அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
பாகம் - 65

இரண்டு நாள் கழித்து,

பஞ்சாபின், ஜலந்தர் நகரில் இருந்தாள், மது. மறுநாள், ரஞ்சித்தின் திருமணம். அதற்கான வேலைகளில், தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தாள். இரண்டு நாட்களுக்கு முன்னால் நடந்த நிகழ்வின், எந்த ஒரு தாக்கமும் இல்லை, அவளிடத்தில். மணியைப் பிரிந்து வாழ்ந்த, நான்கு வருடகாலத்தில், எதையும் எதிர்கொள்ளும் பக்குவத்தை பெற்றிருந்தாளோ? இல்லை, தான், அவனை மறுதலித்ததைப் போல, அவன் தன்னை மறுதலித்ததில், உள்ள நியாயத்தை உணர்ந்து, புரிந்து கொண்டாளோ? இல்லை நேத்ராவின் கேள்வியில், அவன் மும்பையில் இருந்து திரும்பி வருவதற்காக காத்திருந்த இரண்டு நாட்களில், இப்படித்தான் நடக்கும் என்று, ஒருவாராக தன்னைத் தயார் படுத்திக் கொண்டாளோ? இல்லை மணியின் வாழ்வில், இன்னொரு பெண் இருக்கிறாள் என்று அறிந்து கொண்ட நிம்மதியா? என்பதை, அவள் மட்டுமேதான் அறிவாள். மணியிடம், மூன்று நாட்களில் எனக்கு திருமணம் என்று அவள் சொன்னது கூட, ரஞ்சித்தின் திருமணத்தை நினைவினில் வைத்துத்தான். திரும்பவும் பேசிப்பார்க்கலாம், என்று நேத்ரா எவ்வளவோ முறை கூறியும், மறுத்தவள், அன்று இரவே அங்கிருந்து கிளம்பிவிட்டாள். இப்பொழுது இங்கே ரஞ்சித்தின் தீர்மான வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

மறுநாள் அணிந்து கொள்ள அவளுக்கு என, ரஞ்சித் எடுத்த உடையாய் வாங்க அவனைத் தேடிச்சென்றாள். ரஞ்சித்தை அறையில் நுழைந்தவள், அவன் அமர்ந்திருந்த நிலையைக் கண்டதும், ஏதோ தவறு நடக்கப் போவதாக மனதில் உறுத்தியது. தரையில் அமர்ந்திருந்தவன், சாய்ந்து அமர்ந்திருந்த சோபாவில் தலையை சரித்து, விட்டத்தை வெறித்தபடி இருந்தான். வேகமாக அறையில் நுழைந்த மதுவின் நடையின் வேகம் குறைந்தது. மது வந்த சத்தம் உணர்ந்தவன், சட்டென எழுந்து சோபாவில் அமர்ந்து கொண்டு, அவளைப் பார்த்து சிரித்தான். சிரிப்பில் இருந்த வலியில், அவன் நிலைக்கான காரணம், வெண்ணிலாதான் என்று விளங்கியது மதுவுக்கு. எதுவும் பேசாமல் அருகிலிருந்த சோபாவில் அமர்ந்தாள்.

"வெண்ணிலாவை பார்க்கிறியா மதி!!" மதுவின் முகம் பார்த்த ரஞ்சித் கேட்டான். வெண்ணிலாவை திருமணத்திற்கு அழைத்து இருக்கிறானா? என்று திகைத்தவள், சரி என்பது போல் தலையசைத்தாள்.

"அங்க பாரு!!" என்று ரஞ்சித் கைகாட்டிய திசையில் திரும்பிப் பார்த்தவள் அதிர்ச்சியானாள்.

