வயது ஒரு தடையல்ல! - Completed
#1
பாகம் 1

கை விண்ணென்று வலித்தது!
 
அடித்த எனக்கே இப்படி இருக்கிறது. அடி வாங்கியவளுக்கு எப்படி இருக்கும்?
 
ஆனால், அவளோ எந்தச் சலனமும் இல்லாமல் உட்கார்ந்திருந்தாள். செய்த செயலின் வீரியம், எனது அடி, இத்தனையும் தாண்டி, ஒரு துளி கண்ணீர் கூட இல்லாமல் கீழே, வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
 
ஏய், சொல்லித் தொலை, ஏன் இப்பிடி இருக்க?
 
பெண்கள் என்றாலே சுத்தமாகப் பிடிக்காது என்ற நிலையில் இருந்த நான், கொஞ்சமேனும் மரியாதையாகப் பார்க்கிறேன் என்றால், அதற்குக் காரணமே இவளும், இவ ஃபிரண்டும்தானே? அப்படிப்பட்டவள், இந்தக் காரியம் செய்யத் துணிந்ததில், கடுங்கோபம் எனக்கு!
 
என் வார்த்தைகளின் கடினம் அவளை பாதித்தது. என்னை நிமிர்ந்து பார்த்தாள்! வெறித்துப் பார்த்தாள்!
 
நீ, உன் ரூமுக்கு போ.
 
எதுக்கு? நீ மறுபடி சாவறதுக்கா?
 
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்தவள், இப்பொழுது பொங்கினாள்.
 
நான் வாழுறேன், இல்ல சாவுறேன், உனக்கென்னடா வந்தது? உன் வேலையை மட்டும் பாரு!
 
இப்பொழுது எனக்கு கோபம் வந்தது. ஏதோ போனாப் போகுதுன்னு வந்தா, ஓவரா பேசுறா?!
 
நீ, எக்கேடோ கெட்டுப் போ! ஆனா, என் வீட்டுல வந்து, நீ சூசைட் பண்ணா, அது எனக்குதான் தலைவலி. சாவுறவ, ஏன் எனக்கு தலைவலியைக் கொடுக்குற? கோபத்தில் இன்னும் வார்த்தைகள் தடித்தன. சொன்ன பின்தான் என் முட்டாள்தனத்தை உணர்ந்தேன்.
 
ச்சே! இவ தற்கொலை வரைக்கும் போயிருக்கான்னா, எவ்ளோ மனக் கஷ்டத்துல இருந்திருக்கனும்? இவளோட கஷ்டத்தை போக்கலைன்னாலும், இன்னும் கஷ்டப்படுத்தாமனாச்சும் இருக்கனும், அதை விட்டுட்டு நானும் இப்படி பேசுனா, பாவம் என்ன பண்ணுவா?
 
அவள் அடிபட்டாற போல் என்னைப் பார்த்தாள். என்னையே பார்த்தவள், அழுத்தமாகச் சொன்னாள்.



[Image: all-is-well1.jpg]
ஓ, இது உன் வீடுல்ல? சாரி, எனக்கு தோணலை! மன்னிச்சிடு!
 
நீ தப்பா நினைக்காட்டி, இன்னிக்கு ஒரு நாள் மட்டும் நான் இங்க தங்கிக்கிறேன். நாளைக்கு காலையில கிளம்பிடுறேன். நீ இப்ப கிளம்பலாம். பயப்படாத, இனி உன் வீட்ல நான் தற்கொலை பண்ணிக்க மாட்டேன். ஏன்னா, என்னால, யாருக்கும் எந்த தொந்தரவும் வர்றது எனக்குப் புடிக்காது!
 
ராட்சசி, நான் ஒரு அடி அடித்தால், இவள் திருப்பி பல மடங்கு கொடுக்கிறாள்.
 
நீ கிளம்பு! நான் பாத்துக்குறேன்.
 
சாரி!
 
இட்ஸ் ஓகே! எனக்குன்னு யாராச்சும் இருப்பாங்கன்னு, நானும் ஒரு கனவுலியே வாழ்ந்துட்டேன். அது, என் தப்புதான். சரி நீ போ! நான் பாத்துக்குறேன்!
 
நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
 
இப்பவும், அவளிடம் அந்த கம்பீரம் இருக்கிறது. சுயமாக, உழைத்து மேலே வந்தவர்களிடம் மட்டுமே அந்த கம்பீரம் இருக்கும். இந்த கம்பீரம், நேர்மையின் சின்னம்.
 
என்னைப் போலத்தானே இவளும்! சொல்லப் போனால், என்னை விட இவளுக்குதான் சிரமங்கள் அதிகமிருந்திருக்கும். அப்போது கூட, அதையெல்லாம் எளிதில் வெளிகாட்டிக் கொள்ளாமல், நன்கு படித்து, தன்னை முன்னேற்றிக் கொண்டவள்தானே?
 
இன்று ஏன் இப்படி பேசுகிறாள்? அதுவும் யாரும் இல்லை என்று? என்னதான், அவளது சின்ன மாமானார், மாமியார் மீது பெரிய அபிப்ராயம் எனக்கு இல்லாவிட்டாலும், அந்த வீட்டுக்கு பெரியவர்கள் அவர்கள்தானே? எல்லாவற்றுக்கும் மேலாக இவள் கணவன் என்ன ஆனான்??? ஏன் யாரும் எனக்கு இல்லை என்கிறாள்?!
 
தவிர, ஏன் இப்படி இருக்கிறாள்? பல மாதங்களுக்கு முன், கல்யாணத்தில் பார்த்தது. அப்பொழுது சந்தோஷமாகத்தானே இருந்தாள்? இப்பொழுது ஏன் இவ்வளவு வாடி இருக்கிறாள்? இவ புருஷனும் ஓரளவு பணக்காரன்தானே? என்ன பிரச்சினை இவளுக்கு?
 
எனக்கு அவளைப் பார்க்க பார்க்க பாவமாக இருந்தது! என்னைப் போலவே, சுயநலம் பிடித்த மிருகங்களின் மத்தியில் வளர்ந்தாலும், சுயத்தை இழக்காத, நல்ல பண்புகளுடன், தன்னைத் தானே வளர்த்துக் கொண்ட இன்னொரு ஜீவன்!
 
ம்ம்.. பெரு மூச்சு விட்டேன். அவள் அருகில் சென்றேன்!
 
என்ன ஆச்சு? ஏன் இப்பிடி இருக்க?
 
நீ இன்னும் கிளம்பல? நான் உன்னைக் கெளம்பச் சொன்னேன்! அதான் நாளைக்கு இந்த வீட்டை விட்டுட்டு போறேன்னு சொல்லிட்டேன்ல?!
 
அதான் சாரி சொல்லிட்டேன்ல? இன்னும் ஏன் இப்பிடியே பேசுற? சும்மா சொல்லு! நானும் வீம்பை விடவில்லை!
 
என்னை அவளும், அவளை நானும், மிக நன்றாகப் புரிந்திருந்தாலும், நாங்கள் ஒன்றாக இவ்வளவு நேரம் தனியாகப் பேசியதே இன்றுதான் என்று நினைக்கிறேன். வாய்விட்டே பேசிக் கொள்ளாதவர்கள், மனம் விட்டா பேசியிருக்கப் போகிறோம்? அதனாலேயே நான் வீம்பாகப் பேசினேன்.
 
அவளும் வீம்பாகவே பேசினாள்! எனக்கு 3, 4 வருடங்கள் முன்பே பிறந்தவளாயிற்றே?
 
என் பிரச்சினையை நான் பாத்துக்குறேன். உன்கிட்ட சொல்லனும்னு அவசியமில்லை! நீ போ!
 
நான் அவளை நெருங்கினேன்! அவள் பின்னாடியே சென்றாள்!
 
சொல்லு! என்ன பிரச்சினை?
 
நீ வெளிய போ!
 
சொல்லு!
 
நீ வெளிய போ!
 
சுவர் வரை பின்னாடியே சென்றவள், அதற்கு மேல் நகர முடியாமல் நின்றாள். நான் அவளை நெருங்கினேன்!
 
சொல்லு!
 
நீ போடா! நான் பாத்துக்குறேன் என் பிரச்சினையை! நீ யாரு இடையில?
 
சொல்லு! அழுத்தமாக வந்தது குரல்!
 
இப்போது அவள் கண்களில் கொஞ்சம் கண்ணீர் எட்டிப் பார்த்தது!
 
எனக்கோ மனமே தாங்கவில்லை! எத்தனையோ சமயங்களில் தைரியமாக நின்றவள், இன்று கண்ணீர் விடுகிறாளே! இன்னும் என்ன எனக்கு வீம்பு என்று என்னை நானே கடிந்து கொண்டேன்!
 
அவள் கைகளை அமைதியாக, அழுத்தமாகப் பிடித்தேன். அவளைப் பார்த்துச் சொன்னேன்.
 
நாம பேசிகிட்டதில்லைதான். ஆனா, உன்னைப் பத்தி, எனக்கு நல்லா தெரியும்! என்னைப் பத்தி உனக்கு நல்லா தெரியும். உன் கேரக்டர்க்கு, எங்க இருந்தாலும், நீ சந்தோஷமா இருப்பேன்னுதான் நினைச்சுகிட்டு இருந்தேன். ஆனா, இந்த சூழ்நிலையில உன்னைப் பாத்ததும் என்னால தாங்க முடியலை! அதுனாலத்தான் கோவத்துல கத்துனேன்! மத்தபடி என் வீடு, அப்புடில்லாம் நான் நினைக்க மாட்டேன்னு உனக்கே தெரியும்!
 
நான் என்ன வெளில பேசினாலும், உனக்கு ஒண்ணுன்னா நான் இருப்பேன்! அதே மாதிரி, எனக்காக யாராவது உண்மையா ஃபீல் பண்ணுவாங்கன்னா, அது இப்போதைக்கு நீ மட்டும்தான்னும் எனக்கு தெரியும்!
 
அவள் கண்கள் விரிந்தது! அவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். இந்தப் பத்து வருடங்களில், இன்றுதான் அவளிடம் இந்த மாதிரி பேசுகிறேன் என்று அவளுக்கு ஆச்சரியம்! அவள் கண்களில் கண்ணீர் அதிகமானது!
 
சொல்லுக்கா! ப்ளீஸ். என்ன உன் பிரச்சினை?
 
அவள் இன்னும் என்னை வெறித்துப் பார்த்தாள்!
 
அக்காவா?!



[Image: x1080-s8X.jpg]

பளாரென்று என்னை அறைந்தாள். பின் என் மார்பிலேயே சாய்ந்து அழத் தொடங்கினாள்!


எனது கதைகள்


சாது மிரண்டால் வீடும் கொள்ளாது!!!

வயது ஒரு தடையல்ல!
[+] 1 user Likes whiteburst's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
இக்கதையை மீண்டும் முதலிருந்து படிக்க போகிறேன்.

நன்றி

தொடருங்கள்
Like Reply
#3
Once again reading great start keep rocking bro
Like Reply
#4
super bro continue
[Image: 7f3eac9b49640ff18c05914fa2810247.png]
Like Reply
#5
2.
 
பத்து வருடங்கள் கழித்து இன்றுதான் அக்கா என்று அழைத்திருக்கிறேன்!
 
அவள் இந்த வீட்டுக்கு வந்து, சில மாதங்கள் கழித்து, அவளாக நெருங்கி என் மேல் பாசம் காட்ட முயன்ற போது கூட, அவளை உதாசீனப்படுத்தியவன்! அதற்குப் பின்பும், எப்பொழுதாவது, மிகக் குறைவாக பேசியவன், அதுவும் அவளாக என்னிடம் பேசினாலொழிய பேசாதவன், இன்று நானாக அக்கா என்று சொன்னவுடன் அவளால் தாங்க முடியவில்லை!
 
தனக்கென்று யாரும் இல்லை என்று புலம்பியவளிடம், நான் இருப்பேன் என்று காட்டிய அன்பினை, அவளால் தாங்க முடியவில்லை! அவள் பாரம் தீர, என் மார்பிலேயே நீண்ட நேரம் அழுதாள்!
 
அவள் இப்போது சந்தித்துக் கொண்டிருக்கும் அந்தப் பிரச்சினையை மட்டுமல்ல, இத்தனை நாளாக அவள் மனதில் இருக்கும் ஒரு விதமான அனாதை என்ற உணர்வையும், ஏன் இவ்வளவு நாளாய் இந்த அன்பைக் காட்டவில்லை என்ற கோபத்தையும், இன்னும் அவள் மனதில் இருந்த சின்னச் சின்ன கவலைகள் எல்லாவற்றையும் சேர்த்தே கரைத்தாள்! ஆகையால் ரொம்ப நேரம் அழுதாள்!
 
அவளை அணைத்த படியே நானும் இருந்தேன்.
 
அழுதது அவளாயினும், அவளுடன் சேர்ந்து எனது இறுக்கம், கவலையும் கூட கரைவது போன்ற ஒரு உணர்வு! அவ்வளவு சோகத்திலும், நானும் இதே மனநிலையில் இருப்பேன் என்று எண்ணியிருந்தாள் போலும்.
 
என்னையும் தேற்றுவது போல், அவள் கைகள், என் முதுகை முழுதாக தடவிக் கொடுத்தது! என்னை ஆசுவாசப்படுத்தியது!

[Image: newpg-gharshana128.jpg]
அக்கா இல்லையா? மூத்தவள் கடமையை செய்கிறாள் போலும். அந்த நிலையிலும் எனக்கு சிரிப்பு வந்தது! அவள் எப்போதும் இப்படித்தான், பாசத்தை அள்ளி வழங்கிக் கொண்டே இருப்பாள்!

 

நீண்ட நேரம் அழுதவளின் அழுகை, கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது! சிறிது நேரம் கழித்து விலகினாள்!

 

பாட்டில் தண்ணீரை நீட்டினேன்! குடித்தவள் தாங்க்ஸ் என்றாள்! அவள் முகத்தில் கொஞ்சம் தெளிவு!

 

கொஞ்சம் இரு வரேன்!

