29-12-2020, 12:02 AM
தொடர்ச்சி......
இரண்டு நாள் கழித்து,
ஃப்யூச்சர் குரூப்ஸ் சேர்மன் ஆவதற்கான, மொத்த காரியங்களையும் முடித்திருந்தான் மணி. அதன் கடைசி நகர்வை, தன் தந்தையின் வலது கை என்று சொல்லப்படும், சங்கரபாணியை வைத்தே முடிக்க திட்டமிட்டு அதை செயல்படுத்தினான். தனக்கும், தன் தந்தைக்கும், நிகழ்ந்த மோதலுக்கு சாட்சியாக இருப்பது இருவர் மட்டும். கண்டிப்பாக, தன் தாய், அதைப் பற்றி, வெளியே பேச மாட்டாள் என்று உறுதியாய் நம்பி இருந்த மணியின் கவனம், சிவகுருவின் செக்கரட்டரி, சங்கரபாணி மீது விழுந்தது. இதுவரை எதையும் வெளியே சொல்லியிறாத அவரை, நிரந்தரமாக அமைதியாக்க, அவன் அடுத்த கட்ட நகர்வை நகர்த்தினான். அவரை அழைத்தவன்
"நீங்க, வாங்குற சம்பளத்துக்கு விசுவாசமாக இருக்கிறதா இருந்தால், ஃப்யூச்சர் குரூப்ஸ், சேர்மனோட, செகரட்ரியா தொடரலாம், இல்ல, அந்தப் பதவியில் இருக்கிற ஆளுக்குத்தான் விசுவாசமாக இருக்கணும்னு தோணுச்சுனா, இப்பவே கிளம்பலாம்!!" தன் வயதுக்கு மீறிய நிதானத்துடன் பேசியவன், சில காகிதங்களை, சங்கர பாணியை நோக்கி நீட்டினாள். குழுமத்தின் அனைத்து நிறுவனங்களுக்குமான சுற்றறிக்கையோடு, தானே முடிசூட்டிக் கொண்டதை தெரிவிக்கும் பொருட்டு ஏறப்பாடு செய்ய வேண்டிய, பத்திரிக்கையாளர் சந்திப்புக்கான அழைப்பும் இருந்தது. சங்கரபாணியும் அடுத்தடுத்த நாட்களில், தன் விசுவாசம் வாங்கும் சம்பளத்துக்குத்தான் என்று நிரூபித்தார். ஒரே வேளை அவரின் விசுவாசம், சிவகுருவுக்குத்தான் என்று முடிவெடுத்திருந்தால், மணி அவரை என்ன செய்ய திட்டமிட்டிருந்தான் என்பது அவனுக்கே வெளிச்சம்.
தன் தந்தையின், வலதுகையாக செயல்பட்டவறின் மூலம், மொத்த நிறுவனத்திற்குமான செய்தியை கடத்தினான், மணி. யாரையும் இழக்க விரும்பாதவன், அதே நேரத்தில் அனைவரது விசுவாசமும், யாரை, எதை நோக்கி இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தான். அடுத்த சில நாட்களிலேயே, திட்டமிட்டது போல், பங்கு சந்தையில் திட்டமிட்ட படி நிறுவனத்தை பதிவு செய்தான். தங்கள் குழுமத்தின் அடையாளத்தை மாற்றி அமைக்கும் விதமாக, புதிய அலுவலகத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது, அதிலேயே அவன் தங்குவதற்கென, அதன் மாடியில், அவனது அலுவலகத்துடன் கூடிய சிறிதாக வீடு போன்ற அமைப்புடன்.
பங்குசந்தையில் பட்டியலிடப்பட்ட கம்பெனி, உடனே உயரே பறக்காவிட்டாலும், அந்தக் புதிய அலுவலக கட்டிடம் போல், ஊரே மெச்சும் வகையில் எழுந்து நின்றது. அந்த புதிய அலுவலக கட்டிடமோ, எழுந்து நின்றது, ஃப்யூச்சர் குரூப்ஸ்ஸின், கோயம்புத்தூரின் புதிய அடையாளமாக.
