மான்சி கதைகள் by sathiyan
#1
நிலையான எச்சரிக்கை ;சில சத்யன் கதைகளை மறு  பதிவிடும் முயற்ட்சி .யாருக்காவது ஆட்செபணை இருந்தால் thread டெலிட் செய்யப்படும்

1-என் மனைவியாக  மான்சி                                           https://xossipy.com/thread-4217.html
2-எல்லாமே என் மான்சி                                                  https://xossipy.com/thread-4217-page-7.html
3-விடியலை தேடும் மான்சி                                            https://xossipy.com/thread-4217-post-506...#pid506331
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
என் மனைவியாக மான்சி

தோட்டத்தில் பனிமூடிய ரோஜாக்கள் இளங்காலைப் பொழுதில் உடல் சிலிர்த்து தங்கள் மீது இருந்த பனித்துளிகளை புல்தரையில் தெளித்ததுக் கொண்டிருக்க,, பொழுது விடிந்துவிட்டதற்கான அறிகுறியாக பலவண்ணப் பறவைகளின் ஒலி ஜன்னல் வழியாக கேட்க,, அதிகாலைச் சூரியனின் செங்கதிர் ஒன்று ஒரே நேர்கோடாக ஜன்னல் வழியாக வந்து கட்டிலில் படுத்திருந்த சத்யனின் முகத்தில் சுள்ளென்று விழுந்தது,



ஆனாலும் கண்விழிக்க மனமின்றி பக்கத்தில் கிடந்த மகனை அணைத்துக்கொண்டு படுத்திருந்தான், அவன் மனமும் உடலும் விழித்துவிட்டது, ஆனால் கண்களைத் திறக்க முடியவில்லை, இரவு வெகுநேரம் விழித்திருந்தது எரிச்சலாக இருந்தது, கண்ணைமூடிக்கொண்டு பக்கத்தில் இருந்த மகனை தடவிப்பார்த்தான், மகனின் முகத்தை விரல் தொட்டதும் அந்த முகத்தில் சிரமமாக விழித்தான்,



இது சத்யனுக்கு வழக்கமான ஒன்று, அவன் மகன் மனுநீதி பிறந்து மூன்றாவது மாதம் முதலே சத்யனுடன் இருப்பதால், சத்யனின் விடியல் மனுவின் முகத்தில் தான் இருக்கும், இது இந்த மூன்று வருடங்களாக பழகிவிட்ட ஒன்று, மகனுக்காக இந்த மூன்றுவருடமாக சத்யன் எந்த வெளிநாடுகளோ, வெளியூரோ, அதிகமாக போனதில்லை,, அவன் உலகமே அவன் மகன் மனுநீதி தான்





சத்யன் பிறப்பிலேயே யாருமற்றவன் என்று சொல்லமுடியாது, தனது பனிரெண்டாவது வயதுவரை அப்பா அம்மா தாத்தா பாட்டி என்று ஒரு அன்யோன்யமான குடும்பத்தில் தான் இருந்தான், அப்பாவுக்கு ஆர்மியில ஆயுதக் கிடங்கில் காப்பாளராக வேலை, கிடங்கில் தவறுதலாக வெடித்த குண்டு ஒன்று அவருடைய உயிரை குடித்துவிட, முற்றிலும் உருவம் கலைந்துபோன பார்சலாக சொந்தஊர் வந்தார் சத்யனின் அப்பா,



சத்யனின் தாத்தா பூர்வீகமாக இருந்த ஒன்றையணா சொத்துக்கு கௌரவத்திற்காக லட்சக்கணக்கான ரூபாயைசெலவு செய்து பங்காளிகள் தகராறில் ஒளித்து விட்டாலும், சத்யன் அப்பாவுக்கு அரசாங்கம் தானமாக கொடுத்த இரண்டு ஏக்கர் நிலத்தில் சிறியதாக ஒரு ஓட்டுவீட்டைக் கட்டிக்கொண்டு பேரனுடன் வாழ்ந்தவர், பூர்வீக சொத்துக்காக போட்ட வழக்கு தோற்றுவிட்டதாக தீர்பானதும் நொந்து படுத்தவர் மறுபடியும் எழவேயில்லை, எடுத்துத்தான் சென்றனர்,



குடும்பமே சிதறிவிட்டது முன்னோர்கள் செய்த பாவம் என்று ஊர் பேசினாலும், வைராக்கியத்துடன் சத்யனின் தாயும் பாட்டியும் அவனை வளர்த்து ஆளாக்கினார், அந்த இரண்டு ஏக்கர் நிலத்தில் தாங்களே அதிகமாக உழைத்து சத்யனை படிக்கவைத்து ஒரு ஆண்மகனாக உருவாக்கினார்கள் , சத்யன் எம்பிஏ முடித்ததும் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது,



திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூருக்குபக்கத்தில் இருந்த குக்கிராமத்தில் இருந்து அம்மாவையும் பாட்டியையும் பிரிந்து சென்னைக்கு வந்தான் சத்யன், மண்ணில் ஈரமும் நெஞ்சில் வைராக்கியமும் நிறைந்த தென்முனையை விட்டு, இயந்திரங்களை போல் வாழ்ந்தாலும், தங்களின் உணர்ச்சிக்கு வடிகால்களை ஆன்லைனில் தேடும் சென்னை நகரத்து வாழ்க்கை முதலில் சத்யனுக்கு பிடிக்கவில்லை,



ஆனால் வேலை செய்த நிறுவனத்தின் தலைவர்க்கு இவனது நேர்மையும் உழைப்பும் பிடித்துவிட இவன்மேல் தனிக்கவனம் செலுத்தினார், ஒருக்கட்டத்தில் அவரது பிஸினஸ் மூளை கணக்குப்போட்டது, இப்படியொருவன்தான் தனது சொத்துக்களை பாதுகாக்க ஏற்றவன் என்று,, கணக்குப்போட்ட மறுநாளே இவனது உழைப்புக்கு பரிசாக தனது மகளையே தருவதாக சொன்னபோது , சத்யன் ஒரே தலையசைவில் மறுத்துவிட்டு அங்கிருந்து வெளியேறி ஊருக்கு வந்துவிட்டான்



அவன் வந்த மறுநாள் தண்ணீர் இல்லாத சிற்றாற்றின் கரையோரம் அமர்ந்து அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தான் சத்யன், அப்போது பக்கத்து வீட்டுப்பையன் ஓடிவந்து “ மாமா உங்க வீட்டுல யாரோ வந்திருக்காங்க, ஆமா பெரியப் பணக்காரங்க போல , பெரிய கார்ல வந்திருக்காக, அதுல ஒரு சினிமா ஆக்டரும வந்திருக்கு, ஆமா மாமூ பொம்பளை ஆக்டரு வந்திருக்கு, ஊருசனம் மொத்தம் உங்கூட்டுல தான் இருக்குறாக , உன்னை கூட்டியாரச் சொல்லி அம்மத்தா சைக்கிள் குடுத்தனுப்புச்சு ” என்று மூச்சு வாங்க வாங்க கையை ஆட்டி, நீட்டி, விரித்து பேசி காரையும் அதில் வந்திருப்போரையும் கண்முன்னே கொண்டு வந்தான்



யாராயிருக்கும்,, ஒருவேளை யாராவது அரசியல்வாதியாக இருக்கும், ஏன்னா அவங்கதான் எலெக்ஷன் டைம்ல செத்துப்போன தியாகிகளின் வீட்டுக்கு வந்து காலில் விழுந்து ஓட்டு கேட்பாங்க, ஆனாலும் சினிமா ஆக்டர் ஏன் கூட வரனும்,, என்ற குழப்பத்துடன் அந்த பையன் எடுத்துவந்த சைக்கிளை இவன் மிதிக்க அந்த பையன் பின்னால் தொற்றிக்கொண்டு வந்தவர்களை பற்றி விட்ட இடத்தில் மறுபடியும் கூற ஆரம்பித்தான்



சத்யன் தனது வீட்டை நெருங்கும் போதே காரை அடையாளம் கண்டுகொண்டான், இது தன் முதலாளியின் கார் என்று புரிந்தது, வீட்டுக்குள் நுழைந்த சத்யனை அவன் அம்மா அவசரமாக பின்கட்டுக்கு தள்ளிக்கொண்டு போனாள்



“ ஏலேய் சத்தி உனக்கென்னலே பைத்தியமா புடிச்சிருக்கு, வழிய வர்ற சீதேவியை வேனாம்னு உதறிட்டு வந்திருக்கவே, இந்த குப்பக் காட்டுல கெடந்து நாங்க படுற கஷ்டம் போதும்லே, நீயாச்சும் நல்லாருக்கனும்னு தா உன்னைய அம்புட்டு படிக்க வச்சு பட்டணத்துக்கு அனுப்புனோம், இப்புடி எல்லாத்தையும் உதறிட்டு வந்துட்டியேலே, இப்பப்பாரு அம்புட்டு பெரிய கோடிஸ்வரன் நம்ம வீடு தேடி வந்திருக்காரு, இதப்பாருலே லட்சுமி நம்ம வீடுதேடி வந்துருக்கு அதை எட்டி உதைக்காத, போய் முகத்தை கழுவிட்டு நல்ல துணியா மாட்டிகிட்டு வா , நா அவுககிட்ட பேசிகிட்டு இருக்கேன்” என்று சொல்லிவிட்டு அம்மா போய்விட சத்யன் திக்பிரமை பிடித்து அப்படியே நின்றான்



இத்தனை வருடமாக உழைத்த உழைப்பு என்னையே அடமானமாக வைக்க துணிகிறதோ என்ற எண்ணம் சத்யனுக்கு வந்தது, ஆனால் தன் தாய் அப்படிப்பட்டவள் அல்ல தன் மகனாவது நல்லாருக்கட்டும் என்ற நல்ல எண்ணமே இப்படி பேச வைக்கிறது என்று தன் மனதை சமாதானம் செய்துகொண்டு முகத்தை மட்டும் கழுவிக்கொண்டு உடை மாற்றாமல் அதே உடையில் போய் கூடத்தில் இருந்தவர்களை பார்த்து சம்பிரதாயமாக புன்னகைத்து வணக்கம் சொன்னான்



முதலாளியின் மகள் சொர்ணமித்ராவை இதற்கு முன்பு இரண்டு முறை கம்பெனியில் பார்த்திருக்கிறான், ஆர்வமின்றி தான்,, இப்போதும் அவளை ஆர்வமில்லாமல் தான் பார்த்தான், ஆனால் அவள் இவனையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்
Like Reply
#3
அதன் பிறகு சத்யனின் மறுப்புகள் அங்கே எடுபடாமல் போனது, தன் மகன் நல்லாருக்கனும் , தன் பேரன் நல்லாருக்கனும் என்ற இரண்டு தாயுள்ளங்களின் வேண்டுதலை தட்டமுடியாமல் தன்னுடைய தன்மானத்தை ஒரு சுபயோக சுபதினத்தில் மித்ராவிடம் அடகு வைத்தான்,

வீட்டோடு மாப்பிள்ளையாக வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டான், ஆனால் அன்று அடகு வைத்த தன்மானத்தை இன்று வரை சத்யனால் மீட்க்கமுடியவில்லை, அடகுவைத்த தன்மானத்தின் மீது வட்டி ஏறிக்கொண்டே போய் இன்று மூழ்கும் நிலையில் இருக்கிறான் சத்யன்


சத்யனுக்கு திருமணம் ஆன ஆறாவது மாதம் மகனைப் பார்க்க வந்த அம்மாவின் முன்பு சத்யன் எப்படித்தான் நடித்தும் அந்த தாயுள்ளம் தன் மகனின் வேதனையை அவமானத்தை கண்டுகொண்டது, அன்று இரவே கண்ணீருடன் ரயில் ஏறிய அம்மா தன் மகனின் வாழ்க்கை தன்னால் சீரழிந்து போனது என்ற குற்றவுணர்வில் வந்து படுத்துவிட்டாள், சத்யனின் அம்மா துக்கம் தாளாமல் சிறிதுநாள் உடல்நலமின்றி கிடந்து , பிறகு ஒரு மழைக்கால இரவில் இடி மின்னல்களின் துணையோடு தன் கணவனைத் தேடி சந்தோஷமாக பயணமானாள்


அம்மாவின் உடலை அடக்கம் செய்ய பெரிய காரில் வந்து கோட்சூட்டுடன் வந்து இறங்கிய சத்யன், அந்த ஏழையின் வீட்டுக்குள் நுழைந்ததும் மனதோடு ஒட்டாத அந்த உடைகளை கலைந்துவிட்டு தன் தாயின் உழைப்பில் வாங்கிய நாலு முழம் வேட்டியைக் கட்டிக்கொண்டு தாயின்மீது விழுந்து கதறினான்



அவன் மனைவி மாமியாரின் மரணத்துக்கு கூட வரவில்லை என்று ஊர் கிசுகிசுத்தாலும் அவனின் கண்ணீர் அந்த ஊரையே அழவைத்தது, சத்யனின் துக்கங்கள் மொத்தத்தையும் தாயின் மரணம் வெளிக்கொணர சத்யன் வாய்விட்டு கதறியழுதான், அந்த ஊரே சமாதானம் செய்தாலும் அவன் நெஞ்சின் வலி குறையவில்லை, கண்களின் கண்ணீர் நிற்கவில்லை,

தாயை அடக்கம் செய்த அடுத்த நிமிடம் உடனே கிளம்பி வரும்படி மித்ராவிடம் இருந்து அழைப்பு வர போகக்கூடாது என்று பிடிவாதத்துடன் இருந்த சத்யனை “ இது சாதரண விஷயம் இல்லை ராசா ஒரு குடும்பம்,, அவ்வளவு சீக்கிரம் உதறிட்டு வர முடியாது, அதுவுமில்லாம இப்போ நம்ம குடும்ப வாரிசு அவ வயித்துல வளருது, இந்த சமயத்தில் வெட்டிவிட்டுட்டு வரமுடியாது ராசா, தயவுபண்ணி போயிடு சத்தி ” பாட்டிதான் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்


அதன்பிறகு சத்யன் வாழ்ந்த யந்திர வாழ்க்கையில் வசந்தமாக வந்தது மனுநீதியின் பிறப்பு தான் இறந்து போன அவன் அம்மாவை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது போல் இருந்த மகனை மித்ராவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை, கருவிலேயே அழிக்க நினைத்தவள் முழுதாக பிறந்ததும் தொட மறுத்தாள், தன் அழகெல்லாம் வீணாகிவிட்டது என்று கோபத்தின் உச்சியில் கொதித்தாள்



மூன்று மாதங்களுக்கு மேல் தாய்ப்பால் கொடுக்க மறுத்துவிட , சத்யன் குழந்தையின் பொருட்களை தனது அறைக்கு மாற்றிக்கொண்டு, குழந்தையை ஒரு தாயுமானவனாக இருந்து காப்பாற்றினான், தன் மகன் அவள் வயிற்றில் இருக்கும்போதே அந்த சிசுவை காப்பாற்ற சத்யன் எந்த இழிநிலைக்கும் இறங்க தயாராக இருந்தான், இப்போது தன் தாயின் மறுபிறவியாக வந்திருக்கும் மகனை காக்க மித்ராவின் அட்டூழியங்கள் அத்தனையையும் பொறுத்துக்கொண்டான்



மித்ரா,, இவள் உருவம் எழிலாய் இருந்தாலும் உள்ளம் எரிமலையாய் இருந்தது, அவளது உடல் தேவைக்கு மட்டும் இந்த ஆணழகனை பிடிக்கும், தேவை தீர்ந்ததும் தன் கட்டிலில் படுக்கக்கூட இவனுக்கு தகுதியில்லை என்று விரட்டுவாள், அதிலும் ஏதாவது பார்ட்டிகளுக்கு சென்று வந்தாள் என்றால் போதையில் என்ன பேசுகிறோம் என்ன செய்கிறோம் என்றே புரியாமல் வேலைக்காரர்கள் முன்பு இவள் நடந்து கொள்ளும் போது சத்யன் அவளை இழுத்து வந்துதான் அறைக்குள் தள்ளுவான், ,



இவளின் குணத்தை பார்த்துதான் சத்யனை தேர்ந்தெடுத்தாரோ இவள் அப்பா? சத்யனுடைய பொறுத்துப்போகும் குணமும், அனுசரித்துப் போகும் மனமும் தன் மகளுக்கு பொறுத்தமாக இருக்கும் என்று மித்ராவின் அப்பா போட்ட கணக்கு தப்பவில்லை, மகளுக்கு திருமணத்தை செய்துவிட்டு சில பொருப்புகளை மட்டும் இவர்களிடம் ஒப்படைத்து விட்டு தனது வெளிநாட்டு காதலியைத் தேடி லண்டன் பறந்த மனிதர் இன்னும் திரும்பவில்லை, மனு பிறந்ததை கூட ஆர்வமின்றி கேட்ட அவரிடம் சத்யன் தன்பிறகு பேசவில்லை,,



மித்ரா ஒரு செக்ஸ் பேய் என்றுகூட சத்யன் பலநேரங்களில் நினைப்பதுண்டு,, நாளுக்கு நாள் அவளது நண்பர்கள் கூட்டமும் போதையும் அதிகமானது, சத்யன் பணம் தரமறுத்தால் கம்பெனியில் வந்து அத்தனை பேரின் எதிரிலும் கத்தி கலாட்டா செய்வாள், தன்மானத்திற்கு பயந்த சத்யன் பணத்தை அவளிடம் வீசி எரிந்துவிட்டு வேலைகளை கவணிப்பான்



திருமணம் ஆனபோது ஆர்வத்தோடு அவளிடம் செக்ஸில் ஈடுப்பட்ட சத்யன் , அதன்பிறகு அவளுடன் படுப்பதையே அருவருப்பான விஷயத்தை போல செய்தான், சத்யனுக்கு கலவியை கவிதைபோல் ரசிக்கவேண்டும் என்று ஆசை, ஆனால் மித்ராவுக்கு செக்ஸை அசிங்கமாய் பேசி அங்காரமாய் சத்தமிட்டு அனுபவிக்கவேண்டும், அறையைவிட்டு வெளியே வரும்போது வேலைக்காரர்கள் முகத்தில் தெரியும் ஏளனம் சத்யனின் உடலை கூச வைக்கும்



அவன் இருந்த கிராமத்தில் காதலும் கலவியும் புனிதம்,, அவனும் அப்படித்தான் வளர்க்கப்பட்டான், ஆனால் இங்கே நகரவாசிகளுக்கு செக்ஸ் வெறும் உடல் தேவை என்பது சத்யனுக்கு புரிந்தது, ரோட்டோரத்தில் இருக்கும் நடைபாதை வாசிகளிடம் இருக்கும் காதலும் நேசமும் பங்களாவாசிகளிடம் இல்லாமல் போனது, காரில் வரும்போது பாதையோர மக்களை சத்யன் கவணிப்பான், முதல்நாள் இரவு குடித்துவிட்டு அடிக்கும் புருஷனுக்கு மறுநாள் மீன்குழம்பு வச்சு அருகில் இருந்து சோறு போடும் பெண்ணை பார்த்து சத்யன் மனசுக்குள் ஏங்குவான்



திருமணம் ஆன இந்த நான்கு வருடத்தில் ஒருமுறை கூட மித்ரா அவனுக்கு சாப்பாடு பரிமாறியதில்லை, சாப்பிட்டாயா என்று கேட்டதும் இல்லை, பெற்ற குழந்தையைக் கூட கவனிக்காதவள் புருஷனை எங்கே கவனிக்கப் போகிறாள் என்று தன்னை சமாதானப்படுத்திக் கொள்வான்
Like Reply
#4
சத்யனின் ஏக்கங்களுக்கு சிலபல நேரங்களில் குடியை நாடியதுண்டு, அப்போதெல்லாம் மகனின் நினைவு அவனை அதிலிருந்து மீட்டு வீட்டுக்கு அழைத்துவரும், இவன் அலுவலகம் செல்லும் நேரங்களில் திலகம் என்ற வேலைக்கார பெண்தான் மனுவை கவனமுடன் பார்த்துக்கொள்வாள், சத்யன் வயதில் திலகத்திற்கு மகன் இருப்பதால் எப்போதுமே சத்யன் மீது ஒரு பாசம் கலந்த மரியாதை உண்டு



இப்போதெல்லாம் மித்ரா ரொம்பவும் தவறான பாதையில் செல்வதை சத்யன் உறுதி செய்துகொண்டான், இரவில் வெகுநேரம் கழித்து வீட்டுக்கு வருவதும், சில நாட்களில் வராமல் எங்காவது தங்கிவிடுவதும் வாடிக்கையானது, கம்பெனியில் இருந்து எடுக்கும் பணம் போதாமல் வீட்டிலிருந்த வைரம் மற்றும் தங்க நகைகளை விற்று செலவுசெய்ய ஆரம்பித்தாள் ,



தட்டிக்கேட்கும் சத்யனை அவள் திருப்பி கேட்கும் ஒரே கேள்வி “ என்னை கல்யாணம் பண்ணிகிட்டு இந்த வீட்டுக்குள்ள நீ வரும்போது நீ போட்டிருந்த ஜட்டிக் கூட என் பணத்தில் வாங்கினது என்பதை மறந்துட்டு பேசுற சத்யா” என்ற தீ வார்த்தைகள் தான்



சத்யன் வேலைக்காரர்கள் முன்பு கூனிக்குறுகி போய்விடுவான், இந்த நான்கு வருடமாக அவளை திருத்த அவன் எடுத்த அத்தனை முயற்சிகளும் வீணானது, தான் பணக்காரி என்ற கர்வமே அவளை மேலும் மேலும் தப்பு செய்ய தூண்டியது,, தனக்கு ஒரு மனைவி இல்லையென்றாலும் தன் மகனுக்கு தாயாக அடையாளம் காட்ட அவள் வேண்டும் என்ற சத்யனின் எண்ணத்தில் ஒட்டை விழுந்து நாளுக்குநாள் அது ஓசோனில் விழுந்த ஓட்டையாக அவனை பயமுறுத்தியது



அவளின் நடத்தை ஒவ்வொரு நாளும் எல்லை மீறியது, குடியில் கிடைத்த போதை பற்றாது வேறு வழிகளில் போதைத் தேடிப் போக ஆரம்பித்தாள், சத்யன் கவனித்தவரை அவள் கைகளில் நிறைய ஊசிகள் குத்திய தழும்புகள், அந்த தழும்புகள் சொன்ன கதையை விஷத்தை போல ஜீரணித்தது அவன் மனது, ரகசியமாக மருத்துவ பரிசோதனை செய்யவைக்க அவன் எடுத்த முயற்சிகள் பலனின்றி போனது,



இதோ நேற்று இரவு கூட அவள் வரும்போது மணி பணிரெண்டு, சத்யன் மகனை அணைத்துக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்தான், இடியைப் போல கதவு படபடவென்று தட்டப்படும் சத்தம் கேட்டு ஆத்திரத்துடன் எழுந்த சத்யன், கதவை திறந்து வெளியே வந்தான், அங்கே அவன் கண்ட காட்சியில் அவன் உடலே நெருப்பு பற்றி எரிவது போல் இருந்தது 



மித்ரா உள்ளாடைகள் எதுவுமின்றி மெல்லிய உடையில் உடலின் அத்தனை பாகங்களும் தெரியும் படி நின்றிருந்தாள், அவள் போட்ட கூச்சலில் வேலைக்காரர்கள் அத்தனை பேரும் ஹாலில் கூடியிருக்க அவர்கள் முன்னால் இவள் இப்படி ஒரு உடையுடன் நிற்பதை கண்டு சத்யனுக்கு உடலும் மனமும் கூச அவளை பிடித்து தள்ளிக்கொண்டு அவள் அறைக்குள் போனான்



போன வேகத்தில் அவளை கட்டிலில் தள்ளி “ ஏய் உனக்கு அறிவில்லை வேலைக்காரங்க முன்னாடி இந்தமாதிரி டிரஸ்ல வந்து நிக்கிற, நீ ஒரு பொம்பளை அப்படிங்கறதே உனக்கு மறந்து போச்சுல்ல, ச்சே வரவர உன்னை பார்க்கவே அருவருப்பா இருக்கு” என்று கூறிவிட்டு சத்யன் அறையை விட்டு வெளியே போக யத்தனிக்க..



