Thread Rating:
  • 1 Vote(s) - 1 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சப்தஸ்வரங்கள் [discontinued]
#17
மதுவின் போதையில் இருவருமே மெல்ல மெல்ல ஆட்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் நெருக்கமாக உட்கார்ந்திருந்த வாணியில் தலையில் இருந்த மல்லிகைப்பூவின் மணம் ராகவனை மேலும் மேலும் போதையுறச் செய்வதை போல இருக்க......
தனது மனைவி சந்தியாவுடன் எத்தனையோ முறை இம்மாதிரி அருகாமையில் இருந்து மது அருந்திய நேரங்களில் கூட இப்படி ஒரு ரம்மியமான சூழல் அமைந்திருக்கவில்லை என்பதை போலவே ராகவன் உணர்ந்தான்.

நல்ல அமைதியான இரவு நேரத்தில் நிலவு வெளிச்சத்தில் மதுவின் இயல்பான போதையில் மனைவி அல்லாத ஒரு இளம்பெண்ணோடு இப்படி ஒரு நெருக்கத்தில் உட்கார்ந்திருந்த ராகவனுக்கு அந்த மல்லிகை பூவின் மணம் இதுவரை கண்டிராத ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுப்பதாக இருந்தது.

ஆணும் பெண்ணும் தனியாக இருக்கும் சமயங்களில் பெண்ணின் தலையில் மல்லிகை பூவையும் சூடச் செய்யும் பழக்கத்தை பெரியவர்கள் காரணம் இல்லாமல் பின்பற்றி வரவில்லை...

இந்த பூவின் மணம்தான் என்னமாய் கிறக்குகிறது....? அவனுக்கு அப்போது தேவையே இல்லாமல் திருவிளையாடல் திரைப்படத்தில் இடம்பெறும் அந்த 'பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா ..?' என்ற வசனம் நினைவுக்கு வந்தது.....அந்த வசனம் ஞாபகத்துக்கு வர....அதை மனதில் ஓட விட்டபடி...தனது தோளில் சாய்ந்து கொண்ட வாணியில் தலை முடியில் அவளறியாயாத வகையில் எச்சரிக்கையாக தனது முகத்தை உரசி அந்த ரம்மியமான மணத்தை முகர்ந்து பார்த்தான்.

அவளுக்கு தெரியக்கூடாதென்று அவன் பட்டும் படாமலும் முகத்தை அவள் கூந்தலில் உரசினாலும் ... அவன் தனது தலைமுடியை முகர்ந்து பார்த்ததை அவள் உணர்ந்து கொண்டாள். அதுதானே பெண்.

சாதாரணமான நேரங்களில் வேண்டுமானால் பெண் ஆணை விட பலவீனமானவளாகவோ அல்லது அசடு போலவோ தெரிவார்கள். ஆனால் அவர்கள் நெருக்கமாக தனித்து இருக்கும் நேரங்களில் ஆணை விட பெண்தான் மிகவும் பலசாலியாக இருப்பாள்....புத்திசாலியாக இருப்பாள்...
ராகவன் தனக்குத் தெரியாமல் தனது தலைமுடியில் முகத்தை உரசி முகர்ந்து பார்ப்பதை உணர்ந்து அவள் இன்னும் உணர்ச்சி வசப்பட்டாள்.

ஆகவே தற்செயலாக நடந்து கொள்வதை போல அவனது தோளில் இன்னும் நன்றாக சாய்ந்து கொண்டாள்.
அது அவனுக்கு இன்னும் சாதகமாகிப் போனது.
அதனால் இன்னும் ஒரு முறை அவளது தலைமுடியை முன்னை விட நன்றாக முகரந்து அந்த மணத்தை உள்வாங்கினான்.

அவன் அப்படி மீண்டும் முகர்ந்து பார்ப்பதை அறிந்து அவன்பால் தன்னை இழந்து கொண்டிருப்பதை போல உணர்ந்தாள்.
அந்த பூவின் வாசனையில் அவன் எப்படி தன்னை மறந்து கொண்டிருந்தானோ அதே போல அவளும் தன்னுடைய தலைமுடியை அவன் முகர்ந்து பார்ப்பதால் தன்னை மறந்த நிலையில் இருந்தாள்.
கொஞ்ச நேரம் அங்கே இருவருக்கும் இடையே எவ்வித பேச்சும் இன்றி நிசப்தமாக இருந்தது.

