அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
பாகம் - 66 

"என்னதான்டா உங்க ரெண்டு பேத்துக்கும் பிரச்சனை?” என்று கேட்ட நேத்ராவிடம், ஒன்றும் இல்லை என்பதைப் போல், உதடுபிதுக்கி, தோளைக் குலுக்கினேன்.

என்னமோ சாகுற வரைக்கும்!! சாப்பிடுற வரைக்கும்!! அன்னைக்கு ஸீன் போட்டீங்க!!” சிரித்தாள். அவளை முறைத்துவிட்டு, திரும்பி, நாங்கள் தங்கியிருந்த வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

எங்கடா போற?” என்றவளிடம், பதில் சொல்லாமல், என் நடையின் வேகத்தை கூட்ட, ஓடிவந்து, கையைப் பற்றி இழுத்தவள்

அவ சொன்னதுல தப்பே இல்ல?” தலையை இருபுறமும் ஆட்டியவாறு

என்ன சொன்னா?”

என் கூட அந்த வியூவ் பாயிண்ட் வரைக்கும் வா!! அங்க வச்சு சொல்றேன்!!” தூண்டில் போட்டாள்.

ஏய்!! சும்மா ஒரு வாக் போலாம்னு தான கூப்ட, இப்போ புதுசா கத சொல்லுற!! கொடைக்கானல்ல நடக்க முடியாம கஷ்டபட்டது நியாபகம் இருக்க?”

நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, என்னை கண்டுகொள்ளாமல் அவள் நடக்க, என்ன செய்வது என்று தெரியாமல் இடுப்பில் கைவைத்தவாறு அவள் சொன்ன வியூவ் பாயிண்டையும், நாங்கள் தங்கி இருந்த இடத்தையும், மாறி மாறி பார்த்தேன்.

மது என்ன சொல்லியிருப்பாள் என்ற ஒரு கேள்வி, என்னை நேத்ராவின் பின்னால் இழுத்து சென்றது. “மது, அவளை மாதிரியே, நெத்ரவையும், கெடுத்து வச்சிருக்கா!!” எனக்குள் சொல்லியவாறு, ஒரு பெருமூச்சை விட்டுவிட்டு, நானும் நேத்ராவின், பின்னால் மலையேற ஆரம்பித்தேன்.

மதுவும், அவள் நண்பர்கள் கூட்டமும், முதுகலை படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு, மாங்கு மாங்கு என்று படித்தது போதும் என்று நிணைத்து, இடையில் ஒரு சின்ன பிரேக் எடுக்கலாம் என்ற திட்டத்தின் விளைவாக, இங்கே கொடநாடு அருகிலுள்ள ஒரு டீ எஸ்டேட்டிற்கு, வீக்கெண்டில், வந்திருந்தோம். நான் எவ்வளவோ மறுத்தும், பிரதீப்தான் பிடிவாதமாக என்னை இழுத்து வந்திருந்தான். அதற்கு ஏதேதோ காரணம் சொல்லியிருந்தான், அதில் ஒன்று, நான் எங்கள் வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்த, ரேஞ்ச்ரோவர், இரண்டு suv தேவைப்படவே, ஒன்றை அவன் வீட்டில் இருந்தும், மற்றொன்றை நான் எடுத்து வந்திருந்தேன். ஆனால், எனக்கு தெரியும், மதுவின் வேலை இது என்று. நானும், என் கல்லூரி நண்பர்களுடன் சுற்றுவதைவிட, இவர்களுடன் சுற்றுவதே அதிகம் என்பதால், நான் அவர்களுடன் வருவதில் யாருக்கும் மாற்று கருத்தோ, சங்கோஜமோ இல்லை. இங்கு வருவதற்கு, இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே, எனகும் மதுவுக்கும் ஒரு சின்ன சண்டையின் காரணமாக பேசிக்கொள்ளாமல் இருந்தோம்.

