Misc. Erotica காதல் நோய்!!! - Author: Walter White - Incomplete
#1
அத்தியாயம் 1:

இடம்:
சென்னை சிட்டி


அது ஒரு அழகான காலைப் பொழுது , 4 அடுக்கு சொகுசு bungalowவின் கண்ணாடி ஜன்னலின் screenஐ திறந்து, காலை வெயிலை உள்ளே வரவிட்டான் ப்ரியேஷ்.
அருகிலேயே அவன் மனைவி சஹானா,அந்த super ultra கிங் size bedஇல் கொஞ்சம் தள்ளி படுத்து இருந்தாள்.

பணக்கார குடும்பத்தில் பிறந்தவன், இந்தியாவில் பொறியியல் படித்து முடித்து, வெளிநாட்டில் மாஸ்டர்ஸ் முடித்தான். தனது 25ஆம் வயதிலேயே தன் அப்பா, மற்றும் நண்பர்கள், வங்கியின் உதவியோடு தனக்கென்று ஒரு software companyஐ உருவாக்கினான்.

தேவைக்கும் அதிகமான அளவு பணம் இருந்தாலும், இன்னும் சம்பாதிக்க வேண்டும், மிகப்பெரிய பணக்காரன் ஆக வேண்டும் என்பதே அவனது ஒரே லட்சியம்.

சொந்தமாக இரண்டு பெரிய bungalowக்கள், மூன்று சொகுசு கார்கள். அழகான மனைவி, கூடவே மாமனாரின் சொத்து, அதுமட்டுமில்லாது, தன் companyஐ தன் மாமனார் companyஓடு merge பண்ணி விட்டு, இவனே CEO வாக பொறுப்பேற்றான்.

வெளியே வந்து, தன் வேலைக்காரன் போட்டு வைத்த teaஐ சுவைத்த படியே, தன் நாய் momoவை கூண்டில் இருந்து வெளியே வர வழைத்து, அதை பிடித்தபடி தன் garden சென்றான், அங்கே தண்ணி பாய்ச்சி கொண்டிருந்த, jet fountainஐ பார்த்தபடி, அங்கே இருந்த ஊஞ்சலில் உட்கார்ந்து momoவை மடியில் வைத்தபடி.
லேசாக ஊஞ்சல் ஆடிக்கொண்டே teaஐ பருகினான்.



இடம்:
கோயம்புத்தூரில் உள்ள கிராமம்(அத்தப்பகவுண்டன் புதூர்)


அதே அழகான காலைப் பொழுதில் தான் இருந்த ஓட்டு வீட்டின், bedroomஇல் உள்ள ஜன்னலை திறந்து, உள்ளே அதிகாலையின் வெளிச்சத்தை வரவேற்றான். அருகில் யாரும் இல்லை. தனக்கு முன்னரே தன் மனைவி மல்லிகா எழுந்து, அவன் எழுந்ததை பார்த்து, அவனுக்கு coffee போட்டு எடுத்து வந்து, அவன் பக்கம் நின்று, 

மாமா இந்தாங் coffee, என்று கூச்சபட்டு நீட்ட.
ஹ்ம்ம் என்று மட்டும் சொல்லி, அவளை கண்டுகொள்ளாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றான். 

மல்லிகா கையில் coffeeஐ வெய்தபடி அவன் போவதை பார்த்து நின்று கொண்டிருந்தாள்.

உடனே வெளிய இருந்து, ஏன் சரவணா இன்னிக்கு. School இல்லையா என்று அவன் அம்மா கேக்க, இல்லமா போகணும் என்று சொல்லி வெரசா வெளியே வந்தான்.

வெளியே வந்து, தன் வீட்டின் முன்னே வந்து நிக்க, என்னங் மாப்ள இன்னிக்கு வேலை இல்லிங்களா? என்று பக்கத்து வீட்டு கார கருப்பசாமி கேக்க, இல்ல மாம்சு, இன்னிக்கு கொஞ்சம் லேட் ஆயிடுச்சு சீக்கரம் schoolக்கு போகணும் என்றான்.
செரிங் மாப்ள சாயங்காலம் பாக்கறேன் என்று சொல்லி போனான். அவன் போகும் வரை பல்லை காட்டியவன், அவன் போன பின்பு டப் என்று சிரிப்பை நிறுத்தினான்.

வெளியே உள்ள பாத்ரூம் போய், 5 நிமிடத்தில் குளித்து முடித்து, மின்னல் வேகத்தில் schoolக்கு ரெடி ஆனான். மல்லிகா டைம் ஆச்சு, சீக்கிரம் சோறு போடு, bus வந்துர போகுது என்று கத்த,

இதோ 2 நிமிஷமுங்க மாமா, உங்க boxல போட்டுட்டு இருக்கேன் என்று அவள் சொல்ல


இவன் bedroom போய் அரக்க பறக்க neat ஆக iron செய்திருந்த, light ரோஸ் கலர் சட்டையை போட்டு, பின்னர் அதற்கு matchஆக கருப்பு pant போட்டு, costly ஆன old spice perfumeஐ போட்டு தன் roomஐ விட்டு வந்தான்.

அதற்குள் சாப்பாடு போட்டு வைத்திருந்தாள் மல்லிகா, 2 நிமிடத்தில் சாப்பிட்டு முடிக்க, bus horn அடித்தது, செரி நான் போயிட்டு வர்றேன் என்று சொல்லி விட்டு வர, தம்பி பாத்து போ என்று அவன் அப்பன் சொல்ல, எல்லாம் எங்களுக்கு தெரியும் என்று சொல்லி அவனை பார்த்து முறைத்தப்படி School bus ஏறி புறப்பட்டான், Wisdom CBSE school, அங்கே தான் அவன் இங்கிலீஷ் டீச்சராக வேலை பார்க்கிறான்.

எப்டி என்ட்ற பய்யன் ஜம்முன்னு போறான் பாரு Collectorகணக்கா என்று அவனை பத்தி அவன் அம்மாவிடம், அவன் அப்பன் பழனிச்சாமி சொல்லி பீத்திக் கொண்டிருந்தான்.

உங்களோட ஒழுங்கா பேசியே வருஷம் ஆக போகுது இதுல பெருமை வேற, போங்க அக்கட்டால, அப்பறம் சோளத் தட்டைக்கு காச வாங்கிட்டு இன்னும் தராம காட்டுக்காரன் ஏமாதிட்டு திரியறான், அத போய் பாருங்க என்று எருஞ்சு விழுந்தாள் மயிலாத்தாள்.

அடி போடி, அதெல்லாம் செரியா போய்டும், அம்முனி tea தண்ணி ஒன்னு போடு, என்று மருமகள் மல்லிகாவிடம் கேட்க, இதோ 5 நிமிஷங்க மாமா என்று சொல்லி kitchenக்குள் போனாள்.


இடம்: 
சென்னை.


ப்ரியேஷ், குளித்து முடித்து ரெடி ஆக, அவன் PA ராஜ், ரூமில் உட்கார்ந்து இருந்தார். 
ராஜுக்கு 40 வயது இருக்கும், தன் மாமனாருக்கு right hand என்பதால் அவர் personalஆக ராஐ recommend செய்தார்.

வாங்க ராஜ் இன்னிக்கு எதாச்சு முக்கியமான appointment இருக்கா, என்று தன் grey கலர் blazerன் buttonகளை போட்டபடியே கேக்க, ஆமா சார்,

இன்னிக்கு 1:00pm க்கு employer'ஸ் meeting, அப்புறம் சாயங்காலம் 6 மணிக்கு உங்க friend reception ஒன்னு attend பண்ணனும் என்று தன் phoneஐ பார்த்து சொன்னான். 
Oh அப்டியா, அப்ப ஒரு 20,000Rs க்கு நல்ல giftஆ நீங்களே வாங்கி வெச்ருங்க, அப்புறம் ஒரு 1 மணிநேரம் கெழுச்சு, சஹானாக்கு கால் பண்ணனும் remind பண்ணுங்க என்று சொல்லி, இருவரும் காரில் ஏற, ப்ரியேஷ் carஐ ஓட்ட, lightஆக மெலடி பாட்டை ஓட விட்டபடி office நோக்கி ஓட்ட ஒரு 20நிமிடத்தில்

Office வந்தடைய, அது மிகப்பெரிய office, கிட்டத்தட்ட 1000 பேருக்கு மேல் உள்ள சாப்ட்வேர் என்ஜினீயர்களால், அந்த campus நிரம்பி வழிய, blazer buttonகளை கழட்டி விட்டபடி நடக்க, எல்லாரும், மார்னிங் சார், மார்னிங் சார் என்று wish பண்ண, பதிலுக்கு எல்லோரிடமும், கையை மேலே நீட்டியபடி தலை ஆட்டிய படியே வேகமாக நடந்து உள்ளே cabinக்கு சென்றான்.

5 அடுக்கு மாடியின், கண்ணாடி ஜன்னலோர இருக்கை, அவன் ஆசைப்படும் வண்ணம் அவன் மாமனார் அமைத்து கொடுத்தது.

அவன் பார்த்து sign பண்ண வேண்டிய fileகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்க. ராஜ் கதவை தட்ட, come in ராஜ் என்று ப்ரியேஷ் சொல்ல.

அவன் busy ஆக இருப்பதை பார்த்து அமைதியாக இருந்தான் ராஜ். ஹ்ம்ம் சொல்லுங்க ராஜ், என்ன விஷயம்.
சார் 1 hour கழுச்சு remind பண்ண சொன்னீங்க, என்று சொல்ல. ஹ்ம்ம் yeah yeah thanks. என்று சொல்ல, ராஜ் வெளியே போனார்.

ஒடனே phoneஐ எடுத்து, தன் மனைவிக்கு கால் பண்ணினான். ரிங் நிற்கும் வேலையில் எடுக்க, ஹலோ சஹானா, நான் தான் பேசுறேன், என்று சொல்ல. ஹ்ம்ம் சொல்லு ப்ரியேஷ் என்று பதில் வர. இன்னிக்கு 6 மணிக்கு freeயா என்று கேக்க, ஆமாம் free தான் ஏன்? ஒண்ணுயில்ல என் friend Shaik இருக்கான்ல, அவனுக்கு இன்னிக்கு engagement என்றான். நீ freeனா சொல்லு போய் பாத்துட்டு அங்கேயே supper முடுச்சுட்டு வந்தரலாம் என்றான்.

Oh அப்படியா, அப்போ செரி நான் ரெடியா இருக்கேன், நீ வந்து என்னய pick up பண்ணிக்க என்றாள். Ok thanks என்று சொல்லி phoneஐ cut செய்தான்.

என்னடா இது ஆச்சரியமா இருக்கு, ஒடனே வரேன்னு சொல்லிட்டா என்று ஆச்சரியப்பட்டுக்கொண்டான் ப்ரியேஷ்.


இடம்:
கோயம்புத்தூர்.


Schoolஇல் 12ஆம் படிக்கும் மாணவர்ககுக்கு grammar எடுத்துக் கொண்டிருந்தான் சரவணன். அந்த schoolஇலேயே best teacher என்றால் நம்ம சரவணன் தான். 15,000ருபாய் சம்பளம், இரண்டு வருடங்களாக வேலை பார்க்கிறான் ஒரே பள்ளியில், எல்லா மாணவ மாணவியர்களுக்கும் பிடித்த ஒரே ஆசிரியர் நம்ம சரவணன் தான்.

ஒவ்வொரு பாடம் நடத்தும் போதும், அந்த பாடத்தில் நடக்கும் கேரக்டர்களாகவே மாறி பாடம் நடத்துவது அவன் style, பின்பு poem எல்லாவற்றையும் ராகத்தோடு பாடி நடத்துவான்.

இதனாலேயே அவனை எல்லோரும் ரொம்ப பிடிக்கும். அவனுக்கு என்று தனி fans உண்டு. சாயுங்கலாம் 5 மணி ஆனதும், ஐயையோ வீட்டுக்கு போகணுமே என்று வருத்தத்தோடு பஸ்சில் ஏறினான்.

அவன் சந்தோசமாக இருக்கும் ஒரேயொரு இடம் இந்த schoolஇல் இருக்கும் 8 மணிநேரம் மட்டுமே.சரவணனுக்கு அந்த ஊரையும் பிடிக்க வில்லை, அந்த ஊர் மக்களையும் பிடிக்கவில்லை.

நிறைய காடு, சொத்து என்று கிடந்தாலும், அவன் ஆசைப்பட்டது city life வாழ்க்கையை மட்டுமே.இதற்காகவே 12ஆவது தன் கிராமத்து பள்ளி கூடத்தில் முடித்து விட்டு, PSG இன்ஜினியரிங் காலேஜில் சேர வேண்டும் என்று ஆசை பட. அவன் head master. இன்ஜினியரிங்லாம் wasteடா சரவணா, 

வீணா ஏன் காச கரிஆக்குற, அழகா ஆர்ட்ஸ் காலேஜ்ல சேறு, உனக்கு தான் Englishல ரொம்ப ஆர்வம் இருக்கே, பேசாம, அழகா BA, MA அப்புறம் ஒரு பி.எட் பண்ணி டீச்சர் ஆயுடு, life ரொம்ப ஜாலியா இருக்கும் என்றார்.

அவர் சொல்வது தான் செரி என பட்டது சரவணனுக்கு. அதே போலவே PSG ஆர்ட்ஸ் காலேஜ்இல் சேர்ந்தான். அங்கே போன பின்பு தான் manners, எல்லாம் கற்றுக்கொண்டான். என்னதான் பரம்பரை காட்டானாக இருந்தாலும், அவனை பார்த்தால் அப்படி தெரியாது, தனது கிராமத்து slangஐ முதல் வேலையாக மாற்றிக் கொண்டான், தன் அப்பாவை போல முரட்டு body, அம்மாவை போல நல்ல கலர். 5'10 உயரத்தில் ஆள் அம்சமாக இருப்பான்.

எதாச்சு city பொண்ண லவ் பண்ணி கல்யாணம் பண்ணனும் என்று குறியாய் தேட, 3 வருடமும் வீணானது, ஒருத்தி கூட கிடைக்கவில்லை. அப்டியே எவளாவது கிடைத்தாலும், அவர்கள் கேரக்டர் இவனுக்கு பிடிக்க வில்லை.

இதே பெண் தேடும் படலம் MA விலும் தொடர, ஒருத்தியை ஒரு தலையாய் காதலிக்க, அவளும் கடைசியில் அண்ணா, என்று சொல்லி நெஞ்சில் இடியை இறக்கினாள்.

பிறகு பி.எட் படித்த பின்பு, நல்ல schoolஇல் டீச்சர் வேலை கிடைக்க, அப்படியே இரண்டு இடம் மாற. இந்த ஸ்கூல் தான் அவனுக்கு செட் ஆனது. 

8 மாதத்திற்கு முன்னாடி தான் திருமணம் ஆனது, பெண் தன் சொந்த தந்தையின் தங்கை மகள். மீண்டும் villageஇல் 
பெண் எடுக்க இஷ்டமில்லை, அவன் தந்தையிடம் city பெண்ணை தேட சொல்ல, அது கிடைக்காத ஒன்று என்பது அவனுக்கும் தெரிந்த விஷயம் தான், அவன் தந்தை கையை விரித்தார்.

மல்லிகாவை பார்த்த உடனே மனதுக்கு பிடித்து விட்டது, மாநிரமாக இருந்தாலும், நல்ல முக பொலிவுடன், கலையாக இருப்பாள். அவனுக்கு மேட்ச் ஆன height weight, பார்த்தால் அவளை கிராமத்து பொண் என்று சொல்ல மாட்டார்கள், ஆனால் வாயை திறந்தால் போச்சு.

மல்லிகாவின் குடும்பம், இவர்கள் குடும்பத்தை காட்டிலும் நல்ல வசதி, பொள்ளாச்சியில் கிட்டதட்ட 1000ஏக்கர் தென்னந்தோப்பு, ஒரே பெண், அதுவும் சொந்த அக்கா மகள் என்பதால். பழனிச்சாமிக்கு விட மனம் வரவில்லை, அதனால் 12ஆவது மட்டுமே படித்த பெண்ணை. பி.ஏ படித்து இருக்கிறாள் என்று பொய் சொல்லி மகனை சம்மதிக்க வைத்தார்.

சரவணனும் அப்போ இருந்த காஜுக்கு ஒத்துக் கொண்டான். City பெண் என்றால் மட்டும் என்ன, இவ அழகு இருப்பாளா, அதான் தனக்கு நிகரா படுச்சு இருக்காளே அப்புறம் என்ன என்று தன்னை தயார் படுத்திக்கொண்டான். 

ஒரே மாதத்திலேயே ஊரே மெச்சும் அளவுக்கு கோலாகலமாக திருமணம் நடந்தது, முதல் 1 மாதம் அமைதியாக, சந்தோசமாக போனது.

ஏன் மல்லிகா, பேசாம பி.எட் correspondenceல சேந்துக்க, 2 வருசத்துல அப்புறம் நீயும் என்ன மாதிரியே teacher ஆய்டுவ என்று சொல்ல. எண்ணங் மாமா சொல்றீங்க, அதுக்கு BA முடுச்சு இருக்கணும்ல, என்று அப்பாவியாக சொல்ல.

என்னமா சொல்ற நீ BA முடிக்கலையா என்று கேக்க, இல்லங்க மாமா, என்றாள். சரவணனுக்கு அதிர்ச்சியில் கோபம் வந்தது. மல்லிகா மேல் கோபத்தை காட்ட, அவள் அப்பாவியாக அவள் மேல் எந்த தப்புமில்லை என்பதை விளக்க.

அவன் தந்தை பார்த்த வேலை தான் இது என்பது புரிந்தது, அவன் அப்பாவிடம் போய் மல்லுகட்ட, நல்ல சம்பந்தம்டா எனக்கு விட மனசு இல்ல. அதுவும் வாரிசு இல்லாத சொத்து, இப்போ மட்டும் என்ன கெட்டுபோச்சு நீ அவல படிக்கவை என்று Idea கொடுக்க. அவனை இன்னும் கோபப்படுத்தியது.

அன்றிலிருந்து அவன் தந்தையிடம் பேசுவதையே நிறுத்தி விட்டான். அதன் பிறகு மல்லிகாவை பார்க்கவே வெறுப்பு வந்துவிட்டது. அவளிடமும் பேச்சை குறைத்து கொண்டான். மல்லிகாவும் அவன் மனதை புரிந்து கொண்டு அவன் மனம் நோகாமல் பாத்துக் கொண்டாள். தனக்கு வேலை செய்யும் ஒரு பெண்ணை போல நினைத்துக் கொண்டு தனது boreஇலும் boringஆன வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான்.


இடம்: 
சென்னை,


மணி 6 ஆனது, வீட்டுக்கு வர சஹானா ரெடி ஆகி, சிவப்பு கலர் பட்டு சேலையில்,லோ cut ஜாக்கெட்டில் வைர necklace போட, அதன் ஜொலிப்பு அவள் முகத்தில் அடிக்க, அவள் சேலை, ஜாக்கெட்டுக்கு மேட்ச்சாக ரத்த சிவப்பு lipstickஇல் தேவதையை போல இருந்தாள். ஒரு கணம் அவள் அழகில் மயங்கிய ப்ரியேஷ், அவனையும் மீறி, அவள் பக்கம் சென்று அவளை வளைத்து பிடித்து முத்தம் கொடுக்க எண்ண, சஹானா முகத்தை திருப்பி எதிர்ப்பு காட்ட, கூச்சப்பட்டு ப்ரியேஷ் விலகி, I'm sorry என்று excuse கேட்டு, வெளியே போனான்.

போய் காரில் உட்கார்ந்து இருந்தான். தன் சிறு வயதிலிருந்தே entrepreneur ஆக வேண்டும். என்பது தான் அவன் கனவு. தந்தை மட்டும் தான் தன் தோளுக்கு தோளாய் நின்று அவனை வளர்த்தது.

அவன் அம்மாவிடம் அவனுக்கு அப்டி ஒரு ஒட்டுதல் கிடையது, அவள் பெரிய கவிஞர், இயற்க்கை விரும்பி என்பதால், தன் வாழ்க்கையை அதற்காகவே செலவு செய்தாள், குடும்ப வாழ்க்கையில் அவ்வளவு விருப்பம் இல்லாமல் ஒரு துறவியை போல, வித விதமாக உடைகளில் ஊர் ஊராய் சுற்றுவது, அங்கேயே தங்கி கொள்வது, என இருந்தாள். அவள் மேல் மிகுந்த அன்பு வைத்திருந்ததால் தன் மனைவியை அவள் போக்கிலேயே விட்டு விட்டார்.