ரஞ்சித், எழுந்து சென்று அந்த அறையில் இருந்த பாத்ரூமுக்குள், தன்னை வைத்து அடைத்துக் கொண்டான். மதுவோ, ரஞ்சித் கைகாட்டிய திசையில் இருந்த கண்ணாடியில் தெரிந்த, தன் பிம்பத்தை வெறித்துக் கொண்டிருந்தாள். சொல்ல முடியாத ஒரு உணர்வு அவளை ஆட்கொண்டது. அவன் சொன்ன வெண்ணிலாவின் கதை, தன் கதைதான் என்பது அவளுக்கு தெளிவாக விளங்கியது. அவனிடம் பகிர்ந்து கொண்ட கதையில், அவன் கற்பனையால், கண், காது, மூக்கு வைத்து, தனக்கே திருப்பிச் சொல்லி, தன்னை தேற்றி இருக்கிறான் என்பது, தெளிவாக புரிந்தது மதுவிற்கு. அதுவரை புதிராக தெரிந்த ரஞ்சித்தை, மொத்தமாக புரிந்து கொண்டாள் மது. கலங்க ஆரம்பித்த அவளது கண்களில் இருந்து, கண்ணீர் வழிந்தது. கதவு திறக்கும் சத்தம் கேட்டதும், கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள், மது.

"சாரி மதி, கொஞ்சம் எமோஷனல் ஆகிவிட்டேன்!!" என்றவன், விரக்தியாக சிரித்தான்.

பரிதாபத்துடன் அவனைப் பார்த்தாள் மது. எழுந்தவள், அந்த அறையில் இருந்து வெளியேற முற்பட்ட

"ஒரே!! ஒரு நிமிஷம்!! மதி!!" என்ற ரஞ்சித், எழுந்து, அவள் அருகே வந்தான்.

"ஐ லவ் யூ!!" என்ற ரஞ்சித்தை பார்த்து, மறுப்பாக தலையசைத்த மதுவின் கண்களில் இருந்து மீண்டும் கண்ணீர்.

"உன்கிட்ட கடைசி வரைக்கும் சொல்லக்கூடாது தான் நினைத்திருந்தேன்!! பட், முடியல!! என்னோட லவ, உங்களது மாதிரி புனிதமான லவ்வானு தெரியல!!" குரல் உடைவதுபோல் இருக்க, பேச்சை நிறுத்தினான்.

"என்னால இந்த கல்யாணம் பன்னிக்க முடியாது!! ஓடிப்போயிடலாம்னு தான் நினைச்சுட்டு இருக்கேன்!! தயவுசெய்து, உனக்காக ஒரு தடவை யோசி!! முடிஞ்சா, எனக்காகவும்!!. நீ சரின்னு சொன்னா, இதே முகூர்த்தத்தில், நாம கல்யாணம் பண்ணிக்கலாம்!! ப்ராப்ளம் வரும்னு நீ கவலை படாதே, எல்லாத்தையும் நான் சமாளிச்சுக்கறேன்!! எங்க அண்ணே எனக்காக எதையும் செய்வான்!!" நிறுத்தி நிதானமாக தெளிவாக பேசிய ரஞ்சித், அந்த அறையிலிருந்து வெளியேறினான்.

நெடுநேரம் அமைதியாக இருந்த மது, கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தவள், ஒரு முடிவுக்கு வந்தாள். நேத்ராவுக்கு அழைத்தாள்.

************

மது, நேத்ராவுக்கு அழைத்த அடுத்த ஒரு மணி நேரத்தில்.

தன்னை தடுக்க முயன்றவனை மீறி, அந்த அறையைத் திறந்தாள், நேத்ரா. அறை திறக்கப்படும் சத்தம்கேட்டு நிமிர்ந்து பார்த்தான், மணி.

"சாரி சார்!!, நான் சொல்ல சொல்ல கேட்காம, உள்ள வந்துட்டாங்க!!" மணியின் அலுவலக வரவேற்பாளர், மணியை பார்த்து பதட்டத்துடன் சொன்னார்.