**************

அதற்கு காரணாமான நிகழ்வுகள் இரண்டு

நிகழ்வு 1

ஸ்பெயின் செல்வதற்கான விசா பிராசசிங் எல்லாம் முடிந்து டிக்கெட்டும் போட்டாகிவிட்டது. டிக்கெட் போட்டதிலிருந்து ஒரு நிலை இல்லாமல் உழன்று கொண்டு இருந்தேன். அன்று மாலை ஸ்பெயினுக்கான, என் டிக்கெட்டை மதுவுக்கு அனுப்பிவக்க

"டிக்கெட் போட்டாச்சா?” என்று அவளிடமிருந்து மெசேஜ் வந்தது.

ஒரு சோக எமோஜியை அவளுக்கு பதிலாக அனுப்பினேன், அவளும் அதே போன்று ஒரு பத்து பதினைந்து எமோஜிளை திருப்பி அனுப்பினாள்

"எனக்கு போகவே பிடிக்கல!!” எனது மனதில் இருந்ததை அப்படியே அவளக்கு அனுப்ப

"எனக்கும் தான்!!” என்று அவளிடம் இருந்து பதில் வந்தது

"எனக்கு ஏதாவது இஞ்சுரி ஆனா நல்லா இருக்கும்!!” என்று நான் மெசேஜ் அனுப்பிய அடுத்த பத்து நொடிகளில் அவளிடமிருந்து கால் வந்தது.

"பொறுப்பில்லாம பேசாதே!!” என்று ஆரம்பித்து பொரிந்து தள்ளி விட்டாள். என்னை பதில் பேச விடாமல் திட்டியவள், கால் கட் செய்துவிட்டாள். திரும்ப அழைத்த என் காலையும் ஏற்கவில்லை.

அன்று இரவு ஒரு பத்து மணி இருக்கும் கால் செய்தாள். ஏற்கனவே இவளைப் பிரிந்து செல்ல வேண்டும் என்ற சோகத்தில் நான் இருக்க, அதை புரிந்து கொள்ளாமல், அவள் திட்டியதால், நானும் அவள் மேல் கோபமாகவே இருந்தேன். திரும்பத் திரும்ப அடித்தாள், நானும் ஒவ்வொரு முறையும் கட் செய்து விட்டேன். நாலாவது முறை நான் கட் செய்த பின்பு, அழைப்பதை நிறுத்திவிட்டாள்.

அவள் அழைத்த போதெல்லாம் கோபத்தில் கால் கட் செய்த எனக்கு, அவள் அழைப்பு வரவில்லை என்ற பத்து நொடியில் கொஞ்சம் படபடப்பானது. சரி, திட்டு வாங்கினாலும் பரவாயில்லை என்று நினைத்துக்கொண்டு கால் செய்யலாம் என்று நினைக்கும் போதே "டிங்" என்ற சத்தத்துடன் மெசேஜ் வந்தது.

"இப்ப மட்டும் கால் கட் பண்ணுன, செத்த நீ!!” என்று அவள் மெசேஜை படித்துவிட்டு சிரித்துக் கொண்டு இருக்கும்போதே, கால் வந்தது. சிரிப்பை அடக்கிக்கொண்டு வீடியோ காலை அட்டென்ட் செய்தேன். மறைத்துக் கொள்ள முயன்ற என் சிரிப்பை கண்டுபிடித்து விட்டாள்.

"கால் கட் பண்ணிட்டு, சிரிச்சுகட்டு இருக்க!! எருமை!! எருமை!!” அவளும் சிரித்துக்கொண்டே திட்ட, அதுவரை அடக்க முயன்ற சிரிப்பை, அடக்கமுடியாமல் நானும் சிரித்தேன்.

"எனக்கு போகவே பிடிக்கல!!” சிரித்தவாறு அவளைப்பர்த்து கூற, அவளது சிரிப்பு நொடியில் காணாமல் போயிற்று.

"எனக்கும்,தான் பாப்பா, கஷ்டமா இருக்கும்!! அதெல்லாம் பாத்தா முடியுமா?” என்றாள் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு

"ஆனா, அதுக்காக இப்படி லூசு மாதிரி யோசிச்சுகிட்டு இருந்தேனா!! அப்புறம் பேசவே மாட்டேன்!!” மிரட்டுவது போல கெஞ்சினாள்.