*****************
கட்டிட திறப்பு விழா முடிந்த, பத்து நாள் கழித்து.
தன் அலுவலக அறையை திறந்து கொண்டு நுழைந்த அம்மாவை பார்த்ததும், முதலில் அதிர்ச்சியடைந்தாலும், சுதாரித்துக்கொண்டு, அதை ஒட்டி இருந்த, தனக்கென அவன் வடிவமைத்துக் கொண்ட தனி உலகமாக கருதிய, வீட்டின் கதவை, நோக்கி நடந்தான்.
"ஒரு நிமிஷம்!!" சுமாவின் சொற்கள், அவன் கால்களை கட்டிப் போட்டது.
ஒரு கையும், காலும், சுத்தமாக செயல்படாமல் போக மூன்று மாத, ஹாஸ்பிடல் ட்ரீட்மென்ட் விளைவாக கொஞ்சம் பேச ஆரம்பித்திருந்தான், சிவகுரு. பின் வீட்டிறக்கு வந்துவிட்ட சிவகுருவுக்கு, தினமும், மணியைப் பார்க்க, பார்க்க, அது அவனது உடல் சுகவீனத்தை, மேலும் கடுமையாக்கியது. பழனி செல்வதென்ற முடிவு செய்து, புதிய கட்டிடம் திறந்த மறுநாள், சுமாவை அழைக்க, அவளும், சிவகுருவுடன் சென்றாள். பழனி சென்றவள், தன் கணவனுக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்துவிட்டு, பெரியவர்கள் துணையில் சிவகுருவை விட்டுவிடு, பத்து நாட்களிலேயே திரும்பி வந்துவிட்டாள். திரும்பி வந்தவளுக்கு, கடந்த பத்து நாட்களாக மணி, வீட்டிற்கு வரவில்லை என்று சொல்லப்பட, அவனைத் தேடி அலுவலகத்திற்கே வந்துவிட்டாள். அவன் அருகில் சென்ற சுமா,
"உன்ன, நான் யாருக்கு வேண்ணாலும் பெத்திருக்கலாம்!! ஆனா, நான்தான் பெத்தேன்!!. நான் தான் உன் அம்மாங்கிறதுல, உனக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்!!" நான் தான் உன் அம்மா சொல்லும் பொழுதே உடைந்து அழ ஆரம்பித்து இருந்தாள், சுமா. கட்டுப்படுத்த முடியாதவள், தன் மகனை அணைத்து, அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு அழுதாள்.
"ஏண்டா இப்படி பண்ண?" அவனுடைய சட்டையை பற்றி கேட்டவள்,
"முட்டாளாகவே வாழ்ந்திருந்தால் கூட, நிம்மதியா வாழ்ந்திருப்பேனே!!" என்றவள், மீண்டும் தன் மகனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டு அழுதால். அவள், அழுது முடிக்கும்வரை அமைதியாக இருந்தவன், பின், அவளை விலக்கிக்விட்டு, அவள், சொன்னது எதுவும் காதில் விழவில்லை என்பதைப்போல, அவன் அறையை நோக்கி நடந்தான்.
“உன்ன தொந்தரவு பண்ணமாட்டேன், உன் கண்ணுல கூட படமாட்டேன்!! தயவு செய்து வீட்டுக்கு வா டா!!” குரல் தழுதழுக்க சொன்னவளின் சொற்கள் மணியின் காதில் விழுந்ததா என்பதை அவன் மட்டுமே அறிவான்.
