08-01-2021, 05:43 PM
(This post was last modified: 08-01-2021, 10:00 PM by Doyencamphor. Edited 1 time in total. Edited 1 time in total.)
தொடர்ச்சி..
நான் வருவதற்காகவே எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருப்பாள் போல, மது, நான் காரிலிருந்து இறங்கி வீட்டை நெருங்கியதும், என் கையை பிடித்துக் கொண்டாள். என் காதருகே குனிந்தவள்
"ஐ லவ் யூ!!" என்றாள்.
"Me too!!" அவள் காதுகளில் கிசுகிசுத்தேன். என் கையில் அடித்தாள்.
"இதெல்லாம் சுத்தமா நல்லா இல்ல!!" என்ற சத்தம் கேட்டு, இருவரும் சத்தம் வந்த திசையைப் பார்த்தோம். அரவிந்த் முறைத்துக் கொண்டிருந்தான்.
"இப்படி சிங்கிள் பசங்க முன்னாடி, உறசிக்கிட்டு இருக்கீங்க!! சிங்கிள்ஸ் பாவம், உங்களை சும்மா விடாது!!" சாபம் விட்டான், அரவிந்த்.
அருகில் இருந்த அனைவரும் சிரித்து விட்டனர்.
"ஐய்யே, போடா!!" என்று மது, படிகளில் அமர்ந்து, என்னையும் அருகில் அமர வைத்துக்கொண்டாள்.
"ஒரு பொண்ண, உஷார் பண்ண முடியல!! இதுல முரட்டு சிங்கள்னு ஸீனாப் போடுற?" அரவிந்தை, வாரினாள் நேத்ரா.
"நீயும் சிங்கிள் தானே?" என்ற அரவிந்த், தன் வாயில் கைவைத்து அமைதியாக இருக்கும்படி சைகை செய்தான், நேத்ராவிடம்.
கடுப்பான நேத்ரா, ஃபயர் கேம்க்கு, எரிக்க போட்டிருந்த கட்டையில் ஒன்றை கையில் எடுக்க, பிரதீப்பின் பின்னால் போய் ஒளிந்து கொண்ட அரவிந்த்
"நம்ம காலேஜ் சிங்கிள்ஸ் சங்க தலைவன்!!, முரட்டு சிங்கிளையும், மோசமான சிங்கிள்!!, என் தலைவன் பிரதீப்பைத்தாண்டி, என்ன தொடு பார்க்கலாம்!!" கொக்கரித்தான்.
"யாரு, பிரதீப் முரட்டு சிங்கிளா? என்னையவே, மதுக்கிட்ட தூது அனுப்பினா நல்லவன். அவன் முரட்டு சிங்கிளா?" நான் பிரதீப்பின் காலை வார, மொத்த கும்பலும் அதிர்ந்தது.
வெளிறிய முகத்துடன் என்னை அதிர்ச்சியாய் பார்த்த பிரதீப், அவன் சட்டையை பிடித்து இருந்த அரவிந்தை உதறித் தள்ளிவிட்டு, நாங்கள் தங்கியிருந்த வீட்டின் எதிரில் இருந்த மலையில் ஏறத் தொடங்கினான். அவன் முகம் வெளிறியதைக் கண்டதும்தான், நான் என்றுமே சொல்லியிருக்கக் கூடாததை, சொல்லிவிட்டேன் என்பதை உணர்ந்தேன். எழுந்து பிரதீப்பின் பின்னால் ஓடினேன், அவனோ என் சத்தம் கேட்டதும், நடையின் வேகத்தை அதிகப்படுத்தினான். ஒரே நாளில் இரண்டாவது முறையாக அந்த மலை முகட்டில் ஏறினேன்.
இருவரும் அமைதியாக அமர்ந்து இருந்தோம்.
"சாரி பிரதீப்!!" நான் தயங்கியபடியே கேட்டேன்.
"நான் நேத்துரவா லவ் பண்றேன்!!" பிரதீப், புது குண்டைத் தூக்கிப் போட்டான்.
என்னது என்பதைப்போல, அதிர்ச்சியில் அவனைப் பார்த்தேன்.
"அத சொல்லி, உன்கிட்ட ஹெல்ப் கேட்கலாம்னுதான், தனியா கூட்டிட்டுப்போன, இந்த தறுதலை அரவிந்து, கூடவே வந்து கெடுத்துட்டான்!! இப்ப, நீ, மொத்தமா எல்லாத்தையும் ஊத்தி மூடிட்ட!!" எங்கோ பார்த்த வெறிதான்.
சாதாரண நேரத்தில் நேத்தராவை, லவ் பண்றேன்னு, பிரதீப் சொல்லியிருந்தால், கண்டிப்பாக "உனக்கு வேற ஆளே கிடைக்கலையா ?" என்று கலாய்த்து இருப்பேன். ஆனால், இன்று என்னால், அவன்பட்ட அவமானத்தை சரிகட்ட வேண்டும் என்று மட்டும்தான் யோசித்தேன். பலிகொடுத்தேன், பிரதீப்பை.
"உனக்கு "சோக பால்னு" ஒரு ஐடியா சொல்றேன் கேக்குறியா?" என்னை விட நான்கு வயது மூத்தவனுக்கு, "லவ் குரு" ஆனேன்.
