Romance காதலும் சாபமும்
#64
எபிசோட் -6 (present &past )

இப்போ என்ன பண்ணலாம் என கதிர் கேட்க 


ப்ரியாவுக்கு என்ன சொல்வது அடுத்து என்ன பண்ணுவது என்று தெரியாமல் இருக்க 

கதிரை பார்த்து கோபமாக அழுதாள் எல்லாம் உன்னால தாண்டா வெண்ண மயிறு நான் இந்நேரம் ரயில் ல விழுந்து செத்து இருப்பேன் பெரிய ஹீரோ மாதிரி காப்பாத்தி 

கதிர் குறுக்கிட்டான் நான் ஹீரோ இல்லசாம்பார் சாதம் அப்படி தானே சொல்விங்க  என கதிர் சிரிக்க 

பேசாதடா ராஸ்கல் நான் பாட்டுக்கு செத்து இருப்பேன் இப்போ நான் என்ன பண்ண என்னால என் ஊருக்கும் போக முடியாது இந்த கெடு கேட்ட உலகத்துல அடுத்து என்ன பண்ணனும் தெரியல அப்படியே தலையை பிய்ச்சு கிட்டு ஐயோ பேசாம இங்க மாடி இருந்தா குதிச்சு செத்துடுறேன் என ப்ரியா எந்திரிக்க பார்க்க  
கதிர் ஒரு நிமிஷம் உக்காரு உக்காரு என அவளை பிடிக்க உடனே அவ முறைக்கு அடிச்சுடாதம்மா நான் கைய எடுத்துடுறேன் என எடுத்தான் .நான் சொல்றத ஒரு நிமிஷம் கேளு நீ ஒரு வேல ரயில் ல விழுந்து செத்து இருந்தாலும் இல்ல மாடில இருந்து குதிச்சு இருந்தாலும் இந்த மெடிக்கல் ரிப்போர்ட்ல தெரிஞ்சுடும் அப்புறம் போலீஸ் மீடியா எப்படியும் உன் பேமிலி யா நாறடிச்சு டுவானுக அதுனால இனியும் சாகுற எண்ணத்தை விடு 

ப்ரியா யோசிச்சா அழுதா பாவம் என் அப்பா அம்மா அண்ணன் என்னால கஷ்டப்பட கூடாது என நினைச்சா 

நான் ஒரு யோசனை சொல்றேன் கேக்குறியா என கதிர் கேட்க 

ப்ரியா அழுது கொண்டும் முறைத்து கொண்டும் அவனை பாக்க ஆ நீ நினைக்கிற மாதிரி நான் உன்னைய என் கூட லாம் தங்க சொல்ல மாட்டேன் எனக்கு பிரைவசி வேணும் அதுனால நான் லேடிஸ் ஹாஸ்டல் ஒன்னுல உன்னைய சேர்த்து விடுறேன் நீ கொஞ்ச நாள் இருந்து ஏதாச்சும் ஒரு வேல ஒன்னு தேடி பாரு அதுக்கு அப்புறம் ஒரு நாள் உன் வீட்டுக்கு போயிக்கிடலாம் 
ப்ரியா கொஞ்ச நேரம் யோசிச்சா  பிறகு தலையை மட்டும் ஆட்டினா .எனக்கு பசிக்குது என்றா 

ஓகே நான் போயி கேண்டின்ல ஏதாச்சும் வாங்கிட்டு வரேன் நீ ஏதும் பண்ணிக்கடாத தனியா உக்காந்து யோசி என்றான் 
அவன் போன பிறகு ப்ரியா யோசிச்சா அவளுக்கு என்ன பண்ணுவது என்றே புரியவில்லை வாழ்க்கை எதற்க்கு வாழ என்றே தோன்றியது .அவ தனக்கு நடந்த அந்த கொடூரத்தை மறக்க நினைச்சா.ஊருக்கு இனி போயி பலன் இல்ல ஐயோ ஒண்ணுமே புரியலையே என அவ குழம்பி கொண்டு இருக்க 

