18-04-2023, 11:16 AM
அந்த ஸ்டேஷன் மாஸ்டரும் நினைத்துக் கொண்டார்..
வந்தவள் பெரிய இடத்து பெண் போல இருக்கிறது என்று நினைத்தபடி அவரும் அவர்களுக்கு விடை கொடுத்து விட்டு தன் ஸ்டேஷன் மாஸ்டர் ரூமூக்குள் சென்று விட்டார்..
வந்தனாவும் விஷ்ணுவும்.. ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தார்கள்..
வண்டி வண்டி என்று சொன்னதும் விஷ்ணு.. ஏதோ பெரிய பென்ஸ் காரில்தான் தங்களை பிக் அப் பண்ணி கூட்டிட்டு போக வந்திருக்கிறார்கள் போல.. என்று எண்ணி இருந்தான்..
ஸ்டேஷன் வெளியே ஒரு மாட்டு வட்டி நிக்கவும்.. விஷ்ணு முகம் மாறி போனது..
மாட்டு வண்டியா.. அவன் இதுவரை நேரில் பார்த்தது இல்லை.. பாட புத்தகங்களில்தான் வேஸ் ஆஃப் டிரான்ஸ்போர்ட் என்ற பகுதியில்..
ஏரோபிளேன்..
ராக்கேட்..
பஸ்..
கார்..
ஸ்கூட்டர்..
மோட்டார் வண்டி..
சைக்கிள்..
மாட்டு வண்டி..
என்ற வரிசையில் கடைசியாக மாட்டு வண்டி என்று போட்டு ஒரு சின்ன படமும் போட்டு போட்டிருப்பார்கள்..
அதைதான் விஷ்ணு பார்த்திருக்கிறான்..
அவன் வாழ்ந்த பட்டணத்தில் மாட்டு வண்டி என்று ஒன்றை அவன் பார்த்ததே இல்லை..
அப்படியே மாட்டு வண்டி இருந்தாலும்.. அத்தகைய வண்டிகள் சென்னை பட்டணம் சாலைகளில் ஓட்ட தடை விதிக்கப்பட்டிருந்தது..
விஷ்ணுவின் முக மாற்றத்தை பார்த்த வந்தனா.. அவன் கன்னத்தை பிடித்து.. தடவி.. என்ன செல்லாம் உன் முகமே வாடி போயிடுச்சி.. என்று அவனை கன்னத்தை செல்லமாக தட்டினாள்..
ம்ம்.. கார் இல்லையாம்மா.. என்று சோகமாக கேட்டான் விஷ்ணு..
இது கிராமம் விஷ்ணு.. இங்க நம்ம நினைக்கிறமாதிரி கார் பஸ் எல்லாம் இருக்காது.. மாட்டு வண்டிதான்..
நீ மட்டும் மாட்டு வண்டில ஏறி உட்கார்ந்து பாரு.. இதுவரை உன் லைஃப்ல போகாத மாதிரி ஒரு வண்டில போற அனுபவம் கிடைக்கும் என்று விஷ்ணுவை பார்த்து புன்னகையோடு சொன்னாள்..
ஏதோ அம்மா சொல்றாங்க.. இந்த வண்டியிலும் போய்தான் பார்ப்போமே.. என்று விஷ்ணு அரை மனதோடு சம்மதித்தான்..
பெட்டி படுக்கைகளை எல்லாம் நேர்த்தியாக ஒரு பக்கம் அடுக்கி வைத்துவிட்டு.. முன்பக்கம் மாட்டுக்கு முன்பாக வண்டியில் தாவி ஏறி அந்த வேலையாள் அமர்ந்து கொண்டான்..
பின் பக்கமாக விஷ்ணுவை முதலில் கை பிடித்து ஏற்றி விட்ட வந்தனா.. அவளும் ஏறி அமர்ந்து கொண்டாள்..
ஹை.. ஹை.. டுர்ரூர்ரூ.. டுர்ரூர்ரூ.. என்ற சத்தத்துடன் மாட்டின் முதுகில் ஒரு சின்ன சுள் சத்தத்தோடு சாட்டையில் அடித்தவன் டுர்யோ.. டுர்யோ.. என்று சத்தம் கொடுக்க.. மாட்டு வண்டி ஒரு சின்ன குலுங்களுடன் ஓட ஆரம்பித்தது..
ஜல்.. ஜல்.. என்ற மாட்டு கழுத்தில் கட்டி இருந்த சலங்கை ஒலியோடு அந்த மாட்டு வண்டி கரடு முரடான மண் பாதையில் ஓட துவங்கியது..
அம்மா சொன்னது உண்மைதான்.. அந்த மாட்டு வண்டி குலுங்கி குலுங்கி ஓடுவதும்.. தன்னுடைய உடம்பில் ஏதோ ஒரு வகை புது புத்துணர்ச்சி பெறுவதையும் விஷ்ணு உணர ஆரம்பித்தான்..
