Romance அவளுக்கென்ன அழகிய முகம்
#1
இந்த தளத்தில் நான் பல மாதங்களாக கதைகளை படித்து வருகிறேன். பல ஆசிரியர்கள் கதை எழுத ஆரம்பித்துவிட்டு சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நிற்பதை பார்க்கிறேன்.

நான் அவர்களை குறை சொல்ல மாட்டேன். ஏன் என்றால் நானும் பல நாட்கள் இந்த கதையை ஆரம்பித்துவிட்டு எப்படி மேற்கொண்டு எழுதுவது என்று திணறி இருக்கிறேன். நான் யாரையும் குறை சொல்லவில்லை.. அவரவர் விருப்பம் அவரரவர்களுக்கு. யாருக்காவது மனம் புண்பட்டிருந்தால் என்னை மன்னியுங்கள்.

அதனாலேயே நான் இந்த கதையை முழுதாக எழுதி முடித்துவிட்டு பதிவிடுகிறேன். ஆனால் ஒரே ஷாட்டில் பதிவு செய்யாமல், அடுத்தடுத்த பதிவுகள் ரெகுலராக வரும்.

இது என்னுடைய முதல் முயற்சி, உங்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

காமத்தை உடனே எதிர்பார்க்காதீர்கள். இந்த கதை மிக மெதுவாகவே நகரும்.
[+] 3 users Like rainbowrajan's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
1


சென்னையின் புறநகர் பகுதியில் சற்றே உள்ளடங்கியிருந்த சாலையில் கடைசியாக கட்டப்பட்டிருந்த டூப்ளெக்ஸ் வீட்டின் முன்புறம், ஒரு 35-36 வயது மிக்க மனிதன் கேட்டின் முன்னர் நின்றுகொண்டு...

"சார்... சார்... " என்று கூவிக்கொண்டிருந்தான்.

அவன் அருகே இரு யுவதிகள் மாடர்னாக உடை அணிந்துகொண்டு கேட்டின்மேல் கையை ஊன்றிக்கொண்டு காத்திருந்தார்கள்.

5 நிமிட கூவலுக்கு பிறகு கீழ் வீட்டின் கதவு திறந்தது. ஆஜானுபாகுவான ஒரு மனிதர் உள்ளேயிருந்து தலையை நீட்டினார்.

கேட்டின் அருகே நின்றிருந்த மனிதன்....

" சார்.. என் பெரு சுரேஷ்.. இங்கதான் பக்கத்துல இருக்கேன். To-Let போர்டு பாத்தோம்.. அதான் பாக்கலாம்னு வந்தோம்.."

புரோக்கர் என்று புரிந்துகொண்ட அந்த பெரியவர், பின்னால் நின்றிருந்த பெண்கள் இருவரும் அடக்க ஒடுக்கமாக நின்றவர்களை பார்த்தபடி..

" யாருக்கு வீடு ?"

" இதோ இவர்களுக்குத்தான் சார்.. ITல வேல செய்யறாங்க.. பக்கத்துல ஆபீஸ் இருக்கறதுனால இந்த ஏரியால வீடு பாக்கறாங்க.."

" நான் பேமிலிக்குத்தான் வாடகைக்கு குடுக்கறத்துப்பா.. சாரி "

உடனே இருபெண்களும் பதறி.. " சார் சார் கொஞ்சம் மனசு வையுங்க சார். வாடகையெல்லாம் ஒழுங்கா குடுத்திருவோம்."

" அதுக்கில்லம்மா.. உங்களுக்கு பக்கத்துல ஒரு லேடீஸ் ஹாஸ்டல் இருக்கே..."

" நாங்க அங்க இருக்க புடிக்காமதான் சார் வீடு பாக்கறோம்.", என இருவரில் ஒருத்தி சொன்னாள்.

" ஆமா சார் அந்த ரோட்ல காலிபசங்க தொல்லைபன்றாங்கன்னு சொன்னாங்க சார்", புரோக்கர் ஒத்து ஊதினான்.

அரைமனதுடன் கேட்டை திறந்து மூவரையும் உள்ளே வர சொன்னார்.

புரோக்கரிடம் சாவி கொடுத்து மேல் வீட்டை காமிக்கச் சொன்னார்.

புரோக்கர் இருவரையும் மேலே கூட்டிப்போய் வீட்டை சுற்றிக் காண்பித்தான். இரு பக்கத்திலும் தென்னை மரங்கள், சிலு சிலுவென காற்று, வசதியான இரண்டு பெட் ரூம்கள், சமையலறை என்று மிக வசதியாகவே இருந்தது.

" வாடகை ஜாஸ்தி கேப்பாரோ? ", புரோக்கரிடம் கேள்வி எழுப்பினாள் ஒருத்தி.

" அதெல்லாம் பேசிக்கலாம் மேடம்... உங்களுக்கு வீடு புடிச்சிருந்தா சொல்லுங்க.."

" சரி வாங்க கீழே போய் பேசலாம்."

" நீங்க இங்க இருங்க மேடம் நான் போய் பேசிட்டு வரேன்.", என்று சொல்லிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் கீழே ஓடினான்.

போய் 10 நிமிஷத்தில் மேலே வந்தான்.

" நான் அவர்கிட்ட பேசிட்டேன் மேடம்..", என கூறிவிட்டு வாடகையையும் அட்வான்ஸையும் கூற இருவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

" இவ்ளோ குடுக்க முடியாதுங்க.." என இருவரும் மறுக்க..

" மேடம் அவரு பெரிய ஜிம் வெச்சிருக்கார்.. ஜிம் மாஸ்டர்.. உங்களுக்கு நல்ல சேப்டி கூட.. சரி மேடம்.. நான் பேசிப்பாக்கறேன்.. இருங்க.."

" நாங்களும் வரோம்.." என்று இருவரும் கீழே வர... வீட்டுக்காரரே மாடிக்கு வந்துகொண்டிருந்தார்.

" வீடு புடிச்சுதா? வாடகை அட்வான்ஸ் எல்லாம் ஓகேவா?"

மஞ்சள் சுடிதார் போட்டிருந்த ஒருத்தி.. " சார் வீடெல்லாம் ஓகேதான்.. ஆனா வாடகை அட்வான்ஸ்தான் கொஞ்சம் அதிகமா இருக்கு.. நாங்க இப்போதான் வேலைக்கு சேந்திருக்கோம்.. எங்களால அவ்ளோ தரமுடியாது சார்."

பெண்களுக்கு மட்டும் வீட்டை கொடுக்க மனசில்லாமல் அவர்களை தட்டி கழிக்க வேண்டி சற்று அதிகமாகவே சொல்லி இருந்தார்.

" இந்த ஏரியால இந்த வாடகை கம்மி.. நீங்க கேட்டுப்பாருங்க.."

மஞ்சள் சுடிதாரின் முகம் அவரை வசீகரித்தது. எங்கோ பார்த்தது போலவே அவர் உணர்ந்தார். இருந்தாலும் தன்னுடைய பிரம்மச்சாரி வாழ்க்கைக்கு சரிப்பட்டு வராது என்று அவர்களாய் வீடு வேண்டாம் என்று சொல்ல வைக்க முயன்றார்.

