Romance அவளுக்கென்ன அழகிய முகம்
Exclamation 
6


காலையில் ராணியின் வீடு பரபரப்பாக இருந்தது. அவள் அம்மா வந்தவுடன் வீட்டை சுற்றிக்காட்டினாள்.

"என்னடி இவ்ளோ பெரிய வீட்ல நீ மட்டுந்தான் இருக்கியா?"

"இல்லம்மா.. என் பிரெண்ட் பிரியா கூட இருக்கா... அவளுக்கு வேற ப்ராஜெக்ட்.. அதனால வேல விஷயமா பிரியா நேத்துதான் புனேக்கு டெபுடேஷன்ல போனா.. வர 2 மாசம் ஆகும்."

"ஓ அப்படியா ..."

" ஆமா.. அப்புறம் ஹவுஸ் ஓனர் ரொம்ப நல்லவர்.. தனிக்கட்டை.. மொதல்ல அவர் வீட்டை வாடகைக்கு குடுக்கமாட்டேன்னுட்டார்.. கம்ப்யூட்டர் IT வேல செய்யற பொண்ணுகன்னு .. அவரை convince பண்ணி இந்த வீட்டை புடிச்சோம்.."

" தனிக்கட்டைன்னு சொல்ற .. பாத்து நடந்துக்க மகளே.. நான் உன்னை தனியா விடக்கூடாதுன்னுதான் அவசரமா வந்தேன். அப்புறம் ஏதாவது தொந்தரவு பண்ணாரா ?"

" ச்சே ச்சே அவர் ரொம்ப gentleman.. டீசெண்டா நடந்துப்பார்.. நான்தான் அவரை தொந்தரவு செய்வேன்."

" ம்ம்ம்... என்ன ஒரே புகழ்ச்சியா இருக்கு.. என்ன வேல பாக்கறார்? "

" அவர் ஜிம் மாஸ்டர் .. வரும்போது நீ பாத்திருப்பியே .. ஒரு பெரிய ஜிம் .. அது அவரோடதுதான்.. நீ வா அவரை உனக்கு introduce பண்றேன்.."

"இப்பவேவா ... இரு நான் நல்ல டிரஸ் பண்ணிட்டு வரேன்.."

" நீ என்ன மாப்பிள்ளையா பாக்கப்போற .. இந்த ட்ரெஸ்ஸே நல்லாத்தான் இருக்கு.."

" சும்மா இருடி .. " என சொல்லிவிட்டு உள்ளே சென்று ஒரு டெரி-காட்டன் புடவையும் மேட்சிங்காக ப்ளௌஸ் போட்டு வெளியே வந்தாள் ராணியின் அம்மா.

" நிஜமாவே பொண்ணு பாக்கறமாதிரிதான் வந்திருக்கே " என ராணி கிண்டலடித்தாள்.

" ஏய் வாலு.. அடி வாங்கப்போற நீ ", கையை தூக்கிக்கொண்டு அடிக்க வந்தாள் அம்மா..

" ஓகே ஓகே .. சமாதானம்.. வா கீழ போலாம்.. "

இருவரும் மாடியிலிருந்து கீழே வந்தார்கள்.

" அங்கிள்.. அங்கிள் எங்க இருக்கீங்க? உங்கள பாக்க யாரு வந்திருக்காங்க பாருங்க."

ராணி கதவை தட்டி கூப்பிட்டாள்.

ராஜனும் " வரேன் வரேன் ஒரு நிமிஷம்" என்று உள்ளே இருந்து குரல் கொடுத்துக்கொண்டே கதவை திறந்தார்.

" இவங்க தான் என்னோட அம்மா ... அம்மா! இவர்தான் ராஜன் அங்கிள்.", ராணி பட படவென அறிமுகப்படுத்தினாள்.

ராஜனும் ராணியின் அம்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி திகைத்து நின்றனர்.

அங்கே கனத்த மௌனம் நிலவியது.

சடாரென்று ராஜனின் காலில் தடாலென விழுந்தாள் ராணியின் அம்மா.

"என்னை மன்னிச்சிருங்க சௌந்தர். உங்கள இங்க பாப்பேன்னு நான் நினைச்சுக்கூட பாக்கல. நான் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் பண்ணிட்டேன். அதுக்காகதான் இவ்ளோ வருஷமா நான் தண்டனை அனுபவிச்சிட்டு இருக்கேன். நீங்க மன்னிக்கக்கூடிய காரியம் நான் பண்ணல.. ஆனா ரொம்ப வருஷமா உங்களை பாக்கணும், மன்னிப்பு கேக்கணும்னு எனக்கு தோணிகிட்டேதான் இருந்துச்சி.. என்னை மன்னிப்பீங்களா சௌந்தர்.."

ராணியின் அம்மா அழுதுகொண்டே ராஜனின் கால்களை நனைத்தாள்.

ராஜன் பேச்சுமூச்சில்லாமல் சிலையாக நின்றார்.

சில நொடிகளில் என்ன நடக்கிறது என்றே புரியாத ராணி, தன்னுடைய தாய் ராஜனின் காலில் விழுந்து கதறிக் கதறி அழுக, அவளுக்கு எல்லாம் புரிய ஆரம்பித்தது.

பெரிய பாறையை தன்னுடைய இதயத்தில் வீசியது போல துடித்தாள்.

உதடுகள் நடுநடுங்க... " நோ.. நோ...நோ.. " என்று அலறிக்கொண்டே மாடிக்கு ஓடினாள்.