தன் அம்மாவுக்கு தன் கட்டை விரலை உயர்த்தி காட்டி.. தம்ப்ஸ் அப் காட்டி.. சூப்பர் என்பது போல ஜாடை காட்டினான்..
வந்தனாவும் சிரித்தபடி.. இன்னும் போக போக பாரு விஷ்ணு.. எங்க கிராமத்துல நீ பார்க்காத நிறைய புது புது விஷயங்கள் எல்லாம் பார்க்க போற.. என்று சொல்லி.. அவன் தலை முடியை அன்போடு பிடித்து கோதி விட்டாள்..
மாட்டு வண்டி குலுங்கி குலுங்கி போக போக இரண்டு பக்கமும் பச்சை பசேல் என்று புள்வெளிகள்..
மண் சாலையில்தான் அந்த மாடு வண்டி ஓடிக் கொண்டிருந்தது.. ஆனாலும் ஒரு நேர்த்தியான மண் சாலையாக இருந்தது..
இடது புறமும் வலது புறமும் ஒவ்வொரு அடி விட்டு ஒவ்வொரு அரசமரங்களும் புளியமரங்களும் நடபட்டு.. வெயிலே தெரியாத அளவிற்கு அந்த பயணம் குளிர்ச்சியாக இருந்தது..
ஒரு பத்து நிமிடம் அமைதியான அருமையான பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது..
உன் பேரு என்னப்பா.. என்று வந்தனாதான் சட்டென்று அந்த அமைதியை கலைத்து வண்டி ஓட்டிக் கொண்டிருந்தவனை பார்த்து கேட்டாள்..
அவனுடைய வியர்வை ஈரமான வலுவான முதுகள் அந்த வண்டி குலுங்களில் அவன் உடம்போடு சேர்ந்து குலுங்கி கொண்டிருந்தது..
மருதமுத்துங்கம்மா.. என்றான் திரும்பி பார்க்காமல் பணிவுடன்..
அவன் சொன்ன பெயரை கேட்டதும் வந்தனா கண்களில் ஒரு மின்னல் வெட்டியது..
மருதமுத்தா.. என்று மீண்டும் கேட்டாள்..
ஆம்மாம்மா.. ஊருல எல்லாம் மருதுன்னு கூப்பிடுவாங்கம்மா.. எங்க ஆத்தாமட்டும் என்னை முத்துன்னு கூப்பிடுவாங்கம்மா.. என்றான் டுர்ய்ய்ய்.. டுர்ய்ய்ய்.. என்று வண்டி ஓட்டிக் கொண்டே..
ஓ.. அப்படியா.. மருதுன்னு கூப்பிடுவாங்க.. முத்துன்னு கூப்பிடுவாங்க.. என்று அவளாகவே சொல்லிப் பார்த்துக் கொண்டாள் வந்தனா..
என்னது அம்மா திடீர்ன்னு லு£சு மாதிரி ஆப்ட்ரால் ஒரு வண்டிக்காரன் பெயரை போய் இப்படி சொல்லி சொல்லி பார்க்குறாங்கன்னு விஷ்ணு யோசித்தான்..
உன்ன யாராவது தமு ன்னு கூப்பிட்டு இருக்காங்களா.. என்று சட்டென்று அவன் வியர்வை முதுகை பார்த்து கேட்டாள் வந்தனா..
அம்மா.. என்று ஒரு சிலிர்ப்பு சிலிர்த்தான் மருதமுத்து.. வண்டியும் கொஞ்சம் லேசாக தடம்மாறி வேகம் குறைந்தது..
பிறகு நிதானத்துக்கு வந்து.. டூர்ர்ர். டூர்ர்ர்.. என்று சொல்லி தடம் மாறிய மாட்டை சரி செய்து.. வண்டியை சரியாக ஓட்டத் துவங்கினான்..
என்னப்பா.. நான் கேட்ட கேள்விக்கு பதிலே காணம்.. என்று நக்கலாக கேட்டாள் வந்தனா..
இப்போதுதான் ஆச்சரியமாக வண்டி ஓட்டியபடியே திரும்பி பார்த்தான் மருதமுத்து..
அவன் கண்கள் கலங்கி இருந்தது..
அம்மா என்னை அப்படி யாரும் கூப்பிட்டது இல்லம்மா.. என்றான் கலங்கிய கண்களுடன்..
நேருக்கு நேர் முதல் முதலில் வந்தனாவின் கண்களை பார்த்தான்..
மாட்டு வண்டி நிதானமாக ஓடிக் கொண்டிருந்தது..
நல்லா யோசிச்சி சொல்லு.. தமு ன்னு யாரும் உன்னை கூப்பிட்டது இல்ல.. என்று கேட்டாள்..