“ ஏய் உன் பார்வையில பொம்பளைன்னா பதினாரு முழம் புடவை கட்டி நெத்தியில பெரிசா குங்குமப் பொட்டு வச்சுகிட்டு தலைநிறைய பூ வச்சுகிட்டு உன் பின்னாடியே சுத்தனும்னு நெனைக்கிறயா,, அதுதான் நடக்காது, ஐ ஆம் ப்ரீ பேர்ட், எனக்கு எந்த விதமான கட்டுப்பாடும் இல்லை, உனக்கு பிடிக்கலைன்னா இந்த நிமிஷம்கூட வெளியே போகலாம், ஆனா நீ போகமாட்ட, ஏன்னா உனக்கு என்னோட பணம் வேனும், கார் பங்களான்னு வசதியா வாழனும், அதெல்லாம் விட என்னை மாதிரி அழகானவளை இஷ்டத்துக்கு பக் பண்ணமுடியாது, அதனால நீ போகமாட்ட சத்யா எனக்கு தெரியும்” என்று ஏளனமாய் கூறியவள்



கட்டிலில் நன்றாக மல்லாந்து கால்களை அகலமாக விரித்து “ ஏய் பேசிப்பேசி என் மூடை அவுட் பண்ணாத,, நான் இன்னிக்கு செமமூட்ல இருக்கேன் சீக்கிரம் வா” என்று போதையான குரலில் அசிங்கமாக போஸ் கொடுத்தபடி கையை நீட்டி மித்ரா அழைக்க



சத்யன் முதன்முறையாக தன்னை ஒரு ஆண் விபச்சாரனுடன் ஒப்பிட்டு பார்த்தான், இதிலென்ன சந்தேகம் உன்னுடைய இன்றைய நிலை இதுதான் என்று ஏசியது அவன் மனம், அருவருக்கத்தக்க ஒரு ஜந்துவை பார்ப்பதுபோல் அவளை பார்த்துவிட்டு கதவில் கைவைத்தான் சத்யன்..



“ என்ன போறியா? சரி போ , ஆனா நான் இதே டிரஸ்ஸோட ரோட்டுல போய் நிப்பேன், ரோட்டுல போறவனை இந்த பெட்டுக்கு கூட்டி வருவேன்” என்று போதையுடன் மித்ரா கட்டிலை விட்டு இறங்கினாள்..



அவள் இருக்கும் நிலையில் நிச்சயம் சொன்னதை செய்வாள் என்பதை உணர்ந்த சத்யன், கதவை அறைந்து மூடிவிட்டு, அவளை நெருங்கி தோளைப் பற்றி கட்டிலில் தள்ளிவிட்டு முரட்டுத்தனமாக அவள்மீது படர்ந்தான், அவளின் வெறியை எப்படி அடக்குவது என்ற யோசனையுடன் அவள் போட்டிருந்த ஆடையை கிழித்தெறிந்தான் சத்யன்



அவனுடைய முரட்டு உடலுக்கு கீழே நசுங்கிய மித்ரா “ ஏய் சத்யா எப்பபார்த்தாலும் இதைத் தவிர வேற எதுவும் தெரியாதா, இன்னிக்கு வித்தியாசமா பண்ணு, நான் என் ப்ரண்ட்ஸ் கூட ஒரு டிவிடி பார்த்தேன் அதுல வர்றமாதிரி பண்ணு, அங்கயே அவங்கல்லாம் பண்ணாங்க, எனக்குத்தான் போதை அதிகமாயிருச்சுன்னு வீட்டுக்கு வந்துட்டேன், நான் சொல்றமாதிரி பண்ணு, உனக்கு சோறுபோட்டு தங்க இடம் கொடுத்து இங்கே வச்சிருக்கறதே இதுக்குத்தான் ” என்று மித்ரா சொல்ல



பட்டென்று அவள்மீது இருந்து கீழே இறங்கிய சத்யன், இப்போதெல்லாம் சத்யனின் தன்மானம் அடிக்கடி உயிர்பெற்று ரோஷத்துடன் சிலிர்த்துக்கொண்ட அவனை கேள்விகேட்டது, இப்போதும் கேட்டது “ சத்யா உனக்கு இந்த கேவலமான நிலை இன்னும் வேண்டுமா என்று கேட்டது
Like Reply
#5
கட்டிலைவிட்டு இறங்கிய சத்யன் “ ஏய் ச்சீ உன்னை தொடவே எனக்கு பிடிக்கலை, என்னை வற்புறுத்தாதே” என்று கூறிவிட்டு கதவை திறந்து வெளியே வந்தவன், முன்னெச்சரிக்கையாக கதவை வெளிப்பக்கமாக பூட்டினான்

தனது அறைக்கு வந்து படுத்தவன் காதுகள் கிழிந்துவிடும் அளவிற்கு பக்கத்து அறையில் பொருட்கள் உடைபடும் சத்தம் கேட்டது, அதன்பிறகு சத்யன் உறங்க வெகுநேரம் ஆனது



மகனின் முகத்தில் விழித்த சத்யன், எழுந்து காலைக்கடன்களை முடித்து வெளியே வந்தான் பக்கத்து அறையின் கதவு சலமின்றி மூடிக்கிடந்தது, தன் கையில் இருந்த சாவியால் பூட்டை திறந்த சத்யன், கதவை திறக்காமல் கீழே வந்தான், மித்ரா எழுந்திருக்க எப்படியும் மணி பதினொன்று ஆகும்,
காலை உணவை விஷத்தை போல உண்டுவிட்டு மனுவை திலகாவிடம் ஒப்படைத்துவிட்டு ஆபிஸ்க்கு கிளம்பினான் சத்யன்


அன்று மாலையே அலுவல் விஷயமாக அவசரமாக பெங்களூர் செல்ல வேண்டியிருந்ததால் வீட்டுக்கு வந்து இரண்டு நாட்களுக்கு வேண்டிய துணிகளை எடுத்துக்கொண்டான், மகனை பத்திரமாக பார்த்துக்கொள்ளும்படி திலகாவிடம் கூறிவிட்டு பெங்களூர்க்கு புறப்பட்டான் சத்யன்



போன வேலையை மூன்று நாட்களில் வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, மகனை பார்க்கும் சந்தோஷத்தில் பகலிலேயே பஸ் படித்து, மாலை ஐந்து மணிக்கெல்லாம் வீடு வந்து சேர்ந்தான்,



வந்ததும் ஹாலில் விளையாடிக்கொண்டிருந்த மகனை தூக்கிக் கொஞ்சியவனை கலவரத்துடன் பார்த்தாள் திலகா, அவள் முகத்தில் இருந்த கலவரம் சத்யனை குழப்பத்தில் ஆழ்த்த மகனின் நெற்றியில் கைவைத்து பார்த்தான்,, சூடு எதுவுமில்லை, குழந்தை நன்றாக இருந்தான், அப்புறம் ஏன் திலகாவின் முகத்தில் கலவரம்..



“ என்னாச்சு திலகாம்மா?, ஏன் இப்படி இருக்கீங்க?, ஏதாவது உங்களுக்கு உடம்பு சரியில்லையா?” என்று மாற்றிமாற்றி சத்யன் கேள்வி கேட்டாலும் அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை, அடிக்கடி அவள் பார்வை மாடியில் இருந்த மித்ராவின் அறையை தொட்டுவிட்டு வர...



“ ஓ மித்ராவுக்கு என்ன? உடம்பு சரியில்லையா?” என்ற சத்யன் அவசரமாக மாடிப்படிகளில் ஏற..



அவன் இரண்டாவது படியில் கால் வைத்ததுமே திலகா குறுக்கே ஓடிவந்து தடுத்து “ ஐயா நான் சொல்றதை கேளுங்க, அங்க போகாதீங்க ஐயா, கீழயே இருங்கய்யா” என்று கைக்கூப்பி கெஞ்சினாள்



சத்யனின் நெஞ்சில் சுருக்கென்று முள் தைக்க “ ஏன் போகக்கூடாது, இன்னிக்கு ரொம்ப ஓவரா குடிச்சிருக்காளா,, பரவாயில்லை விடுங்க நான் சமாளிச்சுக்கறேன்” என்று கூறிவிட்டு அடுத்த படியில் கால் வைத்தான் சத்யன்



சட்டென்று மண்டியிட்டு அவன் கால்களை பிடித்துக்கொண்ட திலகா “ ஐயா உங்களை கும்புட்டு கேட்டுக்கிறேன் தயவுசெஞ்சு அங்க போகாதீங்க ஐயா” என்று கண்ணீருடன் அவன் காலைப் பற்றிக்கொண்டு கெஞ்ச...



சத்யனின் முதுகுத்தண்டு சட்டென்று விரைத்தி நிமிர, கையில் இருந்த மகனை படியில் இறக்கிவிட்டு திலகாவை விலக்கி ஒதுக்கிவிட்டு தடதடவென்று மாடிக்கு ஓடினான் சத்யன் 


பாதியளவு திறந்திருந்த மித்ராவின் அறைக்கதவை முழுவதுமாக திறந்துகொண்டு உள்ளே போனான், அங்கே இருந்த சோபாவில் வாட்டசாட்டமான ஒருவன் அமர்ந்திருக்க அவன் மடியில் மித்ரா அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்தாள், அவனுடைய ஒரு கை மித்ராவின் மார்பை பற்றி முரட்டுத்தனமாக பிசைந்துகொண்டு இருக்க, மற்றொரு கை அவளின் தொடையிடுக்கில் புகுந்து உள்ளே வெளியே என்று உறவாடிக் கொண்டு இருந்தது



சத்யனை யாரோ உயிரோடு நெருப்பில் எரிந்தது போல் துடித்துப்போனான்,, “ ஏய் “ என்று ஆவேசத்துடன் கத்திக்கொண்டு அவர்களை நெருங்க,, இருவரும் திடுக்கிட்டு விலகி எழுந்தனர்,


ஒரு நிமிடம் தான் சத்யனை கலவரத்துடன் பார்த்தாள் மித்ரா,, அடுத்த நிமிடம் நெஞ்சை நிமிர்த்தி " ஏய் உனக்கு மேனர்ஸ் இல்ல கதவை தட்டிட்டு உள்ளே வரவேண்டியது தானே, போ வெளியே" என்று அலறினாள்



சத்யனின் மொத்த ரத்தமும் முகத்தில் பாய ரௌத்திரமான முகத்தோடு அவர்களை நெருங்கி கூட இருந்தவனின் சட்டையை கொத்தாக பற்றி தாடையில் பலமாக ஒரு அறைவிட, கடைவாயில் ரத்தம் பிடிங்கிகொண்டது,



தன்னுடன் இருந்தவன் உதடு கிழிந்துபோனதை பார்த்து ஆத்திரமடைந்த மித்ரா, எட்டி சத்யனின் சட்டையை பற்றி விலக்கி தள்ளினாள் " ஏய் அவனை அடிக்க உனக்கு என்ன ரைட்ஸ் இருக்கு, அவன் என் லவ்வர், இனிமேல் அவன்தான் என்கூட இருப்பான், நீ வெளியேப் போ" என்று ஆங்காரமாய் சத்தமிட..



சத்யனுக்கு தன் காதுகளையே நம்பமுடியவில்லை, ஒரு பெண் இவ்வளவு கீழ்த்தரமாக கூட இறங்குவாளா? என்று எண்ணினான், ஏதாவது பூகம்பம் வந்து மொத்த வீட்டையும் விழுங்கிவிடக்கூடாதா என்று நினைத்தான், கடைசி முயற்சியாக தன் நிலையை அவளுக்கு உணர்த்தும் விதமாக " மித்ரா நான்....' என்று மேலே சொல்லமுடியாமல் தடுமாறி நிறுத்தினான் சத்யன்



" என்ன நீ யாரு, என் புருஷன்னு சொல்ல வர்றியா,, அதுக்கு உனக்கு என்ன தகுதியிருக்குது, நீ கட்டின தாலியை என்னிக்காவது என் கழுத்தில் நான் போட்டுருக்கேனா? நீ பார்த்திருக்கியா, எனக்கு நீ தேவை அதனால இத்தனை நாளா உன்னை என் வீட்டுல அனுமதிச்சேன், என்னிக்கு உன்னால முடியாதுன்னு என்னை உதறிட்டு போனியோ அன்னிக்கே நீ இனி தேவையில்லைன்னு முடிவு பண்ணிட்டு, இனிமேல் இவன் இங்கதான் இருப்பான், உனக்கு இஷ்டமிருந்தால் எதையும் கண்டுக்காம இரு, இல்லேன்னா இந்த நிமிஷமே உனக்கு தேவையான பணத்தை எடுத்துக்கிட்டு உன் பிள்ளையையும் தூக்கிகிட்டு எங்காவது போய் சேரு, இப்போ நீ அடிச்சதுக்கு என் லவ்வர் கிட்ட மன்னிப்புக் கேளு" என்று மித்ரா எகத்தாளமாக அதிகாரமாக பேசி சத்யனின் இழிநிலையை குறிப்பிட்டு சொல்ல ..



சிறிதுநேரம் அசைவின்றி கல்போல் நின்ற சத்யன், அடுத்த நிமிடம் கட்டிலுக்கு பக்கத்தில் இருந்த பழக்கூடையில் சொருகியிருந்த கத்தியை தாவியெடுத்தான்,, சத்யன் கையில் கத்தியை பார்த்ததும், உடல் பதற கள்ளக்காதலர்கள் இருவரும் உயிருக்கு பயந்து சுவற்றோடு ஒன்றினர்



சத்யன் கத்தியோடு அவர்களை நெருங்க, கதவை திறந்துகொண்டு ஓடிவந்த திலகா கையிலிருந்த மனுநீதியை சத்யனின் காலடியில் போட்டு, " ஐயா பிள்ளையை பாருங்கய்யா, இந்த பிள்ளையை அனாதையாக்கிடாதீங்க" என்று கதறியழ,, அவள் அழுவதைப் பார்த்து குழந்தையும் அழுதது,



சத்யன் ஒரு நிமிடம் கண்மூடினான், மூடிய கண்களில் கண்ணீர் வழிந்தது, கண்களை திறந்தான், கையிலிருந்த கத்தியை வீசியெறிந்தான், கீழே கிடந்த மகனை தூக்கிக்கொண்டு அந்த அறையைவிட்டு வெளியேறினான்
Like Reply
#6
தனது அறைக்குள் நுழைந்த சத்யன் மகனின் கழுத்தில் கையில் இடுப்பில் இருந்த நகைகளை கழட்டி கட்டிலில் வீசினான், தன் கழுத்தில் கிடந்த செயின், கையில் இருந்த வாட்ச், மோதிரம் எல்லாவற்றையும் கழட்டி எறிந்தான், போட்டிருந்த கோட்சூட்டை கழட்டி சாதாரண லுங்கியை கட்டிக்கொண்டு ஒரு பழைய சட்டையை மாட்டினான். மகனை தூக்கிக்கொண்டு அறையைவிட்டு வெளியே வந்து படிகளில் இறங்கி வீட்டைவிட்டு வெளியே போனான்



அவன் பின்னாலேயே ஓடிவந்த திலகம் அவனுக்கு முன்னால் சென்று வழிமறித்து நின்று " ஐயா நீங்க போகவேண்டாம்னு தடுக்க நான் இங்கே வரலை,, போயிடுங்க இங்கே இனிமேல் இருக்கவேண்டாம் உடனே போயிடுங்க,, ஆனா இதை வாங்கிக்கங்கய்யா, கையில பத்து பைசா இல்லாம இந்த சின்னப்புள்ளயை தூக்கிகிட்டு எப்படிய்யா ஊருக்கு போவீங்க, தயவுசெஞ்சு இந்த பணத்தை வாங்கிக்கங்க" என்று அவன் கையில் ஒரு ஆயிரம் ரூபாய் தாளை தினித்தாள் திலகம்



சத்யன் பிடிவாதமாக பணத்தை வாங்க மறுக்க,, " ஐயா இது இந்த வீட்டு காசு இல்லய்யா, அரசாங்கத்தோட பணம், அரசாங்கம் எனக்கு குடுத்த முதியோர் பென்ஷன் பணம், அதனால நீங்க தயங்கமா வாங்கிக்கங்க, உங்களை என் மகனா நெனைச்சு தான் குடுக்கிறேன்" என்று கூறி சத்யன் கையில் பணத்தை வைத்துவிட்டு திரும்பி பார்க்காமல் விடுவிடுவென்று நடந்தாள் திலகம்



சத்யன் ஒரு பிச்சைக்காரனைப் போல சிறிதுநேரம் தெருவில் நின்றுவிட்டு, பிறகு ஒரு ஆட்டோவில் ஏறி சென்ரல் ரயில்நிலையம் வந்தான்,, நெல்லை எக்ஸ்பிரஸ் புறப்பட தயாராக இருக்க , வேகமாய்ச்சென்று டிக்கெட்டை எடுத்துக்கொண்டு ரயிலை நோக்கி ஓடி இவன் குழந்தையோடு ஏறவும் ரயில் புறப்படவும் சரியாக இருந்தது,, 





சத்யன் ஏறியது ஜெனரல் கம்பார்ட்மெண்ட் என்பதால் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது, ஐந்துபேர் இருக்கையில் ஏழுபேர் அமர்ந்திருக்க, இவன் குழந்தையோடு இருப்பதைப் பார்த்து இரண்டு பெண் பிள்ளைகளின் தாய் ஒருத்தி எல்லோரையும் நெருங்கி அமரும்படி சொல்லி எட்டாவதாக இவன் அமர்வதற்கு ஆறு அங்குலத்தில் இடம் ஒதுக்கிக் கொடுத்தாள்,



சத்யன் அமரவில்லை, “ பரவாயில்லை சிஸ்டர்,, இவனை மட்டும் வச்சுக்கங்க” என்று மகனை அந்த பெண்ணிடம் நீட்டினான், அந்த பெண்மணி மறுக்காமல் வாங்கி மடியில் வைத்துக்கொண்டாள், மனு அதிகமாக அடம்பிடிக்கும் குழந்தை இல்லை என்பதால் சமர்த்தாக அந்த பெண் மடியில் அமர்ந்துகொண்டான்



சத்யன் படியருகே கதவில் சாய்ந்து நின்றுகொண்டான், ஈரக்காற்று வந்து முகத்தில் பலமாக மோதி முதுகுத்தண்டில் ஊடுருவியது, கடும்குளிர் வாட்டியது,



ஆனால் அதற்கு நேர்மாறாக மனம் அனலாய் கொதித்தது, ரயிலை விட வேகமாக அவன் இதயம் துடித்தது, நடந்தவைகள் கண்முன் காட்சியாக விரிந்தது, இத்தனை நாட்களாக மித்ராவை தொட்ட உடலை கொழுத்திவிடலாமா என்று நினைத்தான், முன்பு மித்ராவின் அட்டகாசத்தை பொருத்துக்கொள்ள வழியுறுத்திய மனுவின் முகம் இப்போது வாழ்க்கையை வாழவும் வழியுறுத்தியது,



அதற்குள் ரயில் செங்கல்பட்டை கடந்து மேல்மருவத்தூரை நோக்கி அதிவேகமாக பயனிக்க, குளிர் அதிகமாக வாட்டியது, மனுவுக்கு ஒரு ஸ்வெட்டர் கூட இல்லையே இந்த குளிரை குழந்தை எப்படி தாங்குவான் என்று அவசரமாக திரும்பி பார்த்தான், அந்த பெண்மணியின் பத்து வயது மகள் மனுவை மடியில் வைத்துக்கொண்டு இருவருக்குமாக சேர்த்து ஒரு சால்வையைப் போர்த்திக்கொண்டு இருந்தாள்



சத்யன் நிம்மதியுடன் திரும்பி மறுபடியும் இருட்டை வெறித்தான், கழிவிரக்கத்தால் சத்யனின் கண்கள் அடிக்கடி நிரம்பியது சட்டையின் காலரை இழுத்து எடுத்து வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டான், அவசரமாக குழந்தையோடு வெறியேறிய போது பணம்கொடுத்து உதவிய திலகத்தை மனம் நன்றியோடு நினைத்துப் பார்த்தது,



ரயில் மேல்மருவத்தூரில் நிற்க ஒரு செவ்வாடைக் கூட்டம் முண்டியடித்துக்கொண்டு ஏறியது, சத்யனால் அதற்க்கு மேல் அங்கே நிற்காமல் உள்ளே போக, அந்த பெண்மணி ஒரு நியூஸ் பேப்பரை அவனிடம் நீட்டி “ தம்பி இதை கீழேபோட்டு உட்கார்ந்துக்கிட்டு வாங்க, எம்புட்டு நேரம் நிக்கமுடியும்” என்று அனுசரனையுடன் சொல்ல..



