27-12-2020, 07:25 PM
(This post was last modified: 27-12-2020, 07:38 PM by Doyencamphor. Edited 1 time in total. Edited 1 time in total.)
தொடர்ச்சி....
மறுநாள் அலுவலகத்தில்.
"என்னாச்சுப் பா!! திடீர்னு நிறைய சேஞ்ச் பண்ணி இருக்க?" நேற்று செய்த மாற்றங்களால், தன்னை கையெழுத்து போட சொல்ல வருவான் என்று எதிர்பார்த்து காத்திருந்த சிவகுரு, அவன் வரமால் போகவே, மணியை தேடி வந்தார், அவன் அலுவலக அறைக்கு.
"இப்போ அதுல என்ன பிராப்ளம்?" வந்தவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஆனால் எதிர்பார்த்து காத்திருந்தான்.
"இல்லப் பா!! இன்னும் கொஞ்ச எக்ஸ்பீரியன்ஸ் கெயின் பண்ணிக்க!! ஸ்டாக்ல லிஸ்ட் பண்ணினதுக்கு அப்புறம், எனக்கு ஒரு ரெண்டு வருஷம் மட்டும் டைம் கொடு!! நான் எல்லாத்தை ஸ்ட்ரீம்லைன் பண்ணினதுக்கு அப்புறம், நானே உன்னை சேர்மன் ஆக்குறேன்" நேர்த்தியாக காய்நகர்த்தியா சிவகுரு.
"சிவகுரு சார்!! இது என்னோட கம்பெனி!! என்னை சேர்மன் ஆக்க என்னால மட்டும்தான் முடியும்!!" அசைந்து கொடுப்பதாய் இல்லை மணி.
"சரி ஒத்துகிறேன்!! நான் பண்ணது தப்புதான்!! இல்லன்னு சொல்லல!! நான் பண்ண தப்ப, சரி பண்றதுக்கு எனக்கு ஒரு வாய்ப்பு கொடு!! நமக்குள்ள இருக்க பிரச்சனையெல்லாம் தொழில்குள்ள கொண்டு வராத!!" சிவகுரு மேலும் இறங்க
"தேவை இல்லாம ட்ராமா பண்ணி!! என் டைம் வேஸ்ட் பண்ணாதீங்க!! நீங்க கெளம்பலாம்!!" பிடித்த பிடியில் நின்றான் மணி.
"உனக்கு புரியல, இந்த மொத்த குழுமமும் என்னோட உழைப்பு!! நான் மட்டும் கோர்ட்டுக்குப் போனா, குறைஞ்சபட்சம் எனக்கு 30% பர்சன்டேஜ்டாவது கிடைக்கும்!!. தேவை இல்லாம குடும்பத்துக்குள்ள புதுசா குழப்பத்த கொண்டு வராத!!" மிஞ்சினாலும், சத்தத்தை உயர்த்தவில்லை சிவகுரு.
“............................” நிமிர்ந்து சிவகுருவை, ஏளனமாக பார்த்து, சத்தம் வராமல் சிரித்தான்.
"நீ பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்லை!! என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு!! இது என்னோட கம்பெனி!! என்னோட முப்பது வருஷ உழைப்பு!! அவ்வளவு ஈசியா நீ என்னை தூக்க முடியாது!!" பொறுமை இழந்த சிவகுரு, தன் கையிலிருந்த காகிதத்தைக் கசக்கி எறிந்தான். சிவகுருவின் கோபத்தை சற்றும் மதியாத மணி, மொபைலை எடுத்து நோண்டிக்கொண்டிருந்தான். "டிங்" என்ற சத்தத்தோடு, சிவகுருவின் மொபைலுக்கு ஒரு மெசேஜ் வர, அந்த மெசேஜை பார்க்குமாறு கண்களால் சொன்னான் மணி.
தனக்கு வந்த மெசேஜை எடுத்துப் பார்த்த சிவகுருவின் முகம் வெளிறியது, மனம் பதறியது, உடல் உதறியது. மணியும், சிவகாமியும், கடைசியாக கூடிக் களித்ததைப் பார்த்து சுயஇன்பம் செய்து கொண்டிருந்த சிவகுருவின் வீடியோ அது, அவனது குரூரமே அவனை வீழ்த்தியது. ஒருவேளை, சிவகாமி இறந்துவிட்டால், அவள் மானத்தையாவது காப்பாற்றலாம் என்று அவளது வீட்டில் இருந்த CCTV வீடியோ பதிவு அடங்கியிருந்த ஹார்ட் டிஸ்கை எடுத்து வந்த மணி, சத்தியமாக நினைத்துக்கூட பார்க்கவில்லை, அது சிவகுருவை அடித்து வீழ்த்த உதவும் என்று. அந்த குளிரூட்டப்பட்ட அறையிலும், வியர்த்து கொட்ட, அப்படியே சோர்ந்து, மணியின் முன்னால் போடப்பட்டிருந்த இருக்கையில் சோர்ந்து விழுந்தான். ஒரு குரூரமான புன்னகை, மணியின் முகத்தில். இன்டர்காமில் தொடர்புகொண்டு சங்கரபாணியை அழைத்தான்.
