17-08-2021, 09:13 PM
மறுநாள் -
மலர் அவசரம் அவசரமாக ஆபிஸ் போவதை பார்த்துக்கொண்டிருந்தாள் நிஷா.
ஸாரி நிஷா வி வில் கேட்ச் அப் லேட்டர்
அவள் போய்விட, புத்தகத்தை எடுக்கவே மனமில்லாமல் ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தாள் நிஷா. அப்போது போன் அடிக்க, எடுத்தால் காயத்ரி.
நிஷா சென்னை வந்திருக்கியாமே
ஆமாடி. எக்ஸாம் இருக்கு
சரி வீட்டுக்கு வா
ஏய்.. வேணாம்
அட வாம்மா. உனக்கு சமைச்சிப் போடுறேன்
வேணாண்டி
நான் வேணும்னா சீனுவை காசி ராமேஸ்வரம்னு எங்கயாவது அனுப்பிடட்டுமா
நிஷா சிரித்துவிட்டாள்.
உன் ரெண்டு பிள்ளைகளோடவும் உடனே கிளம்பி வா
அம்மா பேத்திகளோட விளையாண்டுக்கிட்டு இருக்காங்க. விடமாட்டாங்க
சரி உன் ரெண்டாவது பொண்ணையாவது தூக்கிட்டு வாடி. எங்களுக்கும் அவகூட விளையாட ஆசை இருக்காதா
ம்...
நிஷா போனை .. வைத்துவிட்டு.யோசித்துக்கொண்டிருந்தாள்.
அப்பா பண்ண வேலையால... சீனுவை வாழ்க்கை முழுவதும் பார்த்து, பேசித்தான் இருக்கப்போகிறோம். அப்புறம் என்ன? அவன் இப்போ நல்லவனா திருந்தி கட்டுப்பாடோடதானே இருக்கான்.
போய்ப் பார்க்கலாம். செட் ஆகலைன்னா திரும்ப வந்திடலாம்.
அம்மா காயத்ரி கூப்பிடுறா. என்ன செய்யட்டும்? என்றாள்.
கதிர்கிட்ட கேட்டுக்கோமா.
அவள் கேட்டாள். அவன், கொஞ்சம் யோசித்துவிட்டு, ஓகே என்றுவிட்டான்.
நிஷாவுக்கு, காயத்ரியோடு இருந்தால் கலகலப்பாக இருக்கும் என்று தோன்றியது. அவளுக்கு... அந்த ரிலாக்ஸேஷன்... புத்துணர்ச்சி... தேவைப்பட்டது.
நன்றாக புடவை கட்டிக்கொண்டு... குழந்தையோடு புறப்பட்டாள்.
சீனுவின் புது வீட்டின்முன் இறங்கி.. வீட்டின் அழகை மேலும் கீழுமாக பார்த்துக்கொண்டே... காலிங்க் பெல்லை அடித்தாள்.
வாடி வாடி என் தங்கமே
காயத்ரி ஓடிவந்து அவளை கட்டிப்பிடித்துக்கொண்டாள். குழந்தையை தூக்கி கொஞ்சினாள். வீட்டை நிஷாவுக்கு சுற்றிக் காட்டினாள்.
அருமையா இருக்கு காயத்ரி.. என்றவள், பார்வதியக்காவை எங்கே? என்றாள்.
அவங்க பழைய இடத்திலேயே இருந்துக்கறோம் அதுதான் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாங்க. செண்டிமெண்ட்.
நிஷாவை இழுத்துக்கொண்டு, தங்கள் வீட்டுக்கு அடுத்தபடியாக... ஓப்பன் முற்றத்தை கடந்து போய் இன்னொரு கதவுக்குள் நுழைந்தாள் காயத்ரி.
அத்தை அத்தை
என்னம்மா என்றபடியே வந்த பார்வதி, செய்யவதரியாமல் நின்றுவிட்டாள்.
நிஷா கண்ணு...