அவன் தந்தை தான், தாயை போல இவனை வளர்த்தது, தாய் பாசத்தை அவ்வளவாக அனுபவித்தது இல்லை.
படித்து முடித்த உடனே, தனக்கென்று ஒரு companyஐ உருவாக்கினான். Priyesh Info systems என்று ஆரம்பித்தான்.

இவன் திறமையை பார்த்த இன்னொரு rival software tycoon, தர்மா, Dharma Computers, DC என்று புகழ் பெற்று அழைக்க கூடிய நிறுவனத்தின் தலைவர்,
Voluntryயாக ப்ரியேஷ்ஐ அழைத்து தன் companyயோடு கூட்டு சேர அழைப்பு விடுக்க.

அதை மறுத்து விட்டான். இவனை விட மனமில்லாமல் இவனை விரும்பி தன் ஒரே பொண்ணுக்கு மாப்பிள்ளையாக தன் வீட்டுக்கு கூட்டிகொண்டு வந்து, முழு பொறுப்பையும் அவனிடமே கொடுத்து அழகு பார்த்தார்.

மாமனார் தங்கமான மனுஷன், பழக ரொம்ப எளிமையான மனிதர். கல்யாணம் மிக ஆடம்பரமாக நடந்தது, தன் அம்மாவும் கல்யாணத்துக்கு ஒரு விருந்தினர் போல வந்திருந்தார். ரொம்ப சந்தோசமாக இருந்தவனுக்கு அந்த சந்தோசம் கொஞ்ச நாள் கூட நீடிக்க வில்லை. கல்யாணம் முடிந்த 10ஆவது நாளிலேயே, அவன் தந்தை accidentஇல் இறந்து போக, தன் வாழ்க்கையில் ஒரு வெற்றிடம் உருவானது போல இருந்தது.

மனைவியும் அவ்வளவு ஒத்துழைக்கவில்லை. Feminism பேசும் modern பெண் என்பதால், இவன் பேச்சை மதிக்க கூட மாட்டாள். பேஷன் technology படித்ததனால் அவளே சொந்தமாக ஒரு boutique வைத்து, நடத்திக் கொண்டிருந்தாள்.

Sex வாழ்க்கையும் போக போக கசக்க ஆரம்பித்தது. வாழ்க்கையே வெறுப்பாக இருந்தது, அவன் business, அவன் மாமனார் மட்டுமே பக்க பலமாக இருந்தது. எந்தவித கெட்ட பழக்கங்களும் இல்லை. வாழ்க்கையில் ஒரு ஒட்டுதல் இல்லாமல் போய்க் கொண்டிருந்தது.

டக்!!! டக்!! என்று கார் glass ஐ தட்டும் சத்தம் கேட்க, கனவிலிருந்து எழுந்தவன் போல, door open பண்ணி விட, சஹானா போகலாமா என்று கேட்க, ஹ்ம்ம் போலாம் என்று சொல்லி, வண்டியை கெளப்பி, கார் முழுவதும் அவள் மணம் வீசியது, மனசை அடக்கிக்கொண்டு acceleratorஐ அழுத்த, 20 நிமிடத்தில், engagement நடக்கும் இடத்துக்கு, வந்தடைந்தனர்...
Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
அத்தியாயம் 2:

இடம்:
சென்னை சிட்டி

20 நிமிடத்தில், engagement நடக்கும் இடத்துக்கு, வந்தடைந்தனர்.......

(ப்ரியேஷ் narrate பண்ணுவது போல)


மின்விளக்குகளால் மின்னி கொண்டிருந்தது அந்த இடம். தேவதை மண்ணில் இறங்கி வருவது போல சஹானா வர, அவளுக்கு body guard போல நான் இரண்டு அடி தள்ளி நடந்து வந்தேன். அங்கே கூடி இருந்த அனைவரும் ஆண், பெண், பேதமின்றி என் மனைவி சஹானாவை பார்ப்பது எனக்கு பெருமையாக இருந்தது.

என்னதான் எங்களுக்குள் சுமூகமான உறவு இல்லை என்றாலும், இவளை போல ஒரு பேரழகியை மனைவி என்று மற்றவரிடம் அறிமுகம் செய்யும் போது, அவர்கள் கண்ணில் தெரியும் ஆச்சரியம், எனக்கு ஏற்படுத்தும் கர்வம், அதற்காகவே அவள் என்ன செய்தாலும் நான் கண்டு கொள்வதில்லை.

Shaik, அவன் மனைவியோடு நின்று கொண்டிருக்க, நானும் சஹானாவும் போய், ராஜ் choose பண்ணி கொடுத்த giftஐ கையில் கொடுப்பது போல ஒரு click.

முதலில் shaikஇடம் excuse கேட்டேன், சாரி மச்சான், கல்யாணத்துக்கு வர முடியல என்று, நான் உன் receptionக்கு தான் வந்தேன்னு, நீயும் அப்டியே பண்ணிட்டேல என்று கிண்டலடிக்க அட அத விடுடா என்றேன். நானும் shaikயும் Under graduate படிக்கும் போது நண்பர்கள் ஆனோம். எப்பயாவது பாத்துக் கொள்வோம், அப்படி பாத்துக் கொள்ளும் போது மணிக்கணக்கில் பேசுவோம்.

இருவருக்குமே busy வாழ்க்கை ஆதலால் கொஞ்சம் touch விட்டு போனது, இப்போது பேசியவுடன் மீண்டும் அந்த நெருக்கம் வந்தது.

அவன் மணமேடையில் நிற்கிறான், எல்லா விருந்தினர்களிடமும் ஆசி வாங்கு கிறான் என்பதை கூட மறந்து,
பழக்க தோஷத்தில், அவன் தோள் மீது கை போட்ட படி, அப்படியே அவனை நடத்தி கொஞ்சம் தூரமாக கூட்டிக் கொண்டுவந்தேன்.

அங்கே இருந்தவர்கள் எல்லோருக்கும் அதிர்ச்சி, புது பெண் தர்மசங்கடத்தில் இருந்தாள்
எனக்கு அது உண்மையாகவே தெரிய வில்லை.

அங்கே போடபட்டிருந்த chairகளில் இருவரும் அமர்ந்து, பல விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தோம். அவனும் என்னை போல engg முடித்திருந்தாலும், தன் அப்பாவின் garments businessஐ எடுத்து நடத்தினான்.

என் முகத்தை பார்த்தே ஏதோ பிரச்சனை என்பதை புரிந்து கொண்டு, என்ன மச்சான் என்று கேக்க, எனது 11 மாத திருமண வாழ்க்கையின் கசப்பான அனுபவங்களை பகிர்ந்து கொண்டேன்.
என்னடா உன் wife நல்ல அழகா இருகாங்க, நீயும் superஆ இருக்க, பேசாம adjust பண்ணி வாழலாம்லடா என்று அட்வைஸ் பண்ணினான்.

மச்சான் நீ ஈசிஆ சொல்லிட்டா, ஆனா அது ரொம்ப கஷ்டம்டா, என்னய அவளுக்கு சுத்தமா பிடிக்கலடா அதை நான் ரொம்ப நாளைக்கு முன்னாடியே தெருஞ்சுகிட்டேன், மொத ஒரு மாசம் நல்லா இருந்துச்சு, அதுக்கப்புறம் என்கிட்டே பேசுரத ரொம்பவே குறைச்சுகிட்ட, நானும் அதே போல தான். சும்மா ரெண்டு பெரும் ஒரு room mates போல இருக்கோம்.

Shaik தயங்கிப்படியே, ஒருவேளை அவங்களுக்கு எதாச்சு......, அவனை முடிக்க விடாமல் இல்லல்ல அந்த மாதிரி எதுவுமே இல்லை, நான் fullஆ விசாருச்சுட்டேன், அவ characterஏ அப்டி தான் என்றேன்.

செரி உன் மாமனார், மாமியார் லாம் எப்டி, என்று கேக்க, அவங்க தங்கம்டா, உண்மையிலேயே என்நோட அம்மா, அப்பா மாதிரி.என் மாமியார் என்கூட கூச்சப்பட்டுட்டு பேசவே மாட்டாங்க, மாமனார் ஒரு friend மாதிரி பேசுவார்.

நான் குழந்தை பெத்துக்கலாம்னு, ஒரு 6 மாசம் முன்னாடி கேட்டேன், அதுக்கு நாசூக்கா, வேணாம்னு மறுத்துட்டா, என்கிட்டே பணம், பேரு, புகழ்னு எல்லாமே இருக்கு, ஆனா எதுவுமே இல்லாத மாதிரி இருக்குடா என்று என் மனதில் ரொம்ப நாட்களாய் தேக்கி வைத்திருந்த ஆதங்கத்தை கொட்டினேன்.

அமைதியை யோசித்தவன், உனக்கு இருக்கிறது stressடா அதனால தான் இப்டி எல்லாம் உனக்கு feel ஆவுது, எனக்கெல்லாம் stress ஆச்சுன்னா ஒரு cigarette பத்த வெப்பேன், பாவம் உனக்கு அந்த பழக்கமும் இல்ல.

செரி நான் ஒன்னு சொல்றேன், மறுக்காம கேளு என்று அவன் சொல்ல, செரி serious ஆக ஏதோ தீர்வு சொல்ல போகிறான் என்று, பக்கம் வர. பேசாம ஒரு 2 வாரம் வேலைக்கு போகாத, போகாம? என்று அவன் சொல்வதை தடுத்து கேக்க, மச்சான், சொல்றத கேளுடா,

எங்க garments Coimbatoreல தான் இருக்கு, நான் நாளைக்கி காலையிலேயே அங்கே போகப்போறேன், பேசாம அங்க வந்திரு என்றான். என்னடா சொல்ற அப்போ honeymoon? என்று கேக்க, அதுவும் அங்க தான் ஊட்டிக்கு போக பிளான்,

பேசாம நீ எங்ககூடயே வந்திரு, என்றான். என்னடா ஒளர்ற தனியா உங்க கூட ஹனிமூனுக்கு வந்து நான் என்னடா பண்றது என்றேன், அடச்ச நீ னா, நீ மட்டும் இல்ல, உன் பொண்டாட்டியையும் சேத்தி தான் சொன்னேன் என்றான்.

அட போடா நீ வேற, நான் சொன்ன ஒடனே, அப்டியே அவ கேட்டுட்டாலும். என்று நான் விரக்தியாக சொல்ல, மச்சான் நான் சொல்றத கேளுடா, இந்த மாதிரி அமைதியான சூழ்நிலைல தான் அன்பு வளரும் என்றான்.

அது மட்டுமில்லாம Coimbatore நம்ம Chennai மாதிரி இருக்காதுடா, அது ரொம்ப நல்லா இருக்கும், வெயிலும் கம்மி, என்ன சொல்ற, நாளிக்கு சாயங்காளத்துக்குள்ள முடிவ சொல்லு என்று சொல்ல, ச்ச ச்ச chanceஏ இல்லடா என்று நான் நிராகரிக்க, செரிடா இரு என்று சொல்லிவிட்டு மீன்டும் அவன் மனைவி கூட நின்று வந்தவர்களிடம் photoவுக்கு pose கொடுத்துக் கொண்டிருந்தான்.

ஆனால் அவன் சொன்ன ஒருவிஷயம் எனக்கு பிடித்திருந்தது, பேசாம கொஞ்ச நாள் வேற ஊரில் இருந்தால், மனசுக்கு நல்லா இருக்கும் என்று எனக்கு தோன்றியது, உடனே ராஜ்க்கு phone போட, சொல்லுங்க சார் என்று கேக்க.

ராஜ் urgent workஆ நான் நாளைக்கு காலைல ஒரு 9 மணிக்கு Coimbatore போகணும், எனக்கு மட்டும் ஒரு டிக்கெட் book பண்ணிடுங்க என்றேன். Ok சார் நான் இப்போவே பண்ணிர்ரேன், நாளிக்கு நானே உங்கள pickup பண்ணிக்கிறேன் என்றார்.

ஓகே ராஜ், சூப்பர் தேங்க்ஸ், goodnight என்று சொல்லி phone cut செய்தேன், நாளை புது ஊர், போக போகிறோம் என்று தெரிந்தவுடனேயே எனக்குள் என்னை அறியாமல் உள்ளுக்குள் ஒரு சந்தோசம் வந்து குடி கொண்டது.
இவ்வளவு நேரம் இறுக்கமாக இருந்த என் மனம் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனதை போல உணர்தேன்.

சந்தோஷத்தில் பிரியாணியை ஒரு வெட்டு வெட்டினேன், போகும் போது shaikஐ கட்டு பிடித்து தூக்கி, ஒரு சுத்து சுத்த, எல்லாரும் சிரித்தனர், சஹானாவும் சிரித்தாள். மெதுவாக அவன் காதில் thanks மச்சான் என்று சொல்லி, அப்படியே அவன் கன்னத்தில் ஒரு முத்தமிட்டு அந்த இடத்தை விட்டு கிளம்பினோம்.

காரில் பாட்டை கூட அமித்தி விட்டுவிட்டு, எனக்கு பிடித்த பழைய MS விஸ்வநாதன் பாட்டு ஒன்றை ஹம் செய்து கொண்டு காரை ஓட்ட, சஹானா என்னை ஒரு மாதிரியாக பார்த்தாள், என்னாச்சு ப்ரியேஷ் என்று கேட்பது போல இருந்தது அவள் பார்வை.

ஒருகாலத்தில என் best friend அவன், அதத்தான் பழசெல்லாம் பேசிட்டு இருந்தோம் என்று நான் சொல்ல, ஓஹோ என்று அவள் cell phoneஐ நோண்ட ஆரம்பித்தாள். வீட்டுக்கு வந்ததும், படுத்த ஒடனே நிம்மதியாக தூக்கம் வந்தது, காலையில் செரியாக 7:00மணிக்கு ராஜ் கூப்பிட்டார்.

சார், 9 'ஓ கிளாக் flight இல்ல, அதனால 8 ' ஓ கிளாக் புக் பண்ணிட்டேன், இன்னும் 20 நிமிஷத்துல அங்க வந்திருவேன் அதுக்குள்ள ரெடி ஆயிடுங்க என்றார். ஓஹோ ஓகேஓகே ராஜ் என்று சொல்லி, படபட என்று பம்பரமாக ரெடி ஆனேன்,

எனக்கு இரண்டு வாரத்திற்க்கு, தேவையான dress எல்லாம் எடுத்து வைத்தபின் பார்த்தால், bag ரொம்ப weight ஆக இருந்தது, அடச்ச இதைய எதுக்கு சுமக்கணும், பேசாம எல்லாமே புதுசா வாங்கிக்கலாம் என்று முடிவெடுத்து, வெறும் போட்டிருந்த, ஒரு டி ஷர்ட், ஓரு ஜீன், debit card, purse மட்டும் எடுத்துக்கொண்டு கீழே போனேன்,

சஹானாவிடம் சொல்லலாம் என்று பார்த்தால் அவள் அசந்து தூங்கிக் கொண்டு இருந்தாள், செரி எப்பவும் போல phone பண்ணி சொல்லிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து கீழே போனேன்.

கீழே ரெடி ஆக கைக்கடிகாரத்தை பார்த்தபடி ராஜ் இருக்க, நான் வந்ததும் என்னை ஆச்சரியத்தோடு பார்த்தார். என்ன ராஜ் பாக்றீங்க, எப்டி இருக்கு என் change over என்று அவரை கேக்க, அவர் சிரித்தபடியே superஆ இருக்கு சார். இத்தனை நாளா உங்கள blazersலயே பாத்து பழகுனநாள இது வித்தியாசமா இருக்கு, ஒரு 5 வயசு கொரஞ்சிடுச்சு, காலேஜ் பய்யன் மாதிரி இருக்கீங்க என்று புகழ்ந்து தள்ளிட்டார்.

நான் சிரித்தபடியே, thanks thanks, என்று சொல்லி, செரி கெளம்பலமா என்று சொல்ல, தாராளமா ஏற்கனவே கொஞ்சம் டைம் ஆச்சு என்றார்.

கால் டாக்ஸியிலேயே ஏறிக் கொண்டோம், அப்புறம் ராஜ் நான் கொஞ்சம் personal வேலையா ஒரு 2 வாரம் அங்க இருக்க போறேன், phone கூட switch off பண்ணிட போறேன், என் மாமனார், சஹானா, அப்பறம் companyல இருந்து யாரு கூப்பிட்டாலும் சமாலுச்சிடுங்க என்று சொன்னேன்,

அவரும் யோசித்தபடியே ஓகே சார் ஓகே சார், என்று சொல்ல.மீண்டும் நான் ஏதாவது சொல்ல போகிறேன் என்று எதிர் பார்க்க, நான் எதுவும் சொல்லவில்லை.

கால் டாக்ஸிகாரன் அவசரம் புரிந்து Matrix படத்தில் வருவது போல செம speed ஆக ஒட்டி கொண்டிருந்தான்.
ஒருவழியாக செக் இன் முடிந்து flightஇல் ஏறி அமர்ந்து கொண்டேன். 57 நிமிடத்தில், Coimbatoreஐ அடைந்து விடலாம் என்று சொல்ல பட்டது.

அப்படியே நிம்மதி பெருமூச்சு விட்டு கொஞ்சம் சாய்ந்து உட்கார்ந்தேன், லேசாக கண்ணசர, Coimbatoreஏ வந்து.விட்டது, ஜன்னலை ஆர்வமாக எட்டிப் பார்த்தேன், எனக்கு எந்த மாற்றமும் தெரியவில்லை அப்படியே சென்னை போலவே தான் இருந்தது.

இறங்கி வந்ததும், காலை நேர வெயில் என் முகத்தில் அடிக்க, செரிதான் சென்னை அளவு வெயில் இல்லை என்பது புரிந்தது.

ஒரு 100 அடி வந்ததும், Call டாக்ஸி ஒன்றில், ஏற இங்க எதாச்சு 5 ஸ்டார் இல்ல 3 ஸ்டார் hotel இருந்தா கூட்டிட்டு போங்க என்று சொல்ல, ரொம்ப பக்கம் தான் சார். 5 ஸ்டார் hotelஏ இருக்கு Le Meridian, நீலம்பூர்ல தான் இருக்கு ஒரு 4 kilometre தான் என்றார்.

Perfect போலாம் என்றேன், அவர் பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டேன், என்னங்க சார் luggage லாம் கொண்டு வரலையா, என்று கேக்க, இல்லங்க, எதுவும் கொண்டு வரல என்றேன்.

ஒரு 500 அடி இருக்கும், SITRA வின் 4 corner signalஇல் நிற்க, எங்களுக்கு எதிரே ஒரு மஞ்ச கலர் paint அடுத்திருந்த ஒரு பள்ளி வாகனம் signalல் நின்று கொண்டிருந்தது.

அது அப்படியே மெதுவாக move ஆக, ஒரு split second இல் அப்படியே அச்சு அசலாக என்னை போலவே ஒரு உருவம் ஜன்னலோரம் உட்கார்ந்திருத்து, வெயில் அடித்ததால் என்னால் முகத்தை செரியாக பார்க்க முடியவில்லை, ஆனால் என்னை போலவே இருந்தான் என்பது மட்டும் எனக்கு தெளிவாக பட்டது.

உடனே என் driverஇடம், ஏங்க....ஏங்க....ஏங்க வண்டிய திருப்புங்க... திருப்புங்க,, அந்த school busஐ follow பண்ணுங்க என்று கத்த, அவர் நான் போட்ட சத்தத்தில் பதறி sir signal சார் என்றார். Pls follow பண்ணுங்க எதாச்சு பிரச்னை வந்தா நான் பாத்துக்கறேன் என்று சொல்ல,

அவரும் என் அவசரத்தை புரிந்து கொண்டு, உடனடியாக wrong way இல் வண்டியை திருப்ப, அங்கே இருந்தவர்கள் சத்தம் போட, நாங்கள் கண்டு கொள்ளவில்லை, எப்படியும் எங்களுக்கும் அந்த busக்கும் இடைவெளியில் ஒரு 7 வாகனங்கள் இருக்கும்.

