Incest ஆடி வந்ததும், தேடி வந்தது.
#2
ஆடி மாதத்தின் சிறப்புகள்.

ஆடி வெள்ளி தொடங்கி, ஆதி பதினெட்டு, ஆடி அமாவாசை, ஆடிப் பூரம் என சிறப்பு வழிபாட்டு தினங்களை கொண்டது ஆடி மாதம். அம்மன், அய்யனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பணசாமி உள்ளிட்ட கிராம தேவதைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது இந்த மாதத்தில்தான். அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் கூழ் வார்த்தல் வடமாவட்டங்களில் முக்கியமான நிகழ்வு.

அதனுடன், கத்தரி, மொச்சையுடன் சேர்த்து வைக்கப்படும் கருவாட்டுக் குழம்பையும் அம்மனுக்கு படைப்பது அற்புதமான நிகழ்வு. தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை தீ மிதிப்பது, பால் குடம் எடுப்பது, பொங்கல் வைப்பது போன்றவை அதிகம் நடைபெறும் மாதம் ஆடி. அம்மியே பறக்கும் ஆடிக் காற்றில், தொற்று நோய்களும் வேகமாக பரவும் என்பதாலேயே, வீடுகளின் முன்பு வேப்பங்குலை கட்டப்படுகிறது.

பருவமழை தொடங்கும் ஆடி மாதத்தில் ஆறுகள் மற்றும் அதன் கிளை வாய்க்கால்களில் புதுப்புனல் பெருக்கெடுத்து ஓடும். விவசாய நிலங்களை செழிக்க வைப்பதற்காக ஓடி வரும் ஆடி நீர்ப்பெருக்கை, வணங்கி விவசாயிகள் வரவேற்பார்கள்.

ஆடி மாதத்தில் ஆண்டியும் அரசானாகலாம்... எப்படி?


கரைகளை நிறைத்தபடி, சுழன்றோடும் காவிரியை கர்ப்பிணியாக பாவித்து, வழிபடுவது டெல்டா மாவட்டங்களில் ஒரு முக்கிய பண்டிகை. காவிரிக்கு கலவை சாதம் படையலிடும் மக்கள், புதுமணத் தம்பதிகளுக்கு புதிய மஞ்சள் கயிறுகளை அணிவிப்பதும் ஆடிப்பெருக்கு பண்டிகையின் ஓர் அங்கம்.

ஆடியில் விதைத்தால் பருவமழை மற்றும் ஆறுகளில் வரும் தண்ணீரால் பயிர்கள் செழித்து, தை மாத அறுவடையில் நல்ல மகசூல் கிடைக்கும். அதன் காரணமாகவே, ஆடிப்பட்டம் தேடி விதை என்ற சொல்லாடல் நமது தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம். நிலத்தை உழுது, விதை போட்டு கையில் இருக்கும் அத்தனை காசு, பணத்தையும் செலவழித்து இருப்பார்கள் நம் விவசாயிகள்.

அப்போது, அதிக விலை கொடுத்து அத்தியாவசிய பொருட்களைக் கூட வாங்க முடியாது என்பதால், அறிமுகமானது ஆடித் தள்ளுபடி. அதை சாதகமாக பயன்படுத்தி, தீபாவளிக்கு முன்பு தேங்கியுள்ள சரக்குகளை ஆடித் தள்ளுபடியில் அள்ளிக் கொடுத்தார்கள் துணிக்கடை வியாபாரிகள்.

ஆரம்பத்தில் துணிக்கடைகளில் தொடங்கிய ஆடித் தள்ளுபடி, இன்று அத்தனை பொருட்களுக்கும் அறிவிக்கப்பட்டிருப்பது வியாபார தந்திரம் மட்டுமே. இந்த ஆடி மாதத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்வுகளை நடத்துவதில்லை என்பதோடு, புதிதாக திருமணமான தம்பதிகள் சேர்ந்திருக்கக் கூடாது என்பதும் தமிழ் மக்களின் முக்கிய விதி.

ஆடி மாதத்தில் கருத்தரித்தால், இதிலிருந்து 10வது மாதமான சித்திரையில் குழந்தை பிறக்கும். சித்திரை வெயில் காலத்தில் பிறக்கும் குழந்தைக்கு, வெப்பத்தால் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் என்பதே நம் முன்னோர்கள் வகுத்த முக்கியமான அறிவியல் காரணம்.

Also see... ஆடி மாதத்தின் சிறப்புகளும் விரதங்களும்!

இதே ஆடி மாதத்தில்தான் பெண்கள் மட்டும் வழிபடும் அவ்வையார் நோன்பும் கடைப்பிடிக்கப்படுகிறது தென் மாவட்டங்களில். பெண்கள் குழுவாக சேர்ந்து பல்வேறு வடிவங்களில் கொழுக்கட்டை செய்து, படையலிட்டு சாப்பிடுவது வழக்கம்.

ஆண்களுக்கு தெரியாமல், தனி அறையில் நோன்பிருக்கும் பெண்கள் படையலிடும் கொழுக்கட்டையை ஆண்கள் சாப்பிட்டால் ஆகாது என்பது ஐதீகம்.

Also see... ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதிகள் சேர்ந்திருக்கக் கூடாது... காரணம் என்ன தெரியுமா?

மறைந்த முன்னோர்களுக்கு ஆடி அமாவாசை நாளில் திதி கொடுத்து, ஆறு, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடுவதும் முக்கிய நிகழ்வு. இதுபோன்ற பல்வேறு பண்டிகை மற்றும் முக்கிய நிகழ்வுகளுடன் தனிச் சிறப்பை கொண்டது அனைவரும் போற்றும் ஆடி மாதம்..
Like Reply


Messages In This Thread
RE: ஆடி வந்ததும், தேடி வந்தது. - by monor - 21-06-2023, 09:10 PM



Users browsing this thread: 6 Guest(s)