Adultery முத்தமிட்ட உதடுகள்..!!!
#60
(29-08-2019, 03:23 AM)கல்லறை நண்பன். Wrote: நவநீதன் குளித்து விட்டு வந்தபோது கவிதா மேக்கப்  எல்லாம் முடித்து தயாராகியிருந்தாள். ஆரஞ்சு கலரில் டிசைனர் சுடிதார் போட்டிருந்தாள். தலை முடியை கொஞ்சம் ஸ்டைலாக சீவி பிண்ணியிருந்தாள். கழுத்தில்  ஒன்றுக்கு இரண்டு செயின்களைப் போட்டிருந்தாள். 

"என்னடி கலக்கற போலருக்கு?" என்றான். 

"போ மாமா" என்று வெட்கப்பட்டு சிரித்தாள். 

"அங்க யாராவது  உனக்கு  ஏத்த மாதிரி  இருக்காங்களா என்ன?"

"எங்க?"

"பெரிய மாமா வீட்டு பக்கத்துல?"

"அய்யே.. போ மாமா.."

"ஆனா சூப்பராத்தான்டி இருக்க"

"தேங்க்ஸ்"

"சாப்பிட்டியா?"

"இல்ல. உன்கூட சாப்பிட்டுக்கலாம்னு இருந்தேன்"

"சரி. போட்டுட்டு வா" என்று விட்டு அவன் உடை மாற்றினான். 

கவிதா  இருவருக்கும்  உணவை போட்டு எடுத்து  வைத்தாள். இருவரும் சாப்பிட்டு விட்டு  அண்ணன் ஊருக்கு கிளம்பினார்கள். கவிதா  அவனுடன் இருப்பது ஜாலியாகவே இருந்தது. இருவரும்  பஸ்ஸில்  ஒரே சீட்டில் உட்கார்ந்து பயணித்தபோது அவனையும் மீறிய  ஒரு பரவசம் அவனை ஆட்கொண்டது. அவளும் அப்படிதான் இருந்தாள். 

பஸ் விட்டு  இறங்கி சிறிது தூரம் நடந்து போனார்கள்.   அண்ணி கொஞ்சம்  உடல் பெருத்திருந்தாள். இரண்டு குழந்தைகளைப் பெற்ற தளர்த்தி  அவள் மார்பில் மட்டுமே தெரிந்தது. 

"அட வாங்க.. என்ன பொண்ணும் மாப்பிள்ளையும் ஜோடி போட்டு வந்துருக்கீங்க போல?" என்று கிண்டலாகச் சிரித்தபடி வரவேற்றாள்.

நவநீதன் சிரித்தான். "லீவ்ல இருந்தா. இவளும்  உங்களை பாக்க வரேன்னா. அதான் கூட்டிட்டு வந்தேன்."

"பயங்கரமா மேக்கப்  எல்லாம் பண்ணிட்டு வந்துருக்கா மாதிரி  இருக்கு?  ஏன்டி.. என்ன பிளான்?" என்று கவிதாவைக் கேட்டாள்  அண்ணி.

"ம்ம்ம்.. எங்க பெரிய மாமாவை நான் கட்டிக்கலாம்னு பிளான். போதுமா?" என்றாள் கவிதா. 

"அடி சக்களத்தி.." என்று  அண்ணி சொல்ல ஓடிப் போய்  அண்ணியின் குண்டியில் ஓங்கி  ஒரு  அடி வைத்தாள் கவிதா. 

"கெட்ட வார்த்தை பேசினே.. மாமா கிட்ட சொல்லி வாயை கிழிச்சு போடுவேன்"

அண்ணி கவிதாவின் பெரியம்மா பெண்தான். அதனால்  இருவருக்கும் இடையில் நல்ல நெருக்கமும் புரிதலும் இருந்தது. 

"அண்ணன் இல்லையா அண்ணி? " நவநீதன்  அண்ணியிடம் கேட்டான். 

"வேலைக்கு போயாச்சு" என்றபடி கவிதாவின் கையைப் பிடித்து  உள்ளே  இழுத்துப் போனாள். 

வீட்டுக்குள் இருந்து குழந்தைகள் ஓடி வந்தன. இருவரையும்  அணைத்து கையில்  எடுத்தபடி உள்ளே போனான் நவநீதன். அண்ணி தண்ணீர் கொடுத்தாள். வாங்கிக் குடித்தான். 

"நீங்க கொஞ்சம் குண்டாகிட்டிங்க போலருக்கு அண்ணி?" என்றான். 

"அப்படியா தெரியுது? "

கவிதா "நல்லாவே ஒடம்பு வந்துருச்சு. பன்னி மாதிரி.  எங்க மாமா சம்பாரிச்சு போடறதை தின்னு தின்னு.. பாரு" என்று தன் பங்குக்கு கிண்டல் செய்தாள். 

முதலில் டீ வைத்து கொடுத்தாள் அண்ணி. அதன்பின் பலதும் பேசினார்கள். அதிகமாக திருப்பூர் வேலை பற்றியும் கிருத்திகா பற்றியும்தான் பேச்சு நடந்தது. மதிய உணவை சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் படுத்து  ஓய்வெடுத்தான். கவிதா  அவனிடம் நன்றாக நெருக்கம் காட்டினாள். அண்ணி  அடிக்கடி  அதை சொல்லி கிண்டல் செய்து சிரித்தாள். மாலைவரை இருந்து விட்டு  அதன்பின்  ஊருக்கு கிளம்பினார்கள். 

விடை தரும்போது  அண்ணி விளையாட்டாகச் சொன்னாள். 
"ரெண்டு பேருக்கும் ஜோடி பொருத்தம் ரொம்ப நல்லாருக்கு. கல்யாணம் பண்ணிக்குங்க."

"ஐய.. போ லூசு" என்று வெட்கப்பட்டு சிரித்தாள் கவிதா..!!!
Super continue happy happy happy
Like Reply


Messages In This Thread
RE: முத்தமிட்ட உதடுகள்..!!! - by Dk00009 - 29-08-2019, 04:30 PM



Users browsing this thread: 4 Guest(s)