Romance சும்மா ஒரு காதல் கதை!!!
#49
வித்யா வித்தைக்காரி
【26】

ஐஸ் கிரீம் சாப்பிட்டுட்டே பேசலாமே..

இல்லை சார், இப்ப தான் சாப்பிட்டேன்.

யங்ஸ்டர் நீயே இப்படி சொன்னா எப்படி.. வா..

இருவரும் உள்ளே நுழைந்தார்கள்..

ஐஸ் கிரீம் சாப்பிட்டுக்கொண்டே பேச ஆரம்பித்தார்கள்...

படிப்பு பற்றி கேட்க எப்போதும் போல பிட் கதை ஃபெயில் ஆகிவிடும் பேப்பர் சேஸ் பண்ணனும் என சிரித்துக் கொண்டே சொன்னாள்.

உன் ரிஜிஸ்டர் நம்பர் குடு..

2******34

என்னால முடிஞ்சா ஹெல்ப் பண்றேன்...

ஐஸ் கிரீம் சாப்பிட்டு முடியவும்..

சொல்லுங்க வித்யா, என்கிட்ட ஏதோ பேசணும்னு சொன்னீங்க..

அய்யோ ஆமா, என் கதையை பேசி அதை கேட்க மறந்துட்டேன்.

சொல்லுங்க, ஐ ஆம் ஆல் யுவர்ஸ் என சொன்னான்.

அதன் உள்ளர்த்தம் புரியாத வித்யா, லேப் அறையில் அவள் செய்த சேட்டையால் தாமதம் ஏற்பட்டுள்ளது எனவும் தன் கணவனுக்கு அவன் கேட்ட மாதிரி  இன்னும் கொஞ்சம் அவகாசம் குடுங்கள் எனக் கேட்டாள்.

இதைப் பயன்படுத்தி எப்படியாவது அவளை வீழ்த்த வேண்டும் எ‌ன்று‌ நினைத்தான் சீனி. அப்படியில்லை என்றால் பேப்பர் சேஸ் செய்வதை பயன்படுத்த வேண்டும். பேப்பர் சேஸ் ரிசல்ட் எல்லாம் வர நாளாகும். இதுதான் சிறந்த ஆயுதம் என நினைத்தான். 

நீங்க விருந்துக்கு வந்தா 2 வீக்ஸ் எக்ஸ்ட்ரா டைம் குடுக்க ட்ரை பண்றேன்.

சார், நாங்க கண்டிப்பா வர்றோம்..

க்ரேட், லெட் மீ டாக் டூ மை டாட்டர்..

வேலை நிமித்தமாக மனைவி லண்டன் சென்றிருப்பதால் மகளும் வீட்டில் இல்லாத நாளில் விருந்து கொடுக்க வேண்டும். வளனை என்ன செய்வது எப்படி சமாளிக்கலாம் என்பதைப் பற்றி அப்புறம் யோசிக்கலாம் என நினைத்தான் சீனி.

தன் மகளிடம் சீனி பேச அவள் தனக்கு ஞாயிறு வேலை இருக்கிறது என்றாள். சீனி முகத்தில் சந்தோஷம்.சீனி மகளும் கெமிக்கல் என்ஜினியரிங் முடித்து பிஎச்டி வாங்கியவள். அவளுக்கும் வளனுக்கும் நல்ல அறிமுகம் உண்டு. நோய்களுக்கு மாத்திரைகள் உருவாக்கும் ஆராய்ச்சிகள் செய்கிறாள். மகளுடன் பேசி முடித்தவன்.. 

இந்த சண்டே..

ஓகே சார்..

கண்டிப்பா வரணும், உங்க ஹஸ்பண்ட் மாதிரி பொய் சொல்லக்கூடாது.

நா‌ன் பொய் சொல்ல மாட்டேன். ப்ராமிஸ்.. 

இப்படியே கொஞ்ச நேரம் பேசினார்கள். சீனியின் கேரக்டர் மற்றும் உள்நோக்கம் புரியாமல் தன் கணவனுக்கு இரண்டு வாரம் ஆராய்ச்சியை முடிக்க நேரம் கிடைத்ததில் மிக சந்தோஷமாக எப்போதும் போல கலகலப்பாக வெளுத்ததெல்லாம் பால் என நினைத்து பேசிக் கொண்டிருந்தாள் வித்யா.