வீட்டினுள்ளே ஹாலில் டீவீ பார்த்துக் கொண்டிருந்த சாந்திக்கு ...வெளியே இருவரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பார்க்க ஆசை வந்ததால் ... எழுந்து மெதுவாக பூனை நடை நடந்து சமையல் அறைக்குள் வந்து இன்னுமும் மெதுவாக நடந்து வாசல்படிக்கு அருகே வந்து நின்று தலையை மட்டும் வெளியே நீட்டி திண்ணையில் நெருக்கமாக உட்கார்ந்திருந்த அவர்கள பார்த்தாள்.

அங்கே தங்களை மறந்த நிலையில் உணர்ச்சி வசப் பட்ட நிலையில் நெருக்கமாக இருந்த இருவரும் சாந்தி அங்கே வந்து நின்றதை அறியவில்லை. சாந்தி நின்ற அந்த சமையல் அறையில் ஒளிர்ந்து கொண்டிருந்த ட்யூப் லைட் வாசல்படியின் மேலே உள்ள சுவற்றில் உள்புறம் நோக்கி பொருத்தப் பட்டு இருந்ததால் அந்த லைட் வெளிச்சம் வாசலை தாண்டி வெளியே விழாத காரணத்தால் சாந்தியின் நிழல் கூட வெளியே வரவில்லை.... ஆகவே அவர்களுக்கு சாந்தி அங்கே வந்து நிற்பது தெரியவில்லை..

பரவாயில்லை.....தனது மருமகள் நல்ல வேகமாகத்தான் இருக்கிறாள். தான் அவளுக்கு கோடுபோட்டு காட்டினால்....அதில் அவள் ரோடே போட்டு விடுகிறாளே.....இத்தனை சீக்கிரத்தில் இருவரும் இத்தனை நெருக்கமாக உட்கார்ந்து இருக்கிறார்களே....அப்படி என்றால் தான் எதிர்பார்ப்பது இன்று இரவே நடந்து விடும் போலத்தான் தெரிகிறது.....என்று சந்தோசப் பட்டவள்...இதற்கு மேல் இங்கே நிற்க வேண்டாம்.....அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம்....தான் இங்கே நிற்பதை அறிந்தால் அவர்கள் ஒருவேளை இத்தனை நெருக்கமாக இருக்க மாட்டார்கள்...என்று நினைத்தபடி....எப்படி வந்தாளோ அதே மாதிரி பூனை நடந்து திரும்பி சென்று ஹாலில் உட்கார்ந்து டிவியை தொடர்ந்து பார்க்க தொடங்கினாள்.

சாந்தி அங்கே வந்து நின்று தங்களை பார்த்ததையோ ....திரும்பி போனதையோ எதையுமே அறியாத ராகவனும் வாணியும் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க....அங்கே நிலவிய அமைதியை விலக்கும் பொருட்டு.....'என்ன வாணி....எதுவும் பேசாம இருக்க....?' என்று ரகசியம் பேசுவதை போல வாணியின் முகத்தோடு முகம் வைத்த மாதிரி கேட்க....
'ம்ம்....கூச்சமா இருக்குண்ணா....' என்று சிணுங்குவதை போல சொன்னாள்.

'எதுக்கு கூச்சம்.....'
'பிறகு நீங்க அந்த மாதிரில்லாம் சொன்னா கூச்சமா இருக்காதா....?'
'அப்படி நான் என்ன சொல்லிட்டேன்....?'
'ம்கும்....அதை நான் சொல்லி காட்டனுமாக்கும்....?'
'ம்ம்....சொன்னாத்தானே தெரியும்....'

