக்கொண்டே இருந்தேன். இன்னும் 10 விநாடிகள்...
சரியாக 12 மணிக்கு send கொடுத்தேன். என்ன ஆகுமோ எதுவும் பிரச்சினை வருமோ என்ற நினைவில்... ஆனால் thanks என்று பதில் sms வந்தது. கடவுளுக்கு ஒரு வணக்கத்தை வைத்து விட்டு good night மட்டும் அனுப்பிவிட்டு உறங்குவதற்கு தயார் ஆனேன். திடீர் என்று என் நினைவில் தோன்றிய என்று. இவ்வளவு நாட்கள் அவளுடைய phone number என்கிட்ட இருந்தது அனைவரும் அறிந்ததே. நள்ளிரவில் sms அனுப்பியும் அவள் யார் என்று தெரிந்துகொள்ள நினைக்காமல் thanks மட்டும் அனுப்புகிறாள் என்றால் என்னுடைய நம்பர் அவளிடம் இன்றும் உள்ளதா!!!
ஆச்சர்யத்தில் என் மனம் சந்தோஷத்தில் துள்ளி குதித்தது. 2வருடங்கள் ஆகிறது. அவளிடம் பேசி இன்று வரை என்னுடைய எண் சேமித்து வைத்து இருக்கிறாள்.. பிளாக் கூட பண்ணாமல் இருக்கிறாளே உண்மையில் என்னைய பிடிக்கவில்லை என்று கூறியவள் இவ்வளவு நாட்கள் எப்படி என்னுடைய நம்பர் வைத்திருக்கிறார்கள். 
தூக்கம் மறந்து கல்லூரி கால நினைவுகள் என்னுடைய மனதில் வர ஆரம்பித்தன. என்னுடைய வாழ்க்கையில்  பள்ளி, கல்லூரி நினைவுகள் வரும் போதெல்லாம் அவள் பெயர் இல்லாமல் எதுவும் இல்லை அவள் இல்லாமலும் எதுவும் இல்லை. 

2011

அம்மா சீக்கிரம் பஸ் வந்துட போகுது லஞ்ச் பாக்ஸ் கொண்டு வாமா என்று வேகமாக கத்திகொண்டே என்னுடைய பேக்கினை எடுத்துகொண்டு கல்லூரி கிளம்ப தயார் ஆனேன்.  அம்மா திட்டி கொண்டே சாப்பாடு பாக்ஸினை கொண்டு வந்து கொடுத்தார்கள். 
எதுக்குடா இப்போ ரெக்கை கட்டி பறக்குற 8மணிக்கெல்லாம் யாருடா அங்கே கிளாஸ் எடுக்கிறது. Bikela தானே போற 10மின்ட்ல போயிடலாம். எதுக்கு அவசரம் உனக்கு என்று அம்மா சொல்லிகொண்டே வர என் அவசரம் உனக்கு புரியாது என்று அம்மாவிடம் போய்ட்டு வாரேன் என்று சொல்லிவிட்டு எனது bike எடுத்துக்கொண்டு வேகமாக  அபியோட வீட்டிற்க்கு சென்றேன். 

அபி கிளம்பிட்டியா

2மினிட் வந்துடுறேன் என்று சொல்லி அவளும் வேகமாக வந்தால், வந்தவள் 

தேவா எல்லாமே ரெடி தானே இன்னைக்கும் சோதப்பிடாத டா 5வருஷம் காத்திருந்தது வீணா ஆகிடும்

அபி நீ எதுக்கும் கவலை படாதே இன்னைக்கு propose கண்டிப்பா பண்றேன் நீ பார்க்குற 

இந்த நக்கலா பேசுறதெல்லம் நல்லாத்தான் இருக்கு ஆனா 5வருஷமா பேசுறா ஆன love மட்டும் சொல்ல என்னடா தயக்கம் உனக்கு