ராஜனின் மனது பனிப்பாறையில் மோதிய டைட்டானிக் கப்பல் போல துக்கத்திலும் குற்றவுணர்ச்சியிலும் தத்தளித்தது.

ஒரு நொடியில் சந்தோஷம் கானல் நீராய் ஆவியாவதைப்போல உணர்ந்தார்.

எதுவும் பேசாமல் ஜடமாக சோபாவில் விழுந்தார். நேற்று நடந்ததும் இன்று நடப்பதும் அவருக்கு மிகுந்த துக்கத்தை கொடுத்தது. என்னடா வாழ்க்கை இப்படி நம்மை துன்பத்தில் ஆழ்த்துகிறது என்று துக்கத்தில் ஆழ்ந்தார்.



தேவி - ஆம், அதுதான் அவள் உண்மையான பெயர் - அழுதுகொண்டே இருந்தாள். தன் மகள் ஏன் இப்படி ஓடுகிறாள் என்று அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்த உணர்வில் இருந்தாள்.

ராஜனும் எதுவுமே பேசாமல் இப்படி சிலையாய் உக்கார்த்திருப்பது அவளுக்கு மீண்டும் அதிர்ச்சியளித்தது.

என்ன நடக்கிறது என்று அவளால் கணிக்கமுடியவில்லை.

அழுதுகொண்டே, " என்ன கொன்னுடுங்க சௌந்தர்.. " என்று ராஜனின் கால்களை விடாமல் பற்றிக்கொண்டாள்.

" ஏதாவது பேசுங்க சௌந்தர்.. "

ராஜன் என்ன பேசுவதென தெரியாமல் முழித்தார்.

மனதை திடப்படுத்திக்கொண்டு பேச தொடங்கினார்.



"இவ்ளோ நாளா எங்க இருந்த?.. " என்று ராஜன் கேட்டுவிட்டு...

"இப்போ வந்ததுக்கு நேத்தே வந்திருக்கலாமில்ல.." என மனதிற்குள் சொல்லிக்கொண்டார்.

" நான் விஜய் கூட ஓடிப்போனது தப்பு... கொஞ்சம்கூட யோசிக்காம முடிவெடுத்துட்டேன். அவனும் நானும் காதலிச்சோம்.. வீட்ல அது தெரிஞ்சவுடனே என்னை உங்களுக்கு கல்யாணம் பண்ணிவெச்சுட்டாங்க. அவன் நம்ம கல்யாணத்தப்போ ஊர்ல இல்ல. ஒரு மாசம் கழிச்சு என்ன பாக்க வந்தான். என்னோட மனச மாத்தி அவன்கூட என்ன கூட்டிட்டு போய்ட்டான். நானும் புத்தி கேட்டு அவன நம்பி போய்ட்டேன். ஒரே வாரத்தில அவனோட புத்திய காமிச்சுட்டான். என்னோட நகையெல்லாம் தூக்கிட்டு என்ன நட்டாத்தில விட்டிட்டு ஓடிட்டான். வீட்டுக்கு வர பயமா இருந்தது. அப்புறம் நான் ஒரு அனாதை அசிரமத்தில போய் சேந்தேன். ராணியை அங்கதான் வளர்த்தேன். "

ராஜன் தேவியை ஏறிட்டு பார்த்தார்.

"அப்போ ராணி?"

தேவி தலையை ஆட்டிக்கொண்டே.. " அவ உங்க பொண்ணுதான்.."

ராஜனின் இதயம் சின்னாபின்னமானது.

தலையில் கைவைத்து கொண்டு உக்கார்ந்தார்.

தேவி தொடர்ந்தாள்... " அவளுக்கு உங்கள பத்தி நான் இது வர சொல்லவேயில்லை. அவ கேக்கும்போது நான் அப்பா ஆக்ஸிடெண்ட்ல செத்துபோய்ட்டதா பொய் சொல்லிட்டேன்."



ராஜன் அமைதியாக... " ராணிதான் உன்னோட பொண்ணுன்னு எனக்கு தெரியாது. "

"என்ன மன்னிச்சுட்டீங்கல்ல?"

அதெல்லாம் விடு.. ராணி ரொம்ப அப்செட்டா இருக்கா. நீ போய் சமாதானம் செய்..அவகிட்ட வேற எதுவும் சொல்லாத... மத்ததெல்லாம் அப்புறமா பேசிக்கலாம். "

"சரிங்க.." என்று தேவி ஒருவித குழப்பத்துடன் மாடிக்கு சென்றாள். அவர் தன்னை மன்னித்துவிட்டாரா.. இதற்குத்தான் இத்தனை நாள் பயந்து வாழ்ந்தோமா...நாம் அப்பொழுதே திரும்பி இருக்கவேண்டுமோ... ராணி ஏன் இப்படி ஓடுகிறாள்.. இப்படி பல கேள்விகளும் குழப்பங்களுமாக ராணியை பார்க்க சென்றாள் அவள் தாய்.

வீடு, ஒரு பூகம்பம் விழுந்து நிலைகுலைந்து காணப்பட்டதை போல ராஜன் உணர்ந்தார்.


*****
[+] 4 users Like rainbowrajan2's post
Like Reply


Messages In This Thread
RE: அவளுக்கென்ன அழகிய முகம் - by rainbowrajan2 - 09-07-2023, 07:18 PM



Users browsing this thread: 2 Guest(s)