சத்யன் மறுக்காமல் பேப்பரை வாங்கி நடக்கும் பாதையில் ஓரமாக விரித்து அதில் கால்களை இடுக்கி அமர்ந்துகொண்டான், ரயில் முண்டியம்பாக்கத்தை கடந்தபோது அந்த பெண்மணி ஒரு டிபன் கேரியரை திறந்து இரண்டு மகள்களுக்கும் ஆளுக்கொரு கப்பை கொடுத்துவிட்டு குழந்தையை வாங்கி தன் மடியில் வைத்துக்கொண்டு, சத்யனிடம் ஒரு கப் உணவைக் கொடுத்து “ சாப்பிடுங்க தம்பி” என்றாள்



“ இல்லீங்க சிஸ்டர் வேண்டாம் பசியில்லை” என்று மறுத்த சத்யனுக்கு ஏனோ தனது தாயின் நினைவு வர கண்கலங்க தலைகுனிந்து கொண்டான், அவன் மனம் இருந்த நிலையில் யாரையாவது கட்டிக்கொண்டு ஓவென்று அழவேண்டும் போல் இருந்தது, அப்படி அழுவதற்கு தனது தாய் இல்லையே என்று நினைத்தாலும் அதற்கும் அழுகை வந்தது, அது பொது இடம் என்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு இருக்க முயன்றான்



இவன் அழுகிறான் என்பதை புரிந்துகொண்டு அந்த பெண் தண்ணீர் பாட்டிலை அவனிடம் கொடுத்து “ கொஞ்சம் தண்ணி குடிங்க தம்பி” என்று மெதுவான குரலில் கூற, சத்யன் சட்டையின் தோள் பகுதியில் முகத்தை துடைத்துக்கொண்டு தண்ணீரை வாங்கி குடித்தான்





“ என்ன தம்பி ஆச்சு,, ஏதாவது பிரச்சனையா? குட்டிப்பையனோட அம்மா எங்க?” என்று மெதுவாக கேட்க



“ இறந்துட்டாங்க” என்று பட்டென்று ஒரே வார்த்தையில் சத்யன் முடிக்க..



அந்த பெண் பலத்த அதிர்ச்சியுடன் “ அய்யோ கடவுளே,, எத்தனை நாளாச்சு தம்பி” என்று கேட்க



“ மூணுநாள் ஆச்சு” என்று பதில் சொன்ன சத்யன் தன்னிடம் தாவிய மனுவை வாங்கி நெஞ்சோட அணைத்துக்கொண்டான்



அவன் சொன்னதை கேட்டு அங்கு நிறையபேர் உச்சுக்கொட்டி தங்களின் வருத்தத்தை தெரிவித்தாலும் அவனை மேலும் எதுவும் கிளறவில்லை
Like Reply
#7
அந்த பெண் மனுவை வாங்கி சோறூட்டி தண்ணீர் கொடுத்து வாயை தொடைத்து தன் மடியில் போட்டு தட்டிக்கொடுக்க, மனு சுகமாக உறங்கிப்போனான், சத்யன் முழங்காலை மடித்து அதில் முகத்தை வைத்துக்கொண்டு உறங்க முயன்றான், மனம் இருந்த நிலையில் கண்கள் மூடினாலும் உறக்கம் வரவில்லை

கண்மூடியிருந்தவனை அந்தப்பெண் தோளில் தட்டி “ தம்பி இவங்க திருச்சியில் இறங்குறாங்க, நீங்க உட்கார்ந்துக்ககங்க” என்று சொல்ல, சத்யன் கண்விழித்து எழுந்து காலியான சீட்டில் அமர்ந்துகொண்டான்

“ எங்க இறங்கனும் தம்பி” என்று அநதப் பெண் கேட்டாள்


“ மதுரையில் இறங்கனும், அங்கிருந்து செங்கோட்டை பஸ் ஏறி கடையநல்லூர் போகனும்” என்றான் சத்யன்



மனுவை ஜாக்கிரதையாக அந்தப்பெண் அணைத்து தூங்கவைக்க

அதைப்பார்த்ததும் சத்யனுக்கு விட்ட இடத்தில் இருந்து மறுபடியும் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது,



ரயில் மதுரையை நெருங்கியதும் சத்யன் இறங்கவேண்டும் என்று கூறி மகனை வாங்கிக்கொண்டான், மனுவின் மீது போர்த்தியிருந்த சால்வையை உருவி எடுத்து அந்த பெண்ணிடம் கொடுக்க, 


அந்த பெண் வாங்க மறுத்தாள் “ இல்ல தம்பி பயங்கரமா குளிருது, குழந்தை குளிர் தாங்காது, சால்வையை நீங்க எடுத்துட்டுப் போங்க, இன்னும் ரொம்ப தூரம் வேற பிரயாணம் பண்ணனும், என் தம்பி புள்ளையா இருந்தா குடுக்கமாட்டேனா, குழந்தையோட அத்தை குடுத்ததா நெனைச்சு கிட்டு எடுத்துட்டுப் போங்க ” என்று அந்த பெண் பிடிவாதமாக கூறி வாங்க மறுத்தாள்



சத்யன் நன்றியுடன் அந்தப் பெண்ணை கும்பிட்டுவிட்டு அங்கிருந்து நகர, அந்தப் பெண் கூடவே எழுந்து வந்து ரயில் நின்று அவன் இறங்கும் வரை நின்றிருந்து வழியனுப்பினாள்,

ரயிலைவிட்டு இறங்கி “ தைரியமா இருங்க தம்பி” என்று கண்கலங்க சத்யனிடம் கூறிவிட்டு குழந்தையை வாங்கி அன்போடு முத்தமிட்டு பிறகு சத்யனிடம் கொடுத்துவிட்டு ரயிலில் ஏறிக்கொண்டாள்


சத்யன் அந்த பெண்ணின் அன்பில் மனம் கொஞ்சம் சமாதானம் ஆக, மனுவை அங்கிருந்த பெஞ்சில் உட்கார வைத்துவிட்டு, பக்கத்தில் இருந்த குழாயில் தண்ணீர் பிடித்து முகத்தை கழுவி முகத்தை கைலியில் துடைத்துக்கொண்டு வந்து மகனை தூக்கிக்கொண்டான்



ரயில்நிலையத்தில் இருந்து வெளியே வந்து ஒரு ஆட்டோவில் ஏறி மாட்டுத்தாவணி பேருந்துநிலையம் வந்து செங்கோட்டை செல்லும் பஸ்ஸில் ஏறியமர்நதான், குழந்தை விழித்து அவன் கழுத்தை கட்டிக்கொண்டது, சிறிதுநேரம் சத்யனின் தோளில் சுகமாய் சாய்ந்திருந்த மனு பிறகு தலையைத் திருப்பி “ நாம ஊருக்கு போறமா டாடி” என்றான்



மகனின் தாடையைப் பிடித்து கொஞ்சிய சத்யன் “ டாடின்னு கூப்பிடக்கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல, அப்பான்னு கூப்பிடனும், நாம நம்ம பாட்டியப் பாக்க ஊருக்குப் போறோம்” என்று சத்யன் சொன்னதும் தலையசைத்து விட்டு மறுபடியும் சத்யன் தோளில்ப் படுத்துக்கொண்டான் மனுநீதி



பஸ் ஸ்ரீவில்லிபுத்தூரில் நின்றபோது ஒரு கப் பாலும் பிஸ்கட்ம் வாங்கி மகனுக்கு ஊட்டினான், சத்யனுக்கு எதுவும் சாப்பிடப் பிடிக்காமல் சீட்டில் சாய்ந்துகொண்டான், இரவெல்லாம் விழித்தது கண்களை அசத்த சிறிதுநேரம் தூங்கியிருப்பான், மனு அவன் தோளைத் தொட்டு அசக்கி எழுப்பினான்



அவசரமாய் கண்விழித்த சத்யனுக்கு மனு ஜன்னல் வழியாக கைநீட்டி மேற்குத்தொடர்ச்சி மலைகளின் அழகை காட்டினான், அந்த அதிகாலைப்பொழுதில் மலைராணி தன் மெல்லிய முந்தானையால் தலையில் முக்காடிட்டது போல் இருந்தது , மலைகளும் அதன்மேல் படர்ந்திருந்த மேகக்கூட்டமும், வெகு ரம்யமான காட்சியாக இருந்தது, சத்யன் கல்லூரியில் படிக்கும் காலத்தில் பஸ் பயணத்தின் போது அந்த மலைத்தொடரில் இருந்து பார்வையை எடுக்கமாட்டான்



காற்றாலை மின்சாரத்திற்கான ஃபேன்கள் மெதுவாக சுற்ற, மனு அதைப்பார்த்து கைத்தட்டினான், சத்யனுக்கு தான் பழைய வாழ்க்கைக்கு திரும்பிவிட்டது போல மனதில் உணர்ந்தான், இயற்கையின் அழகு அவன் மனதை இலகுவாக்கியிருந்தது



காலை ஏழு நாற்பதுக்கு பஸ் கடையநல்லூரை சென்றடைந்தது, சத்யன் தன் மகனுடன் பஸ்ஸிலிருந்து இறங்கினான், அவன் மனதில் புதிதா ஒரு குழப்பம் தன்னை இந்த நிலையில் பார்க்கும் ஊர் மக்களின் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது என்று குழப்பத்தோடு தனது வயல் நோக்கி செல்லும் மண்சாலையில் மகனுடன் நடந்தான்



சைக்கிள், டிவிஎஸ் 50, மாட்டுவண்டி, என ஏகப்பட்ட வாகணங்கள் அவனை கடந்து சென்றாலும் யாருக்கும் அவனை அடையாளம் தெரியவில்லை, அப்பாடா யாருடைய கேள்விக்கும் பதில் சொல்லாமல் வீட்டுக்கு போய்விடலாம் என்ற எண்ணத்தோடு வேகமாக நடந்தான்



சாலையின் இருமருங்கிலும் இருந்த செங்காட்டு பூமி நடவுக்கு தயாராக இருந்தது, தூரத்தில் பாட்டியின் ஓட்டுவீடு தெரிய, சத்யன் நடையில் வேகத்தை கூட்டினான், வீட்டை அடைந்ததும் மனுவை கீழே இறக்கிவிட்டு கையில் பிடித்துக்கொண்டு திறந்திருந்த கதவை மேலும் திறந்துகொண்டு உள்ளே போனான்

பாட்டி கூடத்தில் அமர்ந்து பதப்படுத்தப்பட்ட ஆலமரத்து இலையை ஒன்றோடொன்று இணைத்து சாப்பிடும் அளவுக்கு (தைஇலை) பெரிய இலையாக ஈர்க்கு வைத்து தைத்து அடுக்கி அது மடங்காமல் இருக்க ஒரு பெரிய வட்டக் கல்லை அதன்மேல் படிய வைத்துக்கொண்டு இருந்தார்



யாரோ உள்ளே நுழைந்த அரவம் கேட்டு தனது மூக்குக்கண்ணாடியை தூக்கிப்பிடித்துக் கொண்டு “ யாரு வந்துருக்கது” என்றபடி சத்யனையும் அவன் மகனையும் உற்றுப் பார்த்தார், சத்யன் எதுவுமே பேசவில்லை, ஆனால் ஆயிரம் வார்த்தைகளை சொல்வதுபோல் உதடுகள் துடிக்க இவ்வளவு நேரம் அடக்கிவைத்த கண்ணீர் மடை திறந்தது



முதலில் பாட்டிக்கு நிதானம் வரவில்லை, பிறகு கையை தரையில் ஊன்றி எழுந்து தன்னால் முடிந்தவரைக்கும் வேகமாக நடந்து அவர்களை நெருங்கி சத்யனின் கன்னத்தை சுருங்கிப்போன தன் கைகளால் வருடி, கையை உயர்த்தி சத்யனின் கலைந்துபோன தலைமுடியை கோதினார் உணர்ச்சி வேகத்தில் அவருக்கும் பேச்சு வரவில்லை, ஆனால் கண்ணீர் மட்டும் தாராளமாக வந்தது



சத்யன் தான் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு “ எப்படியிருக்கப் பாட்டி”என்றான்



பேரனின் குரல் கேட்டதும் பாட்டிக்கும் உணர்வு வந்தது, “ உன்னைய பாக்கத்தான் உசுர கையிலப் புடிச்சுக்கிட்டு இருக்கேன் ராசா” என்றார்



அடுத்து என்னப் பேசுவது என்று புரியவில்லை சத்யனுக்கு மகனைத் தூக்கி பாட்டியிடம் கொடுத்து “ இவன் உன் கொள்ளுப்பேரன் பாட்டி” என்று அவர் கையில் கொடுத்தான்



ஒரு சுருக்கமான புன்னைகையோடு மனுவை வாங்கியப் பாட்டி அவனை ஆசைத்தீர கொஞ்சினார், அவர் இதுவரை சத்யனின் மகனை பார்த்ததேயில்லை என்பதால் அவர் பாசம் அளவிடமுடியாத அளவுக்கு இருந்தது 
Like Reply
#8
அதன் பின் கொள்ளுப்பேரனை இடுப்பில் வைத்துக்கொண்டு தன் பேரனின் கையைப்பிடித்துக்கொண்டு உள்ளே கிடந்த மர பெஞ்சில் அமர வைத்தார், பிறகு சத்யனையும் அவன் மகனையும் நிதானமாக அளவிட்டார்,

அவருடைய அனுபவம் சத்யனின் முகத்தில் எதை கண்டதோ “ ம்ஹும் வந்துட்டியா சத்தி, உன் அம்மா சாவுறதுக்கு மொத நாளு சொல்லிட்டுத்தான் மறுநாள் உசுர விட்டா, ஏ மவன் என்னிக்காச்சும் இங்கே வந்துருவான் அதுவரைக்கும் நீ உசுரோட இருந்து இந்த நிலத்தையும் வீட்டையும் அவன்கிட்ட ஓப்படைக்கனும்னு சொன்னா, அதேபோல் வந்துட்ட, இனி நீ எங்கயும் போகவேண்டாம் இங்கனயே இரு ஓனக்கும் ஓன் மவனுக்கும் நா சம்பாதிச்சு சோறு போடுறேன்டா சத்தி ” என்று பாட்டிக் கூறி முடிக்கும்முன் சத்யன் “ பாட்டி” என்று அலறி அவர் காலில் விழுந்தான்

அடுத்து அங்கே ஒரு உணர்ச்சிக் காவியமே அரங்கேறியது, சத்யன் நடந்தவற்றை பட்டும்படாமலும் சொல்ல அதிர்ச்சியில் வாய் பிளந்தபடி பாட்டிக் கேட்டுக்கொண்டிருந்தார், இன்னும் சத்யன் முழுவதையும் சொல்லியிருந்தால் அதிர்ச்சியில் உயிரைக்கூட விட்டிருப்பார் பாட்டி,

“ அவக்கெடக்க கழுத மூலி, நீ போய் குளிச்சிட்டு வா சத்தி சாப்புட்டு நல்லா ஒறங்கு பிரயாண கலைப்பு போகும்” என்று கூறிவிட்டு பாட்டி சமையல்கட்டுக்கு போய்விட

சத்யனும் மனுவும் வெந்நீரில் குளித்துவிட்டு வந்தனர் , சத்யன் தனது பழைய உடைகளை எடுத்துப் போட்டுக்கொண்டான், மாலை டவுனுக்கு போய் மகனுக்கு சில உடைகள் வாங்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு மனுவுக்கு தனது பழைய சிறிய டீசர்ட் ஒன்றை எடுத்து மாட்டிவிட்டான்


பிறகு பாட்டி செய்து வைத்திருந்த கேப்பை களியில் புளிக்குழம்பை ஊற்றி வயிறார சாப்பிட்டுவிட்டு கூடத்திலேயே படுத்துவிட்டான், மனுவை பாட்டி தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சுவதை பார்த்து ரசித்தபடியே உறங்கிப்போனான்

மாலையில் தான் சத்யன் எழுந்தான், மனு அவன் நெஞ்சில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தான் மகனின் தூக்கத்தை கலைக்காமல் தூக்கி கீழே படுக்க வைத்துவிட்டு பாட்டியைத் தேடிப்போனான்


பாட்டி தோட்டத்தில் காயவைத்த ஆலம் இலைகளை கோணிப்பையில் அள்ளிக்கொண்டு இருந்தார், சத்யனும் அவருடன் இலைகளை அள்ள உதவியபடி

“ பாட்டி இனிமே நான் இங்கதான் இருக்கப்போறேன், ஏதாவது வேலை தேடனும் அதுவரைக்கும் நம்ம நிலத்தில் உன்கூட சேர்ந்து பாடுபடப்போறேன், நீ என்னப் பாட்டி சொல்ற?” என்று கேட்டான்


இலை மூட்டையை சத்யன் தூக்கி வர அதை வாங்கித் திண்ணையில் வைத்துவிட்டு “ ராசு நான் எங்கனவே வெவசாயம் பார்க்குறவ, வர்றப்ப நீ வயக்காட்டை நீ பாக்கலையாவே? எனக்கும் வயசாகி நாடி தளர்ந்து போச்சு, அதனால நிலத்த செங்கல் சூளை போடுறவனுக்கு குத்தகைக்கு விட்டுருக்கேன், வருஷத்துக்கு பத்தாயிரம் தர்றான், மூனு வருஷமா சூளை போடுறான், இப்போ கேரளாவில் செங்கல்லுக்கு ஏக கிராக்கி அதனால பக்கத்து ரெண்டு ஏக்கரையும் வாங்கி நிறைய கல்லு சூளைப் போட்டு லோடு ஏத்துறான், நல்ல லாபம் இருக்கு, இந்த வருஷத்துல இருந்து தான் இன்னும் ரெண்டாயிரம் சேர்த்து கேட்கனும், அதோட உனக்கு எங்கலே வெவசாயத்தைப் பத்தி தெரியும், அந்த மாதிரி நாங்க உன்னைய வளக்கலையே” என்று பாட்டி அவனுக்கு நீண்டதொரு விளக்கமான பதிலைச் சொல்ல ..

சத்யன் மவுனமாக அமர்ந்திருந்தான் , பாட்டி சொல்வது உண்மைதான் சத்யனுக்கு விவசாயம் பற்றிய அரிச்சுவடிக்கூட தெரியாது , அடுத்து என்ன என்ற குழப்பத்துடன் பாட்டியைப் பார்த்தான் சத்யன்
Like Reply
#9
என் மனைவியாக மான்சி - அத்தியாயம் - 2

சுருக்குப்பையில் இருந்த வெற்றிலையை எடுத்து பாக்கு சேர்த்து இடித்துக்கொண்டு “ நீ நிரந்தரமா இங்கயே இருக்குறதுன்னு முடிவுபண்ணிட்டயா சத்தி,, ஏன் கேட்க்குறேன்னா, சொகுசா வளர்ந்த உடம்பு இந்த வில்லேசு காத்துக்கு ஒத்துக்கனும், அப்புறம் காலப்போக்குல ஆயிரம்தான் இருந்தாலும் தாலிகட்டுன பொஞ்சாதி ஆச்சேன்னு நெஞ்சு அடிச்சுக்கும் சத்தி, அதனால்தான் கேட்குறேன்” என்று பாட்டி மனிதவாழ்வின் நிதர்சனத்தை சத்யனுக்கு சொன்னார்

சத்யன் அமைதியாக இருந்தான், பின்னர் ஒரு பெருமூச்சுடன் நிமிர்ந்து பாட்டியைப் பார்த்து “ பாட்டி நான் கட்டிய மறாவது நாளே அந்த தாலி கழட்டி துணியெல்லாம் மாட்டுற கொக்கில மாட்டிட்டா, இன்னிக்கு வரைக்கும் அது மெருகு குலையாம அங்கயேதான் இருக்கு, இப்போ என்னோட நிலைமை என்னன்னு புரியுதா பாட்டி” என்று பாட்டிக்கு புரியும்படி சொன்னான் சத்யன்

பாட்டி வேகமாக எழுந்து வீட்டுக்கு வெளியே இருந்த குப்பையில் வெற்றிலை எச்சியை புளிச்சென்று துப்பிவிட்டு வந்து அமர்ந்து “ சரி இதுக்கு மேல அதைப்பத்தி பேச வேனாம்லே, நீ டவுன்ல ஏதாவது கணக்கு வேலை கெடைக்குதான்னு பாரு, நானும் இங்கே நாலுபேரு கிட்ட சொல்லி வேலை கெடைக்குமான்னு பாக்குறேன், அது வரைக்கும் எங்கயும் போகாத வீட்டுலயே இரு சத்தி” என்று கூறிவிட்டு வீட்டுக்குள் போய் ஒரு தைத்த இலைக்கட்டை எடுத்துக்கொண்டு வந்தார்


“ சத்தி நீ கதவை சாத்திக்கிட்டு புள்ளைய பார்த்துகிட்டு இங்கனயே இரு சத்தி நா டவுனுக்கு போய் எலக்கட்டை வித்துட்டு சின்னவனுக்கு நாலு துணி வாங்கிட்டு வர்றேன்” என்றவர் அவன் பதிலை எதிர்பார்க்காமல் விடுவிடுவென நடந்தார் பாட்டி

போகும் பாட்டியையே பார்த்தான் சத்யன், ‘’ மனுவுக்கு என்ன துணியெடுக்கத் தெரியும் பாட்டிக்கு,, என்று சத்யன் யோசித்தபடி உள்ளே போனான், ஏன்டா சத்யா கல்யாணம் பண்ற வரைக்கும் இவங்க எடுத்து குடுத்த துணியைத் தானே நீ போட்டுக்கிட்ட, இப்போ உன் மகனுக்கு எடுக்க பாட்டிக்கு தெரியாதா ,, என்று அவன் மனம் பழசை ஞாபகப்படுத்த, சத்யன் சிரித்தபடி அரசாங்கம் கொடுத்த சிறிய டிவியை ஆன்செய்து விட்டு தரையில் அமர்ந்து டிவி பார்த்தான்

சத்யனுக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட கிராமத்து வாழ்க்கை என்பதால் எந்த சிரமும் இருக்கவில்லை, ஆனால் மனுவை சமாளிப்பது ரொம்பவே கஷ்டமாக இருந்தது, ஆட்டுக்குட்டி, கோழிக்குஞ்சு, நாய்க்குட்டி, என்று எதைப் பார்த்தாலும் அதன் பின்னாடி ஓடினான், அவன் பின்னாடி பாட்டியும் ஓடுவார்