நான் வெறுத்த அனிஷூம், அவனது சோகபால் ஐடியாவும், எனக்கு இப்படி ஒரு இக்கட்டான நிலையில் உதவும் என்று எப்போதும் நினைத்ததிலை. அது வேலைக்காகும் என்ற நம்பிக்கை இல்லாவிட்டாலும், என் காதல் அனுபவத்தையும் கொண்டு, தற்சமயம் பிரதீப்பை சமாளிக்க, அவன் லவ்வுக்கு, ஒரு திட்டம் போட்டு கொடுத்தேன். என்னை லவ் குருவாக ஏற்றுக்கொண்ட, அவனும் பூம் பூம் மாடு போல் தலையசைத்தான். பின் வெற்றி நமதே என்று சமாதானாமாகி, இருவரும், அந்த மலையிலிருந்து கீழே இறங்கினோம். நாங்கள் தங்கியிருந்த வீட்டை நெருங்கும் போது
"இப்ப இருந்தே சோகமா இருக்கிறது மாதிரி, நடிக்க ஆரம்பி!!" பிரதீப்பின் காதலுக்கான முதல் விதை விதைத்தேன்.
பிரதீப்பும், நான் சொன்னது போல முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு நெருப்பைச் சுற்றி இருந்த கூட்டத்தின் ஊடே, அமர்ந்து கொண்டான். நான் மதுவின் அருகே சென்று அமர, அவள் பட்டன, எழுந்தாள்.
"சிங்கிள்ஸ் சாபம் பலிச்சிருச்சு, பாத்தியா!!" நேரம், காலம் தெரியாமல், காமெடி பண்ணினான், அரவிந்த்.
அவனை முறைத்த மது, என் அருகிலேயே, என்னை ஒட்டி அமர்ந்துகொண்டு, என் மீது சாய்ந்து கொண்டாள்.
" பிரிந்த காதல, எப்படி ஒரே செகண்டில் சேர்த்து வச்சேன் பாத்தியா?" நல்ல பார்மில் இருந்தான் அரவிந்தன்.
அவனின் கூற்றில் மொத்த கும்பலும் சிரித்தது. பிரதீப்பின் காதல் தோல்வியை காரணம் காட்டியே, அரவிந்த் குடிப்பதற்கு அனைவரிடமும் ஒப்புதல் வாங்கி கொண்டான். பெண்கள் கூட்டம் சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்ல, நாங்கள், எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளில் ஒன்றில் சென்று, குடிக்க ஆரம்பித்தோம். நான் கையில் குடித்க்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். என் மனதோ பெரும் குழப்பத்திலும், பயத்திலும் ஆழ்ந்திருந்தது. பொதுவாக மது இப்படி அமைதியாக இருக்கமாட்டாளே? அதுவும் இன்று தான் நடந்து கொண்டதற்கு ஒரு நாலைந்து அடியாவது அடித்திருப்பாள். குறைந்தபட்சம் என்னிடம் கோபமாவது காட்டியிருப்பாள். ஆனால், இன்று மாலை முழுவதும், என்னை அவள் முறைக்கக்கூட இல்லை, நிமிர்ந்து பார்க்கவில்லை, என்பதுதான் உண்மை. அதுதான் என் மனதில் எழுந்த பயத்துக்கு காரணம். அரை மணி நேரம் கழித்து, திறந்திருந்த கதவு தட்டப்பட்டது. திரும்பிப் பார்த்தால், மது, என் கையில் இருந்த கிளாசை பார்த்துக் கொண்டிருந்தாள்.
"அவன் குடிக்கல பானு, வெறும் கோக் தான்!!" என்றான் பிரதீப்.
"ஆமா!! பால் கிடைக்கல!! அதனாலதான், கோக் கொடுத்தோம்!!" என்றான் அரவிந்த்,
அனைவரும் அவனை முறைக்க, மது அமைதியாக இருந்தாள். மதுவின் அமைதி, என் மனதில் இருந்த கீலியை, மேலும் அதிகப்படுத்தியது. பொதுவாக என்னை, யாரும் மட்டம் தட்டிப் பேசினால், அவர்களை கிழித்து தொங்கவிட்டு விடுவாள்.
"வா!!" என்றாள், என்னை பார்த்து. எழுந்தேன்.
"உன், கார் சாவிய எடுத்துட்டு வா!!"
"பால் வாங்க போறியா பானு!!" அரை போதையில், அரவிந்த்.
"டேய்!! உண்ண சாவடிக்கப் போறேன்!!" பிரதீப், அரவிந்தின் முதுகில் இரண்டு அடி போட்டான்.
எதையும் கண்டு கொள்ளாமல், நான் மதுவின் பின்னால் சென்றேன். காரின் அருகில் சென்றதும், என்னிடம் கை நீட்டினாள். நீட்டிய கையில், காரின் சாவியை வைத்தேன். காரை எடுத்தவள், அந்த எஸ்டேட்டின் கரடுமுரடான சாலைகளில், வண்டியை ஓட்டினாள். என்ன? ஏது? என்று கேட்கும் தைரியம் இல்லாமல், எல்லாவற்றுக்கும் தயாராக இருந்தேன் நான். பதினைந்து நிமிடம் கழித்து, மூன்றாவது முறையாக, அந்த வ்யூ பாயிண்ட்டில் இருந்தோம், நானும் மதுவும். ஒரே நாளில், மூன்றாவது முறையாக, என்ன இந்த முறை, கொஞ்சம் சொகுசாக காரில். இறங்கி, பின் சீட்டில் போய் அமர்ந்து கொண்டாள். அவளை, நான், பின் தொடர்ந்தேன், அவளை நெருக்கி அமர்ந்து, தயங்கி தயங்கி, அவள் தோள் மீது கை போட்டேன்.
