Posts: 204
Threads: 5
Likes Received: 591 in 152 posts
Likes Given: 87
Joined: Jun 2019
Reputation:
13
இது ஒரு காதல் கதை, சிறிய அளவில் காமம் இருக்கும். சிறிய எதிர்பாராத திருப்பங்கள் இருக்கும்.
யசோ கதை முடிந்தபின் தான் இதில் ரெகுலர் அப்டேட்ஸ் எதிர்பார்க்கலாம்.
Posts: 118
Threads: 1
Likes Received: 39 in 35 posts
Likes Given: 20
Joined: May 2019
Reputation:
0
Use some actress pics for us to visualize the characters please. Just a suggestion.
•
Posts: 1,352
Threads: 0
Likes Received: 182 in 168 posts
Likes Given: 1,348
Joined: Apr 2019
Reputation:
0
Nice bro i am waiting for ur story
•
Posts: 10,592
Threads: 1
Likes Received: 3,229 in 3,037 posts
Likes Given: 9,729
Joined: May 2019
Reputation:
22
•
Posts: 204
Threads: 5
Likes Received: 591 in 152 posts
Likes Given: 87
Joined: Jun 2019
Reputation:
13
07-06-2020, 07:26 PM
(This post was last modified: 07-06-2020, 07:28 PM by nathan19. Edited 1 time in total. Edited 1 time in total.)
1
அது ஒரு புதன் கிழமை, மாலை ஒரு 8 அல்லது கூட இருக்கும். வெளியே லேசான மழை, டின்னர் தயாராக இருந்தது, பால்கனியில் கொஞ்சம் மழை பார்த்தவன் ஹாலுக்கு வந்து டிவி ஆன் செய்து எனது வழக்கமான மூவி கலெக்சன் இலிருந்து படம் பார்க்க நினைத்தேன், ஒரு 50 படங்கள், கொஞ்சம் ஆங்கில சீரிஸ் இருக்கும், படங்களில் தமிழ், மலையாளம் அதிகம், கொஞ்சம் ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி.
ஹேராம் ? அல்லது மூன்றாம் பிறை ? அல்லது நாயகன்? உயிரே?
யோசித்தபடி பாட்டிலில் இருந்த காஸ்ட்லி இறக்குமதி சரக்கை கிளாஸில் ஊற்றி, ஸ்நாக்ஸ் பரப்பினேன். மிகவும் relax ஆக இருந்தேன். வீட்டுக்கும் phone பேசியாகி விட்டது. இனி யாரும் எந்த வித தொல்லையும் தரமாட்டார்கள். கிளாசை எடுத்து பிரமாண்ட நிலைக் கண்ணாடி இருந்த திசை நோக்கி எனக்கு நானே சியர்ஸ் செய்து, அப்படியே இடது கையால் ஹே ராம் பிளே செய்ய அழுத்தினேன். வலது கையால் கிளாசை வாய்க்கு கொண்டு சென்று ஒரு மிடங்கு அருந்தினேன்.
செல் ஒலித்தது. கடுப்பில் பார்த்தேன். யாரோ ஒரு unknown number. எடுக்கலாமா? வேண்டாமா என்று யோசித்தேன். பொதுவாக எனது பெர்சனல் நம்பர் எனது நெருங்கிய நண்பர் அல்லது உறவினர்களுக்கு மட்டும் தான் தருவேன். பிசினஸ் விசயங்களுக்கு தனி எண் உண்டு. இது எதோ விளம்பர கால்?? இருப்பினும் இந்த நேரத்தில்??
நான் யோசிக்கும் போதே கால் கட் ஆனது. நான் அதை மறந்து படம் பார்க்க முடிவு செய்தேன். சில வினாடிகளில் திரும்ப அதே எண்ணில் இருந்து அழைப்பு.
இந்த முறை எடுத்தேன். "ஹலோ" என்றேன்.
"மிஸ்டர். சுந்தரம்?" எதிர் முனையில் யாரோ ஒரு ஆண் பதட்டமாக கேட்டான். குரல் பரிச்சயம் இல்லை. யாரோ ஒரு புது நபர், குரலும் ஒரு பதட்டத்தில் இருந்தது.
