Adultery "" நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் ""
ரேணு என்னடி சொல்லுற உனக்கு அறிவு இருக்கா ? நிஷா புரியாம கேட்க ...


ஆமா நிஷா நாம இப்ப தியேட்டருக்கு போனா என்ன வேணா நடக்கும் இவன் அதைப்பார்த்து டென்சன் ஆவான் ! அப்புறம் என்னை கேவலமா திட்டுவான் ! ஒத் துக்குறேன் ஒருசில இடத்துல நான் உணர்ச்சிவசப்பட்டேன் ! ஆனா என்னால அவனை என்ன பண்ண முடியும் !! நான் இவனை காதலிக்கிறேன் இவனைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு உறுதியா இருக்கேன் ! ஆனா அவன் என்ன ஐடியால இருக்கான்னே தெரியல நான் எதுனா முடியாதுன்னு மறுத்து வீம்பு பண்ணா அவன் சும்மா விடுவானா ? என்னை மாட்டி விடுவான் !! அதுக்கு தீர்வு எங்க அப்பாகிட்ட மாமா நானே உங்க பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி முடிச்சிடுவான் ! இப்பதான் இவன் ப்ளஸ் டூ முடிச்சிருக்கான் இதுல இவன் படிச்சி முடிச்சி வேலைக்கு போயி அப்புறம் தான் என்னை கல்யாணம் பண்ணிக்க முடியும் ஆனா அவன் இந்த வருஷம் காலேஜ் முடிச்சிட்டான் சொந்தமா வயல் தோப்பு எல்லாம் இருக்கு அதுவே போதும் என்னை கல்யாணம் பண்ணிக்க அதுவும் நம்ம ஊருல பொண்ணு லவ் பண்ணிட்டா அவ்வளவு தான் !! உடனே சொந்தத்துல ஒருத்தன பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க !!


இப்ப என்ன ரேணு பண்ணனும்?


ஆமா வெங்கி நான் அவன் கூட தப்பு நடக்காம எவ்வளவோ முயற்சி பண்ணி இந்தளவுக்கு என்னை காப்பாத்தி வச்சிருக்கேன் ! ராவும் பகலும் எவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சிருப்பேன் ஆனா நீ அசால்ட்டா இங்க பப்ளிக்ல அதை சொல்லவே கூசுது .. படுத்துகிட்டே படிச்சிடுவன்னு சொன்ன இப்ப தியேட்டரில் என்ன பண்ணுவானோ ?


எதுக்கு நான் மட்டும் இருதலைக்கொல்லி எறும்பா மாட்டிக்கிட்டு தவிக்கணும் ? நீ அவனை எதுனா பண்ணு இல்லைன்னா அவன் எதுனா பண்ணட்டும்னு விடு ஒரு நாள் பொங்குவ ஒருநாள் இதெல்லாம் தப்பில்லைனு சொல்லுவ எதுக்கு இதெல்லாம் !!!


சரி ரேணு நான் அவனை கண்டிப்பா எதுனா பண்ணுறேன் !!


வெங்கி இப்ப நீ அப்படி சொல்லுற ஆனா அடிக்கடி கோவப்படுற காதலுக்குள்ள சின்ன சின்ன சண்டை வரலாம் ஆனா இந்தமாதிரி சண்டை வந்தா காதலே முறிஞ்சிடும் !! அதனால ஒழுங்கா இப்பவே ஒரு முடிவெடு !!


என்ன நிஷா நான் அப்பப்ப உணர்ச்சிவசப்பட்டு எதுனா பேசிடுறேன் அது தப்பா ?


ஆமாடா நீ கோவப்பட வேண்டியது கதிர் மேல ஆனா ரேணு மேல கோவப்படுற அது சரியா ??


இல்லை நிஷா அது தெரியாம ...



என்னடா தெரியாம நான் ஆரம்பத்துல அவன் அத்துமீறி உங்க வீட்டுக்குள்ள வந்தப்பவே சொன்னேன் அவன் எது பண்ணாலும் பண்ணிருந்தாலும் நீ ரேணுவை ஏத்துக்கணும் அதுதான் உண்மையான லவ்வுன்னு சொன்னேன் இப்பவும் அதான் சொல்லுறேன் ஆனா நீ கோவப்படுற பாவம் அவ அழுது அழுது அவளுக்கென்ன தலையெழுத்தா உன்னை லவ் பண்ணிட்டு இப்படி அழுவனுமா ??



சாரி ரேணு நான் இனிமே அப்படி பண்ணவே மாட்டேன் !!



இல்லை வெங்கி இப்பவும் தியேட்டர்ல எதுனா நடந்தா நீ என்னைத்தான் திட்டுவ அவனை எதுவும் செய்யமாட்ட ...



சரி இப்ப என்ன செய்யலாம் சொல்லு ...



அதை நீ யோசி வெங்கி எனக்கு சரியா சொல்லத்தெரியல ...