மஞ்சள் சுடிதாரின் முகம் வாடி விட்டது.

கூட இருந்த பெண், " சரி வாடி ராணி வேற வீடு பாக்கலாம்" என்று இழுக்க...

" அவசர படாதீங்க மேடம்.... " என ப்ரோக்கர் தடுத்து நிறுத்தினான்.

வீட்டுக்காரை பார்த்து, " ராஜன் சார், கொஞ்சம் பாத்து செய்ங்க சார்." என்று தலையை சொரிந்துகொண்டு கெஞ்சினான்.

ராணியின் முகத்தை பார்த்த ராஜன், ஏதோ சொல்ல நினைத்தார்.. பிறகு பேச ஆரம்பித்தார்.

" சரிம்மா.. நீங்க ரெண்டு பெரும் கேக்கறதுனால சொல்றேன்.. நான் தனிக்கட்டை.. என்ன கீழே டிஸ்டர்ப் பண்ணாம தங்கிட்டு இருக்கனும். நீங்க வந்து தங்கினா உங்களுக்கு மட்டும்தான் வீடு.. ப்ரெண்ட்ஸ் பார்ட்டினு வீட்ல சத்தம் வரக்கூடாது.. வாடகை கரெக்டா 5 தேதிக்குள்ள பேங்க்ல விழுந்திரனும். உங்களுக்கு இது சம்மதம்னா சொல்லுங்க.. ", என்று பேசி முடித்தார் ராஜன்.

ராணியும் அவள் தோழியும் ஒருவரை ஒருவர் முகத்தை பார்த்து கொண்டார்கள். பிறகு ராணியே பேசினாள்.

" வாடகை கரெக்டா குடுத்திருவோம். கண்டிஷன்ஸ் எல்லாம் ஓகே.

எங்களுக்கு வாடகை அட்வான்ஸ் மட்டும் கொஞ்சம் குறைச்சுக் கோங்க சார்."

ராணியின் அழகான முகத்தை பார்த்தபடி.. " என்னடா இது தர்மசங்கடமான நிலைமை" என்று மனதில் நினைத்தார்.

ராஜன் மௌனமாக இருக்கவே, ராணியின் தோழி போகலாம் என்று கண்களில் செய்கை காட்டினாள்.

இருவரும் மெல்ல நகர்ந்து வாசலுக்கு செல்லவே...

" கொஞ்சம் இரும்மா.. " என ராஜன் நிறுத்தினார். இருவர் முகத்தையும் பார்க்க நல்ல பெண்களாக தெரிந்தது.

வாடகையை 20 சதம் குறைத்தான். அட்வான்ஸ் பணத்தில் 6 மாச அட்வான்ஸ் பணம் கொடுத்தால் போதும் என்று சொன்னான்.

ராணியும் அவள் தோழி ப்ரியாவும் சந்தோசமாக முகத்தை வைத்துக்கொண்டு..

" ரொம்ப தேங்க்ஸ் சார்.." என ராணி கை குலுக்க கை நீட்ட, ராஜன் கை குலுக்காமல் கை கூப்பி வணக்கம் வைத்தார்.

புரோக்கரிடம் மீண்டும் வரும்போது பாண்ட் பேப்பரில் அக்ரீமெண்ட் எடுத்து வர சொன்னார்.

அந்த வாரத்தின் கடைசியில் இரு பெண்களும் அக்ரிமென்டில் கையெழுத்து போட்டபின் மாடி வீட்டுக்கு குடியேறினார்கள்.

ஞாயிறு கிழமை காலை, சரியாக அட்வான்ஸை அவர் கையில் கொடுத்துவிட்டார்கள் பெண்கள் இருவரும்.

" ரெங்கம்மா.. இவங்களுக்கு காபி போட்டு கொடு" என்று குரல் கொடுக்க, உள்ளேயிருந்து 10 நிமிஷத்தில் 45-50 வயது மதிக்கத்தக்க பெண் காபி கொண்டுவந்தாள்.

ராணியும் ப்ரியாவும் அவர் யார் என தெரியாமல் முகத்தை பார்த்துக்கொண்டார்கள்.

" ரெங்கம்மா.. இங்க சமையல், துணி துவைக்க வேலைக்கு வர்றவங்க.. பக்கம்தான் வீடு...", ராஜன் இருவருக்கும் அறிமுகம் செய்தாள்.

" அப்படியா... எங்களுக்கும் அப்படியே எங்க வீட்டு வேலைக்கும் வாங்கம்மா.. எங்களுக்கும் உதவியா இருக்கும்.."

ராஜன், " மேல் வீடு தான ரெங்கம்மா, அப்படியே செஞ்சுடு. "

"சரிங்கய்யா"

பெரிதாக சாமான் தட்டுகள் இல்லை. ஞாயிறு விடுமுறை ஆதலால், இருவரும் பம்பரமாக சுற்றி வீட்டை அழகேற்றினார்கள். ராஜனும் தன் பங்குக்கு கனமான பொருட்களை தூக்கி வைக்க உதவி செய்தார்.

மாலையில் ராணி அவருக்கு டீ போட்டு கொடுக்க, அதை குடித்த ராஜனுக்கு பழைய நினைவுகள் வந்து போனது. அங்கிருந்து விடைபெற்றுக் கொண்டு கீழே வந்துவிட்டார்.

***
[+] 3 users Like rainbowrajan's post
Like Reply
#3
வெளியில் ஏதோ சத்தம் கேட்க, என்ன என்று பார்க்க தலையை நீட்டினார் ராஜன். அங்கே வாசலில் இரண்டு மூன்று வாலிபர்கள் நின்று கொண்டு பேசிகொண்டுருப்பதை பார்த்தார். யாரோ வழியில் போகிறவர்கள் என உதாசீனம் செய்துவிட்டு, பிரபல வார இதழை வாசிப்பதில் மூழ்கினார்.

" இந்த வீடுதான் மாப்ள.. மேல் வீடு.. "

" இன்னைக்கு பாத்து ரெண்டுல ஒன்னு கேட்டுட்டு போய்டணும்டா.."

" ஆமாடா.. ஆளு.. செம கட்ட மச்சி"

" டேய், அந்த ஃபிகரு என் ஆளு.. எவனாவது கண்ணு வெச்சீங்க ங்கோத்தா தொலைஞ்சீங்க" என்று முதலாமவன் கர்ஜித்தான்.

" அவ வர்றா மாப்பிள.. போய் சொல்லுடா" என்று இரண்டாவது தடியன் முதலாமவனை முன்னே தள்ளினான்.

ராணி பக்கத்தில் வந்தவுடன் முதல் வாலிபன், " ஹல்லோ... ..ஏங்க சொல்லாம கொள்ளாம ஹாஸ்டல்ல இருந்து போயிட்டீங்க?.. உங்கள எங்கெல்லாம் தேடினேன் தெரியுமா.. ஐ லவ் யூ ப்ளீஸ் எங்கூட வாங்க ஜாலியா இருக்கலாம்.." என கெஞ்சினான்.