"சார் ஸைன் பன்னிடுவார், அவர் ஸைன் பண்ணிக் கொடுத்ததும்!! அடுத்து ஆக வேண்டிய வேலையைப் பாருங்க!!" என்று உள்ளே வந்தவரிடம் சொல்ல, அவரோ சிவகுருவின் நிலை பார்த்து பதறிப் போனார். ஒரு காகிதத்தை எடுத்து தன் தந்தையை நோக்கி நகர்த்தி வைத்தான், எதுவும் சொல்லாமல் அதை நிமிர்ந்து பார்த்தவன், சற்றுமுன் தான் கசக்கி எரிந்த, அந்த கடிதத்தின் மற்றொரு பிரதியில், எதுவும் சொல்லாமல் கையெழுத்திட்டார்.
"பிரஸ் மீட் எப்போ வைக்கணும்னு சார் சொல்லுவார், அவர் கிட்ட கேட்டுக்கிட்டு அதுக்கு தகுந்த மாதிர் ஏற்பாடு பன்னிருங்க!!" என்று சங்கரபாணியிடம், தன் தந்தை கையெழுத்திட்ட அந்த காகிதங்களை கொடுக்க, வாங்கிப் படித்தவரின், கை நடுங்க ஆரம்பித்தது.
" கவலைப்படாதீங்க, புது சேர்மேனோட செகராட்டரியும் நீங்க தான்!! வாங்குரா சம்பளத்துக்கு விசுவாசமா இருங்க!! பிரஸ் மீட் முடியிரவரைக்கும் இந்த விஷயம் வெளிய போகக்கூடாது!! இப்போ போயி, ஆக வேண்டியதா பாருங்க!!" தான் யார் என்பதை, சங்கரபாணியின் மூலம் மொத்த நிர்வாகத்துக்கும் தெரிவிக்க விரும்பினான். அவன் சொன்னதை தெளிவாக விளங்கிக்கொண்ட சங்கரபாணி, அறையிலிருந்து வெளியேறினார்.
*******************
தள்ளி வைத்து மணியை பலவீனப்படுத்திய சிவகுரு, அவனை தள்ளி வைத்த காரணத்தினாலேயே, மணியின் பலம் என்ன என்பதையும், அறிந்திருக்கவில்லை. தோல்விகளால், மணி எப்பொழுதும் துவண்டது இல்லை. தன் டென்னிஸ் ஆட்ட திறமையில், அதீத நம்பிக்கையுடன் ஸ்பெயின் சென்றவனுக்கு, அவனது ஆட்டத்தின் அடிப்படையே தவறு என்று சொல்லப்பட்ட போது கூட, அதை சரி செய்து, தன் திறமையை நிரூபித்தானே ஒழிய, துவண்டு விடவில்லை. என்னதான், எதிரியின் பலம் அறிந்து திட்டமிட்டு விளையாடினாலும், கனநொடி சிந்தனையில் முடிவெடுத்து, அதை செயல்படுத்துவதில் தான், டென்னிஸ் ஆட்டத்தில், ஒரு வீரனின் வெற்றி அடங்கியிருக்கிறது. அவ்வளவு, அறிவாற்றல் தேவைப்படும் விளையாட்டில், கில்லி அவன்.
ஆர்வத்தின் பெயரிலேயே, எந்த ஒரு பின்னடைவையும் சமாளித்து முன்னேறும் அவன், தேவை என்று வரும்போதுஇன்னும் வீரியத்துடன் செயல்படுவான் என்பதை அறிந்துகொள்ளும் வாய்ப்பையும் மணியை தள்ளிவைத்து சேர்த்தே இழந்திருந்தான் சிவகுரு. சாதாரணமாக இருக்கும் ஒரு மனிதனின் திறனைக் காட்டிலும் வலியில் இருப்பவன் அது சிந்தனையும் சூழ்நிலையை உணர்ந்து கொள்ளும் திறனும் எப்பொழுதும் அதிகமாகவே இருக்கும். சின்ன வலியே ஒருவனது ஆற்றலை அதிகரிக்கும் போது, அந்த வலி யையே வைராக்கியமாய் பற்றிக்கொண்ட மணியின் ஆற்றல் தான், அவனை மொத்தமாக வழிநடத்தியது. வலி, ஒருவனை ஆக்கவும் செய்யும் அழிக்கவும் செய்யும். மணியின் வலி அவனை ஆக்கியது, சிவகுருவை அழித்தது.
