Adultery முத்தமிட்ட உதடுகள்..!!!
#32
டிவி ஓடிக் கொண்டிருந்தது. நவநீதன் டிவியில் கவனமானான். கொஞ்ச நேரம் கழித்து அவனைப் பார்த்து  திடுமெனக் கேட்டாள் கவிதா.
'' நீ வேலைக்கு போக மாட்டியா மாமா? "

நவநீதன் அவளைப் பார்த்தான். அவள் முகம் மட்டும் தெரிந்தது.
''ஏன்டி.. ?''

சிரித்தாள். '' சும்மாதான் கேட்டேன். ''

'' அன்புகிட்ட சொல்லியிருக்கேன். அவன் கூடத்தான் போவேன்.''

'' திருப்பூருக்கு போக மாட்டியா ? பனியன் கம்பெனிக்கு..?'' 

'' ம்கூம். . ''

'' அச்சச்சோ.. '' என்றாள்.

'' ஏன்டி.. இதுல உனக்கு என்ன பிரச்சனை? "

'' அப்பன்னா இனி நான் ஜட்டி சிம்மீஸ்க்கு எல்லாம் என்ன பண்றது..?'' என அவள் கேட்க.. அவனுக்கு முதலில் குழப்பமாகத்தான் இருந்தது.

'' என்ன.. ?''

  '' ஜட்டி.. சிம்மீஸு..? எல்லாம் நீதான கொண்டு வந்து குடுப்ப..? இனி எல்லாம் காசு போட்டுத்தான் வாங்கிக்கனுமா.? என்னோடது எல்லாமே பழசாகிப் போச்சு.. ''என அவள் அப்பாவியாகச் சொல்ல... பொங்கி வந்த சிரிப்பை அவனால் அடக்க முடியவில்லை. 

'' ஹ்ஹா.. ஹா !!'' என வாய் விட்டு சத்தமாகச் சிரித்தான்.
''ஏய்.. லூசு..'' 

'' ம்.. என்ன'' 

'' ஏன்டி இன்னும் நீ சின்ன புள்ளைனு நெனப்பா ?'' 

'' ஏன்.. ?'' அதே அப்பாவித் தனத்துடன் கேட்டாள்.

'' ஜட்டி சிம்மீஸ்னெல்லாம் என்கிட்ட கேக்கற..?''

'' அப்பறம். நீ தான வரப்ப எல்லாம் எங்களுக்கு கொண்டு வருவ..?'' 

'' அடி லூசு.. அது சரி. ஆனா இனிமே நீ கடைலதான் வாங்கிக்கனும். சரியா. ? அத விட்டுட்டு இப்படியெல்லாம் ஒரு பொட்ட புள்ள பேசக் கூடாது. !''

'' வேற எப்படி பேசறது..? அதுலாம் எனக்கு வேணுந்தான..?''

'' ம்.. வேணுந்தான். அத உங்கம்மாகிட்ட கேளு. '' 

'' ஏன் உன்கிட்ட கேக்க கூடாதா..?'' 

'' ம்கூம். கேக்க கூடாது.''

'' ஏன் கேக்க கூடாது.? கேட்டா நீ வாங்கித்தர மாட்டியா..?'' 

அவன் சொல்வது அவளுக்கு புரியவில்லை என்பது நன்றாகப் புரிந்தது. அவள் மண்டை மேல் கொட்ட வேண்டும் போல் இருந்தது.

'' நான் வாங்கி தரனோ இல்லையோ.. ஆனா இனி நீ டிசண்டா பேச கத்துக்கனும். பசங்ககிட்ட இப்படி ஜட்டி பிரானெல்லாம் பேசிட்டு இருக்க கூடாது''

'' நான் பிரானு சொல்லவே இல்ல. சிம்மீஸ்தான் சொன்னேன் '' எனச் சிரித்தாள். '' அது எனக்கும் தெரியும். நான் ஒண்ணும் பசங்ககிட்ட பேசல.. உன்கிட்டதான் பேசினேன்.'' என்றாள் கவிதா.. !! 

என்ன அர்த்தத்தில் அவள் இப்படி பேசுகிறாள் எனப் புரியாமல் அமைதியானான் நவநீதன். ஒரு மணி நேரம்  கழித்து  அவனுக்கு தூக்கம் வந்தது.  டிவியை ஆப் பண்ணலாம் என்று நினைத்தபடி எழுந்து  உட்கார்ந்து கவிதாவைப் பார்த்தான். அவள் தூங்கியிருந்தாள். அவள் போர்வை அவளை விட்டு விலகிப் போயிருந்தது. அவள் நைட்டி மேலேறி கொலுசணிந்த கெண்டைக்கால் தெரிந்தது. 

அவன்  எழுந்து பாத்ரூம் போய் வந்து தண்ணீர் குடித்தான். பின் விலகிய போர்வையை இழுத்து கவிதாவை மூடி விட்டு டிவி ஆப் பண்ணி விட்டுப் போய் படுத்தான்.