" பொறுக்கி ராஸ்கல்.. என்னை என்னன்னு நெனச்சுக்கிட்டு இருக்க.. உனக்கு வேற வேலை இல்ல. ஆளும் மூஞ்சியும்.. உன்னை அப்பவே புடிக்கலைனு சொன்னேன்ல.. மறுபடியும் ஏன் தொல்லை பண்றே?.. ", ராணி எரிச்சலாய் கத்தினாள்.

முதல் வாலிபன் குரலை உயர்த்தி... " ஹேய்.. என்னா நினச்சுகிட்டு இருக்கே.. நீ பெரிய புண்டையா.. ஏதோ கொஞ்சம் அழகா இருக்கேன்னு பின்னாடி சுத்தினா, ரொம்ப துள்ளுற?... மூஞ்சில ஆசிட் அடிச்சிருவேன் பாத்துக்கோ.."

" ரப் ".... அவன் முகத்தில் பளாரென்று ஒரு அறை விழுந்தது. ராணி கட்டுக்கடங்காத கோபத்தில் அவனை அறைந்தாள்.

அதை எதிர்பார்க்காத முதல் வாலிபன், அவளை திருப்பி அடிக்க கையை ஒங்க.. அவன் கையை யாரோ பிடித்து இழுப்பதுபோல தோன்ற, பின்னால் திரும்பினான்.

ஆர்னோல்ட் ஸ்வார்ஸ்னேகர் போன்ற ஆஜானும்பகுவான உடம்பில் இருந்த ராஜன் அவனை அலேக்காக தூக்கி வீசினார். அதை பார்த்த மற்ற இருவரும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓட்டம் பிடித்தனர். ராணி கூச்சலிட்டதுமே வெளியில் வந்துவிட்டார் ராஜன்.

முதல் வாலிபன் செமத்தியாக ராஜனிடம் வாங்கி கட்டினான். அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்ய வரும் இன்ஸ்பெக்டர் தெரிந்தவர் என்பதால் அவரிடம் அவனை ஒப்படைத்தார். இன்ஸ்பெக்டர் அவனை எச்சரித்து அனுப்பினார்.

" தேங்க்ஸ் அங்கிள் " ராணி நன்றி சொல்ல...

" எதுக்குமா தேங்க்ஸ் எல்லாம்.. நீ நம்ம வீட்டு பொண்ணு .. உனக்கு ஒண்ணுன்னா நாங்க வரமாட்டோமா? "

அவரின் அக்கறையில் ராணி மகிழ்ந்தாள்.

" நீ ஏன் தனியா வர்றே.. பிரியா கூட வரலையா ?"

" அவ வேற ப்ராஜெக்ட் அங்கிள்.. டயமிங் ஒத்துவராது.. அடுத்த வாரம் ஸ்கூட்டி வண்டி வாங்கிடுவேன். "

" சரிம்மா.. பத்திரம் "

***
[+] 4 users Like rainbowrajan's post
Like Reply
#4
மாடி வீட்டுக்கு சென்று பார்க்க, அங்கே ரெங்கம்மா வீட்டை சுத்தம் செய்து வைத்திருந்தார். இரவு உணவும் தயாராக இருந்தது. அவள் குளித்து ரெடியாகி வந்தாள்.

" சரிம்மா.. நான் கிளம்பறேன்.."

" ரெங்கம்மா.. காசு வாங்காம போறீங்க.. இருங்க.."

" வேணாம்மா.. ஐயாவே குடுத்துட்டாரு.."

" அவர் ஏன் குடுத்தாரு.. ஏன், நாங்க குடுக்கமாட்டோமா ?"

" ஐயோ அப்படியில்லம்மா.. அவரு தங்கமான மனுஷன்... உங்ககிட்டயே வாங்கிக்கறேன்னு சொன்னேன்.. ஆனா அவருதான் நானே தரேன். வாடகையோட சேத்து வாங்கிக்கறேன்னு சொன்னார் "

" ம்ம் அப்படியா சொன்னாரு.. நான் பேசிக்கறேன் அவர்கிட்ட"

" கீழே என்ன பிரச்சனை? நானும் பாத்தேன்.. உனக்கு ஏன் எவ்ளோ கோவம் வருது.. அவனுக ரொம்ப மோசமான பசங்க.. அவனை நீ அடிச்சுட்டியே..நம்ம ஐயா இருந்ததால நீ தப்பிச்சே... இல்லாட்டி என்னாகிறது?"

" அவன் ஒரு பொறுக்கிப்பய.. அவனுக்கெல்லாம் பயப்படலாமா?.. உங்க ஐயா இல்லாட்டியும் நான் சமாளிச்சுடுவேன். எனக்கு கராத்தே ஜுடோ எல்லாம் தெரியும். "

ராணி தொடர்ந்தாள்..

" அது சரி, நான் உன்கிட்ட கேக்கணும்னு நெனச்சேன். உங்க ஐயா ஏன் தனிக்கட்டையா இருக்காரு ? உனக்கு தெரியுமா?"

" அவரு கதையை ஏம்மா கேக்கற.. அவரு ஒழுக்கமான மனுஷன்.. பிரமாச்சாரியாவே வாழணும்னு முடிவு பண்ணிட்டார்.. ஆனாலும் ஜிம்முக்கு வர சில பொம்பளைங்க அவரை வசியம் செய்ய பாத்தாங்க.. ஐயா கண்டிப்பானவரு.. அவங்களை ஜிம்மில்லிருந்து தொரத்திட்டாருன்னா பாத்துக்கோ.. "

" அவ்ளோ பெரிய கடவுள் பக்தரா அவரு.. நானும் பாக்கறேன்.."

" விளையாடாதம்மா.. விளையாட்டு வினையாயிடும்.. பாத்து நடந்துக்க பொண்ணே!!! "

" ச்சே ச்சே... சும்மா சொன்னேன் ரெங்கம்மா.. நீ போய் அவர் கிட்ட வத்தி வெக்காதே "

அப்போதுதான் உள்ளே வந்த ப்ரியாவிடம்... " நீ கொஞ்சம் புத்தி சொல்லும்மா.. இந்த பெண்ணுக்கு கோவமும் குறும்பும் ஜாஸ்தி.."

" என்னடி பண்ணி வெச்சே?" என்று பிரியா கேட்க மாலை நடந்ததை சொன்னாள். வீடு ஓனர் ரெங்கம்மாவுக்கு காசு கொடுத்ததையும் சொன்னாள்.

" சரி, நமக்கு லக்குதானே...காசு மிச்சம்.. விடு.. நீ கொஞ்சம் அந்த பொருக்கி பசங்க கிட்ட ஜாக்கிரதையா இரு. யாருகிட்டயும் வம்பு தும்புக்கு போகாம இரு. இந்த வீட்லயாவது நிம்மதியா இருக்கலாம்.. "

"அதெப்படி விட முடியும்.. நான் போய் அவருகிட்ட நீங்க ஏன் காசு கொடுத்தீங்கன்னு கேக்கத்தான் போறேன்..", என்று ராணி பிடிவாதமாக நின்றாள்.

