Romance "அவள்" ஒரு தொடர் கதை ... :
#1


Writer, Social Entrepreneur, Ambassador of Peace, Counselor, Psychotherapist, Traveler, FreeThinker


[/url]    [url=https://www.linkedin.com/in/gowriananthan/]
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
அவள்" ஒரு தொடர் கதை ... : அறிமுகம்

பாகம் ஒன்று : அறிமுகம் 


இற்றைக்கு சுமார் பத்து வருடங்களின் முன்பு ஒரு நாள்..


கல்லூரி தொடங்கி சில நாட்களே ஆயிருந்தன. இன்று, அறிமுக தினம். எல்லா பிரிவு மாணவர்களும் இரசாயன பகுதி விரிவுரை மண்டபத்தில் கூடியிருந்தனர். எல்லோர் முகங்களிலும் ஒருவித பெருமிதமும் சந்தோசமும் குடிகொண்டிருந்தது. அதற்குக் காரணமில்லாமல் இல்லை. அப்போதெல்லாம் உயர் தரத்தில் நாடளாவிய ரீதியில் அதியுயர் புள்ளிகள் பெற்ற சுமார் இருபது விகிதமான மாணவர்களுக்கே கல்லூரி அனுமதி கிடைக்கும். அவர்களையும் கூட தரம் பிரித்து முதலில் மருத்துவம், பொறியியல் போக எஞ்சியோரே இங்கு வந்திருப்பர். ஆனாலும் கூட மிகுதி எண்பது சதவிகிதத்தை விட தாம் உயர்ந்தவர்கள் என்ற மிதப்பு இருக்கும். இவர்களுக்கே இப்படி என்றால் முதல் இரு பிரிவுக்கும் சென்றவர்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை.



பேராசிரியர்கள் அறிமுகம் தொடங்குவதற்கு இன்னும் ஒருசில நிமிடங்களே இருந்தன. அதற்குள் மாணவர்கள் அருகிலிருந்தவர்களிடம் அறிமுகம் செய்யத்தொடங்கி விட்டிருந்தனர். இது விரிவுரை மண்டபமா இல்லை மீன் சந்தையா என்று ஒருகணம் தோன்றியது அவளிற்கு. 


அடடா, சொல்ல மறந்திட்டன். "அவள்" தான் இந்தக் கதையின் கதாநாயகி(?). அவளைப்பற்றிச் சொல்வதென்றால் அப்பாவின் அரியண்டம் தாங்காமல் ஏதாச்சும் ஒரு பட்டம் வாங்கி பறக்க விடுவம் எண்டு வந்திருந்தாள். அதை விட அவளுக்கும் இந்த சூழலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. எழுதவே தொடங்காத வெற்றுத் தாள்களை இன்னும் எத்தினை தரம் தான் எண்ணிக்கொண்டிருப்பது. தலை வேறு பயங்கரமா இடிக்கத் தொடங்கியிருந்தது. இத்தனை கூட்டத்தில் அவள் இல்லை எண்டு யாரும் கவனிக்கப் போவதில்லை. பேசாம எழும்பிப் போய் விடலாமா என்று எண்ணிக் கொண்டிருந்தாபோது, பின்னாலிருந்து ஒரு குரல் "உங்களுக்கு ராணியைத் தெரியுமா?". அதிர்ந்து போய் தயக்கத்துடன் திரும்பிப் பார்த்தாள்.


பின்னல் ஒரு இரண்டு வாங்கு தள்ளி இருந்துதான் அந்தக் குரல் வந்திருக்கவேண்டும். ஆனால் யார் கேட்டது? தன்னிடம் தான் கேட்டார்களா? இல்லை பொதுவாகக் கதைத்துக்கொண்டிருந்தார்களா? குழப்பத்துடன் திரும்பி பையை எடுத்துக் கிளம்பத் தயாரானாள். "உங்களைத்தான், ராணியத் தெரியுமா எண்டு கேட்டன்". சடாரெனத் திரும்பியதால் இந்தமுறை குரலுக்குரியவனக் கண்டு பிடித்துவிட்டாள். 


இதற்க்கு முன்பு அவனை கண்டீனில் சிலமுறை பார்த்திருக்கிறாள். ஆனால் கதைத்ததில்லை. ஏனெனில் இதுவரை அவள் யாரிடமும் தானாகச் சென்று கதைத்ததில்லை. அதுவும் முக்கியமாய் ஆண்களிடம். அவளைப் பொறுத்தவரை ஆண்கள் எல்லாம் வேற்றுக்கிரக வாசிகள். பெண்களை அழவைத்து ஆனந்தம் காண்பவர்கள். கட்டி வைத்து உதைக்க வேண்டும். அதுக்குத்தானே கராத்தே பழகுகிறாள். ச்சே அதுவும் இந்தப் பாழாப்போன காலால், இப்போதைக்கு முடியாது போலிருக்கு.


"உங்கட ஸ்கூல் எண்டு தான் நினைக்கிறன்". அவனேதான். தான் இன்னும் முதாலாவது கேள்விக்கே பதில் சொல்லவில்லை எண்பது இப்போது தான் உரைத்தது அவளுக்கு. 


"எந்த ராணி..?"


"உடுவில்லதானே படிச்சனீங்கள். அவவும் உங்கட batch தான்." அவளுக்கு மயக்கம் வருமாப் போல இருந்தது. நான் உடுவில்ல படிச்சது இவனுக்கு எப்படித் தெரியும்? கொழும்பு வந்தே கிட்டத்தட்ட அஞ்சு வருசமாச்சு.


சுதாகரித்துக்கொண்டு, "யார், மகாராணியா?", சந்தேகத்துடன் கேட்டாள்.


"ஓம். இங்க ராமநாதன்.." சொல்லி முடிக்கவில்லை.


"தெரியும். உங்களுக்கு எப்படி அவவைத் தெரியும்?", தேவையில்லாத கேள்வி. ஏன் கேட்டாள் எண்டு அவளுக்கே தெரியவில்லை.


"எனக்கு தங்கச்சி முறை..". திரும்பவும் அதிர்ந்தாள். தொண்டை அடைத்துக்கொண்டது.


நல்லகாலம், நிகழ்ச்சி ஆரம்பமானதால் அதற்குமேல் பேசவேண்டி இருக்கவில்லை.


ஒரே சமயத்தில் உடம்பின் அத்தனை நாடி நாளங்களும் இதயத்தை நோக்கி ரத்தத்தைப் பாச்சியது போலிருந்தது. தலை சுற்றியது.  நாடியில் கை வைப்பதுபோல் மெதுவாகத் தலையை ஒருபக்கமாய்ச் சாய்த்துத் கைகளால் தாங்கிக் கொண்டாள். நிகழ்வுகள் நிழல்களாய் அவள் முன் ஓடின.
Like Reply
#3
பாகம் இரண்டு : தடுமாற்றம்  


"உங்களுக்கு என்ர தங்கச்சியைத் தெரியுமா? உங்க ஸ்கூல் தான்." அந்த நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு சங்கீதமாய் ஒலித்தது அவனது குரல். 


என்னதான் சங்கீதம் வருசக்கணக்கா பழகி இருந்தாலுமே ஒரு ஆணின் குரல் இவ்வளவு இனிமையாய் இருக்க முடியுமா என்ன. சில சங்கீத வித்துவான்கள் நாலாம்கட்டை எண்டு சொல்லி அடித்தொண்டையில் கரகரப்பிரியா பாடுகையில் கேட்கப் பிடிக்காமல் எழுந்து வந்திருக்கிறாள். இவன் நாள் முழுக்கப் பாடினாலும் கேட்டுக் கொண்டிருக்கலாம் போலிருக்கே. சின்ன வயசிலையே அம்மா தேனும் பாலும் குடுத்து வளத்திருப்பா போல. "அவ பெயர் ருக்தா.. அனு.." அவன் சொல்லலாமா விடலாமா எண்டு யோசிப்பது போல் தெரிந்தது.