"பரவால்ல, என்னோட பிரண்டு தான்!!" என்றவன், நேத்ராவைப் பார்த்து, எதிரில் இருந்த இருக்கையை, கை காட்டினான். அவன் காட்டிய இருக்கையில் அமர்ந்ததும்

"மதுவுக்கு நாளைக்கு கல்யாணம்!!" படபடத்தாள், நேத்ரா.

"ஞாபகம் இருக்கு!!" தலையசைத்தான். அவனது எதிர்வினையில், சற்று ஆடித்தான் போனாள், நேத்ரா.

"இன்னும் அவ, உன்ன தான் லவ் பண்ற!!" பட்டெனப் போட்டுடைத்தாள், நேத்ரா. நேத்ராவின் கூற்றில் சற்று ஆடித்தான் போனான், மணி. அவனது அதிர்ச்சியை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட, நேத்ரா.

"அன்னைக்கு வந்தது கூட அத சொல்லத்தான்!!, நீ அத சொல்றதுக்கு கூட அவளுக்கு வாய்ப்பு கொடுக்கல!!. இப்பகூட, அவ பிரெண்ட் ரஞ்சித் கல்யாணத்துக்கு தான் போயிருந்தாள்!!. அவன், சரியான சமயம் பார்த்து, அவ மனச குழப்பி, ஏதோ பண்ணி, அவள கல்யாணத்துக்கு சம்மதிக்க வாச்சிசுட்டான்!!" மித்ரா ரஞ்சித் என்றதும், மணியன் மூளை சுறுசுறுப்படையும் தொகு.

"நீ மட்டும், என்கூட வா!!, எதுவுமே பேச வேண்டாம்!!, உன்ன கண்ணில் பார்த்தா, உன் கூட ஓடி வந்துவிடுவா!!" நம்பிக்கையுடன் பேசிய நேத்ராவை பார்த்து, தன் வழக்கமான சிரிப்பை உதிர்த்தான், மணி. அந்த சிரிப்பெ நெதராவுக்கான பதிலை சொல்லியது. தலையைத் தொங்கப் போட்டவள், நம்ப முடியாமல் தலையை வலதும் இடதுமாக அசைத்தவாறு, ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு எழுந்தாள்.

"அந்த மாயாவ, நான் பார்க்கணும்!!" ஏதோ நினைத்தவளாய் சொன்னாள், நேத்ரா.

அதே நேரத்தில், அந்த அறையில் இருந்த இன்னொரு கதவு, திறக்கப்பட்டது. அதிலிருந்து ஒரு பெண் வெளியே வந்தாள். வெளிவந்த பெண் நேத்ராவை ஒரு நொடி பார்த்தாள். அந்தப் பெண்ணைப் பார்த்த நேத்ராவின் மனதில் ஆத்திரம்

"ச்சீ!! உன் முகத்துல முளிக்கிறதே பாவம் டா!!" என்று கத்தியவள், அந்த அறையிலிருந்து வெளியேறினாள்.

"என்னாச்சு!!" என்று கேட்ட அந்தப் பெண், மணியின் அருகே வந்தாள்,

"நந்திங்!!" என்றவன், அவளை பார்த்து சிரித்தான்.

***************

மறுநாள்,

மொபைலில் தொடு திரையை வெறித்துக் கொண்டிருந்தவன், அதை கட்டிலில் போட்டுவிட்டு, ஷூவை அணிந்து கொண்டான். அடுத்து பெல்ட் போன்ற ஒன்றை இடுப்பில் அணிந்து கொண்டவன், மலை ஏறுவதற்கு தேவையான, கை-கத்தி, கயிறு போன்ற சாதனங்களை எடுத்து பெல்டில் அதற்கென வடிவமைக்கப்பட்டிருந்த அமைப்பினுள் வைத்தான். மழை இறங்குவதற்கு உதவும் இரண்டு கைத்தடியை எடுத்துக் கொண்டு வெளியேறினான். பாதுகாப்பு வேலியிலிருந்த கேட்-டை திறந்து கொண்டு காட்டில் புகுந்தவன், மதுவால் எப்படி தன்னை மன்னிக்க முடிந்தது என்ற கேள்வி கொடுத்த விடையை அந்தக் நீலகிரி மலையின், கிழக்குச் சரிவில் இருந்த பள்ளத்தாக்கில் யாரும் அறியாமல் புதைக்க சென்றான்.