 

சமையலறை சென்று இரண்டு கப்களில் டீ எடுத்துக் கொண்டு அவள் அறைக்குச் சென்ற போது, அவள் முகம் கழுவி கொஞ்சம் பளிச்சென்று இருந்தாள்! நான் டீயுடன் வந்ததை விட, நான் திரும்ப வந்தது, அவளுக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது!

 

தாங்க்ஸ்!

 

குடி!

 

குடித்து முடித்தும், இருவரும் கொஞ்ச நேரம் அமைதியாய் இருந்தோம். சிறிது நேரம் கழித்து சொன்னேன்.

 

இப்ப சொல்லு! என்ன உன் பிரச்சினைன்னு?

 
அவள் என்னை பார்த்தாள்! அதில பல கேள்விகள்!

[Image: newpg-gharshana14.jpg]

நீ உண்மையான அக்கறையில கேக்குறியா? இத்தனை நாள் இல்லாம, இன்னிக்கி என்ன புதுசா பாசம்? என் மேல பரிதாபப்படுறியா? உன்னை மாதிரியே, எனக்கும் யாருடைய பரிதாபமும் புடிக்காதுன்னு தெரியாதா உனக்கு? எல்லாத்துக்கும் மேல, திடீர்னு நீ வந்து, அக்கான்னு சொல்லி, கொஞ்சம் பாசம் காட்டுனா, நான் ஃபீல் பண்ணி சொல்லிடனுமா? இப்படி ஏகப்பட்ட கேள்விகள்!

 

எனக்கும் புரிந்தது. மெதுவாகச் சொன்னேன்.

 

இதுவரைக்கும் நடந்ததை மாத்த முடியாது! அதுக்குன்னு சில விளக்கங்கள் இருக்கும். மாத்த முடியாட்டியும், ஏன் அப்புடி நடந்துன்னு பேசி புரிஞ்சிகிட்டு, இனி அப்படி நடக்காம பாத்துக்கலாம். ஆனா, அது அவ்ளோ முக்கியம் இல்லை இப்ப!

 

இப்ப முக்கியம், உன் பிரச்சினைதான். என்னால, நீ தற்கொலை வரை போனதை என்னால புரிஞ்சிக்கவே முடியலை. அப்படி என்ன பிரச்சினை உனக்கு?

 

அவள் இன்னும் வாய் திறக்கவில்லை!

 

நான் ஒண்ணும் வாய் வார்த்தைக்காக சொல்லலை. நான் தள்ளிதான் நின்னேனே ஒழிய, வெறுத்தது கிடையாது. உன்னை எனக்கு எப்பியுமே பிடிக்கும். இன்னும் சொல்லப் போனா, நீ எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன்! பெரிய இன்ஸ்பிரேஷன். சுத்தி நடக்குற எந்தப் பிரச்சினையும் நம்மை பாதிக்காம, தன்னைத் தானே ஒழுங்கா எப்புடி வளத்துக்குறதுன்னு உன்னைப் பாத்துதான் கத்துகிட்டேன்.

 

உன் ஒழுக்கம், தைரியம், மனவலிமை முக்கியமா, காசு பெருசில்லைன்னு நினைக்கிறது எல்லாமே எனக்கு ரொம்பப் புடிச்ச விஷயம்! அப்படிப்பட்ட நீ இன்னிக்கு இப்பிடி பண்ணங்கிறதை என்னால தாங்க முடியலை.

 

நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டிருந்தேன். எப்போதும் உணர்ச்சியைக் காட்டாத கல்லைப் போல இருப்பவன், இன்று இவ்வளவு பேசியது, அவளுக்கும் மிக்க ஆச்சரியம். அவளும் உணர்ச்சிவயப்பட்டு இருந்ததை அவள் கலங்கிய கண்கள் சொல்லியது.

 

மெல்ல அவள் கையைப் பிடித்தேன். நீ தற்கொலைக்கு முயற்சி பண்ணதையே என்னால தாங்க முடியலை! ஆனா நீ என்னான்னா, உனக்குன்னு யாரும் இல்லைன்னு சொல்றதை எப்டி எடுத்துக்குறது?! இப்டில்லாம் நீ யோசிக்கக் கூட மாட்டியே? ஹரீஷ் என்ன ஆனாரு? உன் மாமானார், மாமியார் என்ன ஆனாங்க? மறந்தும் நான், அவள் அப்பா, அம்மாவைப் பற்றி கேட்கவில்லை.

 

எனது அன்பில் மிகவும் கரைந்தாள். இருந்தும் தயங்கினாள்! என் கையை இறுக்கப் பற்றிக் கொண்டாள்! அவள் உதடுகள் மட்டுமல்ல உடலும் நடுங்கியது!

 

அவள் சொல்லி முடித்தாள்!

 

கடுங்கோபத்திலும், திக்பிரம்மை பிடித்தும் இருந்தேன். செயல்களை விட, செய்யத் துணியும் ஆட்கள், அவர்கள் ஸ்டேட்டஸ், வயது, உறவு இவைதான் எனக்கு மிகுந்த பாதிப்பைத் தந்தது.

 

என் தோளில் சாய்ந்து அழுதுகொண்டிருந்தாள். எனக்கே, இப்படி இருக்கையில், இவளுக்கு எப்படி இருக்கும்!

 
அவள் சொன்னது அப்படி!


எனது கதைகள்


சாது மிரண்டால் வீடும் கொள்ளாது!!!

வயது ஒரு தடையல்ல!
[+] 1 user Likes whiteburst's post
Like Reply
#6
3.

 
கல்யாணம் பண்ணிக் கொடுத்ததோட கடமை முடிஞ்சுதுன்னு, அம்மாவும், அப்பாவும் இருந்துட்டாங்க. நீ சும்மாவே என்கிட்ட பேச மாட்ட. அந்த வீட்டுக்கும் வந்தது கிடையாது. அங்க என்ன நடக்குதுன்னு யாருக்காச்சும் தெரியுமா?
 
என்ன இப்டி சொல்ற? ஹரீஸ் நல்லவர்தானே? உனக்கு புடிச்சுதானே மேரேஜூக்கு ஓகே சொன்ன.
 
நல்லவர்தான்! ஆனா ரொம்ப நல்லவர், அதான் பிரச்சினை. பிசினஸ், படிப்பு இதுலல்லாம் பயங்கர புத்திசாலியா இருக்கிற ஆளு, கண்மூடித்தனமான பாசத்துல அடி முட்டாளா இருக்குறாரு!
 
என்ன சொல்ற? பொதுவா நீ மத்தவிங்க மேல பாசமா இருக்கனும்னுதானே நினைப்ப. நீ எப்பிடி இதுல தப்பு சொல்ற?
 
நாம பாசம் வெக்குறதுக்கும், மரியாதை வெக்குறதுக்கும் ஒரு தகுதி வேணும்! ஆனா, தொடர்ந்து தன்னை ஏமாத்திகிட்டு இருக்குற ரெண்டு பேரை கண்மூடித்தனமா நம்புற முட்டாளை என்னன்னு சொல்றது? நான் ஏமாத்துவேன், இருந்தும் உன் புருஷன் நம்புவான், அவன்லாம் ஆம்பளையா, அவன் லூசுன்னு என்கிட்டயே ஏளனமா சொல்றவிங்களை என்ன சொல்றது?
 
நீ யாரைச் சொல்ற?
 
வேற யாரு?! என் சின்ன மாமனார்தான். எல்லாம் தெரிஞ்சும் சும்மா இருக்குறது என் சின்ன மாமியார்!
 
ஏய், என்ன சொல்ற? அவிங்களைப் பாத்தா நல்லவங்க மாதிரி இருந்துது. அவிங்க உன் கிட்ட கோபப்பட்டு கூட நான் பாத்ததில்லையே.
 
ஏளனமாகச் சிரித்தாள்... பொய்யா நடிக்கிறவன்தான், காரியம் முடியற வரைக்கும், சுயரூபத்தை வெளிய காட்டிக்கவே மாட்டான். உண்மையா இருக்குறவன், எல்லா உணர்ச்சியையும் காட்டுவான். அதான், அவிங்க என்கிட்ட கோவப்பட்டதில்லை.
 
கல்யாணம் ஆன உடனே, அவரு என்கிட்ட சொல்லிட்டாரு. அவிங்க அப்பா அம்மா போனதுக்கப்புறம், அவரை நல்லபடியா வளத்து, பாசமா பாத்துகிட்டவிங்க, அவரு சித்தப்பாவும், சித்தியுந்தானாம்.
 
அதுனால, அவிங்க, அப்பா, அம்மாவுக்கும் மேலியாம். அதுனால, அவிங்களைப் பத்தி சும்மாக் கூட தப்பா சொல்றது, தேவையில்லாம பேசுறது, கோள் மூட்டுறது, முக்கியமா அவிங்ககிட்ட இருந்து பிரிக்க நினைக்கிறது இதெல்லாம் பிடிக்காதுன்னு கண்டிஷனா சொல்லிட்டாரு!
நானும், அவ்ளோ நல்லவிங்களை என்னத்தை போயி சொல்லப் போறோம்னு கம்முனு இருந்துட்டேன். ஆனா, கொஞ்சம் கொஞ்சமாதான் அவிங்க சுயரூபம் தெரிஞ்சுது!
 
முதல்ல, நான் கொண்டு வந்த சீர் பத்தலைன்னு, என் மாமியார் மூலமா ஆரம்பிச்ச பிரச்சினை, கொஞ்சம் கொஞ்சமா வளந்து ரொம்பக் கேவலமான நிலைக்கு போயிருச்சி.
 
என்ன சீர் பத்தலையாம்? பயங்கர ஆடம்பரமாதானே கல்யாணம் நடந்துது? நான் அதுல எந்த பிரச்சினையும் பண்ணலியே?
 
கல்யாணத்துலல்லாம் திருப்திதான். அப்ப, அமைதியாத்தான் இருந்தாங்க என்று சொன்னவள் என்னையே பார்த்தாள்.

[Image: newpg-gharshana127.jpg]

அப்பா, அம்மாவை, இந்த பிசினஸ், சொத்து இதுலெல்லாம் இருந்து தள்ளி வைக்க, என் கல்யாணம் முடியட்டும்னுதான் வெயிட் பண்ணியா?

 

நான் ஆச்சரியமானேன்! அது எப்படி உனக்கு தெரியும்?!

 

அவள் இகழ்ச்சியாக சிரித்தாள். நீ அப்பாவை பிசினஸ் பக்கம் வர வேண்டாம்னு சொன்னது, சொத்துல பங்கில்லை, வீட்டோட இருங்க, மாசா மாசம் காசு மட்டும் தரேன்னு சொன்னது, எல்லாம் அவங்களுக்கும் தெரியும். தெரிஞ்சதுக்கு அப்புறம்தான் அவிங்க ஆட்டம் ஆரம்பிச்சுது.

 

பெத்தவிங்க கையில பெருசா காசில்லை. செல்வாக்குள்ள உனக்கோ, அவிங்களை சுத்தமா புடிக்காது. அவிங்களையே புடிக்கதவன், அவிங்க பொண்ணையா கண்டுக்கப் போறேன்னு நினைச்சுகிட்டாங்க. அதுக்கேத்தா மாதிரி அவிங்களும் அடுத்து வந்த தல தீபாவளி, இன்னும் மத்த சீரெல்லாம் காசில்லைன்னு செய்யவே இல்லை. அதுல ஆரம்பிச்சுது அவிங்க கொடுமை!

 

முதல்ல காசுக்காக ஆரம்பிச்ச விஷயம், எனக்கு யாருமில்லை தெரிஞ்சதும் அவிங்க ஆட்டம் ஓவராயிடுச்சு!

 

பணம்த்துக்காக உன்னைக் கொடுமை பண்றது, அதை உன் புருஷன் புரிஞ்சிக்காதது இதான பிரச்சினை? ஹரீஸ் அடிப்படையில நல்லவர்தானே? இதுக்கா சூசைட் வரைக்கும் போன?

 

அவள் என்னைப் பார்த்த பார்வையே சொன்னது, வேறேதோ பெரிதாக இருக்கிறது என்று!

 

இன்னும் என்ன?

 

பணத்துக்காக ஆரம்பிச்ச விஷயம், கொஞ்சம் கொஞ்சமா என் மாமனாரோட வக்கிர புத்தியை காமிச்சுது.

 

அவருக்கு பல பெண்களோட தொடர்பு இருக்கு. அவரோட செக்ரட்டரி முதற்கொண்டு, சொந்த ஆஃபிஸ்லியே சிலரோட கனெக்‌ஷன் இருக்கு. அது, அவர் சொந்த விஷயம். ஆனா, போகப் போக….

 

சொல்லிக் கொண்டே இருந்தவள் உடைந்து அழுதாள்.

 

எனக்கோ புரிந்து பயங்கரக் கோபம் வந்தது. என்ன பண்ணான் உன்னை? ம்ம்?

 

அவன் என்னை, என் விருப்பமில்லாம ரேப் பண்ணியிருந்தா கூட பரவாயில்லை. ஆனா, என்னை சித்ரவதை பண்றான். வக்கிரமா பேசுறான். வார்த்தையிலியே கொல்றான்.

 

எ… என்ன பண்ணான்க்கா? அவள் கையை இறுகப் பற்றினேன். என் தோளிலேயே சாய்ந்து அழுதவள், சிறிது நேரம் கழித்து சொன்னாள்.

 

அவன் ஆசைப்படுறப்பல்லாம், நான் அவன் கூட படுக்கனுமாம்! அதுக்கு, எனக்கு 3 மாசம் டைம் கொடுத்திருக்கான். சிரிச்சுகிட்டே சொல்றான், நீ யார்கிட்ட வேணா போயி சொல்லிக்கோ. உன் புருஷனே, இதை முதல்ல நம்ப மாட்டான். உன்னைதான் அசிங்கமா சொல்லுவான். உன் அப்பா, அம்மாவும் எதுக்கும் லாயக்கில்லை. நான் காசு தர்றேன்னு சொன்னா, அவிங்க கண்டுக்காம கூட இருப்பாங்க. சொல்லப் போனா அவிங்களே அனுப்பி வைப்பாங்க, அந்த மாதிரி கேரக்டர்தானே அவிங்க. உன், தம்பியும், உன்னை மதிக்கவே மாட்டான்! நான் உனக்கு 3 மாசம் டைம் தரேன். நல்லா யோச்சிச்சிட்டு வா நு சொன்னான்!