"தெரியாது!" என்றபடி அருகிலிருந்த வயலினை எடுத்து ஷட்ஜ நரம்பை மெலிதாய்த் தட்டினாள்.  எத்தனை நாள் இருக்கும் இதை மீட்டி. ஊரில ஒண்டுக்கு ரெண்டு வயலின் இருந்தது. ஒண்டு ஜேர்மன், சின்ன வயசில பழக பக்கத்து வீட்டு அக்காவிடம் செக்கன்ட் ஹாண்டா வாங்கினது. அதிலைதான் தத்தித் தத்தி மூன்றாம் grade வரை முடிச்சது. அதன் பின் புதுசா எடுத்தது சீனா வயலின். எங்க செஞ்சதென்டாலும் புதுசெல்லே, "பள பள" எண்டு பார்க்க நல்லா இருக்கும். நாலாவது தரம் எடுக்க எப்படியும் இரண்டு வருஷம் பழக வேண்டும் எண்டு டீச்சர் சொல்லியிருந்தா. அதனால இப்ப என்ன அவசரம் எண்டு அடிக்கடி வாசிக்கிறதோ இல்லையோ சும்மா எடுத்து தொட்டுப் பாத்திட்டு வைச்சிடுறது.


பிறகு தொண்ணூத்தஞ்சில இடம்பெயரேக்க ஆயுதம் மறைச்சுக்கொண்டுவாறம் எண்டு நினைச்சு சுட்டுடுவான்கள் எண்ட பயத்திலோ என்னமோ அப்பா எல்லாத்தையும் கட்டி கல்லுவத்தில அப்பப்பா வீட்ட வைக்கச் சொல்லிட்டார். அவள் கேட்டிருந்தால் மறுத்திருக்க மாட்டார். ஏனெனில் அவள் பிடிவாதம் தான் ஊரறிந்ததே. ஒன்று வேண்டும் எண்டு முடிவெடுத்தாள் எண்டா சோறுதண்ணி வாயில படாது. இப்ப கூட ஊரில இருந்து இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்தில இருந்த அவர்களைப் பார்க்க மூன்றுநாள்  அவசர லீவில வந்திருந்த அப்பாவை அழுது அடம்பண்ணி தன்னுடன் கூட்டிப் போக வைத்திருந்தாள். அதனாலேயோ என்னமோ தான் போகேலாத மூஞ்சூறு இதைவேற காவணுமா எண்டு விட்டிட்டாள்.


எப்போதெல்லாம் அந்த நாட்களை நினைத்தாலும் வயிற்றில் புளியக்கரத்துவிட்ட மாதிரி ஒரு உணர்வு வருவதைத் தடுக்க முடிவதில்லை. ஒருவேளை அன்று மட்டும் அவளது பிடிவாதம் தோற்றுப் போயிருந்தால், கண்தெரியாத மாமாவையும், வயசுபோன அம்மமாவையும் கூட்டிக்கொண்டு அவளும் அம்மாவும் சில தினங்களுக்குப் பிறகு நடந்த அந்த பாரிய இடப் பெயர்வை எப்படி சமாளித்திருப்பர்? நினைச்சுப் பாக்கவே பயங்கரமாய் இருந்தது. ஒருவேளை எல்லோரையும் தவற விட்டு, இல்லை இன்னொரு கிருஷாந்தியாய்.. இதயம் படபட என்று அடித்துக் கொண்டது. நன்றாக மூச்சை உள்ளே இழுத்து சிறிது நேரத்தின் பின் சீராகவிட்டு சமாதானப் படுத்திக்கொள்ள முயன்றாள். கைகள் லேசாக நடுங்கத்தொடங்கியிருந்தன. கண்களை இறுக மூடிக் கொண்டாள்.


இங்க, கொழும்பு வந்து இப்ப ரெண்டு மூண்டு வருசமாச்சு, அவளின் வயலின் எந்த நிலையில் இருக்குதோ தெரியேல்ல. இண்டைக்கு எப்படியாச்சும் ஒரு தரமாவது இதில வாசிச்சுப் பாத்துடணும்.



[Image: the-violinist-anne-kushnick.jpg]


"ஸா.. பா.. ஸா.."


"யாரது வயலினை எடுத்தது..? சுதா, கொஞ்சம் உதுகளைக் கவனியும். வயலினைப் பழுதாக்கிப் போடுங்கள்". குசினியிலிருந்து வந்த டீச்சரின் வார்த்தைகள் சரக் சரக் என்று குத்திக் கண்களில் நீர் முட்டியது. 


"யாருமில்லை டீச்சர். நான்தான் வைச்சிருக்கிறன்" புல்லாங்குழலை கீழே வைத்துவிட்டு  வயலினை வாங்குவதற்காய் நீண்ட கரங்களைப் பற்றிக்கொண்டு அழுதுவிடவேண்டும் போலிருந்தது. கவனித்திருப்பானோ? இதிலை வேற இண்டைக்கு வந்து விட்டுட்டுப் போகும்போது அவளின் ஒன்றுவிட்டதம்பி கேலியாய்ச் சொல்லிவிட்டுப் போன வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஞாபகத்துக்கு வந்து தொலைத்தது. பேசமுயன்றபோது வெறும் கற்றுத்தான் வந்தது.


"குரல்வளையில் சிக்கிய காற்று 

சங்கீதமாவாதா காதல்..?"


சே.. முட்டாள்தனமா எதையும் யோசிக்காதே என்று தன்னைத்தனே கடிந்துகொண்டு கண்களை இறுக மூடி மீண்டும் நன்றாக மூச்சை இழுத்துவிட முயல்கையில் கன்னத்தினோரம் கண்ணீர் வழிந்தோடியது. அவசர அவசரமாய் நடுங்கும் கரங்களால் பக்கத்திலிருந்த சிறுமியிடம் வயலினைக் கொடுத்துவிட்டு,  மெதுவாய்த் திரும்பி கண்களைத் துடைத்துக் கொண்டாள்.  நிசப்தம் மீண்டும் அந்த அறையை நிரப்பிக் கொண்டது.
Like Reply
#4
Bro semma continue. Waiting for next update
[Image: 7f3eac9b49640ff18c05914fa2810247.png]
Like Reply
#5
Bro update
[Image: 7f3eac9b49640ff18c05914fa2810247.png]
Like Reply
#6
பாகம் மூன்று : கோபம் 

"நீ அவனைக் காதலிக்கிறியா?" விரிவுரை முடித்து வந்துகொண்டிருந்தவளைக் கூட்டிச்சென்று கேட்டபோது முதலில் எதுவுமே புரியவில்ல அவளுக்கு. அருகில் நின்ற உஷாவைப் பார்த்தாள். 
"நீ தானே சொன்னாய் கேள் எண்டு.." இப்போது புரிந்துவிட்டது. 

"அதுக்கு இப்படித்தான் சொல்லி வைச்சிருக்கிறியா? நான் இதையா கேக்கச் சொன்னான்?"

"அதுக்கு இதுதானே அர்த்தம்." ரஞ்சன் இடைமறித்தான்.


அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எதற்காய் மீண்டும் தப்பு மேல தப்பு செய்கிறாய் என்று உள்மனம் எச்சரித்தது. தூரத்தில் அவன் வழக்கம் போல தமிழ் மரத்தின்கீழே இருந்துகொண்டு எதுவுமே நடவாதது போல கடலை போட்டுக்கொண்டிருந்தான். உண்மையிலேயே இவனுக்கு சம்பந்தம் இல்லையா? அல்லது தெரியாதது போல் நடிக்கிறானா


அவர் என்ன சொன்னார்..?" எச்சிலை விழுங்கிக்கொண்டு கேட்டாள்.
"இஞ்சபார்.. அவர்.. மரியாதை.. ஆ..?" என்ற ரஞ்சனின் நக்கலை ரசிக்கும் நிலையில் அவள் இப்போது இல்லை.
"இல்லை அதுவந்து.. என்னால இது முடியாது.. ஆனா எனக்கு அது யார் எண்டு தெரியணும். அவ்வளவுதான். " ஒருமாதிரி சொல்லி முடித்துவிட்டாள்.
"தெரிந்துகொண்டு என்ன செய்யப் போகிறாய்? கட்டிவைத்து உதைக்கப் போகிறாயா?", திடுக்கிட்டாள்.