" நீ சொன்னா கேக்க மாட்டே... இப்போவே போய் மல்லுக்கட்டாத... எனக்கு பசிக்குது.. நாளைக்கு பேசிக்கலாம் வா.. "

***
[+] 6 users Like rainbowrajan's post
Like Reply
#5
Super start bro
Like Reply
#6
super sago
Like Reply
#7
Very Nice Start Bro
Like Reply
#8
super start
Like Reply
#9
Intresting bro super story continue please
Like Reply
#10
hi nanba

congratulations for the new story.

nice starting nanba, nala plot choose panirukinga.

plz continue. waiting for update.
Like Reply
#11
2


இரு நாட்களுக்கு பிறகு, மாலையில் சீக்கிரம் வீட்டுக்கு வந்ததால் ராஜன் வீட்டில் இருப்பதை பார்த்தாள். ரெங்கம்மா சொன்னது ஞாபகம் வந்ததால் அவர் வீட்டுக்கு சென்று அவரிடம் கேட்கலாம் என்று கதவை தட்டினாள்.

கதவு திறந்துதான் இருந்தது. உள்ளே இருந்து வந்த ராஜன் ராணியை உள்ளே வந்து ஹால் சோபாவில் உக்காரசொன்னார்.

உக்கார்ந்துகொண்டே.. " அங்கிள், ரெங்கம்மாக்கு நீங்களே காசு கொடுத்துட்டீங்கன்னு சொன்னாங்க... ஏன் அங்கிள் நாங்களே குடுத்திருப்போமில்ல...?"

" ஓ அதுவா.. அவங்க அவசரமா பணம் தேவை படுது.. உங்கிட்ட கேக்கணும்னு சொன்னாங்க.. அதனாலதான் நான் குடுத்தேன்.. ஏன் என்னாச்சு ? எனி ப்ராப்லம் ? "

" ஹா.. அப்படியா.. நான் ஏதேதோ நெனச்சுட்டேன்.."

" என்ன நினைச்சே ?"

" அத விடுங்க.. உங்க காசை நான் திருப்பி கொடுத்துடறேன்.."

" என்ன அவசரம்.. மெதுவா வாங்கிக்கறேன்.."

" இல்ல அங்கிள்.. எனக்கு கடன் வாங்கறதும் பிடிக்காது.. கொடுக்கறதும் பிடிக்காது.. அதனால நான் உங்களுக்கு திருப்பி கொண்டத்துடறேன்.. இந்தாங்க" என்று 2000 தாள்களை நீட்ட..

" எங்கிட்ட சில்லறை இல்லையே ?"

" பரவாயில்ல. நீங்க நாளைக்கு குடுங்க.."

படபடவென பேசிவிட்டு, கையில் பணத்தை கொடுத்தபின் ராணி மாடிக்கு வந்துவிட்டாள்.

***

மறுநாள் காலை ராணி உற்சாகமாக எழுந்தாள். அன்று அவளுக்கு பிறந்த நாள்.. பிரியா இரவு லேட்டாக வந்ததால் உள்ளே அறையில் தூங்கிக் கொண்டிருந்தாள். அதிகாலையிலேயே ரெங்கம்மா வந்து காலை உணவையும் மதிய உணவையும் தயார் செய்துகொண்டிருந்தார்.

குளித்துவிட்டு குதூகலத்துடன் மார்பு வரை துண்டை கட்டிக்கொண்டு, வாயில் சினிமா பாட்டை பாடிக்கொண்டே வெளியே வந்தாள்.

ஹே என்ன வேணா நடக்கட்டும்

நான் சந்தோசமா இருப்பேன்

உசுரு இருக்கு வேறென்ன வேணும்

உல்லாசமா இருப்பேன்.

எனக்கு ராணியா நான் வாழுறேன்

எதுவும் இல்லனாலும் ஆளுறேன்

ஹே ரகிட ரகிட ரகிட… ஊ

ரகிட ரகிட ரகிட… ஊ

வெளியே வருகையில், துண்டை விரித்து இரு கைகளிலும் பிடித்துக் கொண்டு பாடலுக்கு ஆட, அவளின் நிர்வாண உடல் குலுங்கி ஆடியது.

உடை மாற்றிக்கொண்டு ஹாலுக்கு வர அங்கே ராஜன் நாற்காலியில் உக்கார்ந்திருந்தார்.

" வாங்க அங்கிள் .. எப்போ வந்தீங்க..? ரெங்கம்மா சார் வந்துருக்கார்னு சொல்ல வேணாமா? என்ன நீ ?"

" நீ அப்போதான் குளிக்க போன கண்ணு.. அதான் அவரு காத்திருக்கேன்னு சொன்னாரு" என்று உள்ளே இருந்தே குரல் கொடுத்தார் ரெங்கம்மா.

" காபி சாப்பிடறீங்களா ? ஏன் முகமெல்லாம் வேர்த்திருக்கு.. இருங்க ஃபேன் போடறேன்"

" இல்ல பரவாயில்ல...ரெங்கம்மா குடுத்தாங்க.. நானும் சூடா பாத்து குடிச்சேன். " என்று சொல்லும்போது பாத்து என்ற வார்த்தையை மற்றும் சற்று தயங்கி இழுத்தார்.

" அப்போ சரி, என்ன விஷயமா வந்திருக்கீங்க ?"

" நேத்து சில்லறை இல்லேன்னு சொன்னேல்ல.. அதான் திருப்பிக் கொடுக்கலாம்னு வந்ததேன்."

"ஓ அதை ரெங்கம்மா கிட்டயே குடுத்திருக்கலாம்ல.."

" காசு விஷயத்தில் நீ கறாருன்னு நேத்து தெரிஞ்சது. அதான் கையில கொடுக்கலாம்னு வெயிட் பண்ணேன் "

என்று சொல்லிவிட்டு பணத்தை திருப்பி கொடுத்தார்.

" தேங்க்ஸ், இன்னைக்கு எனக்கு பொறந்த நாளு! "

" ஓ.. ஹாப்பி பர்த்டே டு யூ.. வாழ்க வளமுடன்."

" தேங்க்ஸ் அங்கிள்" என்று கீழே குனிந்து காலை தொட்டு கும்பிட்டாள்.

" சரி நான் வரேன்" என்று சொல்லிவிட்டு கீழே இறங்கி சென்றார் ராஜன்.

ரகிட ரகிட ரகிட… ஊ என்று மீண்டும் அந்த பாடலையே திரும்பி பாடிக்கொண்டிருக்க அவர் உக்கார்த்திருந்த நாற்காலியின் எதிரில் இருந்த சிறிய கண்ணாடியில் முகம் பாத்து நெற்றியில் இருந்த பொட்டை சரி செய்தாள்.