 

 அவன் பிளான் பண்ணிதான் பண்ணியிருக்கான். ஆரம்பத்துல இருந்தே எங்க அந்தரங்கத்துல அவன் தலையிடுவான். கல்யாணமான புதுசுலியே, எனக்கு ஒரு தோஷம் இருக்கு, அதன் படி, இன்னும் ஒன்றரை வருஷத்துக்கு, மாசம் ஒரு தடவைதான் உறவு வெச்சுக்கனும், இல்லாட்டி என் உயிருக்கே ஆபத்துன்னு என்னையும், ஹரீசையும் கூப்பிட்டு சொன்னான். இந்த லூசும் ஓகேப்பான்னு சொல்லுது! கணவன் மனைவியோட பெர்சனல் லைஃபுக்குள்ள தலையிடுறவனை என்னன்னு சொல்லுறது?

 

அப்புறம் வேணும்னே, அவரை கண்டினியுவசா ட்ரிப்புக்கு அனுப்புனான். சின்னச் சின்ன விஷயங்கள்ல, நான் பண்ணாததை, பண்ணதாவும், எங்களை மதிக்கிறதேயில்லைங்குற மாதிரியும் இன்டைரக்ட்டா சொல்லி, அவிங்க முன்னாடியே என்னை திட்ட வெச்சான். எனக்கு ஆரம்பத்துல புரியலை, ஏன் இப்பிடி நடந்துக்கிறாங்கன்னு. ஆனா, அவன் என்ன எதிர்பாக்கிறான்னு தெரிஞ்சதும்தான் புரிஞ்சுது!

 

அவன், என்னை வேணும்னு, சொல்லி ஒரு மாசம்தான் ஆச்சு. அதுக்குள்ளியே ரொம்ப சித்ரவதையை அனுபவிச்சிட்டேன். அவரை வெச்சுகிட்டே, அவரு பாக்காதப்ப என்னை அசிங்கமாப் பாப்பான். அசிங்கமா சைகை செய்வான். யாரும் இல்லாதப்ப கமெண்ட் அடிப்பான். ட்ரிப் போறாருன்னா, நைட்டு துணைக்கு கூட படுத்துக்கட்டுமான்னு அவர் முன்னாடியே கேப்பான். இவருக்கு அது எதுவும் தப்பா தெரியாது.

 

என்கிட்ட வந்து, காய்ஞ்சு போயிருப்ப, அவனே மாசம் ஒரு தடவைதான் தொடுவான். நான் நினைச்சா அதையும் நிறுத்த முடியும். உன் புருஷன் அதையும் கேப்பான். அவன் ஒரு ஆம்பிளைன்னு ஏன் வெயிட் பண்ற? அவனையே ஆட்டிப் படைக்கிற நான் ஆம்பளையா, இல்ல அவனா? பேசாம நான் சொல்றதேயே கேளுங்கிறான்!

 

ஒரு தடவை, ஹரீஸ்கிட்ட, அந்தாளு கால்ல அடிபட்டுடுச்சின்னு ஏதோ ஹெல்ப் கேட்டதுக்கு, நான் மாட்டேன்னு சொல்லிட்டேன்னு சொன்னான். அதுக்கு என் புருஷனும், அவருக்கு வலிக்குதுன்னா, காலை கூட புடிச்சு விடனும், அவரு உன் அப்பா மாதிரின்னு கோவமா பேசுறாரு.

 

அவர் போனதுக்கப்புறம், நான் கேட்டா, உன் புருஷன், என் காலை மட்டுமில்லை, வேறெதை வேணா புடிக்கச் சொல்லுவான்னு அசிங்கமா சிரிக்கிறான். இந்த சித்ரவதையைத் தாங்க முடியலைடா! என்று சொல்லி அழுதாள்!

 

அதிர்ச்சியில் இருந்தாலும், கோபத்தில் கேட்டேன். அவன் பொண்டாட்டி, எப்புடி இதை வேடிக்கை பாக்குறா?

 

அவளுக்கு பணம் இருந்தா போதும்! புருஷன் யோக்கியதை, அவனோட கனெக்‌ஷன் எல்லாம் தெரியும். மாசம் அவளுக்கு ஒரு நகையோ, புடவையோ வாங்கிக் கொடுத்தா போதும். கம்முனு இருப்பா. நினைச்சப்ப ஃபங்க்‌ஷன், க்ளப், ஹோட்டலுக்கு போகனும். அவ்ளோதான். நல்ல சீர் வரும்னு நினைச்சுதான் என்னை மருமகளா ஏத்துகிட்டாளாம். இப்ப, சொத்து இல்லைன்னு தெரிஞ்சவுடனே அவளுக்கு எம் மேல செம கோவம். அதுனால, புருஷன் என்ன பண்ணாலும் கண்டுக்க மாட்டா!

 

ஹரீஸ்கிட்ட மனசு விட்டு பேசிப் பாத்தியா?

 

கண்மூடித்தனமா நம்புற முட்டாள்கிட்ட, என்ன பேசச் சொல்ற? அதையும் மீறி ரெண்டு மூணு தடவை பேசுனப்பல்லாம், என்கிட்டதான் சண்டைக்கு வந்தாரு. வெக்கத்தை விட்டு, ஒரு தடவை, அவிங்க அப்பா பார்வை சரியில்லைன்னு சொன்னதுக்கு, என் புத்தி கெட்ட புத்தி, வக்கிர புத்தின்னு சொல்லி அடிக்க வந்துட்டாரு! என்ன பண்ணச் சொல்ற???

 

கட்டுன புருஷன் நம்ப மாட்டேங்குறான். மாமானார் தப்பா நடந்துக்குறான். மாமியாரு வேடிக்கை பாக்குறா. என் அப்பா அம்மாகிட்ட சொல்றது வேஸ்ட். உனக்கு என்னைப் பத்திய கவலையே இல்லை. அப்ப நான் யார்கிட்ட போயி, என்னான்னு சொல்றது?

 

போடா, இப்ப மட்டும் எதுக்கு வந்த? இத்தனை வருஷமா கண்டுக்காதவன், இப்ப என்ன புதுசா பாசம்? அன்னிக்கு சொன்னியே, நீ அனாதை, உனக்கு யாருன்னு இல்லைன்னு! இப்ப நான் உன்னை விட பெரிய அனாதை! சந்தோஷமா உனக்கு! இப்ப எதுக்கு வந்தியாம்? போ! வந்துட்டான் பெருசா!

 

எத்தனை நாளா உன்கிட்ட பேசியிருக்கேன். பெரிய இவனாட்டாம், பேசாமியே இருந்துட்டு, இன்னிக்கு என்னாத்துக்கு வந்த? உனக்கு அவ்ளோ வீம்பு இருக்குன்னா, எனக்கு எவ்ளோ வீம்பு இருக்கும்? அப்படி ஒண்ணும், நீ என் விஷயத்துல தலையிட வேண்டாம்.

 
இவ்வளவு நேரம் இருந்த மனப்பாரம் சற்றே நீங்கிய நிம்மதியில், அவள் எப்போதும் எதிர்பார்க்கும் என் பாசம், புதிதாக கிடைத்த சந்தோஷத்தில் என்னைத் திட்டிக் கொண்டிருந்தாள்! என் தோளில் சாய்ந்து கொண்டே!

[Image: hqdefault.jpg]


எனது கதைகள்


சாது மிரண்டால் வீடும் கொள்ளாது!!!

வயது ஒரு தடையல்ல!
[+] 1 user Likes whiteburst's post
Like Reply
#7
Super
Like Reply
#8
Intha story full version irukka...illa stop panniruvingala
Like Reply
#9
Super
Like Reply
#10
nice...
Like Reply
#11
(10-07-2019, 11:49 AM)badboyz2017 Wrote: இக்கதையை மீண்டும் முதலிருந்து படிக்க போகிறேன்.

நன்றி

தொடருங்கள்

(11-07-2019, 07:34 AM)Ramakrishnan Wrote: Once again reading great start keep rocking bro

(11-07-2019, 08:51 AM)Deepakpuma Wrote: super bro continue

(11-07-2019, 10:10 AM)badboyz2017 Wrote: Super

(11-07-2019, 05:13 PM)joaker Wrote: Super

(11-07-2019, 06:09 PM)sriork Wrote: nice...

அனைவருக்கும் நன்றி!
Like Reply
#12
(11-07-2019, 04:57 PM)Niru Wrote: Intha story full version irukka...illa stop panniruvingala

கதை என்னுடையது! ஆகவே, முழுதும் பதிவிடப்படும்!
Like Reply
#13
4.
 
யார்ரா இவன்? அக்காங்கிறான், ஆனா பேசுனதே இல்லைங்கிறான்.  பாசத்துல உருகுறான். அப்பா அம்மாவையே தள்ளி வெச்சிட்டேங்கிறான். ஒண்ணும் புரியலியே என்பவர்களுக்கு, என் முன் கதைச் சுருக்கம்!
 
என் பெயர் மதன். இப்போதைய வயது 27. என் அக்காவின் வயது 30. எனக்கு பெண்கள் என்றாலே வெறுப்பு. அதற்கு மிக முக்கியக் காரணம், என் பாட்டி, என் சித்தி அப்புறம் மிக முக்கியமாக என் அம்மா!
 
என் தந்தை மிக அழகானவர். நல்ல வாட்டசாட்டமானவர். என் அம்மா, மிகப் பெரும் கோடீஸ்வரரின் மகள். பார்க்கச் சுமாராகத்தான் இருப்பார். ஏகப்பட்டச் சொத்து, ஏகப்பட்ட பிசினஸ்கள்!
 
பணம் என்றால் கொஞ்ச நஞ்சமல்ல, பல தலைமுறைக்குச் சேரும்!
 
என் அம்மாவின் அப்பா (தாத்தா), பணத்தை பெருக்கும் வேளையில் பிசினசில் தொடர்ந்து ஈடுபடுகையில், என் அம்மாவை ஒழுங்காக வளர்க்க வேண்டிய என் பாட்டியோ, தன் இஷ்டம் போல் ஆட, விளைவு, என் அம்மா, சுய சிந்தனையற்ற, பிடிவாதம் கொண்ட ஒரு முட்டாளாகவே வளர்ந்தார்.
 
அப்படிப்பட்ட முட்டாளை, தன் அழகை வைத்து, காதல் என்ற வலையில் என் தந்தை வீழ்த்தினார். பிடிவாதம் கொண்ட என் அம்மாவும், மணந்தால் என் தந்தையைத்தான் மணப்பேன் என்றூ சாதித்தார். அவர் அப்போது, எங்கள் நிறுவனத்திலேயே, ஒரு மேனேஜராக இருந்தார். என் தந்தை அழகு மட்டுமல்ல, மிகுந்த புத்திசாலியும் கூட. ஆனால், அது குறுக்குபுத்தியாக மட்டுமே வேலை செய்யும்!
 
அது என் தாத்தாவிற்கு நன்கு தெரியும். ஆகையால் அவர் திருமணத்தை முடிந்த வரை எதிர்த்தார். ஆனால் பலனில்லை. இறுதியில், முட்டாளான என் அம்மாவிடம், பாசத்தின் காரணமாக, புத்திசாலியான என் தாத்தா தோற்றார்.
 
அந்தக் கல்யாணத்தின் விளைவு நான் பிறந்தேன். என் அப்பா, எங்கள் நிறுவனத்தின் எம் டி ஆனார். என் தந்தைக்கு காசு வேண்டும். என் அம்மாவிற்கு, என் தந்தையின் அழகை அடைந்தால் போதும். இப்படித்தான் அவர்கள் வாழ்க்கை இருந்தது. என் அப்பா, பெரும்பாலும் வீட்டில் இருக்க மாட்டார். பிசினஸ் விஷயமாக வெளியூர் அடிக்கடி சென்று வருவார்.
 
நான் பெரும்பாலும் வேலைக்காரர்கள் கையில்தான் வளர்ந்தேன். என் பாட்டியைப் போலே, என் அம்மாவும், என்னிடம் பெரிதாக பாச காட்டவில்லை. சின்ன வயதிலிருந்து நான் கேட்டதெல்லாம் கிடைக்கும், பாசம் ஒன்றைத் தவிர. என் தாத்தா மட்டுமே, எனக்காக மிகவும் வருந்துவார். அந்தச் சின்ன வயதில், நான் பாசத்திற்க்காக ஏங்குவதும், அது கிடைக்காமல் நான் தவிப்பதும், அவருக்கு பெரும் துயரத்தைத் தந்தது. இருந்தும் அவராலும், ஒரு அளவிற்கு மேல் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை. அவர் ஆரம்பத்திலிருந்தே என் தந்தையை நம்பவில்லை.
 
நான் பத்தாவது படிக்கும் சமயம், இன்னும் 10 நாட்களில் எனக்கு பொதுத் தேர்வு வருகின்ற சமயம். அந்தச் சமயத்தில்தான் அந்த உண்மை எங்களுக்கு தெரியவந்தது.
 
அதாவது, என் தந்தைக்கு, என் அம்மாவைத் திருமணம் செய்யும் முன்பே, இன்னொரு திருமணம் ஆகி இருந்தது. அவருடைய முதல் மனைவிக்கும் கூட, காசிற்க்காக என் அம்மாவை, என் அப்பா மணப்பது சம்மதம் என்கிற உண்மை.
 
அந்த உண்மை தெரிந்த அடுத்த நாள், என் அம்மா தற்கொலை செய்து கொண்டார்.
 
அன்னையின் தற்கொலை எனக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை மட்டுமல்ல, சில மனச் சிக்கல்களையும் எனக்கு தந்தது.
 
