Incest கிரஹப் பிரவேஷம்
கிரஹப் பிரவேஷம்


என் காலேஜ் ஃப்ரண்ட் சுரேஷ், இப்போது ஸ்விட்சர்லேந்தில் இருக்கிறான். அவனிடம் போனில்  பேசினேன்.

“ஹலோ,….”

“ஹலோ,….. ரமேஷா?”

‘ஆமாண்டா,….  நான்தான் ரமேஷ் பேசறேன். நல்லா இருக்கியா? ஸ்விஸுக்கு போனதிலேர்ந்து அதிகமா பேசறதில்லே.”

“அதில்லேடா,…இங்கே பிஸ்னஸ்,…அது,… இதுன்னு கொஞ்சம் பிஸி ஆகிட்டதினாலே அடிக்கடி பேச முடியல. சரி,….என்னவோ சொல்ல வந்தியே?”

நான் செங்கல்பட்ல,  பத்மாவதி நகர்ல ஏற்கனவே என் மகள் பேர்ல ரெண்டு கிரவுண்ட் பிளாட் வாங்கிப் போட்டிருக்கிறது உனக்கு தெரியும்ல.”

“ஆமாம்,….அதுக்கென்ன இப்ப?”

“ இப்ப அதுல ஹை சீலிங்  வச்சு, ஒரு கோடி செலவு பண்ணி  புதுசா வீடு கட்டி இருக்கேன்.”

“அப்படியா நல்ல விஷயம்தான். யாரு எஞ்சினியர்?’

“ சுதாகர்டா,….”

“யாரு,….ஒல்லியா வெட வெடன்னு நம்ம காலேஜ்ல,  நம்ம கூட சிவில் படிச்சானே அவனா?”

“ஆமாடா,…. வீட்டை நல்லா டிசைனா கட்டி கொடுத்திருக்கான். மத்த இஞ்சினியருங்களை புடிச்சிருந்தா இன்னும் ரெண்டு மூணு லட்சம் சேத்து செலவு  ஆகி இருக்கும். “

“ஆமாம். எல்லாம் காசை கொள்ளை அடிக்கத்தான் பாப்பானுங்க. நமக்கு பிடிச்ச மாதிரி, ஞாயமா வீட்டை கட்டி கொடுக்கறதில்லை. சரி,…இப்ப எதுக்காக போன் பண்ணே?

“புதுசா கட்டுன  வீட்டுக்கு கிரஹப் பிரவேஷம் பண்ணனும்.  ஒரு நல்ல ப்ரோகிதர் இருந்தா சொல்லுப்பா,….இது வரைக்கும் பல வீட்டுக்கு கிரஹப் பிரவேஷம் நிகழ்ச்சிக்கு போய்ட்டு வந்தாச்சு. ஆனா, அது எதுக்காக பண்றோம்னு, எப்படி பண்ணனும்கிறதை இன்னைக்கு வரையிலும் தெரிஞ்சிக்கிட்டதில்லே. எனக்குன்னு வீடு கட்டுறப்பதான் அது எதுக்காகப் பண்றோம்னு தெரிஞ்சுக்கத் தோணுது.”

“ஆமா,…அது அது வர்றப்பதானே அதைப் பத்தி தெரிஞ்சுக்கத் தோணும்.”

“ஆமாம்ப்பா,….. கிரஹப் பிரவேஷம் எதுக்காக பண்றோம்,….எப்படி பண்ணனும்கிறதையும் சொல்லுப்பா. நீதான் ரெண்டு வீடு கிரஹப் பிரவேஷம் பண்ணினவாச்சே.”

“அது சரிப்பா. நான் ஊரை விட்டு வந்து ரொம்ப நாளாச்சு. இருந்தாலும் செங்கல்பட்டு பக்கத்திலே புரோகிதர் யாராவது இருக்காங்களான்னு பழைய ஃப்ரண்ட் யார்கிட்டேயாவது விசாரிச்சு சொல்றேன். உள்ளூர்ல யாரும் இல்லையா?”