பிறகு ப்ரியாவை எழுப்பலாம் என்று படுக்கை அறைக்கு செல்லும்போது அவள் மண்டையில் டாண் என்று ஒரு பிளாஷ் வந்து போனது. பதட்டத்துடன்.. " ரெங்கம்மா.. ரெங்கம்மா இங்க வா" என்று கூச்சலிட்டு கூப்பிட்டாள்.

என்னம்மா என்னாச்சு என அவரும் சமையலறையிலிருந்து ஓடி வர..

" நீ இங்க நில்லு!!! ". ரெங்கம்மாவை ரூமின் உள்ளே நிற்க வைத்தாள்.

அவரும் அங்கே நிற்க.. " அவர் வரும் போது டிவி போடலியா?"

" இல்ல கண்ணு.. அவரு வேண்டாம்னுட்டாரு.."

எதிரில் இருந்த 43 இன்ச் டிவியில் ரெங்கம்மா பேசுவதும் நிற்பதும் அப்படியே வெளிச்சத்தில் பிரதிபலிக்க.. அத்தனை நேரம் தான் ஆடிய நிர்வாண ஆட்டத்தை ராஜன் பார்த்துவிட்டார் என்ற ஷாக்கில் ராணி தலையில் கைவைத்து உக்கார்ந்து விட்டாள்.

தூங்கி கொண்டிருந்த ப்ரியாவை அடித்து எழுப்பிவிட்டாள் ராணி.

" ஐயோ .. அம்மா..ஏய் ஏய் என்னாச்சு.. ", பிரியா அரைத்தூக்கத்தில் பதறி எழுந்தாள்.

" போச்சு.. போச்சு.. எல்லாம் போச்சு.. மானமே போச்சு.. நீ தூங்கிட்டு இருக்கியாடி குண்டி.. "

" யார் மானம் போச்சு.. ? எங்க போச்சு ?"

" என்னோட மானம் தாண்டி சனியனே... பொறந்த நாள் அதுவுமா இப்படி போச்சே.." என்று மாரில் அடித்துக்கொண்டு புலம்பினாள்.

" பொறந்த நாளா? உனக்கா?. ஹாப்பி பர்த்டே " என்று கை கொடுத்தாள் ப்ரியா.

கையை தட்டி விட்டு புலம்பினாள் ராணி.

" எதுக்குடி இப்படி பொலம்பற.. என்னன்னு சொன்னாத்தான எனக்கு தெரியும் "

ராணி நடந்ததை சொல்ல...

" ஹா ஹா ஹா ஹா " என்று தன் குண்டு உடம்பே குலுங்க சிரித்தாள் பிரியா.

" உனக்கு சிரிப்பா இருக்கா ? " என அவளை முதுகில் மொத்தினாள் ராணி.

" பொறந்த நாளுக்கு பொறந்த நாள் ட்ரஸே போட்டு ஆட்டம் ஆடியிருக்கே.. அதை அந்த வயசான பிரம்மச்சாரிக்கு வேற தரிசனம் காட்டியிருக்கே .. ஹா.. ஹா... ", அடக்க முடியாமல் பிரியா சிரித்தாள்.

ராணி வெட்கமும் அழுகையுமாக அவளை மீண்டும் மொத்தினாள்.

***

அடுத்த ஒரு வாரத்தில் ராணி, ராஜனின் கண் படாமல் வீட்டுக்கு வந்து போனாள். ராஜனும் அவளை தூரமாக பார்க்கும் போதே அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிடுவார்.

இருவரின் கண்ணாமூச்சி ஆட்டம் 2 வாரங்களுக்கு தொடர்ந்தது.

***
[+] 6 users Like rainbowrajan's post
Like Reply
#12
Semma update bro
Like Reply
#13
SUPER SAGO
Like Reply
#14
Nice and super update bro thanks for update please continue
Like Reply
#15
hi nanba

unga thinking and writing really sema super.

plz continue
Like Reply
#16
wonderfullll
Like Reply
#17
"டொம்"

பக்கத்தில் இருந்த ட்ரான்ஸ்போர்மர் வெடித்த சத்தம் அந்த ஏரியா முழுவதும் கேட்டது. கனத்த மழை அறிவிப்பு வந்திருந்ததால் பேய் மழை பெய்தது. ஆபீசுக்கு சென்று வந்த ராணி மழையில் தொப்பல் தொப்பலாக நனைந்து வீட்டுக்கு வர... ராஜன் வாசலிலேயே குடையுடன் நின்றார்.

ராணியை ரோட்டின் முனையில் பார்த்தவர், அவளை நோக்கி குடையுடன் ஓடி வந்தார். இருவரும் அந்த பெரிய குடையில் வீட்டை அடைந்தனர். அவளுக்கு தலை துவட்ட துண்டை கொடுத்தார்.

அவள் தலையை துவட்டிக் கொண்டு உடலை அடையின் மேலேயே அந்த துண்டில் துடைத்தாள்.

" தேங்க்ஸ் அங்கிள்.."

" இட்ஸ் ஓகே... கரண்ட் வேற போய்டுச்சு.. இந்தா மெழுகுவத்தி.. ரெங்கம்மா மழையினால இன்னக்கி சீக்கிரமே வீட்டுக்கு போய்ட்டாங்க .. உங்களுக்கும் சேத்து இங்கயே சமைச்சிட்டாங்க.. வந்து சாப்பிட்டுட்டு போம்மா .."

" சரி அங்கிள்.. நான் போய் ட்ரஸ் மாத்திட்டு வரேன் "

அவள் மாடிக்கு சென்று மெல்லிய இரவு உடையை மாற்றிக்கொண்டு கீழே வந்தாள்.

இருவரும் பேசிக்கொள்ளாமல் சாப்பிட்டார்கள்.

பிரியா போன் செய்தாள்.. மழையினால் ஆபீஸ் கேப் வரமுடியாது என்பதால், ஆபீஸ் பக்கத்தில் இருக்கும் லாவண்யா வீட்டில் அன்று இரவு தங்கி விடுவதாக சொன்னாள்.

"அடிப்பாவி" என்று மனதில் நினைத்துக் கொண்டாள் ராணி.

சாப்பிட்டு முடித்தவுடன் மெழுகுவத்தி எடுத்துக் கொண்டு மேலே செல்வதாக கூறிச்சென்ற ராணி, மாடிப் படியேற.. ஆறாவது படியில் அவளுடைய ஈரமான நயிட்டி தடுக்கி விழுந்தாள்.

உருண்டு உருண்டு கீழே வந்து விழ, ராஜன் வீட்டுக்குள் இருந்து வந்து அவளை தூக்கி எழுப்பினார்.

"ஆ ...அம்மா வலிக்குதே.." ராணியின் கால் சுளுக்கிக்கொண்டு வலியில் கத்தினாள்.

அவளை கோழிக்குஞ்சு தூக்குவது போல தூக்கிக்கொண்டு அவருடைய வீட்டுக்குள் சென்றார்.

சோபாவில் படுக்க வைத்து காலை நீட்டி வலிநிவாரணி தைலம் தடவினார்.