நிஷா ஓடிப்போய் அவளை கட்டிப்பிடித்துக்கொண்டாள்.
சிறிது நேரத்தில் - காயத்ரி சமைத்துக்கொண்டிருக்க, நிஷா, இங்கே, பார்வதியின் மடியில், மகளோடு படுத்துக்கிடந்தாள்.
உன்ன இப்படி குழந்தையோட பார்க்கிறதுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா கண்ணு. இப்போ நீங்க எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணா ஆகிட்டீங்க. இதைவிட எனக்கு வேற என்ன வேணும். எல்லாம் கடவுள் செயல்.
கடவுள் செயலா? என் அப்பனோட செயல்! என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள் நிஷா.
சந்திரன், ஓடிப்போய் காயத்ரிக்கு தேவையான பொருட்களை வாங்கிவந்து கொடுத்தார். பார்வதியின் கையிலிருந்து, நிஷாவின் மகளை வாங்கி கொஞ்சினார். நிஷா, சீனுவின் மகனை வாங்கி வைத்துக்கொண்டாள்.
நிஷாவும் பார்வதியும் சமையல் முடியும்வரைக்கும் கதைபேசி சிரித்துக்கொண்டு இருந்தார்கள்.
காயத்ரி, சீனுவுக்கு போன் போட்டாள். அவன், மூன்று மாத கோர்ஸ் ஒன்றில் சேர்ந்திருந்தான். திரும்பவும் துபாய்க்கே போய்விடுவது என்று முடிவு செய்திருந்தான்.
என்னங்க.. மதியம் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுட்டுப் போங்க.
வர முடியாதுடா. டிராபிக் இருக்கும். ஈவினிங்க் முடிஞ்சளவு சீக்கிரமா வரேன். நிஷாவை நல்லா கவனிச்சுக்கோங்க
ஓகே ஓகே
எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டார்கள்.
ஈவினிங்க் - சீனு வந்தான். ஹாய் நிஷா, நல்லாயிருக்கியா.. என்றான்.
நல்லாயிருக்கேன் சீனு. நீ?
நல்லாயிருக்கேன் நிஷா.
சிரித்துக்கொண்டே குளிக்கப்போய்விட்டான். அவளுக்கு, அவன் கோர்ஸ் படிப்பதை நினைத்து பெருமிதமாக இருந்தது. மாமனாரின் கம்பெனி வேணாம், சொந்தக்காலில் நிற்கவேண்டும் என்று முடிவு செய்திருந்ததும் பிடித்திருந்தது. வெரி குட்! என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள்.
குளித்து முடித்துவிட்டு வந்ததும், நிஷாவை எங்கே? என்றான் காயத்ரியிடம்.
அவ படிச்சிட்டு இருக்கா
ஓ.. ஓகே ஓகே
அவன், நிஷாவின் மகளோடும் தன் மகனோடும் விளையாட ஆரம்பித்துவிட்டான். அவர்களது சிரிப்புச் சத்தம்.. வீட்டுக்குள்..நன்றாகவே கேட்டது. நிஷா பேருக்குத்தான் புத்தகத்தை கையில் வைத்திருந்தாள்.
அவன் குழந்தைகளோடு விளையாடுவதையே ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்தாள். நிஷாவை டிஸ்டர்ப் செய்யவேண்டாம் என்று காயத்ரி உள்ளே எட்டிப்பார்க்கவே இல்லை.
நிஷா படிக்கவே பிடிக்காமல்...கஷ்டப்பட்டு உட்கார்ந்துகொண்டு இருந்தாள். ச்சே எக்ஸாம் டைம்ல வராம வேற டைம்ல வந்திருக்கலாமோ
அவள் எதிர்பார்த்ததைவிட... வீட்டின் சூழ்நிலை அருமையாக இருந்தது. அவளுக்குப் பிடித்திருந்தது.