5 மணி நேரம் கழித்து

சோர்வுடன் இருந்தான் மணி. பொதுவாக மூன்றில் இருந்து மூன்றரை மணி நேரத்தில் இறங்கி விடுபவன், நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக, கூடுதலாக நேரம் எடுத்துக் கொண்டான். அந்த காட்டாற்றின் கரையில் அமர்ந்து, ஓடிக்கொண்டிருந்த தண்ணீரை வெறித்தவாறு அமர்ந்திருந்தான். அவன் கேள்விக்கான விடையை மலைச்சரிவில் எங்கோ தொலைத்துவிட்ட நிம்மதி அவன் முகத்தில். மழை இறங்கும்போது, வழுக்கி விழுந்ததன் அடையாளமாக உடலெங்கும் சேறும், சிராய்ப்புகளும் இருந்தது. எழுந்தவன், உடலில் இருந்த சேறை ஆற்று நீரில் கழுவினான்.

நேற்று இரவு பெய்த மழையின் தாக்கத்தால், ஆற்று நீரின் இழுப்பு சற்று அதிகமாகவே இருந்தது. ஆற்றைக் கடக்க ஏதுவான இடம் தேடி, ஆற்றின் கரையோரம் நடக்க ஆரம்பித்தான். பாறைகள் அதிகமா இருந்த ஒரு இடத்தை கண்டதும், ஆற்றைக் கடக்க சரியாக இருக்கும் என்று மனதில் நினைத்தவன், ஆற்றில் இறங்கினான். ஐந்தாறு அடி கூட கடந்து இருக்க மாட்டான், ஆற்ருநீரின் இழுப்பு, அவன் நினைத்ததை காட்டிலும் அதிகமாக இருப்பதை உணர்ந்தவன், ஆற்றைக் கடப்பதற்கு பாதுகாப்பான இடம் இது இல்லை என்று உணர்ந்து கரையேற திரும்பினான். அவன் திரும்ப உடலை சூழற்றிய அடுத்த நொடி, ஆற்று நீரால் அடித்துச் செல்லப்பட்டான். இரண்டு மூன்று பாறைகளில் மோதியவன், ஆற்று நீரால் புரட்டிப் போடப்பட்டு, பாறைகள் இல்லா இடத்தில், ஆற்று நீரின் விசை குறைய, சுதாரித்துக் கொண்டவன் நீந்த ஆரம்பித்தான். நீரின் இழுப்பில், பக்கவாட்டில் நீந்திக் கரையேறுவது பெரும் போராட்டமாக இருந்தது அவனுக்கு. அப்பொழுதுதான் அவன் கண்ணில் பட்டது அந்த திருப்பம்.

நூறு நுத்தம்பது அடி தொலைவில், ஆற்றின் போக்கு வலது பக்கமாகத் திரும்பிய இடத்தில், இடது புறத்தில் ஒரு சிறிய மண்மேடு. திருப்பத்தில் ஆற்றின் இழுப்பு அதிகமாக இருக்கும் என்று உணர்ந்தவன்,கரை ஏறுவதற்கு நல்லவாய்ப்பு என்று நினைத்துக்கொண்டு, முழு மூச்சில், ஆற்றின் இடதுபுறம் நோக்கி நீந்த ஆரம்பித்தான். இயற்கையும் அவனுக்கு உதவி செய்தது, அந்த மணல் மேடை ஒட்டி இருந்த பாறையின் வடிவில். பாறையைப் பற்றிக்கொண்டு சில விநாடி முயற்சியில், அதில் ஏறி அமர்ந்தான். ஏதோ பெரிதாக ஆசுவாசம் அடைந்தது, அவன் உடல், இதெல்லாம் ஒன்றும் இல்லை என்பது போல் சலனம் இல்லாமல் இருந்தது அவன் மனம். பாறைக்கும், அந்த மணல் மேட்டிற்கும் இடையில் இரண்டடிக்கு தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது.