"எஸ். சொல்லுங்க"
அவனுக்கு எனது குரலில் எனது வயது, அல்லது வசதி அல்லது ஒரு வித அதிகார தொனி அல்லது அவை அனைத்தும் தெரிந்தது போல.
"சார், நான் திருப்பூர் *** ஹாஸ்பிடல் ல இருந்து பேசறேன்."
"திருப்பூர்? சரி. சொல்லுங்க?"
"உங்களுக்கு அபிராமி தெரியுங்களா?"
"அபிராமி, திருப்பூர், எனக்கு திருப்பூர் ல தெரிஞ்சவங்க அதிகம் இல்லை. என்ன விசயம் சொல்லுங்க"
"சார், ஒரு சின்ன ஆக்ஸிடென்ட், அடி பட்ட பொண்ணோட செல் ல உங்க நம்பர் பார்த்து பண்றேன், இந்த பொண்ணு உங்களுக்கு தெரியும்னு நெனச்சேன். அந்த பொண்ணு மயக்கத்தில் இருக்கு. நீங்க எங்கே சார் இருக்கீங்க?"
"நான் இப்போ கோயம்புத்தூர் ல தான் இருக்கேன், ஆனா நான் சென்னை settled. இங்க திருப்பூர் ல யாரும் தெரிஞ்சவங்க அதிகம் இல்லை. நீங்க அந்த செல் ல வேற ஏதும் நம்பர் க்கு பண்ணுங்க" கட் செய்ய நினைத்தேன்.
"சார், சார், அந்த பொண்ணு ஹேன்ட் பேக் ல, அது ஐடி, போன், கொஞ்சம் சில்லறை தவிர ஏதும் இல்லை. ஐடி பார்த்து தான் பேரு அபிராமி தெரியும், போன் ல ரொம்ப கம்மியா தான் நம்பர் இருந்தது, அப்பா நம்பர், அம்மா நம்பர், அப்புறம் இன்னும் ரெண்டு மூணு பேரு நம்பர் பண்ணிப் பார்த்தேன். யாருமே எடுக்கலை சார். பிளீஸ் உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க சார்" கிட்டத்தட்ட அவன் கெஞ்சினான். எனக்கும் முன் பின் தெரியாத ஒரு நபருக்கு இவ்வளவு ரிஸ்க் எடுத்து, இவ்வளவு அக்கறையுடன் பேசும் அவன் மீது ஒரு பரிதாபம் வந்தது.
நானும் யோசித்தேன். அபிராமி என்ற பெயரில் யாரும், அதும் திருப்பூரில் நினைவில் வரவில்லை.
நான் 18, 19 வருடங்களுக்கு முன்னரே சென்னை வாசி ஆகியவன். பிசினஸ் காரணமாக இங்கே கோயம்புத்தூரில் மாதா மாதம் வருவேன். இங்கேயும் சொந்த வீடு வசதி எல்லாம் உண்டு. சொந்தமாக ஒரு இண்டஸ்ட்ரி நண்பர் இருவருடன். 30 பேருக்கு மேலே நேரடியாக பணி புரிகிறார்கள். அங்கே சென்னையிலும் வேலைகள் உண்டு. வீடுகள் உண்டு. பூர்வீக சொத்துக்கள் அதுவும் பெருந்துறை அருகே உண்டு. இரண்டு அன்பான குழந்தை. இந்த 40 வயதில் மிக திருப்தியான வாழ்க்கை. "சார், சார்" என குரல் கேட்டு திரும்ப வந்தேன்.
"உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க சார்"
"தெரியல சார், பொண்ணு என்ன வயசு இருக்கும்??"
"இருக்கும் ஒரு 20, 22. ஐடில வயசு, date of birth இருக்கா பார்க்கிறேன் சார்"
"எனக்கு திருப்பூரில் யாரும் தெரியாது. நீங்க அவங்க ஐடி பார்த்தீங்க இல்ல, அட்ரஸ் இருந்தா சொல்லுங்க"
"ஒரே நிமிசம் சார், ஊரு ஈங்கூர், அப்பா பேரு செல்வராஜ், அட்றஸ்" என சொல்லி முடிக்கும் முன்பே கேட்டேன்.
"என்னது, ஈங்கூர் செல்வராஜ் பொண்ணா??"
அதிர்ச்சியாக கேட்டேன்.
