Adultery இரண்டாம் முடிச்சு
#36
பதறியடித்து போய் அவனுடைய பெயரை சொல்லி, ரயில்வே அதிகாரிகளிடம் விசாரித்த போது, அவனுடைய பெயரை செக் செய்து பார்த்துவிட்டு, அவன் வந்த பெட்டியில் தீப்பிடித்து எரிந்ததால், யாரையும் அடையாளம் காண முடியாது என கூறிவிட்டனர். அரசாங்க சார்பாகவே அனைவரின் உடலையும் ஒரே இடத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு அனைவரின் குடும்பத்தாரும் அழுது தீர்த்து அடக்கம் செய்தனர்.

அக்கம் பக்கத்தினர் வந்து துக்கம் விசாரித்து விட்டுச் சென்றனர். அப்போது ஒரு பெண் இந்திரா வந்த நேரம் தான் சங்கரின் இறப்புக்கு காரணம் என்று கூற, விசாலாட்சி கோவமானாள்.
" இன்னும் எத்தனை காலத்துக்குத் தான் இப்படியே பேசுவீங்க. பொண்ணு பொறந்த நேரம் சரியில்ல, சமஞ்ச நேரம் சரியில்ல, வீட்டுல காலை வச்ச நேரம் சரியில்ல, புள்ள பெத்த நேரம் சரியில்லனு... என் மகனுக்கு இந்த வயசுல போகனும்னு விதி போயிட்டான். அது ஒரு விபத்து அவ்வளவு தான். இனிமே என் மருமகளை பத்தி ஒரு வார்த்தை கூட பேசக் கூடாது."

இந்திரா தன் மாமியாரை கட்டிப்பிடித்து அழுதாள். இரண்டு நாட்கள் கடந்தன.


இந்திராவின் அப்பாவும், அம்மாவும் இந்திராவை பார்க்க வந்தனர். இந்திராவின் அம்மா பேச ஆரம்பித்தாள்.
" நாங்க அவ்வளவு சொன்னோம் கேட்டியாடி. இப்போ பாத்தியா, பாதிலயே தாலி அறுத்துகிட்டு நிக்கிற. இதுக்குத் தான்டி பெரியவங்க சொல்றதை கேக்கனும். ஒழுங்கா எங்க கூட வந்துரு. உனக்கு வேற வாழ்க்கையை நாங்க அமைச்சு குடுக்குறோம்."

"அம்மா, நீ இதுக்குத் தான் இங்க வந்தியா. நான் கஷ்டத்துல இருக்கும் போது ஆறுதல் சொல்லுவனு பார்த்தா, இப்படி குத்திகாமிக்கிற. நான் இங்க தான் இருப்பேன். இதுதான் என் குடும்பம். நீங்க கெளம்புங்க."


"இங்கயே இருந்து உன் வாழ்க்கையை கெடுத்துக்க போறியா. உனக்கு இப்போ தெரியாது. பின்னாடி தான் கவலைப்படுவ. ஒழுங்கா சொல்றதை கேளு."

"நான் செத்தாலும் இங்க தான் சாவேன் போதுமா. நான் எங்கயும் வரமாட்டேன்." அழுதாள்.

இந்திராவின் அம்மாவுடைய கோவம் விசாலாட்சியின் பக்கம் திரும்பியது.

" ஏன்மா அவதான் புரியாம பேசுறா, நீங்க சொல்லமாட்டீங்களா. அவ இங்கேயே இருந்து, வாழ்க்கையை கெடுத்துக்கனுமா.. உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்து அவளோட வாழ்க்கை இப்படி பாதிலயே முடிஞ்சுருச்சுனா, இப்படித்தான் இருப்பீங்களா? உங்க குடும்பத்தை நம்பிதானே வந்தா , அவளோட வாழ்க்கைக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க. "

விசாலாட்சி நீண்ட அமைதிக்குப் பின் பேசினாள்.

" இந்திரா எங்களை நம்பி வந்த பொண்ணு. அவ வாழ்க்கை பாதிலயே முடிஞ்சுபோக நாங்க விட மாட்டோம். இந்திரா என் மருமகளா மட்டும் நினைக்கல. மகளாவும் நெனக்கிறேன். அவ சந்தோசமா வாழனும். இந்திராவுக்கும், என்னோட ரெண்டாவது மகனுக்கும் கல்யாணம் பண்ணிவைக்கிறேன்."

விசாலாட்சி இந்த வார்த்தையை சொன்னதும் எல்லாரோட முகத்திலும் அதிர்ச்சி. இந்திராவின் குடும்பத்தாரை தவிர.

"அத்தே என்ன சொல்றீங்க" கண்கலங்கியபடி அதிர்ச்சியோட கேட்டாள் இந்திரா.

"இந்திரா இது உனக்கு கஷ்டமாத்தான் இருக்கும். இதை நீ எனக்காக ஏத்துக்கிட்டுத்தான்மா ஆகனும்."

"அத்தே.. அவங்க எதோ சொல்றாங்கனு இந்த முடிவுக்கு வராதீங்க அத்தே ப்ளீஸ். இந்த வீட்டுல ஒரு மூலைல இருந்துட்டு போறேன்."

விசாலாட்சி இந்திராவை ரூமுக்குள் அழைத்துச் சென்று கதவை அடைத்தாள்.

" இந்திரா, நீ இந்த வீட்டுல கடைசி வரை மருமகளா இருக்க ஆசைப்படுறீல. அதே தான் என்னோட ஆசையும். நீ என் மருமகளா இருந்து பேரக்குழந்தையை பெத்துக் கொடுக்கணும்னு ஆசைப்படுறேன்."

"அத்தே நீங்களாவது என் கஷ்டத்தை புரிஞ்சுகோங்க."

"இந்திரா நீ சங்கரை கல்யாணம் செஞ்சதால இந்த வீட்டுக்கு மருமகளா
All is well
[+] 3 users Like kamappithan's post
Like Reply


Messages In This Thread
RE: இரண்டாம் முடிச்சு - by kamappithan - 08-01-2021, 04:18 PM



Users browsing this thread: 1 Guest(s)