சில தினங்களுக்கு முன்புதான் அவர்கள் கல்லூரியில் முதலாவது batch trip கூட்டிக்கொண்டு போயிருந்தனர். கந்தானை மலை, வெறும் காடு. கல்லு முள்ளெல்லாம் தாண்டிப் போனா கடைசில ஒரு குட்டி மலை.. அங்கால dead-end .   இதுக்குப் போய் இவ்ளோதூரம் மாங்கு மாங்குன்னு நடந்து வந்ததை நினைக்க எரிச்சலாய் வந்தது அவளுக்கு. நேரம் வேறை இருட்டிப் போயிருந்தது. காடு என்பதால் சீக்கிரமே இருட்டிவிடும். முந்தி மடுவுல இருக்கேக்க கூட இப்படித்தான். பள்ளிக்கூடம் பண்டிவிரிச்சானில இருந்தது. இடையில இப்படியொரு அடர்ந்த காடு, அதைத் தாண்டித்தான் தினமும் போய் வாறது. அங்கை யானைகள் நிறைய இருந்ததால இருட்டிறதுக்கு முதலே வீடு போய்ச் சேர்ந்திடவேண்டும் எண்ட பதற்றத்தில வேகமா சைக்கிளை மிதிப்பம். 

அப்படித்தான் ஒருநாள், பள்ளிக்கூடம் முடிச்சு பக்கத்திலேயே ஒரு டீச்சர் வீட்டை டியூஷன்ம் முடிச்சுக் கொண்டுவர மணி ஆறு ஆகிவிட்டிருந்தது. கூட வந்த தோழி வேற, வழியிலிருந்த யானை லத்தியக் காட்டிப் பயமுறுத்திக்கொண்டு வந்தாள். வேகமாய் மிதிக்கலாம் எண்டு சீட்ல இருந்து எழுந்தபோது, சடாரென ஒரு மோட்டர்சைக்கிள்  குறுக்கால் வந்து வழிமறித்தது. திடீரென பிரேக் போட்டதால் சமநிலை தவறி விழப் போனவளைத் தாவி, சைக்கிள் handleஐ இறுகப் பிடித்து காப்பாற்றியது ஒரு ஆணின் கரம்.  மனதுக்குள் எழுந்த பயத்தை மறைத்தபடி யாரென்று பார்த்தாள். இவனா? மாநிறம், அப்பாவித்தனமான முகம். ஒரே பள்ளிக்கூடம் தான். அவள் பத்தாவது படித்துக்கொண்டிருந்தாள். அவன் உயர்தரமோ சாதாரணதரமோ தெரியாது. நல்லவன் எண்டு நினைச்சுக் கொண்டிருந்தோமே? எதுக்காக இந்த நேரத்தில் வந்து வில்லன் போல் வழி மறிக்கிறான்?
Like Reply
#7
உங்களோட கொஞ்சம் கதைக்க வேண்டும்" யாரைப் பார்த்துக் கேட்கிறான். திரும்பி தோழியைப் பார்த்தாள். தனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை என்பதுபோல் வேகமாய்த் தலையை ஆட்டினாள்.

"இந்த நேரத்திலையா? இருட்டிடுத்து வீட்டை கெதியாப் போகவேணும். அம்மா தேடுவா." பெண்களுக்கேயுரிய எச்சரிக்கை உணர்வு கை கொடுத்தது. வேகமாய் சைக்கிளைத் திருப்பி மிதிக்கத் தொடங்கினால் அவன் கூடவே வந்தான். கண்ணுக்கெட்டின தூரம்வரைக்கும் யாரையுமே காணவில்லை. பயம் கவ்விக்கொண்டது. சமாளித்துக்கொண்டு,


"இப்படிப் பின்னாலேயே வந்தீங்கண்டா நாளைக்கு ப்ரின்சிபல்ட சொல்லிடுவன்." முடிந்தவரை வேகமாய் சைக்கிளை மிதித்தபடி. 

"நான் சொல்றத தயவுசெய்து ஒருநிமிஷம் நிண்டு கேளுங்கோ". அவனின் தொடர் கெஞ்சல்கள் இன்னும் பீதியைக் கிளப்பியது. தோழியின் முகத்தைப் பார்த்தாள். எந்த சஞ்சலமுமில்லாமல் வந்துகொண்டிருந்தாள்.


இவளுக்கு ஏற்கனவே தெரியுமோ? இருக்காது, என்கூடத்தானே வந்து போகிறாள், பிறகு எப்படி? நாளைக்குப் போய் முதல் வேலையாய் ப்ரின்சிபல்ட சொல்லிடனும். அவா நல்லவா. சிஸ்டர் தானே, நிச்சயம் எனக்கு சப்போர்ட் பண்ணுவா. ஆனால் பாவம், அவரும் அவனுக்குத்தான் வக்காலத்து வங்கப் போகிறார் என்று அவளுக்கு அப்போது தெரிந்திருக்க நியாயமில்லை. ஒருவேளை அவர்கள் எல்லோரும் சொல்லியதுபோல அவன் நல்லவனாகவே இருந்திருக்கலாம். இருந்திருக்கலாம் என்ன, இருந்தான்.. ஆனால் அவள்? 


"இங்க பாருங்க உங்க கூடக் கதைக்க எனக்கு ஒண்டுமில்லை. எதெண்டாலும் நாளைக்கு பள்ளிக்கூடத்தில கதையுங்கோ." சொல்லிவிட்டுப் பார்த்தால் ஒருவாறு மடு எல்லையை அண்மித்திருந்தனர். அங்கு ஒரு வாகனத் தடை இருக்கும் சைக்கிளைத் தூக்கித்தான் ஏத்த வேண்டும். பதட்டத்தில் அவளால் இன்று ஒழுங்காய் ஏத்த முடியவில்லை. 


"தாங்க, நான் எத்தி விடுறன்." மோட்டார்சைக்கிளை ஓரமாய் நிறுத்திவிட்டு வெகு அருகாமையில் வந்துவிட்டிருந்தான். 

எங்கிருந்து அந்த திடீர் பலம் வந்ததோ 'பளார்' என்று அறைந்து விட்டு  இரண்டு கையாலையும் அப்பிடியே சைக்கிளை அலாக்காய்த் தூக்கி மறுபுறம் வைத்து ஓட்டம் எடுத்தபோது,

"ஐ லவ் யு" அவனின் குரல் உடைந்துபோய் காற்றில் கரைந்து தேய்ந்து போனது. அவள் கைகளைப் பார்த்தாள். சிவந்துபோய் இருந்தது.


சே.. இனி இவ்வளவு தூரமும் இந்த இருட்டில திரும்பி நடக்கணுமே என்று நினைத்த போது அசதியாய் இருந்தது. இதில் வேறை, தோழி ஒருத்திக்கு கால் முடியாமல் போய் எல்லோரும் கைத்தாங்கலாய் கூட்டிக்கொண்டு வந்தனர். இவ்வளவு சிரமப்பட்டு இப்படி ஒரு பயணம் தேவையா எண்டு தனக்குத் தானே முனுமுனுத்துக்கொண்டிருந்தபோது, ரகசியமாய் ஒருவிரல் வந்து அவள் விரல்களை மெதுவாய்

 வருடிச் சென்றது. திடுக்கிட்டு  திரும்பிப் பார்த்தாள். அவளைவிட உயரமாய் இரண்டு உருவம் அருகில் வந்து கொண்டிருந்தது. அந்தக் கும்மிருட்டிலும் ஒருவனை அவளால் ஓரளவு தெளிவாய் கண்டுபிடிக்க முடிந்தது. ஆனால் அவனா? இதுதான் அவளது கேள்வி. இதுக்குப் போய் இந்த ரஞ்சன் காதல் கத்தரிக்காய் எண்டு..


