Romance சும்மா ஒரு காதல் கதை!!!
#71
வித்யா வித்தைக்காரி
【34】

வள்ளியிடம் முக்கியமான வேலையாக வெளியே செல்வதாகவும், லஞ்ச் வெளியே சாப்பிட்டுக் கொள்வதாகவும் சொல்லி கிளம்பி சென்றனர். கோர்ட் வளாகத்தில் நடந்த அனைத்தும் தன் தோழி மலர் சொன்னது போல நடந்தும் பெரிதாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தாமல் முடிந்த அளவுக்கு தன் உணர்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக இருந்தாள் வித்யா.

சாப்பாடு ஆர்டர் செய்து வெயிட் பண்ணும் போது ஈவினிங் கான்பரன்ஸ் கால் தொடர்பாக முக்கியமான அப்டேட் வேண்டும், கொஞ்சம் அவசரம் என ஆபீஸிலிருந்து அழைத்து கேட்டார்கள். பிறர் முன்னிலையில் தன் ஆராய்ச்சி பற்றி பேச முடியாது என்பதால் 5 மினிட்ஸ் என சொல்லி தனிமையில் பேச எதாவது இடம் இருக்குமா என தேடிய படி நடக்க ஆரம்பித்தான் வளன்.

சீனி அதே ஹோட்டலில் சாப்பிட வருவது போல உள்ளே வந்து தற்செயலாக பார்த்தது போல வித்யாவின் அருகே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தான். 

வெளியே எங்கேயும் போய்ட்டு வந்தீங்களா என ஆரம்பித்து கல்யாணம் ரிஜிஸ்டர் ஆனதுக்கு வாழ்த்துக்களை சொல்ல நன்றி சொல்லியா வித்யா அவங்களுக்கு (வளன்) வாழ்த்து சொல்லாதீங்க என உளற "நான் உன் அப்பா மாதிரி" , "உன் அப்பா வயசு" என்ற வார்த்தைகளை சொல்லி எல்லா விசயங்களையும் போட்டு வாங்கி விட்டான்.

சீனிக்கு அழைப்பு வந்தது, வளனுக்கு என் பொண்ண பிடிக்கும், they were together a lot, I really thought they will marry someday என ஒரு குண்டை தூக்கிப் போட்டுவிட்டு அந்த ஃபோன்காலை அட்டென்ட் செய்து தனக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் போய் அமர்ந்து பேச, சார் நீங்க சொன்ன விஷயம் எல்லாம் கேட்டுட்டேன் என்றார் எதிர்முனையில் பேசிய மேனேஜர்.

வித்யா சீனி சொன்ன விஷயத்தை நினைத்து குழப்பத்தில் இருந்தாள். ஏற்கனவே ஒருமுறை என் லவ்வர் கிட்ட பேசுறேன் என்று சொன்ன நியாபகம் வேறு.

உள்ளே வந்த வளனிடம் உங்க சீனி சார் என வித்யா சொல்ல, சீனி தனியாக சாப்பிட உட்கார்ந்திருப்பதை பார்த்தவன் மரியாதைக்காக அவனருகில் சென்று

ஹலோ சார்..

ஹே வளன். என்ன வளன் லஞ்ச் எல்லாம் வெளிய சாப்பிட வர்றீங்க. ஆனா வீட்டுக்கு விருந்துக்கு கூப்பிட்டா மட்டும் வர மாட்டேங்குறீங்க...

ஒரு வேலையா வெளியே வந்தோம் அப்படியே என சிரித்தான்.

சரி விடுங்க, உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா என்ன பண்ண என வளனுக்கு குற்ற உணர்ச்சி வருவது போல பார்த்துக் கொண்டான்.

அப்படியில்லை சார், சண்டே வர்ற பிளான். வித்யா  ஏற்கனவே உங்ககிட்ட சொன்னதாக சொன்னா..

ஓஹ்! பரவாயில்லையே பொண்டாட்டி பேச்சை இவ்ளோ சீக்கிரம் கேட்க ஆரம்பிச்சுட்டீங்க, குட்.

வேற என்ன பண்ண என சமாளித்தான்.

அப்ப சண்டே கண்டிப்பா வரணும்.

கண்டிப்பா சார்..

போங்க போய் சாப்பிடுங்க உங்க வைஃப் வெயிட் பண்றாங்க என சொல்லிவிட்டு சீனி வளனை அனுப்பி வைத்தார். சூட்டோடு சூடாக வித்யா எதாவது கேட்டு சண்டை வராதா என்ற எண்ணம்.

வளன் வித்யா அருகில் வந்து உட்கார இருவரும் தங்கள் உணவை சாப்பிட ஆரம்பித்தனர்.

நீங்க கெமிக்கல்ல டாக்டர் பட்டம் வாங்கிருக்கீங்களா?

எஸ், உனக்கு யார் சொன்னா?

சீனி சார் தான் அவரு பொண்ணு உங்கள மாதிரி டாக்டர்னு சொன்னாரு என்றாள். 

ஆமா, அவங்களுக்கும் பிஎச்டி முடிச்சுருக்காங்க.

ஓஹ்! உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா?

ஆமா, ஷீ இஸ் எ குட் லுக்கிங் கேர்ள் என சிரித்தான்.

தெரியுமான்னு கேட்டா "குட் லுக்கிங் கேர்ளாம், பெரிய குட் லுக்கிங் கேர்ள்" என முனக..

என்ன?

இல்லை, அவங்ககிட்ட கேட்டுதான் ட்ரீட் சண்டே வைக்கலாம்னு சீனி சார் சொன்னாரு..

ஓஹ்!