சுவாசத்தை சீர் படுத்திக் கொண்டவன், கரையிறங்கிய பக்கமே, கரை ஏறினான். காலில் பாதி அளவுக்கு இருந்த சேற், திடீரென்று முழங்காலை தாண்டியது. சுதாரிக்கும் முன்பே, அடுத்த காலையும் புதைமணலில் எடுத்து வைத்திருந்தான். புதைமணல் சிக்கிவிட்டோம் என்பதை, அவன் உடல், மூளைக்கு உணர்த்தியதும், மூளை அவன் உடலை அவசரப்படுத்தியது. அதன் விளைவாக, சிறிது நேரத்திலேயே முழங்காள் அளவுக்கு இருந்த சேற், அவன் இடுப்பை தாண்டியது. உடலின் இயக்கத்தை நிறுத்தினான். கால்களில் தரை தட்டுப்படவில்லை. தனது முடிவு இதுதானோ என்ற எண்ணம் தோன்ற, சேற்றின் குழுமை அவன் உள்ளத்திலும் பரவியது. மதுவை, ஒருமுறை கடைசியாக பார்க்க வேண்டும் என்ற ஏக்கம், மனதில். மொபைலை எடுக்க இடுப்பில் கட்டியிருந்த பெல்ட்-டை தொட்டு தடவியவனுக்கு, மொபைலை கட்டிலில் போட்டுவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது. அவன் உதடுகளில் ஒரு ஏளன சிரிப்பு, அது யாருக்கானது என்பது அவன் மட்டுமே அறிவான்.

************

அன்று காலை,

மூன்றாவது முயற்சியில் தான் அழைப்பை எடுத்தாள், நேத்ரா.

"இந்த ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணு, அப்புறம் உன்னை தொந்தரவு பண்ணமாட்டேன்!!" அவள் பேசும் முன்னமே பேசினான் மணி.

"சொல்லு!!" அவளுக்கு பேச விருப்பம் இல்லை என்பது தெளிவாக புரிந்தது மணிக்கு.

"மது கல்யாண போட்டோ இருந்தா அனுப்பு!!" ஏன் அதைக்கேட்டான் என்பது அவனுக்கு மட்டுமே வெளிச்சம்.

"அத வச்சு என்ன பண்ண போற?" நேத்ராவின் கேள்விக்கு, பதில் அளிக்கவில்லை, மணி.

"அனுப்பிட்டேன், பார்த்து சந்தோஷப்பட்டுக் கோ!!" என்றவள் அழைப்பை துண்டித்துவிட்டாள்.

"டிங்" என்ற சத்தத்துடன் மெசேஜ் வந்தது. அதைதிறந்து பார்க்காமல் மனமில்லாமல், வெறித்துக் கொண்டிருந்தவன், அதை பார்க்காமலே மொபைலை கட்டிலில் போட்டுவிட்டு, மலை இறங்க ஆரம்பித்தான். ஆனால், இப்போது அதைப்பார்த்துவிட்டு வந்திருக்கலாம் என்ற எண்ணம், அவன் மனதில்.

************

கை விரல்களால் பற்றியவனுக்கு ஒரு எண்ணம். மீள்வதற்கான வழியை அவன் ஆராய்ந்தான். கரையில் இருந்த மரத்தின் விழுது ஓன்று, அவன் தலைக்கு மேலாக ஏழு எட்டு அடியில் தொங்கிக் கொண்டிருந்தது. உடலை அசைவை முடிந்த அளவுக்கு கட்டுப்படுத்திக்கொண்டு, இடுப்பில் இருந்த பெல்ட்டை உருவினான். அதன் நீளம் குறைவாக இருந்தது. பெல்ட்டில் இருந்த கத்தியை வைத்து. அதை இரண்டாக கிழித்து, அதன் ஒரு முனையில் கத்தியை குறுக்காக வைத்து காட்டினான். கத்தி கட்டைபட்ட முனையை கிளையை நோக்கி எறிந்தான். நான்காவது முயற்சியில் கிளையில் சுற்றிக் கொண்டது. மெதுவாக அதை இழுத்துப் பார்த்தான், அவன் கணம் தாங்கும் என்று தோன்றியது.