"நீயே சொல்லு.. நான் போய் அவனிட்டை, நீ அவளின்டை கையைத் தொட்டியா எண்டு கேட்டால் என்ன நினைப்பான்?" ரஞ்சனது கேள்வியிலையும் நியாயம் இருந்தது. அதைவிட அந்தக் கும்மிருட்டில் அவனை அறியாமல்கூடத் தொட்டிருக்கலாம். ஆனால் அப்பிடி என்றால் ஒரு ' sorry '  சொல்லியிருப்பானே. 


"உன்னால முடியாதெண்டா சொல்லு. நானே கேட்டிடுறன்". ஏற்கனவே ஆண்கள் மீதிருந்த வெறுப்பு இப்போது ஈகோவாக மாறி சினத்தின் உச்சியிலிருந்தாள்.

சிலகணம்  தயங்கிவிட்டு, "எதுக்கும் நல்லா யோசி" என்றுவிட்டுப் போய்விட்டான்.
Like Reply
#8
(06-02-2019, 09:01 PM)Deepakpuma Wrote: Bro semma continue. Waiting for next update

(09-02-2019, 12:10 PM)Deepakpuma Wrote: Bro update

updated
Like Reply
#9
Bro super continue
[Image: 7f3eac9b49640ff18c05914fa2810247.png]
Like Reply
#10
பாகம் நான்கு : ஏமாற்றம் 

படிப்புமுடிந்ததும்தான் எதையும் யோசித்துச் சொல்லமுடியும் என்று சுதா சொல்லிவிட்டபோது அவளுக்கு ஒரே குழப்பமாய் இருந்தது.

வழமையாய் படங்கள்ல கலியாணத்துக்கு பெண்பார்க்கவந்து பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் சாப்பிட்டுவிட்டு கடைசியாய் வீட்டைபோய் யோசிச்சு பதில் சொல்லுறம் என்டுசொல்லும்போது அந்தப் பெண்ணின் முகத்தை close-upல் காட்டுவாங்கள். அதுவரை நாணத்துடன் நிலத்தையே பார்த்துக்கொண்டிருந்த அவளின் முகம் இப்போது முழுவதும் வெளிறிப் போய் இருக்கும். சுத்தி இருந்தவர்கள் எல்லாம் அவளைப் பரிதாபமாய்ப் பார்ப்பார்கள். அவமானம் தாளாமல் ஓடிச்சென்று அறைக்குள் கதவைப் பூட்டிக்கொண்டு குமுறிக் குமுறி அழுவாள். இத்தனைக்கும் அவளுக்கு மாப்பிளையை முன்ன பின்ன தெரிஞ்சிருக்காது. அப்பிடி இருக்கும்போதே அத்தனை நம்பிக்கையுடன் புடவைகட்டி அலங்காரம் பண்ணி நாணத்துடன் வந்திருப்பாள். 

அன்றுதான் அவர்கள் நிகழ்ச்சி BMICHஇல் அரங்கேறப்போகிறது. பெண்கள் எல்லோரும் புடவைகட்டி அலங்காரம் பண்ணி நாணத்துடன், சேச்சே.. என்ன பொம்பிளையா பாக்கவறாங்க இங்க? ஆனால் என்னமோ அவளுக்கு மட்டும் வெட்கம் பிடுங்கித்தின்றது. பூப்புனித நீராட்டுவிழாவுக்குப் பிறகு இதுதான் முதல்தடவை அவள் வெளியில் புடவை கட்டிக்கொண்டுவருவது. அதனாலேயோ என்னமோ அன்றுபோல் இன்றும் எல்லோரும் தன்னையே வைத்தகண் வாங்காது பார்த்துக்கொண்டிருப்பதாய் ஒரு பிரம்மை. ஆண்கள் எல்லாம் பட்டுவேட்டிகட்டி சுயம்வரத்துக்கு வந்த அரசகுமாரர்கள் போல் ஒருவித கம்பீரத்துடன் வலம்வந்து கொண்டிருந்தனர். 

கலாச்சார உடை என்பது வெறும் அடையாளம் மட்டுமில்லை. அதை அணியும்போது நமது கலாச்சார உணர்வையும் சேர்த்தே அணிந்துகொள்கிறோம். இல்லாவிட்டால் நேற்றுவரை சகஜமாகப் பழகிக்கொண்டிருந்த இருவரால் இன்றுவந்து அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள் என்று புதிதாய்ச் சொல்லிக்கொண்டிருக்கமாட்டர்கள். ஒவொருமுறை பார்வைகள் சந்திக்கையிலும் எத்தனை வோல்ட் மின்சாரம் பாய்ந்தது என்று அளவெடுக்க அவள் என்ன விஞ்ஞானப் பரிசோதனையா செய்துகொண்டிருந்தாள். 

வானத்தில் பறப்பதுபோல் இந்த உணர்வு அவளுக்குப் புதிதாய் இருந்தது. வழமையாய் ஒன்றுக்கொன்று எப்போதுமே அடிபட்டுக்கொண்டிருக்கும் மனதும் புத்தியும் இப்போது அதிசயமாய் ஒன்றுசேர்ந்து அவள் கட்டுப்பாட்டை மீறியிருந்தன என்பது அவளுக்கு நன்றாகவே தெரிந்தது. இருந்தாலும் முடிந்தவரை மற்றவர்கள் முன்பு காட்டிக்கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள். அவன் முன்பு அவளால் ஒழுங்காய் உட்காரக்கூட முடியவில்லை. சங்கடத்துடன் நெளிந்துகொண்டு எழுந்தவளை பக்கத்திலிருந்த அக்கா அவளுக்கு இடம்கானாதுபோல எண்டு நினைத்து, தள்ளியிருந்துவிட்டு அவளையும் இருக்கச்சொன்னா. தர்மசங்கடமான சூழ்நிலை. 

"இல்லை அக்கா.. இருந்திருந்து கால் நோகுது கொஞ்சநேரம் எழும்பி நிக்கிறன்." சுத்த பேத்தல். என்ன ஆச்சு இவளுக்கு? மல்லிகை மணம் அவனை மயக்கியதோ இல்லையோ அவளை நன்றாகவே கட்டிளக்கச் செய்திருந்தது.