நான் ஆர்வக்கோலாரில் seat நுனியில் உட்கார்ந்து இருந்தேன், driver லாவகமாக ஓட்டினார். ஒரு 6 kms வந்துவிட வண்டி பீளமேட்டையும் தாண்டி, ஒரு left எடுத்து உள்ளே போனது, அங்கே போனதும் தான் தெரிந்தது, Wisdom CBSE school என்று ஒரு arch இருக்க bus அதற்குள் நுழைய நாங்களும் bus கூடவே உள்ளே போனோம்.

Bus நிற்க ஒரு 30அடி இடைவெளியில் எங்கள் கால் டாக்ஸியை நிறுத்த சொன்னேன். Bus இன் பின் கதவு திறக்கப்பட, நான் என் கார் கதவை திறந்து வெளியே வந்தேன், ஒவ்வொரு மாணவராக இறங்கினர். எனது இதய துடிப்பு கொஞ்சம் அதிகரித்தது, ஒரு 10 மாணவர்கள் இறங்கிய பிறகு, tip top உடையணிந்து, ஒரு உருவம் இறங்கி கீழே நின்றது, அப்படியே என்னுடைய photo copy போல,

என்னை அறியாமல், what the fuck!!! என்று கத்த, என்னுடன் சேர்ந்து driverஉம் பார்த்தார். அப்படியே என்னுடைய முகம், என்னுடய கலர், என்னுடைய உயரம், என்னுடைய body, ஒரு கணம் என்னால் நம்பவே முடியவில்லை.

நான் இதெல்லாம் பொய், எனக்கு மட்டுமே அப்டி தோன்றுகிறது என்று என்னை convince செய்ய ஆரம்பிப்பதற்குள், யார் சார் அது உங்க twin brotherஆ என்று driver கேக்க, அப்பொழுதான் எனக்கு விளங்கியது இது கனவல்ல, நான் பார்ப்பது உண்மை என்னை போலவே அச்சுஅசலாக ஒருத்தன் இருக்கிறான்.

Sir sir என்று டாக்ஸி டிரைவர் கூப்பிட, நான் சுயநினைவுக்கு வந்து, என்ன கேடீங்க? உங்க twin brotherஆன்னு கேட்டேன் சார் என்றார்.

Yes yes என் twin brother தான், பாத்து ரொம்ப நாள் ஆச்சு அப்டின்னு சமாலுச்சேன். பிறகு என்னை போலவே இருப்பவன் போக, அவனை பிடிக்க வேகமாக இரண்டு அடி எடுத்து வெக்க, சட்டென்ரு என்னை ஏதோ தடுத்தது போல நின்று மீண்டும் கால் டாக்ஸியை நோக்கி வந்தேன்.

அங்கே நடந்து வந்து கொண்டிருந்த இரண்டு சின்ன பசங்கள், Good morning sir என்று என்னை பார்த்து wish பண்ண, நானும் தலையை ஆட்டினேன்.

Driver நீங்க சொன்ன hotelக்கு விடுங்க போகலாம் என்று சொல்ல, ஓகே சார் உக்காருங்க போகலாம் என்றார். மீண்டும் அந்த schoolஇன் பெயரை ஒருமுறை பார்த்துக்கொண்டேன்.

காரில் ஏறியும் கூட, எனக்கு ரொம்ப குழப்பமாகவே இருந்தது, யாரவன், என்னை போலவே இருக்கிறானே, ஒருவேளை எனக்கும் அவனுக்கும் எதாச்சு சம்பந்தம் இருக்குமா என்றெல்லாம் யோசித்தபடி இருந்தேன்.

ஹோட்டல் வந்தது, நான் எதிர்பார்த்ததை போலவே மிக பிரம்மாண்டமான ஹோட்டல் தான். இறங்கியவுடன் எவ்வளவுங்க என்று கேக்க 340rs சார் என்றார்.

Purseஐ திறந்து, 500 ருபாய் note ஒன்றை எடுத்து நீட்ட, அதை வாங்கிக்கொண்டு சில்லறை தேட, இல்லல keep it yourself என்று சொன்னேன். அவர் சிரித்தபடியே thank you sir, Have a nice day என்றார்.

அப்புறம் visiting கார்டு ஒன்றை நீட்டி, சார் நான் பக்கத்துல தான் இருப்பென், எங்கையாச்சும் போகணும்னா கூப்பிடுங்க, 5 ஏ நிமிஷத்துல வந்திருவேன் என்றார்.
நானும் சிரித்தபடியே கண்டிப்பா கூப்பட்றேங்க என்றேன்.

முதல் வேலையாக room ஒன்றை புக் பண்ணி, உள்ளே போய் செட்டில் ஆகி, என்னுடைய laptopஐ எடுத்து, googleஇல் wisdom school, Coimbatore என்று அடிக்க, அந்த school ன் வெப்சைட் வந்தது, எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது.

அதில் faculties என்று இருந்த இன்றை click செய்ய அந்த school லில் வேலை செய்யும் அனைவரின், பெயரோடு, photoவுடன் இருந்தது.

என்னை போலவே இருப்பவன் யார் என்று தேட, கண்டுபிடித்தேன் அவனை. English Teacher, பெயர் சரவணகுமார். அப்படியே என்னுடைய photo போலவே இருந்தது.

பிறகு அங்கே events என்று ஒன்று இருக்க, அதை கிளிக் செய்ய, எல்லா events யிலும் அவன் பெயர் தான் இருந்தது, நல்ல துடித்துடிப்பாக இருந்த videosகள், photosகள், எல்லாம் பார்த்து எனக்கு புல்லரித்தது.

Phone number எடுத்து விட்டேன், உடனே அவனிடம் பேசவேண்டும் என்று எனக்கு தோன்றியது. இதயத்துடிப்பு அதிகரிக்க, என்ன செய்வது என்று புரியவில்லை, தைரியத்தை வரவழைத்து phone எடுத்து call செய்ய, ring போனது அந்த ringக்கு ஈடாக எனது இதய துடிப்பு அதிகரித்தது.......
Reply
#3
அத்தியாயம் 3:

இடம்:
கோயம்புத்தூர் சிட்டி
Le Meridian Hotel


(ப்ரியேஷ் narrate பண்ணுவது போல)

அந்த ringக்கு ஈடாக எனது இதய துடிப்பு அதிகரித்தது.......
Phone attend ஆனது, Hello என்று பேச, எனக்கு தூக்கி வாரி போட்டது, அப்படியே என்னுடைய குரல், எனக்கே எதிரொலிப்பது போல இருந்தது. பேரதிர்ச்சியில் எனக்கு குரலே வரவில்லை. Hello யாருங்க என்று அவன்
கேட்ட படி இருக்க, என்னால் அதற்கு மேல் பேச முடியாமல் cut செய்துவிட்டேன்.

Huh ரொம்ப nervousஆக இருந்ததால், என்னால் என்ன செய்வதென்றே தெரியவில்லை. Mind அப்படியே blankஆக இருந்தது. செரி ஒன்னு செய்யலாம், இன்று நேரடியாகவே அவனை சந்திப்பது தான் ஒரே தீர்வு, வீணா phoneஇல் பேசுவதெல்லாம், தேவை இல்லாத வேலை என்று முடிவெடுத்தேன்.

School 5 மணிக்கு முடியும் என்பதை அறிந்து கொண்டேன். மணியை செக் செய்ய இப்போதான் 10 மணி ஆனது, aah இத்தனை நேரம் என்ன செய்வது என்று ஒரே restlessnessஆக இருந்தது.

ஒடனே சஹானா ஞாபகம் வர, கால் செய்ய, முதல் ringலயே phoneஐ attend செய்தாள். எடுத்து அதிர்ச்சியாக எங்க ப்ரியேஷ் போன, dress லாம் எரிஞ்சு கிடக்குது, உன்ன தேடித் பாத்தா காணோம் என்று பொருஞ்சு தள்ள.

காலைல நான் சீக்ரமாவே கிளம்பி Coimbatore வந்துட்டேன் என்றேன், what? Coimbatore எதுக்கு போன, அங்க உனக்கு என்ன வேலை, செரி சொல்லிட்டு போயிருக்கலாம்ல, என்றாள்.

எனக்கு அவள் பேசிய விதம் கடுப்பை கிளப்ப, இப்போ என்ன ஓவரா பன்ற, உன்கிட்ட லாம் சொல்லணும்னு ஒன்னும் அவசியம் இல்ல, 2 வாரம் இங்க தான் இருப்பேன், phoneஅ வை என்று சொல்லி, cut செய்தேன்.

நேரம் நகுராமல் என்னை கடுப்பேற்றியது, டைம் பாஸ் பண்ண என்ன வழி என்று யோசிக்கும் போது தான் டக் என்று driverஇன் ஞாபகம் வந்தது, உடனே அவர் visiting cardஐ தேட, என் purseஇல் இருந்தது,

உடனே கால் செய்ய, அவர் உடனே எடுத்தார், ஏங்க காலைல வந்தேனே நான் தான் பேசுறேன் என்றேன், உடனே அவர் புரிந்து கொண்டு, oh சொல்லுங்க சார், வரணுமா என்றார். ஆமா வாங்க என்றேன்.

5ஏ நிமிடத்தில் வந்தார். நானும் அதற்குள் room ஐ பூட்டி விட்டு கீழே நின்று கொண்டிருந்தேன். என்னை பார்த்ததும் சிரித்தார், என்னங்க சார் எங்க போகணும் என்றார்.

இல்ல எனக்கு 5 மணிக்கு தான் வேலை, அது வரை time pass பண்ணனும், பக்கத்துல எதாச்சு mall இல்ல theatre இருந்தா கூட்டிட்டு போங்க, என்றேன்.

சார் ரெண்டும் சேர்ந்த மாதிரி பக்கத்துலயே இடம் இருக்கு, 5 கிலோ மீட்டர் தான், Fun Mall இருக்கு, அங்க போயிருங்க time போறதே தெரியாது என்றார். நானும் அவருக்கு thanks சொல்லிட்டு காரில் ஏற, 10 நிமிடத்தில் அங்கே சென்றடைத்தோம், பெரிய mallஆக தான் இருந்தது. அப்போ செரியா 4:30க்கு இங்க வந்திருங்க, நாம காலையில போன அந்த schoolக்கு திரும்பவும் போனும் என்றேன், ok சார் நான் வந்தர்றேன் என்றார்.

நான் உள்ளே ஒரு round அடிக்க ஆரம்பித்தேன், அங்கே எல்லாவித brandகளும் இருந்தது, செரி எதாச்சு படத்துல போய் ஒக்காந்து கொள்ளலாம் என்று பார்க்க, அதிகமா english படம் தான் ஓடியது, செரி தமிழ் படம் போனால் தான் ரொம்ப நேரம் ஓட்டுவாங்கன்னு அங்க உள்ள screen1 இல் போக, சுமாரான புதுபடம் 3 மணிநேர பக்கம் ஓடியது.

நேரம் கடக்க கடக்க பதட்டமாக இருந்தது, அவனை பார்த்து என்ன பேசுவது, அவன் என்ன நினைப்பான் என்று ஆயிரம் எண்ண ஓட்டங்கள். படம் ஒருவழியாக முடிந்து வெளியே வந்து சாப்பிட்டு கொஞ்ச நேரம் உட்கார்ந்தேன். பிறகு தான் யோசனை வர, எனக்கு நாளைக்கு தேவையான dress வாங்கலாம் என்று, அப்படியோ டைம் பாஸ் செய்து கொண்டிருந்தேன், watchஐ பார்க்கவே கடுப்பாக இருந்தது, முள் நகர மாட்டேன் என்று மிரண்டு பிடிப்பது போல இருந்தது.1 நிமிடத்துக்கு ஒரு முறை வாட்சை பார்ப்பது mannerism போல ஆகி விட்டது. அதனால் கடுப்பில் வாட்சையே கழட்டி ஜோப்பில் வெய்த்து விட்டேன்.


Window ஷாப்பிங் செய்வது, escalatorஇல் கீழே இருந்து மேலே போவது, மீண்டும் மேலே இருந்து கீழே இறங்குவது, liftல் இதே போல டைம் பாஸ். Bathroom போய் மூஞ்சி கழுவுவது, என்று என் வாழ்நாளில் நேரத்தை கடத்த என்றுமே நான் இவ்வளவு சிரமப்பட்டது இல்லை.

அப்படியே உலாத்தி கொண்டிருக்க
எனக்கு phone வந்தது, எடுத்தவுடன் ஹலோ சார், நான் அருள் பேசுறேன், அருளா? யாருங்க.. சார் டிரைவர் சார், என்று அவர் சொல்ல. ஓஹோ, right right
சொல்லுங்க அருள், சார் 4:30 ஆக போகுது, நான் கீழ நிக்கர்றேன் என்றார்.

அப்பொழுது தான் ஜோப்பில் இருந்து வாட்சை எடுத்து பார்க்க, மணி 4:20ஆகி இருந்தது. ஒரே ஆனந்தமாக இருந்தது, purchase செய்த bagகளை எடுத்துக் கொண்டு காரை நோக்கி விரைந்தேன்.

டிரைவர் என்னை பார்த்து சிரிக்க, நானும் பதிலுக்கு சிரித்து, நான் கொண்டு வந்த bag களை எல்லாம் பின் seatஇல் போட்டுவிட்டு, முன் seatஇல் அவரோடு உட்கார்ந்து கொண்டேன்.

சரி காலைல போனமே, அந்த ஸ்கூல்க்கு போங்க என்றேன். ஓகே சார் என்று சொல்லி அவரும் கார் எடுத்தார். பக்கம் வந்துவிட்டோம், அந்த ஸ்கூல் ஆர்ச்சில் நுழையும் போது, எனக்கு என் முதல் இரவில் என் மனைவி என் பக்கத்தில் இருக்கும் போது, அடிவயிற்றில் ஏற்பட்ட ஒரு வித்யாசமான குறுகுறு உணர்வை மீண்டும் ஒருமுறை உணர்ந்தேன்.

டிரைவர் தீயாய் ஒட்டி வந்து சேர்த்தார். வாட்சை பார்க்க, செரியாக 4:30மணி, நான் ஜன்னலை ஏத்திவிட்டு உள்ளேயே உட்கார்ந்து கொண்டேன். ஒரு 5 நிமிடம் ஒவ்வொரு busஆக புறப்பட ஆயத்தம் ஆனது. காலையிலேயே நம்ம ஆள் போன busன் பெயர், 'C' என்பதை நோட் செய்து கொண்டேன்.

ஒவ்வொரு bus ஆக கிளம்பியது, C தான் அந்த bus என்று எனக்கு தெளிவாக தெரிந்தும், ஒவ்வொரு bus போகும் போதும், என் கண்கள், என் முகத்தை தேட துடித்தது. N, J, A, K என busகள் கடக்க. C இன்னும் நின்று கொண்டு தான் இருந்தது.டிரைவர் என்ஜினை ஸ்டார்ட் செய்தார், ஒவ்வொரு மாணவர்களாக ஏறினார்கள். என் இதய துடிப்பு அதிகமானது. அடேங்கப்பா ஒரு மாணவர் படையாடு வந்தான், என்னை போலே இருக்கும் சரவணக்குமார்.

'C' Busஇல் ஏறினான். Driver எடுக்க ஆரம்பித்த உடனேயே, என் டிரைவர் அருளை, வண்டியை கிளப்ப சொன்னேன். அருள், அந்த busஅ follow பண்ணுங்க, என் தம்பி எங்க இறங்குறான்னு எனக்கு தெரியணும் என்றேன். சரிங்க சார், பாத்து ரொம்ப நாள் ஆச்சா சார் என்று அவர் கேக்க, ஆமா கிட்டத்தட்ட 20 வருஷத்துக்கு மேலே இருக்கும் என்று ஒரு bit போட, அவர் வாயை பிளந்தார்.

அவர் அடுத்த கேள்வியை கேட்கும் முன்னரே, அது குடும்பத்துல ஒரு பிரச்னை, அதுனால அவன சின்ன வயசுலேயே தத்து குடுத்துட்டோம் என்றேன். விடுங்க சார், இப்போ என்ன, அவரை பாத்துட்டீங்கள்ல, இன்னும் கொஞ்சம் நேரத்துக்கு நேர்ல பாக்க போறீங்க என்றார்.

நானும் ஹாஹா, ஆமாம்ல என்றேன். நான் சொன்ன கதை மிகவும் convinceஆகி இறுக்கும் போல, அவர் செய்கையிலேயே தெரிந்தது. Serious ஆக வண்டியை ஓட்ட ஆரம்பித்தார். எனக்கும் என்னை போலவே இருப்பவனுக்கும் 10 அடி மட்டுமே இடைவெளி.

ஒருவேளை நான் கதை சொன்ன மாதிரி உண்மையிலேயே என் கூட பிறந்தவனா நீ, என்று என் மனதில் ஆயிரம் கேள்விகள். ஒவ்வொரு stoppingஇலும் வண்டி நின்று மாணவர்களை இறக்கி விட்டுகொண்டு சென்றது.

ஒரு 6 கிலோமீட்டர் போக, சிட்டியாக இருந்தது, அப்படியே கிராமமாக மாறியது, மண் ரோடு, சந்து என்று. Bus புழுதியை வாரி மிகவும் கஷ்டப்பட்டு போனதும் இது என்ன areaங்க என்று கேக்க, இது இருகூர் சார், இதென்ன villageஆ, ஆமாம் சார், village தான், ஆனா 10 கிலோமீட்டர் போனா city வந்துடும் என்றார். அவர் சொல்றது என்ன, நான் தான் நேரிலேயே பார்க்கிறேனே.



இடம்:
கோயம்புத்தூரில் உள்ள கிராமம்(அத்தப்பகவுண்டன் புதூர்)

ஒரு 2 kilometer villageஇல் ரவுண்டு முடித்தோம். சொன்னது போலவே, glassஐ இறக்க தென்னை மரத்து குளிர் காற்று என் காதோடு வீசியது. தோப்பு துரவு என்று, நாம் கனவு காணும் அசல் கிராமம் தான் அது. குடிசைகளும், ஓட்டு வீடுகளும், ஆங்காங்கே terrace வீடுகளும் இருந்தது.
Bus நின்றது, அடுத்தது என்ன என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை. கதவு திறக்கப்பட அவன் இறங்கினான்.

நான் உடனே என் driverஇடம் அருளு நான் உள்ளேயே உட்காந்து இருக்கேன், நீங்க அவன இங்க கூட்டிட்டு வாங்க என்றேன். அப்புறம் கொஞ்சம் personal நீங்க கொஞ்ச நேரம் அங்க இருக்க tea கடைல இருங்க, என்று நான் கை நீட்டி பக்கத்தில் இருக்கும் tea கடையை காட்டினேன்.

புரிந்து கொண்டவராய் செரிங் சார் என்றார். நான் thanks சொன்னேன், அவர் அட அதெல்லாம் வேணாம் சார் என்றார்.
அதற்குள் அவன் driverஇடம் பேசிவிட்டு ஒரு வீட்டை நோக்கி போக, நான் driverஇடம் அவன் போறான் என்று சொல்ல, அவர் உடனே அவனை நோக்கி நடந்தார். நான் glassஐ ஏத்தி விட்டு கொண்டேன்.

அவர் கூப்பிட அவன் நின்று கொண்டான். பிறகு காரை பார்த்து ஏதோ சொல்லிவிட்டு tea கடையை நோக்கி நடந்தார். அவனும் காரை பார்த்து மெதுவாக காரை நோக்கி நடந்து வந்தான். எனக்கு திக் திக் என்று இருந்தது. அருகே நெருங்கி வந்தான், சுற்றி முற்றி பார்த்தான், பிறகு என் ஜன்னலின் glassஐ விரல் கொண்டு டொக் டொக் என்று தட்ட.

ஒரு மூச்சு எடுத்துக்கொண்டு நான் ஜன்னலின் glassஐ மெதுவாக கீழே இறக்க, முதலில் normalஆக முகம் வெய்திருந்தவன் என்னை பார்த்ததும் அவன் முகம் மாறியது. ஒரு 20 நொடி பார்த்துக்கொண்டோம், நான் Hi என்று சொல்ல, திக்கிட்டவனாய், கொஞ்சம் பதறியபடி, திரும்பி பார்க்காமல் ஓடுவது போல வேகமான நடந்து ஒரு வீட்டுக்குள் போனான்.