தன் அன்னை, தனக்காகத்தான் திரும்பி வந்ததிருக்கிறாள் என்பது புரிந்தாலும், அவளை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில், அவன் இல்லை. ஏனோ அவளின் வருகை முன்னைக் காட்டிலும் கூடுதல் வேகத்தில், தொழில் முனைப்பு காட்ட வைத்து. அவள் இழந்தது யாரை என்பதை அவளுக்கு முழுதாக உணர்த்து எண்ணம் கொடுத்த முனைப்பு அது. அந்த முனைப்பிலேயே, வரவே கூடாது என்று நினைத்திருந்த வீட்டுக்குள், மீண்டும் அடி எடுத்து வைத்தான், சுமா "வீட்டுக்கு வா" என்று அழைத்த, பத்து நாள் கழித்து. மொத்தமாக மிருகமாய் மாறியிருந்த அவனுக்குள், மனிதத்தின் மிச்சம் கொஞ்சமேனும் இருக்குமா?? என்பதை அவன் மட்டுமே அறிவான்.
***************
டிஸ்கி
உணர்வுகள் இல்லாத, மிருகமென மாறி, மணி தன் அடுத்தகட்டப் பாய்ச்சலை, வெறியோடிருக்க, அதே காலகட்டத்தில், டெல்லியில், தன் காதல் கொடுத்த கசப்பான நினைவுகளில் தேங்கிக் கிடந்தவள், அதிலிருந்து தன்னை மீட்டெடுக்க, மனிதத்தில், மனித சேவையில், தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டாள், மது. அவளின் விடமுயர்ச்சியில் பிழைத்துக்கொண்ட சிறுவனின் தாய், அவள் கைகளை பற்றிக்கொண்டு கண்ணீர் விட, மயிர்க்கூச்செறிந்தவள், பிழைக்கவே மாட்டான் என்று கைவிடப்பட்ட ஒரு சிறுவன், உயிர் பிழைப்பதற்கு முக்கியமான காரணியாக இருந்ததின்,உணர்ச்சிப்பெருக்கில் இருந்தாள். அவளை, வாழ்வின் அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்த, அவளை தேடி டெல்லிக்கு வந்து இறங்கியது ஓர் உயிர்.
***************
இரண்டு நாள் கழித்து,
ஃப்யூச்சர் குரூப்ஸ் சேர்மன் ஆவதற்கான, மொத்த காரியங்களையும் முடித்திருந்தான் மணி. அதன் கடைசி நகர்வை, தன் தந்தையின் வலது கை என்று சொல்லப்படும், சங்கரபாணியை வைத்தே முடிக்க திட்டமிட்டு அதை செயல்படுத்தினான். தனக்கும், தன் தந்தைக்கும், நிகழ்ந்த மோதலுக்கு சாட்சியாக இருப்பது இருவர் மட்டும். கண்டிப்பாக, தன் தாய், அதைப் பற்றி, வெளியே பேச மாட்டாள் என்று உறுதியாய் நம்பி இருந்த மணியின் கவனம், சிவகுருவின் செக்கரட்டரி, சங்கரபாணி மீது விழுந்தது. இதுவரை எதையும் வெளியே சொல்லியிறாத அவரை, நிரந்தரமாக அமைதியாக்க, அவன் அடுத்த கட்ட நகர்வை நகர்த்தினான். அவரை அழைத்தவன்
"நீங்க, வாங்குற சம்பளத்துக்கு விசுவாசமாக இருக்கிறதா இருந்தால், ஃப்யூச்சர் குரூப்ஸ், சேர்மனோட, செகரட்ரியா தொடரலாம், இல்ல, அந்தப் பதவியில் இருக்கிற ஆளுக்குத்தான் விசுவாசமாக இருக்கணும்னு தோணுச்சுனா, இப்பவே கிளம்பலாம்!!" தன் வயதுக்கு மீறிய நிதானத்துடன் பேசியவன், சில காகிதங்களை, சங்கர பாணியை நோக்கி நீட்டினாள். குழுமத்தின் அனைத்து நிறுவனங்களுக்குமான சுற்றறிக்கையோடு, தானே முடிசூட்டிக் கொண்டதை தெரிவிக்கும் பொருட்டு ஏறப்பாடு செய்ய வேண்டிய, பத்திரிக்கையாளர் சந்திப்புக்கான அழைப்பும் இருந்தது. சங்கரபாணியும் அடுத்தடுத்த நாட்களில், தன் விசுவாசம் வாங்கும் சம்பளத்துக்குத்தான் என்று நிரூபித்தார். ஒரே வேளை அவரின் விசுவாசம், சிவகுருவுக்குத்தான் என்று முடிவெடுத்திருந்தால், மணி அவரை என்ன செய்ய திட்டமிட்டிருந்தான் என்பது அவனுக்கே வெளிச்சம்.
