அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
தொடர்ச்சி..

நான் வருவதற்காகவே எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருப்பாள் போலமதுநான் காரிலிருந்து இறங்கி வீட்டை நெருங்கியதும்என் கையை பிடித்துக் கொண்டாள்என் காதருகே குனிந்தவள்

"ஐ லவ் யூ!!" என்றாள்.

"Me too!!" அவள் காதுகளில் கிசுகிசுத்தேன்என் கையில் அடித்தாள்.

"இதெல்லாம் சுத்தமா நல்லா இல்ல!!" என்ற சத்தம் கேட்டுஇருவரும் சத்தம் வந்த திசையைப் பார்த்தோம்அரவிந்த் முறைத்துக் கொண்டிருந்தான்.

"இப்படி சிங்கிள் பசங்க முன்னாடிஉறசிக்கிட்டு இருக்கீங்க!! சிங்கிள்ஸ் பாவம்உங்களை சும்மா விடாது!!" சாபம் விட்டான்அரவிந்த்

அருகில் இருந்த அனைவரும் சிரித்து விட்டனர்.

"ஐய்யேபோடா!!" என்று மதுபடிகளில் அமர்ந்துஎன்னையும் அருகில் அமர வைத்துக்கொண்டாள்.

"ஒரு பொண்ணஉஷார் பண்ண முடியல!! இதுல முரட்டு சிங்கள்னு ஸீனாப் போடுற?" அரவிந்தைவாரினாள் நேத்ரா.

"நீயும் சிங்கிள் தானே?" என்ற அரவிந்த்தன் வாயில் கைவைத்து அமைதியாக இருக்கும்படி சைகை செய்தான்நேத்ராவிடம்

கடுப்பான நேத்ராஃபயர் கேம்க்குஎரிக்க போட்டிருந்த கட்டையில் ஒன்றை கையில் எடுக்கபிரதீப்பின் பின்னால் போய் ஒளிந்து கொண்ட அரவிந்த்

"நம்ம காலேஜ் சிங்கிள்ஸ் சங்க தலைவன்!!, முரட்டு சிங்கிளையும்மோசமான சிங்கிள்!!, என் தலைவன் பிரதீப்பைத்தாண்டிஎன்ன தொடு பார்க்கலாம்!!" கொக்கரித்தான்.

"யாருபிரதீப் முரட்டு சிங்கிளாஎன்னையவேமதுக்கிட்ட தூது அனுப்பினா நல்லவன்அவன் முரட்டு சிங்கிளா?" நான் பிரதீப்பின் காலை வாரமொத்த கும்பலும் அதிர்ந்தது
வெளிறிய முகத்துடன் என்னை அதிர்ச்சியாய் பார்த்த பிரதீப்அவன் சட்டையை பிடித்து இருந்த அரவிந்தை உதறித் தள்ளிவிட்டுநாங்கள் தங்கியிருந்த வீட்டின் எதிரில் இருந்த மலையில் ஏறத் தொடங்கினான்அவன் முகம் வெளிறியதைக் கண்டதும்தான்நான் என்றுமே சொல்லியிருக்கக் கூடாததைசொல்லிவிட்டேன் என்பதை உணர்ந்தேன்எழுந்து பிரதீப்பின் பின்னால் ஓடினேன்அவனோ என் சத்தம் கேட்டதும்நடையின் வேகத்தை அதிகப்படுத்தினான்ஒரே நாளில் இரண்டாவது முறையாக அந்த மலை முகட்டில் ஏறினேன்.

இருவரும் அமைதியாக அமர்ந்து இருந்தோம்.

"சாரி பிரதீப்!!" நான் தயங்கியபடியே கேட்டேன்.

"நான் நேத்துரவா லவ் பண்றேன்!!" பிரதீப்புது குண்டைத் தூக்கிப் போட்டான்

என்னது என்பதைப்போலஅதிர்ச்சியில் அவனைப் பார்த்தேன்.

"அத சொல்லிஉன்கிட்ட ஹெல்ப் கேட்கலாம்னுதான்தனியா கூட்டிட்டுப்போனஇந்த தறுதலை அரவிந்துகூடவே வந்து கெடுத்துட்டான்!! இப்பநீமொத்தமா எல்லாத்தையும் ஊத்தி மூடிட்ட!!" எங்கோ பார்த்த வெறிதான்.

