அவிழும் முடிச்சுகள் !!
அதிர்ச்சியில் பூமியே சுற்றுவதை போல் இருந்தது . கோபால் அவள் கையை விட வேகமாக வெளியில் வந்தால் சித்ரா .


அங்கே கையெழுத்து வாங்க காத்திருந்த ஃபைசலும் , கிஷோரும் தங்கள் கிளாஸ்மேட் சித்ரா அழுதபடி வெளியில் வந்ததை பார்த்து அதிர்ச்சியாகி என்ன சித்ரா என்ன ஆச்சி ஏன் இப்படி அழுற ?



என்ன நினைத்தாளோ சட்டென அழுது விட்டாள் . சக மாணவனிடம் தனக்கு நடந்த அவமானத்தை யோசிக்காம சொல்லிவிட்டாள் . கேட்டுக்கொண்டிருந்த கிஷோர் இது பெரிய இடத்து விவகாரம் என தயங்க ஃபைசல் வேகமாக உள்ளே பாய்ந்தவன் கோபால் வாத்தியாரை விட்டான் ஒரு அரை .. பொறி கலங்கி யு ராஸ்கல் என்று எழுந்தவன் அங்கே சித்ராவும் நிற்பதை பார்த்து செய்வதறியாமல் திகைத்தான் .


ராஸ்கல் குடுடா நோட்ட என்று வாங்கி சித்ராவிடம் குடுத்து ... நாளைக்கு எடுத்துட்டு வா இந்த நாய் ஒரு வார்த்தை சொல்லாம கையெழுத்து போடுவான் என அங்கிருந்து அவளை அணைத்து அழைத்து செல்ல சித்ரா மனதுக்குள் ஆயிரம் நன்றிகள் சொன்னாள் .


எதுவா இருந்தாலும் நாங்க பாத்துக்குறோம் நீ பயப்படாம போயிட்டு வா என்று அனுப்பி வைத்தான் . அன்றிலிருந்து மூவருமே நண்பர்கள் ஆனார்கள் . இது அவள் காதலன் ராஜேஷுக்கு பிடிக்கவில்லை .

ஒருநாள் சித்ரா நடந்த விஷயத்தை அவனிடம் சொல்லவே ராஜேஷுக்கு ஒருமாதிரி ஆகிடிச்சி . கோபால் சாரா அப்படி நடந்துக்கிட்டாரு ?


என்னதான் ராஜேஷ் ஃபைசலுக்கு நன்றி சொன்னாலும் அவனால் அவர்கள் நண்பர்களாக நெருங்குவதை ஏற்க முடியவில்லை !


ஒருநாள் சித்ரா ஃபைசல் கிஷோர் இருவரையும் ஹோட்டலுக்கு அழைத்து சின்னதாக பார்டி வைப்பதாக சொன்னாள் .


ஏன்னா சித்ராவின் இன்டர்னல் மார்க் முழுதாக விழுந்தது அந்த சந்தோசம் .


அன்று கல்லூரி முடிந்து மூவரும் ஒரு ஹோட்டலுக்கு செல்ல கூடவே வேண்டா வெறுப்பாக ராஜேஷும் வந்தான் .
[+] 4 users Like dannyview's post
Like Reply


Messages In This Thread
RE: அவிழும் முடிச்சுகள் !! - by dannyview - 23-12-2021, 07:34 AM



Users browsing this thread: 3 Guest(s)