கோபப்படுவாள் என்று நான் நினைத்ததற்கு மாறாக, என் தோளில் சாய்ந்து கொண்டாள்.
"சாரி பாப்பா!!" நெடுநேர அமைதியை கலைத்தேன்.
அவள் மொபைலை நோண்டியவள், என்னிடம் நீட்டினாள், வாங்கிப் பார்த்த எனக்கு, என்ன சொல்வதென்று தெரியவில்லை. மாலையும், கழுத்துமாக, நானும் மதுவும். எனது பதினெட்டாவது பிறந்த அன்று, நானும், மதுவும், பழனிமலையில் எடுத்துக் கொண்டது. கணவன், மனைவி, போல் இருந்தோம். இந்த செல்பியை எடுத்தது எனக்கு ஞாபகத்தில் இருந்தது, ஆனால் இதை இப்போதுதான், முதல் முறையாக பார்க்கிறேன். கணவன், மனைவி போல, நானும், மதுவும், இருந்த அந்தப் படத்தை பார்க்கப் பார்க்க, எனது கண்கள் லேசாக கலங்கியது. திரும்பி, அவள் நெற்றியில் முத்தமிட்டேன். இரு கண்களில், நான் முத்தமிட, இமைகளை மூடிக் கொண்டாள். என் முத்த பயணத்தை, அவள் உதடுகளில் தொடர, திருப்பி என்னை முத்தமிட்டவாறே, என் மடியில் இருபக்கமும் கால்போட்டு, என் மீது அமர்ந்தாள். நீண்ட நெடிய முத்தம், உதடுகள் மட்டும் உரசிக் கொள்ள, எங்கள் நாவுகள் தீண்டவில்லை, எச்சில் இடம் மாறவில்லை, காமத்தையும், காதலையும் தாண்டி வேறு ஏதோ ஒன்றை, இருவரும் பரிமாறிக் கொண்டிருந்தோம். என் வலதுபுற தோளில், தன் தாடையை வைத்து, சிறு குழந்தையென படுத்திருந்தாள். எங்கள் உதடுகள் தான் பிரிந்து இருந்தன, ஆனால், அந்த முத்தத்தின், பரிமாற்றம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.
"நான், உன்னை புருஷனை நினைச்சு!! அத, உன் கிட்ட சொல்ல முடியாமல் உருகி, தவிச்சுகிட்டு இருந்தப்பா!! நீ, எனக்கு மாப்பிள்ளை பார்த்துகிட்டு இருந்திருக்க!! இல்ல!!" என்னை இறுக்கி அனைத்து கொண்டாள். அவளை இறுக்கி அணைத்துக்கொண்டு, நான் அழ ஆரம்பித்தேன். ஏனோ, எனக்கு சாரி கூட சொல்லத் தோன்றவில்லை, என் உயிர் எண்ணை பிரியும் வரை இந்த அழுகை நிற்கக் கூடாது என்றுதான் தோன்றியது.
"நான், உன்ன ரொம்ப கஷ்டப்படுத்துறனா? பாப்பா!!" என்றாள், திடீரென்று.
என்னிடமிருந்து அவளை விலக்கி, அவள் முகம் பார்க்க, கீழ் உதடுகளை பற்களால் கடித்தவாறு, அழுகையை அடக்க முயன்று கொண்டிருந்தாள்.
"எதுக்கு பாப்பா!! இப்படி எல்லாம் பேசுற!!" என்ற என்னை, இழுத்து மார்போடு அணைத்துக் கொண்டாள்.
"அண்ணைக்கு பிரதீப் எங்கிட்ட ஹெல்ப் கேட்டப்ப எவ்வளவு பயந்தேன் தெரியுமா? அன்னைக்கு நைட் தான், நீ என் கிட்ட லவ் சொன்ன!! எப்படியும் உனக்கு கல்யாணம் பண்ணி வப்பாங்க!! அதுக்கு நான் ஹெல்ப் பண்ணா!! கடைசிவரஐ, உன் கூடவே இருக்கலாம்னு மட்டும்தான் யோசிச்சேன்!! அதனாலதான்....." என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, என் உதடுகளில் கைவைத்து என்னை பேச வேண்டாம் என்றாள்.
பின் எழுந்து, முதலில் அமர்ந்து இருந்த இடத்திலேயே அமர்ந்து கொண்டாள். என்னை இழுத்து அவள் மடியில் போட்டாள். தயங்கியே, அவள் முகம் பார்த்தேன், கண்களில் கண்ணீருடன், ஒரு சின்ன புன்னகை அவள் முகமெங்கும்.
"என்ன இன்னொருத்தனுக்கு விட்டு கொடுத்திருவியா? ம்ம்?" அவள் கண்களில் இருந்த கண்ணீர், என் முகத்தில் விழுந்தது.
