07-08-2021, 12:37 AM
இரண்டு மாதத்தில் - அவன் காயத்ரியோடு துபாய் கிளம்பினான். ஏர்போர்ட்டில் - அவர்கள் விடைபெறும் முன் - நிஷா அவர்கள் இருவரின் கைகளையும் சேர்த்துப் பிடித்துக்கொண்டாள்.
ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் குத்தம் சொல்லிக்காம புதுசா வாழ்க்கையை தொடங்கணும் சரியா? சந்தோஷமா இருக்கணும்.
கண்டிப்பா நிஷா... என்றாள் காயத்ரி.
அப்புறம் சீனு.. ஒரு முக்கியமான விஷயம்.
சொல்லு நிஷா
அடுத்து நீங்க ரெண்டு பேரும் ஊருக்கு வரும்போது நல்ல செய்தியோட வரணும்.
இதைக்கேட்டதும் காயத்ரி சீனுவை நிமிர்ந்து பார்க்க, அவன் பட்டும் படாமலும் சொன்னான்.
சரி நிஷா
டேய்.. என்னடா... முகத்துல சிரிப்பே இல்லாம சொல்லுற?
அவனுக்கு, காயத்ரியை முழுமையாக மன்னிக்கவேண்டும் என்று தோன்றவில்லை. அப்புறம் எப்படி குழந்தை எல்லாம்... என்று அமைதியாக நின்றான். இருந்தாலும் நிஷா அவனை டா போட்டு பேசியது அவனது spine-க்குள்... சில்லென்று... சுகமாக இருந்தது. அவளைப்பார்த்து லேசாக சிரித்தான்.
நிஷா, அவனது கைகளை பிடித்துக்கொண்டு, விடாமல், ஏதோ அவனுக்கு கடன்பட்டவள் போல்... அவனையே பார்த்துக்கொண்டு நின்றாள்.
எனக்காக. ப்ளீஸ்....
ஐயோ என்ன நிஷா இது
காயத்ரியை சந்தோஷமா பார்த்துக்கோ. பார்த்துக்கணும்.
சரி நிஷா.
நிஷாவுக்கு இப்போதுதான் நிம்மதியாக இருந்தது. அவர்களிடம், தலையசைத்து, கண்களால் விடைபெற்றுக்கொண்டு, அவர்கள் இருவரையுமே இழந்துவிட்டதுபோல்.... மனம் கனக்க அங்கிருந்து கிளம்பினாள்.
ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் குத்தம் சொல்லிக்காம புதுசா வாழ்க்கையை தொடங்கணும் சரியா? சந்தோஷமா இருக்கணும்.
கண்டிப்பா நிஷா... என்றாள் காயத்ரி.
அப்புறம் சீனு.. ஒரு முக்கியமான விஷயம்.
சொல்லு நிஷா
அடுத்து நீங்க ரெண்டு பேரும் ஊருக்கு வரும்போது நல்ல செய்தியோட வரணும்.
இதைக்கேட்டதும் காயத்ரி சீனுவை நிமிர்ந்து பார்க்க, அவன் பட்டும் படாமலும் சொன்னான்.
சரி நிஷா
டேய்.. என்னடா... முகத்துல சிரிப்பே இல்லாம சொல்லுற?
அவனுக்கு, காயத்ரியை முழுமையாக மன்னிக்கவேண்டும் என்று தோன்றவில்லை. அப்புறம் எப்படி குழந்தை எல்லாம்... என்று அமைதியாக நின்றான். இருந்தாலும் நிஷா அவனை டா போட்டு பேசியது அவனது spine-க்குள்... சில்லென்று... சுகமாக இருந்தது. அவளைப்பார்த்து லேசாக சிரித்தான்.
நிஷா, அவனது கைகளை பிடித்துக்கொண்டு, விடாமல், ஏதோ அவனுக்கு கடன்பட்டவள் போல்... அவனையே பார்த்துக்கொண்டு நின்றாள்.
எனக்காக. ப்ளீஸ்....
ஐயோ என்ன நிஷா இது
காயத்ரியை சந்தோஷமா பார்த்துக்கோ. பார்த்துக்கணும்.
சரி நிஷா.
நிஷாவுக்கு இப்போதுதான் நிம்மதியாக இருந்தது. அவர்களிடம், தலையசைத்து, கண்களால் விடைபெற்றுக்கொண்டு, அவர்கள் இருவரையுமே இழந்துவிட்டதுபோல்.... மனம் கனக்க அங்கிருந்து கிளம்பினாள்.