"சார், உங்களுக்கு தெரியுமா சார், அப்பாடா" என கொஞ்சம் நிம்மதியாக சொன்னான். நான் தான் திடீரென நிம்மதி இழந்து தவித்தேன்.
"சார், நான் ஒரு ஒன் அவர், ஒன்றரை அவர்ல வந்துடுவேன், நீங்க கொஞ்சம் கூட இருந்து அது வரை பாருங்க சார்," என கொஞ்சம் பதட்டமாக கேட்டேன்.
"சார், நீங்க பொறுமையா வாங்க சார், நீங்க வரவரை இருக்கேன்"
உடனே பேன்ட் மாற்றி மறக்காமல் பர்ஸ் எடுத்து கிளம்பினேன். காரில் பாடல் கூட போட தோண வில்லை.
Posts: 733
Threads: 0
Likes Received: 209 in 190 posts
Likes Given: 284
Joined: Oct 2019
Reputation:
1
•
Posts: 2,842
Threads: 1
Likes Received: 303 in 276 posts
Likes Given: 1,005
Joined: Dec 2018
Reputation:
10
•
Posts: 10,592
Threads: 1
Likes Received: 3,229 in 3,037 posts
Likes Given: 9,729
Joined: May 2019
Reputation:
22
உங்களது புதிய கதைக்கு நன்றி நன்பா
•
Posts: 10,592
Threads: 1
Likes Received: 3,229 in 3,037 posts
Likes Given: 9,729
Joined: May 2019
Reputation:
22
என்னுடைய பணிவான வேண்டுகோள் உஙகளுடைய யாசோ கதையை முடித்த பிறகு இந்த கதையை தொடரலாம் இது என்னுடைய கருத்து மட்டும் உங்கள் விருப்பம் பட நீங்கள் ஏழுதவும். நன்றி நன்பா
Posts: 1,352
Threads: 0
Likes Received: 182 in 168 posts
Likes Given: 1,348
Joined: Apr 2019
Reputation:
0
Super start bro very nice continue
•
Posts: 1,977
Threads: 0
Likes Received: 351 in 341 posts
Likes Given: 99
Joined: May 2019
Reputation:
2
•
Posts: 204
Threads: 5
Likes Received: 591 in 152 posts
Likes Given: 87
Joined: Jun 2019
Reputation:
13
Thanks for all your comments. There will be regular updates on this thread only after Yaso story completed. Until that, updates may be in every 2 or 3 days once..
Thanks again
Posts: 10,592
Threads: 1
Likes Received: 3,229 in 3,037 posts
Likes Given: 9,729
Joined: May 2019
Reputation:
22
(08-06-2020, 10:15 AM)nathan19 Wrote: Thanks for all your comments. There will be regular updates on this thread only after Yaso story completed. Until that, updates may be in every 2 or 3 days once..
Thanks again
Thanks brother
Posts: 204
Threads: 5
Likes Received: 591 in 152 posts
Likes Given: 87
Joined: Jun 2019
Reputation:
13
2
காரில் போகையில் தான் யோசித்தேன், எப்படி எனக்கு அபிராமி என்ற பெயர் கேட்டதும் இவளின் நினைவே வராமல் போனது?? இவளை, ஈங்கூரை, செல்வராஜ், சுமதி என எதையுமே நான் நினைத்தே வெகு நாட்கள் ஆனது.
அபிராமி, இவளுக்கு இந்த பெயரை வைத்ததே நான் தான். என்னை விட 16 வருடம் இளையவள், எனது சொந்த ஊர், என் வீட்டுக்கு மூன்று வீடு தள்ளி இவள் அம்மா சுமதி வீடு, அவள் என்னை விட ஒரு மூன்று வயது பெரியவள். எதோ ஒரு தூரத்து உறவு வகையில் அக்கா, என்ன கொடுமை எனில் சுமதி கணவர் செல்வராஜ் அவரும் எனக்கு தூரத்து சொந்தம், அண்ணன் முறை. ஆனால் அவர்களுக்குள் திருமணம் செய்யும் உறவு முறை இருந்தது. கொடுமை.