அவள் வயிற்றில் முகம் புதைத்துக்கொண்டு, மாட்டேன் என்று சொல்லி வெடித்து அழுதேன். அவள் மடியில், என்னை இறுக்கிக் கொண்டு, என் தலை எங்கும் முத்தமிட்டாள்.
பின் சீட்டை, மொத்தமாக சரித்து, அதை படுக்கையாக்கி இருந்தோம். அவள் கழுத்துக் கதுப்பில் நான் முகம் புதைத்து இருக்க, என் தலைமுடிகளைம, மது விரலால் வாரிக்கொண்டு இருந்தாள். என்னைப் பார்த்து, அவள் திரும்பிப் படுக்க, நானும் அவளது கையில் தலைவைத்து, அவளை நோக்கி திரும்பிப் படுத்தேன். என் மீது கால் போட்டு கொண்டவள்,
"நான் லூசா?" என் கண்ணத்தில் அடித்தாள்.
"இது எப்பவுமே லாஸ்ட்டா தானே வரும்? நாம் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை?" பதில் தெரிந்தும் கேள்வி கேட்டேன் நான்.
ஆடைகளை, உடல்களை தாண்டிய பரிமாற்றத்தை, இருவரும் உடைக்க விரும்பவில்லை.
"நான் லூசா?" மீண்டும் என் கண்ணத்தில் அடித்தாள்.
கண்களையும் மூடிக்கொண்டு, புன்முறுவல் பூத்தேன்.
"நான் லூசா? மீண்டும் கேட்டவள், கன்னத்தில் அடித்தாள்.
நான் ஆம் என்பது போல் தலை அசைத்தேன்.
"கரெக்ட், உன் மேல!!" என் நெஞ்சில் ஒரு விரலை வைத்து குத்திவள், என் உதடுகளில், தன் உதடுகளை ஒற்றியெடுத்தாள்.
"உன்ன டார்ச்சர் பண்றேனா?"
"டப்" என்று என் கண்ணத்தில் அடித்தாள்.
"லவ் டார்ச்சர் பண்ற!!”
கண்களைத் திறந்து அவளைப் பார்த்துச் சொன்னேன். என் இரு கண்களிலும் முத்தம் இட்டாள்.
"எனக்கு மாப்பிள்ளை பார்ப்பியா?"
மீண்டும் கன்னத்தில் அடித்தாள்.
"பாத்தாச்சு!!, அவனும் பக்கத்துலதான் படுத்திருக்கான்!!"
நெற்றியல் முத்தமிட்டாள். பின் ஒரு கையால் என் இரு கன்னங்களையும் சேர்த்து பிடித்தவள்
"இது நான் பார்த்த மாப்பிள்ளை!!"என்றவள், என் உதடுகளில் முத்தமிட்டாள்.
அவள் உதடுகளை கவ்வி அவள் மீது படர்ந்தேன். உதடுகள் கடிபட, நாவுகள் தீண்டிக்கொள்ள, எச்சில் இடம் மாற, ஆவேசமாக முத்தமிட்டு கொண்டோம். முத்தத்தின் ஆவேசம் தீர, அவள் மார்பில் முகம் புதைத்து, அணைத்தவாறு இளைப்பாறிக் கொண்டு இருந்தேன்.
"ரெண்டு வருஷத்துல, டேவிஸ் கப் ஆடிருவியா?" என் முதுகைத் தடவிக் கொண்டே கேட்டாள்.
"ATP tournaments ஆடிருவேன், பார்!!" என் உச்சந்தலையில் முத்தமிட்டாள்.
"பாப்பா!!" கொஞ்சினாள், நான் அவள் கழுத்தில் முகம் புதைத்து, கட்டிக்கொண்டேன்.
"பாப்பா!!"
"ம்ம்!!"
"நீ, நான், நம்மளோட பாப்பா!! எல்லாருமே அதுக்கப்புறம் தான், ஓகேவா!!" என்றாள்
"இல்ல, நீ, நான், ஒரு மூணு பாப்பா!! ஓகேவா!!" என்றேன்
"மூணு போதுமா?" குனிந்து, என் தலையில் முத்தமிட்டாள்.
"எனக்கு போதும்!!" அவள் கழுத்தில் இதழ் பதித்தேன்.
"பாப்பா!!"
"ம்ம்!!"
"ஐ லவ் யூ!!"
"Me too!!"
"ஐ லவ் யூ!! பாப்பா!!"
பதில் சொன்னேன், அவள் கழுத்தில், என் எச்சிலால். என் தலையிலே நான்கு கொட்டு கொட்டியவள், என்னை இருக்கிக்கொண்டாள். இருவரும் கண்ணயர்ந்தோம்.
***********
பளீரென்று வெளிச்சம் கண்களைத் தீண்ட, எழுந்து அமர்ந்தான் மணி, நான்கு வருட தூக்கத்தில் இருந்து. என்னெதிரே, இருள் கவ்வியிருந்த பள்ளத்தாக்கை, விடியலின் வெளிச்சம் அணைத்துக்கொண்டது. சில நொடிகளில், மாயா அவன் கண்களில் பட்டாள். நான்கு வருடங்களில், இரண்டாவது முறையாக அவளை பார்த்து சிரித்தான் மணி.