சாதாரண நேரத்தில் நேத்தராவைலவ் பண்றேன்னுபிரதீப் சொல்லியிருந்தால்கண்டிப்பாக "உனக்கு வேற ஆளே கிடைக்கலையா ?" என்று கலாய்த்து இருப்பேன்ஆனால்இன்று என்னால்அவன்பட்ட அவமானத்தை சரிகட்ட வேண்டும் என்று மட்டும்தான் யோசித்தேன்பலிகொடுத்தேன்பிரதீப்பை

"உனக்கு "சோக பால்னுஒரு ஐடியா சொல்றேன் கேக்குறியா?" என்னை விட நான்கு வயது மூத்தவனுக்கு, "லவ் குருஆனேன்

நான் வெறுத்த அனிஷூம்அவனது சோகபால் ஐடியாவும்எனக்கு இப்படி ஒரு இக்கட்டான நிலையில் உதவும் என்று எப்போதும் நினைத்ததிலைஅது வேலைக்காகும் என்ற நம்பிக்கை இல்லாவிட்டாலும்என் காதல் அனுபவத்தையும் கொண்டுதற்சமயம் பிரதீப்பை சமாளிக்கஅவன் லவ்வுக்குஒரு திட்டம் போட்டு கொடுத்தேன்என்னை லவ் குருவாக ஏற்றுக்கொண்டஅவனும் பூம் பூம் மாடு போல் தலையசைத்தான்பின் வெற்றி நமதே என்று சமாதானாமாகிஇருவரும்அந்த மலையிலிருந்து கீழே இறங்கினோம்நாங்கள் தங்கியிருந்த வீட்டை நெருங்கும் போது

"இப்ப இருந்தே சோகமா இருக்கிறது மாதிரிநடிக்க ஆரம்பி!!" பிரதீப்பின் காதலுக்கான முதல் விதை விதைத்தேன்.

பிரதீப்பும்நான் சொன்னது போல முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு நெருப்பைச் சுற்றி இருந்த கூட்டத்தின் ஊடேஅமர்ந்து கொண்டான்நான் மதுவின் அருகே சென்று அமரஅவள் பட்டனஎழுந்தாள்.

"சிங்கிள்ஸ் சாபம் பலிச்சிருச்சுபாத்தியா!!" நேரம்காலம் தெரியாமல்காமெடி பண்ணினான்அரவிந்த்

அவனை முறைத்த மதுஎன் அருகிலேயேஎன்னை ஒட்டி அமர்ந்துகொண்டுஎன் மீது சாய்ந்து கொண்டாள்.

பிரிந்த காதலஎப்படி ஒரே செகண்டில் சேர்த்து வச்சேன் பாத்தியா?" நல்ல பார்மில் இருந்தான் அரவிந்தன்

அவனின் கூற்றில் மொத்த கும்பலும் சிரித்ததுபிரதீப்பின் காதல் தோல்வியை காரணம் காட்டியேஅரவிந்த் குடிப்பதற்கு அனைவரிடமும் ஒப்புதல் வாங்கி கொண்டான்பெண்கள் கூட்டம் சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்லநாங்கள்எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளில் ஒன்றில் சென்றுகுடிக்க ஆரம்பித்தோம்நான் கையில் குடித்க்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்என் மனதோ பெரும் குழப்பத்திலும்பயத்திலும் ஆழ்ந்திருந்ததுபொதுவாக மது இப்படி அமைதியாக இருக்கமாட்டாளேஅதுவும் இன்று தான் நடந்து கொண்டதற்கு ஒரு நாலைந்து அடியாவது அடித்திருப்பாள்குறைந்தபட்சம் என்னிடம் கோபமாவது காட்டியிருப்பாள்ஆனால்இன்று மாலை முழுவதும்என்னை அவள் முறைக்கக்கூட இல்லைநிமிர்ந்து பார்க்கவில்லைஎன்பதுதான் உண்மைஅதுதான் என் மனதில் எழுந்த பயத்துக்கு காரணம்அரை மணி நேரம் கழித்துதிறந்திருந்த கதவு தட்டப்பட்டதுதிரும்பிப் பார்த்தால்மதுஎன் கையில் இருந்த கிளாசை பார்த்துக் கொண்டிருந்தாள்.