அடுத்த நாள் காலை. நவநீதன் கண் விழித்த போது.. அவன் வீட்டுக்குள் மாமாவின் சின்னப் பெண் அமுதாவும்.. அவள் தம்பியும் உட்கார்ந்து காபி குடித்தக் கொண்டிருந்தார்கள். அவன் விழித்து விட்டதைப் பார்த்துப் புன்னகையுடன் கேட்டாள் அமுதா.
'' மாமா.. காபி.. ?'' 

'' ம்.. குடி..'' என்றான். 

பையன் பிஸ்கெட்டை காபியில் முக்கி எடுத்து வாயில் திணித்துக் கொண்டிருந்தான். கவிதா இன்னும் பாயில் சுருண்டு படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள். நவநீதன் மெதுவாக எழுந்து உட்கார்ந்தான். 
'' அவ இன்னும் தூங்கறாளா..?'' 

'' ஆமா மாமா..! காபி கொண்டு வரட்டா..?'' என அவனுக்கு பதில் சொல்லி விட்டுக் கேட்டாள் அமுதா. 

''நீ குடி '' என்றான். அவள் தம்பியை பார்த்து.  ''என்னடா இன்னிக்கு நேரத்துலயே எந்திரிச்சிட்ட போலிருக்கு..?'' 

அமுதா.  ''அவன் செகண்ட் ரவுண்டு '' என்றாள்.

''என்னது.?'' 

'' காபி. அங்க அம்மா ஆறு மணிக்கே வெச்சு குடுத்துச்சு. அங்கயும் குடிச்சிட்டு இப்ப இங்க அத்தை வெக்கறத பாத்துட்டு இங்கயும் வந்துட்டான் ''

சிரித்து விட்டு எழுந்து பாத்ரூம் போனான் நவநீதன். சூரியன் இன்னும் முகம் காட்டியிருக்கவில்லை. அவன் அம்மா அடுப்படியில் வேலையாக இருந்தாள். நவநீதன் முகம் கழுவி உள்ளே போனான்.
'' எழுப்பி விடு அவளை..'' என அமுதாவிடம் சொன்னான். 

அமுதா தன் அக்காளை தட்டி எழுப்ப.. அவன் அம்மா சமையற்கட்டில் இருந்து அமுதாவை அழைத்து அவள் கையில் காபியை கொடுத்து விட்டாள். கவிதாவுக்கும் சேர்த்து இரண்டு கப்களைக் கொண்டு வந்தாள் அமுதா.!!

தூக்கம் கலைந்து பரட்டைத் தலையுடன் எழுந்து உட்கார்ந்த கவிதா, அமுதா கொண்டு வந்த காபியை வாங்கி அப்படியே குடிக்கப் போனாள். எட்டி அவள் தலை மேல் தட்டினான் நவநீதன்.
''ஏய்..போய் வாய் கொப்பளிச்சிட்டு வந்து காபி குடி.'' 

'' என்ன மாமா..'' என சிணுங்கினாள்.  ''நான்லாம் இப்படியேதான் குடிப்பேன்..''

'' வாய் மேல தட்றதுக்கு முன்னால மரியாதையா எந்திரிச்சு போய் வாய் கொப்பளிச்சிட்டு வந்துரு..'' என்றான் கொஞ்சம் கண்டிப்பாக. 

அமுதா சிரிக்க.. அவள் தலை மேல் ஒரு கொட்டு வைத்து விட்டு ஏதோ முனகிக் கொண்டே எழுந்து போனாள் கவிதா.!!!

'' டிவி போடு அம்மு..'' என அவன் சொன்ன பின் எழுந்து டிவியைப் போட்டு விட்டாள் அமுதா. 

முகம் கழுவி வந்த கவிதா அவள் தம்பி வைத்திருந்த பிஸ்கெட் பாக்கெட்டை லபக்கென தூக்கிக் கொண்டு காபியுடன் வந்து நவநீதன் பக்கத்தில் உட்கார்ந்தாள். அவன் அக்காளை முறைக்க.. அமுதா இடை புகுந்தாள்.
'' அவனுத ஏன்டி புடுங்கின. குடுத்துரு.. பாவம் சின்ன பையன்.'' 

நான்கு பிஸ்கெட்களை உருவி எடுத்து விட்டு மீதி இருந்த ஒரு பிஸ்கெட்டை கவருடன் கொடுத்தாள். 

அமுதா கோபமாக..
'' இவ மட்டும்.. '' என்றாள். 

கவிதா அலட்சியமாக சிரித்தாள்.
''ஆமா போடி. இவ மட்டும் திங்கவே மாட்டா '' என்றாள்.

'' ஆனா நான் ஒண்ணும் உன்னை மாதிரி புடுங்கி திங்க மாட்டேன். அப்படி திண்ணு திண்ணு பாரு.. எழும்பும் தோலுமா இருக்க.. பீனி.. !!''

'' ஆமா.. இவ பெரிய குண்டு.. போடி..'' அக்கா. தங்கை சண்டையைப் பார்த்து நவநீதனுக்கு சிரிப்புத்தான் வந்தது..!!!
Like Reply


Messages In This Thread
RE: முத்தமிட்ட உதடுகள்..!!! - by கல்லறை நண்பன். - 14-08-2019, 12:49 AM



Users browsing this thread: 7 Guest(s)