 “காச விட்டெறிஞ்சா ஆயிரம் புரோக்கர்கள் வருவாங்க.  அவங்க செய்யிற பூஜைலே எனக்கு திருப்தி இல்லே. மந்திரத்தையும் சரியா சொல்றதில்லே. அதனாலதான் உன் கிட்டே கேட்டேன்.”

 “நீ சொல்றது சரிதாம்ப்பா. மந்திரத்தை ஒழுங்கா சொல்லி, பூஜை பண்ணினாதான் பிரயோஜனம் உண்டு. கடமைக்கு பண்றதை அந்த கடவுளும் ஏத்துக்கறதில்லே. நமக்கும் மனசு கேட்காது.”

 

கிரஹப் பிரவேஷம்கிங்கிறது, வழக்கமா புரோகிதரை அழைத்து பூஜை, புனஸ்காரங்கள் செய்றதுதான் எல்லா கிரஹப் பிரவேஷத்திலேயும் நடக்கிறது. ஹோமம் செய்வதும், யாகம் நடத்துவதும் அந்த வீட்டில் எந்த ஒரு கெட்ட சக்தியும் நுழைய கூடாது என்பதற்காகவும், வாழப்போகும் வாழ்க்கை நலமோடும், செல்வச் செழிப்போடும் இருக்கவும் இதை செய்றோம்.

இதுக்கு நாள் நட்சத்திரம் எல்லாம் பாத்துதான் செய்யணுமா? இல்லே,…. நம்ம வசதிக்கேத்த மாதிரி ஒரு நல்ல நாள்லே செய்யலாமா?”

 கிரகபிரவேசம் செய்வதற்கு நாள், நட்சத்திரம் பார்ப்பதும் அவசியமாகும். அந்த வரிசையில் கிரகப்பிரவேசம் செய்யும் பொழுது எந்த தவறுகளை நாம் செய்கிறோம்? எதை செய்யக்கூடாது? அப்படி செய்தால் என்ன ஆகும்? என்பதையும் நாம தெரிஞ்சு வச்சிருக்கணும்.”

 சரிப்பா,… நீயே எல்லாத்தையும் சொல்லிடு.”

 புதிய வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்ய கட்டாயம் நல்ல நாள் பார்க்க வேண்டும். அந்த நாளில் குடும்பத்தலைவி தீட்டு படாமலும், வீட்டு விலக்கு ஆகாமலும் இருக்க வேண்டும்.  குடும்ப தலைவர் மற்றும் தலைவிக்கு சந்திராஷ்டம நாளாக இருக்கக் கூடாது. கரி நாளில் கட்டாயம் கிரகப்பிரவேசம் செய்யக்கூடாது.

 ,…அப்படியா?”

 சில பேர் வீடு கட்டும் பொழுது அரைகுறையாக நிறுத்தி வைத்திருப்பார்கள். முழுமையாக முடித்திருக்க மாட்டார்கள். கூடுமானவரை வீடு முழுமை பெறாமல் கிரகபிரவேசம் செய்வதை தவிர்ப்பது உத்தமம். அரைகுறையாக  நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் வீட்டில் கிரகப்பிரவேசம் செய்வது முழுமையான பலனை கொடுக்காது.

 

,…..”

  கிரகப்பிரவேசம் செய்யும் பொழுது எதிலும் அவசரம் காட்டக்கூடாது. குறிப்பிட்ட நேரத்திற்குள், மிகுந்த பக்தியுடன், பதட்டமின்றி கிரகப்பிரவேச பூஜைகள் நடைபெறுமாறு பார்த்துக் கொள்வது நல்லது.

 சில பேர் அவசர அவசரமா கிரஹப் பிரவேஷம் செய்வாங்களே,….அப்படி செஞ்சா நல்லதா?”