நான் பதில் சொல்லவில்லை. அவளையே பார்த்து கொண்டிருந்தேன், அவளும் பதில் சொல்லாமல் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

பாப்பா!!” சிறிதுநேர அமைதிக்குபின், கொஞ்சினாள்

ம்ம்" கொட்டினேன், அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த மோனாநிலை, கலைந்த சோகத்தில்

ஐ லவ் யு!!” கண்களில் காதல்பொங்க, ஒரு சின்ன இடைவெளிக்குபின், அந்த வார்த்தைகளை கூறினாள்

ம்ம்" கொட்டினேன், அரை மயக்கத்தில்.

"இப்போவே வந்து உன்ன இருக்கி கட்டிபிடிச்சுக்காவா?” ஆசையோடு, நான் அவள் எதிரில் இருப்பது போல, கைகளை வட்டமா கட்டிக் கொண்டு அவள் கேட்க, என் கண்கள் கரித்தது. பின் ஏதேதோ பேசினோம்.

நிகழ்வு 2

மொபைலை எடுத்துப் பார்த்தேன், நினைத்ததைப் போலவே, மதுவிடம் இருந்து மிஸ்டு கால், மொத்தம் ஐந்து. அவளுக்கு அழைத்தேன்.

"என்னடா, ரொம்ப பிசியா இருக்கியா? கால் பண்ணா எடுக்க மாட்டேங்கற?” கோபமும், நக்கலும், சரிவிகிதத்தில் கலந்து இருந்தது

"ஆமா..... நீங்க மட்டும் தான் பிஸியா இருப்பிங்களோ?.... நாங்கலாம் இருக்க மாட்டோமா?” கொஞ்ச நாட்களாக, அதாவது அவள் தீவிரமாக PG நுழைவு தேர்வுக்கு, படிக்க அரம்பிதத்தில் இருந்து, நான்தான் கால் பண்ணிவிட்டு, அவள் எடுக்காத ஏக்கத்தில் சிணுங்குவேன், மருகுவேன். அதையே, இன்று அவள் அனுபவிக்க, மனதில் ஏதோ புரியாத மகிழ்ச்சி.

"அப்படி என்ன பிசியா இருந்தா? பிராக்டீஸ்க்கு, அக்கடமி போகல இன்னைக்கு!!” நான் எடுக்காத நேரத்தில் என்னை தேடியிருக்கிறாள் என்று தெரிந்ததும் குதூகலம் ஆனனேன்.

"பிரக்டிஸ் போகலைன்னா!! எங்களுக்கு வேற வேலையே இருக்காதா!!”

"அப்படி என்ன வேலைக்கு போயிருந்திங்க!! சார் !!” இப்பொழுதெல்லாம் அதிகம் கோபப்படுபவள், ஏனோ கோபமே படாமல், கொஞ்சிக் கொண்டிருந்தாள்.

"பொறுப்பான வேலைக்கு!!” நான் சொல்ல, சிரித்துவிட்டாள். அந்த சிரிப்பு, அவள் முகத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்ட, காலை துண்டித்துவிட்டு, வீடியோ கால் செய்தேன்.

"சொல்லுடா!! பொறுப்பானவனே!! அப்படி என்ன பொறுப்பான வேலைக்கு போனிங்க?” அவள், முகம்முழுக்க காதல்

"கம்பெனி குவேர்டேலி ரிவியூ மீட்டிங்!!” காலரை தூக்கிவிட்டுக் கொண்டேன்.

"நிஜமாவா??” நம்ப முடியாத ஆச்சரியம் அவள் முகத்தில்.

"எஸ்!!” இதெல்லாம் ஒன்றும் இல்லை என்பதைப் போல தோளை குலுக்கிக் கொண்டேன்.

"என்ன திடீர்னு? போகவே மாட்டியே?” அவளால் இன்னும் நம்பமுடியவில்லை என்பது அவள் கேள்வியிலும், முகபாவத்திலும் நன்றாக தெரிந்தது.