உனக்கு என்னமா ஈசியா சொல்லிட்ட love பத்தி நினைச்சாலே அவகிட்ட பேச வார்த்தையே வரமாட்டெங்கிது மத்தபடி நான் தைரியமா போறேன் ஜாலியா பேசுறேன் ஆன propose panna தைரியம் இல்லையே அபி

விடு சகோ இன்னைக்கு பொரோம் பண்றோம் ok சீக்கிரம் வண்டிய எடு வந்துட போறா நேர பஸ் ஸ்டாண்டு போ அங்கே தான் இருக்கா. அங்கே போனதும் நான் கடைக்கு போற மாதிரி போறேன். அதுக்கு அப்புறம் நீ பேசிக்க ஓகே வா

அபி சொல்லியதுகு சரி சொல்லிவிட்டு போனேன். பஸ் ஸ்டாண்டு வந்ததும் அபி சொன்ன மாதிரியே போய்விட்டாள். அங்கே என்னவள் எனக்காக பிறந்தவள் நின்றுகொண்டு இருந்தால். எங்கள் இருவரையும் பார்த்ததும் சிரித்து கை அசைத்துவிட்டு என்னிடம்

ஹாய் தேவா 

ஹாய் யாழ்

எப்டிடா இருக்க 
பார்க்கவும் முடியலை ரொம்ப பிசியா

கொஞ்சம் busy தான் 
என்னிடம் இருந்து வார்த்தைகள் வர தடுமாறியது. அதனை பார்த்த அவள்

என்னடா தடுமாருது பேச என்னாச்சி டா

யாழ் உன்கிட்ட கொஞ்சம் ஒன்னு சொல்லணும் 

சொல்லுடா (கொஞ்சம் சிரித்த முகத்துடன் கேட்டால்)
அவளின் சிரிப்பினை பார்த்ததும் என்னிடம் இருந்து வார்த்தைகள் வர தடுமாறியது.

சொல்ட்ரெனு சொல்லிட்டு அமைதியா என்னடா நிக்கிற

I love you கவியாழினி

அவளின் கண்களை பார்த்து கையில் ரோஜா பூவினை நீட்டி சொல்லிவிட்டேன். அவள் முகத்தில் இருந்த சிரிப்பு ஒரு வினாடியில் மொத்தமும் இல்லாமல் போனது. அமைதியாக நின்றவள் என் கண்களை பார்த்துக்கொண்டே நின்றால். அந்த நேரம் அபியும் வர யாழ் எதுவும் அபியிடம் சொல்லவில்லை. அவள் அமைதியாக மட்டும் நின்று கொண்டு இருந்தாள். முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லை. சிறிது நேரத்தில் கல்லூரிக்கு செல்லும் பேருந்து வந்தவுடன் அபியும் அவளும் கிளம்பினார்கள். பேருந்தில் சண்ணலோரதில் அமர்ந்து திரும்பி என்னை ஒரு முறை பார்த்தால். அந்த பார்வையில் அவளின் ஏமாற்றம் தான் தெரிந்தது. பதில் சொல்லாமல் போய்விட்டாள். வருத்தம் கொஞ்சம் இருந்தாலும் எனக்கும் கல்லூரிக்கு நேரம் ஆனதால் கிளம்பிவிட்டேன். மாலையில் சந்திக்கலாம் அபியினை பிக்கப் பண்ண வரும் போது என்று நினைத்து கொண்டே..

