அவிழும் முடிச்சுகள் !!
நான் அப்புறம் கால் பண்ணுறேன் !!


எப்ப ?


ஈவ்னிங் .


குழப்பத்தில் ஆழ்ந்தாள் மீரா . ரவி நம்மள கேவலமா ஏமாத்தி அனுபவிச்சிட்டானோ ...


அதே நேரம் கார்த்தியும் குழப்பத்துடன் தவிக்க , கிஷோர் பற்றிய அதிர்ச்சியான தகவலோடு வந்து சேர்ந்தான் சப் இன்ஸ்பெக்டர் முரளி !!


என்னாச்சி முரளி?






சார் அந்த கிஷோர் ஒரு வாரமா மிஸ்ஸிங் சார் !!


மிஸ்சிங்கா ?


ஆமா சார் அவன் ஊர் இங்க தான் செங்கல்பட்டு போயி விசாரிச்சதுல அவனை ஒரு வாரமா காணும்னு அவனோட வீட்ல தேடிகிட்டு இருக்காங்க சார் !!

கம்பளைண்ட் ?


ம்ம் செங்கல்பட்டு ஸ்டேஷன்ல குடுத்துருக்காங்க அவங்க குடுத்த கம்பளைண்ட் காபி என்று ஒரு காகிதத்தை நீட்ட ...


என் கணவர் பெயர் கிஷோர் , Tcs ல வேலை செய்கிறார் . மாலை ஷிஃப்ட் முடிஞ்சி வீட்டுக்கு வந்த கணவர் வீடு வரவில்லை . எங்கு தேடியும் கிடைக்கவில்லை . எங்களுக்கு யார் மீதும் சந்தேகம் இல்லை ...


சட்டென தூக்கி வீசினான் கார்த்திக் !! இது போலீஸ் ரைட்டரோட வார்த்தைகள் ! அந்த கிஷோர் மனைவியை நாம பார்த்தாகணும் .


வண்டியை செங்கல்பட்டுக்கு விரட்டினான் . சற்று முன் வரை இந்த கேஸ்ல சித்ரா கிஷோர் ஃபைசல் மேட்டருக்கும் , அந்த ராஜேஷ் காதலனுக்கும் யாதொரு சம்மந்தமும் இல்லை எதோ திக்கு தெரியாத காட்டில் பயணிக்கிறோம்னு தான் நினைத்தான் ஆனா கிஷோர் காணவில்லை என்பது சற்றே சம்மந்தப்படுது !! அப்படின்னா அடுத்து சித்ராவையும் விசாரிக்க வேண்டி வரும் !!


வண்டி கிஷோர் வீட்டு வாசலில் நிற்க , அந்த தெருவே சற்று பரபரப்பாக காணப்பட , இன்ஸ்பெக்டர் கார்த்திக் கிஷோரின் மனைவி கார்த்திகாவிடம் விசாரணையை தொடங்கினான் !!


பார்க்க பிரியங்கா போல நல்லா குண்டா இருந்தாலும் குழந்தை முகம் !! நிறைய அழுத்திருப்பாள் என்பதும் தெரிய வர , சொல்லுங்க மேடம் என்ன நடந்துச்சு எப்படி மிஸ் ஆனார் ?
[+] 5 users Like dannyview's post
Like Reply


Messages In This Thread
RE: அவிழும் முடிச்சுகள் !! - by dannyview - 04-01-2022, 07:21 AM



Users browsing this thread: 2 Guest(s)