என் பொண்டாட்டி, எனக்கு பொறுப்பே இல்லணு திட்டுனா!! அதுதான்!!” என்று சிரித்துக் கொண்டே சாதாரணமாக சொல்ல, முத்தமழை பொழிந்தாள், மொபைலின் ஊடே.

"நான் ஒரு முடிவு பண்ணி இருக்கேன்!! சீரியஸாக பிசினஸில் இறங்க போறேன்!! கலங்கிய சிரித்தாவாறு என்னைப் பார்த்துக் கொண்டிருந்தவளிடம், நான் சீரியஸான முகபாவனையில் சொல்ல, நக்கல் சிரிப்புடன் "" போட்டாள்.

"என்ன ஓ?, ஸ்பெயின் ப்ரோக்ராம் கேன்சல் பண்ண போறேன்!! இனிமே, ஐயா ஃபுல் டைம் பிசினஸ்மேன் ஆக போறேன்!!” நான் சொன்னதுதான் தாமதம், அவள் முகத்தில் இருந்த சிரிப்பு காணாமல் போயிற்று, நான் சமாளிக்க முயற்சிக்கும் முன், காலை கட் செய்து விட்டாள்.

மீண்டும் மீண்டும் முயற்சிக்க, முதலில் கட் செய்தவள், பின் பிளாக் செய்துவிட்டாள். அடுத்த இரண்டு நாட்களில், நான் எவ்வளவோ, கெஞ்சியும் பேச மறுத்துவிட்டாள். பேசதான் மறுத்தாளே ஒழிய, நேற்று கூட நேத்ராவின் மூலம், என்னை படத்துக்கு கட்டாயப்படுத்தி அழைத்து சென்றாள். இந்த ட்ரிப் கூட, அவள் தூண்டுதலின் பெயரிலேயே, பிரதீப் என்னை அழைத்து வந்திருப்பான் என்று நினைக்கிறேன்.

*************

ஒரு முக்கால் மணிநேரம் மலையேறியதன் பயனாக, அவள் சொன்ன வியூபாயின்ட்-ஐ அடைந்தோம்.

"சூப்பரா இருக்குல!!" என்று குதூகலித்த நேத்ராவை பார்த்து சிரித்துவிட்டு, அவள் சொன்ன பள்ளத்தாக்கில், என் பார்வையை படரவிட்டேன். அந்த பள்ளத்தாக்கு, நேத்ரா சொன்னதை போல "சூப்பரா தான்!!” இருந்தது.

"என்னடா சண்டை!! ரொம்ப ஃபீல் பண்ற!!” நேத்ராவின் கேள்வி, என் ரசனையை கலைக்க

"அவ தான் சும்மா!! சும்மா!! கோவப்படுறா!! எத்தன டைம் சாரி கேட்டிருப்பேன் தெரியுமா?” இந்த டைம் அவளா வந்து சாரி கேக்காம, பேசவே மாட்டேன்!!” நேத்ரா கேட்ட ஒரு கேள்விக்கு, நான் என் மனதில் உள்ளதை எல்லாம் கொட்டித் தீர்க்க, அவள் சிரித்தாள்

"அவ சொன்னது கரெக்ட்டாதான்!! நீ இன்னும் சில்லியா தான் இருக்க!!” நேத்ரா சொல்ல அவளை முறைத்தேன்.

"என்ன முறைக்காத!! வந்ததிலிருந்து ஓவரா பண்ணிட்டு இருக்க!! கீழ போ!! இன்னிக்கு உன்னைய டின்னு கட்டப்போறா!!” என் முறைப்பை உதாசீனப் படுத்தியவள், சிரித்தவாரே கூறினாள்.