வித்யா கிளம்பணும் என்று சொல்ல நானே டிராப் பண்றேன் என்றான் சீனி. இருவரும் வெளியே வந்து படிகளில் இறங்கும் போது அந்த வழியாக வீட்டுக்கு வந்த வாசு அவர்களை பார்த்துவிட்டார். காரை ஓரமாக நிறுத்தி கண்காணிக்க ஆரம்பித்தார். 

சீனியை பற்றி இன்னும் வித்யாவிடம் சொல்லாத தன் மகன் மேல் கோபம், பயங்கர கோபம். அவர் காதில் புகை மட்டும்தான் வரவில்லை, சீனி பிஎச்டி படிக்க வந்த பெண்களிடம் எப்படி நடந்து கொண்டான் என்பதைப் பற்றி தெரிந்தவர் அல்லவா.

சீனி ஃபோன் கால் செய்தான். முதலில் வித்யாவை கண்காணிக்க ஆரம்பித்த நபர் கார் சாவியை வாங்கிச் சென்றான். அவன் காரை எடுத்துக் கொண்டு வர, சீனி டிரைவர் பக்கமும், வித்யா முன்னிறுக்கையிலும் ஏறினார்கள். அய்யோ எங்கே கூட்டிட்டு போக போறான்ன்னு தெரியலையே என வாசுவுக்கு பதட்டம் அதிகமானது.

பென்ஸ் காரை பின் தொடர ஆரம்பித்தார் வாசு. பென்ஸ் சிக்னலில் வலது புறம் திரும்ப இன்டிக்கேட்டர் போடாமல் நிற்பதை பார்த்த பிறகு தான் வாசுவுக்கு கொஞ்சம் நிம்மதியாக இரு‌ந்தது. சீனி வீட்டுக்கு செல்ல வேண்டும் என்றால் யூ டர்ன் போட வேண்டும். வண்டி நேராக செல்வதால் தன்னுடைய வீட்டிற்கு செல்வதாக நினைத்தார்.

வித்யா எல்லோரிடமும் பேசுவதைப் போல சாதாரணமாக சீனியிடமும் பே‌சினா‌ள். கிண்டல் செய்து கொண்டிருக்கும் வித்யா தோளில் அய்யோ வித்யா நீ அவ்ளோ ஜாலி டைப்பா என தட்டினான். ஆழம் பார்க்க நினைத்து அப்படி செய்தான் சீனி.

அப்பா வயதில் இருக்கும் ஒருவர் அப்படி செய்தது வித்யாவுக்கு தவறாக தெரியவில்லை. மீண்டும் அப்படியே அவள் பேசுவதற்கு சிரிப்பது போல சிரித்து தொடையில் கைவைக்கும் எண்ணத்தில் கையை நகர்த்த எதிரில் ஒரு பைக் குறுக்கே வந்துவிட்டது. சட்டென பிரேக் அடித்தவன் கையை நகர்த்தி ஸ்டியரிங்கை பிடிக்க வேண்டியதாகிப் போனது.

வீட்டு வாசலில் கார் நிற்க பை சொல்லி இறங்கி வீட்டிற்குள் நுழைந்தாள். தன் கணவன் என நினைத்து கதவை திறந்த வள்ளியை பார்த்ததும் என்ன அத்தை மாமாவ எதோ பண்ற பிளான்ல இருக்கீங்க போல எனக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து விட்டு தன் அறைக்கு சென்றாள்.

இரண்டு நிமிடங்களில் காரை பார்க் செய்துவிட்டு தன் மகனுக்கு ஃபோன்கால் செய்து கொண்டே வீட்டுக்குள் வந்த தன் கணவனை ஆயிரம் ஆசைகளுடன் வரவேற்றாள் வள்ளி. வாசுவின் முகம் வாடிப் போய் இருப்பதை பார்த்தவள் யாருடனோ பேசுகிறான் என நினைத்து என்னாச்சி என சைகையில் கேட்டாள். வாசு எதுவும் சொல்லவில்லை. 