கல்லூரியில் என் மனம் முழுவதும் அவள் நினைவுகள் மட்டுமே. காதலை காதலியிடம் சொல்லிவிட்டு அவளின் பதிலுக்காக காத்திருக்கும் தருணம் exam எழுதிவிட்டு resultkku காத்திருக்கு
[+] 5 users Like Thamizhan98's post
Like Reply
#4
இது தான் இந்த xossipy தளத்தில் எழுத்தாளர்களுக்கு உள்ள பிரச்சனை. இந்த இரண்டு பதிவை பார்க்கும் போதே எழுத்தின் தரம் தெரிகிறது, ஒரு கவித்ததுவம் தெரிகிறது, மெனக்கெடேல் தெரிகிறது. ஆனால் ஒற்றை கமெண்ட் அல்லது ஒரு லைக் கூட கிடையாது
என் கதை:
  கொஞ்சம் சதை, மிச்சம் கதை
  என்னை ஞாபகம் இருக்கா?
 [url=https://xossipy.com/thread-42454.html][/url]
[+] 1 user Likes lifeisbeautiful.varun's post
Like Reply
#5
(02-03-2024, 07:18 PM)lifeisbeautiful.varun Wrote: இது தான் இந்த xossipy தளத்தில் எழுத்தாளர்களுக்கு உள்ள பிரச்சனை.  இந்த இரண்டு பதிவை பார்க்கும் போதே எழுத்தின் தரம் தெரிகிறது, ஒரு கவித்ததுவம் தெரிகிறது, மெனக்கெடேல் தெரிகிறது.  ஆனால் ஒற்றை கமெண்ட் அல்லது ஒரு லைக் கூட கிடையாது

உண்மை  நண்பா
[+] 1 user Likes Thamizhan98's post
Like Reply
#6
Continue brother, good narration Super
[+] 1 user Likes Lashabhi's post
Like Reply
#7
(04-03-2024, 04:40 AM)Lashabhi Wrote: Continue brother, good narration Super
Thanks bro
Heroine Name changes pannikittu irukken bro update panniduren. Keep support bro
[+] 1 user Likes Thamizhan98's post
Like Reply
#8
(04-03-2024, 04:36 PM)maharajcolours Wrote: [Image: rainbow_onyx_angel_by_neamy_dgzu8f2-full...HFWOzUmoOo]

Angel
[+] 1 user Likes Thamizhan98's post
Like Reply
#9
Heart 
exam எழுதிவிட்டு resultkku காத்திருக்கும் நிலமையை விட கொடியது. மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது புனிதமானது என்று கத்தி சொல்லணும் போல ஒரு உணர்வு அவள் ஓகே மட்டும் சொல்லிவிட்டால் கத்தி சொல்லிவிடுவேன். ஆனால் சொல்லாமல் சென்று விட்டாலே. அபி பலதடவை எனக்கு call செய்தும் நான் எடுக்கவில்லை. எந்த செய்தியையும் இப்போ நான் கேட்கும் நிலையில் இல்லை. என்ன முடிவாக இருந்தாலும் யாழ் சொல்லியே கேட்டுகொல்வோம் என்று இருந்து விட்டேன்.

மாலையில் கல்லூரி முடிந்து அதே பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன். அவர்களின் பேருந்து வந்தவுடன் பார்த்தால் யாழ் வரவில்லை. அபி மட்டும் வந்து 
போகலாம் என்று சொல்லி bike ஏறி அமர்ந்தாள். போகும் வழியில் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அபி வீடு வந்தவுடன் இறங்கி என் கன்னத்தில் பளார் என்று சத்தம் வர அறைந்தாள். காரணம் சொல்லாமல். நான் அமைதியாக நிற்க அவளே ஆரம்பித்தாள்

காதல் கத்தரிக்கையலாம் மூலைல ஓரங்கட்டி வைசிட்டு படிக்கிற வேலைய மட்டும் பாரு

சரி அபி, யாழ் ஏதாவது சொண்ணாலா

சொன்னா அவளோட லவ் பத்தி சொன்னா 

அவளோட love னா புரியலை 

டேய் அவ ஏற்கனவே ஒருத்தனை love பன்றாலாம். இதை உன்கிட்ட மட்டும் இல்லை இவளோ நாள் கூடவே இருக்கேனே என்கிட்ட கூட இருந்து மறைசிருக்கா ரொம்ப சீக்ரெட் love போல, நீ எதையும் நினைச்சி ஃபீல் பண்ணிக்காம படிப்புல கவனமாக இரு டா  என்ன okay தானே