கட்டுவா!! கட்டுவா!” என்று மனதில் எழுந்த எண்ணத்தை, அவள் கொஞ்ச நேரத்திற்கு முன் சொன்ன "சில்லி" என்ற வார்த்தை தடுத்துவிட

அவளுக்கு என்னதான் ப்ராப்ளம்!!” சூடாக கேட்க

நீதான்!!” என்றாள் சற்றும் தாமதிக்காமல். கண்களை மூடிக்கொண்டு, ஒரு பெரு மூச்சை இழுத்துவிட்டேன், பின் அருகில் இருந்த சிறுபாறையின் மீது அமர்ந்து கொண்டு, எதிரில் விரிந்துகிடந்த பள்ளத்தாக்கில், என் பார்வையை படரவிட்டேன். நான் ஸ்பெயின் செல்லுவதை தவிர்க்கும் விதமாக பேசியதுதான் அவள் கோபத்துக்கான காரணம் என்று எனக்கு புரியாமல் இல்லை, ஆனால், அவசியமாற்றது என்று எண்ணினேன். அதை விடவும், மது, நேத்ராவிடம் இதைப் பற்றி பேசியிருக்கிறாள் என்றாள், அவளை மனதில் வேறு ஏதோ உருத்திக் கொண்டிருக்கிறது என்று புரிந்தது.

பானுக்கு, உன்னவிட நாலு வயசு ஜாஸ்தி தெரியும்ல!!” நேத்ரா கேட்க, சிறிது எரிச்சலுடன் அவள் முகத்தைப் பார்த்தேன். அவள் முகமோ, தீவிர சிந்தனையுடன், விரிந்துகிடந்த பள்ளத்தாக்கில் உலவிக்கொண்டு இருந்தது.

அதுக்கு!!” தன்னால் வெளிப்பட்டது.

அவ கல்யாணப் பேச்சு வரும், சீக்கிரம்!!” என்னை கண்களால் ஆராய்ந்தால்.

அவதான் மாஸ்டர்ஸ் பண்ணப் போறாளே!!” அவள் பேசுவதின் அர்த்தம் புரியவில்லை.

"அவங்க அம்மா!! வேண்டாம்னு சொன்னா?" முறைத்தாள்.

"அதெல்லாம் ஒத்துக்குவாங்க!!"

"சரி, ஒரு பேச்சுக்கு வச்சுக்கலாம், ஒத்துக்கலனா?"

"நான், ஆண்டிகிட்ட பேசி ஒத்துக்க வைப்பேன்!!" நம்பிக்கையுடன் சொன்னேன். நான் சொன்னதில் எது அவளுக்குப் புரியவில்லை என்று தெரியவில்லை, மறுப்பாகத் தலையைசைத்தாள்.

"சரி, ரெண்டே வருஷத்துல PG முடிச்சிடுவா, முடிக்கிறதுக்கு முன்னாடியே, அவளுக்கு மாப்பிள்ளை பார்த்தா? என்ன பண்ணுவ?" இப்பொழுது ஏன், நான், இங்கு அழைத்து வரப்பட்டேன் என்பது புரிந்தது எனக்கு.

"அதுக்கு இன்னும் ரெண்டு வருஷம் இருக்கு, அதுக்குள்ள கண்டிப்பா நான் ATP டோர்னமெண்ட்ல ஆட ஆரம்பிச்சுடுவேன்!!. குறைஞ்சபட்சம் டேவிஸ் கப், இந்தியன் டீம்ல கண்டிப்பா இருப்பேன்!!" என்மீது, டென்னிஸ் ஆட்டத்தின், மீது எனக்கு இருந்த நம்பிக்கையில் சொன்னேன்.

மீண்டும் நம்பமுடியாமல் தலையசைத்து அவள் சிரித்தாள்.

"நீ உன் பிரென்ட் மாதிரி ஒரு லூசு ஆயிட்டியா?" உண்மையிலேயே கடுப்பானேன்.

"ஆமா டா, லூசு தான்!!. நீ ஒரு லூசு!! அவ ஒரு லூசு!! உங்களுக்கு பஞ்சாயத்து பண்ணி வைக்கிறேன் பாத்தியா, நானும் லூசு தான்!!" என்று சிரித்து. என் தோளில் இரண்டு அடி போட்டாள்.

"சரி இப்போ சொல்லு மது என்ன சொன்னா?"

"சுரைக்காய் உப்பு இல்லன்னு சொன்னா!!" என்றவள், அந்த மலை மேட்டிலிருந்து, நாங்கள் தங்கியிருந்த வீட்டை நோக்கி, நடக்க ஆரம்பித்தாள்.