"அவன் குடிக்கல பானுவெறும் கோக் தான்!!" என்றான் பிரதீப்.

"ஆமா!! பால் கிடைக்கல!! அதனாலதான்கோக் கொடுத்தோம்!!" என்றான் அரவிந்த்

அனைவரும் அவனை முறைக்கமது அமைதியாக இருந்தாள்மதுவின் அமைதிஎன் மனதில் இருந்த கீலியைமேலும் அதிகப்படுத்தியதுபொதுவாக என்னையாரும் மட்டம் தட்டிப் பேசினால்அவர்களை கிழித்து தொங்கவிட்டு விடுவாள்.

"வா!!" என்றாள்என்னை பார்த்துஎழுந்தேன்.

"உன்கார் சாவிய எடுத்துட்டு வா!!" 

"பால் வாங்க போறியா பானு!!" அரை போதையில்அரவிந்த்.

"டேய்!! உண்ண சாவடிக்கப் போறேன்!!" பிரதீப்அரவிந்தின் முதுகில் இரண்டு அடி போட்டான்.

எதையும் கண்டு கொள்ளாமல்நான் மதுவின் பின்னால் சென்றேன்காரின் அருகில் சென்றதும்என்னிடம் கை நீட்டினாள்நீட்டிய கையில்காரின் சாவியை வைத்தேன்காரை எடுத்தவள்அந்த எஸ்டேட்டின் கரடுமுரடான சாலைகளில்வண்டியை ஓட்டினாள்என்னஏதுஎன்று கேட்கும் தைரியம் இல்லாமல்எல்லாவற்றுக்கும் தயாராக இருந்தேன் நான்பதினைந்து நிமிடம் கழித்துமூன்றாவது முறையாகஅந்த வ்யூ பாயிண்ட்டில் இருந்தோம்நானும் மதுவும்ஒரே நாளில்மூன்றாவது முறையாகஎன்ன இந்த முறைகொஞ்சம் சொகுசாக காரில்இறங்கிபின் சீட்டில் போய் அமர்ந்து கொண்டாள்அவளைநான்பின் தொடர்ந்தேன்அவளை நெருக்கி அமர்ந்துதயங்கி தயங்கிஅவள் தோள் மீது கை போட்டேன்.

கோபப்படுவாள் என்று நான் நினைத்ததற்கு மாறாகஎன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

"சாரி பாப்பா!!" நெடுநேர அமைதியை கலைத்தேன்.

அவள் மொபைலை நோண்டியவள்என்னிடம் நீட்டினாள்வாங்கிப் பார்த்த எனக்குஎன்ன சொல்வதென்று தெரியவில்லைமாலையும்கழுத்துமாகநானும் மதுவும்எனது பதினெட்டாவது பிறந்த அன்றுநானும்மதுவும்பழனிமலையில் எடுத்துக் கொண்டதுகணவன்மனைவிபோல் இருந்தோம்இந்த செல்பியை எடுத்தது எனக்கு ஞாபகத்தில் இருந்ததுஆனால் இதை இப்போதுதான்முதல் முறையாக பார்க்கிறேன்கணவன்மனைவி போலநானும்மதுவும்இருந்த அந்தப் படத்தை பார்க்கப் பார்க்கஎனது கண்கள் லேசாக கலங்கியதுதிரும்பிஅவள் நெற்றியில் முத்தமிட்டேன்இரு கண்களில்நான் முத்தமிடஇமைகளை மூடிக் கொண்டாள்என் முத்த பயணத்தைஅவள் உதடுகளில் தொடரதிருப்பி என்னை முத்தமிட்டவாறேஎன் மடியில் இருபக்கமும் கால்போட்டுஎன் மீது அமர்ந்தாள்நீண்ட நெடிய முத்தம்உதடுகள் மட்டும் உரசிக் கொள்ளஎங்கள் நாவுகள் தீண்டவில்லைஎச்சில் இடம் மாறவில்லைகாமத்தையும்காதலையும் தாண்டி வேறு ஏதோ ஒன்றைஇருவரும் பரிமாறிக் கொண்டிருந்தோம்என் வலதுபுற தோளில்தன் தாடையை வைத்துசிறு குழந்தையென படுத்திருந்தாள்எங்கள் உதடுகள் தான் பிரிந்து இருந்தனஆனால்அந்த முத்தத்தின்பரிமாற்றம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.