'ச்சீ போங்க அண்ணா....'
'சரி....ஒண்ணு செய்....இன்னொரு வாய் குடி....அப்படி குடிச்சா இந்த மாதிரி கூச்சமெல்லாம் இருக்காது....'
'ஐயோ வேண்டவே வேண்டாம்.....இதுவே ஜாஸ்தி....நான் உங்களுக்கு சும்மா கம்பெனி குடுக்குறதுக்குத்தான் ஒரு வாய் குடிச்சேன்...'
'அதான் சொல்றேன்.....ரொம்பல்லாம் வேண்டாம்......இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் குடி.......ப்ளீஸ்....'

'ஐயோ...வேண்டாம்னா....இப்பவே எனக்கு லேசா தலை சுத்துற மாதிரி இருக்கு....'
'ப்ளீஸ் வாணி...எனக்காக ஒரே ஒரு தடவை....அதுக்கு மேல நான் கம்பெல் பண்ண மாட்டேன்...'
'சொன்னா கேக்க மாட்டேண்றீங்களே ......சரி...உங்களுக்காக ஒரே ஒரு தடவை....அதுக்கு மேல மாட்டேன்....'

அவளிடம் இருந்து சம்மதம் கிடைத்தவுடன் சந்தோசமான முகத்தோடு அவள் தோளில் இருந்து கையை எடுத்து சற்று திரும்பி....அவர்களுக்கு பின்னால் இருந்த பாட்டிலையும் டம்ளரையும் எடுத்து அதில் முன்னை காட்டிலும் சற்று அதிகமாகவே மதுவை ஊற்றினான்... அதை அவளும் கவனிக்காமலில்லை... மதுவை டம்ளரில் ஊற்றிக் கொண்டிருந்த ராகவனை பார்த்த வாணிக்கு.....இத்தனை சீக்கிரத்தில் தான் எப்படி அவரோடு இத்தனை நெருக்கமாக உட்கார்ந்து இருக்கிறோம்.....என்று தனக்குத் தானே வியந்தாள்.

டம்ளரில் மதுவை ஊற்றி விட்டு அதனோடு சோடாவையும் கலந்து அந்த டம்ளரை கலக்குவதை போல உள்ளங்கையினால் பிடித்து ஒரு சுற்று சுற்றி விட்டு அவளிடம் நீட்ட....அவனுடைய அந்த செய்கைகளை பார்த்து ரசித்த வாணி....கையை நீட்டி அந்த டம்ளரை வாங்கி தனது வாயருகே கொண்டு செல்ல...ராகவன் அவளைப் பார்த்து....'ஒரு நிமிஷம் வாணி....'என்று சொல்ல....என்ன என்று கேட்பதை போல அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

'இல்ல....முதல்ல குடிச்சிர வேண்டாம்....வாய்க்குள்ள வச்சுக்கோ....'என்று சொன்னவனை .... குழப்பமான பார்வை பார்க்க....'ம்ம்...நான் எதுக்குன்னு அப்புறமா சொல்றேன்.....
நான் சொல்ற மாதிரி செய்யேன்...' என்று மேலும் சொன்ன ராகவனை பார்த்தவளின் மனதில்.....இப்போது தன்னை சந்தோசப் படுத்தும் விதமாக ஏதோ செய்வதற்காகத்தான் இப்படி சொல்கிறார் என்று யோசித்துக் கொண்டே .....
வேறெதுவும் சொல்லாமல் அவனைப் பார்த்துக் கொண்டே அந்த டம்ளரை வாயில் வைத்து வாய் நிறையும் அளவுக்கு ஒரு மிடறு வாய்க்குள் ஊற்றி விட்டு உதடுகளை குவித்து வாயை மூடிய நிலையில் 'அடுத்து என்ன செய்ய..?'என்று கேட்பதை போல தலையை அசைத்து சைகையால் கேட்க.....