சத்யன் மூன்று நாட்களாக டவுனுக்கு போய் ஏதாவது வேலை கிடைக்குமா என்று தேடினான், அலைச்சல் தான் மிஞ்சியது, ஏதாவது சொந்தமாக தொழில் ஆரம்பிக்க கையில் பணமும் இல்லை, எந்த தொழிலும் சத்யனுக்கு தெரியாது, சுற்றுவட்டாரங்களில் இருந்த சில பெரிய கம்பெனிகளுக்கு எழுதி போட்டிருந்தான், எந்த கம்பெனியும் இன்டர்வியூ கார்டு அனுப்பவில்லை,

சத்யனின் திறமைக்கு சென்னைக்குப் போனால் பல இலக்கங்களுடன் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும் தான், ஆனால் சத்யனுக்கு சென்னை என்ற பெயரே கசந்தது, பட்டினியில் செத்தாலும் சென்னைக்கு போவதில்லை என்ற முடிவில் இருந்தான்

அவன் அப்பா பெயரில் பாட்டிக்கு வந்த மிலிட்டரி பென்ஷன் பணம் சில ஆயிரங்களையும் பாட்டியின் உழைப்பில் வந்த பணம் எல்லாவற்றையும் சிறுகச்சிறுக சேர்த்து நான்கு லட்சம் வரை வங்கியில் வைத்திருப்பதாகவும் அதை எடுத்து ஏதாவது தொழில் செய்யுமாறு பாட்டி கூறினார்

சத்யனுக்கு அந்த பணத்தை எடுத்து செலவு செய்ய விருப்பம் இல்லை, இவ்வளவு நாட்களாக சேர்த்த பணத்தை தொழில் தெரியாமல் எதிலாவது போட்டுவிட்டு இழப்பதைவிட எங்காவது கூலி வேலை செய்யலாம் என்ற முடிவுக்கு சத்யன் வந்திருந்தான், அதனால் பாட்டியிடம் “ பார்க்கலாம் பாட்டி “ என்று மட்டும் சொன்னான்


நாட்கள் வாரங்களாக சத்யன் பாட்டியுடன் அமர்ந்து இலை தைக்க கற்றுக்கொண்டான், நுனுக்கமாக இலையை கத்தரித்து அதை ஈர்க்கு குச்சியால் இணைப்பது ஒரு தனிக்கலை போல் இருந்தது

பாட்டி இலையை தைத்துக்கொண்டு “ மழை சீசன் முடிஞ்சு போச்சு சத்தி இன்னும் ரெண்டொரு நாள்ல சூளை போடுற ஆளுங்க சாமானுங்களோட வந்து எறங்குவாங்க, நம்ம மோட்டுவயல்ல தான் கொட்டாப் போட்டு தங்குவாங்க, அத்தோட அடுத்த மழைக்காலம் வரைக்கும் இங்கதான் இருப்பாக, மண்ணு பெசைஞ்சு பச்சக் கல்லு அறுக்குறவங்க மட்டும் குடும்பத்தோட இங்கயே தங்குவாங்க, மத்த கூலியாளுக எல்லாரையும் உள்ளூர்லயே கூப்பிட்டுக்குவான் மேஸ்திரி, நாளைக்கு அவன்கிட்ட ரெண்டாயிரம் ஏத்தி கேக்கனும், நீயும் கூட இருவே” என்று பாட்டி பேசிக்கொண்டு இருக்க, சத்யன் எல்லாவற்றையும் கவனமாக கேட்டான்

அவனும் இதுவரை செங்கல் சூளைப் போட்டு பார்த்ததில்லை, ஆர்வத்துடன் மறுநாள் காலை எழுந்து மகனை தூக்கிக்கொண்டு வயலுக்குப் போனான்,

வயலில் ஏற்கனவே டிராக்டர்கள் மூலம் எடுத்து வந்து மண் மலைபோல் கொட்டப்பட்டிருக்க, அந்த மண் மேட்டின் நடுவே பள்ளம் எடுத்து அதில் மோட்டார் மூலம் தண்ணீர் நிரப்பிக்கொண்டு இருந்தார்கள், தண்ணீர் சேர்ந்ததும் மண்ணை குழைத்து பெரிய இரும்பு தட்டுகளில் அள்ளி வேறிடத்தில் கொட்ட அந்த சேற்றை நான்கைந்து பெண்கள் முழங்கலுக்கு மேலே துணியை மடித்து தொடைக்கு நடுவே கட்டிக்கொண்டு ஒரே தாளகதியில் சேற்றை மெதித்து மண்ணை குழைத்தார்கள்

சத்யனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை, நாலு ரூபாய் செங்கலுக்குப் பின்னால் இத்தனைபேரின் உழைப்பு இருக்கிறதா என்று நினைத்தான்
Like Reply
#10
வயலின் மறுபக்கத்தில் ஆற்று மனல் பரப்பி அதன்மேல் பிசைந்த மண்ணை பெண்கள் தட்டுகளில் சுமந்து வந்து கொட்ட , இரண்டு ஆண்களும் நான்கு பெண்களும் அந்த மண்ணை தட்டி பரப்பி அதில் செங்கலின் மர அச்சை வைத்து அழுத்தி எடுக்க மற்றொரு ஆள் அந்த பச்சை செங்கல்லில் sss என்ற முத்திரையை பதித்துக்கொண்டு இருந்தான்,

அப்போது அங்கே வந்த ஒரு பெண் தனது இடுப்பில் இருந்த அருவாளை எடுத்து பச்சை செங்கலை கையில் எடுத்து நாற்புறமும் இருந்த மண் பிசிறுகளை லாவகமாக செதுக்கினாள்,

சத்யன் ஆச்சரியமாக அவளையே பார்த்தான், அந்த பெண்னின் தோற்றத்தையும் உடையையும் வைத்து வயதை நிர்ணயிக்க முடியவில்லை, ஆண்கள் அணியும் முழுக்கை சட்டையணிந்து அதை முட்டி வரை மடித்து விட்டிருந்தாள், எடுப்பான மார்புகளை வெளியேத் தெரியா வண்ணம் உள்ளே இறுக்கிக் கட்டியிருந்தாள், பூப்போட்ட கருநீல சீட்டி பாவாடையை மடித்து ஆண்கள் கைலி கட்டுவது போல் கட்டியிருந்தாள், முழங்காலுக்கு கீழே எந்தத் துணியும் மறைக்காமல், நெளுநெளுவென்று இருந்தது கால்கள்,

வெயிலில் அவள் உழைத்த உழைப்பின் அடையாளமாக தலைமுடியில் கத்தை கத்தையாக செம்பட்டை ஏறியிருந்தது, மொத்தக் கூந்தலையும் கொண்டையாக அள்ளி முடிந்திருந்தாள் சிவப்பா அல்லது மாநிறமா என்று கண்டுபிடிக்க முடியாதபடி ஒரு மாதிரி செம்பழுப்பு நிறத்தில் இருந்தாள், மற்றபடி நெற்றியில் பொட்டுக்கூட இல்லாமல் நிர்மலமான முகத்துடன் இருந்தாள்,


அசால்டாக பச்சை செங்கலை அருவாளால் சீவியவள் திடீரென்று எரிச்சலுடன் கையில் இருந்த மண்ணை கையால் நசுக்கி எரிந்துவிட்டு “ ஓய் மேஸ்திரி மாமோய், இன்னாய்யா மண் இது கையில ப்பீ மாதிரி ஒட்டுது, செங்கலுக்கு மண்ணு சும்மா பொச பொசன்னு இருக்கவேனாம், இது பிசுபிசுன்னு பீயாட்டம் ஒட்டுது, இத எப்புடி சீவ முடியும், இது என்னிக்கு காஞ்சு என்னிக்கு சூளையில அடுக்குறது, இப்புடி இருந்தா அடுத்த தைக்குத்தான் மேஸ்திரி நீ சூளையை பத்தவைக்க முடியும்” என்று நக்கலாக பேசினாள்

அவளருகே வந்த மேஸ்திரி “ என்னா புள்ள பண்றது நா வர்றதுக்கு முன்னால ராவோட ராவா மண்ணடிச்சுட்டானுங்க, இப்போ போய் பேசி என்ன செய்றது?” என்று சலிப்போடு மேஸ்திரி சொல்ல

“ இன்னு கொஞ்சம் மண்ணுல தண்ணி விடு மேஸ்திரி சரியா வரும்” என்று அந்த முழுக்கைச் சட்டைப் பெண் சொன்னதும், மேஸ்திரி சரியென்று தலையாட்டிக்கொண்டு போனார்

தரையில் அமர்ந்து பச்சை கல்லில் அச்சு குத்திக்கொண்டு இருந்தவன் “ பாவம் மேஸு பொண்டாட்டிக்கு கூட ஒழுங்கா தண்ணி விட்டுருக்க மாட்டாரு, இங்க வந்து எவ எவளோ சொல்றதுக்கெல்லாம் தண்ணீ உடுறாருப்பா” என்று பக்கத்தில் இருந்தவனிடம் நக்கலாக சொல்ல

கல்லை சீவிக்கொண்டு இருந்த அந்த பெண் கையில் இருந்த கல்லை எரிந்து விட்டு ஆவேசமாக அவனை நெருங்கி “ ஏலேய் என்ன நக்கலாவே, இழுத்து வச்சு ஒட்ட அறுத்துட்டு ஒம்ம பொண்டாட்டிக்கு ஒன்னுமில்லாம பண்ணிப்புடுவேன் ஆமா, யாருகிட்ட பேசுறேன்னு நெஞ்சுல நெனைப்புல வச்சுக்கிட்டு பேசு, ங்கொம்மா இல்லேன்னா செங்கலை சீவுற மாதிரி சீவிப் புடுவேன் சீவி ” என்று ஆத்திரமாக கத்த

“ ஏய் எங்க சீவுடி பார்க்கலாம்,, பேரைப் பாரு பேரை மான்சியாம் மான்சி, வெளக்குமாத்துக்கு பட்டுக்குஞ்சம் மாதிரி ” என்று அந்த அரை டவுசர் எழுந்து நெஞ்சை நிமிர்த்தினான்

“ ஏலேய் சூலக் கருப்பா, என் பேரை மாத்துரும் கொறை சொல்லாத அது பத்ரகாளியோட பேரு, அப்புறம் நான் பத்ரகாளியா மாறவேண்டியிருக்கும்லே” என்று அந்த பெண் கையில் அருவாளை பிடித்தபடி காளியாகவே மாறினாள்

மேஸ்திரி மறுபடியும் ஓடி வந்தார் “ ஏன்டா சும்மா வாயை வச்சுகிட்டு இருக்கமாட்டியலா, அந்த புள்ள கொணம் தெரிஞ்சு ஏன் அவகிட்ட வம்பு பண்றீங்க” என்று இரு தரப்பையும் சமாதானம் செய்ய,

அவருக்குப் பின்னால் இருந்து, “ ஓய் மேஸ்திரி இங்க இன்னும் கொஞ்சம் தண்ணி உடு, மண்ணுக்கு தண்ணி பத்தலை” என்று யாரோ ஒரு பெண் குரல் கொடுக்க

கூப்பிட்ட பெண்ணின் குரலில் வார்த்தையில் இருந்த இரட்டை அர்த்தத்தை கேட்டு இப்போது அந்த சண்டைக்காரிக்கே சிரிப்பு வந்துவிட, “ போ மேஸ்திரி போ “ என்று ஜெயம் பட கதாநாயகி மாதிரி கையை நீட்ட மேஸ்திரி ஓடினார்

மறுபடியும் அவரவர் வேலையை தொடர, இதையெல்லாம் ஒரு மரநிழலில் நின்று கவனித்த சத்யனுக்கு அந்த பெண்ணைப் பார்க்க, திகைப்பாக இருந்தது என்னா பேச்சு பேசுறா ஆம்பிளை மாதிரி, ம்ம் ரொம்ப தைரியமானவ போலருக்கு என்று நினைத்தப்படி வீட்டுக்கு திரும்பினான்

அன்று மாலை பாட்டி வெளியே போயிருக்க, சத்யன் தட்டில் சாப்பாட்டை போட்டு மனுவுக்கு ஊட்டிவிட்டு தானும் சாப்பிட்டான், கையை கழுவிவிட்டு மகனுடன் கூடத்தில் வந்து அமர்ந்தான்

“ அம்மாச்சி இருக்கியலா ” என்று வெளியே குரல் கேட்க,

சத்யன் மனுவை கீழே விட்டுவிட்டு எழுந்து கதவை திறந்தவன் திகைத்துப் போனான், அதே பத்ரகாளி தான் வந்திருந்தாள், நல்லவேளையாக பாவாடையை கால் மறைக்கும்படி இறக்கி விட்டிருந்தாள் ஆனால் இடுப்பில் இருந்த அருவாள் அப்படியே இருந்தது,
Like Reply
#11
சத்யனின் பார்வை இடுப்பில் இருந்த அருவாளிடம் போனதும் அவள் சிறு சிரிப்புடன் “ கல்லு சீவிக்கிட்டு இருந்தேன் அப்படியே வந்துட்டேன்” என்றாள்
சத்யன் பார்வையைத் திருப்பிக்கொண்டு “ பாட்டி வெளிய போயிருக்கு, என்னா வேனும்” என்றான்

“ சாப்பாடுக்கு எலக்கட்டு வாங்க வந்தேன், நீங்கதா எடுத்து குடுத்துட்டு காசு வாங்கிக்கங்களேன்” என்று அந்தப் பெண் ரூபாயை நீட்ட ,
சத்யன் உள்ளே போய் இலைக் கட்டை எடுத்துவந்து கொடுத்துவிட்டு பணத்தை வாங்கிக்கொண்டான்,

இலைக்கட்டோடு திரும்பியவள் மறுபடியும் திரும்பி “ நீங்க யாரு அம்மாச்சிக்கு ஒறவா?” என்று சத்யனைப் பார்த்து கேட்க

அவளின் கொச்சை தமிழை ரசித்தபடி “ நா அவங்க பேரன் சென்னையில் இருந்து வந்திருக்கேன்” என்றான் சத்யன்

ஒரு கணம் அவனை நிதானமாக ஏறிட்டவள், தன் கன்னத்தில் கைவைத்து “ பட்டணத்துல என் பேரன் கோட்டு சூட்டோட தான் இருப்பான், கப்பல் போல பெரிய கார்ல தான் வருவான், கழுத்துல கையில எல்லாம் வெரலு தண்டி சங்கிலிப் போட்டுருப்பான் என் பேரன்னு கெழவி பீத்திக்குமே அந்த பேரனா நீங்க” என்று அவனுடைய தற்போதைய தோற்றத்தை ஒப்பிட்டு நக்கலாக பேசிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்

சத்யனுக்கு அவள் வார்த்தைகளின் தாக்கத்தில் இருந்து வெளியே வர சற்று நேரம் பிடித்தது, ஏதோ மழை பெய்து ஓய்ந்தது போல இருந்தது, அந்த பையன் சொன்னது உண்மைதான் இவளுக்கு யார் மான்சி என்று பெயர் வைத்தார்கள் என்று நினைத்தான் சத்யன்

அடுத்த இரண்டு நாட்களும் சத்யனுக்கு வயலில் சுற்றவே சரியாக இருந்தது, அவன் பார்த்தவரையில் அங்கே வேலை செய்யும் பெண்களில் மான்சி ரொம்ப முக்கியமானவள் என்றும், அத்தோடு எல்லாருமே அவளுக்கு கொஞ்சம் பயந்துதான் நடந்துகொண்டனர், அவளும் அவளுடைய அம்மா தங்கை என மூன்று பேருமே சூளையில் வேலை செய்தனர், அவளின் சொந்தக்காரர்கள் சிலரோடு அங்கேயே குடிசைப் போட்டு தங்கியிருந்தாள்

அன்று காலை எழுந்ததுமே சத்யன் அவளைத்தேடித்தான் போனான், குடிசைக்கு வெளியே அடுப்பு மூட்டி சமையல் செய்துகொண்டு இருந்தவள், இவனைப் பார்த்ததும் அருகில் வந்து “ என்னா விஷயம் சார்” என்றாள்

சத்யன் பெரிதும் தயங்கிப் பிறகு ஒரு முடிவோடு “ மேஸ்திரி கிட்ட சொல்லி எனக்கும் ஏதாவது ஒரு வேலை வாங்கிக் குடேன், வீட்டுல சும்மா உட்கார்ந்து பொழுத ஓட்டறது கஷ்டமா இருக்கு” என்றான்

அவனை விழிவிரிய ஆச்சர்யமாக பார்த்தவள் “ ஒனக்கு என்னா வேலை தெரியும் சாரு, இதெல்லாம் பழக்கம் இல்லாம செய்யமுடியாது” என்று மான்சி மறுக்க

சத்யன் முகத்தில் கவலையுடன் “ கத்து குடுத்தா நான் சீக்கிரமா கத்துக்குவேன் ப்ளீஸ்” என்றான்

அவனையே யோசனையுடன் பார்த்தவள் “ சரி மேஸ்திரி வரட்டும் சொல்லி ஏற்பாடு பண்றேன், நீ போய் சாப்பிட்டு வா” என்றாள்

சத்யன் சந்தோஷத்துடன் தலையசைத்து விட்டு வீட்டுக்கு போனான்,,

போகும் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள் மான்சி, படித்து விட்டேன் என்று வீட்டில் சும்மா இருக்காமல் உழைத்து சாப்பிடனும்னு எத்தனை பேர் நெனைப்பாங்க,, உண்மையாவே இந்தாளு பெரியமனுஷன் தான்,, என்று எண்ணியபடியே சமையலை கவனிக்க போனாள் 


சத்யன் குளித்து சாப்பிட்டுவிட்டு மனுவை பாட்டியிடம் ஒப்படைத்து “ பாட்டி சூளையில வேலை கேட்டுருக்கேன்,, சும்மா வீட்டுல இருக்குறதுக்கு அங்கயாவது போய் வேலைசெய்யலாம்னு போறேன் பாட்டி “ என்று கூறிவிட்டு ஒரு துண்டு எடுத்து தோளில் போட்டுக்கொண்டு கிளம்பினான்,

பேரனை மடியில் அமர்த்திக்கொண்டு “ ஏவே சத்தி குளிச்சுட்டு டிப்டாப்பாக போக இதென்ன ஆபிஸ் உத்யோகமா, இந்த வேலைக்கெல்லாம் பல்லை தேய்ச்சுபுட்டு ஒரு வாய் கஞ்சிய ஊத்திட்டு அழுக்குத்துணியோட போகனும், பொழுதுசாய வந்து அழுப்புத் தீர குளிக்கனும், நீ என்னமோ கலெக்டரு வேலைக்குப் போறவன் மாதிரி போற” என்று பாட்டி கிண்டல் செய்தார்

சத்யன் குனிந்து தனது உடைகளை பார்த்தான், வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில் இருந்தான், அட ஆமாம் இதோட போய் எப்புடி மண்ணு வேலை செய்யமுடியும், என்று தன்னைத்தானே நொந்துகொண்டான் சத்யன்,,

சூளையில் வேலை செய்யும் அணைவரும் கலர்கலராய் டவுசர் தான் போட்டிருந்தார்கள், ‘ நம்மிடம் டவுசரே இல்லையே,, என்ன செய்வது என்று யோசனையோடு பாட்டியைப் பார்த்தான்,

“ இத அவுத்துட்டு பழைய கைலியும் சட்டையும் போட்டுகிட்டு போ” என்று பாட்டி சொன்னதும் சத்யன் மறுபடியும் உள்ளே போய் வாறு உடை மாற்றிக்கொண்டு வேலைக்குப் போனான்

அங்கே எல்லோரும் வந்து அவரவர் வேலையை செய்ய, சத்யன் மான்சியின் அருகே போய் நின்றான், குத்தங்காலிட்டு அமர்ந்து கல்லை சீவிக்கொண்டிருந்தவள் அதை வைத்துவிட்டு அவனை ஏறிட்டுப் பார்த்தாள்,
அவனை ஏறஇறங்க பார்த்தவள் “ மேஸ்திரி கிட்ட சொல்லிட்டேன், ஒனக்கு என்னா வேலை தெரியுமோ அதைச்செய்ய சொன்னாரு, ஒனக்கு என்னா வேலை தெரியும்யா?” என்று மான்சி கேட்க

எதுவும் தெரியாது என்பதன் அறிகுறியாக சத்யன் தலையை குனிந்து கொண்டான்

அவனை அப்படி பார்க்க அவளுக்கு எப்படி இருந்ததோ தெரியவில்லை, “ சரி என் கூட ஒக்காந்து நான் என்ன செய்றேன்னு பாரு, அதுபோலவே செய்” என்று கூறிவிட்டு தன் வேலையில் மும்முரமானாள்
Like Reply
#12
சத்யன் அவளருகே அமர்ந்தான், கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு அவளைப்போலவே குத்தங்காலிட்டு அமர்ந்தால் உள்ளே இருக்கும் ஜட்டி வரை தெரிந்தது, சத்யன் சங்கடமாக எழுந்துவிட்டான்,

மான்சி நிமிர்ந்து அவனைப் பார்த்து “ என்னாயா எந்திரிச்சிட்ட?” என்று கேட்க,, சத்யன் சங்கடமாக பார்த்தான்

மான்சி அவன் பார்வையிலேயே அவனது சங்கடத்தை புரிந்துகொண்டு “ கைலியை தொடைக்கு நடுவுல விட்டு பின்னாடி சொருகிட்டு வேலையைப் பாரு, கோமணம் கட்டுற மாதிரி, கீப்பாசு கட்டனும்” என்று கூறிவிட்டு மீண்டும் தனது வேலையை தொடர்ந்தாள்

சத்யன் பக்கத்தில் இருந்தவனை பார்த்து அதேபோல் கட்டிக்கொண்டு மான்சி அருகில் அமர்ந்து பக்கத்தில் இருந்த செங்கல் அச்சை எடுத்த மண்ணில் பதித்து கோணலாக இரண்டு கல்லை உருவாக்கினான், மான்சி தன் வேலையை போட்டுவிட்டு எப்படி கல் அச்சிடுவது என்று அவனுக்கு கற்றுக்கொடுத்தாள், முதலில் தடுமாறினாலும் பிறகு சத்யன் சரியாக கற்றுக்கொண்டான், ஆனால் மெதுவாக செய்தான்,

“ இதப்பாருய்யா இன்னும் வெரசா அறுக்கனும், இன்னிக்குப் பூராவும் நூறு கல்லு அறுத்தா எருநூறு ரூவா கூலி, நா ஒருநாளைக்கு எரநூறு கல்லு அறுப்பேன், ஆம்பளைக் கூட என்கூட போட்டிப் போட முடியாது” என்று பேசிக்கொண்டே வேலை செய்தாள்

அருகில் இருந்த ஒரு சிலர் இவர்களை கவனித்தாலும் யாரும் எதுவும் கேட்கவில்லை .