ஏற்கனவே மகளை பார்க்கும் ஆசையில் இருந்த நேசமணிக்கு, காலையில் வித்யா கால் செய்யாததன் காரணமாக நேரில் போய் சர்ப்ரைஸ் குடுக்கலாம் என்ற எண்ணம் வந்தது. சென்னை நோக்கி தன் பயணத்தை ஆரம்பித்திருந்தார். வீட்டில் இல்லாமல் வெளியில் எங்கும் சென்றால் என்ற எண்ணம் வர பாதி வழியில் ஃபோன்கால் செய்த போதுதான் "டிஸ்டர்ப்" என்ற வார்த்தையை சொன்னாள் வித்யா. வளன் வாழும் ஏரியா வந்த நேசமணி பழம் தன் மகளுக்கு பிடித்த தின் பண்டங்கள் என எல்லாம் வாங்கிக் கொண்டிருந்தார்.

தன் அப்பா கால் செய்வதைப் பார்த்த வளன் எடுத்துப் பேசினான். 5 மினிட்ஸ்ல வர்றேன் என்றான். உடனே வர்றியா இல்லையா என கத்தினார். வள்ளிக்கு அதிர்ச்சி. எங்க என்ன ஆச்சு என தன் கணவனிடம் கேட்க ஆரம்பித்தாள்.

வளன் கீழே வர இருவரிடமும் தான் பார்த்த விஷயங்களை சொன்னார். நீ ஏன் அவனைப் (சீனி) இன்னும் வித்யாகிட்ட சொல்லல என கடிந்து கொண்டார். +2 படிக்கும் போது மார்க் குறைவாக எடுத்த நாளில் இருந்த அதே கோபம்.வளன் கொஞ்சம் நடுங்கி விட்டான். கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தே பெரிசாக அவரிடம் பேசுவதில்லை. சில விஷயங்களில் அவருக்கு கோபம் வந்தாலும் சிறு வயதில் அடிக்கடி பார்த்த அந்த கோபம் கலந்த முகத்தை பார்க்க தயக்கம் இருந்தது.

சரி நான் உடனே பேசுறேன் என சொல்லியவன் படிகளில் ஏறினான். என்கிட்ட பொய் சொல்லிட்டு அவன பார்க்க போனியா, எவ்ளோ திமிர் உனக்கு என கருவிக் கொண்டே அவன் அறைக்குள் வந்தான். சீனியை பற்றி சொல்லாமல் இருந்தது அவன் தவறு. ஆனால் அவன் தவறை மறைக்க வேண்டுமே! அவள்மேல் தன் கோபத்தை காட்ட தயாராக இருந்தான்.

வித்யா தன் தோழி மலரை பார்க்க போகிறேன் என சொல்லி சென்றாள் என வாசுவிடம் வள்ளி சொன்னாள். வித்யாவுக்கும் சீனிக்கும் எப்படி பழக்கம். வீட்ல நம்ம கூட இருக்கா, காலேஜ் எக்ஸாம் முடிஞ்ச பிறகு இன்னைக்கு தான வெளியில தனியா  போனா என புலம்ப... 

வித்யா சொன்ன  விஷயம் கரெக்ட்டா தான் இருக்கும் வள்ளி. சீனி எதோ வேலை காட்டுறான்னு நினைக்கிறேன் என தன் சந்தேகத்தை சொன்னான் வாசு. 
வீட்டு காலிங் பெல் அடித்தது. அந்த தேவிடியா பயலா தான் இருக்கும், அவன கொல்ல போறேன் பாரு என கதவை திறந்தார் வாசு.

கையில் பெரிய பார்சல் மற்றும் முகம் முழுக்க புன்னகையுடன் நேசமணி வாசலில்..

இங்கே வளன் பெட்ரூமில் வித்யா கால்கள் அந்தரத்தில் இருக்க, அவள் கண்கள் சொருக ஆரம்பித்தது..
[+] 2 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
வித்யா வித்தைக்காரி 【26】 - by JeeviBarath - 27-03-2024, 09:08 AM



Users browsing this thread: 2 Guest(s)