வந்தவள் பெரிய இடத்து பெண் போல இருக்கிறது என்று நினைத்தபடி அவரும் அவர்களுக்கு விடை கொடுத்து விட்டு தன் ஸ்டேஷன் மாஸ்டர் ரூமூக்குள் சென்று விட்டார்..
வந்தனாவும் விஷ்ணுவும்.. ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தார்கள்..
வண்டி வண்டி என்று சொன்னதும் விஷ்ணு.. ஏதோ பெரிய பென்ஸ் காரில்தான் தங்களை பிக் அப் பண்ணி கூட்டிட்டு போக வந்திருக்கிறார்கள் போல.. என்று எண்ணி இருந்தான்..
ஸ்டேஷன் வெளியே ஒரு மாட்டு வட்டி நிக்கவும்.. விஷ்ணு முகம் மாறி போனது..
மாட்டு வண்டியா.. அவன் இதுவரை நேரில் பார்த்தது இல்லை.. பாட புத்தகங்களில்தான் வேஸ் ஆஃப் டிரான்ஸ்போர்ட் என்ற பகுதியில்..
ஏரோபிளேன்..
ராக்கேட்..
பஸ்..
கார்..
ஸ்கூட்டர்..
மோட்டார் வண்டி..
சைக்கிள்..
மாட்டு வண்டி..
என்ற வரிசையில் கடைசியாக மாட்டு வண்டி என்று போட்டு ஒரு சின்ன படமும் போட்டு போட்டிருப்பார்கள்..
அதைதான் விஷ்ணு பார்த்திருக்கிறான்..
அவன் வாழ்ந்த பட்டணத்தில் மாட்டு வண்டி என்று ஒன்றை அவன் பார்த்ததே இல்லை..
அப்படியே மாட்டு வண்டி இருந்தாலும்.. அத்தகைய வண்டிகள் சென்னை பட்டணம் சாலைகளில் ஓட்ட தடை விதிக்கப்பட்டிருந்தது..
விஷ்ணுவின் முக மாற்றத்தை பார்த்த வந்தனா.. அவன் கன்னத்தை பிடித்து.. தடவி.. என்ன செல்லாம் உன் முகமே வாடி போயிடுச்சி.. என்று அவனை கன்னத்தை செல்லமாக தட்டினாள்..
ம்ம்.. கார் இல்லையாம்மா.. என்று சோகமாக கேட்டான் விஷ்ணு..
இது கிராமம் விஷ்ணு.. இங்க நம்ம நினைக்கிறமாதிரி கார் பஸ் எல்லாம் இருக்காது.. மாட்டு வண்டிதான்..
நீ மட்டும் மாட்டு வண்டில ஏறி உட்கார்ந்து பாரு.. இதுவரை உன் லைஃப்ல போகாத மாதிரி ஒரு வண்டில போற அனுபவம் கிடைக்கும் என்று விஷ்ணுவை பார்த்து புன்னகையோடு சொன்னாள்..
ஏதோ அம்மா சொல்றாங்க.. இந்த வண்டியிலும் போய்தான் பார்ப்போமே.. என்று விஷ்ணு அரை மனதோடு சம்மதித்தான்..
பெட்டி படுக்கைகளை எல்லாம் நேர்த்தியாக ஒரு பக்கம் அடுக்கி வைத்துவிட்டு.. முன்பக்கம் மாட்டுக்கு முன்பாக வண்டியில் தாவி ஏறி அந்த வேலையாள் அமர்ந்து கொண்டான்..
பின் பக்கமாக விஷ்ணுவை முதலில் கை பிடித்து ஏற்றி விட்ட வந்தனா.. அவளும் ஏறி அமர்ந்து கொண்டாள்..
ஹை.. ஹை.. டுர்ரூர்ரூ.. டுர்ரூர்ரூ.. என்ற சத்தத்துடன் மாட்டின் முதுகில் ஒரு சின்ன சுள் சத்தத்தோடு சாட்டையில் அடித்தவன் டுர்யோ.. டுர்யோ.. என்று சத்தம் கொடுக்க.. மாட்டு வண்டி ஒரு சின்ன குலுங்களுடன் ஓட ஆரம்பித்தது..
ஜல்.. ஜல்.. என்ற மாட்டு கழுத்தில் கட்டி இருந்த சலங்கை ஒலியோடு அந்த மாட்டு வண்டி கரடு முரடான மண் பாதையில் ஓட துவங்கியது..
அம்மா சொன்னது உண்மைதான்.. அந்த மாட்டு வண்டி குலுங்கி குலுங்கி ஓடுவதும்.. தன்னுடைய உடம்பில் ஏதோ ஒரு வகை புது புத்துணர்ச்சி பெறுவதையும் விஷ்ணு உணர ஆரம்பித்தான்..