முழங்கால் அளவு அந்த புதைமணலில் இருந்து வெளியேறியிருந்த நேரம், பெல்ட் அறுந்தது. மீண்டும் புதைமணலில் விழுந்தான். தப்பிக்க நினைததற்கு தண்டனையாக மார்புவரை அவனை தழுவிக்கொண்டது அந்த புதைமணல் சேற். சாகப்போகிறோம் என்ற கவலையெல்லாம் இல்லை அவனிடம், கண்களை மூடி, வாழ்வின் இறுதி சுவாசங்களை ரசித்து, மூச்சுவிட்டான். சேற் தோள்களைத் தாண்டி கழுத்தை தொட்ட போது, மீண்டும் அவனது உதடுகளில் ஒரு ஏளனசிரிப்பு. சாவு கூட தன்னை ஏமாற்றியது காரணமாக இருக்கலாம். அவன் காலில் கடினமான தரைதட்டுப்பட்டது. சுற்றிலும் கால்களை வைத்து தடவி பார்த்தான், கிட்டிய வரைக்கும் கடினமான தரையே, அவன்கால்களில் பட்டது.

பத்து நிமிட போராட்டத்துக்குப் பின், தரையில் குப்புறப் படுத்துக் கிடந்தான். இன்னும் காலின் பாதி, அந்தப் புதை மணலில் இருந்தது. எழுந்தவன் சேறொடு மலை ஏற ஆரம்பித்தான்.

அன்று இரவு,

வழக்கமாக அமரும் பாறையில் அமர்ந்து, எதிரே தெரிந்த, இருள்சூழ்ந்த பள்ளத்தாக்கை வெறித்துக் கொண்டிருந்தான், மணி. மலையேறியவன் குளித்து முடித்து, உடை மாற்றியிருந்தான். கையில் இருந்த, மொபைலை எடுத்து, நேத்ரா அனுப்பிய, மதுவின் திருமண புகைப்படத்தை பார்த்தான். அழகாக சிரித்துக் கொண்டிருந்தாள் மது. இளம் சிவப்பு வண்ண, காக்ரா-சோளியில் தேவதை போல் இருந்தாள். அருகே, முகத்தில் தாடியும், தலையில் டர்பனுமாக, சிரித்துக் கொண்டிருந்தான் ஒருவன். ரஞ்சிதாக இருக்கும் என்று நினைத்தவன், தொடுதிரையை அனைத்துவைத்தான். மீண்டும் எதிரே, விரிந்துகிடந்த, இருள்சூழ்ந்த, பள்ளத்தாக்கை வெறித்தான்.

அவனது உதடுகளில் புன்னகை. வலியும், நிம்மதியும், சமஅளவில், நிரப்பிக்கொண்ட புன்னகை. இந்த மனம் என்னும் மாயக் கண்ணாடியின் பிரதிபலிப்புகள் எந்த விதிக்குள்ளும் அடங்காதவை, குற்ற உணர்ச்சியில், கோபத்தை எதிர்பார்த்த இடத்தில், மன்னிப்புடன், காதலும் கொடுக்கப்பட, காதலை ஏற்று மகிழ்ந்து சிரிப்பதை விடுத்து, மன்னிப்பை மட்டும் எடுத்துக்கொண்டு அழுகின்றது.

மனம், யாராலும் தீர்க்க முடியாத, நேரில்லாத கணித சமன்பாடு.
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 07-01-2021, 04:42 AM



Users browsing this thread: 5 Guest(s)