 அவசர அவசரமா கிரஹப் பிரவேஷம் செய்யக் கூடாது.  அவசர அவசரத்துடன் செய்வது கெடுபலன்களை உண்டு பண்ணும். எனவே முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பிரம்ம முகூர்த்த நேரமாக இருக்கும் 4 முதல் 6 மணி வரையிலான காலகட்டத்திலும், லக்ன முகூர்த்தமானா 6 முதல் 7 வரையிலான காலகட்டத்திலும் கிரகப்பிரவேசம் செய்வது சிறந்த பலன்களை கொடுக்கும். அதிகாலையில் செய்யும் பொழுது நேரத்தை தவற விடுவது, வாழ்க்கை முழுவதையும் பிரச்சினைகளை உண்டு பண்ணும் என்பதை மனதில் கொண்டு கிரகப்பிரவேசத்தை திட்டமிட்டு நடத்துவது நலம் தரும்.

 கிரஹப் பிரவேஷம் செய்யிறப்போ, கோயிலுக்கு போலாமா,…. வேண்டாமா?”

 கிரகப்பிரவேசம் செய்பவர்கள் கட்டிய வீடு இருக்கும் பகுதியில் ஏதாவது ஒரு கோவில் கோபுரத்தில் இருந்து புதிதாக வாங்கிய சுவாமி படம், அரிசி, பருப்பு, உப்புகாமாட்சி அம்மன் விளக்கு, நிறைகுடம், மங்கலப் பொருட்களில் மஞ்சள், குங்குமம், கண்ணாடி, வெற்றிலை, பாக்கு, பூ, பழம் ஆகிய தாம்பூலம், தேங்காய் முதலியவற்றை எடுத்துக் கொண்டு தான் முதன் முதலாக கிரகப்பிரவேச வீட்டிற்கு செல்ல வேண்டும்

 ,….”

 கட்டிய வீடு பெரிதாக இருந்தாலும், சிறிதாக இருந்தாலும் இதனை கட்டாயம் செய்ய வேண்டும்.

 என்ன செய்யணும்?”

 கிரகப் பிரவேசத்தின் பொழுது விநாயகர், லட்சுமி மற்றும் நவகிரகம் ஆகிய இந்த மூன்றுக்கும் தனித்தனியாக மூன்று கலசங்கள் வைக்க வேண்டும். கிரகப்பிரவேசம் முடிந்ததும் கலசத்தில் இருக்கும் நீரை புரோகிதர் மற்றும் யாராவது ஒருவரை மாடியில் ஈசானிய மூலையில் நின்று கொள்ள செய்ய வேண்டும். அதற்கு கீழே நேர ஈசானிய மூலையில் வீட்டின் உரிமையாளரும், அவருடைய மனைவியும் நின்று கொள்ள வேண்டும். மேலிருந்து அவர்கள் கலசத்தில் இருக்கும் நீரை தாரையாக இவர்கள் மேல் ஊற்ற வேண்டும். இவ்வாறு செய்வதால் சர்வ தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். பல சந்ததிகளோடு, செல்வ செழிப்புடன் வாழ்வாங்கு வாழ செய்யுமாம்.

 இதை யாரும் சொல்லலையேப்பா. சரி,….இதுக்குன்னு ஏதாவது விதி முறை இருக்கா?”

  கிரகப் பிரவேசம் என்று சொல்ல வேண்டும். கிரஹப்ரவேசம் அல்ல. க்ருஹம் என்றால் வீடு. கிரஹம் என்றால் வானத்தில் உள்ள கோள்களைக் குறிக்கும். க்ருஹப்ரவேசம் என்று அழைக்கப்படுகின்ற புதுமனை புகுவிழா செய்வதற்கு என்று ஒரு சில முக்கியமான விதிமுறைகள் உண்டு.

 அப்படி என்னென்ன விதி முறைகள்?”

 

 “முதலாவதாக அந்த வீட்டினில் தரை போடப்பட்டிருக்க வேண்டும். அது சிமெண்ட் தரையாக இருந்தாலும் சரி, அல்லது டைல்ஸ், மார்பிள், கிரானைட், மார்போனைட் என்று எந்தப் பொருளாக இருந்தாலும் சரி, எதனைப் பயன்படுத்தப் போகிறோமோ அதனைக் கொண்டு தரையினை அமைத்திருக்கவேண்டும்.