“ நேத்து நைட்டு தா ஒம்ம மவனை பார்த்தேன் அம்மாச்சி வச்சிகிட்டு இருந்துச்சு, என்னா சமத்து புள்ளய்யா ஒம் மவன், மொதல்ல என் கிட்ட வரல, அப்புறமா யோசிச்சு தா வந்துச்சு, ஆனா பயபுள்ள நல்லா ஒட்டிக்கிச்சு, ஆனாலும் இந்த புள்ளைய விட்டுட்டு உன் பொண்டாட்டி செத்துப்போனது அநியாயம்லே” என்று மான்சி சொன்னதும் சத்யன் சட்டென்று அவளை நிமிர்ந்து பார்த்தான்

“ என்னா பாக்குறவே, அம்மாச்சி தான் நைட்டு சொல்லுச்சு, கேட்டதும் மனசுக்கு ரொம்ப கஷ்டமா தா இருந்துச்சு, விடு அவளுக்கு விதி அம்புட்டுத்தான் போய் சேந்துட்டா, எங்கப்பாரு கூட எங்களை விட்டுட்டு போய்ட்டாரு, எல்லாரும் அழுதாக ஆனா நா மட்டும் அழுவவே இல்லையே, ஏன் அழுவனும், அந்த கழுத மூலி குடிச்சு குடிச்சு கொடலு வெந்து செத்தான், இருக்குவர நாங்க நாலு பேரும் கஷ்டப்பட்டு கொண்டு வந்த காசை குடிச்சான், அதனால அவன் செத்ததும் அப்பாட இனிமே காசு சேக்கலாம்னு ஒரு நிம்மதி தான் எனக்கு வந்துச்சு, இப்போ எங்கப்பன் செத்து இந்த ஏழு வருஷத்துல காசை சேர்த்து ஊருல இருந்த மக்கிப்போன கூரை வீட்டை இடிச்சுட்டு சீமை ஓடு போட்டு வீட்டை கட்டினேன், ஒரேஒரு ரூமுன்னாலும் எங்களுக்குன்னு ஒரு வீடு இருக்கு, எனக்கு அடுத்த தங்கச்சிய ஒரு நல்லவனா பார்த்து மூனு பவுனு போட்டு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி கட்டிக் குடுத்தேன், இப்போ அது ஒரு புள்ளைய பெத்துருச்சு, இன்னும் ஒரு தங்கச்சி இருக்கா, அவளையும் கட்டிக் கொடுத்துட்டா அப்பறம் நானும் என் ஆத்தாலும் தா, எங்க ஊர்லயே ஏதாவது வேலை செஞ்சு பொழச்சுக்குவோம், இப்புடி ஊர் ஊரா அலையவேண்டியது இல்லை, நீயே சொல்லு எங்கப்பன் உசுரோட இருந்திருந்தா இதுல ஒன்னுகூட நடக்காது” என்று மான்சி வேலையில் கவனத்தை வைத்துக்கொண்டே தன் சுயசரிதையை சொல்ல

அவள் கதையை கேட்டு சத்யனின் மனம் கசிந்துருகியது “ அப்ப உனக்கு அண்ணன் தம்பி யாரும் இல்லையா மான்சி” என்று கேட்டான்
சத்யனை வெடுக்கென்று நிமிர்ந்து பார்த்த மான்சியின் கண்களில் அனல் பறந்தது, 



சத்யன் பயந்து போனான், அப்படியென்ன தவறா கேட்டுட்டோம்னு இவ்வளவு கோவப்படுறா, என்று நினைத்தான், அதன்பிறகு எதுவும் கேட்காமல் அமைதியாக தனது வேலையை தொடர்ந்தான்

சிறிதுநேரம் கழித்து அவளாகவே “ எனக்கு ஒரு அண்ணன் இருக்கான், ஆனா அந்த தறுதலை இப்போ எங்கருக்குன்னு எங்களுக்கு தெரியாது, நாங்க நாலு பொட்டச்சியும் கஷ்டப்பட்டு அவனை படிக்கவச்சோம் இப்போ அது எங்கருக்குன்னு எங்களுக்கே தெரியாது, ஆனா அவன் என்னிக்கு வந்தாலும் அவனுக்கு சாவு என் கையாலதான்” என்று மான்சி ஒரு மாதிரியான குரலில் கூறினாள்,

அவள் குரலில் இருந்தது கோபமா? குரோதமா? என்று சத்யனால் இனம் கானமுடியவில்லை, அவள் தனது அண்ணனால் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்று மட்டும் அவனுக்கு புரிந்தது

மான்சி பேசி முடிக்கவும் மதிய உணவுக்காக எல்லோரும் அமரவும் சரியாக இருந்தது

“ சரி நீ போய் சாப்பிட்டு வா ” என்று கூறிவிட்டு அவள் எழுந்திருக்க

“ நீ சாப்பிடலையா? மான்சி ” என்று சத்யன் கேட்க,, அவனை திரும்பி ஆச்சர்யமாக பார்த்தாள் மான்சி

“ என்ன அப்படி பார்க்கிற?”

“ இல்ல என் பேரை சொல்லி யாருமே கூப்பிட மாட்டாங்க,, நீதான் நல்லா அழகா கூப்புடுற” என்றாள்

“ ஏன் கூப்பிட மாட்டாங்க,, மான்சி ரொம்ப அழகான பேரு” என்றான் சத்யன்

“ ம்ம் நல்லப் பேருதான், எங்க தாத்தா வச்சாராம், எங்களுக்கு கொல சாமி பத்ரகாளியாம், அதனால் என்பேரு மான்சி தேவி, பெரிய தங்கச்சி பேரு முத்துமாரி, சின்னவ பேரு புவனேஸ்வரி” என்று பெயருக்கான விளக்கத்தை சொல்லிவிட்டு போனாள்

சத்யன் அவளையே சிறிதுநேரம் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு, தன் வீட்டை நோக்கிப் போனான், அவன் வாழ்க்கையில் இப்படியொரு பெண்ணை அவன் சந்தித்ததில்லை, உழைப்பின் உதாரணமாக உயர்ந்து நின்ற மான்சி அவன் மனதிலும் உயர்ந்துவிட்டாள், ஒரு ஆண் தன் குடும்பத்துக்கு செய்யவேண்டிய கடமையை ஒரு பெண்ணாக இருந்து அவள் செய்வது சத்யனுக்கே பெருமையாக இருந்தது, கள்ளமில்லாமல் தன்னைப்பற்றிய விஷயங்களை பார்த்து இரண்டே நாட்கள் ஆன தன்னிடம் அவள் பகிர்ந்துகொண்டது சத்யனுக்கு வியப்பாக இருந்தது, இவளைப்போல் தன்னால் வெளிப்படையாக பேசமுடியவில்லை ஏன்? என்ற கேள்வி சத்யன் மனதில் எழுந்தது,, வேறென்ன சுயகௌரவம் பாதிக்கப்பட்டுவிடும் என்ற சுயநலம்தான்,, என்று அவன் மனம் அவனுக்கு பதில் சொன்னது
Like Reply
#13
வீட்டுக்கு வந்து கைகழுவிவிட்டு சாப்பிட அமர்ந்தான்,, அவன் கைகள் அதற்க்குள் மென்மையைத் தொலைத்து சொரசொரப்பாக மாறியிருந்தது,, அரைநாள் வேலைக்கே என் கைகள் இப்படி ஆயிருச்சே, மான்சி வருஷக்கணக்கா இதே வேலையை செய்றாளே அவ கைகள் எப்படி இருக்கும் என்று நினைத்தபடி சத்யன் சாப்பிட்டான்

சாப்பிட்டு முடித்ததும் சிறிதுநேரம் மனுவை கொஞ்சிவிட்டு எழுந்து சூளைக்கு போனான், ஒரு ஓரமாக கிடந்த பாறையில் அமர்ந்து மான்சி அப்போதுதான் சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள், சத்யன் அவள் பக்கத்தில் கிடந்த கல்லில் அமர்ந்தான்,

அவனை நிமிர்ந்து பார்த்தவள் “ நீ அதுக்குள்ள சாப்பிட்டயா” என்று கேட்டுவிட்டு அவன் பதிலை எதிர்பார்க்காது மறுபடியும் தூக்குசட்டியில் இருந்த சோற்றை அள்ளி தன் வாயில் அடைத்தாள்

அவள் சாப்பிடுவது தண்ணி சோறு என்று தெரிந்தது, “ ஏன் மான்சி கொழம்பு வைக்கலையா?” என்று அக்கறையாக கேட்டான் சத்யன்

வாயில் இருந்த சோற்றை விழுங்கிவிட்டு, தூக்குசட்டியில் இருந்த தண்ணீரை குடித்துவிட்டு “ அதையேன் கேட்குற, காலையில நீ வந்து போனதுக்கு அப்பறம் உன்னையே நெனைச்சுக்கிட்டு இருந்தேனா, அடுப்புல இருந்த பருப்பு தீஞ்சு போச்சு, அப்புறம் எங்கருந்து கொழம்பு வைக்கறது எடுத்து கொட்டிட்டு சோத்துல தண்ணிய ஊத்தி வச்சேன்” என்று மான்சி சொல்ல

தன்னைப்பற்றி அவள் நினைத்தாள் என்றதும் சத்யனின் ஆவல் அதிகமாக, என்ன நினைத்தாள் என்று கேட்க எண்ணினான், ஆனால் ஏதாவது துடுக்காக பேசிவிடுவாளோ என்று பயந்து வாயை மூடிக்கொண்டான்,

மான்சி சாப்பிட்டு முடித்துவிட்டு துக்கையும் கையையும் கழுவிவிட்டு சத்யன் அருகில் வந்து உட்கார்ந்தாள்,, “ யப்பா மாசிலயே இப்படி வெயில் கொழுத்ததுதே இன்னும் சித்திரையில் என்னப் பண்ணுமோ தெரியலை, இந்த வெயில் எல்லாம் உன்னால தாங்க முடியாது சீக்கிரமா ஏதாவது வேலையை தேடிக்க” என்று சொன்னவாறு தலையில் இருந்த துண்டை எடுத்து முகத்தை துடைத்துக்கொன்டள்

சத்யன் சரியென்று தலையசைத்து விட்டு அமைதியாக இருந்தான்,, சிறிதுநேரம் கழித்து “ உனக்கு என்ன வயசு ஆகுது மான்சி” என்றான்

எதுக்கு கேட்குற என்பதுபோல் மான்சி அவனை நேராய் பார்க்க ..

“ இல்ல உன் தங்கச்சிக்கே கல்யாணம் ஆகி குழந்தை இருக்குன்னு சொன்னியே அதான் உனக்கு என்ன வயசு ஆகுதுன்னு கேட்டேன்” என்றான் சமாதானமாக..

அவனுடைய இறங்கலான பேச்சு அவளை ஏதோ செய்ய “ ம்ம் வர்ற வைகாசி வந்தா இருபத்தேழு வயசு ஆரம்பிக்குது” என்றாள் மெல்லிய குரலில்


சத்யனுக்கு வியப்பாக இருந்தது வெறும் சட்டை பாவாடையில் அவள் வயது மறைந்துவிட்டது என்று நினைத்தான், அவள் என்ன என்பதுபோல் பார்க்க “ இல்ல நீ ஏன் இந்த மாதிரி டிரஸ் போடுற, சீலையெல்லாம் கட்டமாட்டியா?” என்று சத்யன் தயக்கமாக கேட்க

“ ம்ஹூம் இந்த வேலைக்கெல்லாம் இந்தமாதிரி உடுப்புதான் சரி, சீலை எல்லாம் சரியா வராது, அதோட சீலை கட்டிக்கிட்டு வேலை செய்றவளை எல்லாம் பார்த்தியா, அவளுக வேலை மும்முரத்துல ஒரு பக்கம் தொறந்து கெடக்குறது கூட தெரியாம வேலை செய்வாளுக, நம்ம பயளுக வாயை தொறந்துகிட்டு அதை வேடிக்கை பாப்பானுக தேவையா இது, அதான் நான் இதைத்தவிர வேற எந்த உடுப்பும் போடமாட்டேன், எப்பவாச்சும் கோயிலுக்கு போன சீலை கட்டுவேன், ஆனா கோயிலுக்கு போக எனக்கு பிடிக்காது” என்று நீண்ட விளக்கமாய் மான்சி சொல்லிவிட்டு எழுந்து சூளை அருகே போனாள்

சத்யனுக்கு இந்த செய்தியும் வியப்பாகத்தான் இருந்தது, தெய்வத்தை பிடிக்காத பெண்ணா? இவளுக்குள் இன்னும் என்னவெல்லாம் அதிசயம் இருக்கோ என்று எண்ணியபடி அவள் பின்னால் போனான்

மாலை வேலையின் போது அவள் அம்மாவையும், தங்கையையும் சத்யனுக்கு காட்டினாள், அம்மா ஏதோ நோய்வாய்ப்பட்டவள் போல நோஞ்சானாக இருந்தாள், தங்கை மான்சியை விட குள்ளமாக சற்று அகலமாக இருந்தாள், “ அவ எங்கப்பனை மாதிரி” என்று மான்சி விளக்கம் சொன்னாள்

அன்று வேலை முடிந்தபோது, சத்யன் ஐம்பது கல்தான் அறுத்திருந்தான், மான்சி இருநூறு கல் அறுத்து நாநூறு ரூபாய் கூலி வாங்க, சத்யன் நூறுரூபாய் வாங்கினான் ,

அவனை பார்த்த மான்சி “ இன்னும் காசு வேனுமா, இந்தா நூறுரூவா வச்சுக்க” என்று அவன் கையில் தினிக்க, சத்யன் மறுத்துவிட்டான்

“ பணத்துக்கு கஷ்டம் இல்லை மான்சி, வீட்டுல சும்மா இருக்க பிடிக்காமதான் வேலைக்கு வந்தேன், நீ போ சீக்கிரமா கொழம்பு வச்சு சாப்பிடு” என்று அக்கரையுடன் சொல்லிவிட்டு சத்யன் போக ,, மான்சி அவனையே பார்த்தாள் யாருமே அவள் வயிற்றைப் பற்றி கவலைப்பட்டது இல்லை, ஒரு கணம் மனம் தடுமாறினாலும் உடனே தோளை சிலுப்பிக்கொண்டு குடிசையை நோக்கி நடந்தாள்

சத்யன் வெந்நீரில் குளித்து சாப்பிட்டுவிட்டு வெளியே கிடந்த நாடா கட்டிலில் மகனை மார்பில் போட்டுக்கொண்டு படுத்தான், கைகள் மகனை தடவிக்கொடுத்தாலும் மனம் மான்சியைப் பற்றி எண்ணியது ‘ குழம்பு வச்சு சாப்பிட்டுருப்பாளா? பாவம் காலையிலயே தண்ணி சோறு சாப்பிட்டாளே,, அப்படி என்னதான் என்னைப்பற்றி நெனைச்சுருப்பா?’ என்றெல்லாம் சத்யன் நினைத்துக்கொண்டு படுத்தப்படி தலையைத் திருப்பி மான்சியின் குடிசையை பார்த்தான்

வயலில் இருந்த பம்புசெட்டில் இருந்து வயர் கனெக்சன் எடுத்து ஒரேயொரு பல்பு போடப்பட்டு இருந்தது, அந்த சொர்ப்ப வெளிச்சத்தில் வெளியே வந்து யாரோ கைகழுவுவது தெரிந்தது, சத்யன் உற்றுப்பார்த்தான், அவன் கண்ணும் மனமும் மான்சி தான் என்று அடையாளம் கண்டது

‘ ஓ சாப்பிட்டா போலருக்கு’ என்று எண்ணியபடி இன்னும் உற்று பார்க்க மான்சி கையில் இருந்த தட்டை கீழே வைத்துவிட்டு சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு பாவாடையை சுருட்டியபடி பட்டென்று தரையில் குத்தங்காலிட்டு அமர “ ச்சீ அடிப்பாவி” என்று வாய்விட்டு சொன்னவன் சிறு புன்னகையுடன் திரும்பிக்கொண்டான்

சத்யன் மித்ராவையும் அவள் செய்த துரோகத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக மறக்க முயன்றான், மான்சி ஞாபகங்கள் அதற்கு பெரிதும் உதவியது, அவளின் ஒவ்வொரு வார்த்தையும் அவனுக்கு அதிசயம் என்றால் அவளின் ஒவ்வொரு செயலும் ஆச்சர்யமாக இருந்தது, அதிகமாக அவளை கவனிக்க ஆரம்பித்தான்

அதன் பிறகு வந்த நாட்களில் இருவரும் நிறைய பேசினார்கள், மான்சி அதிகமாக மனுவைப் பற்றி பேசுவாள், இல்லையென்றால் தங்கையின் கல்யாணத்துக்கு இன்னும் எவ்வளவு பணம் சேர்க்கவேண்டும் என்று சத்யனிடம் கணக்கு சொல்வாள், தன் அம்மாவின் செய்யவேண்டிய வைத்தியம் பற்றி சொல்வாள்,, சத்யன் அவள் பேசுவதை எல்லாம் கவனமாக கேட்ப்பான், தனக்கு தெரிந்த யோசனைகளை கூறுவான்
Like Reply
#14
அவளுடைய பேச்சிலிருந்து அவன் கவனித்தது, அவளுடைய அண்ணனின் படிப்புக்காக அவளுடைய அம்மா தன்னுடைய ஒரு கிட்னியை முப்பதாயிரத்திற்கு விற்றுவிட்டார் என்பதுதான், அதைகேட்டதும் சத்யனின் இதயத்தை யாரோ பிசைவது போல இருந்தது, இப்படிப்பட்ட தியாகிப் பெண்களால் தான் சில ஆண்கள் இன்னும் உயிர் வாழ்கிறார்கள், இவர்களின் ரத்தத்தை உறிஞ்சிக்கொண்டு’ என்று நினைத்தான்

தினமும் இரவுநேரங்களில் சத்யன் வீட்டுக்கு வந்து மனுவை கொஞ்சிக்கொண்டு இருந்துவிட்டு, பாட்டிக்கு உதவியாக ஏதாவது வேலை செய்துவிட்டு போவாள்,, உண்மை அன்போடு கொஞ்சும் அவளை மனுவுக்கு ரொம்பவே பிடித்து போனது, மதிய வேலையில் ஒரே தூக்குசட்டியில் இருக்கும் சோற்றை பிசைந்து அவனுக்கும் கொடுக்கும் அளவிற்கு இருவருக்குள்ளும் ஒரு அன்யோன்யம் வளர்ந்திருந்தது

இவர்கள் இருவரும் எப்போதும் ஒன்றாகவே வேலை செய்வதை, அங்கே யாரும் தவறாக சொல்லவில்லை, சிலர் மான்சியை பரிதாபமாக பார்ப்பது போல சத்யனுக்கு தோன்றும், மேஸ்திரி மட்டும் சத்யன் ஒருநாள் தனியாக இருக்கும் போது “ ரொம்ப நல்லபுள்ள தம்பி பாவம் வீட்டு ஆம்பளைக சரியில்லாததால அது வாழ்க்கை சீரழிஞ்சு போச்சு, உங்களோட பழக ஆரம்பிச்சதும்தான் அது மொகத்துல சிரிப்பே தெரியுது, நல்லாருங்க தம்பி ” என்று சொல்லிவிட்டு போனார்

சத்யன் மான்சியின் முகத்தில் எப்போதும் நிரந்தரமாக சிரிப்பு இருக்கவேண்டும் என்று நினைத்தான்,, அதற்கு என்ன செய்வது?