கண்டதும் காதல் என்பதெல்லாம் பருவக்கோளாறுதான் என்றுகொண்டிருந்தவளை, கலியாணத்துக்கும் கருமாதிக்கும் எந்தவித்தியாசமுமில்லை என்றவளை, ஆண்கள் என்றாலே பத்தடி தள்ளியே நிற்பவளை அவன் அருகாமை நிறையவே மாற்றியிருந்தது. இத்தனைக்கும் அவனின் சுண்டுவிரல் கூட அவள்மேல் பட்டதில்லை. அவனைக்கேட்டால் எந்த உணர்வு எந்த ஹோர்மொன்சின் செயல்பாடு எண்டு புட்டுப்புட்டு வைப்பான். மருத்துவம்தான் அவனின் கனவு, லட்சியம் எல்லாமே. அதில் அவளுக்கு எந்த வருத்தமும் இல்லைத்தான். ஆனால் யோசிக்கவேண்டும் என்று சொன்னதுதான் அவளைக் காயப்படுத்தியிருந்தது. இதுவரை அவனின் இதயத்தில் எதோ ஒருமூலையில் அவளும் இருக்கிறாள் என்றல்லவா நினைத்துக்கொண்டிருந்தாள். இனித்தான் யோசிக்கவேண்டும் என்றால்.. இன்னும் நுழையவில்லை என்றுதானே அர்த்தம் வருகிறது.
Like Reply
#11
இப்படித்தான் campusல் ஒருநண்பன், இவளுக்கு நெருக்கமான ஒரு நண்பியைக் காதலித்துக்கொண்டிருந்தான். பொதுவான நண்பிஎன்ற முறையில் தூதுபோக இவளைக் கேட்டிருந்தான். முதலில் கேட்டபோது தாம்தூம் எண்டு குதித்துவிட்டாள். ஆனால் அவன் உணர்வுகள் மேல் இவளுக்கு நம்பிக்கையிருந்தது. அதேபோல் சில மாதங்களிலேயே அவர்கள் சேர்ந்துவிட்டனர். அதற்கு ஒரே காரணம் அவன் தனது உணர்வுகள் மேல் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கை மட்டுமல்ல, அவள் வேறுயாரையும் காதலிக்கவில்லை என்ற புரிதலும்தான் அவனைத் தொடர்ந்து முயற்சிக்க வைத்தது. அதுமட்டுமல்ல அவளுக்காய் எதைவேண்டுமானாலும் துறக்கத் தயாராய் இருந்தான். காலம் காலமாய், பரம்பரை பரம்பரையாய் கட்டிக்காத்துவந்த சடங்கு சம்பிரதாயத்தை மட்டுமல்ல, ஒவ்வொரு வெள்ளியும் தவறாது சென்று தரிசிக்கும் அந்தக் கோவிலையும், அவனுக்கேயுரிய அடையாளமாய், நெற்றியில் போட்ட அழகுக் கோலமாயிருந்த அந்த விபூதியையும் தான்..

இவளுக்கு இழக்கவென்று சொன்னால் அப்படி பெரிதாய் எதுவுமில்லைத்தான் அவளது ஈகோவைத்தவிர. ஒருவேளை இவளும் கூட சுதாவுக்காகக் காலமெல்லாம் காத்திருந்திருப்பாள் அந்த நிகழ்வுமட்டும் நடக்காமலிருந்திருந்தால்..
Like Reply
#12
பாகம் ஐந்து : தயக்கம் 


[Image: Badminton-1-KLLDQWHGIT-1024x768.jpg]

இப்ப கொஞ்சநாளாய் தினமும் விரிவிரை முடிந்ததும் சிலமணிநேரம் Arts Faculty Gymல போய் பாட்மிண்டன் விளையாடுவது வழக்கம். இன்றும் அப்படித்தான் 'டபுள்ஸ்' விளையாடிக் கொண்டிருந்தனர். ஆனால் நண்பர்களின் கேலி கிண்டல் இன்றைக்கு வழக்கத்துக்கு மாறாய் புதிதாய் இருந்தது. அவன் அடித்த டாஷ் கோட்டுக்கு வெளியே போய் விழுந்தபோது,


"டேய் அவளண்ட மூஞ்சிய பாத்துக்கொண்டு அடிக்காம பூவப் பாத்து அடிடா.." நண்பர்களின் கிண்டல் தாங்காமலோ என்னமோ கொஞ்ச நேரத்தில் அவன் தலை இடிப்பதாய் சொல்லிவிட்டு இளைப்பாறப் போய்விட்டன். அவளும் உஷாவும் தொடர்ந்து விளையாடிக்கொண்டிருந்தனர். ஒரு பத்து நிமிஷம் கூட முடிஞ்சிருக்காது, 


"தா.. நான் விளையாடப் போறன். நீ போய் இரு." என்று அவளிடம் Racketஐ பறிக்கும் போது அவன் கரம் வேண்டுமென்றே அவளின் கையை இறுகப் பற்றியது. உஷாவைப் பார்த்தாள். 

"போய் இரு, கொஞ்சநேரத்தில வாறன்." என்றாள் மெல்லிய புன்னகையையுடன். அங்கு இருக்கப் பிடிக்காமல் கான்டீன் போய் உட்கார்ந்தாள்.


"என்ன பொறாமையா இருக்கா?" கேட்டது ரஞ்சன்தான். 

"இவ்வளவு நேரமும் எங்க போயிருந்தநீ?"

"ஏன் என்னாச்சு?"

"என்ன ஆகணும்? நான் அவனோட தனிய கதைச்சே ஆகணும். இன்னிக்கே இப்பவே." 

"இன்னும் கொஞ்சநாள் வெயிட் பண்ணு நான் எல்லாம் சரிபண்ணிடுரன்"

"நீ ஒண்டும் பண்ண வேண்டாம். அவனை இப்ப வரச்சொல்லுரியா இல்லை நான் போகட்டா?"

"சரி நீ போ.. நான் அனுப்பிவிடுறன்."

எங்கே போவது? எழுந்து கான்டீன் ஓரமாய் மெதுவாய் நடந்தாள்.
Like Reply
#13
"நீ எதோ கதைக்க வேண்டும் எண்டு சொன்னனீ எண்டு ரஞ்சன் சொன்னான்." கடுகடுன்னு அவன் குரல் பயமுறுத்தியது.

"அது வந்து..." இதுவரை இருந்த தைரியம், கோபம் எல்லாம் காத்தோட போய் தொண்டை வரண்டது.

"என்ன கெதியா சொல்லு, நான் விளையாடப் போகணும். பாதில விட்டிட்டு வந்திருக்கு." தொனியில் சிறிதும் மாற்றமில்லாது. இவனுக்கு இதயமே இரும்பிலதான் செய்துவச்சிருக்குதோ? எப்படி இவ்வளவு  கறாராய்ப் பேசுகிறான்? தப்புப் பண்ணின இவனுக்கே இப்படி எண்டா எனக்கு எவ்வளவு இருக்கவேணும்.


"ஒண்டு சொல்லுவன். கோபப்படக் கூடாது." தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஒருவாறு சொல்லிவிட்டு ஓரக்கண்ணால் ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா எண்டு பார்த்தாள். உண்மைதான் தலைக்குப் பின் ஒரு சிறிய ஒளிவட்டம் தோன்றி இருந்தது.

"அது நீ என்ன சொல்லுகிறாய் எண்டதைப் பொறுத்து." இந்த விதண்டாவாதம் அவன் கூடவே பிறந்தது போல. ஆனாலும் குரல் கொஞ்சம் இளகியிருந்தது.

"நீங்க தந்த மியூசிக் CD உடைஞ்சு போட்டுது." வேண்டுமென்றே சீண்டிவிட்டுப் பார்த்தல் அவள் எதிர்பார்த்தது போலவே அந்த ஒளிவட்டம் போய் முகம் மீண்டும் கடுகடுன்னு ஆகிவிட்டிருந்தது.


அது இசைஞானி இளையராஜாவின் இசைத் தொகுப்பு, தரும்போதே எதோ தன்ர காதலியின் முதல் பரிசை கடன் கேட்டமாதிரி நிறையவே தயங்கிப் பிறகு நூறுவாட்டி பத்திரம் சொல்லித்தான் தந்திருந்தான். இப்போது இப்படி உடைத்துவிட்டு வந்தால் கோபம்வராதா என்ன. ஆனால் அவள் நினைத்ததுபோல் அவனொன்றும் வசைமாரி பொழியவில்லை. மாறாக கடும் யோசனையில் ஆழ்ந்திருந்தான். இப்போது அந்த CD எப்படி உடைந்ததென்று சொல்லியே ஆகவேண்டும், இல்லாவிட்டால் அவளின் தலை வெடித்துவிடும்.


"உங்களால்தான் அது உடைந்தது."

'எப்படி?' அவன் கேட்கவில்லை. ஆனால் புருவநெரிசல் சொல்லியது.