வலியில் அப்படியே அங்கேயே தூங்கிவிட்டாள்.

***

காலை எழுந்து பார்த்த ராணி, எங்கே இருக்கிறோம்.. எப்படி இந்த மெத்தைக்கு வந்தோம் , ஏன் இங்கே இருக்கிறோம் குழப்பத்தில் தடாலென்று எழுந்திருக்க முயல.. கால் சுளுக்கு இன்னும் விடாமல் இருக்கவே.. வலியில் கத்தினாள்.

ராஜன் ஓடி வந்து அவளை தூக்கி மெத்தையில் உக்காரவைத்தார்.

" ஸ்ட்ரைன் பண்ணிக்காத.. சுளுக்கு பலமா இருக்கு.. பிராக்ட்சர் கூட ஆயிருக்கலாம். நீ இங்கயே இரு.."

அவளுக்கு சூடாக காபி கொடுத்தார். காலில் துணிக்கட்டு போட்டு காலை ஆடாமல் வைத்திருக்க சொன்னார்.

மழை இன்னும் 2 நாளுக்கு பலமாக பெய்யும் என்பதால் சென்னை ஸ்தம்பித்தது.

ராஜன் அவளை பக்கத்தில் இருந்த டாக்டரிடம் ஆட்டோவில் அழைத்து சென்றார். டாக்டர் ஒரு பலமான மாவுக்கட்டை போட்டு அனுப்பினார். 4-5 நாட்களுக்கு மருந்து எழுதிக் கொடுத்தார்.

அந்த 4 நாட்களில் ராணியை நிஜ மகாராணியாகவே உபசாரித்தார். அவளுக்கு உணவு, மருந்து கொடுத்து பரிவுடன் பார்த்துக் கொண்டார். ரெங்கம்மாவிடம் சொல்லி சத்தான உணவை சமைத்துக் கொடுக்கச்சொன்னார். மட்டன் சூப், சிக்கன் சூப் என்று உபசரிப்பு பலமாகவே இருந்தது. ரெங்கம்மாவுக்கே ராஜனின் நடவடிக்கை ஆச்சரியத்தை கொடுக்க, அவர் வாய் விட்டே கேட்டுவிட்டார்.

" என்னமோ தெரியல ரெங்கம்மா.. ராணியை பாத்தா நம்ம வீட்டு பொண்ணாவே எனக்கு தோணுது.. பாவம் சுளுக்கு வலியில துடிக்கும்போது ஹெல்ப் பண்ணாம எப்படி இருக்க முடியும் ?"

ராணி அவர் சொன்னதை கேட்டாள்.

2 நாள் கழித்து வந்து பார்த்த பிரியா, அவளின் நிலைமையை கண்டு வருத்தப்பட்டாள்.

" சாரிடி.. வழியெல்லாம் ஒரே மழை தண்ணி.. வண்டியே வரல.. நான் லாவண்யா ட்ரஸ போட்டு 2 நாள் சமாளிச்சேன்.. "

" பரவாயில்ல ப்ரியா.. நீ என்ன செய்வே.. எனக்குத்தான் டயமே சரியில்லை.."

" டோன்ட் ஒர்ரி.. சரியாயிடும் " பிரியா ஆறுதல் சொன்னாள்.

" உனக்கு பணிவிடை செய்யத்தான் அனுமார் பக்தரை செட் பண்ணிட்டியே.. அப்புறம் என்ன ? "

" ச்சீ போடி...கிண்டலடிக்காத.. "

" நான் விழுந்திருந்தா சாத்தியமா இவ்ளோ உபசரிப்பு கிடைச்சிருக்காது.. எல்லாம் உன்னோட பர்த்டே தரிசனம்தான் காரணம்னு நினைக்கிறேன்.."

" அடி விழும் பாத்துக்கோ.." என்று அவளின் முதுகில் இரண்டு வைத்தாள் ராணி.

" சரி சரி.. ஆள் எப்படி ?"

" நீ நினைக்கிற மாறி இல்ல.. ரொம்ப ஜென்டில்மேன் தெரியுமா ?"

" பாருடா.. சப்போர்ட் பலமா இருக்கே... பாத்துடீ .. இங்கயே தங்கிராத.. மேல் வீடுதான் நம்மளுது. ஞாபகம் இருக்கட்டும்...

சரி உங்கம்மாக்கு அடிபட்டதை சொன்னியா ?"

" இல்லடி.. சொன்னா அவங்க ரொம்ப பயப்படுவாங்க.. இப்போதான் கொஞ்சம் சரியாயிடுச்சே.. அப்புறம் சொல்லிக்கலாம்.."

வார கடைசியில் கால் குணமாக மாடி வீட்டுக்கு சென்றாள் ராணி. ஒருவாரம் அவளை அக்கறையுடன் பார்த்துக் கொண்டது அவளிடம் கண்ணியமாக நடந்து கொண்டது, ரெங்கம்மாவிடம் தன்னை பற்றி சொன்னது, பிரியா அவளை சீண்டியது என பலவிதமான எண்ணங்களை சுமந்துகொண்டு மாடிக்கு சென்றாள்.

***

" ச்சே.. நான் ஆபீஸ் கேப் மிஸ் பண்ணிட்டேன்.. இப்போ என்ன பண்றது?"

யோசித்துக்கொண்டே கீழே இறங்கி வந்த ராணி, ராஜனின் புல்லட் வண்டி கீழே நின்றிருப்பதை கண்டாள்.

சட்டென்று வீட்டுக்கு உள்ளே புகுந்து...

" வாங்க வாங்க டயம் ஆயிடுச்சு.. என்னை ஆபீஸ்ல ட்ராப் பண்ணிடுங்க.." என பரபரக்க.. ராஜன் கண்களை உருட்டி அவளை பார்த்தார்.

" என்ன பாக்கறீங்க.. அப்புறமா என்னை உத்து உத்து பாக்கலாம்.. இப்போ என்னை ஆபீஸ்ல கொண்டுபோய் விட்டுடுங்க. கேப் மிஸ் பண்ணிட்டேன்." கைகள் பரபரக்க அவருடைய புல்லட் சுவரில் மாட்டியிருந்த சாவியை எடுத்து அவர் கையில் திணித்தாள்.

எதுவும் பேசாமல் அவரும் வண்டியின் பில்லியனில் (pillion) அவள் உக்கார, வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.

அவர் முதுகில் சாய்ந்துகொண்டு இருக்க, அவர் நெளிந்தார்.

" ஏன் இப்படி நெளியறீங்க.. வண்டிய பாத்து ஓட்டுங்க.. உங்களுக்கு வண்டி ஓட்ட தெரியுமா தெரியாதா ?"

" நீ கொஞ்சம் தள்ளி உக்கரலாம்ல..?"

" ஏன்? ஏன் தள்ளி உக்காரனும்.. ?"

" இல்ல... எனக்கு வண்டி ஓட்ட சங்கடமா இருக்குல்ல ?"

" உங்க வண்டியில ஒரு பெண்ணை ஏத்திட்டு போனதே இல்லையா ?"