கேவலம், இந்தத் தருணத்தில் கூட, எனக்காக வாழ வேண்டும் என்கிற எண்ணம் வரவில்லையா? இவர் ஆசைப்பட்டால், தந்தை வேண்டும். தந்தை ஏமாற்றி விட்டார் என்றால் தற்கொலை செய்து கொள்வார். அவ்வளவு சுயநலம், பிடிவாதம். அப்புறம் ஏன் என்னைப் பெற்றெடுக்க வேண்டும்?
 
ஏனோ, எனக்கு என் தந்தையை விட, என் தாயின் மேல் கடும் வெறுப்பு வந்தது.
 
அந்த முகம் தெரியாத அந்த முதல் மனைவியின் மேலும் கடும் வெறுப்பு வந்தது! எந்த மாதிரி பெண்ணாக இருந்தால், காசுக்காக, தன் கணவனை விட்டு, இன்னொரு பெண்ணை ஏமாற்றச் சொல்லுவாள்? இந்த துரோகமும், ஏமாற்றமும், சின்ன வயதிலிருந்தே கிடைக்காத பாசமும், என்னை ஒரு உணர்வற்ற, பெரிதாக எதற்க்கும் அலட்டிக் கொள்ளாத ஒரு மனிதனாக கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியது. நான் ஒரு இரும்பு மனிதனானேன்.
 
பொதுத் தேர்வு ஆரம்பிப்பதற்க்கு இரண்டு நாட்கள் முன்பு, என் தாய் இறந்த ஒரு வாரத்திற்க்குள், என் தந்தை, அவர் முதல் மனைவியையும் என் வீட்டிற்க்கே கூட்டி வந்தார். அதற்க்கு என் தாத்தா பெரிய எதிர்ப்பு தெரிவிக்கையில், தன் பையனான என்னை அழைத்துக் கொண்டு தான் வெளியேறி விடுவதாகவும், சட்டப்படி ஒன்றும் செய்ய முடியாது என்றும் என் தந்தை பயமுறுத்த, வேறு வழியின்றி என் தாத்தாவும், எனக்காக அதைச் சகித்துக் கொண்டார்.
 
அப்பேர்பட்ட என் தந்தைக்கும், அவர் முதல் மனைவிக்கும் பிறந்தவள்தான், இவள். என் அக்கா!
 
என்னை விட மூன்று வருடங்கள் மூத்தவள். இந்தச் சம்பவம் நடக்கும் போது அவள் ஒரு பெரிய பொறியியல் கல்லூரியில் முதல் வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள்.
 
என் தந்தை, சித்தியுடனும், இவளுடனும் என் வீட்டுக்குள் நுழையும் போதுதான் இவளை முதலில் பார்த்தேன். அப்போது, அவள் கண்களில் மிரட்சி இருந்தது. அவளது தந்தை மேலும், தாயின் மேலும், வெறுப்பு இருந்தது. என்னைப் பார்த்த போது கொஞ்சம் பரிதாபம் கூட இருந்தது.
 
நானோ, எந்த உணர்வையும் காட்டாமல், கல்லைப் போல் முகத்தை வைத்திருந்தேன்.


[Image: asin_033.jpg]
அதன் பின்னும் இதே நிலை நீடித்தது. எப்போதும் போல் என் தந்தை என்னை கண்டு கொள்வதில்லை. சித்தியும் அப்படியே. என் தாத்தா மட்டுமே, என்னிடம் கூடுதல் நேரம் ஒதுக்கினார்.
 
நான் எதையும் வெளியே காட்டாமல், படித்து தேர்வு எழுதினேன். 2 மாதம் கழித்து தேர்வு முடிவு வெளிவந்த போது, நான் பள்ளியிலேயே முதலிடம் வாங்கியிருந்தேன். அது என் தாத்தாவிற்கு மிகப் பெரிய சந்தோஷம் கொடுத்தது. என் தாத்தா, என்னைக் கட்டிப் பிடித்து ஆனந்தக் கண்ணீர் விட்ட போதுதான், என் அக்கா என்னிடம் தயங்கித் தயங்கி வந்தாள்.
 
கங்கிராட்ஸ்! என்றூ சொன்னவள், ஒரு சின்ன கிஃப்ட்டை என்னிடம் நீட்டினாள்.
 
ஒரு பக்கம் எனக்கு ஆச்சரியம், இன்னொரு பக்கம் கடுப்பு. ஏனெனில், அவள் வீட்டுக்கு வந்து 2 மாதம் ஆகியிருந்தாலும், அவள் என்னிடம் பேசியதே இல்லை, நானும் அவளை கண்டு கொண்டதே இல்லை. அதே சமயம், நான் இன்னொன்றையும் கவனித்திருந்தேன், அவள், அவளுடைய அப்பா, அம்மாவிடமே அதிகம் பேசுவதில்லை என்பதையும். அவள், என் தாத்தாவிடம் மட்டும், கொஞ்சம் அதிக நேரம் பேசுவதையும், சில சமயம் என் தாத்தா, மிக லேட்டாக வீட்டிற்கு வருகையில், அவரை கவனித்துக் கொள்வதையும் பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்டவள், இன்று அவளாகவே வந்து கிஃப்ட் தருகிறாள்.
 
இருந்தும், என் தந்தை, அவள் அம்மாவின் மீதான கடுப்பில், மூஞ்சில் அடித்தாற்போல் சொன்னேன்.
 
எங்க வீட்டு காசுல, எனக்கே, கிஃப்ட் தர்றியா?
 
அவள் என்னையே வெறித்து பார்த்தாள். பின் மெதுவாய் சொன்னாள்,
 
நான் பார்ட் டைம்ல, வீகெண்ட்ல, ஒரு டெக்ஸ்டைல் ஷோரூம்ல வொர்க் பண்றேன். அதுல சம்பாதிச்ச காசுதான் இது!
 
உன் வயசுக்கு, இந்த நேரத்துல, இத்தனை அதிர்ச்சியையும் வாங்கிட்டு, இவ்ளோ அருமையா மார்க் வாங்கியிருக்கிற உன் திறமையை என்னால சாதாரணமா எடுத்துக்க முடியலை. அதுனாலத்தான் இந்த கிஃப்ட்.
 
மத்தபடி, அவரு எனக்கு அப்பாங்கிறதுனால, காசை வைச்சுதான் எல்லாத்தையும் நான் பாப்பேன்னு நீயா முடிவு பண்ணிக்காத, என்று சொல்லியவள், கிஃப்ட்டை அருகிலுள்ள டேபிளில் வைத்து விட்டு செல்ல ஆரம்பித்தாள்.
 
இரண்டு எட்டு வைத்தவள் நின்று, பின் மீண்டும் திரும்பி சொன்னாள். நடந்த விஷயங்கள், உன்னை எந்தளவு பாதிச்சிருக்கும்னு எனக்கும் புரியுது. ஆனா, இதுனால நீ மட்டும்தான் பாதிப்படைஞ்சிருக்கன்னு நீயா நினைச்சுகிட்டீன்னா, அதுக்கு நான் பொறுப்பு கிடையாது. உனக்குனாச்சும், தாத்தான்னு ஒருத்தர் இருக்காரு, ஆனா எனக்கு என்று சொல்லியவள், ஒரு பெரு மூச்சு விட்டு, எப்படியிருந்தாலும் உன் திறமைக்கு, நீ வாங்கியிருக்கிற மார்க்குக்கு, என் வாழ்த்துக்கள்.
 
எந்தக் காலத்துலியும், இந்தத் திறமையை, உன் படிப்பை நீ விட்டுடாம, இன்னும் மேல வளரனும் என்று சொல்லிவிட்டு வேகமாகச் சென்று விட்டாள்!

[Image: Asin+Thottumkal+Photo+21.png]

எனது கதைகள்


சாது மிரண்டால் வீடும் கொள்ளாது!!!

வயது ஒரு தடையல்ல!
[+] 1 user Likes whiteburst's post
Like Reply
#14
5.
அவளது அன்றைய பேச்சு, எனக்கு மட்டுமல்ல, என் தாத்தாவிற்கும் அவள் மேல் ஒரு சின்ன அபிப்ராயத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னும் நாங்கள் பேசிக் கொள்வதில்லை. ஆனால், தாத்தா, அவளுடனும் பாசம் காட்ட ஆரம்பித்தார். நாங்கள் கவனித்த வரை, அவளும் பாசத்துக்காக ஏங்குவதும், அவளது பெற்றோர்களின் மேல் வெறுப்பாய் இருப்பதும், சுயமாக படிப்பு, இன்ன பிற விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதும், மிக முக்கியமாக, முடிந்தவரை அந்த வீட்டின் பணத்தையும், வசதிகளையும் அனுபவிக்காமல் இருப்பதும் புரிந்தது.
 
இவை யாவும், அவள் மேலுள்ள என் நல்ல அபிப்ராயத்தை அதிகப்படுத்தியது என்றால், தாத்தாவிற்கு அவள் மேல் மிகுந்த பாசத்தை ஏற்படுத்தியது. ஒரு வகையில், தாத்தாவும் பாசத்திற்கு ஏங்குபவரே. மனைவியும் சரியில்லை, பெற்ற பெண்ணும் சரியில்லாமல் தற்கொலை செய்து கொண்டாள். நானோ, உணர்ச்சிகளைக் காட்டுவதில்லை. இந்த நிலையில், இவள் காட்டிய அன்பு, என் தாத்தாவிற்க்கும் மிகுந்த தேவையாய் இருந்தது.
 
அவள் எவ்வளவு பாசம் தாத்தாவிடம் காட்டினாலும், தாத்தாவிடம் இருந்து கூட, எந்த பணத்தையும், நகையையும், வசதியையும் பெற மறுத்து விட்டாள். வற்புறுத்திய தாத்தாவையும், இதை வாங்கினால், எனக்கும், என் பெற்றோர்களுக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது என்று சொல்லி வாயை அடைத்து விட்டாள்.
 
போகப் போக, அவளிடம் நான் பேசா விட்டாலும், அவள் உண்மையானவள், மிக நல்லவள் என்பது இயல்பாகி விட்டது. பல சமயம், அவள் தாத்தாவிடம் கலகலப்பாக பேசிக் கொண்டிருக்கும் போது, நான் அமைதியாக உட்கார்ந்து இருப்பேன். அவள் என்னைக் கூடச் சீண்டுவாள். ஆனாலும் நான் அமைதியாக இருந்தாலும், அதை ரசிப்பேன். நாங்கள் இருவருமே பேசிக் கொள்ளாமலே, ஒருவர் மேல் ஒருவர் அன்பும், அக்கறையும், புரிதலும் கொண்டிருந்தோம்.
 
எப்போதாவது ஏதாவது எனக்கு ஆலோசனை சொல்ல வேண்டியிருப்பின், அவள் தாத்தாவுடன் இருக்கும் போது ஜாடையாக சொல்லிவிடுவாள்.
 
தாத்தா, ஹாஃப் இயர்லி எக்சாம்ல மார்க் குறைஞ்சிருக்கு, என்னான்னு கேக்க மாட்டீங்களா?


[Image: actress-asin-stills-02_720_southdreamz.jpg]

+2 பாடத்தையும் இப்பியே படிக்கச் சொல்லுங்க! சார், இஞ்சினியர் ஆகனும்னா, நல்ல மார்க் வேணும். சாதா காலேஜ்லல்லாம் படிக்கக் கூடாது. இஞ்சினியரிங்னா ஐ ஐ டி லதான் படிக்கனும். அவ்ளோ மார்க் வாங்கனும். சொல்லுங்க தாத்தா!
 
ஐஐடி க்கு இங்க கோர்ஸ் நடக்குது. பெஸ்ட் இன்ஸ்டியூட், போய் சேரச் சொல்லுங்க.
 
அவளுடைய ஆலோசனைகள் பெரும்பாலும், நன்மைக்காகவும், என் முன்னேற்றத்திற்க்காகவும்தான் இருக்கும். அவளது அக்கறை தாத்தாவிற்கும் நிம்மதியைத் தந்தது. நானும், அதில் பெரும்பாலானவற்றை ஏற்றுக் கொண்டேன்.
 
+2விலும், மிக அதிக மதிப்பெண்கள் வங்கினேன். இந்த முறை அவள் கொடுத்த கிஃப்ட்டை தாங்க்ஸ் என்று சொல்லி அமைதியாக வாங்கிக் கொண்டேன். என் மார்க்கிற்கு அண்ணா யுனிவர்சிட்டியில் பொறியியல் கிடைத்தாலும், நான், அவள் படித்த கல்லூரியிலேயே பொறியியல் தேர்ந்தெடுத்தேன். அதற்கும் அவள் பயங்கரக் கோபமானாள். என்னை, என் தாத்தாவின் மூலமாக பயங்கரமாக திட்டினாள்.
 
எல்லாம் நீங்க கொடுக்குற இடம். கேக்க யாரும் இல்லைல்ல, அதான்!
 
ஊருல அவனவன், அண்ணா யுனிவர்சிட்டில சீட் கிடைக்காதான்னு தவிக்கிறான், இவரு அங்கப் போக மாட்டாராம். இந்தக் காசெல்லாம் கடைசி வரைக்கும் வராது. சொந்த அறிவுதான், எப்பியுமே நம்மளை காப்பத்தும்… என்று ரொம்ப நேரம் திட்டினாள். தாத்தாவிற்கும், அவள் காட்டிய அக்கறையால் மகிழ்ச்சியும், நான் எடுத்த முடிவால் வருத்தமும் ஏற்பட்டது.
 
ஏன் ராசா இப்பிடி பண்ற என்று கேட்டார்.
 
ரொம்ப நேரம் அவள் திட்டிய போது ஏதும் சொல்லாவன், மெதுவாய் சொன்னேன்.
 