நான் hey hey என்று கூப்பிட்டும் அவன் கண்டுகொள்ளவில்லை. எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை, பேசாமல் அந்த வீட்டின் உள்ளே போய்விடலாமா என்று தோன்ற, இல்லை வேண்டாம் வேறு யாராவது பார்த்தால் வீண் விவகாரம் என்று முடிவெடுத்தேன்.

செரி கொஞ்சம் நேரம் அவனுக்கு யோசிக்க time குடுக்கலாம் என்று நினைத்து, அமைதியாக இருந்தேன், நான் நினைத்தது போலவே ஒரு 5 நிமிடம் கழித்து, என் car நிற்கிறதா என்று எட்டி பார்க்க வந்திருக்கிறான், நின்றதும் அப்படியே நிற்க, நான் கையை காட்டினேன்.

தயங்கியபடி என்னை நோக்கி வந்தான். மீண்டும் glassஐ இறக்க, இந்த முறை அவன் முகத்தில் பயம் இல்லை, மாறாக ஒரு பேரதிர்ச்சி கலந்த ஆச்சரியம் அவன் முகத்தில் தெரிந்தது.

அவன் சட்டையை பார்க்க தண்ணியால் நனைத்து இருந்தது, என்னை பார்த்த அதிர்ச்சியில் தண்ணீர் குடிக்க அது கொட்டி சட்டையை நனைத்து இருக்கிறது என்பது தெரிந்தது. ஹாஹா என்று சிரித்து, என்ன பாக்றீங்க நான் ஒன்னும் பேய் இல்ல, வாங்க உள்ள ஒக்காருங்க என்று நான் டிரைவர் seatக்கு நகர்ந்து அவனுக்கு உட்கார இடம் கொடுத்தேன்.
அவனும் மெல்லமாக சிரித்து உள்ளே உட்கார்ந்தான்.

நான் என்ன, ஏது, யார், எங்க இருந்து வந்தேன், எப்டி வந்தேன், இவனை எப்படி பார்த்தேன் என்று எல்லாம் சொல்லி முடித்த உடன் தான் அவன் ரிலாக்ஸ் ஆனான். இங்க பாருங்க என்று என் company ID cardஐ அவனிடம் காட்ட. பெயர் ப்ரியேஷ், CEO என்று பார்த்ததும் புருவத்தை உயர்த்தினான்.



இடம்:
சென்னை.

(சரவணன் பேசுவது போல)
இங்கே என்ன நடக்குதுன்னு எனக்கு ஒன்னும் புரியலையே, என்னை போலவே அச்சு அசலாக, என்னுடைய குரலில் என் முன்னால் உட்கார்ந்து பல்லை காட்டிக் கொண்டிருப்பவன் யார்?
இவன் சொல்வது எல்லாமே நம்பும் படியாக தான் இருக்கிறது, இவ்வளவு பெரிய CEO இந்த கிராமத்தில் இருக்கும் என்னையை இந்த காரணமின்றி வேறெதற்கு பார்க்க வரவேண்டும்.அப்போ அவன் சொல்வது எல்லாமே உண்மை தான்.

நான் பேச ஆரம்பித்தேன்; சார் இதெப்படி சாத்தியம், அப்படியே என்னய உருச்சு வெச்சுருக்கீங்க, எனக்கு அதிர்ச்சியா இருக்கு என்றேன். ஹாஹா இப்போ பாத்த உங்களுக்கே இப்டி இருக்குன்னா, நான் காலைல 9 மணிக்கு உங்கள பாத்தேன், you feel me? என்றார். நானும் சிரித்தபடியே தலை ஆட்டினேன். ஒருவேளை நாம twinsஆ கீது இருப்பமோ என்றேன். அதுக்கு வாய்ப்பே இல்ல, உங்க DOB நான் பாத்தேன், உங்களைவிட நான் ஒரு வயது பெரியவன் என்றான்.

Oh, அப்போ எப்டி? எனக்கு தெருஞ்ச வரை எங்க அம்மா, அப்பா இந்த Coimbatore வர வாய்ப்பு இல்ல. ஒன்னு பண்ணுங்க இன்னிக்கு உங்க அம்மா, அப்பாகிட்ட அவங்களுக்கு எதாச்சு flash back இருக்கான்னு விசாரிங்க, என்றான். நானும் தலை ஆட்டினேன். சத்தியமா என் அம்மா மேல எனக்கு சந்தேகம் இல்லை, ஆனா எங்கப்பன் மேல எனக்கு doubt இருக்கு என்றேன். அவன் சிரித்தான். ஹாஹா எனக்கும் என் அம்மா மேல சந்தேகம் இருக்கு என்றான்.

ஏன் சொல்றன்னா, எதாச்சு சின்ன resemblance இருந்தா கூட பரவால்ல, இப்டி
Photo copy மாதிரின்னா, எதாச்சு connection point நமக்குள்ள இருக்கணும் என்று அவன் சொன்னது, எனக்கும் சரி என பட்டது.

செரி என்ன பண்றீங்க, இப்ப போனவுடனே அப்பாகிட்ட கேட்டு பாருங்க, நாளிக்கு leave போடுங்க, நான் Le Meridian hotel ல தான் தங்கிஇருக்கேன், நாளைக்கு என்ன வந்து பாருங்க என்றான். அடேங்கப்பா le meridianஆ என்று எனக்கு ஆச்சரியம், செரி நான் விசாரிக்கிறேன், நான் நாளைக்கு உங்கள பாக்கறேன் என்று சொல்லி வெளியில் வந்தேன், அவன் driverக்கு கை காட்ட, அவர் வந்தார், அவர் என்னை பார்த்தும் சிரிக்க, நானும் சிரித்தேன், பிறகு அவன் எனக்கு tata காட்ட, நானும் பேக்கு மாதிரி அவனுக்கு tata காட்டினேன்.

ஹாஹா, எனக்கு இன்னும் இது கனவா, நினைவா என்று புரியவில்லையே.......
Reply
#4
அத்தியாயம் 4:

இடம்:
(கோயம்புத்தூரில் உள்ள கிராமம்(அத்தப்பகவுண்டன் புதூர்)

(சரவணன் பேசுவது போல)
நானும் பேக்கு மாதிரி அவனுக்கு tata காட்டினேன்.
ஹாஹா, எனக்கு இன்னும் இது கனவா, நினைவா என்று புரியவில்லையே.........

நான் ஒரு குழப்பத்திலேயே இருந்தேன், என்னால் normalஆகவே இருக்க முடியவில்லை. பெருமூச்சு விட்டபடி இருந்தேன், கற்பனையிலும் எதிர்பாராத ஒன்று நம் வாழ்க்கையில் நடக்கையில், நம் வாழ்வையே புரட்டி போட்டு விடும் என்பதை நான் இப்போது உணர்ந்தேன்.
அதே யோசனையில் உட்கார்ந்து இருந்தேன், ஆயிரம் எண்ணங்கள் மனதில்,


ஒருவேளை நம்மை தத்தெடுத்து இருப்பார்களோ என்று, அதுக்கு வாய்ப்பே இல்லயே, என் அப்பாவை போல 50 சதவிகிதம் முகம் எனக்கு இருக்கும், என் அப்பா மாநிறம், நான் என் அம்மாவை போல சிவப்பு. என் அக்காவும் என்னை போலவே தான் முக சாயலில் இருப்பாள். ஒரு விஷயம் தெள்ள தெளிவாய் விளங்கியது, இது என் குடும்பம் தான்.


எங்கப்பன் கொஞ்சம் தூரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார், அவரை குறுகுறுவென்றே நான் சந்தேக கண்ணோடு பார்த்ததை அவர் உணர்ந்து இருப்பார்.

இருந்தாலும் எனக்கு செய்த துரோகத்தினால் குற்ற உணர்ச்சியில் என்னை பார்க்கவே கூச்ச படுவார். என் அம்மாவும் அதே போல தான், எனக்கு தான் full support, ஊரிலேயே மரியாதையான ஆள் தான் ஆனால் வீட்டில் மரியாதை கிடையாது, என்ன என் மனைவி மல்லிகா மட்டும், தாய் மாமன் என்பதால் ரொம்ப மரியாதை கொடுப்பாள்.

இந்த ஆளிடம் எப்படி கேட்பது என்று எனக்கு யோசனையாகவே இருந்தது, இதை கேட்டு nice பண்ண ஆரம்பித்தால் அப்புறம் நல்ல நாயம் பேசிட்டு திரும்பவும் கூட ஒட்டிக்குவாரே என்று வேற தோன்றியது. அதனால எப்போவும் போல அம்மா மூலமா கேட்டுக்கலாம் என்று இருந்தேன்.

நேரம் போய்க்கொண்டே இருந்தது, ஹ்ம்ம் எப்டி ஆரம்பிப்பது அம்மாவிடம் என்று. மணி 9 ஆனது, சாப்பிட அம்மா எல்லோரையும் கூப்பிட்டார். நான் எப்போவும் டீ பாயில் உட்கார்ந்து தான் சாப்பிடுவேன், மத்தவர்கள் கீழே உட்கார்ந்து கொள்வார்கள்.

இன்று வழக்கத்திற்கு மாறாக என் அம்மாவிடம் உட்கார்ந்து கொண்டேன். ஏன் சரவணா கீழ ஒக்காந்துட்ட என்று அம்மா கேக்க, நான் பதில் சொல்ல வருவதற்குள் என் அப்பா, அட இதெல்லாம் கேப்பியா அவன் எங்க உக்காந்தா என்ன என்று முட்டு குடுக்க, நான் ஒரு முறை முறைக்க அமைதியானார். அதெல்லாம் இல்ல, schoolல நின்னுட்டே இருந்த நாள கால்வலி அதான் என்றேன்.

இட்லி, சாம்பார் சாப்பிட்டு முடித்தேன், அப்படியே பழங்கதைகளை எல்லாம் பேசிக்கொண்டு இருந்தேன், எங்கப்பா அடிக்கடி உள்ளே நுழைய முயற்ச்சி செய்யும் போதெல்லாம், வெட்டி விட்டேன்.
மல்லிகா உள்ளே இருக்க, என் அப்பா அவர் சகாக்களுடன் ஊர் நாயம் பேச வெளியே சென்றுவிட்டார்.

அப்டியே பேச ஆரம்பித்தேன், அப்பா உன்ன எப்ப கல்யாணம் பண்ணிகிட்டாரு, அவரு குணம் எப்டி, என்ன ஏது என்று விசாரித்தேன், உனக்கு, எனக்கும் அக்காக்கும் நடுவுல எதாச்சு பிரசவம் ஆச்சா என்பது முதல் கேட்டேன், கொஞ்சம் பேச தயங்கினாலும் நான் கேட்பதனால் சொன்னார்.

விசாரித்ததில் ஒரு விஷயம் புரிந்தது, எனக்கும் என்னை போல் இருப்பவனுக்கும் எந்த வித சம்பந்தம் இல்லை என்று. என் அம்மாவ ரொம்பவே குழப்பி விட்டேன், செரி இனி நமக்கு வேலை இல்லை, எல்லாம் இனி அவனிடம் தான் இருக்கிறது, நாளை அவனை சந்தித்தால் என்ன சொல்லுவான், என்ன பேசுவான் என்று ஒரு ஆவல் கலந்த வித்யாசமான குறுகுறுப்பு உணர்வு. விடிந்தால் விடியல் பிறக்கும் என்ற எதிர்பார்ப்போடு தூங்க போனேன்.



இடம்:
கோயம்புத்தூர்
Le Meridian Hotel

(ப்ரியேஷ் பேசுவது போல)

நான் அவனிடம் ஒரு சின்ன பையனை போல tata காட்டியதை நினைத்து எனக்கே ஆச்சரியமாக இருந்தது. சிலசமயம் நம் மனசுக்கு நெருக்கமானவர்களை சந்திக்கும் பொழுது, நமது craziness நம்மை தாண்டியும் வெளிப்பட்டு விடுமே அது போல தான் இதுவும் போல என்று விளங்கியது.

எனக்கு அறியாமலேயே அவன் என் மனசை நெருங்கிவிட்டான் போல என்று தோன்றியது. கண்டிப்பாக அவன் தன் அப்பாவிடம் விசாரித்திருப்பான் நம் பங்கிற்கு விசாரிக்க வேண்டும் என்பதற்காக என் அம்மாவுக்கு call பண்ணினேன், அவர் ஜெர்மனில இருக்கேன், இப்போ busy என்று சொல்லி வழக்கம் போல என்னை avoid பண்ணி விட்டார்.

எது எப்படியோ இது ஒரு open secretஆகவே இருக்கட்டுமே என்று எனக்கு தோன்றியது. எதோ ஒரு வகையில் எனக்கு அவன் சொந்தம், நான் அவனுக்கு சொந்தம் என்ற முடிவிற்கு என் mindஐ மாற்றி கொண்டேன். ரூமுக்கு வந்ததும் சாப்பிட்டேன், அவனிடம் பேசவேண்டும் போல மனசு ஆசை பட்டது.

பிறகு வேணாம், நாளைக்கு தான் நேரில் பார்க்க போகிறோமே என்று முடிவெடுத்து மனதை கட்டுப்படித்து கொண்டு தூங்க முயற்சித்தேன், தூக்கமே வரவில்லை.ரொம்ப நேரம் Tv யை பார்த்துக்கொண்டிருந்தேன், பிறகு எப்போது உறங்கினேன் என்று எனக்கே தெரியவில்லை.

காலை எழுந்திருக்க 8 மணி ஆனது, அவனை வேற வர சொல்லிருக்கோம், அதுக்குள்ள ரெடி ஆகனும் என்று, அவசரமாக புறப்பட்டேன், ஏதோ meeting போவது போல நேத்து வாங்கிய புது dress ஒன்றை tip top ஆக போட்டுக்கொண்டேன்.

பசி வேற எடுக்க, சாப்பிடலாம் என்று ground floorஇல் உள்ள dinerக்கு போக, எனக்கு phone வந்தது, எடுத்து பார்க்க, சரவணனிடம் இருந்து தான் வந்திருக்கிறது, சொல்லுங்க சரவணன் என்று சொல்ல, sir நான் ஹோட்டல்க்கு வந்துட்டேன் எங்க இருக்கீங்க என்றான்.

நான் ground floorல இருக்கற dinerல இருக்கேன், அப்டியே வாங்க என்றேன். சுத்தி முத்தி பார்க்க அங்கே என்னை தேடிக் கொண்டிருந்தவனை நான் கண்டு கொண்டேன். பிறகு கையை காட்ட, சிரித்த படியே வந்தான், என்னை போலவே tip top ஆக dress செய்திருந்தான். அவனை பார்க்கும் போது, நானே கொஞ்சம் எண்ணெய் வெச்சு சீவி, clean shave செய்தால் இப்படி தான் இருப்பேன் என்று தோன்றியது அவனை பார்க்கையில்.

இருவரும் கைகுலுக்கி கொண்டோம், சாப்டீங்களா என்று கேட்க, இப்போதான் சாப்பிட்டு வந்தேன் என்றான். செரி நான் சாப்பிட போறேன் company குடுங்க என்று சொல்லி கூட்டிக்கொண்டு போனேன். அவனை கட்டாய படுத்தி cranberry juiceஐ சாப்பிட வைத்து, சாம்பார் இட்லியை சாப்பிட்ட படியே நேற்று என்ன நடந்தது என்பதை அவனிடம் கேட்டுக் கொண்டிருந்தேன்.

அவனும் juiceஐ sip செய்தபடியே சொல்லிக் கொண்டிருந்தான். எல்லாவற்றையும் openஆகவே பேசினான். ஒரு வழியாக சாப்பிட்டு முடித்து ரூமுக்கு போகலாம் என்று கூட்டிக்கொண்டு போனேன். தயங்கியபடியே வந்தான். suite(ஸ்வீட்) என்பதால், நல்ல வசதியாக இருந்தது, AC ஐ on செய்துவிட்டு நான் bedஇல் உட்கார, அவன் sofaவில் உட்கார்ந்து கொண்டான்.

ஒவ்வொருவர் life historyஐ பேசிக் கொள்ள ஆரம்பித்தோம், நான் Minnesotaவில் படித்த கதை, IT company ஆரம்பித்து, என் போட்டி companyஆன எனது மாமனார் கம்பெனியை என்னோடு இணைத்த கதை, என் அப்பாவை பத்தி, என் சொந்த பந்தங்கள், அவன் இவன் என்று எல்லாம் சொல்லி முடித்தேன், என்கிட்டே இருக்கிற சொத்து பத்து, கார் கூட சொன்னேன். இவ்வளவையும் சொல்லி முடித்து கடைசியாக என் வாழ்வில் துளி கூட நிம்மதி இல்லையென்பதையும் சொல்லி முடித்தேன்.

அவன் ஆச்சரியத்தோடு, சிரித்தபடி இவ்வளவு இருந்தும், வாழ்க்கைல நிம்மதி இல்லன்னு சொல்றீங்களே எப்படி என்று கேட்டான்.
அதற்கு நான் சிரித்தபடி, அதான் எனக்கும் புரியவில்லை என்றேன்.

அவன் பங்குக்கு பேச ஆரம்பித்தான், அவன் குடும்ப வரலாறு, அவன் மனைவி வரலாறு, சொத்து பத்து, தோட்டம் துரவு, எல்லாம் சொல்லிமுடித்தான், அவனும் என்னை போலவே இந்த அவன் வாழுற வாழ்க்கை தனக்கு பிடிக்கவில்லை என்று சொன்னான். அவன் கனவு முழுவதும் City வாழ்க்கை வாழ்வது தான், என்கிற வருத்தத்தை கொட்டி தீர்தான்.

(ரொம்ப நேரம் மனசை விட்டு நேர்மையாக பேசிக் கொண்டதால், மரியாதை எல்லாம் காத்தோடு போனது,)

ஏன்யா அதுக்கு பேசாம ஒரு சிட்டி பொண்ண மடக்கி அவலோட settle ஆயிருக்கலாம்ல என்று நான் கேட்க, அவன் சோகமாக அட போப்பா, 7 வருஷம் தேடுனேன் ஒருத்தி கூட கிடைக்கல என்றான்.

நான் பயங்கர சத்தத்துடன் சிரித்தேன்(உண்மையாகவே இப்படி மனசு விட்டு நான் சத்தமாக எப்போ சிரித்தேன் என்று நினைவில்லை) அவன் சோகமாக ஹ்ம்ம் நல்லா சிரி, இத்தனை நாள் என் மனசாட்சி தான் என்னைய பாத்து காரி துப்பிட்டு சிரிக்கும், இப்போ கொஞ்சம் வித்தியாசமா என் மனசாட்சிக்கு உருவம் வந்த மாதிரி நீ சிரிக்கர என்றான்.

நான் கோச்சுகாத யா, என்றேன். செரி அத விடு நீயேன் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கல என்றான். எனக்கு தோணவே இல்ல, ரொம்ப சின்ன வயசுல இருந்தே பணத்து மேல எனக்கு காதல் வந்திருச்சு, அதனால எதுலையும் மனசு நிக்கல என்றேன். அவன் என்னை ஆச்சரியமாக பார்த்தான்,

அப்படியே கண்டதைபபேசிட்டு இருந்தோம், மதியம் ஆனது ரூமுக்கே சாப்பாடு வர வெய்து இருவரும் சாப்பிட்டு மீண்டும் பேச்சை continue செய்தோம், ஏதேதோ விஷயங்கள் பேசிக்கொண்டிருக்க sex பக்கம் வந்தது,

இருவருக்கும் சொல்லி வைத்தார் போல ரொம்ப மொக்கையாக, கேவலமாக இருந்தது. நான் என் பொண்டாட்டிய தொட்டு 6 மாசம் ஆகுது னு சொல்ல, அவன் ஏல தொகையை ஏத்துவது போல 7 மாசம் என்றான்.
இருவரும் சிரித்துக் கொண்டோம், ஹ்ம்ம் இனி அந்த கருமத்தை பத்தி எதுக்கு பேசனும்னு topic ஐ மாத்தினேன்.

அப்புறம் நாளிக்கு school போகனுமா என்றேன், நீ சொல்லுப்பா, நீ ஓகே சொன்னா நான் போறேன் இல்ல போகல என்றான்.