"அன்னிக்கு எனக்கு ஐஸ்கிரீம் கொண்டுவந்து தந்துவிட்டு, பிறகு ஏன் வாங்கி அவவுக்கு குடுத்தனீங்க?" படபடவேண்டு பொரிந்ததால் மூச்சு முட்டியது. சிறிது நிறுத்தி,

"அதுதான் எனக்கு கோவம் வந்து bagஐ தூக்கி போட்டனான் எல்லே. அப்பத்தான் உடைஞ்சு இருக்கவேணும். பிறகு வீட்டை கொண்டுபோய் பார்த்தபோதுதான் தெரிந்தது. ஆனால் உங்களிட்டை எப்படி சொல்றது எண்டு பயத்தில சொல்லவில்லை." பரிதாமாய்ப் பார்த்த அவளை திட்டுவதுக்குப் பதிலாய் விழுந்து விழுந்து சிரித்தான். இப்போது அவள் புரியாமல் விழித்தாள்.
Like Reply
#14
உனக்கு எதுக்கு கோவம் வரவேணும்? நான் பிறகு இன்னுமொண்டு கொணந்து தந்தனான் தானே? நீ தானே வேண்டாம் எண்டுவிட்டுப் போய் விட்டாய்?"

"ஆனால்.. அது எப்படி என்னட்டை இருந்து வாங்கி அவக்கிட்டை குடுக்கலாம். அதாலதான்..?" சின்னப் பிள்ளைத்தனமாய் இருந்தது அவளது வாதம்.

"சரி விடு. இதைச்சொல்லத்தான் கூப்பிட்டியா? ரஞ்சன் எங்க போனான்?"

"ரஞ்சன்தான் எங்களை முன்னால போகச்சொன்னான். தான் பின்னால வாறன் எண்டவன்." பொய் சொன்னாள்.


"ஓ.. நீ எதோ கேக்கவேணும் எண்டு சொன்னனீ எண்டெல்லோ சொன்னவன்." கேட்டேவிட்டான். இனித் தப்பிக்க முடியாதே. அவனை மாட்டிவிட வந்து இப்போது அவள் நல்லா மாட்டுப்பட்டதுபோல் உணர்ந்தாள். இவன் சரியான வாய் வித்தைக்காரன். எதைச்சொன்னாலுமே கடைசியில அதை எங்களுக்கே எதிராய்த் திருப்பிவிடக்கூடியவன். கொஞ்சம் எச்சரிக்கையைத்தான் கேக்கவேணும்.

"அது வந்து.. தாகமாய் இருக்கு கொஞ்சம் ஏதாச்சும் குடிச்சிட்டு கதைக்கலாமே?"


இருவரும் அருகிலிருந்த Management Faculty கண்டீனை நோக்கிப்  போவதை பின்னாலிருந்து பார்த்துக்கொண்டிருந்த உஷாவும் ரஞ்சனும் தமக்குள் சிரித்துக்கொண்டார்கள்.



*****
Like Reply
#15
பாகம் ஆறு : தாய்


மருத்துவக் கல்லூரியில் கால் பதிக்க வேண்டும் என்ற அவனது பதினெட்டு வருடகாலக் கனவை நனவாக்கப் போகும் தேர்வுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சி இருந்தன. இரவுபகல் பாராது கடுமையாகப் படித்துக்கொண்டிருந்தான்.


"ரிங்.. ரிங்.." அவள் தான். சிறிது நேரத்தில் எடுப்பதாய்ச் சொல்லியிருந்தாள். எடுப்பதா வேண்டாமா எண்டு யோசித்துக் கொண்டிருக்கையிலே நின்றுவிட்டது. 

சே.. இவளுக்குக் கொஞ்சநாளாவே என்ன ஆச்சுண்டே தெரியேல்ல. இந்த தேர்வு எவ்வளவு முக்கியம் எண்டு தெரிந்திருந்தும், ஏன் புரிந்துகொள்ளவே மாட்டேன் என்கிறாள். தானும் படிக்காமல் என்னையும் குழப்பிக்கொண்டு. இப்ப அம்மாவோடை எதோ முக்கியமாய்க் கதைக்க வேணுமாம். ஏன்டா சந்தித்தோம் எண்டிருந்தது அவனுக்கு.


"ரிங்.. ரிங்.. ரிங்.. ரிங்.."

"யாரப்பா இந்தநேரத்திலை? எப்பபாத்தாலும் போன் அடிச்சுக்கொண்டு இருக்கு. வீட்ல படிக்கிற பிள்ளையளையும் குழப்பிக்கொண்டு." அப்பதான் வீட்டுக்குள் நுழைந்த அம்மா போனை எடுத்து,

"ஹலோ!"

"ஹலோ ஆன்ட்டி, நான்.. " குரல் விக்கித்தது.

"சொல்லு பிள்ளை என்ன விஷயம்?"

"அது வந்து.. நீங்கள்.. நான் அடிக்கடி போன் பண்ணி சுதாவைக் குழப்பிக்கொண்டிருக்கிறதா சொன்னீங்களாமே. அது தான்.."

"இல்லையே.. யார் அப்பிடிச் சொன்னது?"

"இல்லை நீங்க சொன்னீங்க எண்டுதான்.." அனுதான் சொன்னாள் எண்டு சொல்லிவிடலாமா? ஆனால் இவளுக்குப் போட்டுக்குடுத்துப் பழக்கமில்லாததால் தடுமாறினாள்.

"இஞ்ச பாரு பிள்ளை. நீயாரெண்டே எனக்குத் தெரியாது. பிறகெப்படி நான் சொல்லியிருக்க முடியும்?" ஆ..? இந்தக் கோணத்தில் ஏன் அவள் யோசிக்கவில்லை? அப்பாவித்தனமாய் யார் என்ன சொன்னாலும் அதை அப்பிடியே நம்பிக்கொண்டு சிறுபிள்ளைத்தனமாகவே இன்னும் எத்தினை நாளைக்குத்தான் இருக்கப் போறாளோ..


"இல்லை உங்களுக்கு நல்லத் தெரிஞ்ச ஒராள் தான் எனக்குச் சொல்லி, என்னை இனி சுதாவுக்கு போன் பண்ணி தொந்தரவு செய்ய வேண்டாம் எண்டு சொன்னவா. அதுதான் நீங்க என்னை யாருன்னே தெரியாம எப்படி தப்பா சொல்லலாம்?" பொரிந்து தள்ளிவிட்டாள்.


உண்மைதான். இந்த இரண்டு வருடங்களில் அவனுக்கு போன் பண்ணின நாட்களை விரல் விட்டு  எண்ணிவிடலாம். அப்பிடியிருக்க, எதோ நான் தான் படிக்கவிடாமல்.. அவளுக்கு கோபம் கோபமாய் வந்தது.
Like Reply
#16
இல்லைபிள்ளை. நீரும் படிக்கவேனும்தானே. அதுதான் உம்மடை நல்லதுக்கும்தான் சொன்னனான்." 



இப்படித்தான் அப்பாவும், அவளுக்கு நினைவுதெரிந்த நாளிலிருந்து மூச்சுக்கு முன்னூறுதரம் "படிபடி.." எண்டு அதுக்கான அவர் தரப்பு வாதங்களை சொல்லச் சொல்லக் கேட்டுக் மனப்பாடமே ஆகியிருந்தது.