இரவில் - மொத்தமாக அமர்ந்து சாப்பிட்டார்கள். நான்தான் பரிமாறுவேன் என்று பார்வதி பரிமாறினாள்.
சாப்பாடு பிடிச்சிருக்கா நிஷா? என்றான் சீனு
அக்காவோட சமையல் பத்திதான் எனக்கு முன்னாடியே தெரியுமே
பார்வதி சிரித்துக்கொண்டாள். அவளுக்கு நிஷாவை கவனித்துக்கொண்டதில் அளவில்லாத சந்தோஷம்.
எல்லோரும் தூங்கப் போய்விட, சீனு, தூங்குவதற்கு முன், அவளிடம் வந்தான்.
இப்போதுதான் அவர்கள் இருவரும், நேருக்கு நேர், ஒருவரை ஒருவர் நன்றாகப் பார்த்துக்கொண்டார்கள். நிஷாவின் அழகை... அந்தப் பார்வையை... எதிர்கொள்ள முடியாமல் சீனு தலையை குனிந்துகொண்டான்.
எங்க வீட்டுக்கு வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் நிஷா என்றான். - அவன் குரல் கரகரத்தது.
என்னாச்சு? குரல் ஒருமாதிரியா இருக்கு? Cold-ஆ??
சேச்சே அதெல்லாம் இல்ல. ஐ அம் fine.
வீடு நல்லாயிருக்கு. பார்வதியக்கா சந்தோஷமா இருக்காங்க. காயத்ரி சந்தோஷமா இருக்கா. மோகனின் மருமகன்னு ஆனப்புறமும் நீ படிக்கிற. Good Seenu. I am happy for you.
சீனு சட்டென்று அவளை நிமிர்ந்து பார்த்தான். இந்த வார்த்தைகளை அவன் அவளிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. அவளது appreciation.. அவனை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்தது.
கடைசியாக அவனை யாராவது appreciate செய்தார்களா என்று அவன் யோசித்துப்பார்த்தான். நிஷாதான் நினைவுக்கு வந்தாள்.
மலர் அவசரம் அவசரமாக ஆபிஸ் போவதை பார்த்துக்கொண்டிருந்தாள் நிஷா.
ஸாரி நிஷா வி வில் கேட்ச் அப் லேட்டர்
அவள் போய்விட, புத்தகத்தை எடுக்கவே மனமில்லாமல் ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தாள் நிஷா. அப்போது போன் அடிக்க, எடுத்தால் காயத்ரி.
நிஷா சென்னை வந்திருக்கியாமே
ஆமாடி. எக்ஸாம் இருக்கு
சரி வீட்டுக்கு வா
ஏய்.. வேணாம்
அட வாம்மா. உனக்கு சமைச்சிப் போடுறேன்
வேணாண்டி
நான் வேணும்னா சீனுவை காசி ராமேஸ்வரம்னு எங்கயாவது அனுப்பிடட்டுமா
நிஷா சிரித்துவிட்டாள்.
உன் ரெண்டு பிள்ளைகளோடவும் உடனே கிளம்பி வா
அம்மா பேத்திகளோட விளையாண்டுக்கிட்டு இருக்காங்க. விடமாட்டாங்க
சரி உன் ரெண்டாவது பொண்ணையாவது தூக்கிட்டு வாடி. எங்களுக்கும் அவகூட விளையாட ஆசை இருக்காதா
ம்...
நிஷா போனை .. வைத்துவிட்டு.யோசித்துக்கொண்டிருந்தாள்.
அப்பா பண்ண வேலையால... சீனுவை வாழ்க்கை முழுவதும் பார்த்து, பேசித்தான் இருக்கப்போகிறோம். அப்புறம் என்ன? அவன் இப்போ நல்லவனா திருந்தி கட்டுப்பாடோடதானே இருக்கான்.
போய்ப் பார்க்கலாம். செட் ஆகலைன்னா திரும்ப வந்திடலாம்.