வேணாம்யா பேசாம நாளிக்கும் இங்க வந்துரு, இன்னும் நிறைய பேசலாம் என்றேன், அவனும் சிரித்தபடி செரி என்றான். கொஞ்சம் 6 மணியை தாண்டி வானம் இருட்டு கட்டி, மழை வருவது போல இருந்தது, அதனால் அவன் கிளம்பறேன் என்று சொல்லி சென்றான்.செரியா நாளிக்கு இதே time வந்திரு என்றேன், போகும்போது கொஞ்ச தூரம் சென்றுவிட்டு நின்று திரும்பி அதே போல டாடா காட்ட, நாணும் சிரித்த படி டாடா காட்டினேன்.

பிறகு இரவு சாப்பாட்டை முடித்து விட்டு bedஇல் சாய்ந்தேன்,
Huh நாளை விடியலுக்காக காத்திருந்தேன், சூரியனுக்காக அல்ல, அவனுக்காக!!
Reply
#5
அத்தியாயம் 5:

இடம்:
(கோயம்புத்தூரில் உள்ள கிராமம்(அத்தப்பகவுண்டன் புதூர்)

(சரவணன் பேசுவது போல)

மழை வருவதற்குள் எப்படியோ வீடு வந்து சேர்ந்துவிட்டேன், என் முகம் முழுக்க சந்தோஷத்தால் நிரம்பி இருந்திருந்து, ஒரு வயசு பய்யன் காதலில் விழுந்தால் எப்படி இருப்பானோ அப்படி இருந்தது எனக்கு. எனக்கு ஏற்பட்டிருந்த மாற்றத்தை என் குடும்பத்தினர் எல்லோரும் அறிந்திருந்தினர், ஆனால் கேட்பதற்கு யாருக்கும் தைரியம் இல்லை.


மத்தியானம் சாப்பிடதே எனக்கு வயிறு நிரம்பி இருந்தது, அது மட்டும் இல்லாது அவனிடம் பார்த்து பேசியதிலேயே திருப்தியாக இருந்தது. எனக்கு பசிக்கவில்லை என்று சொல்லிவிட்டு சீக்கிரமாகவே படுக்கைக்கு வந்துவிட்டேன்.


மல்லாக்க படுத்து விட்டத்தை பார்த்தபடி ப்ரியேஷை பத்தி யோசித்துக் கொண்டிருந்தேன், அவ்வளவு பெரிய கோடீஸ்வரன் ஆயினும் என்னுடன் அவன் பழகிய விதம் மிகுந்த ஆச்சரியம் அளித்தது. அப்படியே சந்தோஷத்திலேயே உறங்கிவிட்டேன்.


காலையில் ஒரு 8 மணிக்கு தான் எழுந்தேன், வழக்கம் போல bathroom க்கு போக, என்னங் மாப்ள இன்னிக்கு வேலை இல்லிங்களா? என்று பக்கத்து வீட்டு கார கருப்பசாமி கேக்க, இல்ல மாம்சு, இன்னிக்கு leave போட்டுட்டேன் என்றேன்.


செரி மாப்ள சாயங்காலம் பாக்றேன் என்று சொல்லி கிளம்பினான்.
அவனை பார்க்க சிரிப்பாக இருந்தது, எனக்கு நினைவு தெருஞ்ச நாளில் இருந்து காலங்காத்தால இந்த கேள்வியை என்னிடம் கேட்டுக்கொண்டிருக்கிறான், எதை மறந்தாலும் இவன் இதை மறப்பதில்லை.

வேலையை முடுச்சிட்டு 8:30 மணிக்கு ப்ரியேஷை பார்க்க புறப்பட ஆயத்தம் ஆனேன். அம்மா இன்னிக்கு என்ன காலைல என்று கேட்க, இட்லி தான்பா சரவணா, என்று சொன்னார். அஹ் இன்னிக்கும் இட்லியா என்று வெறுப்பாக இருந்தது.

சரிம்மா எடுத்து வெய் நான் சாப்படறேன் என்று சொன்னேன். மல்லிகா தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்தாள். அதற்குள் ஒரு phone வந்தது,


பார்த்தால் ப்ரியேஷிடம் இருந்து, ஹலோ சொல்லு ப்ரியேஷ் என்று சொல்ல, என்னையா கெளம்பிட்டியா, என்று கேட்க, இதோ சாப்பிட போறேன், இன்னும் கால் மணிநேரத்தில் அங்க வந்திருவேன் என்றேன்,


யோவ் யோவ்... சாப்பிடாத இங்க வந்திரு ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம் என்று சொன்னான்.
அப்பா எப்படியோ இட்லியில் இருந்து விடுதலை என்று நினைத்து, செரி இரு வந்துட்டேன் என்று சொல்லி வைத்தேன்.


அம்மா, இட்லி வேணாமா, நான் வெளில சாப்பிட்டுகிறேன் என்று சொல்லிவிட்டு என் அப்பனின் பழைய கிளாசிக் bulletஐ எடுத்து கிளம்பினேன். 5ஏ நிமிடத்தில் ஹோட்டலை சென்றடைந்தேன்,


இடம்:
கோயம்புத்தூர்
Le Meridian Hotel

வண்டியை park செய்துவிட்டு நேராக ரூம்க்கு போனேன். Room திறந்தே இருந்தது, உள்ளே போனால் dress மாத்திட்டு இருந்தான் ப்ரியேஷ். வாயா தம்பி வந்துட்டியா என்றான். ரெண்டே நிமிஷம் வெயிட் என்றான்.


நான் பெட்டில் உட்கார்ந்து கொண்டேன். அப்படியே அங்கு உள்ள பொருட்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தேன்.அவன் சூப்பராக dress பண்ணி இருந்தான், வாயா சப்படலாம் என்று சொல்லி tavernக்கு கூட்டி போனான்.

அங்கே போய் கூச்சமே படாமல் விதவிதமாக Chow Quey Teaw, Empress Platter, Red Snapper Flambe என்று கேட்டு வாங்கி சாப்பிட்டேன். அவனும் ஹ்ம்ம் சாப்பிடு சாப்பிடு என்றான். என் வாழ்நாளிலேயே இது போல dish சாப்பிட்டதே இல்லை, சாப்பிடறது என்ன, கேள்வி பட்டதே இல்லை. நல்லா சாப்பிட்டு முடித்தேன்.

மீண்டும் ரூமுக்கு போனோம், கொஞ்சம் நேரம் பேசிட்டு இருந்தோம், ஒரு கட்டத்தில் பேசுவனவற்றை எல்லாம் பேசிவிட்டதால் ஒரு அமைதி நிலவ, வாப்பா எங்கயாச்சும் வெளிய ஊர் சுத்திட்டு வரலாம், என்று நான் சொல்ல, அவனும் super ஐடியா, இரு எனக்கு தெருஞ்ச ஒரு driver இருக்காரு, அவரை கூப்படறேன் என்றான்.

ச்ச ச்ச அதெல்லாம் வேணாம், நாம மட்டும் போலாம், வா நான் bikeலதான் வந்திருக்கேன் என்றேன். சூப்பர் யா, bike ஓட்டி எத்தனை நாள் ஆச்சு தெரியுமா என்று துள்ளி குதித்தான். செரி எங்க போலாம் என்றான், bike தான எதாச்சு ஓரளவு long trip போலாம் என்றான்.


செரி உனக்கு தான தெரியும் எந்த இடம்னு சொல்லு என்றான். அப்போ topslip தான் best என்றேன். அதென்னயா பேரு என்று அவன் கேக்க, famous mountainயா சூப்பரா இருக்கும், 60kms தான், 1:30மன்னேறத்துல போயிடலாம் என்றேன். சூப்பர்யா வா, ஒடனே கிளம்பலாம் என்று அவன் சொல்ல, ரூமை பூட்டி விட்டு வெளியே வந்தோம்,


அவன் கிளாசிக் புல்லடை பார்த்ததும் புடித்துவிட்டது, வண்டிய நானே ஓட்டுறேன் என்று சிறு பிள்ளை போல அடம் பிடித்தான், எனக்கு அவனை பார்க்க சிரிப்பாக இருந்தது, செரிபா நீயே ஓட்டு என்று சொல்லி பின் சீட்டில் உட்கார்ந்து கொண்டேன். எங்கள் ரெண்டு பேரு bodyக்கு வண்டி perfectஆக இருந்தது.


மணி 10:30இருக்கும், வண்டியை ரொம்ப வேகமாக ஓட்டினான், போகின்ற வழியில் இரண்டு helmet வாங்கி கொண்டோம். ரொம்ப ஜாலியாக இருந்தது, அப்டியே பாட்டு பாடிக் கொண்டும், சிரித்து கொண்டும், போய் கொண்டிருந்தோம், பொள்ளாச்சி வந்த உடனேயே, alert ஆனேன், ஏனென்றால் அதற்க்கு மேல், நல்ல கிடைகள் இல்லை.

நீ beer குடிப்பியா என்று கேட்டதற்கு ச்ச ச்ச எனக்கு அந்த பழக்கமே கிடையாது என்றான், நான் சிரித்துக்கொண்டேன், நீ வேணா வாங்கிக்கயா என்றான், coolingஆக ஒரு carton 6pack beerஐ வாங்கி கொண்டேன்.கொஞ்ச தூரத்திலேயே பொள்ளாச்சியிலேயே famous ஆன ஆமிர் பிரியாணி கடையில் நிறுத்தி, 4 பொட்டலங்களை parcel செய்து கொண்டோம்.


Topslip நோக்கி வண்டி பறக்க ஆரம்பித்தது, அப்படியே வெயில் வானிலை சட்டென்று மாறியது, உயர்ந்த மரங்கள் சூரியனேயே மறைத்தது, hill ரோட்டில் போக ஆரம்பித்தோம், topslipஐ செரியாக 1:40 மணிநேரத்தில் வந்தடைந்தோம்.



இடம்:
Topslip(பொள்ளாச்சி)
(கடல் மட்டத்திலிருந்து 800அடிக்கு மேலே)



செமஜாலியாக இருந்தது, நல்ல குளிர், கூட்டமும் குறைவாக இருந்தது, முதலில் அங்க இருக்கும் இடம்களுக்கு ஒரு visit அடித்தோம், என் தோளில் ஒரு நண்பனை போல கை போட்டுக் கொண்டான். எனக்கு அது ரொம்ப பெருமையாக இருந்தது.

1:00மணி பக்கம் ஆக, சாப்பிட்ரலாம்பா என்று சொன்னேன், செரியா வா என்றான். அங்கே இருக்கும் இடம் எல்லாமே காற்றோட்டமாகவும், குழுமையாகவும் இருந்தது, ஒரு 200 அடி தொலைவில் ஒரு சிறு அருவி இருந்தது, அங்கே அதில் தண்ணீர் வரவில்லை, லேசாக தண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது, மத்த இடத்தை விட இந்த இடம் நன்றாக இருந்தது, ஆதலால் இங்கேயே உட்கார்ந்து சாப்பிடலாம் என்று முடிவெடுத்தோம், அங்கே ஒரு நல்ல பாறையாக பார்த்து settle ஆனோம்,


6பேக் உள்ள cartonஐ பார்த்து, ஏன்யா நீ ஒருத்தனே இவ்வளவையும் குடுச்சிருவியா என்று கேட்டான். ஹாஹா என்று நான் சிரித்தபடியே, உனக்கும் சேத்தி தான்பா வாங்குனேன் என்றேன். அட போயா ஆளவிடு, எனக்கு பழக்கம் இல்ல என்றான். செரி அவனை கட்டாயப்படுத்த வேண்டாமென்று நானே குடிக்க ஆயத்தமானேன், என்னயா சாப்பிட்டு குடிக்க மாட்டியா என்று கேட்டான், இல்லப்பா அடுச்சுட்டு தான் சாப்பிடுவேன் இல்லனா அவளோ தான் வாந்தி வந்திரும் என்றேன்.

அதுமட்டுமில்லாம அடுச்சுட்டு சாப்டா, அப்டியே gradualஆ மப்பு ஏறும், அது சூப்பரா இருக்கும் என்றேன். நான் ஒரு tinஐ open பண்ணி அடிச்சு முடுச்சேன், அவன் நான் குடிப்பதை பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு அசனுக்கும் ஆசை வந்தது போல அவனும் ஓரு tin open பண்ணி குடிக்க ஆரம்பித்தான்.


என்னப்பா வேணாம்னு சொன்ன, என்றேன், இதென்ன beer தான அப்புறம் என்ன, அதில்லாம நான் ஸ்கூல் படிக்கும் போதே குடுச்சிருக்கேன் என்றான். ஒரே மூச்சாக மூணு tinஐ காலி செய்தான். 4ஆவது tin ஓபன் செய்யும் போது என்னை பார்த்தான், உனக்கு வேண்டுமா என்பது போல, நான் பரவால்ல நீயே குடி என்று சொல்ல, அதையும் முடித்தான், நானும் கடைசி tinஐ குடித்து முடித்தேன்.


செரி சாப்பிடலாமா என்று சொல்ல, சீக்கிரம் யா, வயிறுலாம் எறியது என்றான், பிரியாணி சாப்பிட ஆரம்பித்தோம், நல்ல பசி என்பதால் ரெண்டு பாக்கட்டையும் சாப்பிட்டோம் எனக்கு lightஆக மப்பு இருந்தது, அவன் இரண்டு பாக்கட்டையும் சாப்பிட்டு முடித்து கொஞ்சம் உளற ஆரம்பித்தான். அப்டியே கை கழுவி விட்டு அந்த பாறையிலேயே ஒரு சாய்த்து படுத்துக் கொண்டான். நான் உட்கார்ந்து இருந்தேன்.


அப்படியே உளறல் பேச்சில் பேச ஆரம்பித்தான், முதலில் அவன் அப்பாவை பத்தி பேச ஆரம்பித்தான், அப்டியே ஒரு குடிகாரன் எப்படி உளருவானோ அது போல இருந்தது அவன் பேச்சு, அவன் அப்பாவை எவ்ளோ miss செய்கிறான் என்பதை சொல்லி தீர்த்தான். எனக்கே வருத்தமாக இருந்தது அதை கேட்டு.


அதேபோல அவன் தாயை எவ்வளவு வெறுக்கிறேன் என்பதையும் சொன்னான். என் அப்பாவை இழந்து நான் தவிக்கயில் எனக்கு ஆறுதல் கூட சொல்லவில்லை என்று சொன்னது எனக்கு கஷ்டமாக இருந்தது. அவன் மாமனார், மனைவியை பற்றி பேச ஆரம்பித்தான், தன் அம்மாமேல் எவ்வளவு வெறுப்பு உருக்குமோ அதுபோல முக்கால் அளவு அவன் மனைவி மீது இருப்பதாக சொன்னான்.


என் பொண்டாட்டி ரொம்ப ரொம்ப அழகா இருப்பா, அதுனால தான் அவளுக்கு திமிரே, என்னைய அவ பின்னாடி அலைய விடனும்னு அவளுக்கு ஆசை என்று புலம்பி தீர்தான். ஆனா நான் வேணும்னே அவள கண்டுக்க மாட்டேன், அவளுக்கே அவ்ளோ இருந்துச்சுன்னா நமக்கு எவ்ளோ இருக்கணும் என்றான். அவன் வருத்தப்படுவதர்க்கெல்லாம் நான் ஆறுதல் கூறிக் கொண்டு இருந்தேன்.


கடைசியாக என்னை பற்றி பேச ஆரம்பித்தான், எனக்கு என் அப்பாவை எவ்வளவு புடிக்குமோ அந்த அளவு உன்னை பிடிக்கும் என்று சொன்னான். நீ அப்டியே என்ன மாதிரியிருக்க நாள நான் சொல்லல, நீ ரொம்ப நல்லவன் என்று சொன்னான். நீ தான் எனக்கு எல்லாமே, என் அப்பா போனப்பரம் நான் அனாதைன்னு நெனச்சு தினம் தினம் உள்ளுக்குள்ள அழுதுட்டு இருந்தேன், உன்ன பாதப்பறோம், உன்கிட்ட பழகுன அப்புறம், நான் அனாதை இல்ல எனக்கு நீ இருக்க அப்டின்னு சொல்லு அழுக ஆரம்பித்து விட்டான்.

எனக்கு இத்தனை நேரம் அவன் சொல்வது கேட்டு கொஞ்சம் வருத்தமாக தான் இருந்தது, ஆனால் இப்பொழுது அவன் அழுவதை கண்டதும் என்னை அறியாமல் என் கண்களிலும் கண்ணீர், நானும் அழுக ஆரம்பித்துவிட்டேன். இங்கே வா என்று என்னை கூப்பிட அவன் பக்கம் போனேன், என்னை அப்டியே இருக கட்டி பிடித்துக்கொண்டான், I love youடா என்று திரும்ப திரும்ப சொல்லி, என் கன்னத்தில் முத்தமிட்டான்.

எனக்கு அழுகையோடு சேர்ந்து ஆனந்தத்தில் சிரிப்பும் வந்தது, அவனை முதுகில் தட்டி குடுத்த படி இருந்தேன்.
கொஞ்சம் ஆசுவாசம் அடைந்ததும், இங்க பாரு சரவணா, நான் ஒன்னு சொல்றேன் கேக்றியா என்றான், ஹ்ம்ம் சொல்லு பா என்றேன். நீ இந்த ஊரு பிடிக்கலன்னு சொன்னேளே என்றான், ஆமாம் என்றேன், இங்க இருக்கிற யாரையும் உனக்கு பிடிக்கலைல? என்றான் ஆமாம் என்றேன்.

அப்போ ஒன்னு பண்ணு, கொஞ்ச நாள் என்னோட வாழ்க்கையை நீ வாழு என்றான். எனக்கு பயங்கர shockஆக இருந்தது, அட போப்பா உளராத என்றேன். நான் உண்மையா தான்யா சொல்றேன். இப்படி பிடிக்காத வாழ்க்கையை வாழ்ந்து ஏன்யா கஷ்டப்படுற, உனக்கு பிடிச்ச என்னோட சிட்டி வாழ்க்கையை நீயாச்சும் வாழ்ந்து சந்தோஷப்பட்டு என்றான்.


நான் அமைதியாக இருந்தேன், செரி மப்பில் ஏதோ உளருகிறான் நாம் பிறகு பேசிக்கொள்ளலாம் என்று முடிவெடுத்து, செரி பா கோயம்புத்தூர் போயி பேசிக்கலாம் வா கிளம்பலாம் என்று சொல்லி அவனை வண்டியில் ஏற்றினேன், என்னை இறுக்கமாய் கட்டி பிடித்துக் கொண்டான்,நான் வண்டியை ஓட்ட ஆரம்பித்தேன்!!...
Reply
#6
அத்தியாயம் 6:

இடம்:
கோயம்புத்தூர்
Le Meridian Hotel

(சரவணன் பேசுவது போல)
என் மேலே சாய்ந்தவன்,நல்ல இறுக்கமாக பிடித்தபடி அப்டியே நல்லா உறங்கி கொண்டிருந்தான், எனக்கு வண்டி ஓட்ட கொஞ்சம் சிரமமாக இருந்தது, எங்கயாச்சும் விழுந்துட்டா என்ன பண்ணுவதென்று.

அதனால் மெதுவாக ஓட்டினேன், முதுகு bend கழண்டு விட்டது, ஹோட்டல்க்கு வர சாயுங்காலம் 6 மணி ஆனது, ஹோட்டல் க்கு வந்ததும் அவனை எழுப்பி விட, இன்னும் மப்பிலேயே தான் இருந்தான்.

அவனை அப்படியே கை தாங்கலாய் கூட்டி கொண்டு போய் ரூமில் படுக்க வைத்தேன், எனக்கும் முதுகு வலித்ததால், அப்படியே வெறும் தரையில் படுக்க என்னை அறியாமல் தூங்கிவிட்டேன்.


ஒரு 10 மணி இருக்கும், phone விடாமல் அடித்துக் கொண்டிருந்தது, தூக்கத்தை முழுவதும் கலைத்தது, எழுந்து பார்த்தேன், மணி 10, பார்த்தால் ப்ரியேஷ் மொபைல் தான் அடித்துக்கொண்டிருந்தது, நான் எடுத்தேன், பார்த்தால் புது நம்பர் போல இருந்தது,


Attend செய்ய, ஹலோ என்றேன், ப்ரியேஷ் ப்ரியேஷ், phoneஅ வெச்சுடாத, நான் சொல்றத கேளு, என்மேல என்ன கோபம் என்று சொல்லி ஆரம்பித்தது ஒரு பெண் குரல்.


