Romance சும்மா ஒரு காதல் கதை!!! [நிறைவடைந்தது]
#22
வித்யா வித்தைக்காரி
【17】

நண்பர்களுடன் கான்பரன்ஸ் கால் போட்டு வம்பளக்க ஆரம்பித்தாள். குளு மணாலி போன கதையை பற்றி ஒருவரி விடாமல் பேசினாள்.

போன காரியம் என்ன ஆச்சு என ஆண் நண்பர்களில் ஒருவன் கேட்க...

டேய் லூசாடா நீ, விவாகரத்து ஏற்கனவே கேட்ட பிறகு போன காரியம் பத்தி கேக்குறான் பாரு..

ஏண்டி? விவகாரத்து கேட்டா ஜாலியா இருக்கக் கூடாதுன்னு இருக்கா என்ன?

அட நீ வேறடா, கெமிக்கல் மண்டையனுக்கு ரொமான்ஸ் என்றால் என்னன்னு தெரியலை..

ஹலோ, அப்படி தப்பா எடை போடாத..

ஏண்டா ஒருவாரம் ஆகப் போகுது, ஆளு தேறுமா இல்லையான்னு எனக்குத் தெரியாதா?

இப்படியே பேசிட்டு இரு அப்புறம் என்னைக்காவது ஒருநாள் அய்யோ அம்மான்னு புலம்ப போற என ஆண் நண்பர்கள் கிண்டல் செய்ய, பெண் தோழி அமைதியாக இருந்தாள். குடும்ப விஷயத்தில் அவள் தலையிட விரும்பவில்லை.

நண்பர்களுடன் வம்பளந்து முடித்தவள், அத்தை என வள்ளியிடம் வம்பளக்க ஆரம்பித்தாள். மேலே போக சொல்ல, அவங்க ரொம்ப பிசி டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு சொல்லிட்டாங்க என்றாள்.

சமையல் சொல்லிக் குடுங்க என வித்யா கேட்க, காலையில் எல்லாம் ஆச்சு என்றாள் வள்ளி..

ச்ச கத்துக்கலாம்னு நினைச்சா இப்படி ஆயிடுச்சே என சலித்துக் கொண்டாள்..

மொபைல் எடுத்து பொன் மேனி உருகுதே பாட்டைப் போட்டாள்..

என்னடி பாட்டு இது..?

உங்களுக்கு தெரியாதா அத்தை எனக் கேட்க..

தெரியும்டி..

மாமாக்கு ரொம்ப பிடிக்கும் போல..

அடியே..

ஹா ஹா..  சும்மா ஜாலிக்கு அத்தை..

அது தெரியுது, எதுக்கு இப்ப போட்ட..

இதுக்கு தான் என டான்ஸ் ஆட ஆரம்பித்தாள். அத்தை நீங்களும் ஆடுங்க என கையை பிடித்து ஆட ஆரம்பித்தாள்.

காலிங் பெல் அடிக்க வேலைக்காரங்க பூ வாங்கிட்டு வருவாங்க போய் பாரு என்றாள் வள்ளி.

வேலை செய்யும் அம்மா உள்ளே வர, நீங்களும் டான்ஸ் ஆடுங்க அந்த பெண்மணியின் கையை பிடித்து ஆட ஆரம்பித்தாள்.

ஏண்டி இப்படி பண்ற என்றாள் வள்ளி..

மாமாவ மடக்கதான் இந்த டான்ஸ்..

இந்த வயசுல எங்களுக்கு இது தேவையில்ல, நீ நல்லா கத்துக்க என்றாள்..

அதெல்லாம் நான் பார்த்துப்பேன் என வித்யா சொல்ல வள்ளி சிரித்தாள். ஆனால் அந்த வேலைக்கார பெண் வித்யா இன்னும் கன்னி கழியாதவள் தன் மாமியார் வருத்தப்படக் கூடாது என்பதால் பொய் சொல்கிறாள் என்பதை அறிந்து கொண்டாள்..

