Romance காதலும் சாபமும்
#48
எபிசோட் -5 ( அடுத்து என்ன ?)

இரண்டு நாட்களுக்கு பிறகு ப்ரியா கண் முழிச்சா ஆஸ்பத்திரியில் இருப்பதை பார்த்து பயந்தா ஒரு வேலை போலீஸ் க்கு தெரிஞ்சு இருக்குமோ அப்பா அம்மா அண்ணன் எல்லாரும் வந்துட்டாங்களோ ஐயோ என்ன ஆச்சுன்னே தெரியலையே என ப்ரியா எந்திரிக்க போக அப்போ ஒரு நர்ஸ் வந்தாங்க 


என்ன மோளே முழிச்சுட்டியா கொஞ்சம் இரு டாக்டரையும் உன் புருஷனையும் கூப்பிட்டு வரேன் என நர்ஸ் போக 

புருஷனா என குழம்பினா ப்ரியா 

டாக்டர் வர பின்னாலே கதிரும் வந்தான் டாக்டர் வந்து ப்ரியாவை செக் செய்து விட்டு ஓகே உங்க மிஸஸ் ஹெல்த் வைஸ் fully alright இன்னும் ஒரு நாள் மட்டும் ரெஸ்ட் எடுக்கணும் என்று டாக்டர் சொல்ல
டாக்டர் நான் அவர் கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் என ப்ரியா சொல்ல 

அவர் இங்க தான் இருக்க போறாரு உன் கூடவே நீ என்கிட்ட ஏதாச்சும் 

கதிர் புரிஞ்சு கிட்டு வெளியே போக 

இங்க பாரும்மா நான் நடந்தத பத்தி திரும்ப திரும்ப பேசி எதுவும் உன்னைய காயப்படுத்த விரும்பல ஆனா உனக்கு நல்ல புருஷன் கிடைச்சு இருக்காரு .இந்த 2 நாளும் இங்க இருந்த நர்ஸ் க கூட தூங்கி இருந்தாலும் இருப்பாங்க அவர் தூங்கல உனக்கு ட்ரிப் ஏறுறத பார்த்து கிட்டும் இறங்கி முடிஞ்ச உடனே எங்களை கூப்பிடுறதுமாவே தான் இருந்தாரு .இடையில உனக்கு பிளட்டும் அவரே கொடுத்துட்டு பிளட் பேங் போயி மேலும் சில யூனிட் பிளட் வாங்கிட்டு இப்படி இந்த 2 நாள் அவர் உனக்காக ஒரு நிமிஷம் கூட ஓயல அவர் அன்புக்காகவாச்சும் நடந்ததா மறந்துட்டு வாழு என டாக்டர் சொல்ல வெளியே கதிர் கொட்டாவி விட்டு கொண்டு நிற்பதை ப்ரியா கண்ணாடி வழியே பார்க்க அவளுக்கு அவன் மீது வருத்தம் வந்தது 
டாக்டர் என்னோட வேற 

கவலைப்படாதம்மா உன்னோட உறுப்புல இருக்க புண்கள் எல்லாம் கொஞ்ச கொஞ்சமா சரி ஆகிடும் அதுக்கு அப்புறம் எப்பவும் போல நீங்க நார்மல் லைப் வாழலாம்  என டாக்டர் சொல்லிட்டு திரும்பவும் வந்து எனக்கும் 2 பொண்ணு இருக்கும்மா உன்னயவும் ஒரு பொண்ணா நினைச்சு சொல்றேன் அந்த மனுஷனுக்காக வாழு என சொல்லிட்டு போக 

யாருமில்ல டாக்டர் நர்ஸ் எல்லாரும் வெளியே போயிட்டாங்க தயங்கி தயங்கி உள்ளே வந்தான் .

உள்ளே வர ப்ரியா அமைதியாக இருக்க 

ஓகே தெரியும் நீ என்மேல கோபமா இருக்க சந்தேகத்தோடு இருக்கன்னு சாரி அவங்க கிட்ட புருஷன்னு சொன்னா மட்டும் தான் விடுவாங்க இல்லாட்டி உன் பேமிலி க்கு இன்பார்ம் பண்ணிடுவேன்னு சொன்னாங்க ஐ ம் சாரி ப்ரியா ஓகே திட்டணும்னா திட்டிடு என்று சொல்ல
தேங்க்ஸ் என்று மெல்ல சொன்னா 

என்னது 

தேங்க்ஸ் அண்ட் சாரி என அழுக ஆரம்பிச்சா என்னய மாதிரி கெட்டு போனவளை நீ நடிக்கிறதுக்கு கூட பொண்டாட்டின்னு சொல்லி இருக்க கூடாது கதிர் ஏதோ தெருவுல கிடந்த பொண்ணு தூக்கிட்டு வந்து இருக்கேன்னு சொல்லி இருக்கணும்னு அழுக 

அட அழுகாத ப்ரியா யாராச்சும் கேட்டுட்டு போறாங்க 

கேட்டா கேட்டுட்டு போறாங்க என்று நல்லா கத்தி அழுக 

சரி எனக்கும் நல்லது தான் இந்தா டாக்டர் கிட்ட சொல்றேன் என மெல்ல எந்திரிக்க போனவன் கையை பிடிச்சா ப்ரியா  
சாரி என உடனே விட்டு விட்டு ஒரு ரெண்டு நிமிஷம் அமைதியாக 

சரிம்மா இப்போ அடுத்து என்ன பண்ண நாளைக்கு டிசர்ஜ் என கதிர் கேட்க 

......................................தொடரும் 
Like Reply


Messages In This Thread
RE: காதலும் சாபமும் - by prem ganesh 2 - 26-05-2021, 09:49 PM



Users browsing this thread: 1 Guest(s)