இன்னும் உண்மையாக சொன்னால் சுமதி தான் நான் சைட் அடித்த முதல் பெண். சிறு வயதில் அவளோடு தான் வளர்ந்தேன். நான் பத்து முடித்து டிப்ளமோ சேரும் விடுமுறை சமயத்தில் அவளுக்கு திருமணம், இரண்டு பெண்கள், மூத்தவள் இவள், அங்காள பரமேஸ்வரி என பெயர் வைக்க, பள்ளி சேர்க்கையின் போது நானும் உடன் இருந்த சமயம், பள்ளிக்கு அபிராமி ஆனது. குணா வெளியானதன் அடுத்த வருடம், குணா பார்த்த நினைவில், அ வரிசையில் அபிராமி தவிர வேறு பெயர் தோண வில்லை.
சுமதி அக்காவும் சரி, செல்வராஜ் அண்ணாவும் சரி, நான் அவர்களை அக்கா, அண்ணன் முறை வைத்து தான் அழைத்தேன், மாற்ற வில்லை. என் மீது நிரம்ப மரியாதை, அன்பும் கூட கொண்டவர்கள். என் ஊரின் முதல் படித்த, பார்ட் டைம் என்றாலும் முதல் பொறியியல் பட்டதாரி ஆன, நல்ல பணியில் இருந்த, பின் சுய தொழில் தொடங்கி பெரும் செல்வாக்கோடு, சென்னை, கோவையில் வீடுகள், நிறுவனங்கள் என இருந்தவன், அதனாலேயே ஊரில் மூத்தவர்கள் கூட மரியாதை கொடுப்பார்கள், கருத்து கேட்பார்கள். அது எல்லாம் இப்போது தேவை இல்லாதது. நான் எப்படி அபிராமி என்ற பெயர் கூட மறந்தேன்??
வேறு ஊர் திருப்பூர் சரி, ஒரு சின்ன சந்தேகம் கூட தோண வில்லையே, அவளை கடைசியாக பார்த்து ஒரு இரண்டு வருடம் இருக்குமா?? பார்த்த சமயம் ஒரு இரண்டு நாட்கள் அடிக்கடி எண்ணி எண்ணி வருந்தினேன். அதன் பின்னர் சுத்தமாக மறந்தே போனேன். அதன் பின்னர் ஒரே தரம் தான் ஊருக்கு போனது. ஊருக்கும் கடைசியாக போய் ஒன்றரை வருடம் இருக்கலாம்.
அந்த கடைசி சந்திப்பு நினைவில் வந்தது. இதே போல அன்றும் கோவையில் இருந்தேன், ஒரு வெள்ளிக் கிழமை, கோவை வந்து வேலைகள் முடிந்து அன்று மாலை காரில் சென்னை திரும்ப வேண்டும். கம்பனியில் இருந்தேன். காலை சுமார் 11 இருக்கும், செல்வராஜ் அண்ணன் பண்ணி இருந்தார்.
"சுந்தரு, நான் செல்வராஜ் பேசுறேண்"
"சொல்லுங்க அண்ணா"
"தம்பி, ஒரு உதவி" குரலில் ஒரு நடுக்கம் இருந்தது.
"சொல்லுங்க அண்ணா"
"நம்ம சிட்டுவ காலைல இருந்து காணோம், என்ன பண்றது ஒன்னும் புரியல, ஒன் ப்ரெண்ட் பெருந்துறை ல போலீஸ்ல இருக்காப்புடில, அவர் கிட்ட கொஞ்சம்" சிட்டு என்பது தான் அபிராமி அவளின் வீட்டு செல்லப் பெயர்.
நான் இடைமறித்தேன்.
" என்ன அண்ணே, சொல்றீங்க? என்ன ஆச்சு??" பதறி கேட்டேன்.
"காலைல இருந்தே கானோம்பா, எல்லா இடமும் தேடிட்டோம்" அழுதார்.
"என்னன்னே, எப்படி, அண்ணே நான் என் ப்ரெண்ட் கிட்ட உடனே பேசுரேன், நானும் உடனே கிளம்பி வர்றேன், கோயம்புத்தூர் தான் இருக்கேன், சீக்கிரம் வரேன், எப்படிண்ணே ஏதும் பிரச்சினை யா, ஏதும் திட்டினீங்களா ?"
அவர் கொஞ்சம் தயங்கி "ஓடிப் போயிட்டா போல தோணுது அப்பா" என்றார்.