ஈவினிங் கோயில் போகணும் சேலை இருக்கா?

இருக்கு அத்தை.. ஹாஸ்டலில் இருந்த ஆடைகளை வீட்டுக்கு எடுத்து வந்து விட்டாள். அதனால் நிறைய ஆடைகள் இருந்தன..

4:45க்கு கரெக்ட்டா மறக்காம கிளம்பி வா..

சரி

⪼ மாலை 4:45 ⪻

மாலை 4:45க்கு குளித்து சேலை உடுத்தி லேப் அறைக்குள் நுழைந்தாள் வித்யா. வாவ் என வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான். வம்பிழுக்கும் எண்ணத்தில் தன் மணாளனை தேடிக் கொண்டிருந்தது குறும்புக்காரியின் கண்கள்.

வித்யாவை நெருங்கிப் பார்க்கும் எண்ணம் வளனுக்கு இருந்தது. என்ன இருந்தாலும் ஈகோ பிடித்தவனாயிற்றே..

யாரடி தேடுற..

என்ன கட்டிக்கிட்டத..

என்ன?

என்ன கட்டிக்கிட்டவங்கள என நாக்கை நீட்டி கடித்தாள்..

எங்க போற..?

மாப்பிள்ளை பார்க்க..

வாட்..

நீங்க விவாகரத்து கேட்டீங்க, இப்படியே இருக்க முடியுமா அதான் மாப்பிள்ளை பார்க்க போறேன்.

தனியாவா போற (மனதுக்குள் சிரித்தான்)

இல்லை, அத்தை வர்றாங்க..

வாட்.. சொல்லிட்டியா..

ஆமா, உங்களுக்கு இது குடுத்து வைக்கலை என தன் வலது கையை முலைகளின் பக்கவாட்டில் ஆரம்பித்து கீழே வரை அசைத்தாள்.

இன்னும் நீ என் பொண்டாட்டிதான் ரொம்ப பேசுன அப்புறம் என அவளை நோக்கி நகர்ந்தான்..

கிட்ட வராதீங்க அப்புறம் நடக்குறதே வேற என ஓட முயற்சி செய்தாள்.

ஏய் நில்லுடி..

அதுக்கு வேற ஆள பாருங்க..

அதான் நமக்குள்ள எல்லாம் ஆயிடுச்சே அப்புறம் புதுசா எதுக்கு ஒரு ஆளு..

கதவை திறந்தவள், குடுகுடுவென படிகளில் ஓடி வந்தவளிடம்

வித்யா பார்த்து பார்த்து என வள்ளி சத்தம் போட்டாள்..

உங்க புள்ளைகிட்ட சொல்லுங்க, என் அழக பார்த்து வெளிய போக வேணாம்னு சொல்லி கையை பிடிச்சு இழுக்குறார்..

தாயாருக்கு வெட்கம் வந்தது.

வளன் தலையில் அடித்துக் கொண்டான்..

வித்யா தன் அத்தை வள்ளி தன்னை பார்க்கவில்லை என்பதை உறுதி செய்து வளனை நோக்கி நாக்கை நீட்டி, ஆள் காட்டி விரலை மடக்கி சுரண்டுவது போல செய்து பரிகாசம் செய்தாள். அதைப் பார்த்த வளனுக்கு சிரிப்பு வந்தது.

வள்ளி ரெப்ரிஜிரேட்டரில் இருந்த பூவை எடுக்க செல்ல, தனியாக நின்ற மனைவியை பார்த்தவன் அவளைப் பார்த்துக் கொண்டே முதல் படியில் கால் வைக்க, வித்யா அதைக் கவனித்தாள். கிடுகிடுவென ஓடிப் போய் மாமியாருக்கு பின்னால் போய் நின்றாள்.

என்னடி..

நீங்க பெத்த எருமை என்னை துரத்தித்திட்டு வர்றாங்க.. எருமை என்பதை வள்ளி காதுகளில் விழாத அளவுக்கு அமைதியாக சொன்னாள்.