"எங்க கல்யாணத்துக்கும் வீட்ல ஒத்துக்க மாட்டாங்கனு பயப்படுறாளா?" நாங்கள் தங்கியிருந்த வீட்டின் அருகே வந்ததும், நேத்துராவிடம் கேட்டேன்.

"ஸ்போர்ட்ஸ் விளையாடுற பசங்களுக்கு, மூளை நல்லா வேலைசெய்யும்னு கேள்விப்பட்டிருக்கேன்!! அது உனக்குமட்டும், ஏன், இவ்வளவு மெதுவா, வேலை செய்து?" நக்கலாக என்னைப்பார்த்து சிரித்தாள், நேத்ரா.

"அந்த லூசு கிட்ட போய் சொல்லு!!, லூசு மாதிரி எதையாவது யோசிச்சிக்கிட்டு, இப்படி என்ன டார்ச்சர் பண்ணிட்டு இருந்தா!!, நானே, ஒருநாள் எங்காவது ஓடிப் போகப்போறேன்!!" நேத்துராவின் நாக்கலிலும், சிறுப்பிலும், கடுப்பான நான், உண்மையான, கடுப்போடு சொல்ல

"ஓகே!! ஓகே!! இப்பவே போய், அவகிட்ட சொல்லுறேன்!!" முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு.
நேத்ரா அப்படி சொன்னதும்தான், நான், என்ன சொன்னேன், என்பது எனக்குப் புரிந்தது.

"நேத்ரா!! நேத்ரா!! ப்ளீஸ்!! தயவுசெய்து!! லூசுமாதிரி, அவகிட்ட போய் உளறி வைக்காதே!!" ஏற்கனவே இரண்டு நாள் பேசவில்லை, இதில், இவள்வேறு போட்டுக் கொடுத்தாள், என்ன செய்வது என்ற பதட்டத்தில், நேத்ராவிடம், கெஞ்சினேன்.

"நான் லூசா?" அவள் மிஞ்சினாள்.

நான் கண்களாலேயே கெஞ்ச, சிரித்தவள், சத்தமாக சிரித்தாள், சில நொடிகள் கழித்து. அவளின் பார்வை, என்னைத்தாண்டி, என் பின்னால் இருந்து. நேத்ராவின் சிரிப்பும், அவளது பார்வையின் அர்த்தம் புரிய, உள்ளுக்குள் கலவரமானேன். "மதுவா இருக்கக் கூடாது" என்று மனதில் வேண்டிக்கொண்டு, திரும்பிப் பார்த்தால், எனது வேண்டுதல் பலிக்கவில்லை. என்னை முறைத்துக் கொண்டிருந்தாள், மது. நேத்துராவிடம் தொடங்கிய கெஞ்சலை, மதுவிடம் தொடர்ந்தேன், கண்களால். முறைத்தவாறு என்னைத் தாண்டிச் சென்று, நேத்தராவை இழுத்துக் கொண்டு சென்றாள். சுத்தம், என்று நினைத்துக்கொண்டு, தலையில் கை வைத்து, நாங்கள் தங்கியிருந்த வீட்டின் படிகளில் அமர்ந்தேன்.

************

"என்னடா? இங்க உட்கார்ந்து இருக்க?" என்றபடி பிரதீப், என் அருகில் உட்கார்ந்தான்.

நான் ஒன்றும் இல்லை என்று தலையாட்டினேன்.

"உன் வண்டியில, ஒரு டிரைவ் போலாமா?" அவன் கேட்ட தோரணையில் இருந்தே தெரிந்தது, அவன் என்னிடம், ஏதோ பேச விரும்புகிறான் என்று.

இவனிடம் என்ன சொன்னாளோ? என்று நினைத்துக் கொண்டு, போகலாம் என்று தலையாட்டினேன். நாங்கள் காரை, நெருங்கும் போது "நானும் வர்றேன்" ஓடி வந்தான் அரவிந்த்.