"சீ என்னன்னே, அவ சின்ன பொண்ணு அண்ணே, 19 இல்ல 20 இருக்குமா ? என்ன அண்ணே"
"தெரியல அப்பா, நைட்டு சுமதி கூட தான் படுத்து இருந்தாள், காலைல இவ வாசல் கூட்டும் போதே காணல, என்னை எழுப்பி 6 மணிக்கே சொன்னாள், பதறிப் போய் ஊரு முழுக்க தேடி, அவ ப்ரெண்ட், தெரிஞ்சவங்க எல்லாம் பார்த்திட்டு தான் உனக்கு இப்போ பண்றேன்" மீண்டும் உடைந்து போய் அழுதார்.
சுமதி போனை வாங்கி பேசினாள்.
"சுந்தர், நம்ம வீட்ல முன்ன தறி ஓட்டுனாங்க நா*** பசங்க, எனக்கு என்னமோ அதுல ஒருத்தன் மேல தான் சந்தேகமா இருக்கு, உன் ப்ரெண்ட் மூலமா கொஞ்சம் அவன் வீட்டு ஆளுங்களை மிரட்டி விசாரிச்சா தெரியும்" அவள் கணவனை விட கொஞ்சம் தைரியமாக பேசினாள்.
"அக்கா, நான் நேரிலேயே வரேன், நீ கவலைப் படாதே, அவன் கிட்ட பேசுரன், நீங்க ரெண்டு பேரும் நேர்ல ஸ்டேஷன் வாங்க, ஒன்னும் இல்ல, நாம பார்த்துக்கலாம்"
உடனேயே என் நண்பன் அவனுக்கு தகவல் சொன்னேன். இன்னும் சில பல நண்பர்கள் மூலம் நிறைய பேருடன் தொடர்பு கொண்டு, அந்த பையனின் ஊர்க் கார பசங்களிடம் பேச காதல் தகவல் உண்மை என தெரிந்தது.
நான் பெருந்துறை வரும் முன்னேயே எனக்கு தெளிவாக சிட்டு ஓடிப் போய் விட்டாள் என்பது புரிந்தது. அந்த பசங்களுக்கு எங்கே சென்றார்கள் என்பது பற்றி எதுவும் தெரிய வில்லை, சென்னிமலை தான் முதல் சாய்ஸ், இங்கு ரிஸ்க் என விட்டால் பழனி??
இரண்டு பக்கமும் கால், நண்பர்கள், பழனிக்கு போலீஸ் மூலம் விசாரிக்க விரைவில் அவர்கள் பழனியில் இருப்பதும் காலை ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது என்று தெரிய வந்தது.
ஒரு வழியாக அவளையும், பையன், உடன் சென்ற நண்பர்கள் என எல்லாரையும் பெருந்துறை கொண்டு வர மாலை ஆனது.
Posts: 204
Threads: 5
Likes Received: 591 in 152 posts
Likes Given: 87
Joined: Jun 2019
Reputation:
13
3
நான் வந்ததில் இருந்தே செல்வராஜ், சுமதி மற்றும் கூட இருந்த ஊர் உறவினர்கள் அவர்கள் பேச்சில் ஒரு கலவரம் ஏற்படும் சூழல் உணர்ந்தேன். சுமதியும் சரி, உடன் இருந்த இரு பெண் உறவினர்களும் மிக உக்கிரமாக இருந்தார்கள், பெண் ஓடிப் போனதும், வேறு ஜாதியும், அவர்களை முற்றிலும் நான் அறியா நபர்களாய் மாற்றிக் காட்டியது.
நான் சிறு வயது முதல் பார்த்த சுமதியா இது என்று தோணியது. எனக்கென்னவோ போலீஸ் ஸ்டேஷன் என்று கூட பார்க்காமல் அடிதடி ஏதும் நடக்குமோ என்று தோணியது, அதே தான் என் நண்பனுக்கு கூட. நான்கு மணி வாக்கில் அவர்கள் பழனியில் இருந்து அழைத்து வரப் பட்டு கொண்டு இருந்தபோது என்னிடம் தனியாக சொன்னான், "சுந்தர், உங்க ஆளுங்க பேசுறது, கும்பலா இருக்கறது கொஞ்சம் சரியா படலை, பொண்ணு வந்ததும் எதும் தகராறு ஆகப் போவுது, அப்புறம் எல்லாருக்கும் பிரச்சினை"
"புரியுது, நான் அவங்க கிட்ட பேசுறேன்"
செல்வராஜ் இடம் பக்குவமாக சொல்லி மொத்தம் 20 பேருக்கு மேலே இருந்த கும்பலை கலைத்து அனுப்பினோம். மொத்தம் ஆறு பேர் மட்டுமே இருந்தோம் என்னை சேர்த்து.