தன் அம்மாவுக்கு தன் கட்டை விரலை உயர்த்தி காட்டி.. தம்ப்ஸ் அப் காட்டி.. சூப்பர் என்பது போல ஜாடை காட்டினான்..
வந்தனாவும் சிரித்தபடி.. இன்னும் போக போக பாரு விஷ்ணு.. எங்க கிராமத்துல நீ பார்க்காத நிறைய புது புது விஷயங்கள் எல்லாம் பார்க்க போற.. என்று சொல்லி.. அவன் தலை முடியை அன்போடு பிடித்து கோதி விட்டாள்..
மாட்டு வண்டி குலுங்கி குலுங்கி போக போக இரண்டு பக்கமும் பச்சை பசேல் என்று புள்வெளிகள்..
மண் சாலையில்தான் அந்த மாடு வண்டி ஓடிக் கொண்டிருந்தது.. ஆனாலும் ஒரு நேர்த்தியான மண் சாலையாக இருந்தது..
இடது புறமும் வலது புறமும் ஒவ்வொரு அடி விட்டு ஒவ்வொரு அரசமரங்களும் புளியமரங்களும் நடபட்டு.. வெயிலே தெரியாத அளவிற்கு அந்த பயணம் குளிர்ச்சியாக இருந்தது..
ஒரு பத்து நிமிடம் அமைதியான அருமையான பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது..
உன் பேரு என்னப்பா.. என்று வந்தனாதான் சட்டென்று அந்த அமைதியை கலைத்து வண்டி ஓட்டிக் கொண்டிருந்தவனை பார்த்து கேட்டாள்..
அவனுடைய வியர்வை ஈரமான வலுவான முதுகள் அந்த வண்டி குலுங்களில் அவன் உடம்போடு சேர்ந்து குலுங்கி கொண்டிருந்தது..
மருதமுத்துங்கம்மா.. என்றான் திரும்பி பார்க்காமல் பணிவுடன்..
அவன் சொன்ன பெயரை கேட்டதும் வந்தனா கண்களில் ஒரு மின்னல் வெட்டியது..
மருதமுத்தா.. என்று மீண்டும் கேட்டாள்..
ஆம்மாம்மா.. ஊருல எல்லாம் மருதுன்னு கூப்பிடுவாங்கம்மா.. எங்க ஆத்தாமட்டும் என்னை முத்துன்னு கூப்பிடுவாங்கம்மா.. என்றான் டுர்ய்ய்ய்.. டுர்ய்ய்ய்.. என்று வண்டி ஓட்டிக் கொண்டே..
ஓ.. அப்படியா.. மருதுன்னு கூப்பிடுவாங்க.. முத்துன்னு கூப்பிடுவாங்க.. என்று அவளாகவே சொல்லிப் பார்த்துக் கொண்டாள் வந்தனா..
என்னது அம்மா திடீர்ன்னு லு£சு மாதிரி ஆப்ட்ரால் ஒரு வண்டிக்காரன் பெயரை போய் இப்படி சொல்லி சொல்லி பார்க்குறாங்கன்னு விஷ்ணு யோசித்தான்..
உன்ன யாராவது தமு ன்னு கூப்பிட்டு இருக்காங்களா.. என்று சட்டென்று அவன் வியர்வை முதுகை பார்த்து கேட்டாள் வந்தனா..
அம்மா.. என்று ஒரு சிலிர்ப்பு சிலிர்த்தான் மருதமுத்து.. வண்டியும் கொஞ்சம் லேசாக தடம்மாறி வேகம் குறைந்தது..
பிறகு நிதானத்துக்கு வந்து.. டூர்ர்ர். டூர்ர்ர்.. என்று சொல்லி தடம் மாறிய மாட்டை சரி செய்து.. வண்டியை சரியாக ஓட்டத் துவங்கினான்..
என்னப்பா.. நான் கேட்ட கேள்விக்கு பதிலே காணம்.. என்று நக்கலாக கேட்டாள் வந்தனா..
இப்போதுதான் ஆச்சரியமாக வண்டி ஓட்டியபடியே திரும்பி பார்த்தான் மருதமுத்து..
அவன் கண்கள் கலங்கி இருந்தது..
அம்மா என்னை அப்படி யாரும் கூப்பிட்டது இல்லம்மா.. என்றான் கலங்கிய கண்களுடன்..
நேருக்கு நேர் முதல் முதலில் வந்தனாவின் கண்களை பார்த்தான்..
மாட்டு வண்டி நிதானமாக ஓடிக் கொண்டிருந்தது..
நல்லா யோசிச்சி சொல்லு.. தமு ன்னு யாரும் உன்னை கூப்பிட்டது இல்ல.. என்று கேட்டாள்..