எனக்கு இதயம் பட படவென்று ஆரம்பித்தது, யாராக இருக்கும் ஒருவேளை அவன் wifeஆ இருக்குமோ என்ற சந்தேகம் வேறு. ஹ்ம்ம் என்று சொல்ல, daddy என்னை திட்ராரு அவர் போன் பண்ணாலும் எடுக்க மாட்றியாம், எல்லாம் என்னால தான்னு சொல்றாறு. என்னை திட்ராரு.

உனக்கு என்ன பிரச்னை, நாம நல்லா தான பேசிட்டு இருந்தோம், எங்க இருக்க சீக்கிரம் வா என்று மூச்சுவிடாமல் பேசினாள். பேசியது அவன் மனைவி தான் என்று உறுதியாக தெரிந்தது.

நான் என்ன சொல்வது என்று எனக்கே புரியவில்லை. தைரியத்தை வரவழைத்தபடி கொஞ்சம் கோபமான குரலில் செரி னான் காலைல பேசறேன் என்று சொல்லி அவள் பேச பேச போனை கட் செய்தேன்.

எனக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும், அந்த பெண்ணின் குரல் என்னை என்னமோ செய்தது, அவள் குரலிலேயே அதிகம் படித்தவள் என்பது தெரிகிறது, மிக அழகான, இனிமையான குரல். கொஞ்சம் நேரம் படுக்கலாம் என்று படுக்க, என்னால் அதன் பின் நிம்மதியாக இருக்க முடியவில்லை, அந்த குரல் எனக்குள் எதிரொளித்துக் கொண்டே இருந்தது.

எழுந்தே உட்கார்ந்து கொண்டேன், அந்த குரலுக்கு சொந்தமான முகத்தை காண வேண்டும் என்கிற ஆசை என்னை தூங்க விடவில்லை. நான் செய்வது தவறு என்று தெரிந்தும் அவன் phoneல் அந்த முகத்தை தேடினேன், ஏமாற்றம் தான், அவள் படத்தை தவிர எல்லார் படமும் தன் mobileஇல் வைத்திருந்தான்.

ஒருவேளை அவள் மேல் அவ்வளவு வெறுப்பு போல. அந்த குரலை வெய்த்து எனக்கு தெரிந்த அழகான உறுவங்களை எல்லாம் சேர்த்து வைத்து கற்பனை செய்து பார்த்தேன்.

அப்பொழுது தான் எனக்கு ஞாபகம் வந்தது போதையில் என் வாழ்க்கையை நீ வாழு என்று ப்ரியேஷ் சொன்னானே, அது ஒருவேளை உண்மையாக தான் சொன்னானோ என்று தோன்றியது.
ஒருவேளை நாளை அப்படி அவன் கேட்டால் நாம் ஒத்துக்கொள்ளலாமா என்று கூட தோன்றியது.

ஆஹ் என்னால் முடியவில்லை, கத்தவேண்டும் போல இருந்தது, தவறு என்று தெரிந்தும் என் மனம் ஏன் இப்படி அலை பாய்கிறது என்று எனக்கு புரியவில்லை.


மீண்டும் ஒருமுறை அந்த இனிமையான குரலை என் மனதில் கண்களை மூடி ஓடவிட்டு பார்த்தேன், எனக்கே அதிர்ச்சி என் ஆண்மை எழும்பி இருந்தது, எனக்கு ரொம்ப குற்றஉணர்ச்சியாக இருந்தது அதனால் உடனே அந்த இடத்தை விட்டு கிளம்பினேன், ரூமை மெதுவாக சாத்திவிட்டு, என் வண்டியை எடுத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.






இடம்:
(கோயம்புத்தூரில் உள்ள கிராமம்(அத்தப்பகவுண்டன் புதூர்)


வீட்டில் எல்லோரும் தூங்கி விட்டனர். கதவை தட்டவும் மல்லிகா கதவை திறந்தாள். ஏங்க மாமா சாப்பட்ரீங்களா என்று கேட்டாள், இல்ல நான் சாப்பிட்டேன் என்று சொல்லி, dress change கூட பண்ணாமல் அப்படியே bedஇல் சாய்ந்து படுத்தேன்.

மல்லிகா என் முகத்தை பார்த்தபடி இருந்தாள், என்னிடம் ஏதோ கேட்க நினைக்கிறாள் என்பது எனக்கு புரிந்தும், அவளை உதாசீன படுத்தியபடி திரும்பி படுத்துக் கொண்டேன். அவளும் பக்கத்தில் படுத்துக்கொண்டாள். எனக்கு தூக்கமே வரவில்லை. என் மனம் முழுவதும் அவள் தான் இருந்தாள்.

பெயர் தெரியாது, முகம் பார்த்ததில்லை, ஆனால் ஏதோ ஒரு ஈர்ப்பு, தவறாக இருந்தாலும் பரவாயில்லை, என்று முடிவெடுத்து மனதிலேயே ரசித்தேன்.

எப்படா விடியும் என்று காத்திருந்தேன், பசி வேறு எடுத்தது, ஒரு 5 மணி இருக்கும், படுக்கையை விட்டு எழுந்தேன், பல் விலக்கி, குளித்து முடித்து, dress மாத்த, மல்லிகா அப்போது தான் எழுந்தாள்,


மாமா வெளில போறீங்களா என்றாள், ஆமா என்றேன், இதோ 10 நிமிஷம் இருங்க, உங்களுக்கு டிபன் ரெடி பன்றேன் என்றாள், இல்லைல னான் வெளில சப்படுகிறேன் நீ பொறுமையா செய் என்று சொல்லி, நான் வெளியில் வர, அப்போது தான் சூரியன் உதிக்க readyஆகிக் கொண்டிருந்தது.

புல்லெட்ஐ எடுத்து நான் கிளம்பினேன் ஹோட்டலை நோக்கி.10 நிமிடத்தில் வந்து சேர்ந்தேன்.



இடம்:
கோயம்புத்தூர்
Le Meridian Hotel


ரூமுக்குள் போக, ப்ரியேஷ் நன்றாக அசந்துதூங்கிக் கொண்டிருந்தான். மணி 6 இருக்கும், பசி வேறு தாங்க முடியவில்லை, ரூம் serviceக்கு phone பண்ணி order செய்ய, 10 நிமிஷத்தில் கொண்டு வர, நல்லா சாப்பிட்டேன், அப்டியே tvயை ஆன் செய்து, சத்தமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

கொஞ்ச நேரத்திலேயே ப்ரியேஷ் எழுந்தான், என்னை பார்த்ததும் சிரித்து, தூக்க கலக்கத்திலேயே என்னடா குழுச்சிட்டியா என்றான். நான் சிரித்தபடியே தலை ஆட்டினேன்,

மணியை பார்த்து, shock ஆனான், solidஆ 13 மணிநேரம் தூங்கிருக்கேன் சரவணா என்றான். அய்யோ இப்படி நான் என் வாழ்க்கைல தூங்குனதே இல்ல, mind எவ்ளோ free யா refreshingஆ இருக்கு தெரியுமா என்றான்.

செரி நான் போய் brush பண்ணிட்டு வரேன், எதாச்சு order பண்ணு ரொம்ப பசிக்குது என்று சொல்லி bathroom போக, அவனுக்கும் நான் சாப்ட்ட roast அயே order செய்தேன்.

வந்ததும் சாப்பிட்டபடியே பேச ஆரம்பித்தான், நீ சாப்பிட்டியா என்றான், நான் இப்போ தான் என்றேன்.கொஞ்ச யோசனைக்கு பிறகு, செரி நான் நேத்து சொன்னதை யோசுச்சு பாத்தியா என்று கேட்டான்.

எனக்கு பக் என்று இருக்க, எதைடா சொல்ற என்று casualஆக தெரியாதது போல கேட்டேன். அட நேத்து சொன்னனே, கொஞ்ச நாள் என் வீட்ல என்னை போல இருக்கியான்னு கேட்டேனே என்றான், கூச்சத்துடனே, அட பாவி நேத்து மப்புல கேட்டேன்னு நெனச்சா உண்மையாவே கேக்றியா என்றேன்.

உண்மையிலேயே என் வாழ்க்கை வெறுத்து போச்சுடா. என் பொண்டாட்டிய எனக்கு பிடிக்களன்னு புலம்பல் கதையை ஆரம்பித்தான். Risk அதிகம்டா மாட்னா பிரச்னை ஆயிடும் என்றேன். நீ okன்னு மட்டும் சொல்லு எல்லாம் நான் பாத்துக்றேன் என்றான்.

இல்லபா இது செரிவராது, என்று சொன்னேன். நான் அதெல்லாம் கேக்கல, உனக்கு சம்மதமா இல்லையான்னு தான் கேக்கறேன் சொல்லு என்றான். எனக்கு ok ஆனா, என்று சொல்ல வருவதற்குள் என்னை நிறுத்தி, wow சூப்பர் சூப்பர் சூப்பர் விடு நான் பாத்துகிறேன் என்றான்.


எப்படி ok சொன்னேன் என்று எனக்கு புரியவில்லை, ஒருவேளை நேற்று அவன் மனைவியிடம் பேசாமல் இருந்திருந்தால் இதற்கு ஒருக்காலும் நான் ஒத்திருக்க மாட்டேன்.

அங்க உனக்கு எந்த பிரச்னையும் இருக்காது, ஏன்னா என்னைய தெரிஞ்சவங்க யாருமே இல்லை, சுத்தமா கண்டுபிடிக்க முடியாது, ஒருவேளை எங்க அப்பா அங்க இருந்திருந்தா கண்டு பிடுச்சிருவாரு. அவரும் இல்லை, அப்புறம் என்ன என்றான், செரிடா, உன் company, உன் wife, மாமனார் கிட்டலாம் எப்டி சமாளிப்பேன் என்றேன்.

அதுக்கும் ஒரு ஐடியா இருக்கு என்கிட்ட, selective amnesia அப்டின்னு ஒரு மெடிக்கல் term இருக்கு, ஒரு குறிப்பிட்ட ஞாபகங்கள் மட்டும் மறக்ககற வியாதி, அப்படி ன்னு சொல்லி சமாலுச்சாரலாம் என்றான்.

இவன் சொல்லுவதை எல்லாம் பார்த்தால், எல்லாமே முதலில் திட்டமிட்டு வைத்திருப்பான் போல என்று தோன்றியது, செரி நான் சொகுசான உன் வாழ்க்கையை வாழ்வேன், ஆனா நீ இந்த பட்டிக்காட்டுல ஒக்காந்து கஷ்டப்படுவியே என்றேன், அது என் கவலை நான் பாத்துகிறேன் என்றான்.அப்பா என்று அவன் சொன்னது எனக்கு நிம்மதியாக இருந்தது.

செரி எத்தனை நாள் இப்படி இருக்கலாம் என்றேன், அது நாம இஷ்டப்படும்வரை என்றான். இல்லல அது சரிவராது, நீயே ஒரு time சொல்லு என்றான். ஒரு ஒரு மாசம் என்றேன், அவன் ok சொன்னான். இந்த ஒரு மாசம் நம்ம வாழ்க்கையே புரட்டி போட போகுது என்று சொல்லி சிரித்தான்.

செரி எப்போ ஆள்மாறாட்டம் பண்ண போறோம் என்றேன், இன்னிக்கு நல்ல நாள் அதனால இன்னிக்கே ஆரம்பிச்சரலாம் என்றான்.

எனக்கு அடிவயிற்றில் ஒரே குரு குருப்பு என்னன்ன நடக்க போகுதோ என்று.
எப்படிடா சொல்ற என்றேன், நான் அங்க இருக்கிற சில விஷயம் மட்டும் சொல்றேன் அதை மட்டும் கேட்டுக்க, அதே போல நீ சொல்றத நான் கேட்டுக்க போறேன், எதுக்கு வீணா time waste பண்ணனும் என்றான்.

இன்னிக்கு சாயங்காலம் நான் இங்க இருக்கிற எதாச்சு டுபாக்கூர் hospitalல admit ஆக போறேன், காச குடுத்து கரெக்ட் பண்ணிரலாம். அப்புறம் adress குடுத்தா அவனே வீட்டுக்கு சொல்லிட போறான் என்று coolஆக சொன்னான்.

அப்போ நான்,மெட்ராஸ்ல போய் அதே போல அட்மிட் ஆகிடவா என்று கேட்டேன். ஹ்ம்ம் நல்ல ஐடியா, எனக்கு தெருஞ்ச hospitalல சொல்றேன், நீ அங்க போய் அட்மிட் ஆய்டு என்றான்.


ஏன்பா office, meetings அப்படி இப்படி வந்தா நான் என்ன பண்றது,
Dont worry, ராஜ பாண்டியன்னு என் PA இருப்பாரு, அவர் office வேலை எல்லாம் பாதுக்கவாரு so நீ jollyயா இரு என்றான். என்ன என் கையெழுத்தை மட்டும் போட கத்துக்க என்றான். என் மாமா ஒருத்தர் இருக்காரு அவர்கிட்ட மட்டும் கொஞ்சம் politeஆ பேசு, மத்தபடி எவனையும் மதிக்காத, எல்லார் கிட்டயும் அதிகாரமா பேசு,

முக்கியமா என் பொண்டாட்டி அவகிட்ட கொஞ்சம் கூட ஒத்து போய்டாத. பாத்து பழகு, பாத்து பழகு, ரொம்ப dangerous party எதாச்சு வம்பு இழுத்தாலும் கண்டுக்காத என்றான். அப்புறம் நல்லா பந்தா காட்டு என்றான்.


அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் என் நாய் momo கிட்ட நீ மாட்டிக்வ, அது நான் இல்லன்னு, உன்ன மோப்பம் புடுச்சா ஒடனே கண்டு பிடுச்சிரும், எப்டியாச்சு சமாலுச்சுக்க என்றான். என்னப்பா சொல்ற என்றேன், பின்ன அதென்ன மனுஷனுக மாதிரி முட்டாளா என்றான், ஆமாம்மா ஐயையோ எவ்ளோ பெரிய நாய் என்று கேட்க, ஹாஹா, பயப்படாதடா குட்டி நாய் தான், கைக் குழந்தை size தான் இருக்கும்.

நான் எல்லாத்தையும் விட அவனை தான் ரொம்ப மிஸ் பண்ணுவேன் என்றான். செரி உன் familyஅ பத்தி சொல்லு, என்றான். உனக்கு ஒரு பிரச்சனையும் இருக்காது, என் அம்மா கூட மட்டும் தான் னான் பேசுவேன், அதுவும் ரொம்ப கம்மியா தான், அப்புறம் என் பொண்டாட்டி மல்லிகா, அவளும் அதேபோல தான் ஒரு வேலைக்காரி மாதிரி தான். என் அப்பன் கூட சுத்தமா பேசவே மாட்டேன்.

அந்த ஊர்ல எவன் பேசுனாலும் நான் respond பண்ண மாட்டேன் என்றேன். என்னை பார்த்து அதிர்ச்சியாக அடபாவி இதெல்லாம் ஒரு வாழ்க்கைன்னு இத்தனை நாள் வாழ்ந்துட்டு இருந்திருக்கியே என்று காரி துப்பாத குறையாக சொன்னான். சிரித்தேன், ஹ்ம்ம் மறந்துட்டேன், பக்கத்து வீட்டு கருப்பு சாமி தெனமும் காலைல எழுந்தவுடம் என்ன மாப்ள வேலைக்கு போலயான்னு கேப்பான்,


அவன்கிட்ட இல்ல மாம்சு இன்னிக்கு லீவு அப்டின்னு மட்டும் சொல்லிரு என்றேன். அவன் சிரித்தான். அப்புறம் இன்னொரு விஷயம் தெரிஞ்சுக்க, யாருக்கிட்டாய்ச்சும் பேச வேண்டிய சூழ்நிலை வந்துச்சுனா கொஞ்சம் இளம் வயசா இருந்தா மாப்ளனு கூப்பிடு, கொஞ்சம் வயசான ஆளுனா மாம்சனு கூப்பிடு என்றேன், அவன் சிரித்தபடி இருந்தான்.

ரொம்ப nervousஆ, அதே போல thrillingஆஹ் இருக்கு என்றேன். எனக்கும் அப்டி தான்னு சொன்னான். நான் அவன் கையெழுத்தை போட்டு practise செய்து கொண்டிருந்தேன், ரொம்பவே எளிமையாக இருந்ததால் easyயாக கற்றுக்கொண்டேன், அவன், அவன் பொருட்களை எல்லாம் ஒப்படைத்தான், அவன் debit card, pin,mobile, pan கார்ட் என்று எல்லாத்தையும் ஒப்படைத்தான்.

கடைசியாக நான் அவனை பார்த்து கேட்டேன், ஏன்பா உன் கையெழுத்தையும் கத்துக்கிட்டேன், நான் ஒருவேளை உன்னை double cross பண்ணி உன் வாழ்க்கையை அபகருச்சுடன்னா, என்ன பண்ணுவ என்றேன்?

அவன் சிரித்தபடி அதுக்குலாம் ஒரு முகம் வேணும்டா, இந்த முகத்தை வெச்சுட்டுலாம் நீ அப்படி யோசிக்க கூட மாட்ட என்றான். ஹாஹா என்று நானும் சிரித்தேன். செரி நீ சென்னை கிளம்பு, நானும் local ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகுறேன் என்றான். எனக்கு பட பட என்று இருந்தது. செரி வா சாப்பிட போகலாம் என்றான், எனக்கு படப்படப்பிலும், ஒரு வகையான குரு குருப்பிலும் சுத்தமாக பசிக்கவே இல்லை.

செரி கடைசியாக சேர்ந்து சாப்பிடலாம் என்று கூப்பிடுறான் போலாம் என்று போனேன்.
சாப்பிட்டு முடித்ததும், என்னை airportஇல் flight ஏற்றி விட்டான், அவனே ஏதோ ஹாஸ்பிடளில் பேசிவிட்டானாம், நான் அங்கே போனதும், அட்மிட் ஆக வேண்டியது தான் என் வேலை, அவன் வீடு தெரியாது, அவன் பொண்டாட்டியை தெரியாது, அவன் மாமனாரை தெரியாது, இவ்வளவு ஏன் சென்னை கூட எனக்கு தெரியாது.

ஆயிரம் மன குழப்பம் இருந்தாலும் முதன் முதலாக flight இல் போறதால், அதை enjoy பண்ணிக்கொண்டு போனேன். இனி என்ன ஆகுமோ??
Reply
#7
அத்தியாயம் 9:

இடம்:
சென்னை சிட்டி
Hospital


(சரவணன் narrate பண்ணுவது போல)

ஒரு முக்கால் மணி நேரம் அவள் அப்படியே உட்கார்ந்து இருந்தாள், ஹம்ம்ஹூம் அவள் என்னை கண்டுக்குவாள் என்கிற நம்பிக்கை இல்லை. எனக்கு பயங்கர bore அடிக்க நான் கொஞ்சம் கண் அயர்ந்தேன், நல்ல ஒரு தூக்கம் போட்டு எழுந்தேன், பார்த்தாள் மணி 3 பக்கம் இருந்தது, பசிக்க வேற செய்தது, இரவு செரியாக சாப்பிடவில்லை, காலையில் சாப்பிட்டது வெறும் 4breadகள் மட்டுமே, வயிறு பசியால் கத்தியது, பசி கண்ணுக்குள் வந்துவிட்டது, அநேகமாக பசியால் தான் முழிப்பு வந்தது என்று நினைக்கிறேன்.

என் ரூமில் யாருமே இல்லை, அடபாவமே என்னய தனியா விட்டுவிட்டு போய்விட்டார்களே என்று கொஞ்சம் வருத்தமாக இருந்தது, நான் வருத்தபட்டுக்கொண்டு இருக்கும் சமயத்தில் சஹானாவின் அம்மா வந்தார்கள், முழுச்சிட்டியா ப்ரியேஷ் என்றார். ஆமா ஆண்ட்டி என்றேன்.
அவரும், சஹானாவும் சாப்பிட போயிருக்காங்க இப்போ வந்திருவாங்கா என்றார். உனக்கு waitபண்ணி பாத்தோம் நீ எந்திரிக்கவே இல்லை, அதான் கிளம்பி போய்ட்டோம் என்றார்.