நான் வருவதற்காகவே எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருப்பாள் போல, மது, நான் காரிலிருந்து இறங்கி வீட்டை நெருங்கியதும், என் கையை பிடித்துக் கொண்டாள். என் காதருகே குனிந்தவள்
"ஐ லவ் யூ!!" என்றாள்.
"Me too!!" அவள் காதுகளில் கிசுகிசுத்தேன். என் கையில் அடித்தாள்.
"இதெல்லாம் சுத்தமா நல்லா இல்ல!!" என்ற சத்தம் கேட்டு, இருவரும் சத்தம் வந்த திசையைப் பார்த்தோம். அரவிந்த் முறைத்துக் கொண்டிருந்தான்.
"இப்படி சிங்கிள் பசங்க முன்னாடி, உறசிக்கிட்டு இருக்கீங்க!! சிங்கிள்ஸ் பாவம், உங்களை சும்மா விடாது!!" சாபம் விட்டான், அரவிந்த்.
அருகில் இருந்த அனைவரும் சிரித்து விட்டனர்.
"ஐய்யே, போடா!!" என்று மது, படிகளில் அமர்ந்து, என்னையும் அருகில் அமர வைத்துக்கொண்டாள்.
"ஒரு பொண்ண, உஷார் பண்ண முடியல!! இதுல முரட்டு சிங்கள்னு ஸீனாப் போடுற?" அரவிந்தை, வாரினாள் நேத்ரா.
"நீயும் சிங்கிள் தானே?" என்ற அரவிந்த், தன் வாயில் கைவைத்து அமைதியாக இருக்கும்படி சைகை செய்தான், நேத்ராவிடம்.
கடுப்பான நேத்ரா, ஃபயர் கேம்க்கு, எரிக்க போட்டிருந்த கட்டையில் ஒன்றை கையில் எடுக்க, பிரதீப்பின் பின்னால் போய் ஒளிந்து கொண்ட அரவிந்த்
"நம்ம காலேஜ் சிங்கிள்ஸ் சங்க தலைவன்!!, முரட்டு சிங்கிளையும், மோசமான சிங்கிள்!!, என் தலைவன் பிரதீப்பைத்தாண்டி, என்ன தொடு பார்க்கலாம்!!" கொக்கரித்தான்.
"யாரு, பிரதீப் முரட்டு சிங்கிளா? என்னையவே, மதுக்கிட்ட தூது அனுப்பினா நல்லவன். அவன் முரட்டு சிங்கிளா?" நான் பிரதீப்பின் காலை வார, மொத்த கும்பலும் அதிர்ந்தது.
வெளிறிய முகத்துடன் என்னை அதிர்ச்சியாய் பார்த்த பிரதீப், அவன் சட்டையை பிடித்து இருந்த அரவிந்தை உதறித் தள்ளிவிட்டு, நாங்கள் தங்கியிருந்த வீட்டின் எதிரில் இருந்த மலையில் ஏறத் தொடங்கினான். அவன் முகம் வெளிறியதைக் கண்டதும்தான், நான் என்றுமே சொல்லியிருக்கக் கூடாததை, சொல்லிவிட்டேன் என்பதை உணர்ந்தேன். எழுந்து பிரதீப்பின் பின்னால் ஓடினேன், அவனோ என் சத்தம் கேட்டதும், நடையின் வேகத்தை அதிகப்படுத்தினான். ஒரே நாளில் இரண்டாவது முறையாக அந்த மலை முகட்டில் ஏறினேன்.
இருவரும் அமைதியாக அமர்ந்து இருந்தோம்.
"சாரி பிரதீப்!!" நான் தயங்கியபடியே கேட்டேன்.
"நான் நேத்துரவா லவ் பண்றேன்!!" பிரதீப், புது குண்டைத் தூக்கிப் போட்டான்.
என்னது என்பதைப்போல, அதிர்ச்சியில் அவனைப் பார்த்தேன்.
"அத சொல்லி, உன்கிட்ட ஹெல்ப் கேட்கலாம்னுதான், தனியா கூட்டிட்டுப்போன, இந்த தறுதலை அரவிந்து, கூடவே வந்து கெடுத்துட்டான்!! இப்ப, நீ, மொத்தமா எல்லாத்தையும் ஊத்தி மூடிட்ட!!" எங்கோ பார்த்த வெறிதான்.
சாதாரண நேரத்தில் நேத்தராவை, லவ் பண்றேன்னு, பிரதீப் சொல்லியிருந்தால், கண்டிப்பாக "உனக்கு வேற ஆளே கிடைக்கலையா ?" என்று கலாய்த்து இருப்பேன். ஆனால், இன்று என்னால், அவன்பட்ட அவமானத்தை சரிகட்ட வேண்டும் என்று மட்டும்தான் யோசித்தேன். பலிகொடுத்தேன், பிரதீப்பை.
"உனக்கு "சோக பால்னு" ஒரு ஐடியா சொல்றேன் கேக்குறியா?" என்னை விட நான்கு வயது மூத்தவனுக்கு, "லவ் குரு" ஆனேன்.