அவ, சொல்றது எல்லாம் சரிதான். ஆனா, என் எய்ம், இஞ்சினியரிங் மட்டுமில்லை. MBA வும்தான். அதுவும் ஐஐஎம் மாதிரியான காலேஜ்ல நான் MBA படிக்கனும். அதுக்கு என்னை நான் ப்ரிப்பேர் பண்ணனும்னா, இஞ்சினியரிங்ல எனக்கு பயங்கர சவால் இருக்கக் கூடாது. நான் இஞ்சினியரிங் நல்லா படிக்கனும், ஆனா நான் இஞ்சினியர் ஆக மாட்டேன், ஐ யம் கோயிங் டூ பி அ பிசினஸ் மேன்!
 
அது மட்டுமில்லை, அடுத்த வாரத்துல இருந்து நான், நம்ம கம்பெனிக்கு வரப் போறேன். பிசினஸ் கத்துக்கப் போறேன். இப்பல்லாம், நீங்க ரொம்ப டயர்டா தெரியறீங்க. நான் அண்ணா யுனிவர்சிட்டில படிச்சா, இதெல்லாம் செய்ய முடியாது. இதுக்கெல்லாம், ஒரு நல்ல காலேஜா இருந்தா மட்டும் போதும். இப்பியும் ஏதோ ஒரு காலேஜ்ல சேரலியே? அதான், அவ படிக்கிற காலேஜ்லியே சேர்றேன்னு சொன்னேன்.
 
நான் சொல்லி முடித்ததும் அங்கு பலத்த அமைதி. என் தாத்தாவிற்க்கோ, இந்த வயதில் எனக்கு இருந்த தீர்க்கமான அறிவையும், தன்னம்பிக்கையையும் கண்டு பெருத்த ஆனந்தம்.
 
அவ்வளவு நேரம் என்னைத் திட்டிய, என் அக்காவோ, என் முடியை கோதி கொடுத்து, ஆல் தி பெஸ்ட் டா, நீ நல்லா வருவடா என்றூ மனமாரச் சொன்னாள்.
அவள் என்னிடம் எவ்வளவு பாசம் காட்டினாலும், நான் அவளிடம் என்றுமே பாசம் காட்டியதில்லை. அதற்காக அவளும் தன்னை மாற்றிக் கொண்டதில்லை.
 
அதே சமயம், அவளை எனக்கு பிடிக்கும் என்பது, அவளுக்கும் தெரியும். தாத்தா கூட சில சமயம் மனமுருகிச் சொல்லியிருக்கிறார், எனக்கப்புறம், இவனுக்குன்னு யாரிருப்பாங்கன்னு ஃபீல் பண்ணியிருக்கேன், நீ வந்ததுக்கப்புறம் எனக்கு நிம்மதியா இருக்கு, இனி நான் செத்தாலும் கவலையில்லை என்று.
 
அவளோ தாத்தாவின் கையை பிடித்துக் கொண்டு, சும்மா கண்டதையும் போட்டு கொழப்பிக்காதீங்க. அதெல்லாம், சார் நல்ல படியா இருப்பாரு. அவருதான், என்னை மட்டுமில்லாம, இன்னும் எத்தனை பேர் இருந்தாலும் பாத்துக்குவாரு என்று நம்பிக்கையூட்டினாள்.
 
இப்படியே எங்களுடைய உறவு தொடர்ந்தது. இடையே நான் பிஈ முடித்து, சொன்ன படியே ஐஐஎம் மில் MBA முடித்தேன். எங்கள் பிசினசையும் முழுக்க என் கையில் கொண்டு வந்தேன். அது இப்போது பன்மடங்கு விரிந்து நின்றது. என் தந்தையின் அதிகாரம் முழுக்க பிடுங்கப் பட்டது. அவர் ஒரு பொம்மை எம் டி யாக மட்டுமே இருந்தார். அவரையோ, அவரது முதல் மனைவியையோ நான் கண்டு கொள்வது கிடையாது.
 
பணத்திற்க்காக, என் தந்தை என் மேல் காட்ட முயன்ற போலி பாசத்தை, என் பார்வையிலேயே கிள்ளி எறிந்தேன்.
 
இடையே அவளும் இஞ்சினியரிங் முடித்து, ஒரு ஐடி கம்பெனியில் வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள். தாத்தா எவ்வளவு வற்புறுத்தியும், எங்கள் நிறுவனத்தில் ஒரு பொறூப்பை எடுத்துக் கொள்ள அவள் சம்மதிக்கவில்லை. அதில் அவள் மிகப் பிடிவாதமாக இருந்தாள். இது எனக்கு அவள் மேலிருந்த மரியாதையை அதிகப்படுத்தியது.
 
அவளுக்கு கல்யாண வயது வருகையில், தாத்தாதான் அவளுக்கு வரன் பார்க்க ஆரம்பித்தார். என் தாத்தாவிற்கும், அவளுக்கும் இருந்த பாசத்தை உணர்ந்த அவள் பெற்றோர்களும், தாத்தாவே செய்தாலே மிகச் சிறப்பாகச் செய்வார் என்று அவர் போக்கில் விட்டனர்.
 
ஆனால் அவளோ, தன்னைப் போன்றே, ஏதாவது ஒரு வேலையில் இருக்கும், நல்ல குண நலன்கள் கொண்ட, ஓரளவு மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த வரனைப் பார்த்தால் மட்டுமே ஓகே சொல்லுவேன் என்று கடும் பிடிவாதம் பிடித்தாள். நானே கடுப்பில், இன்னும் கொஞ்சம் பெட்டரா பாத்தா என்ன என்று கேட்டதற்கு, என் கூட சகஜமாக பேசுறீயா என்று கேட்டு என் வாயை அடைத்தாள்.



[Image: asin_038.jpg]

அப்படிப் பார்த்த வரன்தான் இந்த ஹரீஸ். ஹரீஸ் என் தாத்தாவின், நெருங்கிய நண்பர் ஒருவருக்கு நன்கு தெரிந்தவர், மிகவும் நல்ல பையன் என்று தெரிய வருகையில், அவருக்கு அப்பா, அம்மா இல்லை, சித்தி, சித்தப்பாதான் என்றூ தெரிந்தும் சரி என்று அதற்கு ஓகே சொன்னார். அதற்கு முக்கிய காரணம், ஹரீஸூம் ஓரளவு பணக்காரர் என்பதும் மிக நல்ல கேரக்டர் என்பதும்தான். முதலில் இவளும், இந்த வரனுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. மிடில் கிளாசில்தானே பார்க்கச் சொன்னேன் என்றூ அடம்பிடித்தாள். ஆனால், தாத்தாவோ, பையன் நல்ல பையன், அவிங்க சைடு அப்பா அம்மா இல்லை, அதுனாலத்தான் அது இது என்று சொல்லி அவளை ஓகே சொல்ல வைத்தாள். 

ஹரீஸூடன் அவளுக்கு திருமணம் என்று முடிவு செய்த இரண்டு நாளில், என் தாத்தா மரணமடைந்தார். தாத்தாவின் இறப்பு என்னை பாதித்தடை விட, அவளை பாதித்ததுதான் மிக அதிகம். இறக்கும் தருவாயிலும், என்னிடமும், அவளிடமும், நீங்க ரெண்டு பேருந்தான் ஒருத்தருக்கொருத்தர் துணையா இருக்கனும் என்று சொல்லி விட்டு இறந்தார். தாத்தாவின் மரணத்தில்தான், அவள் எவ்வளவு தாத்தாவின் மேல் அன்பு வைத்திருந்தாள், எவ்வளவு பாசத்திற்க்காக ஏங்கினாள் என்பது அவள் கதறலில் தெரிந்தது. அப்பொழுதும், அவளிடம் இருந்து தள்ளி நின்றேனே ஒழிய, அவளை சமாதானப் படுத்தக் கூட இல்லை.

 
அந்தச் சமயத்திலும் கூட, தாத்தாவின் இறுதிச் சடங்குகளை தான் செய்வதாகவும், தான் அவருக்கு மகன் போல என்று என் தந்தை நாடகமாடுகையில், அவள்தான் என்னை தனியாக இழுத்து, அவரு டிராமா போட்டுட்டிருக்காரு, நீ வேடிக்கை பாத்துட்டிருக்க? அவரை மட்டும் இதுக்கு அலவ் பண்ண, உன் தாத்தா மட்டுமல்ல, நானும் இந்த ஜென்மத்துல உன்னை மன்னிக்க மாட்டேன். உனக்கு வேணா, உணர்ச்சி இல்லாம இருக்கலாம். ஆனா, மத்தவிங்க உணர்ச்சியை மதிக்கக் கத்துக்கோ என்று திட்டினாள்.

 
அதன் பின் நான் எல்லாவற்றையும் கையில் எடுத்துக் கொண்டேன். கொஞ்சம் கொஞ்சமாக என் தந்தையை ஓரம் கட்டினேன். தாத்தாவின் உயில் படி, அனைத்துச் சொத்துக்களும் எனது பெயருக்கு மாறியது. தாத்தாவின் ஆசைப்படி, அவளுக்கும் ஹரீசுக்கும் கல்யாணம் நடந்தது!
 
ஹரீஸை பார்க்கும் போது மிக நல்லவராய்தான் தோன்றினார். ஏனோ, எனக்கு அவரது சித்தப்பா, சித்தியைதான் பிடிக்கவில்லை. அவர்கள் ஹாரீஸிடம் பேசுவது, என் தந்தை, என் அம்மாவிடம் நடித்ததுதான் ஞாபகத்திற்கு வந்தது. இருந்தும் நான் அமைதியாக இருந்து விட்டேன். ஹரீஸும் நல்ல புத்திசாலியாகத்தான் இருந்தார். ஆகையால், அவர்கள் விஷயம் என்று ஒதுங்கி இருந்து விட்டேன்.

அதுதான் இவ்வளவு பெரிய பிரச்சினையாக மாறி நிற்கிறது!


எனது கதைகள்

சாது மிரண்டால் வீடும் கொள்ளாது!!!

வயது ஒரு தடையல்ல!
[+] 1 user Likes whiteburst's post
Like Reply
#15
Fantastic...novel padikkira feeling varuthu...continue
Like Reply
#16
Super continue ....
Like Reply
#17
6.

 
அவள் இன்னும் என்னைத் திட்டிக் கொண்டு இருந்தாள். அவளைப் பார்க்க பார்க்க, என் மனதுள் குற்ற உணர்ச்சி பெருகியது. ஆரம்பத்திலிருந்து, அவள் என்னிடம் அன்பாகத்தான் இருக்கிறாள். நான் திருப்பி எந்த விதமான உணர்வையும் காட்டாவிட்டாலும், என் மேல் அவளுக்கிருந்த பாசம் அப்படியே இருந்திருக்கிறது. இத்தனைக்கும் கூடப் பிறந்தவள் கூட இல்லை!
 
இவளுக்கென்ன தலையெழுத்து? தாத்தாவே இவள் பங்கிற்கு கொஞ்சம் சொத்து எழுதி வைக்கிறேன் என்று சொன்னதற்கு வலுக்கட்டாயமாய் மறுத்தவள், இன்று தனக்கு யாரும் இல்லை என்று தற்கொலை வரை போயிருக்கிறாள். அப்படி, இவளிடம் கூட அன்பைக் காட்டாமல், என்ன ஒரு வாழ்க்கை வாழ்கிறேன் நான்???
 
எந்த சம்பந்தமும் இல்லாமல், என் மேல் உருகி உருகி அன்பினைக் கொட்டும், இவளிடம் கூடத் திருப்பி அன்பினைக் காமிக்காமல், என் அம்மாவையும், அப்பாவையும் குறை சொல்ல என்னத் தகுதி இருக்கிறது?
 
எதற்க்கு அப்படி வாழனும்? அப்படி வாழ்ந்து என்ன சாதித்து விடப்போகிறேன். நான், என்னை மாற்றிக் கொண்டேயாக வேண்டும் என்கிற எண்ணம், என் மனதில் வலுப் பெற்றது.
 
மெல்ல வாய் விட்டுச் சொன்னேன். சாரி!
 
திட்டிக் கொண்டிருந்தவள் நிமிர்ந்து பார்த்தாள். அதான் ஏற்கனவே சொல்லிட்டியே, இப்ப எதுக்கு சொல்ற?
 
அப்ப சொன்னது, நான் உன்கிட்ட பேசுன முறைக்கு. இப்ப சொல்றது, நீ எவ்ளோ என் மேல பாசமா நடந்துகிட்டாலும், உன்னை புரிஞ்சிக்காம இருந்ததுக்கு.
 
எனக்கு, அம்மா போனதுக்கப்புறம், யார் மேலயும் நம்பிக்கையே வரலை. ஒரு மாதிரி, மனசு கல்லா மாறிடுச்சி. அப்படியே, என்னைச் சுத்தி, நானே ஒரு வேலி போட்டுகிட்டேன்.
 
தாத்தாவோட இறப்புல நீ ஃபீல் பண்ணது, என்கிட்ட பேசுனது எல்லாமே, நீயும் பாசத்துக்காக எவ்ளோ ஏங்குற, எனக்காக எவ்ளோ யோசிக்கிற எல்லாமே தெரியும். ஆனா, அப்ப உனக்கு ஆறுதலா இருந்திருந்தா, நீ கல்யாணத்துக்கு ஓகே சொல்லியிருப்பியா, சொல்லியிருந்தாலும், அங்க போயும் என்னைப் பத்தி, நான் தனியா இருக்கேனேன்னு யோசிச்சிட்டு இருந்திருப்பன்னு எனக்கு தோணுச்சு, அதான், அப்பவும் சரி, கல்யாணத்துலியும் சரி, உன்னை விட்டு தள்ளியே நின்னேன். குறைந்த பட்சம், நீ உனக்கு கிடைச்சிருக்கிர புது குடும்பத்தோட சந்தோஷமா இருப்பேன்னு நினைச்சேன். ஆனா, அது உனக்கு இப்படி ஒரு சிக்கலை கொண்டு வரும்னு நினைக்கலை.
இப்படியே தள்ளி நின்னதாலத்தான் உன்கிட்டயோ, உன் ஃபிரண்டு லாவண்யாகிட்டயோ  கூட பெருசா உணர்ச்சியை காமிச்சுகிட்டதில்லை.ப்ச்…
 
பேசிக் கொண்டிருந்தவன், திடீரென்று உணர்ச்சி வசப்பட்டேன். இனி உனக்குன்னு யாரும் இல்லைன்னு சொல்லாத. யாரிருந்தாலும், இல்லாட்டியும் நான் இருப்பேன் உனக்கு!
 