ஆறு, ஆறரை மணிக்கு அவர்கள் வந்தார்கள். சிட்டு இவர்கள் பக்கமே பார்க்க வில்லை, தான் அவனை விரும்புவதாக, அவனை திருமணம் செய்து கொண்டதாக, தான் அவனோடு தான் வாழ விரும்புவதாக, போலீஸ் தான் தங்களை எந்த வித தொல்லையும் இல்லாமல் காக்க வேண்டும் என்று அவள் சொன்னாள்.
அவள் அவளின் பெற்றோரிடம் பேசவே மறுத்தாள். இரு தரப்பு உடன் இருந்த நபர்களின் பேச்சுக்கள் கொஞ்சம் தடிக்க ஆரம்பித்தது, போலீஸ் அவளையும், அவள் காதலனையும் உள்ளே அறையில் அமர வைத்தனர்.
"பொண்ணு ரொம்ப ஸ்ட்ராங் ஆக இருக்கா, கல்யாணமும் ஆச்சு, சோ வேற வழி இல்ல, விட்டுடுங்க" எங்களிடம் என் நண்பன் சொன்னான்.
"ஓடுகாலி முண்ட, இப்படி மானத்த வாங்கிட்டாளே" சுமதி இன்னும் ஆபாசமாக கோபமாக திட்டினாள்.
"என்ன பண்ண இனி, ஆனது ஆச்சு, நாம தான் பெரியவங்களா மன்னிச்சு ஏத்துக்கணும்" என்றேன் அவளிடம். செல்வராஜ் அப்படியே எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க சுமதி தான் மீண்டும் கத்தினாள்.
"அந்த நார முண்டைய நாம மன்னிக்கணுமா, வந்தவ நம்மள பார்க்க கூட இல்லை, அவளுக்கு நாம ஒரு பொருட்டா இருந்தா வந்து பேசி இருக்க மாட்டா?? தப்பு பண்ணிட்டேன், மன்னிச்சி டுங்க அப்படி காலில விழுந்து இருக்க மாட்டா??"
"சரி, இப்போ அவங்க வந்து கால்ல விழுந்தா ஆசிர்வாதம் பண்ண, மன்னிக்க ரெடி யா சொல்லு?"
அவள் எதுவும் பேசாமல் இருந்தாள். நான் உள்ளே அவர்களைப் பார்க்க சென்றேன்.
ஆச்சர்யமாக என்னைப் பார்த்த உடன் புன்னகைத்து எழுந்தாள்.
"வாங்க, எப்போ வந்தீங்க?" என எதோ வீட்டுக்கு வந்த விருந்தாளியை போல விசாரித்தாள். எனக்கும் ஆச்சர்யம். கொஞ்ச நேரம் முன்பு அப்பா அம்மா, உறவினர்களை நிமிர்ந்து கூட பார்க்காமல் ஸ்டேஷன் உள்ளே வந்த, தன் அப்பா அம்மா வேண்டாம், காதல் கணவன் தான் வேண்டும் என்று சத்தமாக சொன்னவள் இவள் தானா என்று தோணியது.
"நான் மதியமே இங்க வந்துட்டேன்" லேசாக சிரித்தேன்.
"நான் உள்ள வரப்ப கவனிக்கலை உங்களை, சாரி, என்னால எல்லாருக்கும் கஷ்டம், உங்களுக்கு கூட"
"சரி, விடு, என்னம்மா இதுலாம்" என்றேன்.
அவள் என் கேள்வியில் லேசாக கண் கலங்கினாள், பின் எதுவும் பேசாமல் பக்கத்தில் எங்களை அலட்சியமாக பார்ப்பது போல ஆனால் பார்த்த படி இருந்த அவனை எழும்ப செய்து
"இவர் தான் எங்க மாமா, சென்னைல இருக்காரு, சொந்தமா இண்டஸ்ட்ரி வச்சு இருக்காரு, நான் சொல்லி இருக்கேனே உன் கிட்ட" என்றாள்.