சரி அபி நான் கிளம்புறேன் நாளைக்கு பார்க்கலாம்

சரி டா, நீ வீட்டுக்கு போ கொஞ்சம் நேரம் ஆனதும் நான் வரேன், அம்மா வர சொன்னாங்க எனக்கு வர நேரம் கிடைக்கலை டா

சரி நீ ஃப்ரீயா இருக்கும் போது வா அவங்க எப்போதும் v2la தானே இருக்காங்க நான் கிளம்புறேன் அபி
அபிகிட்ட சொல்லிவிட்டு வீட்டிற்க்கு வந்தவுடன் எனது அறைக்கு சென்ற நான் கட்டிலில் படுத்து கதறி அழுக ஆரம்பித்தேன். 5வருஷம் லவ் பண்ணி love சொல்ல போன அன்னைக்கே என் மொத்த love pochey என்னோட யாழ் இப்போ வேற ஒருத்தனூட யாழ் கடவுளே நானும் love சொல்ல கஷ்டப்படும் போதெல்லாம் கூட இந்த விஷயம் தெரின்சிருத்நால் எண்ணொடவே என் வலி போயிருக்கும். ஆனா இப்போ 5yrs நட்பா பழகின யாழ் என்னை விட்டு போக போரலே நட்பும் போச்சி காதலும் போச்சி அழுகை வந்து கொண்டே இருந்ததே தவிர நிறுத்துவதற்கு வழி இல்லை. என்னால் முடிந்தவரை கண்ணீர் தீரும் வரை அழுதேன். அழுது முடித்து எப்பொழுது உறங்கினேன் என்று தெரியவில்லை. அபி வந்து எழுப்பினால்.

தேவா டேய் என்னடா இப்படி தூங்குற இந்த நேரத்தில என்று கூறிக்கொண்டே என் முகத்தை பார்த்து எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தால் அழுது கண்ணீர் வந்த தடதுடன் என் முகமும் வீங்கி இருப்பதை கண்டு எதுவும் பேசவில்லை. இவளுக்கும் புரியும் அல்லவா. கடந்த 5வருடத்தில் நான் எந்த அளவுக்கு அவள் மேல் காதல் வைத்து அதை சொல்ல தடுமாறினேன் என்று. நாம் நினைப்பது எல்லாம் நடந்து விட்டால் கடவுள் என்று ஒருவர் இருப்பது மறந்துவிடும் அல்லவா. என்னிடம் எதுவும் சொல்லாமல் வெளியே சென்ற அபி அவன் தூங்குறான். அப்புறம் வாரேன் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு சென்றால். நான் மீண்டும் உறங்க ஆரம்பித்தேன்.
[+] 3 users Like Thamizhan98's post
Like Reply
#10
I really liking it. Super bro
[+] 1 user Likes Lashabhi's post
Like Reply
#11
(04-03-2024, 05:32 PM)Lashabhi Wrote: I really liking it. Super bro

Thanks bro thank you so much

Neenga ellorum kodukkura ovvoru cmntum writterkku than serum thank you so much bro
Like Reply
#12
super story nanba ..... eluthu pilai illamal eluthuvathu mika kadinam ...athukakave ungaluku oru periya salute nanba, thodrnthu eluthunga nanba ..we support u
 
[+] 1 user Likes Jeyjay's post
Like Reply
#13
(04-03-2024, 10:28 PM)Jeyjay Wrote: super story nanba ..... eluthu pilai illamal eluthuvathu mika kadinam ...athukakave ungaluku oru periya salute nanba, thodrnthu eluthunga nanba ..we support u

Nandri nanba, type mistake irukkunu enakke theriyum nanba athai maraithu engalukkaka support pandreenga ur great.. editing mudichittu kandippaga update poduren nanba
Like Reply
#14
Heart 
அதன் பிறகு தேவாவும் யாழினியும் பலதடவை நேரில் சந்தித்து கொண்டாலும் சாதாரணமாக எப்படி இருக்க என்று மட்டும் கேட்டுக்கொண்டனர். இருவரும் மறந்தும் கூட காதல் பற்றி ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை. 

