Adultery இரண்டாம் முடிச்சு
#56
கமல் வண்டியை ஸ்டார்ட் செய்து நின்று கொண்டிருந்தான்.

"போடி. தம்பி நிக்கிராறு பாரு"

தன் அம்மாவை முறைத்துப் பார்த்தாள்.

"இந்திரா போயிட்டு வா மா" விசாலம் சேர்ந்து சொல்ல இந்திரா வண்டியில் ஏறி அமர்ந்தாள். கமல் மீது உரசாதபடி விலகி உக்கார்ந்தாள். கமல் வண்டியைக் கிளப்பினான். இந்திராவின் அம்மா பார்வதியும் விசாலமும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

கமலும் இந்திராவும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அவள் வேலை செய்யும் இடம் வந்ததும் "இங்கதான்" னு ஒரு வார்த்தை மட்டும் சொல்ல, வண்டியை நிறுத்தி இறக்கி விட்டான். அவள் இறங்கிய வேகத்தில் விறுவிறுவென சென்றுவிட்டாள். கமல் அவள்ஆபீஸ் உள்ளே நுழையும் வரை பார்த்துவிட்டு வண்டியை கிளப்பினான்.

அன்று இரவு அனைவரும் உக்காந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இந்திரா வேலை முடிந்து வந்தாள்.

"இனிமேல் தம்பி கூடயே வண்டில போயிட்டு வந்துருடி. காலம் கெட்டு கெடக்கு."

இந்திரா மூக்கு விடைக்க முறைத்தபடி தன் அறைக்குள் சென்றாள்.

இந்திரா தனி அறையில் இருப்பதை மாற்ற அடுத்து என்ன செய்யலாம்னு யோசித்தாள் பார்வதி.

மறுநாள் வழக்கம் போல இந்திராவை கமலுடன் அனுப்பி வைத்துவிட்டு விசாலமும் பார்வதியும் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கினார்கள். இந்திரவின் உடைகள் அனைத்தையும் கமலின் ரூமுக்கு இடம்மாற்றினார்கள்.

"சம்மந்தி நாம இப்படி செய்றது இந்திராவுக்கு கோவத்தை அதிகமாக்காதா? "

"அதெல்லாம் பாத்தா வேலைக்கு ஆகாது சம்மந்தி. நமக்கு வேண்டியது நடக்கனும்னா இப்படி அதிரடி நடவடிக்கை எடுத்துதான் ஆகனும். "

"என்னமோ சொல்றீங்க. பாக்கலாம் "

"பஞ்சையும் நெருப்பையும் தள்ளி தள்ளி வச்சுட்டு எரிய மாட்டேங்குதேனு கவலைப்பட்டால் எப்படி. "

"எதோ பண்ணுங்க"
All is well
[+] 2 users Like kamappithan's post
Like Reply


Messages In This Thread
RE: இரண்டாம் முடிச்சு - by kamappithan - 22-01-2021, 08:50 AM



Users browsing this thread: 1 Guest(s)