அவனுக்கு அது ஞாபகம் இல்லை போல, என்னிடம் ஒரு செயற்கை சிரிப்பை காட்ட, நானும் அதே செய்தேன். அவன் என்னிடம் எதுவும் பேச வில்லை, நானும்.
நான் சிட்டுவைப் பார்த்து ஏதும் பேச வாய் திறக்கும் முன்னே அவள் என்னிடம்
"நீங்களும் ஏதும் அப்பா அம்மா மாதிரி பேசிடாதீங்க, பிளீஸ்" என்றாள். அவள் என்னை எப்போதும் மாமா என நேரில் அழைத்தது இல்லை.
"இல்லம்மா, சரி கல்யாணம் ஆச்சு, வேற என்ன பிளான் வச்சு இருக்கீங்க? ஐ மீன் நீங்க கொஞ்ச நாள் ஊரு பக்கம் போக முடியாது, எங்க தங்க போறீங்க, வேலை அப்படி கேக்குறேன்"
அவன் வேகமாக குறுக்கிட்டான்.
"சார், அது எல்லாம் நாங்க பார்த்துக்கரோம், நீங்க கவலைப் படாதீங்க" அவனின் பேசும் தொனி எனக்குப் பிடிக்கவில்லை.
சிட்டு குறுக்கே அவனைத் தடுத்து "ஏய், கம்முனு இரு, என்று என்னிடம் "இல்லை, இவரு ப்ரெண்ட் கொஞ்ச பேரு இருக்காங்க, தங்க வீடு எல்லாம் பார்த்தாச்சு, வேலையும் ஏற்பாடு பண்ணி ட்டாங்க, ஏதும் பிரச்சினை இல்லை" என லேசாக சிரித்தாள்.
அவள் என்னை மதித்து பதில் சொன்ன போதும், எங்கே வீடு, வேலை என எதுவும் சொல்லாமல் தவிர்த்த நாசுக்கு எனக்கு புரிந்தது. நானும் எதுவும் கேட்டு சங்கடப் பட, படுத்த விரும்ப வில்லை. இனி பேச, கேட்க ஏதும் இல்லை.
"நான் வரெண்மா, பார்க்கலாம்" சொல்லி நகர்ந்தேன்.
"கொஞ்ச நாள் ஊருப் பக்கம் போக வேணாம், எல்லாருக்கும் அது தான் நல்லது" என்று திரும்பி சொன்னேன்..
அவன் என்னிடம் எதோ கோபமாக சொல்ல முயற்சிக்க அவள் அவனை அடக்கினாள்.
"சரிங்க, நீங்க அவங்களை கொஞ்சம் ஆறுதல் சொல்லி வீட்டுக்கு அனுப்புங்க, அப்பாவை சாப்பிட வைச்சு அனுப்புங்க பிளீஸ்" என்றாள் அவள் அப்பா அம்மா பற்றி.
அவளையே ஒரு சில நொடிகள் வெறித்துப் பார்த்தேன், ஏதும் பேசாமல் தலையை அசைத்து திரும்பினேன்.
மிகுந்த கனத்துடன் தான் அன்று கிளம்பினேன், அதன் பின்னர் அடுத்த சில வாரங்களில் ஊருக்கு போன் செய்து பேசிய போது அவர்கள் ஈரோட்டில் நண்பர் வீட்டில் இருப்பதாக, பெங்களூர் சென்றதாக, ஊருக்கு கூட ஒரு முறை வந்து போனதாக ஒவ்வொரு விதமாக தகவல்கள் சொன்னார்கள். உண்மையா பொய்யா என்று கூட தெரியாது.
அதன் பின்னர் அவளை இந்த இரு வருடங்கள், பார்க்கவும் இல்லை, பேசவும் இல்லை, எதுவும் கேள்வி படவும் இல்லை. மறந்தே போய் இருந்தேன்.
திருப்பூரை அடைந்தேன், ஹாஸ்பிடல் நோக்கி காரை செலுத்தினேன்.