மனதுக்கும் ஆயிரங்கள் என்ன கோடி கனவுகள் காதலை வைத்து நினைத்தாலும் அதை நேரில் சொல்ல தைரியம் இல்லை செயல் படுத்தவும் வழி இல்லை. 

யாழினி சாதாரணமாக இருந்தாலும் சில சமயங்களில் தேவாவிர்க்கு காதல் முதலில் வந்து அவளிடம் பேச வார்த்தைகள் வராமல் தவித்தான். அபியும் அவனுக்கு பலதடவை அறிவுரை கூறியும் அவளால் எந்த ஒரு உதவியும் செய்ய முடியாமலும் இருந்தால். யாழினி காதல் செய்யும் அவன் யார் எங்கே இருக்கிறான். இதுவரை தேவாவும் அபியும் கண்டதே இல்லையே. எப்பொழுதும் கல்லூரியில்  மற்றும் பேருந்தில் பயணிக்கும் பொழுது கூட ஒன்றாக இருப்பதால் வேறு எங்கே  அவனை காண முடியும். அவன் யார் என்று அறிந்து கொள்ள அபிக்கு ஆர்வம் அதிகம் ஆனது. தன் நண்பனின் காதலை சேர விடாமல் தடுப்பவன் யார் யார் யார் யாராக இருப்பான் எங்கே இருக்கிறான் என்று தனக்குள்ளே அதிகமாக நினைத்துகொண்டு இருந்தால். 

நண்பன் மேல் உள்ள பாசம் தன்னோட குடும்பத்தில் ஒருவனாய் மாற்றியது. சகோதரன் ஆக்கியது. அவளின் தாய் இவனுக்கும் தாய் ஆனால். இவனின் தாய் அவனுக்கும் தாய் ஆனால். இருவரும் ஒருவரை விட்டுகொடுக்கதவர். சிறு குழந்தை முதலே ஒன்றாக இருந்து இப்பொழுது கல்லூரி மட்டும் வேறு.

இந்த வருடத்துடன் கல்லூரி வாழ்க்கை முடிவடைகிறது.  யாழினியை பார்க்க போகும் கடைசி நாள். எப்படியாவது மீண்டும் தன் காதலை வெளிப்படுத்த வேண்டும் என்ற நினைவோடு அதே பேருந்து நிலையத்தில் காத்திருந்தான் தேவா. 

ஆனால் அவளோ அவனுடைய காதலனுக்காக காத்திருந்தால் அதே பேருந்து நிலையத்தில் வேறு ஒரு வரிசையில். அவளும் அவனுடைய காதலனை இனிமேல் பார்க்கும் வாய்ப்புகள் இல்லையே. மீண்டும் எப்பொழுது காண முடியுமோ என்ற நம்பிக்கை இல்லாத நடக்காத ஒன்றினை நினைத்து காத்திருந்தாள். 
இதே இடத்தில் தானே அவன் எனக்கு அவனுடைய காதலை வெளிப்படுத்தினான். காதலிக்க ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிறது. தினமும் அவளுக்காக அவன் காத்திருப்பான். இன்று ஏனோ மாறியது காலத்தின் கட்டாயம். 

இருவரும் வேறு வேறு வரிசையில் காத்திருந்தனர். அவன் வர வில்லை என்று யாழினியும், யாழினி  வர வில்லை என்று தேவாவும் வழி மேல் விழி வைத்து காத்திருந்த வேளையில் வந்து சேர்ந்தது அபி மட்டுமே. 