நான் வெறுத்த அனிஷூம், அவனது சோகபால் ஐடியாவும், எனக்கு இப்படி ஒரு இக்கட்டான நிலையில் உதவும் என்று எப்போதும் நினைத்ததிலை. அது வேலைக்காகும் என்ற நம்பிக்கை இல்லாவிட்டாலும், என் காதல் அனுபவத்தையும் கொண்டு, தற்சமயம் பிரதீப்பை சமாளிக்க, அவன் லவ்வுக்கு, ஒரு திட்டம் போட்டு கொடுத்தேன். என்னை லவ் குருவாக ஏற்றுக்கொண்ட, அவனும் பூம் பூம் மாடு போல் தலையசைத்தான். பின் வெற்றி நமதே என்று சமாதானாமாகி, இருவரும், அந்த மலையிலிருந்து கீழே இறங்கினோம். நாங்கள் தங்கியிருந்த வீட்டை நெருங்கும் போது
"இப்ப இருந்தே சோகமா இருக்கிறது மாதிரி, நடிக்க ஆரம்பி!!" பிரதீப்பின் காதலுக்கான முதல் விதை விதைத்தேன்.
பிரதீப்பும், நான் சொன்னது போல முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு நெருப்பைச் சுற்றி இருந்த கூட்டத்தின் ஊடே, அமர்ந்து கொண்டான். நான் மதுவின் அருகே சென்று அமர, அவள் பட்டன, எழுந்தாள்.
"சிங்கிள்ஸ் சாபம் பலிச்சிருச்சு, பாத்தியா!!" நேரம், காலம் தெரியாமல், காமெடி பண்ணினான், அரவிந்த்.
அவனை முறைத்த மது, என் அருகிலேயே, என்னை ஒட்டி அமர்ந்துகொண்டு, என் மீது சாய்ந்து கொண்டாள்.
" பிரிந்த காதல, எப்படி ஒரே செகண்டில் சேர்த்து வச்சேன் பாத்தியா?" நல்ல பார்மில் இருந்தான் அரவிந்தன்.
அவனின் கூற்றில் மொத்த கும்பலும் சிரித்தது. பிரதீப்பின் காதல் தோல்வியை காரணம் காட்டியே, அரவிந்த் குடிப்பதற்கு அனைவரிடமும் ஒப்புதல் வாங்கி கொண்டான். பெண்கள் கூட்டம் சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்ல, நாங்கள், எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளில் ஒன்றில் சென்று, குடிக்க ஆரம்பித்தோம். நான் கையில் குடித்க்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். என் மனதோ பெரும் குழப்பத்திலும், பயத்திலும் ஆழ்ந்திருந்தது. பொதுவாக மது இப்படி அமைதியாக இருக்கமாட்டாளே? அதுவும் இன்று தான் நடந்து கொண்டதற்கு ஒரு நாலைந்து அடியாவது அடித்திருப்பாள். குறைந்தபட்சம் என்னிடம் கோபமாவது காட்டியிருப்பாள். ஆனால், இன்று மாலை முழுவதும், என்னை அவள் முறைக்கக்கூட இல்லை, நிமிர்ந்து பார்க்கவில்லை, என்பதுதான் உண்மை. அதுதான் என் மனதில் எழுந்த பயத்துக்கு காரணம். அரை மணி நேரம் கழித்து, திறந்திருந்த கதவு தட்டப்பட்டது. திரும்பிப் பார்த்தால், மது, என் கையில் இருந்த கிளாசை பார்த்துக் கொண்டிருந்தாள்.
"அவன் குடிக்கல பானு, வெறும் கோக் தான்!!" என்றான் பிரதீப்.
"ஆமா!! பால் கிடைக்கல!! அதனாலதான், கோக் கொடுத்தோம்!!" என்றான் அரவிந்த்,
அனைவரும் அவனை முறைக்க, மது அமைதியாக இருந்தாள். மதுவின் அமைதி, என் மனதில் இருந்த கீலியை, மேலும் அதிகப்படுத்தியது. பொதுவாக என்னை, யாரும் மட்டம் தட்டிப் பேசினால், அவர்களை கிழித்து தொங்கவிட்டு விடுவாள்.
"வா!!" என்றாள், என்னை பார்த்து. எழுந்தேன்.
"உன், கார் சாவிய எடுத்துட்டு வா!!"
"பால் வாங்க போறியா பானு!!" அரை போதையில், அரவிந்த்.
"டேய்!! உண்ண சாவடிக்கப் போறேன்!!" பிரதீப், அரவிந்தின் முதுகில் இரண்டு அடி போட்டான்.
எதையும் கண்டு கொள்ளாமல், நான் மதுவின் பின்னால் சென்றேன். காரின் அருகில் சென்றதும், என்னிடம் கை நீட்டினாள். நீட்டிய கையில், காரின் சாவியை வைத்தேன். காரை எடுத்தவள், அந்த எஸ்டேட்டின் கரடுமுரடான சாலைகளில், வண்டியை ஓட்டினாள். என்ன? ஏது? என்று கேட்கும் தைரியம் இல்லாமல், எல்லாவற்றுக்கும் தயாராக இருந்தேன் நான். பதினைந்து நிமிடம் கழித்து, மூன்றாவது முறையாக, அந்த வ்யூ பாயிண்ட்டில் இருந்தோம், நானும் மதுவும். ஒரே நாளில், மூன்றாவது முறையாக, என்ன இந்த முறை, கொஞ்சம் சொகுசாக காரில். இறங்கி, பின் சீட்டில் போய் அமர்ந்து கொண்டாள். அவளை, நான், பின் தொடர்ந்தேன், அவளை நெருக்கி அமர்ந்து, தயங்கி தயங்கி, அவள் தோள் மீது கை போட்டேன்.