அவளைப் பார்த்து ஒரு நமுட்டு சிரிப்பு சிரித்த ராகவன்....'வாணி...நான் ஒண்ணு செய்வேன்... தயவு செய்து தப்பா நினைக்காதே...'என்று சொன்னவன் அவளிடமிருந்து எந்த பதிலையும் எதிர்பார்க்காமல் பட்டென்று அவளுடைய முகத்தோடு தன்னுடைய முகத்தை வைத்து அவளுடைய வாயை கவ்வி....ம்ம்..ம்ம்...என்று அவளுக்கு சைகை செய்ய.....
அனிச்சையாக அவன் என்ன சொல்கிறான் என்று புரிந்து கொண்டதை போல வாணி தன்னுடைய உதடுகளை பிரித்துக் கொடுக்க...
அந்த சிறு இடைவெளியை வீணாக்காமல் இறுக்கமாக உதட்டோடு உதடு வைத்து அவளுடைய வாயில் தேக்கி வைத்து இருந்த மதுவை அப்படியே உறிஞ்சி தனது வாய்க்குள் கொண்டு வந்து விட்டு அவள் முகத்தினை விடுவித்து விட்டு....
அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே தனது வாயில் இருந்து மதுவை தொண்டைக்குள் இறக்கினான்.

அப்படி தொண்டைக்குள் இறக்கி விட்டு அவளைப் பார்த்து ஏதோ சாதித்தவனை போல ஒரு வெற்றி சிரிப்பு சிரிக்க...

முன்னறிவிப்பு எதுவுமின்றி திடீரென ராகவன இப்படி செய்வான் என்று எதிர்பாராத வாணி....ராகவனின் இந்த செயலில் சற்று கிறங்கித்தான் போனாள். நிஜமாகவே அவள் கண்களில் ஒரு மிரட்சி தெரிந்தது. ராகவன் தனது முகத்தை பிடித்த பிடியில் அவனது முரட்டுத் தனத்தை உணர்ந்து சின்னதாக ஒரு அச்சமும் அதே சமயம் அவனது முரட்டுத் தனத்தினால் ஒரு வித சந்தோசமும் உண்டானது.

பெண்ணுக்கே உரிய எச்சரிக்கை உணர்வோடு அவள் தன்னுடைய புறங்கையால் வாயை துடைத்துக் கொண்டே பின்னால் திரும்பி வாசல் படியை பார்த்தாள்.

அங்கே ஒரு வேளை அத்தை நிற்பார்களோ என்றுதான் அப்படி திரும்பி பார்த்தாள். அப்படியே சாந்தி இதை பார்த்து இருந்தாலும் கோப படுவதற்கு மாறாக சந்தோசம்தான் படுவாள் என்பது வாணிக்கு நன்றாகவே தெரியும் என்றாலும்.....ஏதோ ஒரு இனம் புரியாத அச்சத்தினால் அப்படி திரும்பி பார்த்தாள்.

'என்ன வாணி....அங்கே என்ன பாக்குற....?'என்று கேட்ட ராகவனை பார்த்து திரும்பி பார்த்து....நேருக்கு நேர் பார்க்காமல் சற்று தலையை குனிந்து கொண்டு....'என்ன அண்ணா....திடீர்னு இப்படி பண்ணிட்டீங்க....?' என்றாள்.

'இல்ல...வாணி.....அப்போ உன்னோட எச்சில் பட்ட இடத்துல வாயை வச்சு குடிச்சதை பாத்துட்டு ஆச்சரியமா கேட்டியே....அதான்....இப்படி ....'என்று சொல்லவந்ததை சொல்லாமல் பாதியில் நிறுத்த....
'அத்தை இதை பாத்திருந்தா என்ன ஆயிருக்கும்னு நினச்சு பாத்தீங்களா....?' என்று மீண்டும் அவனிடம் கேட்க....

அவள் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது என்று அப்போதுதான் அவனுக்கு உரைத்ததை போல...'ஆமா வாணி...நீ சொல்றது சரிதான்....இதை நான் நினச்சே பாக்கலை வாணி...ஏதோ ஒரு வேகத்துல இப்படி செஞ்சிட்டேன்....' என்று பாவம்போல முகத்தை வைத்துக் சொன்னான்.

'நாம அண்ணன் தங்கச்சி மாதிரி பழகுறோம்னு நினைச்சிதான் அத்தை இப்படி பேசிகிட்டு இருக்க சம்மதிச்சு இருக்காங்க......இதை எல்லாம் பாத்தாங்கன்னா கண்டிப்பா என்னை சத்தம் போடுவாங்க அண்ணா....'
'................................................'