Posts: 1,352
Threads: 0
Likes Received: 182 in 168 posts
Likes Given: 1,348
Joined: Apr 2019
Reputation:
0
Super bro very different continue bro
•
Posts: 10,592
Threads: 1
Likes Received: 3,229 in 3,037 posts
Likes Given: 9,729
Joined: May 2019
Reputation:
22
Nice bro and waiting for your next update.
•
Posts: 279
Threads: 7
Likes Received: 206 in 121 posts
Likes Given: 25
Joined: May 2019
Reputation:
3
15-06-2020, 11:47 AM
(This post was last modified: 15-06-2020, 11:48 AM by Its me. Edited 1 time in total. Edited 1 time in total.)
உங்க கதைகளில் எதோ வசிய மருந்து வெச்சு இருக்கீங்க..
ஒவ்வொரு தடவையும் உங்க கதைய கொஞ்சம் கொஞ்சமா படிக்கக்கூடாது full ah முடிஞ்சதுக்கு அப்புறம் ஒரே மூச்சில் படிக்கணும்னு இருப்பேன்..
ஏன்னா உங்க கதைய கொஞ்சமா படிச்சா அந்த நாள் full ah அதே ஞாபகம் ah இருக்கு..எப்போ அப்டேட் போடுவீங்கன்னு அடிக்கடி xossipy வர வேண்டியதா இருக்கு..
ஆனா என்னமோ தெரியல உங்க பேர் போட்ட thread ah பாத்தாலே open பண்ணாம இருக்க முடியறது இல்ல..
காரணம் என்னன்னா உங்க கதைகள் எல்லாமே reality ah இருக்கு..அடுத்தது இதுதான் நடக்கும்னு நான் யூகிப்பேன்..maximum அதே தான் நடக்கும்..ஆனாலும் அது நடக்க கூடாதுனு நெனச்சுட்டு இருப்பேன்..
உங்க கதைய படிச்சா ஒரு படம் பாத்த பீலிங் வருது..அதுனாலதான் ஒரே மூச்சா full கதையையும் படிக்கணும்னு நெனப்பேன்..ஆனா முடியறது இல்ல..
anyways இப்போ xossipy இருக்கிற best authors la நீங்களும் ஒருத்தர்..வாழ்த்துக்கள்..உங்களது சேவையை எதிர்பார்த்து..
Posts: 10,592
Threads: 1
Likes Received: 3,229 in 3,037 posts
Likes Given: 9,729
Joined: May 2019
Reputation:
22
(15-06-2020, 11:47 AM)Its me Wrote: உங்க கதைகளில் எதோ வசிய மருந்து வெச்சு இருக்கீங்க..
ஒவ்வொரு தடவையும் உங்க கதைய கொஞ்சம் கொஞ்சமா படிக்கக்கூடாது full ah முடிஞ்சதுக்கு அப்புறம் ஒரே மூச்சில் படிக்கணும்னு இருப்பேன்..
ஏன்னா உங்க கதைய கொஞ்சமா படிச்சா அந்த நாள் full ah அதே ஞாபகம் ah இருக்கு..எப்போ அப்டேட் போடுவீங்கன்னு அடிக்கடி xossipy வர வேண்டியதா இருக்கு..
ஆனா என்னமோ தெரியல உங்க பேர் போட்ட thread ah பாத்தாலே open பண்ணாம இருக்க முடியறது இல்ல..
காரணம் என்னன்னா உங்க கதைகள் எல்லாமே reality ah இருக்கு..அடுத்தது இதுதான் நடக்கும்னு நான் யூகிப்பேன்..maximum அதே தான் நடக்கும்..ஆனாலும் அது நடக்க கூடாதுனு நெனச்சுட்டு இருப்பேன்..
உங்க கதைய படிச்சா ஒரு படம் பாத்த பீலிங் வருது..அதுனாலதான் ஒரே மூச்சா full கதையையும் படிக்கணும்னு நெனப்பேன்..ஆனா முடியறது இல்ல..
anyways இப்போ xossipy இருக்கிற best authors la நீங்களும் ஒருத்தர்..வாழ்த்துக்கள்..உங்களது சேவையை எதிர்பார்த்து.. Correct Brother
•
Posts: 2,842
Threads: 1
Likes Received: 303 in 276 posts
Likes Given: 1,005
Joined: Dec 2018
Reputation:
10
Nice update bro. Good flow continue
•
|