தேவா வை பார்த்ததும் அமைதியாக அவனிடம் சென்று 
 
என்னடா இங்கே வந்து நிக்கிற என்னாச்சி

ஒன்னும் இல்லை அபி

யாழினி  போய்  ரொம்ப நேரம் ஆகுது. எனக்காக கூட காத்திருக்காமல் போய்விட்டாள் என்று தேவா விடம் சொல்லவும் இருவரும் ஒன்றாக அவனை பார்க்க தானே என்று சொல்லிக்கொண்டு சிரித்தனர்.
இருவரும் வீட்டிற்க்கு கிளம்பி சென்றனர். ஆனால் யாழினி அவனோட காதலின் காதலன் வருகைக்காக காத்திருந்தாள். நேரம் கடந்து கொண்டே சென்றது. எப்பொழுது வருவான் அவன். இன்னும் எவ்வளவு நேரம் தான் காத்திருப்பது என்று மனதில் நினைத்து கொண்டே காத்திருந்தாள்.

நேரம் மாலை 7 மணி ஆகியது. 
அவன் வரவில்லை. இவளுடைய mobile சார்ஜ் இல்லாமல் ஆஃப் ஆகியது. கண்கள் கலங்கி கண்ணீர் வர ஆரம்பித்தது. கலங்கிய கண்களுடன் அவளுடைய ஊருக்கு செல்லும் கடைசி பேருந்தில் கிளம்பி சென்றால். தாமதமாக வீட்டிற்க்கு வந்ததால் கடைசி நாள் பிரெண்டலாம் பார்த்து பேசி வர லேட் ஆகிருசுனு சொல்லிவிட்டு சென்றால். 
அவளுடைய அறைக்கு சென்று mobile சார்ஜ் போட்டுவிட்டு அவனுடைய புகைப்படத்தை எடுத்து பார்த்துவிட்டு அழுக ஆரம்பித்தாள். அதில் இருப்பவன் யார்????
அவள் ஏன் யாரிடமும் அவளுடைய காதலனை அறிமுகம் செய்ய வில்லை. வெளிப்படுத்தவும் இல்லை... 

தேவா அவனுடைய வீட்டில் 
யாழினியை இன்று பார்க்க முடியவில்லை பேச முடியவில்லை என்று ரொம்ப வறுத்த பட்டான். இனிமேல் எங்கே பார்க்க போகிறோம். என்ன காரணத்தை வைத்து அவள் வீட்டின் தெருவுக்குள் சென்று வர முடியும். அபியை காரணம் காட்டி அவளை பார்க்க சென்றாலும் நாங்கள் பேசி கொள்ள முடியாதே ஆண்டவா எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது என்று கத்தி சொன்னான். இதோ போல கஷ்டங்கள் வரும் பொழுது தான் நமக்கு கடவுளின் நினைப்பு அதிகமாக வருகிறது. கடவுள் என்ன முடிவு பண்ணிருக்க பொராரோ தெரியவில்லை. காத்திருந்து என்னுடன் பயணித்து வாருங்கள்.
[+] 3 users Like Thamizhan98's post
Like Reply
#15
Good narration brother keep it up, nice update, yaar antha puriyatha puthir kadhalan ? Thaerinjikalam oru siriya idavaelaiku piragu.
[+] 1 user Likes Lashabhi's post
Like Reply
#16
(15-03-2024, 05:19 PM)Lashabhi Wrote: Good narration brother keep it up, nice update, yaar antha puriyatha puthir kadhalan ? Thaerinjikalam oru siriya idavaelaiku piragu.