அன்று சூளைக்கு விறகுகள் லாரியில் வந்து இறங்கியது, மேஸ்திரி ஆண்களையெல்லாம் விறகு லோடு இறக்கச் சொல்ல, சத்யனும் போனான், மான்சிக்கு அவனை அனுப்பவே மனமில்லை என்பது அவள் முகத்தில் இருந்த எரிச்சலில் தெரிய, “ பரவாயில்லை மான்சி விறகுதானே எறக்கனும்,, போய் எறக்குறேன்” என்று கூறிவிட்டு சத்யன் போக

“ கொஞ்சம் இருய்யா” என்ற மான்சி அவனை நெருங்கி அவன் தலையில் இருந்த துண்டை எடுத்து சும்மாடாக சுருட்டி சுற்றினாள், அதை சத்யன் தலையில் வைத்துவிட்டு, தனது தலையில் இருந்த துண்டை உருவி, சத்யன் தலையில் இருந்த சும்மாட்டோடு சேர்த்து தலைப்பாகையாக கட்டி விட்டாள்,

அவள் கையை உயர்த்தி தலைப்பாகையை கட்ட,, அவளின் அழுந்திய மார்பும்எழும்பி உயர்ந்தது,, சத்யனின் பார்வை தடுமாறி தாறுமாறாக போய் மேய, சத்யன் பயந்து போய் கண்களை மூடிக்கொண்டான்,, மான்சி தலைப்பாகையை கட்டி முடித்துவிட்டு “ ம்ம் கட்டியாச்சு கண்ணை தொற” என்று சிறு சிரிப்புடன் சொல்ல,, சத்யன் கண்னை திறந்து அவளை சங்கடமாக பார்த்தான்,,

“சரி சரி போய் விறகு தூக்கு இப்போ எவ்வளவு சொமந்தாலும் தலை வலிக்காது ,, ஆனா அதான் சாக்குன்னு நெறைய சொமக்காத பழக்கமில்லாத வேலை” என்று கூறி அரைமனதாக அனுப்பினாள்,,

சத்யனுக்கு அப்போது இருந்த மனநிலையில் ஒரு லாரி விறகையும் அவனே இறக்கியிருப்பான், அவ்வளவு உற்ச்சாகத்தில் இருந்தான்,

கிட்டத்தட்ட ஒரு இருபது நாட்களாக மொத்தம் ஒரு லட்சம் கல் அறுக்கப்பட்டு , அடுக்கப்பட்டது, அடுக்கிய சூளையின் மீது களிமண்ணை குழைத்து முலாம் பூசினார்கள், சூளை சுடுவதற்கு தயாராக இருக்க அன்று நாள் நல்லாயில்லை, நாளைக்கு சூளை வைக்கலாம் என்று மேஸ்திரி சொல்லிவிட, எல்லோரும் அரைநாள் வேலையோடு வீட்டுக்கு கிளம்பினார்கள்,

அங்கேயே தங்கிய சிலரும் பக்கத்து டவுனுக்கு சினிமாவுக்கு கிளம்பி விட, சூளையின் அருகே யாருமே இல்லாமல் வெறிச்சோடியது

சத்யன் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு மான்சியைத் தேடி போனான், குடிசையில் படுத்திருந்த அவள் அம்மா மான்சி குளிக்க கிணற்றுக்கு போயிருப்பதாக சொல்லிவிட்டு படுத்துக்கொண்டாள்

தனது வீட்டுக்கு திரும்பிய சத்யன், ம்ஹூம் மான்சியை பார்த்தே ஆகவேண்டும் என்ற ஆர்வத்தில் கிணற்றை நோக்கி நடந்தான், தரையோடு தரையாக இருந்த கிணற்றை நெருங்கி உள்ளே எட்டிப்பார்த்தான், மான்சி சட்டையில்லாமல் பாவடையை எடுத்து மார்பில் முடிந்ததுகொண்டு தண்ணீருக்குள் சுறாவைப்போல் பாய்ந்து நீந்தினாள், வளைந்து நெளிந்து அவள் நீந்தும் அழகை ரசித்தபடி அப்படியே நின்றிருந்தான் 


அவள் வளைந்து திரும்பும் போது மார்பில் முடிந்திருந்த பாவாடை முழங்காலுக்கு மேலே உயர்ந்து, அவளின் அழகு தொடைகளை வெளிச்சமிட்டது, சத்யன் கண்கொட்டாமல் அத்தனை அழகையும் ரசித்தான், நீந்தி முடித்த மான்சி கரையோரம் இருந்த படியில் அமர்ந்து சோப்பை எடுத்து கால்களில் கைகளில் தேய்க்க ஆரம்பித்தாள், சத்யனின் இதயத்துடிப்பு அதிகமாக கண்களை விரித்துப் பார்த்தான்,, மான்சி மார்பில் இருந்த பாவாடை முடிச்சை அவிழ்த்து வயிற்றில் கட்டிக்கொண்டு, தனது மார்புகளுக்கு சோப்பு போட்டாள்

சத்யன் விக்கித்துப் போனான், அங்கிருந்து நகர்ந்துவிடு என்று மனசு எச்சரிக்க, அவனுக்குள் காய்ந்து கிடந்த காமன் ம்ஹூம் தப்பில்லை பார் சத்யா என்று உத்தரவிட்டான்,, சத்யனுக்குள் ஒரு ஆணுக்கு உண்டான உணர்ச்சிகள் தலைத்தூக்க வசதியாய் நின்றுகொண்டு பார்த்தான்

இப்படியொரு அழகையா அந்த முழுக்கைச் சட்டைக்குள் அழுத்தி கட்டி வைத்திருந்தாள் என்று திகைப்புடன் பார்த்தான், மான்சியின் மார்புகளை எதனுடன் ஒப்பிடுவது என்று அவனுக்கு புரியவில்லை, கோயிலில் இருக்கும் கற்சிலைகளுக்கு இருப்பதுபோல் சிறிதுகூட சரியாமல் திடமாக கூர்மையாக இருந்தது, நிச்சயம் ஒரு கைக்குள் ஒன்றை அடக்க முடியாது, அதன் பிரவுன் நிற வட்டமும் வயலட் நிறத்தில் சிறு காம்பும் கூட அவனுக்கு தெளிவாக தெரிய சத்யன் எச்சில் விழுங்கினான், இவ்வளவு எழிலான மார்புகளை அவன் எதிர்பார்க்கவில்லை என்பதால் அதனிடமிருந்து பார்வையை நகர்த்த முடியாமல் அங்கேயே நிலைக்கவிட்டான்

சோப்புப் போட்டுக்கொண்டு இருந்தவள் ஏதோவொரு உந்துதலால் திடுக்கென்று தலையை நிமிர்த்தி மேலே பார்க்க,, சத்யனைப் பார்த்துவிட்டாள், உடனே பதறித் துடித்து வயிற்றில் இருந்த பாவாடையை எடுத்து மார்பில் முடிந்துக்கொண்டாள்,

சத்யன் சங்கடத்துடன் நெற்றியில் அடித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்,, ஆனால் பயந்து ஓடவில்லை, பக்கத்தில் இருந்த மரத்தின் அடியில் முழங்காலை கட்டிக்கொண்டு அமர்ந்தான், அவன் மனசு திக்திக் என்று அடித்துக்கொண்டது, ஆனாலும் ஒரு ஓரத்தில் ஒரு தைரியம் ,, தனக்கு சொந்தமான பொருளை பார்த்ததுபோல் ஒரு தைரியம், மனதை திடப்படுத்திக் கொண்டு உட்கார்ந்திருந்தான்

சற்றுநேரம் கழித்து மான்சி அதே ஈரப் பாவாடையை மார்பில் முடிந்து, துவைத்த துணிகளை தோளில்ப் போட்டுக்கொண்டு மேலே வந்தாள், சத்யன் மரத்தடியில் உட்கார்ந்திருப்பதை கவனித்து அங்கே வந்தாள்

சத்யன் அவளைப் பார்த்ததும் எழுந்து நின்றான், அவனுக்கென்னவோ மான்சியின் முகம் அதிகமாக சிவந்து போயிருப்பதுபோல் இருந்தது, வெட்கத்தாலா? கோபத்தாலா? என்றுதான் புரியவில்லை

மறுபடியும் மார்பில் இருந்த பாவாடை முடிச்சுக்கு போன பார்வையை கட்டுப்படுத்திக்கொண்டு “ உன்னைப் பார்க்க குடிசைக்குப் போனேன், நீ இங்க குளிக்க வந்ததா உன் அம்மா சொன்னாங்க, அதான் பார்க்கலாம்னு வந்தேன்” என்று நடுக்கத்தை மறைத்து இயல்பாக சத்யன் பேசினான்
Like Reply
#15
“ ம்ம், இரு துணியை காயப்போட்டுட்டு வர்றேன்” என்றவள் தோளில் கிடந்த ஈரத் துணிகளை வரப்பில் காயவைத்துவிட்டு கிணற்றின் ஓரமாக வைத்திருந்த மாற்று உடையை எடுத்துக்கொண்டு சுற்றிலும் பார்த்துவிட்டு சத்யனைப் பார்த்து ஒரு முறை முறைக்க, சத்யன் பட்டென்று மரத்தின் பக்கமாக திரும்பிக் கொண்டான்,

மான்சி உடை மாற்றிக்கொண்டு கட்டியிருந்த பாவாடையையும் காய வைத்துவிட்டு சத்யன் அருகில் வந்தாள், “ வா போகலாம்” என்று கூறிவிட்டு முன்னால் நடக்க சத்யன் பின்னால் நடந்தான்,

அவள் இருக்கும் குடிசையருகே போனவள் குனிந்து உள்ளே போய், தட்டில் சோற்றைப் போட்டுக்கொண்டு வெளியே வந்தாள், பக்கத்தில் இருந்த மேட்டில் அமர , சத்யன் வந்து அவளுக்கு பக்கத்தில் அமர்ந்துகொண்டான், மான்சி சோற்றை குழம்போடு சேர்த்து பிசைந்து ஒரு கவளம் உருட்டி வாயில் போட்டுக்கொண்டு " குளிச்சதும் பயங்கர பசி" என்றபடி அடுத்த கவளத்தை எடுத்து வாயருகே கொண்டு போனவள் வாயில் போடாமல் அதை அப்படியே சத்யனிடம் நீட்டினாள்,

" ம்ஹூம் நான் இப்பத்தான் சாப்பிட்டேன்,, நீ சாப்பிடு" என்று சத்யன் மறுக்க,, மான்சி அதை தன் வாயில் போட்டுக்கொண்டாள்,, அவள் வேகவேகமாக சாப்பிடுவதையே பார்த்த சத்யன் தட்டில் முக்கால்வாசி காலியானதும், சோற்றுக்காக கையை நீட்டினான், மான்சி அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு, சோற்றை உருட்டி அவன் கையில் வைக்க சத்யன் அவள் முகத்தை பார்த்துக்கொண்டே சாப்பிட்டான்

மான்சி எவ்வளவு பெரிய பேரழகி என்று சத்யன் கண்டுகொண்டான், அவள் கண்கள் அவளைவிட்டு நகரவில்லை, அவள் உருட்டித் தரும் சோற்றை வாங்கி சாப்பிட்டுக்கொண்டே அவளையும் சேர்த்து விழுங்கினான்

சாப்பிட்டு முடித்து கைகழுவிவிட்டு வந்தவர்கள் மறுபடியும் அதே இடத்தில் வந்து அமர்ந்தார்கள், " என்னை எதுக்கு பார்க்க வந்த" என்று மான்சி கேட்டாள்..

" இல்ல எல்லாரும் சினிமாவுக்கு போறாங்களோ நாமலும் போகலாமான்னு கேட்க வந்தேன்" என்றான் சத்யன்

" எனக்கு சினிமா பார்த்து பழக்கமில்லை, பிடிக்கவும் பிடிக்காது" என்று பட்டென்று பதில் சொன்னாள்

அதன்பின் அங்கே ஒரு பலத்த மௌனம் நிலவ, சட்டென்று அங்கிருந்து எழுந்த மான்சி " வீட்டுல மனு தனியா இருப்பான்ல, வா வீட்டுக்கு போகலாம்" என்று சத்யன் வீடு நோக்கி நடந்தாள் , சத்யனும் அவள் பின்னால் போனான்


மான்சி வேகமாக சத்யனின் வீட்டுக்குள் போய் மனுவைத் தூக்கி அணைத்துக்கொண்டு தோட்டத்துப் பக்கமாக போக, சத்யன் அவள் பின்னோடு போனான், பாட்டி இருவரையும் வித்தியாசமாக பார்த்தார்,

தோட்டத்துக்குப் போன மான்சி அங்கிருந்த ஒரு மேட்டில் அமர்ந்தாள், சத்யன் அவளுக்கு அருகே அமர்ந்தான், எப்போதுமே சிறு இடைவெளிவிட்டு அமரும் சத்யன் அன்று மான்சியை உரசிக்கொண்டு அமர்ந்தான், அவன் மனதில் கள்ளம் இல்லை, போதும் இந்த கண்ணாமூச்சி விளையாட்டு என்று எண்ணினான்
இன்று அவளுடன் எல்லாவற்றையும் சொல்லிவிடவேண்டும், என்று எல்லாவற்றையும் பேசிவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தான், அவளுக்கு தன்மீது கோபமில்லை என்றதும் சத்யனின் துணிச்சல் அதிகமானது,

இவன் உரசிக்கொண்டு அமர்ந்ததும் மான்சி சட்டென்று நகர்ந்து அமர, சத்யன் விடவில்லை அவனும் நகர்ந்தான், மான்சி அவனைத் திரும்பிப்பார்த்து முறைக்க, சத்யன் சளைக்காமல் சிறு புன்னகையுடன் அந்த முறைப்பை தாங்கினான், அவனுடைய துணிச்சல் அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது,
மான்சியின் கையில் இருந்த மனுவை வாங்கி நெற்றியில் முத்தமிட்டுவிட்டு “ மனுச் செல்லம் நீங்க பாட்டிக்கிட்ட போய் இருங்க நானும் மான்சியம்மாவும் இப்போ வர்றோம்” என்று சொல்லி குழந்தையை கீழே விட..

“ சரிப்பா “ என்று மழலையில் சொல்லிவிட்டு மான்சியைப் பார்த்தான் மனு
மான்சியும் அவனை தூக்கி கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டதும் குழந்தை சந்தோஷமாக பாட்டியைப் பார்க்க ஓடியது,

குழந்தை போனதும் அங்கே துரும்பு விழுந்தாலும் அலறும் அளவுக்கு பலத்த அமைதி நிலவியது, சத்யன் மான்சியின் இரண்டு கையையும் எட்டிப் பற்றினான், மான்சி விடுவித்துக் கொள்ள முயன்றாலும் சத்யன் விடவில்லை , “ மான்சி இனிமேல் மறைக்க எதுவுமில்லை, நான் உன்னை விரும்புறேன், இனி ஒருநாள் கூட நீ இல்லாமல் என்னால் வாழமுடியாது, அதனால உனக்குத் தெரியாத என்னைப்பற்றிய விஷயங்களை சொல்றதுன்னு முடிவுப் பண்ணிட்டேன்” என்றான்

மான்சி எதுவுமே சொல்லவில்லை, அமைதியாக எதிரில் இருந்த கொய்யா மரத்து குருவிகளை வெறித்துக்கொண்டு இருந்தாள், சத்யனிடம் இருந்த கைகளை எடுத்துக்கொள்ளவும் இல்லை, அவள் முகம் இருக்கமாகவும், கண்கள் கலங்கியும் இருந்தது,

சத்யன் அவள் கைகளை விரித்துப்பார்த்தான், உழைத்து உரமேறி காய்த்துப்போன கைகள், நகங்கள் உடைந்து சிதைந்து போயிருந்தது, சத்யன் தன் விரலால் அவள் கைகளை வருடினான், பிறகு குனிந்து அந்த கைகளில் முத்தமிட்டுவிட்டு நிமிர்ந்து மான்சியின் முகத்தைப் பார்த்தான்


அவள் விழிமூடியிருக்க விழியோரத்தில் கண்ணீர் கோடாய் வழிந்தது, சத்யன் அவள் கண்ணீரை துடைத்தான், “ மான்சி நீ அழக்கூடாது, என் மான்சி எப்பவுமே பத்ரகாளி மாதிரி வீரமா நி்க்கனும், கோழைபோல் கண்ணீர் விடக்கூடாது, இதெல்லாம் ஒரு பொண்ணோட வாழ்க்கையில் இயல்பா நடக்கவேண்டியது தான், என்ன உனக்கு கொஞ்சம் லேட் ஆயிருச்சு அவ்வளவுதான், சரி நானும் உன்கிட்ட வந்து சேரனும்னு விதியிருக்கு அதை மாற்ற முடியுமா மான்சி” என்று கூறிவிட்டு அவளை இன்னும் நெருங்கி அமர்ந்து அவள் தோளில் தன் தலையை சாய்த்தான்

இத்தனை நாளாய் மான்சி பேச சத்யன் கேட்ப்பான், இன்று சத்யன் பேச மான்சி அமைதி காத்தாள், சத்யனுக்கு தன் மனதில் இருப்பவையெல்லாம் கொட்டவேண்டும், மான்சியுடன் சீக்கிரமே சேர்ந்து வாழவேண்டும், அவளுடன் இணைந்து ஒரு இனிமையான தாம்பத்தியத்தை அனுபவிக்க வேண்டும், இவை எல்லாமே வெகுசீக்கிரத்தில் நடக்கவேண்டும், அதைத்தவிர வேறு எதைப்பற்றியும் சத்யன் சிந்திக்கவில்லை
Like Reply
#16
அவள் தோளில் இருந்த தலையை நகர்த்தாமல், ஒருகையால் அவள் கைகளை பற்றி மறுகையால் அவளின் தோளைச் சுற்றிவளைத்து “ மான்சி நான் என்னைப்பற்றிய உண்மையெல்லாம் சொல்லிர்றேன், அதுக்கப்புறம் என்னை வேண்டாம்னு மட்டும் சொல்லிராதே,, மனுவோட அம்மா செத்துப்போகலை, இன்னும் உயிரோடதான் இருக்கா, ஆனா புழுவைத்த அழுகிய பிணமாக இருக்கா” என்று சத்யன் சொன்னதும், மான்சியின் உடலில் சட்டென்று ஒரு விரைப்பு ஏற்ப்பட அவனைவிட்டு ஒதுங்க முயன்றாள்

ஆனால் சத்யன் விடவில்லை, அவளைச் சுற்றிய கையை மேலும் இறுக்கி தன்னோடு அவளைச் சேர்த்துக்கொண்டான், “ மான்சி நான் சொல்றதையெல்லாம் கேட்டுட்டு, அதுக்கப்புறமா நீ என்ன எதுவேன பண்ணு, மான்சி நீ வறுமையால கஷ்டப்பட்ட, நான் அதிகமான பணத்தால் கஷ்டப்பட்டேன், ஆமா மான்சி பண்ம், அந்த பணம் என் வாழ்க்கையில் அரங்கேற்றிய கேவலத்தை எல்லாம் சொன்னா நீ என்னை ஒரு மனுஷனாக் கூட மதிக்கமாட்ட” என்று ஆரம்பித்து கல்யாணம் என்ற பெயரில் தன் வாழ்க்கையில் நடந்த கேவலத்தை சொன்னான், மனைவி என்ற பெயரில் தனக்கு வாய்த்த காமப்பேயைப் பற்றிச் சொன்னான், அங்கு தான் பட்ட அவமானங்களை கலங்கிய கண்களுடன் கூறினான், இறுதியாக அந்த பணக்கார வீட்டில் தன் கண்ணெதிரே நடந்த விபச்சாரத்தைப் பற்றிச்சொன்னான், தன் மனைவி வேசியான கதையை வரிவிடாமல் சொன்னான், நயாபைசா கூட இல்லாமல் அந்த வீட்டைவிட்டு வெளியே வந்ததும் திலகம் உதவியதையும் சொல்லி அவன் முடிக்கும்போது, அவன் மான்சியின் கைகளைப் பற்றியிருந்தது போய் மான்சி அவன் கைகளைப் பற்றியிருந்தாள்

பற்றியிருந்த கையை விடாமல் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு “ அய்யோ இதுக்குமேல எதையும் சொல்லாதேயேன் என்னால காதுகொடுத்துக் கேட்கமுடியல, வேனாம்பா எல்லாத்தையும் மறந்துட்டு, ஒரு நல்லப் பொண்ணாப் பாத்து கல்யாணம் பண்ணிகிட்டு நிம்மதியா இரு” என்று மான்சி மெல்லிய கதறலோடு சொல்ல


சத்யன் வெடுக்கென்று தன் கையை உருவிக்கொண்டு “ ஏய் வேற ஒருத்திய கல்யாணம் பண்ணிக்க நான் ஏன் உன்கிட்ட வந்து என் கதையை சொல்லனும், இதோபார் மான்சி, எனக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருந்தாலும் நான் ஒருநாள் கூட என் பொண்டாட்டியா இருந்தவளை நேசிக்கலை, நேசிக்கும்படி அவளும் நடந்துக்கலை, ஆனா உன் பார்த்த நாளில் இருந்து உன்னை விரும்புறேன், உயிரா விரும்புறேன் மான்சி, அதைச் சொல்ல இத்தனை நாளா எனக்கு பயமாவும் தயக்கமாவும் இருந்துச்சு, இப்போ உன்னை கிணத்துல குளிக்கும்போது பார்த்தப்ப ஏதோ எனக்கு சொந்தமானவளை பார்க்குறமாதிரி ஒரு பீலிங், அய்யோ என் மனசுல குற்றவுணர்வே வரலை, அந்த நிமிஷமே முடிவு பண்ணிட்டேன் எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிட்டு சீக்கிரமே உன்கூட சேர்ந்து வாழனும்னு, நான் பணத்துக்கு ஆசைப்பட்டு அவ கழுத்துல தாலிக்கட்டலை, நம்ம மகன் நல்லாருக்கனும்னு ஆசைப்பட்ட ஒரு தாயோட ஆசையை நிறைவேத்த தான் அவளை கல்யாணம் பண்ணேன், ஆனா அவளை கல்யாணம் பண்ணதாலேயே என் அம்மாவோட உயிர் போச்சு மான்சி, இப்ப சொல்லு மான்சி என்னை பத்தி கேவலமான நெனைப்பு எதுவும் இப்போ வரலையே, எனக்குத் தெரியும் மான்சி நீயும் என்னை விரும்புறேன்னு ” என்று சத்யன் கேட்க

அவ்வளவு நேரமாக தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு இருந்தவள், திடீரென ஓவென்று சத்தம் போட்டு அழுதாள், அவன் கையை எடுத்து தன் தலையில் அடித்துக்கொண்டு அழுதாள் “ நா ஒனக்கு வேனாம் சத்தி, நீ நல்லாருக்கனும் , என் வாழ்க்கை முடிஞ்சுபோச்சு, இனிமே கல்யாணம் பண்ணி புருஷன் புள்ளைகளோட வாழனும்னு எனக்கு ஆசையில்லை சத்தி, என்னை விட்டுடு” என்று கூறிவிட்டு மான்சி எழுந்து அங்கிருந்து ஓட யத்தனிக்க...

சத்யன் அவளை எட்டிப் பிடித்து “ எங்க என் மூஞ்சியப் பாத்து சொல்லு? , உனக்கு என்கூட வாழ ஆசையில்லேன்னு?, மனுவுக்கு அம்மாவா இருக்கனும்னு உனக்கு தோணலை?” என்று சத்யன் கேட்க

“ இல்ல சத்தி ஓனக்கு தகுதியான ஆள் நான் கெடையாது, என்னைவிடு நான் போறேன்” என்று சொல்லி சத்யனை உதறிவிட்டு திரும்பினாள்

அவள் அக்குளில் கைவிட்டு அழுத்தமாய் பற்றி தன்பக்கம் திருப்பிய சத்யன் “ ஏன் தகுதியில்லை, நீ ஏற்கனவே கல்யாணம் ஆன விதைவையா?” என்று கேட்டான்

“ இல்ல இல்ல எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை” என்று கண்ணீருடன் பலமாக தலையசைத்தாள் மான்சி

“ அப்போ யாராவது உன்னை ஏமாத்தி கற்பழிச்சுட்டாங்களா? ” சத்யன் விடாமல் கேட்டான்

பட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்த மான்சி விழிகளில் அனல் பறக்க “ என்மேல எவனும் கைவைக்க முடியாது” என்றாள் ஆவேசமாக ..
சத்யன் பட்டென்று அவளைத் திருப்பி தன் நெஞ்சில் மோதி “ ஏன் தொடமுடியாது, இதோ நான் தொட்டுட்டேனே” என்று கேலியாக சொன்னவன், அவள் முகத்தில் இருந்த ரௌத்திரத்தை பார்த்து “ இதோபார் மான்சி இது ரெண்டுமே உன் வாழ்க்கையில் நடந்திருந்தாலும் நீதான் எனக்கு வேனும், உன்னைத்தவிர வேற யாருக்கும் என் மனசுல இடமில்லை, என் வாழ்க்கையில் வந்த முதல் காதல் இதுதான், இந்த காதல் தோற்க நான் விடமாட்டேன், இப்போ நீ வீட்டுக்குப் போ நாளைக்கு சூளைக்கு நெருப்பு வச்சதும் உன்னோட பதிலைச் சொல்லு” என்று கூறிவிட்டு அவளை விடுவிக்க மான்சி ஒரே ஓட்டமாக ஓடி மறைந்தாள்

சத்யன் சிறிதுநேரம் அங்கேயே இருந்துவிட்டு வீட்டுக்குள் வந்தான், போனதும் மகனை தூக்கிக்கொண்டு அரிசியில் கல் பொறுக்கிக்கொண்டு இருந்த பாட்டியின் அருகே அமர்ந்தான்,

“ என்ன சத்தி அந்தப் புள்ள அழுதுக்கிட்டே ஓடுது, அவகிட்ட என்னா கேட்ட” என்று பாட்டி இயல்பாய் கேட்க

ஒரு நிமிடம் மூச்சை இழுத்துப்பிடித்து விட்ட சத்யன் “ அவளை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன் பாட்டி அதை அவகிட்ட சொன்னேன், அதுக்கு அழுதுகிட்டு ஓடுற, எல்லா நாளைக்கு சமாதானமாயிருவா” என்று பாட்டிக்கு சொல்வதுபோல் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டான் சத்யன்

முறத்தில் இருந்த அரிசியை புடைத்த வாறே “ ம்ஹும் நல்லப்புள்ள தான் ஆனா அவளோட சம்மதம் இல்லாம எதனாச்சும் பண்ணிப்புடாதலே அப்புறம் வில்லங்கமா போயிடும்” என்று பாட்டி சொல்ல

பாட்டி எதைச்சொல்றாங்க என்று சத்யனுக்குப் புரியவில்லை, “ என்னப் பாட்டி என்னை இவ்வளவு கேவலமா நெனைச்சுட்ட, அப்படி நான் எதுவும் பண்ணமாட்டேன்” என்று சத்யன் விசனத்துடன் சொல்ல..