அதான் சொல்றேன், சாரி! என்று தலை குனிந்தேன்
 
அவள் உணர்ச்சிவயப்பட்டிருந்தாள் என்பதை கலங்கிய கண்களே சொல்லியது. வேகமாக என்னை இழுத்து அவள் மார்போடு அணைத்துக் கொண்டாள். என் முடியை கோதிக் கொடுத்தாள்.
 
[Image: Asin-4.jpg]

இப்பொழுதும் என்னைத்தான் அவள் ஆறுதல் படுத்துகிறாள்!

 

அப்படியே கொஞ்ச நேரம் இருந்தோம். மனதுக்கு நெருக்கமான சில பெண்களிடம் இருந்து மட்டுமே வரும் ஒரு பிரத்யோக வாசனை, அவள் உடலில் இருந்து வந்தது. இது நாள் வரை இதனை நான் கவனித்திருக்க வில்லை அல்லது அறிந்திருக்கவில்லை. இது கண்டிப்பாக காமத்தின் வாசனை இல்லை. அன்பின் வாசனை. அதில் கொஞ்சம் தாய்மையின் வாசமும் இருந்தது.

 

காதலியின் உடலில் இருந்து வரும் வாசத்திற்கும், அன்னையின் உடலில் இருந்து வரும் வாசத்திற்கும் இடையிலிருக்கும் வித்தியாசத்தை உணர்ந்தவர்கள், இதை உணர்வார்கள்! நான் மெல்ல அவளை விட்டு பிரிந்தேன்.

 

அது மட்டுமில்லை, உன்னை இவ்ளோ கஷ்டப்படுத்துன, அந்த ரெண்டு பேரையும் நான் சும்மா விடப் போறதில்லை.

 

அப்பொழுதுதான் அவளுக்கு அவர்களைப் பற்றிய ஞாபகம் வந்தது. நான் இருக்கிறேன் என்ற தைரியம், அவளுக்கும் தெம்பினைத் தந்தது.

 

என்னடா பண்ணப் போற? நீ தனியா என்ன பண்ணுவ?

 

அவள் இன்னும் என்னை அதே சின்ன பையன் என்று நினைத்துக் கொண்டிருந்தாள் போலும்.

 

ஹா ஹா, நான் தனியாவாவா? நீ என்ன நினைச்சிட்டிருக்க என்னப் பத்தி? நான் சொசைட்டில எவ்ளோ பெரிய ஆள் தெரியுமா??? பிசினஸ்ல, என்னைப் பாத்து அவனவன் பயப்படுவான். உன் மாமானார்லாம் எனக்கு சுண்டைக்கா! அவனை அழிக்கறதுக்கு எனக்கு அரை மணி நேரம் போதும். ஆனா, அவனையெல்லாம் அவ்ளோ சுலபமா அடிக்கக் கூடாது. கொஞ்சம் கொஞ்சமா அடிக்கனும். அவன் உன் கால்ல விழுந்து கெஞ்சனும். அப்படி ஒரு அடியா இருக்கனும்.

 

அப்படி என்னடா பண்ணப் போற?

 

தெரியலை, இனிமேதான் யோசிக்கனும். அது என்னான்னு யோசிச்சிட்டு சொல்றேன்.

 

இப்ப நீ எதைப் பத்தியும் போட்டு குழப்பிக்காம நல்லா ரெஸ்ட் எடு! முடிஞ்சா, அவங்களை என்னா பண்றதுன்னு யோசி. ஓகே?

 

அடுத்த நாள் காலை!

 

சாப்பிடும் போது கேட்டாள், ஏதாவது யோசிச்சியா?

 

இன்னும் இல்லை. நேத்து நைட்டுதானே பேசுனோம். அதுக்குள்ள என்ன அவசரம்?

 

இல்ல, நான் ரெண்டு நாள்ல வரேன்னு சொல்லிட்டு வந்தேன். திரும்பி வரவா போறோம்னு நினைச்சு, ஆனா, இப்ப அவிங்க என்னை எதிர்பாப்பாங்க இல்ல? ஹரீஸ் இன்னிக்கு ஃபோன் பண்ணுவாரு! அவள் குரலில் கொஞ்சம் பயம் தென்பட்டது!

 

ஏய், நீ எவ்ளோ தைரியமான ஆளு? இதுக்கு ஏன் இப்புடி அப்செட் ஆகுற?

 

அவன் ரொம்ப வக்கிரம் புடிச்சவண்டா! அவன் வயசு என்ன, என் வயசு என்ன? என்ன உறவு? எப்புடி இப்புடில்லாம் பேச முடியுது?! அவன்கிட்ட என்னத்தை சண்டை போட முடியும்? தவிர, இதுக்கு என்ன பண்ணனுனும்னு தெரியாம, அங்க போகனும்னு நினைச்சாலே நடுங்குதுடா!

 

அவள் குரலே, அவன் எந்தளவு அவளை சித்ரவதை பண்ணியிருக்கான் என்று தெரிந்தது. அது என்னுள் இன்னும் கோபத்தை ஏற்படுத்தியது!

 

அவள் கையைப் பிடித்தேன். ஏதாவது காரணம் சொல்லி எப்புடியாவுது ஒரு வாரம் இருக்கப் பாரு! அதுக்குள்ள நான் வழி சொல்றேன். அவனை அடிக்கனும்னா, நிமிஷம் போதும், ஆனா, அவன் உனக்கு பண்ணதுக்கு, அவன் பொண்டாட்டி பண்ணதுக்கு ரெண்டு பேரும் அனுபவிக்கனும்! அப்படி ஒரு திட்டத்தோட வர்றேன்! ஓகே???

 

ம்ம்ம், ஓகே டா! இப்பதான் கொஞ்சம் ரிலீஃபா இருக்கு!

 

எல்லாம் சரி, இப்புடியே எத்தனை நாள் இருக்கப் போற? எங்க போச்சு உன் கான்ஃபிடண்ட்லாம், வேலைக்குப் போறப்ப எப்புடி இருப்ப?

 

பேசிக்கலாவே, நீ இண்டலிஜெண்ட் ஆச்சே? ஏன் அங்கப் போனதுக்கப்புறம், வேலைக்குப் போறதில்லை? ஹரீஸ் கூட உன்னை, அவர் கம்பெனிக்கே வரச் சொன்னாருன்னு சொன்ன? ஏன் இப்பல்லாம் போறதில்லை?

 

ஹரீஸுக்கும், நான் படிச்சிச்சு வீட்டுல இருக்குறது புடிக்கலைதான்! ஆனா, ஆஃபிஸ்லியும் அந்தாளு இருக்கான்ல? அவன் அங்கேயும் அசிங்கமா பேசுனான், அதான் போறதில்லை!

 

நான் கேட்குறேன்னு தப்பா நினைக்காத? ஹரீஸ் பத்தி நீ என்ன நினைக்குற? இவ்ளோ நடந்ததுக்கப்புறமும் நீ அவர் கூட… அதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியாமல் நிறுத்தினேன்.

 

அவள் மெதுவாகச் சொன்னாள்.

 

அவர் ரொம்ப நல்லவருடா! தாத்தா ஏன் அவரை கல்யாணம் பண்னனும்னு சொன்னாருன்னு, அவரோட கேரக்டரைப் பாத்தா புரியுது! எவ்ளோ காசு இருந்தும், கெட்ட பழக்கம் எதுவும் கிடையாது.

 

கண்மூடித்தனமான நம்பிக்கை, அதுவும் தகுதியில்லாதவிங்க மேல வெச்சிருக்காருங்கிறதைத் தாண்டி வேறெந்த பிரச்சினையும் இல்லை. அவிங்க சித்தப்பா பேச்சைக் கேட்டுத் திட்டுனா கூட, என்கிட்ட தனியா சாரி சொல்லுவாரு. சொன்னாலும், ‘நீ எப்பிடி இப்படியெல்லாம் நடந்துக்குற’ன்னு என்கிட்டயே வருத்தப்படுவாரு!

 

நான் அவரு கம்பெனிக்கு வரலைன்னு சொன்னப்ப கூட, இதுக்கு எதுக்கு இஞ்சினியரிங் படிச்ச, என்னைக் கல்யாணம் பண்ணிகிட்டதுனால, உன் திறமை அதிகமானா, இன்னும் வெளிய வந்தாதான் எனக்கு பெருமையே ஒழிய, இப்படி வீட்டோட இருக்கிறது எனக்கு அசிங்கம்னு ரொம்ப பேசுனாரு!

 

என்னை ரொம்ப விரும்புறாருடா. என்னைப் பத்தி தெரிஞ்சவுடனே, அவரு சொன்னது, உனக்கு நான் எல்லாவுமா இருப்பேன், இனிமே நீ ரொம்ப சந்தோஷமா இருக்கனும்னு சொன்னாரு. உனக்காக நான் ஃபீல் பண்ணப்ப கூட, உனக்கும் நாம் சொந்தமா இருப்போம்னு உண்மையாச் சொன்னாருடா. என்னைத் திட்டுனா கூட, பாசத்தோட அருமை புரிஞ்ச நானே எப்படி இப்படி நடக்கலாம்னுதான் வருத்தப்படுவாரு! அவர் ரொம்ப நல்லவர். அதுதான் அவரோட மிகப் பெரிய ப்ளஸ். ஆனா அவர் சித்தப்பாவுக்கும் அது ப்ளஸ்ஸா போயிடுச்சி!

 

பேசிக்காவே அவரு பாசத்துக்காக ஏங்குறவருடா! ஒரு விதத்துல அவரும் நம்மளை மாதிரிதாண்டா! நமக்கு பெத்தவிங்க இருந்தும் இல்லாத மாதிரி. அவருக்கோ, உண்மையாவுமே இல்ல. நமக்குனாச்சும் தாத்தா இருந்தாங்க, ஆனா அவருக்கு? இவிங்க சித்தப்பா, சித்தி முதல்ல அவிங்க அப்பா, அம்மாவோட பணத்துக்காக வந்தாங்க. அப்புறம் போலியா நடிச்சு, அப்படியே இருந்துட்டாங்க!

 
அவர் கதையை என்கிட்ட சொல்லியிருக்காரு. ஆரம்பத்துல அதுல எனக்கு பெரிய தப்பு தெரியலை. ஆனா, அவிங்க சித்தப்பா, சித்தி சுயரூபம் தெரிஞ்சதுக்கப்புறம், எனக்கு அது வேற அர்த்தங்களைக் கொடுக்குது. அவங்க சித்தப்பா, அவரை பார்ட்டிக்கு அழைச்சிட்டு போயிருக்காரு, மறைமுகமா எல்லா வித கெட்ட பழக்கங்களுக்கும் பழக்க நினைச்சிருக்கார். ஆனா, இவரு எதுலியும் மாட்டிக்கலை. சுயமா, நல்ல பழக்க வழக்கங்களோட வளந்தாரு. அதையே, அவரு எங்க சித்தப்பா, எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து வளத்தாரு, அவ்ளோ நம்பிக்கை என் மேலன்னு புரிஞ்சு வெஞ்சிருக்கார். மனுஷனுக்கு இவ்ளோ பாசிட்டிவான எண்ணம் இருக்கக்கூடாது.

[Image: wedding-dresses-kerala.jpg]

கல்யாணம் ஆகி இந்தக் காலத்துல, அவரை நான் ரொம்ப லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன்! இப்பியும், இந்த உண்மைல்லாம் தெரிஞ்சுதுன்னா, அவர் தாங்க மாட்டாருடா!

 

கெட்டவனா இருந்தா, செஞ்ச தப்புக்கு ஃபீல் பண்ணத் தேவையில்லை! ஆனா, நல்லவனாச்சே, நம்மளையே நம்பி வந்தவளுக்கு இந்த நிலை வரக் காரணமாயிட்டோமே, அவ சொன்னதை கேக்கலியேங்கிற குற்ற உணர்ச்சிலியே செத்துடுவாரு! எனக்கு அதுதான் பயமா இருக்கு! எனக்கு அவர் கூட சந்தோஷமா வாழனும்டா! அவ்ளோ நல்லவருடா! அவள் கண்கள் கலங்கியிருந்தது.

 
அவள் பேசப் பேச, எனக்கு, அவள் ஹரீஸ் மேல் வைத்திருந்த காதலைப் பார்த்து கொஞ்சம் பொறாமை கூட வந்தது. அதே சமயம், உறுதியும் பூண்டேன், அவள் வாழ்வில், மகிழ்ச்சியை கொண்டு வருவது என்று!


எனது கதைகள்


சாது மிரண்டால் வீடும் கொள்ளாது!!!

வயது ஒரு தடையல்ல!
[+] 1 user Likes whiteburst's post
Like Reply
#18
7.
 
நாளைக்கு என்ன வேலை உனக்கு? அடுத்த நாள் இரவு, சாப்பிடும் போது அவளிடம் கேட்டேன்!
 
ஒரு வேலையும் இல்லை! சொல்லு!
 
நாளைக்கு காலைல 8 மணிக்கு ரெடியா இரு. ஒரு இடத்துக்கு போகலாம்.
 
கொஞ்சம் இடைவெளி விட்டுச் சொன்னேன். பிரச்சினையை என்கிட்ட சொல்லிட்ட, அதுனால அதை மறந்துடு, இன்னமும் நீ அதை நினைச்சு ஏதும் குழம்பிகிட்டு இருக்காத. நாளைக்கு உன்னைப் பாக்குறப்ப, உன்கிட்ட அதே பழைய தைரியம், தன்னம்பிக்கை இருக்கனும்னு எதிர்பாக்குறேன். இது என் ஆசை!
 
அவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். பின் புன்னகை செய்தாள். சரி!
 