கோபப்படுவாள் என்று நான் நினைத்ததற்கு மாறாக, என் தோளில் சாய்ந்து கொண்டாள்.
"சாரி பாப்பா!!" நெடுநேர அமைதியை கலைத்தேன்.
அவள் மொபைலை நோண்டியவள், என்னிடம் நீட்டினாள், வாங்கிப் பார்த்த எனக்கு, என்ன சொல்வதென்று தெரியவில்லை. மாலையும், கழுத்துமாக, நானும் மதுவும். எனது பதினெட்டாவது பிறந்த அன்று, நானும், மதுவும், பழனிமலையில் எடுத்துக் கொண்டது. கணவன், மனைவி, போல் இருந்தோம். இந்த செல்பியை எடுத்தது எனக்கு ஞாபகத்தில் இருந்தது, ஆனால் இதை இப்போதுதான், முதல் முறையாக பார்க்கிறேன். கணவன், மனைவி போல, நானும், மதுவும், இருந்த அந்தப் படத்தை பார்க்கப் பார்க்க, எனது கண்கள் லேசாக கலங்கியது. திரும்பி, அவள் நெற்றியில் முத்தமிட்டேன். இரு கண்களில், நான் முத்தமிட, இமைகளை மூடிக் கொண்டாள். என் முத்த பயணத்தை, அவள் உதடுகளில் தொடர, திருப்பி என்னை முத்தமிட்டவாறே, என் மடியில் இருபக்கமும் கால்போட்டு, என் மீது அமர்ந்தாள். நீண்ட நெடிய முத்தம், உதடுகள் மட்டும் உரசிக் கொள்ள, எங்கள் நாவுகள் தீண்டவில்லை, எச்சில் இடம் மாறவில்லை, காமத்தையும், காதலையும் தாண்டி வேறு ஏதோ ஒன்றை, இருவரும் பரிமாறிக் கொண்டிருந்தோம். என் வலதுபுற தோளில், தன் தாடையை வைத்து, சிறு குழந்தையென படுத்திருந்தாள். எங்கள் உதடுகள் தான் பிரிந்து இருந்தன, ஆனால், அந்த முத்தத்தின், பரிமாற்றம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.
"நான், உன்னை புருஷனை நினைச்சு!! அத, உன் கிட்ட சொல்ல முடியாமல் உருகி, தவிச்சுகிட்டு இருந்தப்பா!! நீ, எனக்கு மாப்பிள்ளை பார்த்துகிட்டு இருந்திருக்க!! இல்ல!!" என்னை இறுக்கி அனைத்து கொண்டாள். அவளை இறுக்கி அணைத்துக்கொண்டு, நான் அழ ஆரம்பித்தேன். ஏனோ, எனக்கு சாரி கூட சொல்லத் தோன்றவில்லை, என் உயிர் எண்ணை பிரியும் வரை இந்த அழுகை நிற்கக் கூடாது என்றுதான் தோன்றியது.
"நான், உன்ன ரொம்ப கஷ்டப்படுத்துறனா? பாப்பா!!" என்றாள், திடீரென்று.
என்னிடமிருந்து அவளை விலக்கி, அவள் முகம் பார்க்க, கீழ் உதடுகளை பற்களால் கடித்தவாறு, அழுகையை அடக்க முயன்று கொண்டிருந்தாள்.
"எதுக்கு பாப்பா!! இப்படி எல்லாம் பேசுற!!" என்ற என்னை, இழுத்து மார்போடு அணைத்துக் கொண்டாள்.
"அண்ணைக்கு பிரதீப் எங்கிட்ட ஹெல்ப் கேட்டப்ப எவ்வளவு பயந்தேன் தெரியுமா? அன்னைக்கு நைட் தான், நீ என் கிட்ட லவ் சொன்ன!! எப்படியும் உனக்கு கல்யாணம் பண்ணி வப்பாங்க!! அதுக்கு நான் ஹெல்ப் பண்ணா!! கடைசிவரஐ, உன் கூடவே இருக்கலாம்னு மட்டும்தான் யோசிச்சேன்!! அதனாலதான்....." என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, என் உதடுகளில் கைவைத்து என்னை பேச வேண்டாம் என்றாள்.
பின் எழுந்து, முதலில் அமர்ந்து இருந்த இடத்திலேயே அமர்ந்து கொண்டாள். என்னை இழுத்து அவள் மடியில் போட்டாள். தயங்கியே, அவள் முகம் பார்த்தேன், கண்களில் கண்ணீருடன், ஒரு சின்ன புன்னகை அவள் முகமெங்கும்.
"என்ன இன்னொருத்தனுக்கு விட்டு கொடுத்திருவியா? ம்ம்?" அவள் கண்களில் இருந்த கண்ணீர், என் முகத்தில் விழுந்தது.