“ நான் உன்னைய சொல்லலலே, அந்த மூதியோட கொணத்தை சொன்னேன், அவகிட்ட பேசிப்பாரு ஒனக்கே புரியும்” என்று சொல்லிவிட்டு பாட்டி வேலையில் ஆழ்ந்தார்


இன்னமும் மான்சி தனக்கு ஒரு புரியாத புதிராகவே இருப்பதுபோல் சத்யனுக்கு தோன்றியது, என்னை திருமணம் செய்ய அவளுக்கு என்னதான் தடையோ தெரியலையே, என்று மனம் நொந்து அன்றைய பொழுதை போக்கினான்

மறுநாள் எழுந்து காலையில் பல்லை விளக்கிவிட்டு நேராக மான்சி குடிசைக்குத்தான் போனான், மான்சியின் அம்மா மட்டுமே இருந்தாள், இவனைப் பார்த்ததுமே “ தம்பி மான்சியும் புவனேஸ்வரியும் டவுனுக்கு போயிருக்காளுக, சாயங்காலமா தான் வருவேன்னு சொன்னாளுக ” என்று சத்யனுக்கு பிடிக்காத தகவலை சொல்ல சத்யன் அரைமனதாக தன் வீட்டுக்கு வந்தான்

அன்று மாலைவரை சத்யனால் தாக்குப்பிடிக்க முடியவில்லை, தனது புதுக் காதலியைப் பார்க்க ஏங்கும் டீனேஜ் பையன் நிலையில் இருந்தான், வீட்டுக்கும் வாசலுக்கும் நூறுமுறை நடந்தான், பாட்டிக்கு புரிய மனதோடு சிரித்துக்கொண்டார்,, சத்யன் முதன்முறையாக கண்ணாடியில் தன் அழகை பார்த்து மான்சிக்கு இந்த முகம் பொறுத்தமா என்று எடைப் போட்டான், அவள் துலக்கி வைத்த செப்புப் சிலையைப் போல ஒரு கலையான அழகு, என்று அவன் மனம் அவளுக்காக பரிந்து வந்தது

வயலுக்கு வரும் மண் ரோட்டில் மகனுடன் வெகுநேரம் காத்திருந்தான், மான்சியும் அவள் தங்கையும் வரவில்லை, மனு அழ ஆரம்பிக்க சத்யன் சலிப்போடு எழுந்து வீட்டுக்குப் போனான்
Like Reply
#17
என் மனைவியாக மான்சி - அத்தியாயம் - 3

அன்று மாலை சூளைக்கு பூஜைகள் செய்து நெருப்பு மூட்டினார்கள், முதலில் மெதுவாக ஆரம்பித்து பிறகு நெருப்பு தனது ஆக்ரோஷத்தை காட்டி ஜுவாலையை கக்கியது, சத்யன் கனத்த இதயத்தோடு தூரத்தில் எரியும் சூளையைப் பார்த்தான்,, இருள் கவிழ ஆரம்பிக்க சூளை நெருப்பு தனது வெளிச்சத்தால் அந்த இடத்தை ஆக்கிரமித்தது,

எல்லோரும் போய்விட்டார்கள், சத்யன் மார்புக்கு குறுக்கே கைக்கட்டிக் கொண்டு எரியும் தீயை வேடிக்கைப் பார்த்தான், அப்போது நெருப்பின் வெளிச்சத்தில் ஒரு உருவம் வந்து வரப்பில் உட்கார்ந்து சூளையை வேடிக்கைப் பார்த்தது, பார்த்தவுடனே புரிந்தது அது மான்சி தான் என்று, சத்யன் உடனே வயலை நோக்கி ஓடினான்

நேராக மான்சி அமர்ந்திருந்த வரப்பில் அவள் பக்கத்தில் அமர்ந்தான், மான்சி அவனை திரும்பி பார்த்தாள், பிறகு திரும்பி எரியும் நெருப்பை பார்த்தாள்.

“ எங்கப்போயிருந்த, காலையிலிருந்து தவிச்சுப் போய்ட்டேன், இன்னும் சாப்பிடக்கூட இல்லை, ஒருவார்த்தை சொல்லிட்டு போயிருக்கலாம்” என்று சத்யன் குறை கூறும் குரலில் கூறினான்


அவனைப் பார்க்காமலேயே “ பெரியவ குழந்தை பெத்துருக்காளே அவளைப் பாக்க போயிருந்தேன்’” என்றாள் ஒரு மாதிரி வெற்றுக்குரலில்
அவள் குரல் சத்யன் மனதை துணுக்குறச் செய்தது, அதைக்காட்டிக் கொள்ளாமல்

“ ஓ குழந்தை நல்லாருக்கா, என்கிட்ட சொல்லிட்டுப் போயிருக்கலாம்” என்றான் மறுபடியும்

“ குழந்தை நல்லாருக்கு” என்றவள் நெருப்பையே உற்றுப்பார்த்துக் கொண்டு இருந்தாள்

அவள் ஒரு வார்த்தையில் பேசுவது சத்யனுக்கு எரிச்சலாக வந்தது, ஆனாலும் எதற்காகவும் பின்வாங்க அவன் தயாராக இல்லை “ எப்ப மான்சி கல்யாணத்தை வச்சுக்கலாம், எங்க பண்ணிக்கலாம், நம்ம வீட்டுலயே பண்ணிக்குவோமா? இல்ல ஏதாவது கோயில்ல வச்சு கல்யாணம் பண்ணிக்கலாமா? உன்னோட இஷ்டம்தான்” என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தான்

அப்பவும் மான்சி அவனைப் பார்க்கவில்லை, “ எனக்கு இந்த சூளைகளுக்கு நெருப்பு வச்சா அதை இப்புடி ராவெல்லாம் ஒக்காந்து பார்க்கப் புடிக்கும் சத்தி , ஏன்னா என்னோட நெஞ்சுல எரியுற நெருப்பு மாதிரி அதுவும் ஒரு பக்கம் அவிஞ்சு போனாக்கூட மறுபக்கம் பத்திக்கிட்டு எரியும் சத்தி, நெருப்பு இல்லையேன்னு நெனைச்சு யாரும் கைவைக்க முடியாது, உள்ளுக்குள்ள கனகனன்னு கங்கு இருந்துக்கிட்டே இருக்கும், அதுபோலத்தான் என் நெஞ்சும் அதுக்குள்ள எரியுற நெருப்பு எப்பவுமே அணையாது சத்தி, நான் ஒனக்கு பயன்படமாட்டேன், நீ இனிமேல் கல்யாணத்தைப் பத்தி பேசாதே, இந்த சூளையோட நான் ஊருக்குப் போறேன், கோயில்பட்டி ரோட்டுல போன் வயரு பதிக்க பள்ளம் எடுக்குற காண்ட்ராக்ட் எங்க ஓனர் எடுத்துருக்காங்க, கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கு வேலை இருக்கும், அதனால நாங்க அங்க போகறோம், நீ உன் வாழ்க்கையை நல்லபடியா அமைச்சுக்க சத்தி” என்று மான்சி கூறினாள்,

அவள் குரலில் இருந்த அளவுகடந்த வெறுமை சத்யனை கலங்க வைத்தது, அடுத்து என்ன பேசவேண்டும் என்றுகூட சத்யனுக்கு புரியவில்லை, வயிறும் நெஞ்சும் தவித்து துடித்தது, அவள் தன்னைவிட்டு போகிறாள் என்றதுமே அவனுக்கு உலகின் நிகழ்வுகள் அத்தனையும் வெறுத்தது,

ஏதாவது பேசியே ஆகவேண்டும் என்ற நினைப்பு வர “ மான்சி என்னைவிட்டு போறியா? நீ இல்லாம என்னால இருக்கமுடியாது மான்சி, இவ்வளவு நாளா ஒரு தாய் மாதிரி என்னைப் பார்த்துக்கிட்ட, இப்போ பாதில உதறிட்டு போனா எப்படி மான்சி, எனக்கு நீ இல்லாம வாழ முடியாது மான்சி” என்று நெஞ்சில் நினைத்ததை வாயால் உளறி கண்ணில் வழிய முயன்ற கண்ணீரை உள்ளே இழுத்தபடி சத்யன் பேச

ஒரு கணம் திரும்பி அவனுடைய கலங்கிய கண்களை பார்த்தாள் பிறகு மறுபடியும் நெருப்பைப் பார்த்தபடி “ என்னைப் பத்தி ஒனக்கு என்னா தெரியும் சத்தி, நான் நாலு வருஷத்துக்கு முன்னாடி எங்கே இருந்தேன்னு தெரியுமா? நான் எல்லாத்தையும் என் வாயால சொல்லனும்னு ஆசைப்படுறியாவே, அப்ப நா சொல்றதைக் கேட்டுக்க, நா ஒரு கொலை செய்துட்டு ஆறு வருஷம் ஜெயில்ல இருந்துட்டு வந்துருக்கேன், என்னோட பதினேழாவது வயசுல கொலப் பண்ணிட்டு ஒரு வருஷம் சிறுமிகள் காப்பகத்துலயும், மீதி அஞ்சு வருஷம் மதுரை ஜெயில்லயும் இருந்தேன் சத்தி, இப்ப சொல்லு இந்த கொலைகாரி ஒனக்கு பொஞ்சாதியா ஒம்ம மகனுக்கு அம்மாவா வரனுமா?” என்று ஒரு பயங்கரத்தை சாவதானமாக சொல்லிவிட்டு மான்சி வரப்பில் இருந்து குதித்து இறங்கி நெருப்பின் அருகே போய் கைக்கட்டி நின்று வேடிக்கைப் பார்த்தாள்

சத்யன் இதை ஒரு சதவிகிதம் கூட எதிர்பார்க்கவில்லை, என் மான்சியா கொலைகாரி, என்று மனம் குமுறினாலும், காரணமின்றி அவள் அதைச்செய்திருக்க மாட்டாள் என்று தன்னை சமாதானம் செய்துகொண்டு அவனும் வரப்பிலிருந்து இறங்கி மான்சி அருகே போனான்

“ மான்சி எனக்கு இன்னும் ஒரேயொரு விஷயத்தை மட்டும் சொல்லு எதுக்காக யாரை கொலைப் பண்ண?” என்று சத்யன் நெஞ்சில் பதட்டமும் குரலில் நிதானமுமாக கேட்டான்

சிறிதுநேரம் அவளிடம் எந்த பதிலும் இல்லை, அந்த நெருப்பின் வெளிச்சத்தில் அவள் முகமும் நெருப்பைப் போல ஜொலித்தது, உண்மையாகவே காளியைப் போல் ரௌத்திரமாக இருந்தது அவள் முகம், சட்டென்று திரும்பி அவனை நேராகப் பார்த்து “ ஒம்மக் கிட்ட ஒருநாள்,, எங்கண்ணன் என் கையில கெடச்சா அவனுக்கு என் கையாலதான் சாவுன்னு சொன்னேனே அது பொய், அவன் எங்க தேடுனாலும் கெடைக்க மாட்டான், ஏன்னா நான் கொன்னது எங்கண்ணனைத் தான், அவன் தலையைத்தான் அருவாமனையால ஒரே சீவா சீவிட்டேன் சத்தி , கழுத்து அறுபட்டு செத்துட்டான், ஆனா அவனை துண்டுதுண்டா அரியாம ஒரே வெட்ட வெட்டிட்டோமேன்னு நா வெசனப்படாத நாளே இல்ல சத்தி,” என்று மான்சி ஆக்ரோஷமாக சொல்லி முடித்தபோது சத்யனுக்கு தலைசுற்றுவது போல் இருக்க அப்படியே தரையில் அமர்ந்துகொண்டான் 


சத்யன் மடிந்து அமர்ந்ததைக் கூட பார்க்காமல் மான்சி அவள் குடிசையை நோக்கி நடந்தாள்,, சத்யன் திகைப்பில் அப்படியே அமர்ந்திருந்தான், சிறிதுநேரம் கழித்து சத்யன் சுதாரித்துக்கொண்டு எழுந்து சுற்றிலும் மான்சியை தேடினான், அவள் அங்கே இல்லை என்றதும் குடிசைக்குத்தான் போயிருப்பாள் என்ற முடிவுடன் குடிசையை நோக்கி வேகமாக போனான்
Like Reply
#18
மான்சியின் அம்மாவும் தங்கையும் வெளியே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள் , அப்போ மான்சி உள்ளேதான் இருப்பாள் என்ற வெளியில் இருந்தவர்களிடம் அனுமதி கேட்காமலேயே சட்டென்று தலைத்தாழ்த்தி குடிசைக்குள் நுழைந்தான், அவனுக்கு இருந்த மனநிலையில் மான்சியைத் தவிர வேறு எதுவும் அவன் கண்ணுக்கு தெரியவில்லை, அவள் எதைச்செய்தாலும் அதில் ஒரு நியாயம் இருக்கும் என்று சத்யனின் மனம் வாதிட்டது, இந்த கொலைக்கும் ஏதாவது காரணம் இருக்கும் என்று ஆணித்தரமாக சொன்னது அவன் மனம்

குடிசைக்குள் மான்சி ஒரு மூலையாக கால்களை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள், சத்யன் அவளின் காலருகே போய் நின்றான், மான்சி நிமிர்ந்து அவனைப்பார்த்தாள்,

“ வா மான்சி வீட்டுக்குப் போகலாம், அங்கப் போய் பேசலாம்” என்று அவளை கைநீட்டி அழைத்தான், தாய்வீட்டுக்கு வந்த பொண்டாட்டியை புருஷன் கூப்பிடுவது போல் உரிமையாக கூப்பிட்டான் சத்யன்

உனக்கு இன்னுமா நான் சொன்னது புரியலை என்பதுபோல் மான்சி ஒரு விரக்தியான வெற்றுப் பார்வை பார்க்க, அவனும் அவளை கூர்மையாகப் பார்த்தான்,

பிறகு அவள் தோள்களைப் பற்றி அவளை எழுப்பி அவளைத் தனக்கு நேராக நிறுத்தி “ மான்சி என்னோட கணிப்பில் நீ வலுவான காரணமின்றி இதைச் செய்திருக்க மாட்டே, ஏன் செய்தேன்னு நான் கேட்கவே மாட்டேன், அப்படியே செய்திருந்தாலும் நீ என் காதலி உயிராய் நேசிக்கும் உன்னை இந்த மாதிரி அல்ப காரணங்களுக்காக விட்டு விலகினா, அப்புறம் என் நேசம் பொய்யாயிடும் மான்சி, நீ ஒருநாள் சொன்னப் பாரு , என்னய்யா நீ சின்னக்குழந்தை மாதிரி இருக்கேன்னு, ஆமா மான்சி நான் சின்னக் குழந்தைதான், இத்தனை நாளா எனக்கு என்ன வேனும்னு தேர்ந்தெடுக்க தெரியாத குழந்தையா இருந்தேன், எனக்கு நல்லதையும் கெட்டதையும் பேதம் பிரிச்சு பார்க்க தெரியாது மான்சி, அம்மா, பாட்டி இவங்களோட ஆசையை நிரைவேத்த அவளை கல்யாணம் பண்ணேன், முதலாளியோட ஆசைப்படி அவரோட பொண்ணுக்கு ஒரு சமூக அடையாளமாவும் அவரோட கம்பெனிக்கு ஒரு சம்பளமில்லாத வேலைக்காரனாகவும் இருந்தேன், பொண்டாட்டியா வாச்சவ ஆசைப்படி எல்லாத்தையும் செய்தேன், இத்தனை நாளா எனக்குன்னு நான் எதையுமே ஆசைப்பட்டது இல்லை, முதன்முதலா உன்மேல ஆசைப்பட்டுருக்கேன், நீதான் எல்லாமுமாக கையேந்தி நிக்கிறேன் மான்சி தயவுசெஞ்சு என்கூட வந்துடு, என்னைவிட்டு எங்கேயும் போகாதே மான்சி” என்று சத்யன் தன் மனசை திறந்து முழுமையாக கொட்டினான், உணர்ச்சி வேகத்தில் அவளைப் பற்றியிருந்த கைகள் நடுங்கியது

மான்சி அவன் பிடியில் இருந்து விலகாமல் அவனையே பார்த்தாள்,, பின்னர் “ ஏன் சத்தி என்னை ஒனக்கு அவ்ளோ புடிக்குமா, அப்புடி என்ன சத்தி ஒனக்கு நான் பண்ணேன், ஒன்னுமே செய்யலையே, என் மேல ஏன் இவ்வளவு ஆசை வச்சுருக்க சத்தி, இதுக்கெல்லாம் நான் தகுதியானவ இல்ல சத்தி ” என்று கண்ணீருடன் கூறிய மான்சி அப்படியே அவன் நெஞ்சில் சாய்ந்தாள்,

அவளின் முதல் தொடுகை இது,, இடமும் சூழ்நிலையும் சரியில்லை என்றாலும்கூட சத்யன் அவளை அணைத்த அந்த நிமிடங்களை தனது வாழ்க்கை ஏட்டின் முதல் அத்தியாயத்தில் பதித்தான்,

தன் நெஞ்சில் கிடந்து குலுங்கி அழுதவளை வளைத்து அணைத்து,, “வேண்டாம் மான்சி நீ இனிமேல் அழக்கூடாது அழுத காலமெல்லாம் போதும், எங்கெங்கோ சுத்தி திரிஞ்ச நாம இப்போதான் சரியான இடத்துக்கு வந்திருக்கோம், இனிமேல் எங்கயுமே போகவேண்டாம், வா வீட்டுக்கு போகலாம் அங்க வந்து என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம்னு பாட்டிக்கிட்ட சொல்லிட்டு வந்துடு மான்சி, அப்புறம் நடக்க வேண்டியதை நான் பார்த்துக்கிறேன்” என்ற சத்யன் அவளை அணைத்தவாறே திரும்ப..

அங்கே குடிசையின் வாசலில் மான்சியின் அம்மாவும் தங்கையும் நின்றிருந்தார்கள், மான்சியின் அம்மா சத்யனைப் பார்த்து கண்ணீருடன் கைகூப்பினாள், மான்சியின் தங்கை உணர்ச்சிப் பெருக்கில் ஆனந்த கண்ணீர் விட்டாள்,

சத்யன் அவர்கள் இருவரையும் பார்த்து சிறுப் புன்னகையுடன் ஒப்புதலாய் தலையசைத்தான், மான்சி நிமிரவேயில்லை, அவர்கள் இருவரும் சத்யன் மான்சிக்கு ஒதுங்கி வழிவிட்டார்கள்

சத்யன் மான்சியுடன் வெளியே வந்து அவளை அணைத்தபடி வயலில் நடந்து, வரப்பில் ஏறினான், அந்த வரப்பில் ஒரு ஆள்தான் நடக்கமுடியும், சத்யன் முன்னே போய் நின்று பின்னால் இருந்த மான்சியின் கையை இழுத்து தன் கழுத்தோடு பிடித்து அவளை தன் முதுகில் தூக்க, மான்சி கால்களை உதறினாள்,

“ ஸ் மான்சி கொஞ்சநேரம்தான் வீட்டுக்கிட்ட போனதும் இறக்கி விட்டுடுறேன் ” என்று சத்யன் மெல்லிய குரலில் கூற

முரட்டுத்தனமாக கைகால்களை உதறிய மான்சி, “என்னை கீழ வுடு சத்தி” என்ற கோபமாக மான்சி கத்தினாள், அவள் கைகால்களை உதறியதால் சத்யனால் அந்த சிறிய வரப்பில் நடக்கமுடியவில்லை, கீழே விழுவதுபோல் இருக்க சட்டென்று மான்சியை இறக்கிவிட்டான்

இறங்கியவள் அதே இடத்தில் வரப்பில் உட்கார்ந்துகொண்டாள், சத்யனுக்கு எரிச்சலாக இருந்தது, தூரத்தில் எரிந்த சூளையின் நெருப்புக் கூட தன் ஆக்ரோஷத்தை சற்று குறைத்துவிட்டது, ஆனால் மான்சியின் உள்ளக் கொதிப்பு மட்டும் இன்னும் அடங்கவேயில்லையே என்று ஏக்கமாக நினைத்தான்
Like Reply
#19
குனிந்து வரப்பில் அமர்ந்திருந்தவளை பார்த்தான், தலையில் கைவைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள், சத்யனுக்கு கோபம் குமுறிக்கொண்டு வர “ ஏய் ஏன் இப்ப எளவு வீட்டுல இருக்குற மாதிரி தலையில கைவைச்சுக் கிட்டு உட்கார்ந்திருக்க, அதான் எல்லாத்தையும் சொல்லிட்டேனே அப்புறம் என்ன மறுபடியும் முரண்டு பண்ற, ஆனா நீ என்ன செஞ்சாலும் என்ன சொன்னாலும் நான் என் முடிவுல இருந்து பின்வாங்க போறதில்லை, நீ இல்லாம இந்த இடத்தைவிட்டு போகப்போறதும் இல்லை, இத்தனை நாளா அமைதியான சத்யனை தான பார்த்திருக்க, என்னை கோபக்காரனா மாத்தாதே எழுந்து வா மான்சி” என்று ஆத்திரமாய் கத்தினான் சத்யன், 

அசையாமல் வீம்பாக அமர்ந்திருந்த மான்சி “ என்ன நடந்துச்சுன்னு நா சொன்ன பொறவு ஒம்ம வீட்டுக்கு வாறன், மொதல்ல நா சொல்றதை கேளு” என்று மான்சி அழுத்தமாக கூற..