அடுத்தா நாள் காலை. நானே அவளை காரில் அழைத்துச் சென்றேன். சொன்ன படியே பழைய கம்பீரத்தை அடைந்திருந்தாள். நல்ல ஒரு காட்டன் சாரியில், கட்டப்பட்டிருந்த நேர்த்தியில், மரியாதையூட்டும் அலங்காரத்தில், கொஞ்சம் ஸ்டைலாகவும் அவளைப் பார்க்கும் போது, எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது. புடவையைப் போல், ஒரு பெண்ணை செக்சியாகவும், மிகுந்த கம்பீரமாகவும் காட்டக் கூடிய உடை ஏதேனும் உண்டோ?



[Image: asin_arpita_mehta_saree_at_siima_2014.jpg]

எங்க போறோம்?
 
நீயே தெரிஞ்சிக்குவ!
 
அவள் முறைத்தாள், நான் புன்னகைத்தேன்.
 
கொஞ்ச நேரப் பயணத்தில், கார் எங்களது அலுவலக ஹெட் ஆஃபிசை அடைந்தது. அவள் முகத்தில் குழப்பம் இருந்தாலும், அமைதியாக என்னுடன் வந்தாள். எனது அறையில் அவளை அமர வைத்து காத்திருக்கச் சொன்னேன்.
 
பின் சிறிது நேரம் கழித்து, அவளை மீண்டும் அழைத்துக் கொண்டு ஒரு கான்ஃபரன்ஸ் அறைக்கு அழைத்துச் சென்றேன். அங்கு ஒரு பெரிய குழுவே இருந்தது. அவர்களிடம் அறிவித்தேன்.
 
ஜெண்டில்மென், நான் சொன்ன மாதிரி, மீட் மிஸ் _______. நம்ம க்ரூப்போட புது போர்டு மெம்பர், எனக்கு அடுத்த பெரிய ஷேர்ஹோல்டர், அண்ட் மை சிஸ்டர்!
 
ப்ளீஸ் கிவ் அ பிக் ஹேண்ட்!
 
கான்ஃபரன்ஸ் அறையில் பெரிய கரகோஷம்! அவள் முகத்தில் பல உணர்ச்சிகள். யாருக்கும் தெரியாமல் என்னை முறைத்தாள். எதை வெளிக் காட்டினாலும், அது என்னை அவமானப்படுத்தும் என்பதால் அமைதியாக எல்லாருக்கும் நன்றி சொன்னாள். இருந்தாலும், தான் கம்பெனி நிர்வாகத்தில் ஈடுபடப் போவதில்லை என்றும், நான் எடுக்கும் முடிவுகளுக்கு உறுதுணையாக இருப்பேன் என்றும் தெரிவித்தாள். அவள் அதைச் சொன்ன போது, என்னைத் திரும்பிப் பார்த்துவிட்டு சொன்னாள்.
 
அதில் மறைமுக செய்தி இருந்தது. நீ கொடுத்தா நான், வாங்கிக்கனுமா?
 
சிறிது நேரம் கழித்து, என் அறையில்!
 
நான் உன்கிட்ட என்ன கேட்டேன், நீ என்ன பண்ணிட்டிருக்க? நான் சொத்தா கேட்டேன்? இல்ல இதுக்கு ஆசைப்பட்டுதான் நான் வந்தேன்னு நீயா நினைச்சுகிட்டியா?
 
தாத்தா என்கிட்ட பணம் கொடுத்ததுக்கே, இங்கியே வேலை செய்யச் சொன்னதுக்கே ஒத்துக்காதவ இப்ப நீ சொன்னா நான் கேட்கனுமா? அவிங்க முன்னாடி சொன்னா, உனக்கு கஷ்டமா இருக்கும்னுதான் நான் கம்முனு இருந்தேன். என்னுடைய முடிவுகளை எடுக்க நீ யாரு? நான் உன்கிட்ட எதிர்பாக்குறது பாசம்தான், ஆனா நீ அதையும் விலை போட்டுட்டீல்ல? அவள் மிகுந்த உணர்ச்சி வயப்பட்டிருந்தாள்! கோபத்தில் சிறிது கண் கலங்கியும் இருந்தது.
 
நான் அவளையேப் பார்த்து, தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டினேன்!
 
அவள் குடித்து முடித்த பின், அவள் முன் சில டாக்குமெண்ட்களையும், பாஸ்புக்கையும் நீட்டினேன். டாக்குமெண்ட், கம்பெனி ஷேர்களில் 20% அவளது பெயருக்கு மாற்றப்பட்டிருந்தது. அவளது அக்கவுண்ட்டில், சில கோடிகள் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது. அவள் இன்னும் கடுப்பானாள்.
 
முதல்ல டாக்குமெண்ட்ல இருக்குற தேதியைப் பாரு.
 
பார்த்தவள் அதிர்ந்தாள். ஷேர்களை அவள் பெயருக்கு மாற்றியது, தாத்தா இறந்து ஒரு மாதத்தில் நடந்திருந்தது. அதே போல், அக்கவுண்டில் இருக்கும் பணமும், ஒரேடியாக இல்லாமல், ஒவ்வொரு 3 மாதத்திற்கும் ஒரு முறை என்று இரண்டு முறை போடப்பட்டு இருந்தது. நான் இன்னொரு லெட்டரையும் அவளிடம் நீட்டினேன். அது தாத்தா, எனக்கு உயிலுடன் சேர்த்து எழுதியிருந்த கடிதம்.
 
அதில், நான், அவளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும், அவளுக்கு தேவைப்படும் சமயத்திலோ அல்லது எப்போது கொடுத்தால் ஏற்றுக் கொள்வாளோ, அப்போது ஒப்படைக்கச் சொல்லியும் இருந்தது. அது அவரது கடைசி ஆசை என்றும் இருந்தது.
 
அவளுக்கு தாத்தாவின் அன்பைப் பார்த்ததும் மீண்டும் கண் கலங்கியது. பின் என்னைப் பார்த்தாள்.
 
நான் உனக்கு ஏதாவது செய்யனும்னு இருந்தேன். ஆனா, தாத்தாவே, என்ன செய்யனும், எப்படி செய்யனும்னு எல்லாமே சொல்லிட்டாரு. இந்தப் பணம், உன்னோட ஷேர் படி, உனக்கு வர வேண்டிய க்வாட்டர்லி ப்ராஃபிட். இன்னிக்கு இதை உனக்கு கொடுக்கனும்னு தோணுச்சு!
 
ஆனா, எனக்கு பணம் முக்கியமில்லைன்னு உனக்கு தெரியாதா?! இப்போதும் அவள் எதிர்ப்பு தெரிவித்தாலும், அதில் வேகம் குறைந்திருந்தது.
 
நீ நல்லவ. பணம் முக்கியமில்லைன்னு நினைக்கிறவ.
 
ஆனா, நீ இருக்கிற உலகம் அப்படி கிடையாது. அதிலும் பணம் அதிகம் இருக்கிர இடத்துல, வக்கிரம் பிடித்த ஆட்களும் அதிகம். நீ உன்னைக் காப்பாதிக்கனும்னா, இது இருக்குறது நல்லது.
 
ஆக, திறமை மேல நம்பிக்கை வைக்காத, பணத்து மேல வைன்னு சொல்லுற இல்ல?
 
பைத்தியம் மாதிரி பேசாத? வெறும் திறமையோ, பணமோ யாரையும் காப்பாத்தாது. எல்லாமே, எப்படி உபயோகப்படுத்துரதுங்கிறதுலதான் இருக்கு. கராத்தே கத்துக்கோன்னு சொல்ற மாதிரிதான் இதுவும்! இல்லாதவங்கன்னா ஓகே. உனக்கு இருக்குங்கிறப்ப எதுக்கு இந்த பிடிவாதம்?
 
ஓ, காசு கேட்ட ஆளுங்க மூஞ்சில, இந்தப் பணத்தைக் காமிச்சு, என் வாழ்க்கையை காப்பாத்திக்கச் சொல்ற? அப்படித்தானே?!
 
அவளையே பார்த்தேன். கோபத்தில் அவள் பெருமூச்சு வாங்கினாள்!
 
கோபத்துல வார்த்தையை விடாத! அமைதியா இரு! அவிங்க சாதாரண மாமனார், மாமியார் மாதிரி கொஞ்சம் சீர் எதிர்பார்த்திருந்தா, நானே இதைக் கொடுக்கச் சொல்லியிருந்திருப்பேன். ஆனா, அவிங்க நடந்துகிட்ட விதம், நீ அனுபவிச்ச கொடுமையை, நான் அவ்வளவு சாதாரணமா விட்டுட மாட்டேன்! இதை சொன்ன போது என் கண்களில் தெரிந்த கோப வெறியைப் பார்த்து அவளே தடுமாறினாள்.
 
மெல்ல என் கையைப் பிடித்தாள், சாரி என்றாள்!
 
நான் மெதுவாகச் சொன்னேன், இதை யூஸ் பண்ணி உன் ஆபத்துல இருந்து தப்பிச்சிக்கோன்னு சொல்லலை. இது இருக்குறதே, எதிர்காலத்துல உனக்கு பல ஆபத்துகளை தடுக்கும்னு சொல்லுறேன். சீறுனாத்தான் பாம்புக்கு கூட மரியாதை! இல்லாட்டி, அதுக்கும், மண்புழுவுக்கும் வித்தியாசம் காமிக்க மாட்டாங்க மனுஷங்க.
 
தாத்தாவோட ஆசை, எனக்கும் உனக்கு ஏதாவது செய்யனும்னு இருந்தது, இனி உன் கையில கொஞ்சம் பணமும், துணைக்கு நானும், நீ பொறுப்பெடுத்துக்க சில கடமைகளும் இருந்துச்சுன்னா, அதுவே உன்னை கொஞ்சம் வழிநடத்தும்.
 
அன்னிக்கு ஹரீஸ்க்காக அவ்ளோ ஃபீல் பண்ணி பேசுன! ஒரு வேளை நீ அன்னிக்கு சூசைட் பண்ணியிருந்தா, பொய்யான கூட்டத்துல அவரை தனியா விட்டுட்டு போயிருந்தா, அது அவருக்கு எவ்வளவு பெரிய ஆபத்து? இல்ல நீ சூசைட் பண்ணதுக்கு காரணம் அவிங்க சித்தப்பா, சித்திதான், அதை அவர்கிட்ட சொல்ல வந்தப்ப, அவர் காது கொடுத்து கேக்கலைன்னு தெரிய வந்திருந்தா குற்ற உணர்ச்சிலியே செத்துட மாட்டாரு?

அவளுக்கு, அது வரை இது தோணவில்லை என்பதை அதிர்ந்த, விரிந்த அவள் கண்கள் சொல்லியது!


அதுவும் இல்லாம…சிறிது இடைவெளி விட்டவன் சொன்னேன், என்னால, நீ தற்கொலை வரை போனதை இன்னும் ஜீரணிக்க முடியலை. ஒரு வகையில, அதுக்கு நானும்தானே காரணம்! நான் உன் மேல இன்னும் கொஞ்சம் அன்பா இருந்திருந்தா, நீ நேரடியா என்கிட்ட வந்து சொல்லியிருப்ப, இப்பிடி தற்கொலைக்கு போயிருக்க மாட்ட! இதை என் தப்புக்கான பிராயிச்சத்தம்னு எடுத்துகிட்டாலும் சரி, உனக்கு உரிமையுள்ள பங்குன்னு நினைச்சாலும் சரி, இல்ல தாத்தாவோட கடைசி ஆசைன்னாலும் சரி, நீ இதை ஒத்துகிட்டா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்! ப்ளீஸ்!

 
அவள் என் கையைப் பிடித்தாள். டேய், ரொம்ப ஃபீல் பண்ணாத, அப்பிடில்லாம் நான் உன் மேல நம்பிக்கை இல்லாம, உடனே அந்த முடிவுக்குப் போகலை. நான் ஒரு நாள் இதுக்காக ஃபோன் பண்ணேன். நீ எடுத்தவுடனே, என்னனு கேக்காம திட்டி வெச்சுட்ட. அப்புறம் நான் வீட்டுக்கு வந்தப்பயும், உன்கிட்ட பேச முயற்சி பண்ணதுக்கு, நீதான், உனக்கு டைம் இல்லை, ஏகப்பட்ட வேலை இருக்குன்னு பேசுன… அதுலதான் கொஞ்சம் மனசு நொந்து இப்படி நடந்துகிட்டேன்! நீ ஏன் அப்படி பண்ண?
 
 அது…. அன்னிக்கு உன் ஃபிரண்டு கூட சண்டை அதான்…என்று கொஞ்சம் தடுமாறினேன். ப்ச்.. அது ஏதோ மூட் அவுட். விடு. தப்புதான்! இப்ப இதை ஒத்துக்கப் போறியா இல்லையா???
 
அவள் என்னையே ஏதோ நம்பாமல் பார்த்தாள். பின் கேட்டாள், காசு கொடுத்துதான் அன்பை நிரூபிக்கனுமா என்ன?

[Image: siima-awards-2014-175.jpg]


சும்மா லூசு மாதிரி பேசாத? நான் நல்ல மார்க் வாங்குனப்ப உன்னால முடிஞ்ச கிஃப்ட்டை நீ கொடுக்கலை? வெறுமனே அன்பை மட்டும் காமிச்சிருக்க வேண்டியதுதானே? உன் அனிவர்சரிக்கு ஹரீஸ் கிஃப்ட் தராம இருந்திருந்தா சண்டை போட்டிருக்க மாட்ட? நீ என் மேல காட்டுரது உண்மையான பாசம்ன்னா, என்கிட்டயும் சண்டை போடனும்ல? 

 
இப்ப சொல்றதுதான், நான் இனி பழைய மாதிரி நடந்துக்க மாட்டேன். உன்கிட்ட உண்மையான அன்போட இருப்பேன். திட்டுவேன், சண்டை போடுவேன், ஆனா உனக்கு ஒண்ணுன்னா, முன்ன இருப்பேன். நீயும் அப்படி இருப்பன்னா, இதை ஒத்துக்கோ!