கொஞ்ச நேரம் கழிச்சு கதிர் வந்தான் ஓகே நீ சொன்ன மாதிரி நான் லேடிஸ் ஹாஸ்டல் ல தங்கிக்கிறேன் என்றாள் 
கதிர் சாரி ப்ரியா வெறும் புளியோதரை தான் இருக்கு என்று சொல்ல இட்ஸ் ஓகே எனக்கு ரொம்ப பசிக்குது என அதை வாங்கி வேக வேகமா சாப்பிட்டா 

past 


ஆமா என்னடா இன்னைக்கு ஸ்பெஷல் கிளாஸ் முழுக்க பிரியாணி பாக்ஸ் வந்துட்டு இருக்கு என கதிர்க்கு இருக்கும் ஒரே பிரண்டு செபாஸ்டின் கிட்ட கேட்க அது ஒண்ணுமில்லடா ப்ரியாக்கு இன்னைக்கு பிறந்த நாளாம் அதுனால கிளாஸுக்கே அவங்க அப்பா பிரியாணி வாங்கி கொடுத்து இருக்கார் என்றான் அவன் 

அது சரி யாருடா அந்த பிரியா 

நல்லா போச்சு நீ எல்லாம் என்னைக்கு தாண்டா கிளாஸ்ல இருந்த 
எப்ப பாரு தியேட்டர் இல்ல லைபற்ரி இல்ல எங்க அச்சும் அந்த ஓட்ட கேமிரா எடுத்துட்டு போயிடுறது கேட்டா பெரிய டிரைக்டர் ஆக போறேன்னு சொல்லிக்கிடுறது ஒரு நாள் ஆச்சும் காலேஜ்ல இருந்தோமா எவலையாச்சும் சைட் அடிச்சோமா இல்ல லவ் பண்ணி செட்டில் ஆனோமான்னு 

போடா இவனே நான் என்னைக்குனாலும் பெரிய டிரைக்டர் ஆக தான் போறேன் நேஷனல் அவார்ட் ஸ்டேட் அவார்ட் எல்லாம் வாங்க தான் போறேன் என கதிர் சொல்லிட்டு இருக்க அப்போ ப்ரியா அவன் இருக்கும் மேசைக்கு வந்தாள் இந்தாங்க என செபாஸ்டின் கிட்ட கொடுத்துட்டு அடுத்து கதிர் கிட்ட கொடுக்க வரும் போது ஏண்டி அவனுக்கு கொடுக்குற அவன் வெறும் தயிர் சாதம் மட்டும் தான் சாப்பிடுவான் என ஒருத்தி சொல்ல அவளோட லவர் ஒருத்தன் காரெக்ட்டா சொன்னெடி செல்லம் என சொல்ல எல்லாரும் கேக்க புக்க என சிரிக்க 
இட்ஸ் ஓகே ங்க அவங்க சொன்ன மாதிரி எனக்கு நான் வீட்ல கொண்டு வந்த தயிர் சாதமே இருக்கு இந்த பிச்சை பிரியாணியை அவங்களுக்கே கொடுங்க என சொல்லிட்டு கதிர் கிளம்பி வந்தான் .

அன்று கிளாஸ்க்கே பிரியாணி போட்ட ஒருத்தி இப்போ நம்ம கிட்ட வாங்கி சாப்பிடுறாளே என கதிர் நினைக்க அன்று நாம் கொடுத்த பிரியாணியை சாப்பிடாத ஒருத்தன் இன்று நமக்கு சாப்பாடு வாங்கி தருகிறான் என ப்ரியாவும் நினைத்தாள் 
Like Reply


Messages In This Thread
RE: காதலும் சாபமும் - by prem ganesh 2 - 31-05-2021, 02:11 PM



Users browsing this thread: 1 Guest(s)