என்னை எழுப்பி இருக்கலாம்ல ஆண்ட்டி, சும்மா தான் கண்ணை மூடி படுத்து இருந்தேன் என்றேன், அதெப்படி உன்ன disturb பண்றது என்றார். செறி இரு அவங்கள பார்சல் கொண்டு வர சொல்றேன் என்றார்.என்று phoneஐ கையில் எடுத்தார்.

ஆஹா சோறு சோறு சோறு என்று எனக்கு சந்தோசமாக இருந்தது. ஒரு 10 நிமிடத்தில் bulkஆக parcel கட்டிக்கொண்டு வந்தார் ப்ரியேஷின் மாமா. சஹானாவும் கூட வந்தாள், அவள் choliயை பார்க்க, அவள் வயிற்று பக்கம் கொஞ்சம் சாப்பிட்டதால் தொப்பை தெரிந்தது, அது கூட அழகாக தான் இருந்தது. சாப்பிடலாம் என்று பார்த்தாள் மூனு பேரும் அங்கேயே இருந்தனர், அய்யய்யோ இந்த ப்ரியேஷ் எப்படி சாப்பிடுவான்னு தெரியலையே, spoonல யா இல்ல கைலயா என்று சந்தேகம் வந்து நான் யோசிக்க, செரி ப்ரியேஷ் சாப்பிடட்டும் வாங்க நாம வெளில இருக்கலாம் என்று அந்த பெரியமனுஷன் இருவரையும் வெளியே கூட்டிக்கொண்டு போனார்.

ச்ச மனுஷன் யா நீ என்று ஒரு கும்பிடு போட்டுவிட்டு, பார்ஸலை பிரிக்க, இரண்டு பொட்டலங்கள், ஒன்று veg பிரியாணி, இன்னொன்று சாம்பார் சாதம் போல, எனக்கு இருந்த பசியில் சும்மா நாய் மாதிரி சாப்பிட்டேன், இரண்டு பொட்டலங்களையும் பிரித்துவைத்து மாறி மாறி சாப்பிட்டேன், 5 நிமிடத்தில் காலி செய்து, கொண்டு வந்து பைக்கு உள்ளேயே போட்டு, மூடி வைத்து dustbinஇல் போட்டேன், கையை கழுவி விட்டு, தண்ணீர் குடிக்க, அப்போது தான் கண்ணு கொஞ்சம் clearஆக தெரிந்தது.

கொஞ்சம் ஆசுவாசபடுத்திக்கொண்டு உட்காரவும், டாக்டர் வரவும் சரியாக இருந்தது, உள்ளே நுழைந்ததும் உங்க scan reportsஎல்லாம் வந்துடுச்சு என்று சொல்லி நீட்டினார். அவர்கள் மூவரும் உள்ளே வந்தனர். அந்த வஞ்சர மீன் வறுவல் போல இருக்குதே, அதெல்லாம் நெறய போட்டு வெச்சிருந்தார்.

Cause என்று போட்டு anterograde amnesia என்று போட்டு இருந்தது, நல்ல பெயராக தான் இருந்தது, முகத்தை கொஞ்சம் சோகமாக வைத்துக்கொண்டேன். ப்ரியேஷ் இங்க குடு என்று என்னிடமிருந்து வாங்கி கொண்டார் அவள் அப்பா. மூவரும் சேர்ந்து பார்த்தனர். டாக்டரிடம் என்ன என்று விசாரிக்க, இது ஒரு வகை மறதி வியாதி, medications எடுத்து கொண்டால் மறந்து போன memory எல்லாவற்றையும் retrieve செய்து கொள்ள முடியும் என்று சொன்னார்.

அதைக்கேட்டு மூவருமே கொஞ்சம் கலங்கி தான் போனார்கள். சஹானாவின் அம்மா, என் கையை பிடித்துக்கொண்டார்கள். நானும் முகத்தை கொஞ்சம் சோகமாக வைத்துக்கொண்டேன். எப்போ டிஸ்சார்ஜ் பண்லாம் என்று அவன் ஆண்ட்டி கேட்க, treatmentலாம் over, only medications மட்டும் தான் அதனால இன்னிக்கே கூட கூட்டிட்டு போகலாம் என்று டாக்டர் சொன்னார். ஒரு 1 month வீட்லேயே medications எடுத்துட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும் என்றார். உடனே அவன் மாமனார் அப்போ இப்போவே கூட்டிட்டு போயிடறோம் என்றார். டாக்டரும் ok சொன்னார்.

எனக்கு உள்ளுக்குள் ஒரே குதூகலமாக இருந்தது, நம்பினால் நம்புங்கள் என் இதயம் கூட சஹானா சஹானா என்று தான் துடித்தது. Formalities எல்லாம் முடிய, கீழே Mercedes-Benz E-Class கார் வெய்ட் பண்ணிக்கொண்டிருந்தது. பார்த்ததும் அசந்து போய் விட்டேன். ப்ரியேஷ் நீ உன் கார்ல வீட்டுக்கு கிளம்பு நானும் ஆண்ட்டியும் எங்க கார்ல வந்திடறோம் என்றார்.

என்னது என் காரா, அப்போ இது ப்ரியேஷ் ஓடது தானா என்று ஒரே குதூகலம். நாம் அவர்கள் கார் என்னவென்று பார்க்க Hyundai i20, எனக்கு பென்ஸ் காரை பார்த்ததும் அதெல்லாம் cheapஆக தெரிந்தது, நான் தான் ஓட்ட போகிறேன் என்று ஆவலோடு பார்க்க, சஹானா டிரைவர் சீட்டில் அமர்ந்து இருந்தாள், சஹானா I can drive என்றேன், பரவால்ல ப்ரியேஷ் என்று சொல்ல, செரிஎன்று நான் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டேன். அப்படியே உட்கார்ந்து அந்த luxuryஐ அனுபவித்தபடி போனேன். எனக்கு இது போல கார் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது, ஆனால் இந்த மாதிரி காரை அந்த கிராமத்துல ஓட்டினால் அந்த கம்பெனிக்கே அசிங்கம் என்பதால் ஒருபோதும் அதை நான் செய்யவில்லை.
அப்படியே சில்லென்று AC காற்று வீச, பக்கத்திலேயே கட்டழகி கண்ணுக்கு குளிர்ச்சியாக உட்கார்ந்திருக்க, காதுக்கு சுகமாக brahmsன் symphony ஒலிக்க, மனசுக்கு இதமாக இருந்ததால் நான் என்னை மறந்து கண் அயர்ந்தேன்.




இடம்:
கோயம்புத்தூரில் உள்ள Hospital(சின்னியம்பாளையம்)


ஒரே அரட்டை தான் இங்கே, ஹாஸ்பிடல் போலவே இல்லை, ஏதோ ஒரு family bonding session போல இருந்தது, பழக அருமையான மனிதர்கள் போல இருந்தனர். தம்பி நீ இப்படியே கலகலன்னு எப்போவும் சந்தோசமா இருக்கனும் என்று சரவணன் அப்பா சொல்ல தான் எனக்கு விளங்கியது, அய்யயோ கொஞ்சம் ஓவரா போறோமோ. சரவணன் அவன் அப்பாவிடம் பேசுவதை நிறுத்தி விட்டதாக சொன்னது அப்போது தான் எனக்கு ஞாபகம் வந்தது. ஓவரா போனால் கூட தவறில்லை, ஏன்னா இன்னும் கொஞ்ச நேரத்துல டாக்டர் வந்துது நமக்கு அம்னீஷியா என்று சொல்ல போகிறார் அதனால் தவறில்லை என்று அப்டியே maintain பண்ணினேன், அப்படியே மல்லிகாவை ஒரு கண்ணால் sightஅடித்த படியே இருந்தேன்.

கொஞ்ச நேரத்திலேயே டாக்டர் வந்தார், விஷயத்தை சொன்னார். அவர் சொன்னது தான் தாமதம், அருமையான சூழ்நிலை அப்படியே மாறியது, அம்மாவும், மல்லிகாவும் அழுக ஆரம்பித்தனர். அவனம்மா என் பக்கம் வந்து உட்கார்ந்து கட்டிக்கொண்டு அழுதார். அவர் தோளில் கைபோட்டு ஆறுதல் கூறினேன், நானும் டாக்டரும் சமாளிக்க முயற்சி செய்ய முடியவில்லை, அவர்கள் எவ்வளவு சொல்லியும் solve ஆகவில்லை, அடடே ஏன் இப்படி பொய் சொன்னோம் என்று கூட எனக்கு தோன்றியது.

மல்லிகாவின் கைகளை பிடித்து கொண்டதில், ரணகலத்திலும் ஒரு கிளுகிளுப்பு எனக்கு. எப்படியோ இப்போ நான் நல்லா இருக்கிறேன்ல விடுமா என்று சொல்லி ஒரு மாதிரியாக இருவரையும் சமாளித்தேன். சந்தோசமான சூழ்நிலை சற்று நேரத்தில் சோகமயம் ஆனது, எனினும் டாக்டர் இன்றே, இப்பொழுதே டிஸ்சார்ஜ் செய்யலாம் என்று சொன்னதால் கொஞ்சம் சந்தோசம் அவர்களுக்கு.

டாக்டர் இங்கே வந்து அட்மிட் ஆனதுக்கு உருப்படியாக full body check up பண்ணிய fileஐ கொடுத்தார். என்னை விட யாரும் அதிகம் படிக்காதவர்கள் என்பதால் அவர்கள் முன்னாலேயே பார்த்தேன், எல்லாமே நார்மலாக தான் இருந்தது. நான் கூட bp இருக்கும் என நினைத்தேன், எல்லாமே நார்மலாக இருந்ததில் கொஞ்ச சந்தோசம் தான். தம்பி call taxi ரெடியாக இருக்குது கிளம்பலாமா என்று கேட்டார். நானும் செரிப்பா என்று சொன்னேன். Glamourஆக இருக்கிறோமா என்று கண்ணாடியில் பார்க்க சின்ன பிளாஸ்திரி ஒன்று நெற்றியில் இருந்தது தான் glamourஐ கெடுத்தது. செரி ஒரு கண் திருஷ்டிகாக இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.

காரில் முன்சீட்டில் அவன் அப்பா உட்கார்ந்து கொள்ள நான் பின்சீட்டின் நடுவில் உட்கார, வலது பக்கம் அவன் அம்மா, இடப்பக்கம் மல்லிகா உட்கார்ந்தனர். அவன் அம்மா என் தோள் மீது சாய்ந்து கொண்டார், முதன்முறை பதற்றத்தில் இந்த ஊருக்கு வந்தேன், இந்தமுறை நெஞ்சம் முழுக்க சந்தோசத்தில் வருகிறேன்.

காரை மெதுவாக ஓட்டும்படி டிரைவர்க்கு ஆணை பிறப்பிக்கபட்டு இருந்தது. அதனால் வர 30 நிமிடம் ஆனது. வீடும் வந்தது. போனமுறை வாசல் வரை வந்தேன், ஆனால் இந்தமுறை வீட்டுக்குள்ளேயே வந்துவிட்டேன்.




இடம்:
சென்னை.

(சரவணன் பேசுவது போல)

நல்ல சந்தோசமான கனவில் இருக்க, யாரோ ப்ரியேஷ் ப்ரியேஷ் என்று சொல்லி என்னை, என் கனவை டிஸ்டர்ப் செய்து கொண்டிருந்தனர், உடனே சுயநினைவு வந்தேன், அய்யய்யோ நான் தான் ப்ரியேஷ் என்னை யாரோ கூப்பிடுகிறார்கள் என்று பார்த்தால், அவன் அத்தை தான் அது, என்ன ப்ரியேஷ் ரொம்ப tiredஆ இருக்கா என்றார்கள், இல்ல ஆண்ட்டி என்றேன் வாப்பா வீடு வந்திடுச்சு என்றார். இந்த சஹானா எங்கே போனால் என்று பார்க்க, அவள் ஏதோ phoneஇல் பேசிக்கொண்டிருந்தாள்.

காரை விட்டு வெளியே இறங்கி பார்த்து மிரண்டே போயிட்டேன், அடேங்கப்பாடி கப்பா என்னடா இது மாளிகை போல இருக்கிறது என்று. செரி நாளை காலையில் நன்றாக பார்த்துக்கொள்ளலாம் என்று உள்ளே செல்ல, ஒரு குட்டி நாய் என்னை வரவேற்றது, ஏற்கனவே ப்ரியேஷ் இந்த நாய் குட்டியை பற்றி சொல்லி இருக்கிறான், பார்க்க அழகாக சின்ன பூனை குட்டி போலவே இருந்தது, எல்லாரையும் நம்ப வைப்பதற்காக அதை தூக்கி வைத்து கொஞ்சினேன், ஊரில் நாயை பார்த்தாலே கல்லால் அடிக்கும் பழக்கம் உடையவன் நான். நான் அதை கொஞ்ச அது எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் என் முகத்தை உத்து பார்த்தது, அய்யய்யோ நாள் ப்ரியேஷ் இல்லன்னு கண்டு புடுச்சிருச்சு போலவே என்று கொஞ்சம் டர்ராக இருந்தது.

அய்யய்யோ இதோட பேரு ஏதோ சொன்னானே மறந்து போச்சே என்று யோசிக்க, ப்ரியேஷ் momoவ இறக்கி விட்டுட்டு வா சாப்பிடலாம் என்று uncle சொல்ல, correcட்டு இதோட பேரு momo செரியனா timeல எடுத்து கொடுத்தார். Momo momo என்று நான் கொஞ்ச, நோ ரியாக்ஷன், எனக்கு ஒன்று மட்டும் தெரிந்தது இந்நேரம் இதற்கு மட்டும் வாய் இருந்தால் நான் போலி, ப்ரியேஷ் இல்லை என்று கண்டிப்பாக சொல்லி இருக்கும். எப்படியோ முதல் ஆபத்தில் இருந்து தப்பித்தேன்.

ப்ரியேஷ் உன் ரூம் போய் fresh ஆயிட்டுவா சாப்பிடலாம் என்று சொன்னார். இன்னொரு சோதனை வந்தது, எனக்கு எது என்னுடைய room என்று கண்டுபிடிக்க முடியாமல் தவித்தேன். அப்படியே சோபாவில் அமர்ந்தேன், சுத்தி முத்தி பார்த்தால் பார்க்கும் இடமெல்லாம் ரூம் தான், இதுல first floorஇலும் ரூம் இருக்கும் போல, தலை சுற்றியது, என்ன செய்யலாம் என்று யோசித்தேன், ஒரு யோசனை வந்தது, அந்த வீட்டில் இருக்கும் வேலைக்கார பெண் அங்கே இருந்தார், ஒரு 35-40 வயது இருக்கும், எங்க கிராமத்துல இருக்கும் பெண்களை போல தோற்றம். நான் அவளை கூப்பிட்டு, ஒரு help என்று கேட்க, சொல்லுங்கயா என்றார். ஒன்னுஇல்ல phoneஅ என் bedroomல வெச்சுட்டேன், கொஞ்ச எடுத்துட்டு வாமா என்றேன், இதோ என்று சொல்லி stepsஇல் ஏறி முதல் மாடிக்கு போனாள், நானும் எழுந்து அவள் பின்னே பாதி steps ஏறி பார்க்க, அவள் இடது பக்கமுள்ள ஒரு ரூமுக்குள் சென்றாள், ok அப்போ இதுதான் நம்ம ரூம் என்று முடிவுக்கு வந்தேன், என் ராஜதந்திரத்தை எண்ணி பெருமை அடைந்தேன்.

கொஞ்ச நேரம் கழித்து கீழே வந்தாள், வந்து அய்யா உங்க phoneஅ தேடிப் பார்த்தேன் ரூம்ல இல்லை என்றார். எப்படி கிடைக்கும் அதான் என் pant பாக்கெட்டுக்குள்ள இருக்கே, செரிமா பரவால்ல நான் தேடி பாத்துகிறேன் என்று சொல்லி அனுப்ப, அவன் மாமனார் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார், ப்ரியேஷ் இப்போ தாம் நம்ம family doctorகிட்ட பேசினேன், அவர் இன்னும் 1 weekல இங்க வந்துடுவாராம், வந்து நான் எல்லாத்தையும் பாத்துகிறேன்னு சொல்லிட்டார் என்றார். அடப்பாவமே வீட்டுக்குள்ள நுழைஞ்சு 20 நிமிஷம் கூட முழுசா ஆகலை அதுக்குள்ள ஒரு மனுஷனுக்கு இவ்ளோ சோதனையா என்று நொந்து கொண்டேன், இந்த டாக்டரை எப்படி சமாளிக்க போகிறோம் என்கிற கவலை என்னை தொத்திக்கொண்டது, இந்த நாய் வேறு அங்கே இங்கே நடமாடியபடி என்னையே முறைத்து பார்த்தபடி இருந்தது.

ஒழுக்கமா ஓடிரு இல்ல போட்டு தள்ளிருவேன் என்று கைகளால் செய்கை காட்ட, அதுவிடம் எந்த ரியாக்ஷனும் இல்லை. Uncle நான் fresh ஆயுட்டு வந்துடறேன், என்று சொல்லிவிட்டு என் ரூமுக்குள் நுழைய சஹானா அதற்க்குள் dress மாத்திட்டு இந்த படத்துல பணக்கார பொண்ணுங்க night ஆனா ஒரு ட்ரெஸ் போடுவாங்களே, அது போல night robe ட்ரெஸ்ஸில் இருந்தாள், அவ்வளவு செக்சியாக இருந்தது,

என்னை பார்த்தாள், freshஆயிட்டு வா ப்ரியேஷ் சாப்பிட போலாம் என்று சொல்ல, ஒருமுறை மேலிருந்து கீழே வரை அவளை கண்களாலேயே ஸ்கேன் செய்துவிட்டு இதோ 5mins என்று சொல்லி உள்ளே போய் வெளியே வரும்போது 15நிமிடம் ஆனது, பாத்ரூமின் அழகை ரசிக்கவே எனக்கு 10 நிமிடங்கள் தேவைப்பட்டது.

சஹானாவை கூட்டிக்கொண்டு கீழே போய் சாப்பிட்டேன், கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டு இருந்தோம். எல்லோரும் சகஜமாக பேசினாலும் அவர்களுக்கு உள்ளுக்குள்ளே கொஞ்சம் வருத்தம் இருப்பதை காண முடிந்தது.
செரி ப்ரியேஷ் have a good night sleep என்று சொல்லிவிட்டு செல்ல, நானும் சஹானாவும் மேலே வந்தோம்.

Good night என்று சொல்ல, நானும் good night சொல்லி ஒரே பெட்டில் படுத்துக்கொண்டோம், பேருக்கு தான் ஒரே பெட், நான் ஒரு நாட்டில், அவள் ஒரு நாட்டில் இருப்பது போல இருந்தது இடைவெளி. எங்களுக்கு இடையே இருந்த இடைவெளியில் ஒரு ஊரையே படுக்க வைக்கலாம், அப்படி இருந்தது, இதுதான் கொடுமை என்றால் எனக்கு முதுகை காட்டியபடி படுத்தது அதைவிட கொடுமை. நான் என்னென்னவோ கற்பனை செய்து வைத்திருந்தேன் எல்லாம் சப்பென்று போனது.

படுத்தவள் மீண்டும் எழுந்து ப்ரியேஷ் ஏதாச்சும்னா உடனே தயங்காம என்னை எழுப்பு என்று சொன்னாள், நான் ஹ்ம்ம் என்று சொல்லி தலையாட்டினேன், அப்பாடா அந்த கனிவான வார்த்தைகள் கொஞ்சம் ஆறுதலை தந்தது. இதுவரை நன்றாக சென்று கொண்டிருக்கிறது, இனிமேலும் நன்றாக தான் செல்லும் என்று எனக்கு நானே ஆறுதல் கூறிக்கொண்டு கண்களை மூடினேன்.
Reply
#8
அத்தியாயம் 8:

இடம்:
அத்தப்பகவுண்டன் புதூர்



(ப்ரியேஷ் narrate பண்ணுவது போல)

வீட்டு வாசல் வரை வந்துவிட்டேன், ஏதோ வெற்றி இலக்கை பாதி அடைந்துவிட்டது போல ஒரு உணர்வு, நான் உள்ளே நுழைய முயல, கண்ணு கொஞ்சம் பொறு என்று சரவணன் அம்மா சொல்ல, என்ன மா என்று கேட்டேன், கொஞ்சம் பொரு கண்ணு, வந்தர்றேன் என்று சொல்லி உள்ளே சென்று, ஆரத்தி தட்டை எடுத்துட்டு வந்து த்ரிஸ்டி கழித்தார்.