"நான்உன்னை புருஷனை நினைச்சு!! அதஉன் கிட்ட சொல்ல முடியாமல் உருகிதவிச்சுகிட்டு இருந்தப்பா!! நீஎனக்கு மாப்பிள்ளை பார்த்துகிட்டு இருந்திருக்க!! இல்ல!!" என்னை இறுக்கி அனைத்து கொண்டாள்அவளை இறுக்கி அணைத்துக்கொண்டுநான் அழ ஆரம்பித்தேன்ஏனோஎனக்கு சாரி கூட சொல்லத் தோன்றவில்லைஎன் உயிர் எண்ணை பிரியும் வரை இந்த அழுகை நிற்கக் கூடாது என்றுதான் தோன்றியது.

"நான்உன்ன ரொம்ப கஷ்டப்படுத்துறனாபாப்பா!!" என்றாள்திடீரென்று.

என்னிடமிருந்து அவளை விலக்கிஅவள் முகம் பார்க்ககீழ் உதடுகளை பற்களால் கடித்தவாறுஅழுகையை அடக்க முயன்று கொண்டிருந்தாள்.

"எதுக்கு பாப்பா!! இப்படி எல்லாம் பேசுற!!" என்ற என்னைஇழுத்து மார்போடு அணைத்துக் கொண்டாள்.

"அண்ணைக்கு பிரதீப் எங்கிட்ட ஹெல்ப் கேட்டப்ப எவ்வளவு பயந்தேன் தெரியுமாஅன்னைக்கு நைட் தான்நீ என் கிட்ட லவ் சொன்ன!! எப்படியும் உனக்கு கல்யாணம் பண்ணி வப்பாங்க!! அதுக்கு நான் ஹெல்ப் பண்ணா!! கடைசிவரஐஉன் கூடவே இருக்கலாம்னு மட்டும்தான் யோசிச்சேன்!! அதனாலதான்....." என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதேஎன் உதடுகளில் கைவைத்து என்னை பேச வேண்டாம் என்றாள்.

பின் எழுந்துமுதலில் அமர்ந்து இருந்த இடத்திலேயே அமர்ந்து கொண்டாள்என்னை இழுத்து அவள் மடியில் போட்டாள்தயங்கியேஅவள் முகம் பார்த்தேன்கண்களில் கண்ணீருடன்ஒரு சின்ன புன்னகை அவள் முகமெங்கும்.

"என்ன இன்னொருத்தனுக்கு விட்டு கொடுத்திருவியாம்ம்?" அவள் கண்களில் இருந்த கண்ணீர்என் முகத்தில் விழுந்தது

அவள் வயிற்றில் முகம் புதைத்துக்கொண்டுமாட்டேன் என்று சொல்லி வெடித்து அழுதேன்அவள் மடியில்என்னை இறுக்கிக் கொண்டுஎன் தலை எங்கும் முத்தமிட்டாள்.
பின் சீட்டைமொத்தமாக சரித்துஅதை படுக்கையாக்கி இருந்தோம்அவள் கழுத்துக் கதுப்பில் நான் முகம் புதைத்து இருக்கஎன் தலைமுடிகளைமமது விரலால் வாரிக்கொண்டு இருந்தாள்என்னைப் பார்த்துஅவள் திரும்பிப் படுக்கநானும் அவளது கையில் தலைவைத்துஅவளை நோக்கி திரும்பிப் படுத்தேன்என் மீது கால் போட்டு கொண்டவள்,

"நான் லூசா?" என் கண்ணத்தில் அடித்தாள்.

"இது எப்பவுமே லாஸ்ட்டா தானே வரும்நாம் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை?" பதில் தெரிந்தும் கேள்வி கேட்டேன் நான்.