தன் தந்தையின், வலதுகையாக செயல்பட்டவறின் மூலம், மொத்த நிறுவனத்திற்குமான செய்தியை கடத்தினான், மணி. யாரையும் இழக்க விரும்பாதவன், அதே நேரத்தில் அனைவரது விசுவாசமும், யாரை, எதை நோக்கி இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தான். அடுத்த சில நாட்களிலேயே, திட்டமிட்டது போல், பங்கு சந்தையில் திட்டமிட்ட படி நிறுவனத்தை பதிவு செய்தான். தங்கள் குழுமத்தின் அடையாளத்தை மாற்றி அமைக்கும் விதமாக, புதிய அலுவலகத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது, அதிலேயே அவன் தங்குவதற்கென, அதன் மாடியில், அவனது அலுவலகத்துடன் கூடிய சிறிதாக வீடு போன்ற அமைப்புடன்.
பங்குசந்தையில் பட்டியலிடப்பட்ட கம்பெனி, உடனே உயரே பறக்காவிட்டாலும், அந்தக் புதிய அலுவலக கட்டிடம் போல், ஊரே மெச்சும் வகையில் எழுந்து நின்றது. அந்த புதிய அலுவலக கட்டிடமோ, எழுந்து நின்றது, ஃப்யூச்சர் குரூப்ஸ்ஸின், கோயம்புத்தூரின் புதிய அடையாளமாக.
*****************
கட்டிட திறப்பு விழா முடிந்த, பத்து நாள் கழித்து.
தன் அலுவலக அறையை திறந்து கொண்டு நுழைந்த அம்மாவை பார்த்ததும், முதலில் அதிர்ச்சியடைந்தாலும், சுதாரித்துக்கொண்டு, அதை ஒட்டி இருந்த, தனக்கென அவன் வடிவமைத்துக் கொண்ட தனி உலகமாக கருதிய, வீட்டின் கதவை, நோக்கி நடந்தான்.
"ஒரு நிமிஷம்!!" சுமாவின் சொற்கள், அவன் கால்களை கட்டிப் போட்டது.
ஒரு கையும், காலும், சுத்தமாக செயல்படாமல் போக மூன்று மாத, ஹாஸ்பிடல் ட்ரீட்மென்ட் விளைவாக கொஞ்சம் பேச ஆரம்பித்திருந்தான், சிவகுரு. பின் வீட்டிறக்கு வந்துவிட்ட சிவகுருவுக்கு, தினமும், மணியைப் பார்க்க, பார்க்க, அது அவனது உடல் சுகவீனத்தை, மேலும் கடுமையாக்கியது. பழனி செல்வதென்ற முடிவு செய்து, புதிய கட்டிடம் திறந்த மறுநாள், சுமாவை அழைக்க, அவளும், சிவகுருவுடன் சென்றாள். பழனி சென்றவள், தன் கணவனுக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்துவிட்டு, பெரியவர்கள் துணையில் சிவகுருவை விட்டுவிடு, பத்து நாட்களிலேயே திரும்பி வந்துவிட்டாள். திரும்பி வந்தவளுக்கு, கடந்த பத்து நாட்களாக மணி, வீட்டிற்கு வரவில்லை என்று சொல்லப்பட, அவனைத் தேடி அலுவலகத்திற்கே வந்துவிட்டாள். அவன் அருகில் சென்ற சுமா,
"உன்ன, நான் யாருக்கு வேண்ணாலும் பெத்திருக்கலாம்!! ஆனா, நான்தான் பெத்தேன்!!. நான் தான் உன் அம்மாங்கிறதுல, உனக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்!!" நான் தான் உன் அம்மா சொல்லும் பொழுதே உடைந்து அழ ஆரம்பித்து இருந்தாள், சுமா. கட்டுப்படுத்த முடியாதவள், தன் மகனை அணைத்து, அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு அழுதாள்.