அவள் வயிற்றில் முகம் புதைத்துக்கொண்டு, மாட்டேன் என்று சொல்லி வெடித்து அழுதேன். அவள் மடியில், என்னை இறுக்கிக் கொண்டு, என் தலை எங்கும் முத்தமிட்டாள்.
பின் சீட்டை, மொத்தமாக சரித்து, அதை படுக்கையாக்கி இருந்தோம். அவள் கழுத்துக் கதுப்பில் நான் முகம் புதைத்து இருக்க, என் தலைமுடிகளைம, மது விரலால் வாரிக்கொண்டு இருந்தாள். என்னைப் பார்த்து, அவள் திரும்பிப் படுக்க, நானும் அவளது கையில் தலைவைத்து, அவளை நோக்கி திரும்பிப் படுத்தேன். என் மீது கால் போட்டு கொண்டவள்,
"நான் லூசா?" என் கண்ணத்தில் அடித்தாள்.
"இது எப்பவுமே லாஸ்ட்டா தானே வரும்? நாம் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை?" பதில் தெரிந்தும் கேள்வி கேட்டேன் நான்.
ஆடைகளை, உடல்களை தாண்டிய பரிமாற்றத்தை, இருவரும் உடைக்க விரும்பவில்லை.
"நான் லூசா?" மீண்டும் என் கண்ணத்தில் அடித்தாள்.
கண்களையும் மூடிக்கொண்டு, புன்முறுவல் பூத்தேன்.
"நான் லூசா? மீண்டும் கேட்டவள், கன்னத்தில் அடித்தாள்.
நான் ஆம் என்பது போல் தலை அசைத்தேன்.
"கரெக்ட், உன் மேல!!" என் நெஞ்சில் ஒரு விரலை வைத்து குத்திவள், என் உதடுகளில், தன் உதடுகளை ஒற்றியெடுத்தாள்.
"உன்ன டார்ச்சர் பண்றேனா?"
"டப்" என்று என் கண்ணத்தில் அடித்தாள்.
"லவ் டார்ச்சர் பண்ற!!”
கண்களைத் திறந்து அவளைப் பார்த்துச் சொன்னேன். என் இரு கண்களிலும் முத்தம் இட்டாள்.
"எனக்கு மாப்பிள்ளை பார்ப்பியா?"
மீண்டும் கன்னத்தில் அடித்தாள்.
"பாத்தாச்சு!!, அவனும் பக்கத்துலதான் படுத்திருக்கான்!!"
நெற்றியல் முத்தமிட்டாள். பின் ஒரு கையால் என் இரு கன்னங்களையும் சேர்த்து பிடித்தவள்
"இது நான் பார்த்த மாப்பிள்ளை!!"என்றவள், என் உதடுகளில் முத்தமிட்டாள்.
அவள் உதடுகளை கவ்வி அவள் மீது படர்ந்தேன். உதடுகள் கடிபட, நாவுகள் தீண்டிக்கொள்ள, எச்சில் இடம் மாற, ஆவேசமாக முத்தமிட்டு கொண்டோம். முத்தத்தின் ஆவேசம் தீர, அவள் மார்பில் முகம் புதைத்து, அணைத்தவாறு இளைப்பாறிக் கொண்டு இருந்தேன்.
"ரெண்டு வருஷத்துல, டேவிஸ் கப் ஆடிருவியா?" என் முதுகைத் தடவிக் கொண்டே கேட்டாள்.
"ATP tournaments ஆடிருவேன், பார்!!" என் உச்சந்தலையில் முத்தமிட்டாள்.
"பாப்பா!!" கொஞ்சினாள், நான் அவள் கழுத்தில் முகம் புதைத்து, கட்டிக்கொண்டேன்.
"பாப்பா!!"
"ம்ம்!!"
"நீ, நான், நம்மளோட பாப்பா!! எல்லாருமே அதுக்கப்புறம் தான், ஓகேவா!!" என்றாள்
"இல்ல, நீ, நான், ஒரு மூணு பாப்பா!! ஓகேவா!!" என்றேன்
"மூணு போதுமா?" குனிந்து, என் தலையில் முத்தமிட்டாள்.
"எனக்கு போதும்!!" அவள் கழுத்தில் இதழ் பதித்தேன்.
"பாப்பா!!"
"ம்ம்!!"
"ஐ லவ் யூ!!"
"Me too!!"
"ஐ லவ் யூ!! பாப்பா!!"
பதில் சொன்னேன், அவள் கழுத்தில், என் எச்சிலால். என் தலையிலே நான்கு கொட்டு கொட்டியவள், என்னை இருக்கிக்கொண்டாள். இருவரும் கண்ணயர்ந்தோம்.
***********
பளீரென்று வெளிச்சம் கண்களைத் தீண்ட, எழுந்து அமர்ந்தான் மணி, நான்கு வருட தூக்கத்தில் இருந்து. என்னெதிரே, இருள் கவ்வியிருந்த பள்ளத்தாக்கை, விடியலின் வெளிச்சம் அணைத்துக்கொண்டது. சில நொடிகளில், மாயா அவன் கண்களில் பட்டாள். நான்கு வருடங்களில், இரண்டாவது முறையாக அவளை பார்த்து சிரித்தான் மணி.