ரேணு இப்படி செய்யலாம் அவன் சொன்னமாதிரி இன்னைக்கு எல்லாரும் தியேட்டருக்கு போலாம் அவன் என்ன செய்யிறான்னு பாப்போம் !! சார் எவ்வளவு தூரம் கோவப்படாம இருக்காருன்னு பார்ப்போம் !!! ஆனா உன் கண்டிஷன் சூப்பர் அவனை எதுனா பண்ணா தான் உன்னை எதுனா பண்ணலாம் அப்படித்தானே ??



ஆமா ! ஆனா தியேட்டருக்கு போகணுமா ?



போவோம் ரேணு அப்பத்தான் என்னைப்பத்தி நீ புரிஞ்சிக்குவ ...


ரேணு ஒரு தெளிவுக்கு வந்திருந்தாள் ! நடக்கப்போகும் விபரீதம் தெரியாமல் நானும் கிளம்பினேன் !



ஆனால் வெளியில் வந்து கிளம்பும்போது நிஷாவை விட்டுவிட்டு என்னிடம் தனியாக வந்து ... இல்லை வெங்கி இன்னைக்கு சினிமா வேண்டாம் !! அன்னைக்கு நீ தியேட்டர்ல இருந்தப்ப அவன் வேணும்னே சிகரெட் புடிச்சான் !! இன்னைக்கு நிஷா வேற பக்கத்தில் இருந்தா சொல்லவே வேண்டாம் ! அனாவசியமா நீ எதுக்கு அசிங்கப்படணும் நாம அப்படி ஒன்னும் அவனோட படம் பார்க்கணும்னு அவசியம் இல்லை !! நாம கிளம்பலாம் !!


எனக்கும் ரேணு சொன்னதே சரி எனப்பட்டது ! நிஷாவை வைத்துக்கொண்டு என்னை மேலும் மேலும் நானே அசிங்கப்படுத்திக்க வேண்டாம் ரேணு சொல்வது தான் சரி !! ஓகே ரேணு நீ சொல்றது தான் சரி சினிமா வேண்டாம் !!


நான் சொல்லி முடிக்க அங்கே அந்த பல்சர் வந்து நின்றது !!


என்ன ரேணு இன்னும் இங்கையே நிக்கிற ...


நிஷா அவனை ஆச்சர்யமாக பார்க்க ...


எனக்கு அப்பவே புரிஞ்சிடிச்சி எடுத்த முடிவு நல்லதுதான் ! ஸ்ட்ராங்கா நின்னுடுவோம்னு நினைக்க ரேணு ...


இல்லை வெங்கிக்கு வேலை இருக்காம் சினிமாவுக்கு வரலையாம் !!


ஓ !!


நீ ...


நான் நிஷா ...


இவ நிஷா என்னோட ஃபிரண்டு கதிர். ரெண்டு பேரும் சேர்ந்து தான் வந்தோம் !!


ஓ நீ தான் அந்த ஸ்கூல் ஃபஸ்ட்டா ? சூப்பர் சூப்பர்னு கையை நீட்ட அவளும் கையை பிடிக்க நான் அதை வேடிக்கை தான் பார்த்தேன் !!

ஓகே இப்ப என்ன பிளான் ?


அதான் வெங்கி வரல அதனால நாங்களும் அப்படியே கிளம்புறோம் !!


ஓகே நிஷா போகட்டும் நீ வா நாம போலாம் !


இல்லை வெங்கி வரல ...


அதான் சொல்லிட்டியே வா நாம கிளம்பலாம் !


இல்லை நானும் நிஷா கூட வீட்டுக்கு போறேன் !!



அவன் நிஷாவை திரும்பி பார்த்து என்ன நிஷா நீயும் சினிமாவுக்கு வரியா ?



நான் சற்றும் எதிர்பார்க்காத அதிர்ச்சியை நிஷா எனக்கு குடுத்தாள் !! ம்ம் வரேன் !!



அப்புறம் என்ன ? இப்படி நேரா போயி ரைட்ல திரும்பு தியேட்டர் தான் நானும் இவளும் முன்னாடி போறோம் நீ வந்துடு என்றபடி ரேணுவை பார்க்க ரேணு தலை குனிந்தபடி அவன் பைக்ல பின்னாடி ஏறிக்கொண்டு என்னை பரிதாபமாக பார்க்க பிளீஸ் வெங்கி என்னை இவன்கிட்டேருந்து எப்படியாவது காப்பாத்து என்பது போல இருந்தது !!



இப்படி ரெண்டு பேரையும் என் கண் முன்னாடியே சினிமாவுக்கு கூட்டி போறான் ! நான் ஒரு ஆளாவே அவனுக்கு தெரியல அவன் பாட்டுக்கு வந்தான் கைய குடுத்தான் வா போலாம்னு சொல்லிட்டு என் ஆள கூட்டிகிட்டு போயிட்டான் !!



இந்த மாபெரும் உலகில் நான் மட்டும் தனியாக நிற்பது போல பிரம்மையில் நிற்க
[+] 1 user Likes mallumallu's post
Like Reply


Messages In This Thread
RE: "" நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் "" - by mallumallu - 18-03-2021, 05:46 AM
RE: - by mayirus - 23-07-2021, 04:55 PM



Users browsing this thread: 9 Guest(s)