'ஆனாலும் நீங்க ரொம்ப மோசம் அண்ணா....அண்ணனும் தங்கச்சியும் இப்படியா பழகுவாங்க....?'
அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் குழப்பத்தில் அவளை பார்க்க....

'நீங்க இப்படி செய்வீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை அண்ணா....'என்று சொன்னவளின் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை ஓடியதை கண்ணுற்ற ராகவன்
....அதனால் சற்று தைரியம் வந்தவனை போல....'நான் செஞ்சது தப்புதான்....ஒத்துக்கிறேன்....ஆனா உனக்கு பிடிச்சு இருந்துச்சா வாணி....அதை சொல்லு.....'என்று அசட்டுத் தனமாக கேட்க...
தான் என்ன பேசுகிறோம்...இவர் என்ன சொல்கிறார் என்று நிஜமாகவே சற்று எரிச்சலுற்ற வாணி..
.'என்னண்ணா நீங்க....நான் என்ன கேக்குறேன்...நீங்க என்ன சொல்றீங்க....நீங்களே சொல்லுங்க....நாம இப்படி செய்றது அத்தைக்கோ இல்லை...சந்தியாவுக்கோ தெரிஞ்சா அவங்க ஒத்துப்பங்களா....?' என்று குரலை உயர்த்தாமல் அமைதியாகவே கேட்டாள்.

அவள் அப்படி கேட்டதை ராகவன் எப்படி புரிந்து கொண்டான் என்று தெரியவில்லை....அவனது கேள்வி அவளது சந்தோசத்தை பற்றியதாக மட்டுமே இருந்தது.

'அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் வாணி....நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லு....'
'பாத்தீங்களா....திரும்ப திரும்ப அதையே சொல்றீங்க....'

இப்போது அவள் கேள்வியினால் சற்று எரிச்சலும் கோபமும் உண்டானதை போல முகத்தை டக்கென்று 'உம்'மென்று வைத்துக் கொண்டு அவளுக்கு பதில் சொல்லாமல் தலையை குனிந்து கொண்டிருந்த அவனை பார்த்து அவள் மேலும் கேட்டாள்.

'என்னண்ணா.....நான் கேட்டுகிட்டே இருக்கேன்....நீங்க அதுக்கு பதிலே சொல்ல மாட்டேன்றீங்க....?'
'.............................................................'
'அண்ணா....என்ன கோபமா....?'
'...............................................................'
'அண்ணா...ஏதாவது பேசுங்க அண்ணா....'

இம்மாதிரியான தருணங்களில் ஆண்களுடைய இந்த அசட்டுத் தனமாக கோபமும் பெண்களுக்கு பிடித்தமான ஒன்று என்பதை விட....பெண்களை உருக வைக்க இது ஒரு நல்ல டெக்னிக்....ஆனால் அதை ஆண்கள் தெரியாமலேயே செய்கிறார்கள்.

இப்போதும் ராகவன் அதே போல முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு பதில் சொல்லாமல் இருக்கவே....அதை கண்டு நிஜமாகவே சற்று உருகிப் போன வாணி....அவனையே ஒரு நிமிடம் உற்றுப் பார்த்து விட்டு....

'சரின்னா....நான் என்ன சொல்லிட்டேன்னு இப்போ முகத்தை இப்படி தூக்கி வச்சுகிட்டுஇருக்கீங்க...இப்போ என்ன....எனக்கு பிடிச்சு இருந்துதா என்னன்னு உங்களுக்கு தெரியனும்....அவ்வளவுதானே...'என்று அவள் நிறுத்த.....ராகவன் அடுத்து அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று ஆவலோடு மௌனம் காக்க.....
'ரொம்ப பிடிச்சு இருந்திச்சு....போதுமா....உங்க மேல மட்டும் தப்பு இல்லையே....நீங்க அந்த மாதிரி வாயில வச்சு உறிஞ்சினப்போ அது எனக்கும்தானே பிடிச்சு இருந்திச்சு....அப்போ என் மேலயும்தானே தப்பு....?' என்று அவள் விளக்கம் சொல்வதை போல சொல்ல....
அந்த விளக்கம் அவனுக்கு சந்தோசத்தை உண்டு பண்ணினாலும் வேண்டுமென்று மேலும் கொஞ்ச நேரம் அதே போல 'உம்'மென்று இருக்க....
அவனது கோபம் இன்னும் குறைந்த பாடில்லையே என்று யோசித்தவாணி......
என்ன இருந்தாலும் தன்னை திடீரென மகிழ்வித்த அவனை பதிலுக்கு மகிழ்விக்க வேண்டும் என்று நினைத்த வாணி....'சரி அண்ணா....நான் அப்படி சொல்லியிருக்கக் கூடாது....வேணும்னா இன்னொரு தடவை அந்த மாதிரி குடிச்சுக்கோங்க...போதுமா...?' என்று சொன்னதை கேட்டு பட்டென்று நிமிர்ந்து பார்த்த ராகவனின் முகம் சந்தோசத்தில் மிளிர்ந்தது.