அம்மா காயத்ரி கூப்பிடுறா. என்ன செய்யட்டும்? என்றாள்.
கதிர்கிட்ட கேட்டுக்கோமா.
அவள் கேட்டாள். அவன், கொஞ்சம் யோசித்துவிட்டு, ஓகே என்றுவிட்டான்.
நிஷாவுக்கு, காயத்ரியோடு இருந்தால் கலகலப்பாக இருக்கும் என்று தோன்றியது. அவளுக்கு... அந்த ரிலாக்ஸேஷன்... புத்துணர்ச்சி... தேவைப்பட்டது.
நன்றாக புடவை கட்டிக்கொண்டு... குழந்தையோடு புறப்பட்டாள்.
சீனுவின் புது வீட்டின்முன் இறங்கி.. வீட்டின் அழகை மேலும் கீழுமாக பார்த்துக்கொண்டே... காலிங்க் பெல்லை அடித்தாள்.
வாடி வாடி என் தங்கமே
காயத்ரி ஓடிவந்து அவளை கட்டிப்பிடித்துக்கொண்டாள். குழந்தையை தூக்கி கொஞ்சினாள். வீட்டை நிஷாவுக்கு சுற்றிக் காட்டினாள்.
அருமையா இருக்கு காயத்ரி.. என்றவள், பார்வதியக்காவை எங்கே? என்றாள்.
அவங்க பழைய இடத்திலேயே இருந்துக்கறோம் அதுதான் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாங்க. செண்டிமெண்ட்.
நிஷாவை இழுத்துக்கொண்டு, தங்கள் வீட்டுக்கு அடுத்தபடியாக... ஓப்பன் முற்றத்தை கடந்து போய் இன்னொரு கதவுக்குள் நுழைந்தாள் காயத்ரி.
அத்தை அத்தை
என்னம்மா என்றபடியே வந்த பார்வதி, செய்யவதரியாமல் நின்றுவிட்டாள்.
நிஷா கண்ணு...
நிஷா ஓடிப்போய் அவளை கட்டிப்பிடித்துக்கொண்டாள்.
சிறிது நேரத்தில் - காயத்ரி சமைத்துக்கொண்டிருக்க, நிஷா, இங்கே, பார்வதியின் மடியில், மகளோடு படுத்துக்கிடந்தாள்.
உன்ன இப்படி குழந்தையோட பார்க்கிறதுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா கண்ணு. இப்போ நீங்க எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணா ஆகிட்டீங்க. இதைவிட எனக்கு வேற என்ன வேணும். எல்லாம் கடவுள் செயல்.
கடவுள் செயலா? என் அப்பனோட செயல்! என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள் நிஷா.
சந்திரன், ஓடிப்போய் காயத்ரிக்கு தேவையான பொருட்களை வாங்கிவந்து கொடுத்தார். பார்வதியின் கையிலிருந்து, நிஷாவின் மகளை வாங்கி கொஞ்சினார். நிஷா, சீனுவின் மகனை வாங்கி வைத்துக்கொண்டாள்.
நிஷாவும் பார்வதியும் சமையல் முடியும்வரைக்கும் கதைபேசி சிரித்துக்கொண்டு இருந்தார்கள்.
காயத்ரி, சீனுவுக்கு போன் போட்டாள். அவன், மூன்று மாத கோர்ஸ் ஒன்றில் சேர்ந்திருந்தான். திரும்பவும் துபாய்க்கே போய்விடுவது என்று முடிவு செய்திருந்தான்.
என்னங்க.. மதியம் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுட்டுப் போங்க.
வர முடியாதுடா. டிராபிக் இருக்கும். ஈவினிங்க் முடிஞ்சளவு சீக்கிரமா வரேன். நிஷாவை நல்லா கவனிச்சுக்கோங்க
ஓகே ஓகே
எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டார்கள்.
ஈவினிங்க் - சீனு வந்தான். ஹாய் நிஷா, நல்லாயிருக்கியா.. என்றான்.