“ அதான் எனக்கு தேவையில்லேன்னு சொல்றேன்ல அப்புறமென்ன மான்சி,, வா வீட்டுக்கு போகலாம் ” என்று சத்யன் எரிச்சலாக சொன்னான்,, அவனுக்கு பாட்டியிடம் அவளை அழைத்துப்போய் அவள் வாயால் சம்மதத்தை சொல்லவைக்க வேண்டும் என்ற அவசரம்

“ ம்ஹூம் ஒன்கிட்ட சொல்லலைனா என் தலை வெடிச்சுடும் சத்தி, கொஞ்சம் கேளேன்” என்ற மான்சி அவனைப்பார்த்து கையேந்தி கேட்டாள்

சத்யனுக்கு மனதை பிசைவது போல் இருந்தது,, எவ்வளவு வீரமானவள் இவள்,, இப்போ எல்லாத்தையும் விட்டுட்டு என்கிட்ட கையேந்தறாளே, என்ற ஆதங்கத்தில் சட்டென்று அவள் பக்கத்தில் அமர்ந்து “ சரி சொல்லு மான்சி என்ன நடந்தது,, ஏன் உன் அண்ணனைக் கொலைப் பண்ண” என்றான் ஆறுதலான குரலில்


மான்சி சிறிதுநேரம் எதுவும் பேசவில்லை சூளையின் நெருப்பையே பார்த்தாள், பிறகு சத்யனைப் பார்க்காமல் இயந்திரம் போல வாயசைத்தாள்,, “ பத்து வருஷத்துக்கு முன்னாடி நாங்க குடும்பத்தோட புதுக்கோட்டையில ஒரு குவாரில கருங்கல் ஜல்லி உடைக்க காண்ட்ராக்ட்டர்கிட்ட கூலிக்கு வேலை செய்தோம், அங்கயே எங்களுக்கு ஒரு வீடு குடுத்திருந்தாங்க, பொட்டச்சிங்க நாங்க நாலு பேரும் கஷ்ட்டப்பட்டு அவனை படிக்க வச்சோம்,

" அப்போ எனக்கு பதினேழு வயசு, அடுத்தவளுக்கு பதினைஞ்சு, சின்னவளுக்கு பதிமூனு வயசு, எங்கப்பன் குடிகாரன் எங்கயாவது குடிச்சிட்டு கெடப்பான், நாங்க வாங்குற கூலியில, ஒராள் கூலி எங்கப்பனுக்கு, ஒராள் கூலி சோத்துக்கு, மீதி ரெண்டாள் கூலி அவன் படிப்புக்குன்னு ஒதுக்கி வச்சு செலவு பண்ணுவேன் சத்தி, அவனுக்கு படிப்பு முடிஞ்சுதுன்னு சொல்லி எங்களைத்தேடி குவாரிக்கு வந்தான், தொரை வூட்டு பைய மாதிரி டிப்டாப்பா வந்தான்,

" நாங்க எங்களோட கஷ்டமெல்லாம் தீந்து போச்சு இனி அவன் வேலைக்குப் போய் நம்மல காப்பாத்துவான்னு நெனைச்சு ரொம்ப சந்தோஷப்பட்டோம் சத்தி, ஆனா அவன் நாங்க மிச்சம் பண்ணி வச்சுருந்த காசை எடுத்துக்கிட்டு ஊரை சுத்திகிட்டு இருந்தான், பட்டணம் இவனை கெடுத்துச்சா, இல்ல பட்டணத்தப் பாத்து இவன் கெட்டானான்னு தெரியல, குடிப்பழக்கம் இருந்துச்சு, சரி அப்பனுக்கு புள்ள தப்பாம பொறந்திருக்கானேன்னுநாங்க கேட்டதுக்கு, இவ்வளவு நாளா ஆஸ்ட்டலயே கெடந்தேன் இன்னும் கொஞ்சநாள் ஜாலியா சுத்திட்டு அப்பறமா வேலைக்கு போறேன்னு சொன்னான்,

" நாங்களும் சரின்னு விட்டுபோட்டோம், ஒருநாளு சாயங்காலம் வேலை முடிஞ்சு எங்களுக்கு குடுத்திருந்த வீட்டுக்கு போனோம், சின்னவ புவனா குளிக்கனும்னு தட்டிக்குள்ள போனா, அவ துணியெல்லாம் அவுத்துட்டு குளிக்க ஒக்காந்துருக்கா, அப்ப தட்டி எடவெளியில் யாரோ பாக்குறமாதிரி இருக்குன்னு உத்துப் பாத்துருக்கா, இவன்தான் தட்டிய ஒதுக்கிட்டு புவனா குளிக்கிறத பாத்திருக்கான், உடனே அவ துணியைக் கட்டிக்கிட்டு வெளிய ஓடியாந்து என்கிட்ட சொல்லி அழுதா,

"எனக்கு என்ன சொல்றதுன்னு புரியாம அவள சமாதானம் பண்ணிட்டு அவனை கூப்பிட்டு கண்டிச்சேன், அதுக்கு அவன் ‘ஒன்னுமில்ல சும்மாதான் பாத்தேன் அதைப்போய் புவனா தப்பா நெனைச்சிருச்சு,, அப்படின்னு சொன்னான், நானும் அதை பெரிசுப்படுத்தாம விட்டுட்டேன், ஆனா அவனை கவனிக்க ஆரம்பிச்சேன், அவன் பார்வையே சரியில்லை,

" எங்கம்மாவோட மேலாக்கு விலகி இருந்தாக்கூட வெறிச்சுப் பாத்தான், என் ரெண்டு தங்கச்சிகளையும் என்னையும் தொட்டுத்தொட்டு பேசுனான், கூடப்பிறந்தவனாச்சே என்னப் பண்றதுன்னு புரியாம நாங்க மூனுபேரும் தவிச்சோம், ஒருநாள் எங்கம்மாவுக்கு அவன் நடத்தை தெரிஞ்சுபோச்சு,

"அவனை வெளக்குமாத்தால அடிச்சு எனக்கு பொறந்த ஆம்பளப் புள்ள சொத்துப்போச்சுன்னு நெனைச்சுக்குவேன், இனிமே இந்தபக்கம் எட்டி பாக்காதேலே, ன்னு அவனை அடிச்சு தொரத்திட்டாக, அப்பறம் ஒரு நாலுநாள் கழிச்சு முத்துமாரிக்கு கல்லு ஒடைக்கறப்ப பிசிறு கண்ல பட்டுருச்சு உடனே தருமாஸ்பத்ரிக்கு கூட்டிப்போய் வைத்தியம் பண்ணி, கண்ணுல மருந்து ஊத்தி வீட்டுல படுக்க வச்சுட்டு நான் கல்லு ஒடைக்க வந்துட்டேன், கொஞ்சநேரம் கழிச்சு அடுத்த சொட்டு மருந்து விட வீட்டுக்குப் போனேன்,

"வாசக்கிட்ட போறப்பவே முத்துமாரி மொனங்குற சத்தம் கேட்டுச்சு, எனக்கு நெஞ்சு பதக்குன்னுச்சு, கதவ தொறந்து பாத்தேன், தொறக்க முடியல உள்ள தாப்பா போட்டுருந்துச்சு, அப்பறம் கதவை எட்டி ரெண்டு ஒதை வுட்டேன், கதவு தொறந்துகிச்சு, உள்ளாறப் போயிப் போத்தா, என் கூடப்பொறந்த பாவி, முத்துமாரி வாயில துணியை வச்சு அடச்சுப்புட்டு அவமேல படுத்துருந்தான், நா போன வேகத்துல அவன் இடுப்புல ஒரு ஒதை விட்டேன் பக்கத்துல போய் விழுந்தான்,

" என்னைய பாத்ததும் முத்துமாரி அழுதுச்சு, ஆனா எதுவும் நடக்கலை, பாவி அவ தாவணிய உருவிட்டு, சட்டைய கிழிச்சுருந்தான், நான் வேகமா அவள தாவணியால மூடி வெளிய கூட்டியார திரும்புனேன், அதுக்குள்ள அவன் எந்துருச்சு எங்க ரெண்டுபோரு தலமுடியையும் பிடிச்சுக்கிட்டு அசிங்கமா பேசுனான், நா காறித்துப்பி அவன் கன்னத்துல அறைஞ்சேன், அவன் ரொம்ப குடிச்சிருந்தான் எங்க ரெண்டுபேரையும் சேத்து இழுத்து வீட்டுக்குள்ள தள்ளுனான்,


" எனக்கு ஆத்திரம் தாங்கமுடியல, நான் விழுந்த எடத்துல அருவாமனை இருந்துச்சு, நா அதை கையில எடுத்துக்கிட்டு திரும்பறதுக்குள்ள அவன் கிழ கெடந்த முத்துமாரி மேல படுத்துட்டான், எனக்கு பயங்கர ஆவேசமா வந்துச்சு அவன் கிட்டப்போய் தலைமுடிய புடிச்சு தூக்கி அருவாமனையால ஒரே வெட்டா கழுத்துல வெட்டிட்டேன், கழுத்து பாதி அறுந்து போய் தொங்குச்சு, கீழ கெடந்த முத்துமாரி பயங்கரமா கத்துனதும் தான் எனக்கு நெனைப்பு வந்துச்சு, ஒடனே அவன் உடம்ப கீழத் தள்ளிட்டு முத்துமாரியை தூக்கி அணைச்சுக்கிட்டு வெளிய ஓடியாந்து விழுந்தேன், அப்பறம் குவாரி மொதலாளி வந்து போலீஸ்க்கு போன் பண்ணாரு,

"ஆனா எங்கத்தா மகன் போனதுக்காக ஒரு சொட்டுக்கூட அழுவலை சத்தி எனக்காகத்தான் அழுதுச்சு, எல்லாருக்கும் நா ஏன் அண்ணனையே கொன்னேன் தெரிஞ்சு போச்சு, அதனால எனக்கு ஆறுவருஷம் தண்டனை குடுத்தாங்க, அதுல ஒருவருஷம் சின்னப்புள்ளைக ஜெயில்ல இருந்தேன் அப்புறம் பொம்பளைங்க ஜெயிலுக்கு மாத்திட்டாக, நான் வெளிய வந்து ஆறு மாசத்துல எங்கப்பன்னும் செத்துட்டான், அப்பறம் நாங்க நாலுபேரும் சம்பாரிச்சு முத்துமாரிய கட்டிக்குடுத்தோம், அதுலருந்து எனக்கு ஆம்பளைகளே புடிக்காது சத்தி ” என்று மான்சி சொல்லி முடித்துவிட்டு ஆயாசமாக ஒரு பெருமூச்சுடன் சத்யனை திரும்பிப் பார்த்தாள்
Like Reply
#20
அவன் தலைகுனிந்து அமைதியாக இருந்தான், “ என்னா சத்தி எதுவுமே பேசலை, ச்சே இவளும் ஒரு பொம்பளையான்னு நெனைக்கிறயா சத்தி ” என்று மான்சி நக்கலாக கேட்டாள்

சத்யன் நிமிர்ந்து அவளை நேராகப் பார்த்தான், இருட்டில் நிலவின் ஒளியில் அவன் கண்களில் தேங்கி இருந்த நீர் மின்னியது, “ ஆம்பளைகளையே பிடிக்காதுன்னு சொன்னியே என்னையும் சேர்த்தா?” என்று கரகரத்த குரலில் கேட்டான்.

அவன் கேள்வி மான்சிக்கு வியப்பாக இருந்தது, என்னடா இவ்வளவு கதை சொன்னோம் எல்லாத்தையும் விட்டுட்டு என்னையும் சேர்த்தான்னு கேட்டுறானே என்று நெஞ்சில் நினைத்தபடி “ ஏன் சத்தி ஒனக்கு எம்மேல வெறுப்பே வரலையா?” என்று மான்சி தீர்க்கமாக கேட்டாள்

“ ஏன், இல்ல ஏன் வெறுப்பு வரனும், நானே அந்த சமயத்துல நான் உன்கூட இல்லையேன்னு வேதனையோட இருக்கேன், இதுல வெறுப்பு எப்புடி வரும்?” என்று எதிர்கேள்வி கேட்டான் சத்யன்

மான்சி வியப்பில் விழிவிரித்து “ நீ இருந்திருந்தா என்னப் பண்ணிருப்ப சத்தி” என்றாள்

“ நான் இருந்திருந்தா, அந்த கொலையை பண்ணது நான்தான்னு போலீஸ்ல சரணடைஞ்சுருப்பேன்” என்று உடனே பதில் சொன்னான் சத்யன்
மான்சி எதுவுமே சொல்லாமல் அவனையே பார்த்தாள்,

“ என்ன மான்சி அப்புடி பாக்குற? ” என்றான் சத்யன்

“ என்னை ஒனக்கு அவ்வளவு புடிக்குமா சத்தி?” என்று மான்சி கேட்க

அவளை சற்று நெருங்கிய சத்யன் “ ஒரு அஞ்சு நிமிஷம் அனுமதி குடுத்தேன்னா, உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்கும்னு காட்டிடுவேன்” என்று சத்யன் குறும்பு வழியும் குரலில் கூறினான்.

அவன் மறைமுகமாக என்ன சொல்ல வருகிறான் என்று மான்சிக்கு புரிந்தது “ ஏன் சத்தி உன்னோட அழகுக்கும் படிப்புக்கும் எத்தனை பொண்ணுங்க வரிசைல வந்து நிக்கும், நீ ஏன் சத்தி என்மேல ஆசைப்பட்ட?” என்று மான்சி கேட்க..

“ அது உன்னைப் பாத்ததும் எங்கம்மாவை பாத்த மாதிரி இருந்துச்சு, உன்னைப்போலவே எங்கம்மாவும் கடுமையான உழைப்பாளி,, அப்புறம் உன்னோட தைரியமான பேச்சு, நடத்தை இதெல்லாம் பிடிச்சது, அப்புறம் நேத்து கிணத்துல உன்னை பாத்ததும் தான் உடனே கல்யாணம் பண்ணிக்கனும்னு முடிவு பண்ணேன்” என்று சத்யன் விளக்கமாக சொன்னான்,

“ சத்தி இன்னிக்கு எல்லாமே பேச கேட்க நல்லாருக்கும், ஆனா என்னிக்காச்சும் நீயும் நானும் வெளியப் போன அதோ கொலைகாரி போறான்னு யாராவது சொல்லுவாங்க சத்தி, அப்ப நீ படுற வேதனைய என்னால பாக்கமுடியாது சத்தி” என்று மான்சி கண்ணில் நீர் தழும்ப கூறினாள்

“ ஏய் மான்சி நாம யாருக்காகவும் வாழப் போறதில்லை எனக்காக, உனக்காக, நம்ம மனுவுக்காக வாழப்போறோம், அது மட்டுமில்ல தன் புருஷனுக்காக மதுரைய எரிச்ச கண்ணகியும் ஒரு தெய்வம்னா, தங்கச்சியை காப்பாத்த அண்ணனை கொன்ன நீயும் எனக்குத் தெய்வம் தான் மான்சி” என்று சத்யன் முடிவாக சொல்ல..
மான்சி அவனைப் பார்த்து “ சத்தி நா....... நா..... “ என்று ஏதோ சொல்லவந்து முடியாமல் தினற..

“ நீ நீ நீ என் பொண்டாட்டி, நான் உன் புருஷன், நாளையிலேருந்து, இப்போ வா பாட்டிக்கிட்ட பேசிட்டு வரலாம், எனக்கு வேற ரொம்ப பசிக்குது” என்று சத்யன் எழுந்து நின்று அவள் எழுந்திருக்க கை நீட்டினான்

மான்சி தயக்கமின்றி அவன் கையைப் பற்றினாள், சத்யன் அவள் கையை வெடுக்கென்று சுண்டி இழுக்க மான்சி தடுமாறி எழுந்து அவன் நெஞ்சில் விழுந்தாள், விழுந்தவள் விலகாமல் வளைத்து அணைத்தான் சத்யன்

ஆனால் மான்சி விலகவில்லை, நிம்மதியாய் அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள், ஆதரவாய் அவன் அவள் கூந்தலை கோதிவிட, எங்கெங்கோ அலைந்து திரிந்து இப்போதுதான் சேரவேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்ததுபோல் இருந்தது மான்சிக்கு, அவள் கைகள் தானாகவே அவன் இடுப்பை சுற்றி வளைத்தது, முதல்முறையாக அவளாக அணைத்ததும் சந்தோஷத்தில் மனம் துள்ள சத்யன் அவளை தன்னோட சேர்த்து இறுக்கினான்,

மான்சிக்கு விழிகளில் கண்ணீர் நிற்க்கவில்லை, சத்யனுக்கு முகத்தில் புன்னகை மாறிவில்லை,

மெதுவாக அவள் காதருகே குனிந்து “ கொஞ்சநேரத்துக்கு முன்னாடி உன்னை எவ்வளவு பிடிக்கும்னு சொல்லறதுக்கு அஞ்சு நிமிஷம் அனுமதி கேட்டேனே, கிடைக்குமா மான்சி” என்று ரகசியமாக கேட்டான் சத்யன்

அவ்வளவு நேரம் அவனுடன் இழைந்தவள் உடனே அவனைவிட்டு விலகி நின்று “ அம்மாச்சிய பாக்கனும்னு சொன்னியே சத்தி வா போகலாம்” என்று சொல்லிவிட்டு வேகமாக மான்சி முன்னே நடக்க ஆரம்பித்தாள்

சத்யன் சலிப்புடன் ச்சே என்று கையை உதறிக்கொண்டு எழுந்து அவள் பின்னே போக, ச்சே என்ற வார்த்தை மான்சியின் காதில் விழுந்திருக்க வேண்டும் சட்டென்று நின்றுவிட்டாள், அவளுக்கு பின்னால் வேகமாக வந்த சத்யன் அதை கவனிக்காமல் அவள்மீது மோதுவது போல் வந்து பின்னர் சுதாரித்து நின்றான்

“ என்னாச்சு மான்சி நின்னுட்ட, மனு வேற அழுவான் வா போகலாம்” என்று அவளை ஒதுக்கிவிட்டு முன்னேபோக முயன்றான் சத்யன்


“ ம்ஹூம் யாரோ கொஞ்சம் முன்னாடி முதுகுல தூக்கிட்டு வந்தாங்க, இப்போ எனக்கு முன்னாடி ஓடுறாங்க” என்று மான்சி போலியான சலிப்பு சத்யனுக்கு எதற்க்கோ அழைப்பு விடுக்க....

சத்யன் அப்படியே நின்றான், மான்சி தானா சொன்னது, அவனால் நம்பமுடியவில்லை, ஆனால் அந்த வார்த்தைகள் எவ்வளவுதான் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி வாழ்ந்தாலும் அவளும் ஒரு பெண்தான் என்ற உணர்வை உறுதிசெய்தது “ வா மான்சி” என்று சிறு சிரிப்புடன் திரும்பி நின்று கைநீட்டி கூப்பிட்டான்

மான்சி அவன் கைகளுக்குள் வந்தாள், சத்யன் அவளை தன் கைகளில் ஏந்தினான், அந்த ஈரநிலா அவர்களுக்காவே காய்க்வதுது போல இருந்தது, சத்யனின் கைகளில் கிடந்த மான்சியின் முகம் நிலவின் ஓளியில் அழகாக இருந்தது தனது பெரிய விழிகளை மூடியிருந்தாள், அவள் உதடுகள் வித்தியாசமாக இருந்தது கீழுதடு தடித்து நடுவில் ஒரு பிளவுடனும் மேலுதடு நடுவே தடித்து முடிவில் மெல்லிய கீற்றாய் முடிந்திருந்தது,

அந்த தடித்த உதடுகளை இழுத்து கடிக்க வேண்டும் போல் இருந்தது, மான்சி ஏதாவது முரண்டு பண்ணுவாளோ என்று ஒரு நிமிடம் தாமதித்தவன் மறுநிமிடம் கட்டுப்படுத்த முடியாமல் அவளின் கீழுதட்டை கவ்வி தன் வாய்க்குள் இழுத்தான், நிமிஷத்தில் நடந்த இந்த இன்ப தாக்குதலை எதிர்பார்க்காத மான்சி ‘ஹக்’ என்று அடித்தொண்டையில் இருந்து ஒரு சப்தம் எழுப்பி அவன் முகத்தில் கைவைத்து தள்ள முயன்றாள், அதற்க்குள் சத்யன் அவள் இதழ்களை பிளந்து தனது நாக்கை உள்ளே செலுத்தி அவளின் வாய்க்குள் தனது ஆதிக்கத்தை தொடங்கியிருந்தான்

அதன்பிறகு மான்சியால் அவனுக்கு ஒத்துழைப்பு தரத்தான் முடிந்ததே தவிர விலக்கித் தள்ளமுடியவில்லை,

சத்யன் தன் கையில் இருந்தவாறு ஆகாசத்தில் பறந்தவளை தரையில் இறக்கினான், தனக்கு வாகாக அவளை நிறுத்தி இதழ்களை பிளந்து இதழ்த் தேனைத் தேடித்தேடி உறிஞ்சி அருந்தினான், சத்யனுக்கு முத்தமிட பிடிக்கும், அதுவும் இதுபோல் ரசித்து அனுபவித்து ரசனையோடு தேனருந்த ரொம்ப பிடிக்கும் , ஆனால் இதுவரை சந்தர்பமமே அமைந்ததில்லை, இனிமேல் உணவில்லை என்றாலும் பரவாயில்லை இந்த இதழ்தேன் இல்லாமல் இருக்கக்கூடாது என்று நினைத்தபடி, தன் ஆசை காதலியின் இதழ்களை ஆர்வத்துடன் சுவைத்துக்கொண்டு இருந்தான்

சத்யனுக்கு நேற்று அவளை கிணற்றுக்குள் பார்த்ததில் இருந்து அடிநெஞ்சில் நெருப்பு எரிந்துகொண்டே இருந்தது , எவ்வளவு நீ குடித்தும் அணையாத அந்த நெருப்பு மான்சியின் இதழ் ரசத்தில் நனைந்து குளிர்ந்தது
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)