தன் அம்மா ஹாலுக்கு வருவதை பார்த்தவன் லேப் அறைக்குள் நுழைய நடந்தான்.

வள்ளி : வளன்..

என்னம்மா..

நாங்க கோவிலுக்கு போயிட்டு வர கொஞ்ச நேரம் ஆகும். வெளிய போனா ஸ்பேர் கீ யூஸ் பண்ணு..

வள்ளி பின்னால் நின்று கொண்டிருந்த வித்யா தன் கண்களை விரித்து, வாயைப் பிளந்து நாக்கை நீட்டி வளனை கிண்டல் செய்ய சேட்டைகள் செய்தாள்.

கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டு சரி என்றான் வளன்.

ஏங்க போயிட்டு வர்றேன் என ஃபிளையிங் கிஸ் கொடுத்தாள் வித்யா..

மாப்பிள்ளை பார்க்க போறேன்னு சொன்ன, ஒரு 10 நிமிஷம் கூட அந்த கேரக்டர் மெயின்டெயின் பண்ண முடியலை.. அய்யோ அய்யோ என தலையில் தட்டிக் கொண்டே சிரித்தான்.

வித்யா பற்றி யோசிக்க ஆரம்பித்தான். அவனுக்கு சுத்தமாக வேலை ஓடவில்லை. அவனுக்கு தன் மனைவியை சேலையில் வெளியே கூட்டிச் செல்லும் எண்ணம் வந்தது.

நேரத்தை பார்த்தவன் அவசர அவசரமாக குளித்து டவல் உடுத்தி வெளியே வந்தான். வித்யா வருவதற்குள் வந்துவிடலாம் என நினைத்து ஜட்டியை தவிர வேறு எதுவும் எடுத்து செல்லவில்லை.

மேலாடை இல்லாமல் டவலில் இருந்த கணவனை ரசித்தாள். இருந்தாலும் வித்யா குணம் வேலையை காட்டியது..

சேம் சேம்..

என்னடி சேம் சேம்..

இப்படி வந்து நின்னா..

உனக்கு இங்க என்ன தெரியுது..

டிரஸ் மாத்திட்டு வெளிய போங்க நானும் ட்ரெஸ் மாத்தணும்..

ஏன் இப்பவே மாத்து..

நக்கலா, நீங்க வெளிய போனாதான நான் மாத்த முடியும்.

ஏற்கனவே எல்லாம் பார்த்தாச்சு. அப்புறம் என்ன?

என்ன..

உனக்கு மறந்துட்டு போல, நமக்குள்ள எல்லாம் ஆயிடுச்சு.. இனி நான் பார்க்கலாம்..

அது இருட்டுல தெரியாம நடந்துடுச்சு அதுக்காக இப்படியா..

டவல் கழட்ட கையை வைத்தான்..

ச்சீ என்ன பண்றீங்க என திரும்பிக் கொண்டாள்..

பட்டென வித்யா குண்டியில் டவலால் அடி விழுந்தது..

உங்களுக்கு அதுக்கு மேல என்ன கோபம், எப்ப பார்த்தாலும் அதுலயே (குண்டியில்) அடிக்கிறீங்க..

அளவுக்கு அதிகமாக இருக்கே..

இப்படியே கண்ணு வச்சா தேய்ஞ்சி போய்ட போகுது..

டிராக் சூட் அணிந்தவன், டவல் தூக்கி அவள் மேல் போட்டான்.

வெளிய போங்க, உங்க கூட பேசிப் பேசி டயர்ட் ஆகிட்டேன்..

ஓஹ்! டயர்ட் ஆகிட்டியா..?

ஹம் என தலையை அசைத்தாள்..

நா‌ன் ஹெல்ப் பண்றேன் என கொசுவத்தில் கைவைக்க கைகளை நீட்டினான்.
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
வித்யா வித்தைக்காரி 【17】 - by JeeviBarath - 15-03-2024, 12:24 AM



Users browsing this thread: 3 Guest(s)