ஆடைகளைஉடல்களை தாண்டிய பரிமாற்றத்தைஇருவரும் உடைக்க விரும்பவில்லை.

"நான் லூசா?" மீண்டும் என் கண்ணத்தில் அடித்தாள்.

கண்களையும் மூடிக்கொண்டுபுன்முறுவல் பூத்தேன்.

"நான் லூசாமீண்டும் கேட்டவள்கன்னத்தில் அடித்தாள்.

நான் ஆம் என்பது போல் தலை அசைத்தேன்.

"கரெக்ட்உன் மேல!!" என் நெஞ்சில் ஒரு விரலை வைத்து குத்திவள்என் உதடுகளில்தன் உதடுகளை ஒற்றியெடுத்தாள்.

"உன்ன டார்ச்சர் பண்றேனா?"

"டப்என்று என் கண்ணத்தில் அடித்தாள்.

"லவ் டார்ச்சர் பண்ற!!”

கண்களைத் திறந்து அவளைப் பார்த்துச் சொன்னேன்என் இரு கண்களிலும் முத்தம் இட்டாள்.

"எனக்கு மாப்பிள்ளை பார்ப்பியா?"

மீண்டும் கன்னத்தில் அடித்தாள்.

"பாத்தாச்சு!!, அவனும் பக்கத்துலதான் படுத்திருக்கான்!!" 

நெற்றியல் முத்தமிட்டாள்பின் ஒரு கையால் என் இரு கன்னங்களையும் சேர்த்து பிடித்தவள்

"இது நான் பார்த்த மாப்பிள்ளை!!"என்றவள்என் உதடுகளில் முத்தமிட்டாள்
அவள் உதடுகளை கவ்வி அவள் மீது படர்ந்தேன்உதடுகள் கடிபடநாவுகள் தீண்டிக்கொள்ளஎச்சில் இடம் மாறஆவேசமாக முத்தமிட்டு கொண்டோம்முத்தத்தின் ஆவேசம் தீரஅவள் மார்பில் முகம் புதைத்துஅணைத்தவாறு இளைப்பாறிக் கொண்டு இருந்தேன்.

"ரெண்டு வருஷத்துலடேவிஸ் கப் ஆடிருவியா?" என் முதுகைத் தடவிக் கொண்டே கேட்டாள்.

"ATP tournaments ஆடிருவேன்பார்!!" என் உச்சந்தலையில் முத்தமிட்டாள்.

"பாப்பா!!" கொஞ்சினாள்நான் அவள் கழுத்தில் முகம் புதைத்துகட்டிக்கொண்டேன்.

"பாப்பா!!"

"ம்ம்!!"

"நீநான்நம்மளோட பாப்பா!! எல்லாருமே அதுக்கப்புறம் தான்ஓகேவா!!" என்றாள்

"இல்லநீநான்ஒரு மூணு பாப்பா!! ஓகேவா!!" என்றேன்

"மூணு போதுமா?" குனிந்துஎன் தலையில் முத்தமிட்டாள்.

"எனக்கு போதும்!!" அவள் கழுத்தில் இதழ் பதித்தேன்.

"பாப்பா!!"

"ம்ம்!!"

"ஐ லவ் யூ!!"

"Me too!!"

"ஐ லவ் யூ!! பாப்பா!!"

பதில் சொன்னேன்அவள் கழுத்தில்என் எச்சிலால்என் தலையிலே நான்கு கொட்டு கொட்டியவள்என்னை இருக்கிக்கொண்டாள்இருவரும் கண்ணயர்ந்தோம்.

***********

பளீரென்று வெளிச்சம் கண்களைத் தீண்ட, எழுந்து அமர்ந்தான் மணி, நான்கு வருட தூக்கத்தில் இருந்து. என்னெதிரே, இருள் கவ்வியிருந்த பள்ளத்தாக்கை, விடியலின் வெளிச்சம் அணைத்துக்கொண்டது. சில நொடிகளில், மாயா அவன் கண்களில் பட்டாள். நான்கு வருடங்களில், இரண்டாவது முறையாக அவளை பார்த்து சிரித்தான் மணி.
[+] 7 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 08-01-2021, 05:43 PM



Users browsing this thread: 4 Guest(s)