" ஆமா .."

" அப்போ நான்தான் ஃபர்ஸ்ட்டா? நல்லதா போச்சு.. பழகிக்கோங்க "

" உனக்கு கூச்சமா இல்ல ?"

" இல்லை.. நான் இப்படிதான் வருவேன். நீங்க மட்டும் பர்த்டே அன்னைக்கு என்னை பாத்துட்டு போயிட்டீங்க.. அப்போ எங்க போச்சு உங்க கூச்சம் நாச்சம் எல்லாம் ?"

" அது தற்செயலா நடந்தது. நான் அதை அப்போவே மறந்துட்டேன்.. "

" ஏன் நான் இங்க இருக்கேன்னு ஒரு குரல் கூட கொடுக்கல? நல்லா பாத்து என்ஜோய் பண்ணணும்னுதான ?"

" ச்சே ச்சே அப்படியெல்லாம் இல்ல.. நானே உனக்கு தர்மசங்கடம் கொடுக்கக்கூடாதுன்னுதான் எதுவும் இதுவரை பேசல.. நீதான் அதப்பத்தி இப்போ ஞாபகப் படுத்தற "

" ஓ .. என்னை குத்தம் சொல்லறீங்களா..? நாந்தான் உங்களுக்கு ஞாபகப் படுத்தறேனா ? சரிதான்.. இப்போ ஞாபகம் வந்துருச்சா? "

ராஜன் ஒன்றும் பதில் பேசாமல் வரவே, ராணி மீண்டும்...

" ஒரு சாரி சொல்லலாம்ல?"

" சாரி"

" Accepted. நானும் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும்.."

" எதுக்கு ?"

" என்னை எங்கம்மாவை விட நல்லா பாத்துக்கிட்டதுக்கு, ஜென்டில்மேனா நடந்துக்கிட்டதுக்கு, அப்புறம் என்னை தூக்கிட்டு போய் தூங்கவெச்சதுக்கு.. இப்படி எல்லாத்துக்கும்.."

" இட்ஸ் ஓகே. "

" அப்புறம் இன்னொன்னு சொல்லணும்..என்னோட வண்டி மழையில் நனைஞ்சு ஸ்டார்ட் ஆகலேன்னுதான் மெக்கானிக்கிட்ட கொடுத்திருக்கேன். ரெடியாக இன்னும் 4 நாள் ஆகும்.. அதனால நீங்கதான் என்னை பிக்கப் ட்ரோப் பண்ணனும்... செய்வீங்களா ?"

ராஜன் பதில் சொல்லவில்லை. எப்படி தவிர்ப்பது என்று யோசிக்க அவருக்கு அவளிடம் பொய் சொல்ல வரவேயில்லை.

" என்ன பேச்சையே காணோம்...? "

" இல்ல ஆபீஸ் கேப்... ? " என்று இழுத்தார்..

" அப்போ என்னை வண்டியில் கூட்டிட்டு போக விருப்பமில்லை.. அதான ? சரி நான் பாத்துக்கறேன்.. "

ராணியின் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தை பார்த்த ராஜனுக்கு மனதில் ஏதோ பிசைய...

" சரி சரி.. நானே கூட்டிட்டு போறேன்..", அரை மனதுடன் தலை ஆட்டினார்.

ராணி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு... அவரிடம் பொய்யான கோப முகத்துடன்.. " ஈவினிங் 5 மணிக்கு வாங்க .. வந்தவுடனே எனக்கு மெசேஜ் பண்ணுங்க. ஓகே ?"

ஆஃபீசுக்குள் நுழைத்தாள் ராணி.

அந்த நான்கு நாட்களும் அவளை ஆஃபிஸில் விட்டுவிட்டு கூட்டி வந்தார். ரெங்கம்மாவுக்கு ஆச்சரியமோ ஆச்சரியம். இந்த துடுக்கு பெண்ணிடம் ஏன் இப்படி பம்முகிறார் என்று அவள் யோசித்தாள். அவளுக்கும் புரியவில்லை. பிரியாவுக்கு ஷிபிட் மாறிவிட்டதால் அவள் வருவதும் போவதும் நேரம் காலமில்லாமல் இருந்தது.

ஒருமுறை சாலையின் குண்டு குழியில் வண்டி ஏறி இறங்க அவளின் ஆரஞ்சு பழ பந்துகள் அவரின் முதுகை பதம் பார்த்தது. அவருக்கு சுண்ணி டக்கென்று துடித்தது. அவளுக்கும் உடலில் ஏதோ செய்ய.. அவரின் தோளை அழுத்தி பிடித்துக் கொண்டாள்.

அடுத்த நாள் வண்டியில் செல்லும் போது இருவரும் பேசிக்கொண்டே வந்தார்கள்.

இல்லையில்லை, ராணி பேசிக்கொண்டே வந்தாள். ராஜன் மௌனமாக கேட்டுகொண்டு கேள்விக்கு பதில் சொல்லிக்கொண்டே வந்தார்.

" அது என்ன... என்னை வெயிட் லிஃப்ட்டிங் தூக்கற மாதிரி அப்படியே தூக்கிட்டு டாக்டர் கிளினிக் போறது? பிரியா எவ்ளோ கிண்டல் பண்ணா தெரியுமா ?"

" வலியினால உன் காலை கீழேயே வைக்க முடியல.. அதுக்காகத்தான் உன்னை தூக்கிட்டு போனேன்.."

" சரி.. ஏன் என்னை என் வீட்டில விடாம, உங்க வீட்ல ஏன் தங்க வச்சீங்க? மாடில கொண்டுபோய் விட வேண்டியது தான ?"

ராஜனுக்கு அவள் கேள்வி நியாயமாகப் பட்டது. அவரால் பதில் சொல்ல முடியவில்லை.

" தப்பு தான்.. நான் டாக்டர் சொன்னதுனால, எதுக்கு மாடிப் படி ஏறி இறங்கி சிரமப்படணும்.. கீழேயே இருக்கட்டும்னு நினைச்சேன்.. அதிருக்கட்டும்... நீ இப்போ இவ்ளோ பேசறியே.. அப்போவே என்னை எங்க வீட்டில விடுங்கன்னு சொல்லவேண்டியதுதானே... "

அதுவரைக்கும் பட படவென பொரிந்து தள்ளிய ராணி மௌனமானாள். அவள் இதழில் ஒரப்புன்னகை பூத்தது.

அதற்குப்பின், ராணி அவரின் முதுகில் தன்னுடைய இளம் மார்புகளை சாய்த்து தடவியபடியே வருவாள். அவருக்கு அது ஒரு சுகானுபவமாக இருந்தது. அன்று இறங்கும் போது அவருக்கு பிளையிங் கிஸ் முத்தமிட்டுவிட்டு ஆபீசுக்கு ஓடிவிட்டாள்.