அதற்க்குள் பக்கத்து வீட்டு காரர்கள் எல்லாரும் வந்துவிட்டார்கள், என்னை வரவேற்க. உண்மையிலேயே நான் இதை துளியும் எதிர்பார்க்க வில்லை. எல்லாரும் வந்து நலம் விசாரித்தார்கள், நான் நல்லா இருக்கிறேன், நல்லா இருக்கிறேன் என்று சொல்லியபடியே இருந்தேன். வந்தவர்களுக்கு எல்லாம் நன்றி சொல்லி அனுப்பி விட்டார் அவன் அம்மா.

என்ன சாப்பட்ர கண்ணு, என்று அம்மா கேட்க. எது வேணாலும் செய்மா என்றேன். நான் அப்படியே வீட்டை சுத்தி பார்க்க மெதுவாக நடந்தேன், கிராமம், சுத்தியும் மரங்கள் இருப்பதால், நல்ல குளிர் காற்று, இடம் ரொம்ப பெருசு, ஆனால் வீடு சின்ன இடத்தில் தான் கட்டப்பட்டு இருந்தது, முன்னாடி நிறைய இடத்தை விட்டு வைத்து இருந்தார்கள்.

பழைய ஓட்டு வீடு, புதிதாக ஓடுகளை மாத்தி இருக்கிறார்கள், உள்ளே கிரானைட் தரை பதிக்க பட்டு இருந்தது, இதெல்லாம் சரவணன் வேலையாக தான் இருந்திருக்க வேண்டும். ஒட்டு வீட்டில் granite ரொம்பவே oddஆக இருந்தது.

5 ரூம்கள் இருந்தது, எல்லாமே பெரிய ரூம்கள். வீடு ரொம்பவே neatஆக இருந்தது, விலை உயர்ந்த calvin klein perfume, dolce and gabbana fabric , apple macbook என(நான் கூட HP தான் யூஸ் பன்றேன்) சரவணனின் collections என்னை ஆச்சர்ய படுத்தியது. அடுத்து bedroom பக்கம் போனேன், அருமையான queensize கட்டில், பெரிய மெத்தை போட பட்டிருந்தது, bedroomஐ பார்த்ததும் எனக்கு கிராமத்தில் இருப்பது போலவே இல்லை.

வீட்டுக்கு வெளியே வந்தேன், பார்த்தால் அந்த பக்கம் எல்லாம் தார் ரோடுகள் இல்லை எல்லாமே மண்ரோடு தான். அப்படியே செருப்பை கழட்டி விட்டு வெறும் காலில் நடக்க வேண்டும் போல இருந்தது, மணி 9 இருக்கும், அம்மா சாப்பிடலாமா என்று கேட்டார். செரிமா சாப்பிடலாம் என்றேன், இட்லியும், குருமாவும் செய்து இருந்தார். கண்ணு நானே ஊட்டிவிடட்டா என்று கேட்க, செரிமா என்று சொல்லிவிட்டேன்.

அவரும் சந்தோசமாக பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு சந்தோசமாக ஊட்டி விட்டார்கள். சாப்பிட்டு முடித்து எல்லோரும் கொஞ்சநேரம் பேசிக்கொண்டு இருந்தோம், நாளைக்கு காலைல அக்காவும், மாமாவும் உன்னை பாக்க வராங்க கண்ணு என்று சொன்னார். ஹ்ம்ம் செரிமா என்றேன்.

மல்லிகாவை பார்க்க, ஒரு செவுறு ஓரத்தில், குத்த வெச்ச படி அடக்கமாக, அழகாக உட்கார்ந்து கொண்டிருந்தாள், சேலையை இழுத்து போத்தியபிடி அமைதியாக உட்கார்ந்து நாங்கள் பேசுவதை எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்தாள். அப்போது தான் கவனித்தேன், மற்ற பெண்களை போல, night ஆனவுடன் nightie போடும் பழக்கம் இல்லாதவள். ஒருவேளை தூங்கும் போது கீது மாற்றிக்கொள்வால் போல என்று நினைத்தேன்.

அதுமட்டும் இல்லாமல் இன்று அவளுடன் தான் உறங்க போகிறேன் என்று நினைக்கும் போது எனக்கு ஒருவிதமான கிளுகிளுப்பு உணர்வில் மூச்சடைப்பது போல இருந்தது. திடீரென்று சரவணன் ஞாபகம் வந்தது எனக்கு, அவனுக்கும் இதுதானே அங்கே முதல் நாளாக இருக்க வேண்டும், எப்படி சமாளிப்பான், ஒருவேளை மாட்டிக்கொண்டானோ என்று எனக்கு ஆயிரம் குழப்பங்கள். பேசாமல் பேசிவிடலமா என்று தோன்றியது, மணியை பார்க்க 10ஆக பத்து நிமிடங்கள் இருந்தது, கண்டிப்பா சஹானா இன்னேரம் படுத்து இருப்பாள், செரி அவனிடம் பேசிவிடலாம் என்று ஒரே முடிவெடுத்து டயல் செய்தேன்,

கடைசி ரிங்கில் phoneஐ எடுத்தான். மெதுவாக ப்ரியேஷ் என்று பேசினான். சரவணா அங்க ஒன்னும் பிரச்சனைஇல்லையே என்றேன், இல்லை பா இது வரை எந்த பிரச்னையும் இல்லை, ஆனா எனக்கு ஒவ்வொரு நிமிஷமும் திக்கு திக்குன்னு இருக்கு, உன் பொண்டாட்டிய பாத்தாலே எனக்கு பயமா இருக்கு, அதைவிட உன் மாமனார், எப்போ மாட்டிக்குவமோன்னு இருக்கு என்று புலம்பினான்.

(அய்யயோ இப்படி சொல்றானே, எங்க இனிமேல் continue பண்ண முடியாதுன்னு சொல்லிடுவானோ என்று பயம் எனக்கு,) என்னடா இப்படி சொல்ற, எப்டியாச்சும் சமாளி, நான் சொன்ன மாதிரி தான் சஹானாவ roughஆ treat பண்ணு, என் மாமனார் கூட freeயா பழகு அவ்ளோ தான். என்று ஆறுதல் கூறினேன்.

செரிப்பா என்னால முடிஞ்சவரை நான் சமாளிக்கிறேன், ஆனா ஒன்னு என்னால 30 நாள் லாம் சமாளிக்க முடியாது என்று சொல்லி என் தலையில் குண்டை போட்டான். அடச்ச இதை சொல்ல உனக்கு வெக்கமா இல்ல, ஒரு 30 நாள் உன்னால தாக்கு புடிக்க முடியாதா? என் நிலைமையை யோசுச்சு பாரு, நான் எப்படி அங்க 1 வருஷம் இருந்திருப்பேன்னு, என்று கொஞ்சம் காட்டமாக பேச, செரிப்பா நான் பாத்துக்கிறேன் என்றான்.

செரி அங்க எப்படி நிலவரம் என்று கேக்க,(ரொம்ப உயர்வாக சொல்ல கூடாது என்பதற்காக), ஹ்ம்ம் பரவால்லடா, வீட்ல AC இல்லாதது கொஞ்சம் கஷ்டமா இருக்கு, AC லேயே இருந்து பலகிட்டனா என்றேன்.

ஆனா இது கூட ஒரு மாதிரி அழகா தான் இருக்கு என்று மல்லிகாவை பார்த்தபடியே சொன்னேன். உன்னை மாதிரிலாம் அசிங்கமா நான் பொலம்பமாட்டேன், எத்தனை நாள் வேணாலும் நான் சமாலுசுக்வேன் என்றேன். செரிப்பா உனக்கு எந்த பணதேவை இருந்தாலும் அம்மா கிட்ட கேளு தரும், எங்கப்பன் கூட அளவா பழகு, ஏசி கீசி என்ன வேணாலும் வாங்கிக்க என்றான். நான் சிரித்தேன், (எதுக்கு வேணும் AC, இங்கே இருக்கும் இயற்கை காத்தை கோடி விலை கொடுத்தாலும் வாங்க முடியுமா)

ஹாஹா அதெல்லாம் வேணாம்டா, நான் பாத்துகிறேன், நீ போய் தூங்கு, good night என்றேன். அவனும் பதிலுக்கு good night சொல்லி, phoneஐ cut செய்தான்.





இடம்:
சென்னை.

(சரவணன் பேசுவது போல)
கொஞ்ச நேரம் கண்னை மூடி தூங்க முயற்சித்தேன், தூங்க மனம் வரவில்லை, பக்கத்திலே சஹானாவின் உடலில் இருந்துவரும் வாசத்தை அனுபவித்தபடி இருந்தேன்.

ஒரு 30 நிமிடம் இருக்கும், என் phone ஒலித்தது, யாரென்று பார்க்க ப்ரியேஷ், அய்யயோ இவன் ஏன் இந்நேரம் கூப்பிடுகிறான். ஒருவேளை அவனுக்கு அங்கே புடிக்கவில்லையா, என்று ஆயிரம் கேள்விகள், phoneஐ எடுக்கலாமா வேண்டாமா என்று யோசனை வேறு, சஹானா ஹ்ம்ம் என்று போன் சத்ததால் முனங்க, உடனே attend செய்தேன், அப்படியே மெதுவாக நகர்ந்துவந்து, அந்த ரூமின் ஓரத்தில் வந்து, மெதுவா ப்ரியேஷ் என்றேன். அவன் எல்லாம் சுகமா என்றான். அவன் குரலில் ஒரு சந்தோசம் இருந்தது, அது எனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது, நான் குறைகளை மட்டும் சொல்லலாம் என்று குறையாய் சொல்ல, அவன் திட்டினான், அது மட்டுமில்லாது, நான் எத்தனை நாள் வேணாலும் இங்கேயே இருப்பேன் என்று அவன் சொன்னது எனக்கு பேரானனத்தை தந்தது, சஹானாவை நான் பார்த்தபடி நீ அங்கேயே இருந்து விடேன் என்று எனக்கு சொல்ல தோன்றியது, கடைசியில் good night சொல்லி phoneஐ cutசெய்தான்.

ஒரு விஷயம் மட்டும் எனக்கு விளங்கியது, அவனுக்கு அங்கே இருப்பது விருப்பம் தான் போல என்று. மீண்டும் சஹானா பக்கம் வந்து படுத்துக்கொண்டேன். அவள் பின்னழகை ரசித்த படி இருந்தேன், போர்வையால் மூடி தான் இருந்தாள், இருந்தாலும் அந்த அங்கங்களை அங்குலம் அங்குலமாக ரசித்தேன், நான் ரசித்து கொண்டிருக்கும் நேரத்தில், சட்டென்று திரும்பி நேராக படுத்தாள், அய்யோ அந்த அழகிய குட்டி மலை குன்றுகள், அடடா என்ன அழகு, என்னை பாடாய் படுத்தியது, பக்கத்தில் அப்படியே கையை கொண்டு போய் horn அடித்து விடலாமா என்று கூட தோன்றியது, அப்படியே குத்திக்கொண்டு நின்றது,

அப்படியே எச்சில் விழுங்கி, பெருமூச்சு விட்டேன். அந்த nightlampஇன் வெளிச்சம், நிலவுஒளி போல இருந்தது, அந்த dressகு அப்படியே ஜொலித்தாள். அவள் சிவந்த உதடுகளை பார்த்தேன், lipstick போடவில்லை, இயற்கையாகவே சிவப்பு நிறம், அப்படியே மெல்லமா கடித்து சாறு உறிஞ்ச வேண்டும் என்று தோன்றியது. மீண்டும் எச்சி முழுங்கி கொண்டேன், என் ஆண்மை என் zipஐ கிழித்து விடும் போல, கையை கொண்டு adjust செய்து, மேலே இருக்கும் படி வைத்து கொண்டேன்.

இந்த வெறியில் இருந்து தப்பித்து கொள்ள ஒரேவழி குப்புற படுத்துக்க வேண்டியது தான் என்று தோன்ற.அப்படியே படுத்தும் கொண்டேன். ஸ்ரீ ராமஜெயம் சொல்வது போல, சஹானா சஹானா என்று சொல்லியபடியே தூங்கினேன், எப்போ தூங்கினேன், எப்படி தூங்கினேன் என்று எனக்கே தெரியவில்லை.





இடம்:
கோயம்புத்தூர்.
அத்தப்பகவுண்டன் புதூர்

(ப்ரியேஷ் பேசுகிறேன்)

எனக்கு உள்ளே செல்லவே ஒரு மாதிரியாக இருந்தது, மல்லிகாவும் எனக்காக வெளியே காத்துக் கொண்டிருந்தான், மல்லிகா நீ போயி தூங்கு, நான் வந்தர்றேன் என்று சொன்னாலும் அவள் கேட்பதாக இல்லை. முதலிரவில் புது மாப்பிள்ளை ஒரு பயம் கலந்த குறுகுறுப்போடு இருப்பானே, அதே பீலிங் தான் எனக்கும் இருந்தது. மல்லிகாவை பார்த்தேன் ஓரு தூணில் சாய்ந்தபடி தரையை பார்த்த படி நின்று கொண்டிருந்தாள்.


எனக்கு ஒரு யோசனை தோன்றியது, பேசாமல் அப்படியே ஒரு walk போய்விட்டு வரலாம் என்று. மல்லிகா என்று கூப்பிட, மாமா என்றாள், வா அப்படியே சும்மா ஒரு நடை நடந்துட்டு வரலாம் என்றேன், இப்போவா மாமா என்றால், ஹ்ம்ம் என்றேன். செரி இருங்க டார்ச் எடுத்துட்டு வரேன் என்று சொல்லி சிட்டாய் பறந்து போனாள். அவ்வளவு சந்தோசம் அவளுக்கு. 20நொடியில் வந்தாள், கதவை மெதுவாக சாத்தியபடி, போலாம் என்று சொல்லி, torchஐ நீட்டினாள். இல்ல நீயே வெச்சுக்க என்றேன்.

street light, 200 அடிக்கு ஒன்று என போட்டு இருப்பதால், ஏதோ கொஞ்சம் வெளிச்சம் இருந்தது, மத்தபடி இருட்டு தான், அந்த இருட்டிலும் அவள் வெட்கப்படுவது எனக்கு தெரிந்தது. இருவருமே அமைதியாக இருந்தோம். இவளிடம் ஏதாவது பேச வேண்டுமே என்று எனக்கு மனம் துடித்தது.

மல்லிகா ரொம்ப நிசப்தமா இருக்கிறனாள கொஞ்சம் பயமா இருக்கு, ஏதாச்சும் பாட்டு பாடு மல்லிகா என்றேன். கொஞ்சம் கூச்சப்பட்டால் நான் வற்புறுத்த ஒடனே முன்பே வா, என் அன்பே வா என்று பாட ஆரம்பித்தாள். உண்மையிலே ஸ்ருதி சுத்தமாக அழகாக பாடினாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது, அய்யோ மல்லிகா போதும் போதும், ரொம்ப பயமா இருக்கு நிறுத்து என்றேன்.

போங்கமாமா என்று வெட்கப்பட்டு முகத்தை மூடிக்கொண்டாள், இருவரும் சிரிக்க அந்த இடமே சந்தோசமாக மாறியது, நான் சும்மா சொன்னேன், உண்மையிலேயே அழகா பாடுன என்றேன். சூப்பரா இருந்துச்சு என்றேன், அவள் thanks மாமா என்றாள், இனிமே தினந்தினம் எனக்கு பாடனும் என்றேன், வெட்கப்பட்டபடியே செரிங்க மாமா என்றாள்.

மாமா ரொம்ப தூரம் வந்துட்டோம், திரும்புங்க வீட்டுக்கு போலாம் என்றாள், மல்லிகா உன்கிட்ட நான் ஒன்னு கேக்கணும், நீ அதை ஏத்துக்கனும் செரியா என்றேன், கேலுங்க மாமா என்றாள். sorry என்றேன், அய்யயோ எதுக்கு மாமா சாரிலாம். என்று பதறினாள், இந்த accident என்னய ரொம்ப மாத்திடுச்சு, வாழ்கைனா என்னனு எனக்கு காட்டிடுச்சு என்று சொல்லு கொஞ்சம் சென்டிமென்ட் போட்டேன்.என் மல்லிகா ரொம்பவே உருகி விட்டாள்.

இனிமேல் உன்னை நான் செல்லமா மல்லி, மல்லினு தான் கூப்பிட போறேன் செரியா மல்லி என்றேன், அவள் வெட்கத்தில் தலைகுனிந்தபடி சிரித்து வெட்கப்பட்டாள். உனக்கு பிடிக்கலையா என்றேன். இல்ல மாமா எனக்கு ரொம்ப புடுச்சு இருக்கு என்று சொன்னாள். அக்கணமே அவளை கட்டிப்பிடித்து கொஞ்ச வேண்டும் என்று எனக்கு தோன்றியது, என்னை control செய்துகொண்டேன்.

மாமா நாளைக்கு மத்தியானம் போல அம்மா, அப்பா வருவாங்க என்றாள்,ஹ்ம்ம் வரட்டும் வரட்டும் என்றேன். அப்படியே வீடுவரும் வரை கலகலப்பாக பேசிக்கொண்டே வந்தேன், நான் சொல்வதற்கெல்லாம் வெட்கப்பட்டு சிரித்தபடியே வந்தாள். வீட்டுக்கு வந்துவிட்டோம், வெளியே இருந்த குளிருக்கு வீட்டுக்குள் கொஞ்சம் இதமாக இருந்தது.

நான் bedஇல் படுத்துக்கொள்ள, அவளும் படுத்துக்கொண்டாள், சேலையை இடுப்புல நன்றாக சொருகியபடி, தலையில் இருந்த பூவை அகற்றி ஓரமாக வைத்துவிட்டு, இரண்டு கைகளையும் தூக்கி கொண்டை போட்டாள், அவள் கையை தூக்கிய வேளை, அவள் இடுப்பு அழகாக எனக்கு காட்சியளிக்க, எனது தம்பி விழித்துக்கொண்டான். அவள் கொண்டயை பின்னியபடியே என்னை பார்த்து சிரித்தாலே ஒரு சிரிப்பு அந்த சிரிப்பில் என் தம்பி சீறிவிட்டான்.

இத்தனை நேரம் குடும்ப குத்து விளக்காய் என் கண்ணுக்கு தெரிந்தவள், இப்பொழுது எனக்கு போதையை ஏத்தினாள். படுத்தவள் என்னை பார்த்தபடி முகம் வைத்து படுத்தாள். போர்வை போதிக்கொண்டாள். அவளை அனுஅணுவாய் ரசித்தேன், அவள் மேல் இருந்து வந்த வாசனை என்னை கொன்றது, அவளை கொட்ட கொட்ட பார்க்க அவளுக்கு புரிந்துவிட்டது போலும், கண்விழித்து என்ன மாமா என்று கேட்டாள், good night என்று சிரித்தேன், அவளும் சிரித்த படி எனக்கு good night சொன்னாள்.

அவளை கண்களாலேயே சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்,
ஒரு கட்டத்தில் என்னால் பொருக்க முடியவில்லை, என்னையும் மீறி, அவளை முத்தமிட சென்றுவிட்டேன், இதழ் பக்கம் நெருங்கும் வேளை, அவள் மூச்சு காற்றின் சுவாசம் என்னை சூடேற்ற, நிலை தடுமாறி உதட்டில் குடுக்க நினைத்த முத்தத்தை அவள் மார்பில் குடுத்தேன், அவள் அப்படியே கொஞ்சம் சிலிர்க்க, சட்டென்று சுயநினைவு வந்து மீண்டும் என் இடத்துக்கு வந்தேன், ச்ச என்ன வேலை பாத்துட்டோம், என்று நான் என்னையே திட்டி அவளை பார்க்க, அவள் இன்னும் உறங்கியபடி தான் இருந்தால். ஹம்ம்ஹூம் இனி தாங்காது என்று, உடனடியாக எழுந்து பாத்ரூம் ஓடிபோயி, என் zipஐ கழட்டி, என் தம்பியை குலுக்கி வெள்ளையனை வெளியேற்றினேன்.

இப்பொழுது தான் நிதானம் ஆனேன், படுத்துக்கொள்ள சும்மா அடுச்சுபோட்டது போல தூங்கினேன்
Reply
#9
update plssssssssssss
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)