சீனி லஞ்ச்க்கு தற்செயலாக வந்திருப்பான் என நினைத்தவனுக்கு மகளிடம் கேட்டு ட்ரீட் டைம் முடிவு பண்ணியதாக வித்யா சொன்னதும் சந்தேகம் வந்தது. உடல்நிலை சரியில்லை என்று சொல்லியவுடன் வீட்டுக்கு வந்தது, லஞ்ச் டைம்ல அப்டேட் கேட்டு கால் வந்தது என நடந்து கொள்ளும் விஷயங்களை யோசிக்கும் போது வளனுக்கு சந்தேகம் வலுத்தது. காரில் போகும் போது சீனியின் மகளுக்கு கால் செய்தான். ஆனால் அவள் அந்த அழைப்பை ஏற்கவில்லை.

வீட்டுக்கு வந்த வித்யாவிடம் பேச வள்ளிக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது. கொஞ்ச நேரத்தில் பேசிப் பேசி வள்ளியை சாதாரண நிலைக்கு கொண்டு வந்தாள் வித்யா.

அத்தை.. அன்னைக்கு போன கோவிலுக்கு போகலாமா?

போகலாம். என்ன ஸ்பெஷல்..

அவங்களுக்கு தெரியக் கூடாது என முதலிரவில் விவாகரத்து கேட்டது இன்று கல்யாணம் ரிஜிஸ்டர் பண்ண தேவையான முதல் ஸ்டெப் எடுத்து வைத்தது என எல்லா விசயங்களையும் சொல்லி முடித்தாள்...

ஓஹ்! ஃபர்ஸ்ட் நைட்க்கு முன்ன கடவுளை வேண்டிக்கணும், அதான..

அத்தை... என சிணுங்கினாள்..

உங்களுக்குள்ள எதுவும் நடக்கலன்னு எங்களுக்கு தெரியும். ரிசர்ச் முடியட்டும்னு வெயிட் பண்றான்னு நினைச்சோம், இந்த மாதிரி நினைக்கல..

அய்யோ மாமாவுக்கும் தெரியுமா?

ஏண்டி, நீ எல்லார்கிட்டேயும் ஜாலியா சிரிச்சு பேசுனா எல்லா விஷயத்திலும் நீ ரொம்ப சந்தோஷமா இருக்கேன்னு அர்த்தமா என்ன என வள்ளி கேட்க வித்யாவிடம் எந்த பதிலும் இல்லை.

⪼ மாலை ⪻

தன்னிடமிருந்த சேலை ஒன்றை உடுத்தி லேப் அறைக்குள் நுழைந்தாள். ஒரு ஓரமாக நின்று வேலை பார்த்துக் கொண்டிருந்தவன் அவளைப் பார்த்தான். ஆனால் எதுவும் கேட்கவில்லை. கீழே சென்றவள் தலையில் மல்லிகை பூச்சூடி அத்தை என வள்ளியைத் தேடி அவளது அறைக்குள் செல்ல வள்ளி கட்டிலில் படுத்திருந்தாள். என்னால வர முடியாது நீ வளன கூட்டிட்டு போ என்றாள்.

காரணத்தைப் புரிந்து கொண்ட வித்யா, லேப் அறைக்குள் நுழைந்தாள். மல்லிப்‌பூ வாசம் மூக்கை துளைக்க அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனருகில் வந்து வெளியே போகணும் என்று சொல்ல மகுடிக்கு மயங்கியவன் போல மறு பேச்சு பேசாமல் அவள் சொன்னதை செய்தான்.. .

வீட்டுக்கு திரும்ப வந்த பிறகு...

என்ன வேண்டிக்கிட்ட?

என் புருஷன் என்கிட்ட சீக்கிரம் அவரோட லவ்வ சொல்லணும் என சொல்லி ஜாக்கெட்டின் அடிப்பகுதியில் முலைகள் பக்கவாட்டில் தெரியாமலிருக்க போட்டிருந்த பின்னை கழட்டி எடுத்தாள்.

முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதுக்கு எல்லாம் சொல்லி விடலாம் என நினைத்தாலும்...

யாரு நானா? ஹா ஹா என வில்லன் போல சிரித்துக் கொண்டே அவளைப் பார்த்தான்.

வேற யாரு என சொல்லிக் கொண்டே தோள் பகுதியில் ஜாக்கெட்டில் மாட்டியிருந்த பின்னை கழட்டினாள். எல்லா பெண்களையும் போல வலது பக்க மார்பகங்களை முழுமையாக மறைத்துக் கொண்டிருந்த சேலையை அட்ஜஸ்ட் செய்து வளன் கவனத்தை தன் முலைகள் மீது திரும்ப வைத்தாள்.

ஏற்கனவே மனைவியை சேலையில் பார்த்த கிறக்கத்தில் மகுடிக்கு மயங்கிய பாம்பு போல இருந்தவன் அது இல்லாமல் பார்த்தால் எப்படியிருக்கும் என்ற எண்ணம் வர அவளை நெருங்கினான்.

வெயிட் என சொல்லி அந்த அறையில் இருந்த டிஜிட்டல் வால் கிளாக்கைப் பார்த்தாள். மணி 5:24.

கிளாக்ல என்ன பார்க்குற..?

டைம்..

எல்லாரும் கிளாக்க சுத்தி பல்லி ஓடுதான்னு தான பார்ப்பாங்க.. நீ மட்டும் தான இந்த உலகத்துல டைம் பார்க்குற என மூச்சு காற்று அவள் முலைகள் மீது விழும் அளவுக்கு நெருங்கி வந்தான். ..

5:30 க்கு தான் நல்ல நேரம் என சொல்லி வெட்கத்தில் தலையை கவிழ்ந்து கொண்டாள்...
[+] 2 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
வித்யா வித்தைக்காரி 【34】 - by JeeviBarath - 01-04-2024, 08:00 AM



Users browsing this thread: 2 Guest(s)