 

சும்மா சிமெண்ட் தரையை போட்டுட்டு கிரஹப் பிரவேஷம் செய்யலாமா?’

ஒரு சிலர் மார்பிள் பதிக்கப்போகிறோம், மார்பிள் பதித்துவிட்டு க்ருஹப்ரவேச ஹோமம் செய்தால் தரை அழுக்காகிவிடும் என்ற எண்ணத்தில் வெறும் சிமெண்ட் கலவையை மட்டும் லேசாகப் பரப்பி அதனை பெருக்கித் துடைத்துவிட்டு புதுமனை புகுவிழா நடத்திவிடுகிறார்கள். பூஜைகளையெல்லாம் முடித்துவிட்டு சாவகாசமாக தரைக்கு மார்பிள் பதிக்கிறார்கள். இவ்வாறு செய்வது முற்றிலும் தவறு. எந்தத் தரையை வீட்டினில் உபயோகப்படுத்தப் போகிறோமோ அதை போட்டு முடித்துவிட்டுத்தான் கிரஹப்ரவேசம் நடத்த வேண்டும். ஹோமத்தினால் கரை ஏதும் ஏற்படா வண்ணம் தடுப்பதற்கு பல வழிகள் உண்டு. இரண்டாவதாக சுற்றுச்சுவர் பூசப்பட்டிருக்க வேண்டும். உட்புறச் சுவரும், வெளிப்புறச் சுவரும் பூசப்பட்டு அதற்கு வெள்ளை அடித்திருக்க வேண்டும். மெதுவாக வண்ணப்பூச்சுகளை அடித்துக் கொள்ளலாம்.

 

,….அப்புறம் வேற ஏதாவது கன்டிஷன் இருக்கா?”



ம்,……வாயிற்கதவு போட்டிருக்க வேண்டும். ஒரு சிலர் வாசக்கால் மட்டும் வைத்துவிட்டு கதவு போடாமல் புதுமனை புகுவிழாவினை நடத்துகிறார்கள். இது முற்றிலும் தவறு. கதவு டிசைன் செய்து வருவதற்கு தாமதமாகிக் கொண்டிருக்கிறது என்ற காரணத்தை முன் வைக்கிறார்கள். வாயிற்கதவு தயாரான பிறகுதான் புதுமனை புகுவிழாவை நடத்த வேண்டும். நான்காவது விதியானது புதுமனைபுகுவிழாவின் போது பஞ்சமஹாயக்ஞத்தினை நடத்த வேண்டும் என்று சாஸ்திரம் அறிவுறுத்துகிறது. ஐந்தாவதாக புதிய வீட்டினில் கிரகபிரவேச பூஜைகளை முடித்தவுடன் குறைந்தது பத்து நபர்களுக்காவது போஜனமிட வேண்டும்.

 

காலியா இருக்கிற பக்கத்து இல்லேன்னா,…. எதிர் வீட்ல வச்சு போஜனம் செய்யலாமா?”

 

கூடாது. தற்காலத்தில் இடவசதி கருதி புதிய வீட்டிற்குள் பந்தி பரிமாறுவதை விடுத்து எதிர்வீடு அல்லது அருகில் உள்ள காலிமனை, போர்ட்டிகோ முதலான இடங்களில் வைத்து உணவளிக்கிறார்கள்.

இதுவும் தவறான முறையே. உணவளிக்கும் இடமானது க்ருஹப்ரவேசம் செய்யப்படுகின்ற வீட்டின் வாசற்படிக்கு உள்ளே இருப்பதாக அமைய வேண்டும். வாசற்படியைக் கடந்து வீட்டிற்குள் வந்து அமர்ந்துதான் விருந்தினர்கள் உணவருந்த வேண்டும். கிரகபிரவேசத்திற்கு நாள் குறிக்கும்போது வாரசூலையை கணக்கில் கொண்டு சூலம் இருக்கும் திசையை அறிந்து குடும்ப ஜோதிடரின் துணைகொண்டு நாளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பால் காய்ச்சிய கையோடு குறைந்த பட்சமாக சர்க்கரைப் பொங்கல் செய்து பூஜை அறையில் நைவேத்யம் செய்து அந்த பிரசாதத்தை குடும்பத்தினர் அனைவரும் உட்கொள்ள வேண்டும்.