Intha story eluthunavan love panna ponnoda lover avana than bro naan theduren
[+] 1 user Likes Thamizhan98's post
Like Reply
#17
Heart 
கவியாழினி ( யாழினியும் கலையாத கனவுகளும்)

10ஆம் வகுப்பு வரை அவளுடைய சொந்த கிராமத்தில் படித்துவிட்டு 11ஆம் வகுப்பு சேருவதற்கு 10கிலோ மீட்டர் தொலைவில் நகரத்தில் உள்ள  அரசு பெண்கள் பள்ளியில் சேர்ந்தால். 
புதிய பள்ளிக்கூடம் புதிய அனுபவம் புதிய நண்பர்கள் என நிறைய இருந்தாலும் அவளின் மனதுக்கு ரொம்ப நெருக்கமான தோழியாக அபி மட்டுமே இருந்தால். அபியும் யாழினியும் ரொம்ப ரொம்ப நெருங்கிய நண்பர்கள். அபிக்கு தேவா மட்டுமே நெருங்கிய தோழனாக இருந்தான். இப்பொழுது யாழினியும்.

தேவா அதே நகரில் ஆண்கள் மேல் நிலை பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன். படிப்பில் கொஞ்சம் சுமாராக இருந்தாலும் அனைவரிடமும் பண்பாக பழகும் மனம் உள்ளதால் பள்ளியில் அவனை பிடிக்காது என்று சொல்ல யாரும் இல்லை. மாணவர்கள் முதல் ஆசிரியர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒருவனே. 
ஒருநாள்  அபியை அழைத்து வர பெண்கள் பள்ளியின் வாசலில் காத்திருந்தான். அபியும் யாழினியும் ஒன்றாக வருவதை பார்த்து அவளை பார்த்த அந்த வினாடியே விழுந்தான் அவளின் விழிகளில். 
(யாழினியின் பார்வையில் இனி)

நானும் அபியும் பள்ளியின் நேரம் முடிந்து வெளியே வரும் பொழுது ஒருவனை கை காட்டி அவன் தான் என்னோட best friend தேவா உன்கிட்ட சொள்ளிருக்கென்ல அவன் தான் என்று கூறினால்.
நான் அவனை பார்ப்பதற்கு முன்பே அவன் என்னை பார்த்ததை நான் அறிந்தேன். இமைகள் இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தான். என்னடா இவன் நம்மளை இப்படி பார்க்கிறான் என்று நினைத்துக்கொண்டே நானும் அபியும் அவன் நிற்கும் இடத்திற்கு சென்றோம்.
அங்கே அவன் முதலில் பேச ஆரம்பித்தான் என் கண்களை மட்டும் பார்த்து

அபி உனக்கு ஒரு ப்ரெண்ட் இருக்கானு சொள்ளிருக்க ஆனா தேவதை மாதிரி ஒரு ப்ரெண்ட் இருக்கானு சொல்லவே இல்லையே

இதை அவன் சொல்லும் பொழுது அவனின் வலது கை இடப்பக்கம் உள்ள இதயத்தை தொட்டுக்கொண்டே சொன்னான். அவனிடம் நான் சாதாரணமாக ஒரு சில வார்த்தைகள் மட்டுமே பேசினேன். அவன் என் கண்களை விடாமல் பார்ப்பது புரிந்தது. பல பேர் சொல்லிருக்காங்க
யாழினி கண்ண பார்த்த பசங்க மயங்கிடுவாங்க அப்படின்னு இப்பொழுது தான் முதலில் பார்க்கிறேன். அவனிடம் பேச எனக்கு வார்த்தைகள் வர வில்லை. ஆண்களிடம் பேசி பழகி இருந்தால் கூட என்னால் பேசிருக்க முடியும். வீட்டில் இருக்கும் கட்டுப்பாடு நண்பன் என்று கூட பேச பசங்க இல்லை. பிறகு எப்படி அவனிடம் பேச முடியும்.
அபி கிலம்புவதாக கூறி அவனிடம் பைக்கில் கிளம்பினாள். நான் என்னோட ஊருக்கு செல்லும் பேருந்துக்காக காத்திருந்தேன்.
பேருந்தும் வந்தது. அவனின் நினைவுடன் பயணிக்க ஆரம்பித்தேன்.
என்ன ஆச்சி எனக்கு. முதன் முதலில் வெளி ஆண்களிடம் பேசுவதால் இப்படி ஆகிறதா. அப்படி என்றால் பஸ்ஸில் வரும் பொழுதும் போகும் பொழுதும் நமக்கு இது போல ஆனது இல்லையே. ஒரு சில வார்த்தைகள் கூட அவனிடம் மட்டும் பேச என்ன தயக்கம் எனக்கு. அவன் சொல்லிய தேவதை என்ற வார்த்தையில் மயங்கிவிட்டேனோ
என்ற நினைப்புடன் வீடு வந்து சேர்ந்தேன்.