 

அவள் என்னையே பார்த்தாள். பின் புன்னகை செய்தாள். பிசினஸ் மேன் இல்ல, அதான் பேச முடியாம மடக்குற?! சரி ஓகே! உனக்காக இதை நான் ஒத்துக்குறேன்.

 

ஆனா, நீ அவங்களை என்னப் பண்ணப் போற? இதுல ஹரீசுக்கு எந்த வருத்தமோ, சங்கடமோ வரக் கூடாது. என்கிட்டயே அவிங்களுக்காக சண்டை போடுரவர், நீ ஏதாவது பண்ணப் போயி, எப்படி ரியாக்ட் பண்ணுவாரோ? என்னால, உங்க ரெண்டு பேருக்கு நடுவுல பிரச்சினை வந்தா, அதைத் தாங்க முடியாது!

 

கவலைப்படாத, அப்படி ஒரு சிச்சுவேஷன் வராது! நான் அவிங்களுக்கு திட்டம் ரெடி பண்ணிட்டேன்!

 

அப்பிடியா? என்ன ப்ளான்?

 
ம்ம், பகைவனை உறவாடிக் கெடு!





எனது கதைகள்

சாது மிரண்டால் வீடும் கொள்ளாது!!!

வயது ஒரு தடையல்ல!
[+] 1 user Likes whiteburst's post
Like Reply
#19
(12-07-2019, 01:18 PM)Niru Wrote: Fantastic...novel padikkira feeling varuthu...continue

(12-07-2019, 01:31 PM)badboyz2017 Wrote: Super continue ....

மிக்க நன்றி!
Like Reply
#20
8.

மூன்று மாதங்கள் கழித்து…

ஹரீஸீன் முகம் கோபத்தில் சிவந்திருந்தது! என் சட்டையை பிடித்திருந்தான். ராஸ்க்கல், எங்கடா உங்க அக்கா? எதுக்குடா, அவ சூசைட் செஞ்சுட்டான்னு சொல்லி, இங்க வர வெச்சிருக்க?

[Image: CSArrVOWIAA-pmZ.jpg]

நான் செய்திருந்த செயல் அப்படி!


இன்று அவர்கள் கல்யாண நாள். அவளை செல்ஃபோனை ஆஃப் பண்ணி வைக்கச் சொல்லிவிட்டு, நான் ஹரீசை வெளியூரிலிருந்து, அழைத்து இப்படி ஒரு நாடகம் ஆடியிருந்தேன்.



அரக்க பரக்க ஓடி வந்தவனை, கெஸ்ட் ஹவுசில் வைத்து அந்த க்ளிப்பிங்கை காட்டியிருந்தேன்.

அது நானும், ஹரீசின் சித்தப்பாவும், தண்ணியடிக்கும் போது பேசிய பேச்சின் ஒரு பகுதி!



*******************



ஏங்க மாமா, எப்ப, ஹரீசோட சொத்தையெல்லாம் எடுத்துக்கப் போறீங்க?



நீ சொன்ன மாதிரிதானே மதன் நடந்துட்டிருக்கு. நான் ஒரு ரூட்டு போட்டிருந்தேன். திடீர்னு, நீ வந்து புது ரூட்டு சொன்ன. நீ சொல்ற படிதானே போயிட்டிருக்கு?



அது சரிதான்! இப்பதான் ஹரீஸ் ஊர்லியே இல்லையே, இப்பியே டாகுமெண்ட்ல கை வெக்கலாம்ல?



அது வெக்கலாம். ஆனா…



ஆனா, என்ன மாம்ஸ்?



மாம்ஸா?



அதான் ஒண்ணுக்குள்ள ஒண்ணாயிட்டோம்ல?



அதுக்குன்னு வயசு…



வயசு வித்தியாசம் பாக்கனுங்கிறீங்களா? சரி பாத்துடலாம். அப்படியே, ஸ்டேட்டஸ் வித்தியாசம் பாக்கலாமா?



என்ன மதன் இப்டி பேசுற?



பின்ன என்ன மாமா, இந்தத் திட்டத்துனால எனக்கு ஏதாவது லாபம் இருக்கா? சொத்துல நான் பங்கு கேட்டேனா? எல்லாச் சொத்தும் உங்களுக்குதானே? எனக்கு இது மாதிரி ஆயிரம் மடங்கு சொத்து இருக்கு! நான் யாரைவது தூக்கனும்னு நினைச்சா, எனக்கு யார் உதவியும் தேவையில்ல!



பைசா பெறாத இந்த சொத்துக்கு, அதுவும் உங்க கைக்கு போற சொத்துக்கு, நான் ஏன் இவ்ளோ மெனக்கெடனும்? இந்தத் திட்டம் போடனும்? எனக்கு லாபமேயில்லாத ஒரு விஷயத்துக்கு இவ்ளோ நாள் நான் இங்க தங்கனும்? ம்ம்ம்?



நீங்கல்லாம் இப்ப காசு பாத்த ஆளு! நான் பரம்பரை கோடீஸ்வரன். என் ஒரு கம்பெனிக்கு ஈடாகாது, உங்க சொத்து. இப்ப உங்க கூட அடிக்கிற தண்ணியையும், நேரத்தையும் இன்னொரு மீட்டிங்ல ஸ்பெண்ட் பண்ணியிருந்தா, ரெண்டு காண்ட்ராக்ட் சைன் பண்ணியிருந்திருப்பேன் தெரியுமா?



ஏன் மதன் கோவிச்சிக்கிற?



பின்ன, நான் உங்களைத் தேடி வந்ததுக்கு ஒரே காரணம், எனக்கும் சில நம்பிக்கையான ஆட்கள் தேவை. இந்த விஷயத்துல மட்டும் இல்லை, இது முடிஞ்சதுக்கப்புறம், என் கம்பெனி ஆபரேஷன்ஸ் சிலதை கவனிச்சிக்க. எப்டி பாத்தாலும் உங்களுக்குதான் லாபம்.



எனக்கு, நீங்க இல்லாட்டி எத்தனையோ பேரு. ஆனா, உங்களுக்கு, நான் பொன் முட்டையிடுற வாத்து!



வேறா யாராவதா இருந்தா, நான் கொடுக்கிற ஆபர்சூனிட்டிக்கு, இந்நேரம் என் காலை அமுக்கி விடக் கூட ரெடியா இருப்பாங்க. நீங்க, என்னான்னா, மாம்ஸ்னு சொன்னதுக்கு, ஓவரா பேசுறீங்க?



சரி கோவிச்சுக்காத மதன்! உன் இஷ்டம் போல கூப்பிடு!



இப்ப, நீங்க தனியா இருக்கிரப்பல்லாம், என்னை பேர் சொல்லிதானே கூப்பிடுறீங்க. ஆஃபிஸ்ல, என் கம்பெனி டைரக்டர்சே என்னைக் கண்டு பயப்படுவாங்க. எனக்கு மரியாதை கொடுக்காட்டி அவன் நிலைமை என்னான்னு தெரியுமா? நான், உங்களை ஏதாவது சொன்னேனா? என்னை ஆஃபிஸ்ல பாத்துருக்கீங்கல்ல?



ம்ம்.. பாத்துருக்கேன்!



எல்லாம் தெரிஞ்சும், நீங்க இவ்ளோ பேசுனா எப்டி?



சரி விடு மதன்.



இப்ப சொல்றதுதான், நான், இந்த வீட்ல இருக்கிரப்ப, என் இஷடத்துக்குதான் இருப்பேன். இது உங்களுக்கு சம்மதம்னா சொல்லுங்க. இல்லாட்டி, நான் போயிட்டே இருக்கேன். என்னச் சொல்றீங்க?



அட எதுக்கு மதன் இவ்ளோ சீரியசா பேசிகிட்டு. நான் சும்மா சொன்னேன். நீ உன் இஷ்டம் போல இருக்கலாம். நீ எப்டி வேணா கூப்டு! வேணும்னா, நீயும் வா போன்னே கூப்பிடேன்.

நான் சொன்னதில், என்னுடைய அசாத்திய சக்தியும், அவனுக்கு தொடர்ந்து என் மூலம் ஆதாயம் கிடைக்கும் என்பதும் அவனது பேராசையைத் தூண்டியிருந்தது.




ஹா ஹா… வா, போன்னா? குட்! ஐ லைக் இட்!



சரி, இப்பச் சொல்லுங்க மாம்ஸ், ஏன், இன்னும் டாகுமெண்ட்ல கை வெக்கல?



அது வந்து மதன்…



சும்மா சொல்லுங்க!



இல்ல… எனக்கு ஒரு ஆசை.



என்ன ஆசை?



எனக்கு…



ம்ம்.. சொல்லுங்க!



எனக்கு உங்க அக்கா மேல…



என் அக்காவா? எனக்குதான் சொந்தமே கிடையாதுன்னு சொன்னேன்ல?



சரி, ஹரீஸ் பொண்டாட்டி மேல! ஒரு கண்ணு. அதான், அவளை ஒரு கை பாத்துட்டு…



ஹா ஹா… யோவ்!



யோவா?



பின்ன? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் வயசுக்கு மரியாதை கொடுக்கச் சொன்ன! இப்ப என்னான்னா, உன் மருமக மேல கண்ணுன்னு சொல்ற? அப்புறம் என்னய்யா உனக்குல்லாம் மரியாதை?



சும்மா இரு மதன். உனக்கு எப்படி அவ அக்கா இல்லியோ, அப்பிடிதான், ஹரீசும் எனக்கு மகன் கிடையாது. எல்லாம் வேஷம். எனக்கு, என் அண்ணனையே பிடிக்காது. எப்பப் பார்த்தாலும், நீதி, நியாயம்னு பேசுவான். அதுக்காக, என் கூட உறவையே நிறுத்திட்டான்.



அவன் பையன் ஹரீசை மட்டும் பிடிக்குமா? அவனே பையன் இல்லாட்டி, இவ எப்டி மருமக ஆவா? ஆனா, ஆளு செம குட்டி! இவளை மாதிரி ஒருத்தியைத்தான் ட்ரை பண்ணனும். அதான், அவளை கரெக்ட் பண்ணிட்டு, டாகுமெண்ட்ல கை வெக்கலாம்னு…



ஹரீஸ் கிட்ட, அவ சொல்லிட்டா?



சொல்லிட்டா, அவன் நம்பிடுவானா? அவன் முட்டாள். லூசு! எவனாவுது, மாசம் ஒரு தடவைதான் உன் பொண்டாட்டியைத் தொடனும்னு பரிகாரம் சொன்னா கேப்பானா? இவன் கேட்டானே! என் ப்ளான் கரெக்ட்டா போயிட்டிருந்தது. அவளை மூணு மாசம் டைம் கொடுத்திருந்தேன். அதுக்குள்ள நீ வந்து கெடுத்துட்ட!



அதென்ன மூணு மாசம் கணக்கு?



அது சும்மா, என் சந்தோஷத்துக்கு! ரேப் பண்றதுல என்ன சுகம்? அவளுக்கு வேற வழியே இல்லாத மாதிரி செஞ்சி, அவளாவே, என்கிட்ட வர வெக்கறதுதான் த்ரில்லே! அதுல ஒரு தனி சுகம்!



ஏன் மாம்ஸ், அதான் ஏற்கனவே உங்க ஆஃபிஸ்ல, அங்க இங்கன்னு ரெண்டு மூணு   செட் பண்ணியிருக்கீங்களே, அது போதாதா?



உ… உனக்கு எப்டி தெரியும்?



என் பவர் என்னான்னு உங்களுக்குத் தெரியாது மாம்ஸ். எனக்கு உங்களைப் பத்தி எல்லாமே தெரியும்! சும்மா சொல்லுங்க.



அது என்னாதான், வெளிய இருந்தாலும், வீட்டுக்குள்ள இப்டி இருந்தா, தனி கிக்குதான் மாப்ளை!

ம்ம்… செம கேடி மாம்ஸ் நீங்க! ஆமா, இதெல்லாம் அத்தை எப்டி அலவ் பண்றாங்க?



அவ கிடக்குறா! நகையோ, புடவையோ வாங்கிக் கொடுத்தா அடங்கிடுவா. அவல்லாம், எனக்கு ஒரு பொருட்டே இல்லை!



ஆனா, அத்தைக்கு என்ன குறைச்சல் மாமா, பார்க்க அழகாத்தானே இருக்காங்க!



ம்க்கும்! அவ, அழகா? நீங்க வேற மாப்ளை காமெடி பண்ணிகிட்டு!



ஏன் மாம்ஸ் இப்டி சொல்றீங்க? மேக்கப் பண்ணிக்கிரதில்லை அவ்ளோதானே? அவிங்க கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணிகிட்டா நல்லாதானே இருப்பாங்க? அப்பிடி ஒண்ணும் வயசான மதிரி தெரியலியே?

சும்மா காமெடி பண்ணாதீங்க மாப்ளை! அவ, அப்டியே அழகாயிட்டாலும். நீங்க வேற ஏன் அவளைப் பத்தி பேசிகிட்டு.



ம்ம்.. சரி விடுங்க. அப்ப. இதான் உங்க ப்ளான், இல்ல?



ஆமா மாப்ளை!



சரி, அதுக்கும் நானே ப்ளான் பண்ணித் தர்றேன். நாம அவசரப் பட வேண்டாம். இல்லாட்டி பிரச்சினையாகிடும். நீங்கதான் மூணு மாசம் டைம் கொடுத்திருக்கேன்னு சொல்லியிருக்கீங்களே. நான் பாத்துக்குறேன் விடுங்க!



சூப்பர் மாப்ளை.



ஆனா, ஒண்ணுய்யா! உனக்குல்லாம் மரியாதை குடுக்கனும்னு கேட்ட பார்த்தியா, அதான் செம காமெடி! அதுக்கெல்லாம் உனக்கு தகுதியே கிடையாது! ஹா ஹா ஹா!


என்னுடைய மரியாதை இன்னும் குறைந்ததில், அந்தாளின் முகம் மாறியிருந்தாலும், வேறு வழியில்லாமல், சும்மா சிரித்த படி உட்கார்ந்திருந்தான்.
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)