"உனக்கு இப்ப நாங்க சொல்லுறது விளங்காது. பிறகுதான், உன்னோடை படிச்சவை எல்லாம் நல்லா முன்னுக்கு வரேக்க தான், நான் அப்ப படிக்காம விட்டுட்டமே எண்டு வருத்தப் படுவாய்.. உனக்கு நாங்க செஞ்சது போல எனக்கும் எங்க அப்பா அம்மா வசதி செய்து தந்திருந்தா நான் எவ்வளவு சந்தோசமா பெரிய படிப்பெல்லாம் படிச்சிருப்பன்.. நாங்க விட்டதை நீதான் நல்லாப் படிச்சு எங்கட குடும்பத்துக்கே பெருமை சேர்க்க வேணும். எங்களுக்கு வேற யார் இருக்கினம்? உன்னைத்தான் நம்பியிருக்கிறம்."  கேட்ட பல்லவியாய் இருந்தாலும், கடைசில அவர் தளுதளுத்த குரல்ல முடிக்கேக்க.. எப்படியாச்சும் படிச்சு பெரியாளா வந்து நாம யார்ன்னு காட்டவேணும் எண்டு ஒரு வேகம் வரும்.  அதெல்லாம் கொஞ்ச நாளுக்குத்தான். பிறகு வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிடும். "என்னப்பா.. படிச்சு என்னத்தைக் காணப் போறம். எல்லாரும் கடைசில சாகத்தானே போறம்." அவளது வயதுக்கு மீறின பேச்சு விரக்தியின் வெளிப்பாடா அல்லது உண்மையின் தேடல்களுக்கான அறிகுறியா என்று இதுவரை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.


"என்ன இருக்கிரீர்தானே லைன்ல.." ஆன்ட்டியின் குரல் அவளை இந்தவுலகத்துக்கு திரும்ப அழைத்து வந்தது. ஆனால் என்ன கதைத்துக்கொண்டிருந்தோம் என்பது மறந்துவிட்டது.

"ஓம் ஆன்ட்டி.. ஆனா நீங்க அப்பிடிச்சொன்னதுதான் எனக்கு கஷ்டமா இருந்தது. ஏனென்டா நான் அவருக்கு போன் பண்ணுவதேயில்லை. அனு மூலமாத்தான்.." நாக்கைக் கடித்துக்கொண்டாள். அவனின் சம்மதத்தை கேட்டு தோழி மூலமாய் தூது விட்டதை போய் அவன் அம்மாவிடமே யாராவது சொல்லுவார்களா?

"ஒ.. அவள் தான் சொன்னதா.. நான் கேட்குறன் என்னண்டு." சே.. என்ன சொல்லப் போய் என்ன ஆகிவிட்டது.

"ஐயோ ஆன்ட்டி வேண்டாம். நான் தப்பா சொல்லிட்டன். ப்ளீஸ் இதோட விட்டிடுங்க. அவளுக்கு எதுவுமே தெரியாது." கெஞ்சினாள்.

"சரிபிள்ளை. நீர் போய் நல்லா படியும். எதெண்டாலும் பிறகு பாப்பம் என்ன?"

அவரின் வாஞ்சையான பேச்சு அவளது குற்றவுணர்வை இன்னும் அதிகரித்தது. எதுவும் பேசாமல் போனை  வைத்துவிட்டாள். அந்தத்தாயின் பாசத்துக்கு முன்னால் தனது காதல் தோற்றுவிட்டதாய் உணர்ந்தாள். இப்படிப்பட்ட ஒரு தாய்க்காக தனது காதலைக்கூட அவன் தியாகம் செய்யத் தயங்கமாட்டான் என்று தோன்றியது.
Like Reply
#17
போனையே சிறிது நேரம் வெறித்துப் பார்த்தாள். இது எடுத்து என்ன ஒரு ரெண்டு வருஷம் இருக்குமா? அப்பெல்லாம் போன் எடுப்பதேண்டால் பெயரைப் பதிந்துவிட்டு நீண்டநாள் காத்திருக்கவேண்டும். கிட்டத்தட்ட ஆறுமாதம்.. காத்திருந்து காத்திருந்து ஒருநாள் வந்தேவிட்டது. வந்ததும் முதல் வேலையாய் அவள் புரட்டியது Phone Directory தான். 



"T.. T.. T.." ஆ இங்க இருக்கு.. Alexandra tr. கண்டுபிடித்து விட்டாள். சந்தோசத்தில் இலக்கங்களை அழுத்தும் போது விரல்கள் நடுங்கின. 


"ரிங் போகுது" இதயம் படக் படக் என்றது.. எடுத்தது அவனது அப்பா..

"ஹலோ.."

"May I Speak to Sudha, Please?" முன்னமே ஒரு பத்துத் தரம் ஒத்திகை பார்த்திருந்தாள்.

"Hold on the line, please" மூச்சு முட்டியது. அம்மாவை முதலே பிளான் பண்ணி கீழ் வீட்டுக்கு அனுப்பியிருந்தாள். அதால இப்போதைக்கு வரமாட்டா.


"ஹலோ.." என்ன ராகமாய் இருக்கும்?  "Hello.. Who is on the line?"

"நான் வந்து.. "

"oh my god.. நீங்களா.. கனநாளைக்குப் பிறகு.. என்ன செய்து கொண்டிருக்கிறீங்க?"

"நான் maths படிக்கிறான் நீங்க?"

"நான் bio.. குஹனாதன் sirட தான்."

எல்லாம் ஒரு ஏழெட்டு மாசத்துக்கு முதலே கதைத்தவை தான். அப்போதுதான் சாதரணதரம் முடித்துவிட்டு resultsஇட்காகக் காத்திருந்தனர். அவன் பயோ படிக்கப் போறதா முதலில் சொன்னபோது. ஒ.. அப்ப டாக்டர் தானே.. என்று நக்கலாய்க் கேட்டது ஞாபகம் வந்தது. பிறகு எனக்கு வீட்டிலை வந்து maths  சொல்லித்தந்த கருணா sir ஐ அவனுக்குத் தெரியும் என்றபோதுதான் அவன் வீடு எங்கே இருக்கு என்று கேட்டிருந்தாள். முன்னாலுள்ள வீதி என்றபோது, அட, இத்தனை நாளா sir சொல்லிக்கொண்டிருந்த அந்தக் 'கெட்டிக்காரப் பெடியன்' அவன்தான் என்று விளங்கியது. அதனால் கொஞ்சம் மரியாதையும் வந்திருந்தது.


"உங்கட பாட்டு அரங்கேற்றம் நடந்தது எண்டு கேள்விப்பட்டன் அதுதான் விஷ் பண்ணலாமெண்டு.."

"ஒ. அதுவா தேங்க்ஸ்."

"எங்களையெல்லாம் மறந்திட்டீங்கதானே. invite பண்ணேல்லை."

"அப்பிடியெல்லாம் இல்லை. சும்மா ஒரு சின்ன நிகழ்ச்சிதான்."

..........

.........

"ஒ.. இங்க நேற்று ஒரே மழை, ரோட்ல நல்ல வெள்ளம். உங்கை எப்படி?" முன்தெரு.. ஒரு முப்பதுநிமிச நடை தான் இருக்கும்.

"ஒ.. இங்கயும் சரியான மழை தான்.."

............

............

பிறகென்ன..? "சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா, இன்னும் இருக்கா.. என்னமோ மயக்கம்" என்ற ரேஞ்ச்சுக்கு அவள் டூயட் பாடத் தொடங்கி விட்டிருக்க " பொறுங்க. அம்மா கூப்பிடுறா, நான் பிறகு கதைக்கிறன்" என்று வைத்துவிட்டான்.




*****
தொடரும்..
Like Reply
#18
Super bro continue
[Image: 7f3eac9b49640ff18c05914fa2810247.png]
Like Reply
#19
பாகம் ஏழு : நண்பன் 

"ரிங்..ரிங்.. ரிங்..ரிங்.. ரிங்..ரிங்.." அந்த ரூமில்தான் போன் அடித்துக்கொண்டிருந்தது. அவளோ கேளாததுபோல் யன்னலுக்கு வெளியே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். 

செத்துவிடலாம் போலிருந்தது. ஆனால் யாருக்கும் பிரச்சினை குடுக்காமல் சாகணும். அதுக்குத்தானே இங்கு வந்திருக்கிறாள். ஆனால் எப்படிச்சாவது எண்டு தான் தெரியவில்லை. தற்கொலை செய்யலாம் எண்டாலும், ஆசைகள் நிறைவேறாமல் செத்தால் ஆவியாய் அங்கயே அலைவார்கள் எண்டு எங்கையோ படிச்சதால அதுக்கும் விருப்பமில்லை. வாழவும் கூடாது ஆனால் தற்கொலையும் செய்யக் கூடாதெண்டால் எப்படி? யாராவது கொலை செய்தால் தான் உண்டு. ஆனால் அதுவும் பிறகு ஆவியாய் வந்து வஞ்சம் தீர்க்கப் புறப்பட்டு விட்டால் என்ன செய்வது? குழப்பமாய் இருந்தது அவளுக்கு.

