அவிழும் முடிச்சுகள் !!
#50
இங்க எப்படி உனக்கு வேலை கிடைச்சது ?


ஆமாம் பெரிய கலெக்டர் வேலை ... நான் படிச்ச படிப்புக்கு எங்க சொந்தக்காரங்க ஒருத்தங்க மூலமா தான் இந்த வேலை கிடைச்சது ...


யாருடா இது இப்டி திடீர்னு பேசிகிட்டு இருக்காங்கன்னு பாக்குறீங்களா இப்படித்தான் நம்ம கதை டிராக் மாறிக்கிட்டே இருக்கும் அதை வாசகர்கள் நீங்க கண்டிப்பா புரிஞ்சுக்குவீங்க... நான் தான் குழப்பிக்குவேனோ என்று பயம் !!


அதனால இந்த ஒருவாட்டி மட்டும் சொல்லிக்கிறேன் ... நம்ம நாயகி மீராவை ரிஸார்ட்ல விட்டு வந்தோமே அவளும் ரவியும் தான் பேசிகிட்டு இருக்காங்க ...


கார்த்திக் கிளம்பியதும் மீரா வெறுப்பின் உச்சிக்கு சென்றாள் ...


ரவி மத்த கெஸ்ட்களை இன்வைட் பண்ண சென்றுவிட்டான் ...


அந்த ஆடம்பரமான ரிசார்ட் ரூம் மீராவுக்கு நரகத்தின் வாயில் போன்று இருந்தது என்று தான் சொல்லணும் ...


மீராவுக்கு திருமணம் ஆகி நான்கு வருடம் ஆகுது ...பெருமைக்குரிய வாழக்கை தான் கார்த்தியும் ஒரு ரொமாண்டிக்கான ஆளு தான் ஆனா ஒன்னே ஒன்னு தான் குறை ...



வாழ்க்கைல ஒரு வெறுமை ...



அவனுக்கு முதல் மனைவி வேலை தான் !! கல்யாணம் ஆகி நாலு வருஷத்துல அவன் மீராவை புணர்ந்த நாட்களை எண்ணிவிடலாம் ...



சமீபமாக குழந்தை பிறப்பை பற்றிய கேள்விகள் கூட அதிகரித்துவிட்டது அப்பவும் கார்த்திக்கு வேலை வேலைனு தான் எண்ணம் !!



அதனால மீரா ஒருவித குழப்பத்தில் இருந்தாள் ... எதோ திருமண நாள் என்பதால இவளோ தூரம் வந்து வந்த இடத்துல அவன் இப்படி விட்டுட்டு போனதில் மீனாவுக்கு ஏக எரிச்சல் !!!


மீரா யோசித்து யோசித்து தூங்கியே விட்டாள் ... மாலை 5 ஆகிவிட்டது இன்னும் கார்த்தி வரவில்லை ...



காலிங் பெல் அடிக்க ... ஆஹா வந்துட்டார் போலன்னு மீரா ஆர்வமாக தூங்கிய முகத்துடன் வந்து கதவை திறக்க ...


நின்றது ரவி !!


மீரா முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தை பார்த்துவிட்டு ... என்ன மீரா சார் இன்னும் வரலியா ?


இல்லை ரவி வா உள்ள ... பார்ட்டி எப்ப ?


பார்ட்டி 7 மணிக்கு .. இப்படித்தான் அவர்களின் அந்த பேச்சு ஆரம்பித்து மலரும் நினைவுகளில் மூழ்கி போனார்கள் !!
[+] 2 users Like dannyview's post
Like Reply


Messages In This Thread
RE: அவிழும் முடிச்சுகள் !! - by dannyview - 19-12-2021, 06:34 AM



Users browsing this thread: 3 Guest(s)