"ஏண்டா இப்படி பண்ண?" அவனுடைய சட்டையை பற்றி கேட்டவள்,
"முட்டாளாகவே வாழ்ந்திருந்தால் கூட, நிம்மதியா வாழ்ந்திருப்பேனே!!" என்றவள், மீண்டும் தன் மகனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டு அழுதால். அவள், அழுது முடிக்கும்வரை அமைதியாக இருந்தவன், பின், அவளை விலக்கிக்விட்டு, அவள், சொன்னது எதுவும் காதில் விழவில்லை என்பதைப்போல, அவன் அறையை நோக்கி நடந்தான்.
“உன்ன தொந்தரவு பண்ணமாட்டேன், உன் கண்ணுல கூட படமாட்டேன்!! தயவு செய்து வீட்டுக்கு வா டா!!” குரல் தழுதழுக்க சொன்னவளின் சொற்கள் மணியின் காதில் விழுந்ததா என்பதை அவன் மட்டுமே அறிவான்.
தன் அன்னை, தனக்காகத்தான் திரும்பி வந்ததிருக்கிறாள் என்பது புரிந்தாலும், அவளை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில், அவன் இல்லை. ஏனோ அவளின் வருகை முன்னைக் காட்டிலும் கூடுதல் வேகத்தில், தொழில் முனைப்பு காட்ட வைத்து. அவள் இழந்தது யாரை என்பதை அவளுக்கு முழுதாக உணர்த்து எண்ணம் கொடுத்த முனைப்பு அது. அந்த முனைப்பிலேயே, வரவே கூடாது என்று நினைத்திருந்த வீட்டுக்குள், மீண்டும் அடி எடுத்து வைத்தான், சுமா "வீட்டுக்கு வா" என்று அழைத்த, பத்து நாள் கழித்து. மொத்தமாக மிருகமாய் மாறியிருந்த அவனுக்குள், மனிதத்தின் மிச்சம் கொஞ்சமேனும் இருக்குமா?? என்பதை அவன் மட்டுமே அறிவான்.
***************
டிஸ்கி
உணர்வுகள் இல்லாத, மிருகமென மாறி, மணி தன் அடுத்தகட்டப் பாய்ச்சலை, வெறியோடிருக்க, அதே காலகட்டத்தில், டெல்லியில், தன் காதல் கொடுத்த கசப்பான நினைவுகளில் தேங்கிக் கிடந்தவள், அதிலிருந்து தன்னை மீட்டெடுக்க, மனிதத்தில், மனித சேவையில், தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டாள், மது. அவளின் விடமுயர்ச்சியில் பிழைத்துக்கொண்ட சிறுவனின் தாய், அவள் கைகளை பற்றிக்கொண்டு கண்ணீர் விட, மயிர்க்கூச்செறிந்தவள், பிழைக்கவே மாட்டான் என்று கைவிடப்பட்ட ஒரு சிறுவன், உயிர் பிழைப்பதற்கு முக்கியமான காரணியாக இருந்ததின்,உணர்ச்சிப்பெருக்கில் இருந்தாள். அவளை, வாழ்வின் அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்த, அவளை தேடி டெல்லிக்கு வந்து இறங்கியது ஓர் உயிர்.
***************