 

கிரஹப் பிரவேஷம் செய்யிறப்போ அந்த வீட்டோட உரிமையாளர் அவங்க குடும்பத்தோட தங்கணும்னு சொல்றாங்களே,…அது உண்மையா?”

 

 “உண்மைதான். கிரகபிரவேசம் செய்கின்ற நாளில் மனை ஏறிய தம்பதியர் மற்றும் அந்த வீட்டு எஜமானரின் குடும்பத்தினர் அனைவரும் அன்றிரவு அந்த வீட்டிலேயே தங்க வேண்டும். இந்த விதிமுறைகளை சரியாக கடைபிடித்து புதுமனை புகுவிழா செய்வோரின் இல்லத்தில் என்றென்றும் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் நீடித்திருக்கும்.

 

,….  நான் தெரிஞ்சுக்காத நல்ல விஷயங்களை சொன்னேப்பா. நன்றி. வேற ஏதாவது விஷயம் இருக்கா?”

 

 

 

“ம்,…..மக்கள், குறிப்பாக ஹிந்து மதத்தினர் புதிதாக வீடு வாங்கும் பொழுதோ அல்லது கட்டும் பொழுதோ, அந்த வீட்டுக்குள் குடியேறுவதற்கு முன்னர், கிரகப் பிரவேசம் என்ற வழிபாட்டு விழாவை நடத்துகின்றனர். இதில், கிரகங்கள் மற்றும் தீய சக்திகளின் பாதிப்புகளைக் களைய, பூஜைகளும், ஹோமங்களும் செய்யப்படுகின்றன. சுப வேளையில் செய்யப்படும் இந்த கிரகப் பிரவேச விழா, அந்தப் புதிய இடத்தைப் புனிதப்படுத்துகிறது. மக்கள் வசிப்பதற்கு ஏற்றதாகச் செய்கிறது.”

 

“கிரஹப் பிரவேஷ நிகழ்சிக்கு  வேற ஏதாவது பேர் இருக்கா?”

 

“ம்,….கிரகப் பிரவேச விழா பல வகைப்படும்.

 

புதிதாக வாங்கப்பட்ட நிலத்தில், புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்காக நிகழ்த்தப்படும் விழா, அபூர்வ எனப்படும். நீண்ட நாட்கள் வெளியில் தங்கியிருந்த பின்னரோ அல்லது வேறு ஒருவருடைய வீட்டை வாங்கியிருந்தாலோ, அந்த வீட்டில் மீண்டும் குடிபுகும் நேரத்தில் நடத்தப்படுவது, சபூர்வ எனப்படும். வீட்டைப் பழுது பார்த்த பின்னரோ, சீரமைத்த பின்னரோ, பேரிடர்களால் பாதிக்கப்பட்ட வீட்டை சரி செய்த பின்னரோ குடிபுகும் பொழுது, த்வந்த்வ என்ற விழா நடத்தப்படும்.”

 

“ம்,…..சரி,….கிரஹப் பிரவேஷ நிகழ்ச்சிக்குன்னு ஏதாவது சம்பிரதாயம் இருக்கா?”

 

“ம்,…ஏன் இல்லாம,…. நெறைய பேருக்கு இது தெரியறதில்லே. எல்லாத்தையும் புரோகிதர் பாத்துக்கிடுவார்ன்னு விட்டுடுவாங்க. ஆனா, அதை நாமளும் தெரிஞ்சுக்கணும்.”

 

“ம்,….சொல்லுப்பா,…. தெரிஞ்சுக்கறேன்.”

 

Like Reply


Messages In This Thread
RE: கிரஹப் பிரவேஷம் - by monor - 01-01-2023, 12:08 PM



Users browsing this thread: 5 Guest(s)