இத்தனை நேரம் கோபத்தில் ஒன்றும் பேசாமல் இருந்தவன்....இப்போது முகமெல்லாம் சந்தோசமாக ....'நிஜமாவா சொல்ற வாணி....?' கண்கள் விரிய கேட்டான். 'ம்ம்....நீங்கதான் நான் என்ன சொன்னாலும் பதில் பேசாம இருக்கீங்களே...' என்று செல்லமாக அவள் சிணுங்க....
'அப்போ உனக்கு விருப்பம் இல்லாமத்தான் சொல்றியா வாணி....?' என்று ஆதங்கம் நிறைந்த குரலில் கேட்க....'இல்லை...இல்லை...பிடிச்சு போய்தான் சொல்றேன்...'என்று உதட்டை சற்று சுளித்தபடி சொன்ன வாணி....

அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவளாகவே அந்த டம்ளரை மீண்டும் கையில் எடுத்து அவனை பார்த்துக் கொண்டே வாய் நிறைய உறிஞ்சி உதடுகளை குவித்து வாயை மூடிக் கொண்டு கண்களால் அவனுக்கு சைகை காட்ட....
ராகவன் இப்போது அனிச்சையாக அவளைத் தாண்டி வாசல் படியை ஒரு பார்வை பார்த்து விட்டு....இரு கைகளாலும் வாணியின் முகத்தை இறுக்கமாக பிடித்தபடி....அவள் முகத்தருகே தனது முகத்தை கொண்டு சென்று வாயோடு வாயை பொறுத்த....
அவள் முன்னைப் போலவே தனது உதடுகளை லேசாக விரித்துக் கொடுக்க....ராகவன் சென்ற முறை அவசரமாக உறிஞ்சியதை போல இல்லாமல்....மிகவும் நிதானமாக முன்னை விட அழுத்தமாக அவள் உதடுகளை கவ்விக் கொண்டு அவள் வாயில் இருந்த மதுவை மெதுமெதுவாக உறிஞ்சிக்கொண்டே மிக மிக அருகில் தெரிந்த அவளது முகத்தை பார்க்க...
அவளோ தனதுஇரண்டு கண்களையும் மூடிய நிலையில் அந்த சுகத்தை மெய்மறந்து அனுபவித்துக் கொண்டிருந்தாள்.

இது ஒரு அண்ணன் தங்கை செய்யக்கூடிய காரியம்தானா...என்று அந்த நிலையிலும் ராகவனின் மனதில் ஒரு சின்ன சலனம் உண்டாக.....
அவளுடைய அருகாமையும் நெருக்கமும் மதுவின் லேசான போதையும் ....அவனுக்கு உண்டான அந்த சலனத்தை ஓட ஓட விரட்டியது.

அரை நிமிடத்துக்கும் மேலாக அவளது வாயை விடாமல் கவ்வி மதுவை குடித்து விட்டு....அவள் முகத்தை இறுக்கி பிடித்திருந்த தனது பிடியை தளர்த்தி அவளிடம் இருந்து சற்று விலகி மீண்டும் அவளைப் பார்க்க.....
அவள் இன்னும் கண்களை திறக்கவில்லை.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: சப்தஸ்வரங்கள் [discontinued] - by M.Gopal - 04-05-2019, 12:38 PM



Users browsing this thread: 1 Guest(s)