நான் பள்ளிக்கு செல்வது படிப்பிற்காக மட்டும். இந்த வயதில் சில மாற்றங்கள் வர தான் செய்யும் ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் படிப்பினை மட்டும் குறிக்கோளாக இருப்போம் என்று நினைத்து கொண்டேன்.
அப்பப்போ தேவாவின் நினைவு வரும். இந்த வயதில் ஏற்படும் மாற்றங்கள் தானே என்று விட்டுவிடுவேன்.
அவனிடம் நட்பாக மட்டுமே பழக நினைத்தேன். அப்படி தான் பழகவும் பேசவும் செய்தேன்.

நாட்கள் செல்ல செல்ல தேவாவின் பார்வையும் அவன் என் மேல் கொண்ட பாசமும் பேசும் வார்த்தைகளும் என்னை காதலிப்பதாக எனக்கே தோன்றியது. ஆனால் எனக்குள் அந்த உணர்ச்சிகள் இல்லை. 

12ஆம் வகுப்பு ஆரம்பம். இந்த காலகட்டத்தில் நானும் தேவாவும் பார்த்து கொள்ளவோ பேசிகொள்ளவோ அதிகமான சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை. சந்த்தித்துக்கொள்ளும் நாட்களிலும் கூட தேவா என் மேல காட்டும் அக்கறையும் அவனின் பார்வையும் என்னை கஷ்டங்களுக்கு உள்ளாக்கியது. நான் அவனிடம் பேசுவதை நிறுத்தினால் அவன் மாருவன். என்னால் தானே அவன் இப்படி இருக்கிறான் சென்று அவனை சந்திப்பதை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்து வந்தேன். ஆனால் அபியை காணும் பொழுதெல்லாம் அவனும் கூடவே வருகிறான். என்னால் அதனையும் தவிர்க்க முடியவில்லை.
ஒரு நாள் கூட அவன் என் மேல் உள்ள காதலை சொல்லவில்லையே. அவனோட இயல்பான செயல் தான் இவ்வாறு என்னை நினைக்க வைக்கிறதோ என்று கூட நினைத்தது உண்டு. இந்த வயதில் அனைத்தும் மாயை என்றே நான் நினைத்தென்.12ஆம் வகுப்பு பொது தேர்வு. என்னால் முடிந்த அளவிற்கு எழுதி கொஞ்சம் சுமாரான மதிப்பெண்ணினை பெற்று அதே நகரத்தின் கொஞ்சம் தொலைவில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  b.com சேர்ந்தேன். அபியும் அதே கல்லூரியில் சேர கேட்டேன். எனக்காக அவளும் வந்தாள்.
[+] 3 users Like Thamizhan98's post
Like Reply
#18
Heart 
Story aarampaththil konjam sumaraga irunthaalum poga poga nandraga irukkum. Unmaiyana sambavam athanaal konjam konjam bore adikka than seium. 

Aadharavu tharungal nanbarkale
Like Reply
#19
Very Nice Update Nanba
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#20
Kathai konjum konjuma yaennakku puriya start aayirkku poga poga intha story oda set aayiduvaen.

Abhi character yaen friend Priya ya va niyabagum paduthirchu
[+] 1 user Likes Lashabhi's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)