நல்லாயிருக்கேன் சீனு. நீ?
நல்லாயிருக்கேன் நிஷா.
சிரித்துக்கொண்டே குளிக்கப்போய்விட்டான். அவளுக்கு, அவன் கோர்ஸ் படிப்பதை நினைத்து பெருமிதமாக இருந்தது. மாமனாரின் கம்பெனி வேணாம், சொந்தக்காலில் நிற்கவேண்டும் என்று முடிவு செய்திருந்ததும் பிடித்திருந்தது. வெரி குட்! என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள்.
குளித்து முடித்துவிட்டு வந்ததும், நிஷாவை எங்கே? என்றான் காயத்ரியிடம்.
அவ படிச்சிட்டு இருக்கா
ஓ.. ஓகே ஓகே
அவன், நிஷாவின் மகளோடும் தன் மகனோடும் விளையாட ஆரம்பித்துவிட்டான். அவர்களது சிரிப்புச் சத்தம்.. வீட்டுக்குள்..நன்றாகவே கேட்டது. நிஷா பேருக்குத்தான் புத்தகத்தை கையில் வைத்திருந்தாள்.
அவன் குழந்தைகளோடு விளையாடுவதையே ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்தாள். நிஷாவை டிஸ்டர்ப் செய்யவேண்டாம் என்று காயத்ரி உள்ளே எட்டிப்பார்க்கவே இல்லை.
நிஷா படிக்கவே பிடிக்காமல்...கஷ்டப்பட்டு உட்கார்ந்துகொண்டு இருந்தாள். ச்சே எக்ஸாம் டைம்ல வராம வேற டைம்ல வந்திருக்கலாமோ
அவள் எதிர்பார்த்ததைவிட... வீட்டின் சூழ்நிலை அருமையாக இருந்தது. அவளுக்குப் பிடித்திருந்தது.
இரவில் - மொத்தமாக அமர்ந்து சாப்பிட்டார்கள். நான்தான் பரிமாறுவேன் என்று பார்வதி பரிமாறினாள்.
சாப்பாடு பிடிச்சிருக்கா நிஷா? என்றான் சீனு
அக்காவோட சமையல் பத்திதான் எனக்கு முன்னாடியே தெரியுமே
பார்வதி சிரித்துக்கொண்டாள். அவளுக்கு நிஷாவை கவனித்துக்கொண்டதில் அளவில்லாத சந்தோஷம்.
எல்லோரும் தூங்கப் போய்விட, சீனு, தூங்குவதற்கு முன், அவளிடம் வந்தான்.
இப்போதுதான் அவர்கள் இருவரும், நேருக்கு நேர், ஒருவரை ஒருவர் நன்றாகப் பார்த்துக்கொண்டார்கள். நிஷாவின் அழகை... அந்தப் பார்வையை... எதிர்கொள்ள முடியாமல் சீனு தலையை குனிந்துகொண்டான்.
எங்க வீட்டுக்கு வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் நிஷா என்றான். - அவன் குரல் கரகரத்தது.
என்னாச்சு? குரல் ஒருமாதிரியா இருக்கு? Cold-ஆ??
சேச்சே அதெல்லாம் இல்ல. ஐ அம் fine.
வீடு நல்லாயிருக்கு. பார்வதியக்கா சந்தோஷமா இருக்காங்க. காயத்ரி சந்தோஷமா இருக்கா. மோகனின் மருமகன்னு ஆனப்புறமும் நீ படிக்கிற. Good Seenu. I am happy for you.
சீனு சட்டென்று அவளை நிமிர்ந்து பார்த்தான். இந்த வார்த்தைகளை அவன் அவளிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. அவளது appreciation.. அவனை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்தது.
கடைசியாக அவனை யாராவது appreciate செய்தார்களா என்று அவன் யோசித்துப்பார்த்தான். நிஷாதான் நினைவுக்கு வந்தாள்.