***

வண்டியில் போகும்போது ஒருநாள் அன்று ராஜனிடம் அடி வாங்கிய வாலிபன் வழியில் பார்த்து அவருக்கு சல்யூட் அடித்தான். அவன் திரும்ப பிரச்னை செய்கிறானா என்று ராணியிடம் கேட்டார். அவளை இல்லை என்று பதில் சொல்ல, அவனை அருகில் அழைத்தார்.

கைகட்டி பம்மியபடி வந்த அவன்.... " குட் மார்னிங் சார்.. இவங்க உங்களுக்கு வேண்டியவங்கனு எனக்கு தெரியாது சார்.. மன்னிச்சுக்கோங்க.. மேடமை இனிமே தொந்தரவு செய்யமாட்டேன் சார்.. "

அவனும் ராணியிடம் " சாரி சிஸ்டர்.." என்று மன்னிப்பு கேட்டான். அவனை ஒரு வேலைக்கு சிபாரிசு செய்து அனுப்பி வைத்தார். ராஜனின் கனிவான கவனிப்பில் ராணி கரைந்து கொண்டிருந்தாள்.

***

" நான் ஆம்பளைங்க கிட்ட எவ்ளோ திமிரா நடந்துக்குவேன் தெரியுமா? உங்களுக்கு எப்படி பொம்பளைகளை பிடிக்காதோ எனக்கும் பசங்களை பிடிக்காது... "

" எனக்கு பொம்பளைங்கள பிடிக்காதுன்னு யாரு சொன்னா?"

" ஆமா அது தேறிஞ்சுக்க பிஹெச்டி படிக்கணுமா என்ன? எல்லாம் ரெங்கம்மா சொல்லிட்டாங்க "

" ஓ.. சரி... உனக்கு ஏன் பசங்கள பிடிக்காது? "

" எல்லாம் சீட்டர்ஸ்.. ஏமாத்து பசங்க.."

" லவ் ஃபெயில்யரா?"

" என்ன இன்வெஸ்டிகேஷனா? உங்களுக்கு ஒன்னு சொல்லவா.. நான் யாரையும் இதுவரை லவ் பண்ணல.. போதுமா ?"

" இல்ல சும்மாத்தான் கேட்டேன்..."

பிறகு இருவரும் வழி முழுவதும் மௌனமாகவே வந்தார்கள்.

***

அன்று மாலை ராணியை கூட்டிவரும்போது மழை தூற ஆரம்பித்தது.. பலமாக அடிக்கவே ஒரு பஸ் ஸ்டாண்டில் ஒதுங்க வேண்டியதானது. கூட்டமாக இருந்தது. மழையில் நனைந்து ராணியின் உடை உடலை ஒட்டிக் கொண்டது. அங்கிருந்த ஆண்களின் கண்கள் அவளை மேய்வதை ராஜன் கவனித்து அவளை மறைத்துக்கொண்டு நின்றார்.. அவர் ஏன் ஒட்டி மறைந்து நிற்கிறார் என பார்க்க மற்றவர்கள் தன்னை பார்க்கக்கூடாதென்று நிற்கிறார் என அவளுக்கு புரிந்தது. கூட்ட நெரிசலில் இருவர் உடலும் ஒட்டிக் கொண்டது. ராணியின் மனதில் போராட்டம் ஆரம்பித்தது. ராஜனுக்கு அவளை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே ஓடிக் கொண்டுருந்தது. ஏன் அப்படி தோன்றுகிறது, நாம் ஏன் இப்படி மாறிக் கொண்டு இருக்கிறோம் என்ற கேள்விக்கு அவரால் இதுவரை பதில் கண்டுபிடிக்க முடியவில்லை.

மழை நின்றவுடன், விரைந்து வீடு வந்து சேர்ந்தார்கள்.

" மழை வரும்னு தெரியுமில்ல... எனக்கும் உங்களுக்கும் ஒரு ரெயின் கோட் கொண்டு வரணும்னு தோணல ?"

" இல்ல... மறந்துட்டேன்...சாரி.."

" நீங்க மறந்த மாதிரி தெரியல.. என்னை மழையில நனைக்கவெச்சு ஈரத் துணியோட பாக்கணும்னு ஆச போல "

முகத்தில் அறைந்தது போல இருந்தது ராஜனுக்கு. அவரின் முகம் போன போக்கை கண்ட ராணி, தவறாக பேசிவிட்டோம் என்று முகம் வாடினாள்.

பிறகு சுதாரித்துக் கொண்டு, " நான் உங்கள தப்பா நினைக்கல.. சும்மா எப்பவும் போலத்தான் டீஸ் செஞ்சேன். தப்பா நினைக்காதீங்க.."

அவர் வண்டியை நிறுத்திவிட்டு எதுவும் பேசாமல் திரும்பி வீடு நோக்கி நடக்க.. ராணி அவரை சமாதான படுத்த வழி தெரியாமல் தவித்தாள். ஓடிச்சென்று அவரின் முதுகில் ஏறிக்குதித்து அவரின் கன்னத்தில் இச்சென்று ஒரு முத்தமிட்டு விட்டு இறங்கி, திரும்பி மாடிக்கு ஓடினாள்.

அவள் ஓடுவதையே பார்த்து, " மறுபடியும் கீழே விழுந்துடாத.. அப்புறம் நான் தூக்க வரமாட்டேன்.." என சத்தம் போட்டார்.

" பாக்கலாம் பாக்கலாம்.. " என்று பழிப்பு காட்டிவிட்டு அவளுடைய ஈரமான உடையை, கைகளால் முகத்தில் ஆரம்பித்து அப்படியே மெதுவாக அவள் மார்புகளை அழுத்தியபடி இறங்கி, வயிறை கசக்கி அப்படியே இடுப்பை வளைத்து திரும்பி நின்று புட்டங்களை தடவி மழை நீரை எடுப்பது போல அவருக்கு நடிகைகள் டான்ஸ் ஆடி மயக்குவது போல ஒரு ரியல் ஷோ காட்டினாள். அவள் செய்யும்போது அவள் உதடுகளை கடித்து, முகம் பிரகாசமாகி அட்டகாசமாக ஒரு கவர்ச்சி நடனத்தை ஓரிரு நிமிடங்களில் நடத்தினாள்.

கோபத்தில் கத்திய ராஜன் அவளின் செய்கையில் மெய்மறந்து வாய்பிளந்து பார்த்தார். அவர் பார்க்க பார்க்க ஒரு பிளையிங் கிஸ்சை ஊதிவிட்டு வீட்டுக்குள் ஓடினாள்.

அக்கம் பக்கம் யாரவது பார்க்கிறார்களா என்று சுத்தி முத்தி பார்க்க, அடித்த மழையில் அந்த தெருவே அமைதியாய் இருந்தது, ராஜனின் இதயத்தை தவிர.

***
[+] 5 users Like rainbowrajan's post
Like Reply
#18
Fantastic update
Like Reply
#19
இந்த கன்னி முயற்சிக்கு ஆதரவு கொடுக்கும் உங்களுக்கு என்னுடைய வணக்கங்கள்.
[+] 1 user Likes rainbowrajan's post
Like Reply
#20
Very beautiful updates
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)