சுப்பிரமணி, அது அவனது பட்டப் பெயர். அவர்களது டீச்சர் தான் வைத்தது. காரணம் மறந்துவிட்டது. அவனை  அவளுக்கு சிறு வயதிலிருந்தே தெரியும். படிப்பில் கெட்டிக்காரன். வாழ்க்கையில் எப்படியாவது முன்னேறி பலர் போற்றும் ஒரு பெரிய புள்ளியாய் வந்துவிட வேண்டும் என்ற வெறி அவனிடம் சிறுவயதிலிருந்தே இருந்தது. ஆண்கள் என்றாலே கதைப்பதற்கு தயங்கும் இவளுக்கு அந்தநேரத்தில் ஒரு ஆண் நண்பன் என்று இருந்திருந்தால் அது இவனாகத்தான் இருந்திருக்கும்.  அவளது வாழ்க்கையின் பல முக்கிய கட்டங்களில் இவனது பிரசன்னமும் இருந்திருக்கிறது. ஆனால் இந்த முறைதான் அவளது வாழ்க்கையே புரட்டிப் போட்ட சில முக்கிய காரணிகளில் ஒருவனாய் வந்தான். 

"இன்று முதியோர் இல்லத்துக்குப் போகிறேன், உனக்கு விருப்பமெண்டால் கூட வரலாம்." என்று அவன் சொன்ன போது, வீட்டில் சும்மாய் இருந்து மூளையைக் குழப்பிக்கொண்டிருக்காமல் கொஞ்சம் போய்ட்டுதான் வருவமே என்று தோன்றியது.  அவளது அப்பா பல தொண்டு நிறுவனங்களில் வேலை செய்ததாலேயோ என்னமோ, சின்ன வயதிலிருந்தே அவளுக்கு தொண்டு செய்வதில் ஆர்வமிருந்தது.

அவன் வரச்சொன்ன இடத்தை பஸ் அடைந்ததும், வெளியே பார்த்தாள். அவன் பஸ் நிறுத்துமிடத்தில் நின்றுகொண்டிருந்தான். வழமையாய் அவன் கூடவே ஒட்டிக்கொண்டிருக்கும் அந்த பைக்கை காணவில்லை. அவனது கண்ணியத்தை எண்ணி மனதுக்குள் மகிழ்ந்து கொண்டாள்.

"என்ன இடம் பக்கத்திலையா?"
"இல்லை, கொஞ்சத்தூரம் தான். நடந்தே போய்டலாம்" சரியென்று கூடவே நடக்கத் தொடங்கினாள். சிறுவயதில் ஒரு fantasyயாய்த் தொடங்கி இப்ப ஒரு சில நாட்களாய்த்தான் மனம்விட்டு பகிரக்கூடிய ஒரு நெருங்கிய நண்பனாய் ஆகிவிட்டிருந்தான். 

"அதிசயமாய் பைக்கை விட்டிட்டு வந்திருக்கிறீங்க?"
"சர்வீஸ்க்கு  விட்டிருக்கு. இன்னும் வரேல்லை."
"ஒ.. மற்றவங்களை எத்திட்டுப்போனா உங்கடை லவர் ஏதாச்சும் சொல்லுவாங்கள் எண்டுதான் விட்டிடு வந்தீங்களோ எண்டு நினைச்சன்."
"யார் லிசவா.. She is very broadminded"
அவளுக்குப் புரியவில்லை, ஆனால் தலையை மட்டும் ஆட்டிவைத்தாள்.
Like Reply
#20
இன்னும் கனதூரம் நடக்க வேணுமே?" நேற்று  முழுக்க karate பயிற்சி. இன்றுதான் கால் நோகத் தொடங்கி இருந்தது. சும்மா வாழ்க்கைக்குதவாத ஒன்றைப் படிக்கப் போய் வீட்டில வந்து அதுநோவுது இதுநோவுது எண்டு படுத்துக் கிடக்கிறதுதான் மிச்சம். அம்மாவின் திட்டல் நினைவுக்குவந்தது.


"இல்லை கொஞ்சத்தூரம் தான்.." சிறிது தயங்கிவிட்டுப் பின், "ஆனா அதுக்கு முதல்ல வேறை ஒரு இடத்துக்குப் போறம்"

"எங்க?"

"உனக்கு பிடிச்ச இடம் தான். போன பிறகு தெரிந்து கொள்ளுவாய் தானே.."

அதற்குமேல் ஒன்றும் கேட்கத் தோன்றவில்லை. சிறுவயதுக் கதைகளின் சுவாரசியத்தில்  மூழ்கிவிட்டிருந்தாள். அதே டீச்சர்தான் இவளது எழுத்தைக் கிண்டல் பண்ணி 'மாட்டுக்கொட்டில்' என்றதும், அதுக்கு அவள் அழுததும், பிறகு அவரே வந்து சமாதனப் படுத்தியதும். எவ்வளவு நல்ல டீச்சர் மாணவர்களுடன் தானுமொருவராய் இருந்து அவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பார். இதுவரை அவரிடம் படித்த யாருமே அவவை மறந்ததில்லை.


அந்த உச்சி வெயிலிலும் கடற்கரைக் காற்று சில்லென்று உடம்பில் படத்தான் எங்கு வந்திருக்கிறோம் என்று புரிந்தது. ஆனால் ஏன் இங்கு கூட்டிவந்தான் என்று தான் புரியவில்லை. ஒருவேளை சுதாவை வரச்சொல்லியிருப்பானோ? ஒரு நிமிஷம் மனசுக்குள் மத்தாப்பு. ஆனால் அடுத்த நிமிசமே, அப்படி வந்தாலுமே.. "இட்ஸ் டூ லேட்".. காரணம் இவனுக்கும் தெரியும்.  கண்ணீர்த்திரை கண்களை மறைத்தது.


யாரோ ஒருபெண் சிங்களத்தில் திட்டும் சத்தம் கேட்டு திரும்பியவளின் நெற்றியில் விழுந்த முடியை ஓரமாய்த் தள்ளிவிடும் அளவுக்கு, அந்த கடற்கரைக் காத்துக்கு வலிமையிருக்கவில்லை. 



"டக்.. டக்.." கதவு தட்டும் சத்தம் கேட்டு சுயநினைவுக்கு வந்தவள் கடிகாரத்தைப் பார்த்தால் நேரம் நண்பகலைத் தாண்டியிருந்தது. எழுந்துசென்று கதவைத் திறந்தாள்.

"சாப்பாடு கொண்டந்திருக்கிரன். நீங்க மரக்கறிதானே?" ரூம் பாய் தான்.

ஓமெண்டு தலையை ஆட்டினாள்.

"முதலாளிக்கு தெரியேல்லை. அதுதான் போன் பண்ணினவர். ஆனா நீங்கள் எடுக்கேல்ல. அதான் எதுக்கும் இரண்டையும் கொண்டு வந்தனான்." என்று சொல்லிவிட்டு மேசையில் அடுக்கினான். அவளுக்குச் சாப்பிடவே மனமில்லை. ஆனால் திருப்பிக் கொண்டு போகச்சொன்னால் திரும்ப அந்த மேனேஜர் போன் பண்ணி ஏனெண்டு கேப்பான். அவள் இன்றைக்குக் காலமை இங்கை வந்ததிலிருந்து இதுவரைக்குமே ஒரு மூன்று தரம் போன் பண்ணியிருப்பான். 
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)