அரை மணி நேரம் கழித்து,

"வீடியோகேம்ல ஓட்ற மாதிரி இருக்குடா, இந்த வண்டி!! செம்மையா ரெஸ்பாண்ட் பண்ணுது!!" ரேஞ்ச்ரோவரின் செயல்திறனை வியந்து கொண்டிருந்தான் அரவிந்த்.

கொடநாட்டில் இருந்து, குன்னூர் செல்லும் ரோட்டில், சீறிக்கொண்டிருந்தது நாங்கள் பயணம் செய்த அந்த வண்டி. பிரதீப், எவ்வளவோ, கெஞ்சியும் பிடிவாதமாக மறுத்து, எங்களுடன் ஏறிக்கொண்ட அரவிந்த்தான், வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான். டாஸ்மாக்கை பார்த்ததும் வண்டியை நிறுத்தியவன், இறங்கி, அதை நோக்கிச் சென்றான். பிரதீப்பும், நானும், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். அவன் எங்களுடன் வந்த நோக்கமே, சரக்குதான் என்பது, அப்பொழுதுதான் புரிந்தது. பிரதீப் என்ன நினைத்தானோ, இறங்கி அந்த டாஸ்மாக் கடையை நோக்கி நடந்தான். என் மொபைல் "டிங்" என்ற சத்தம் வந்தது. எடுத்துப் பார்த்தால் மது தான்.

"I love you!!" இன்று அனுப்பியிருந்தாள், குறுஞ்சிரிப்பு என் உதடுகளில்.

"வேண்டாம் நீயே வச்சுக்கோ!!" திருப்பி அனுப்பினேன்.

"I love you!!" மீண்டும் அனுப்பினாள், ஒரு கோப ஏமோஜி, பதிலாக அனுப்பினேன்

"I love you!!" மீண்டும் அனுப்பினாள். ஏனோ, எப்பொழுதும் போல “me too” என்று அனுப்ப தோணவில்லை

"I love you!!" அனுப்பி விட்டு, அவள் பதிலுக்காக காத்து இருந்தேன்.

நான் அனுப்பிய முதல் ஐ லவ் யூ. வீடியோ காலில் வந்தாள்.

"I love you!!" கால் எடுத்தவுடன் சொன்னாள்.

அருகில் யாராவது இருக்கிறார்களா என்ற எந்தக் கவலையும் இல்லை அவளிடம். அவள் முகத்தில் அவ்வளவு குறும்பு, சந்தோஷம்.

"Me too!!" என்றேன் சிரித்துக்கொண்டே.

"I love you!!" என்றால் மீண்டும்.

"நடுரோட்டில் இருக்கேன் பாப்பா!!"

"I love you!!"

"நான் வந்து சொல்றேன்!!"

"I love you!!" கால் கட்டானது.

திரும்ப அவளுக்கு அழைத்தேன், நாட் ரீச்சபிள் என்று வந்தது. ஏனோ, இன்று, ஐ லவ் யூ சொல்லும்பொழுது வழக்கத்தைவிட, மிகவும் அழகாக இருந்தாள். இன்னும் இரண்டு முறை அவள் சொல்லியிருந்தால், நானும் ஐ லவ் யூ சொல்லி இருப்பேனோ, என்னவோ. மீண்டும் அவளுக்கு அழைத்தேன், அழைப்பு கிடைக்கவில்லை.

"ஹேய்ய்ய்ய்......!!" என்னைப் பார்த்து, சரக்கை ஆட்டியவாறு, காரை நோக்கி வந்தான் அரவிந்த். பின்னால் வந்த பிரதீப்போ தலையில் அடித்துக் கொண்டான். பின் அங்கிருந்து கிளம்பினோம். வரும் வழியிலேயே, பெண்கள் அனைவரும் உறங்க சென்றதும், குடிக்கலாம் திட்டமிட்டனர், சரக்குவாங்கி வந்த அரவிந்தும், தலையில் அடித்துக்கொண்ட பிரதீப்பும்.

************

தொடர்ச்சி
[+] 1 user Likes Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 08-01-2021, 05:39 PM



Users browsing this thread: 6 Guest(s)