**************
தான் நினைத்தப்போலவே, சிவகுருவை, அடித்து வீழ்த்திவிட்டாலும், மணியின் மனம் ஏனோ அடங்கவில்லை. எதிர்ப்பே காட்டாமல் சிவகுரு விழுந்துவிட, செத்த பாம்பை அடித்தது போலவே தோன்றியது அவனுக்கு. ஆற்றமாட்டாதவன், அழுவலகத்திலேயே நெடுநேரம் அமர்ந்திருந்தவன், நெடுநேரம் கழித்தே வீட்டிற்க்கு சென்றான்.
"நான் உன் கூட, கொஞ்சம் பேசணும்?" மணியை எதிர்பார்த்து காத்திருந்த சிவகுரு, அவன் வீட்டினுள் நுழைந்ததும் சொல்ல, அதை காதில் கூட வாங்காமல், நேராக மேலே, அவன் அறைக்குச் செல்ல தயாரானான் மணி.
"டேய் உன்ன தான்!!" சிவகுருவின் சத்தம் உயர்ந்தது, நின்றவன் திரும்பி சிவகுருவை முறைத்தான்.
"பர்சனலா உங்க கூட பேசறது எனக்கு ஒன்னும் இல்ல!! ஆபீஸ் விஷயமா இருந்தா, நாளைக்கு ஆபீஸ்ல பேசிக்கலாம்!!" பொறுமையாக சொன்னவன், சிவகுருவை வெறுப்பேத்த வேண்டும் என்றே தனது அறைக்கு போகாமல், ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து, டிவியை போட்டான். சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்த சிவகுரு,
"நான் இல்லாமல், ஒரு ஆறு மாசம் கூட உன்னால நம்ம கம்பெனிகளை நடத்த முடியாது, திரும்பி வந்து என் கால்ல விழுவே!!" கர்ஜித்த சிவகுருவை, மணியின் உதாசீனப் பார்த்துவிட்டு,
“சாரி Mr.சிவகுரு, ஃப்யூச்சர் குரூப்ஸ் என்னோடது!!” மேலும் சிவகுருவை தூண்டிவிட்டான். சோபாவில் இருந்து எழுந்து கொண்டான், மணி கைகலப்புக்கு ஆயத்தயமாய் இருந்தான். ஏனோ, சிவகுருவை தன் கைகளால் அடித்து துவைக்காமல், அவன் மனம் அடங்காது என்று தோன்றியது.
"டேய்!! இப்பவும் சொல்றேன், தொழில் வேற, வாழ்க்கை வேற!! நீ ரெண்டு வருஷம், பெருசா புடுங்கி கிழிச்சிட்டனு நினைக்கிறாயா? நீ பண்ண தாப்பையெல்லாம், நான் சரி பண்ணி இருக்கேன்!! நீயே சேர்மன் இருந்துக்கோ, ஆனா என்ன இப்படி மொத்தமாக வெளியே அனுப்பாத" மணியின் சட்டையை கொத்தாகப் பிடித்து காட்டு கத்தலில் ஆரம்பித்த சிவகுருவின், கெஞ்சும் பார்வையில் முடித்தான். தன் சட்டையைப் பற்றியிருந்த சிவகுருவின் கைகளை பலமாக தட்டிவிட்டான் மணி. தடுமாறிக் கீழே சிவகுரு விழவும், சத்தம் கேட்டு சுமா கீழே இறங்கி வரவும் சரியாக இருந்தது.
தன் மகன் தன்னை நெருங்காவிடாமல் வருத்தியாதை பொறுத்துக் கொண்டிருந்த சுமாவால், தன் கணவனை, தன் மகன் அவமானப்படுத்தப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை, நேராக மணியிடம் வந்தவள்,
"நானும் பாக்குறேன்!! உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க? அவர் உங்க அப்பா" வெடித்து சிதறினாள், The Hell Broke Loose. சிவகுருவை அப்பா என்று தன் அம்மா சொல்ல, மொத்தத்தையும் இழந்தான் மணி. அவளை ஏலனமாக ஒரு பார்வை பார்த்தவன், அதைவிட ஏளனமாக ஒரு சிரிப்பை உதிர்த்து
"நீ என்ன இவனுக்கு பெத்தியா? இல்ல, என் பெரியப்பாவுக்கா?" தன்னில் மிச்சம் இருந்த மனிதத்தையும் மொத்தமாக இழந்தான் மணி. மணியின் கேள்வியில் துடித்துப் போனவள் அவனை அடிக்க ஆரம்பித்தாள். இரண்டாவது அடியிலேயே, தன் தாயின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டவன்
"இந்த கோபத்தை எல்லாம் உன் புருஷன் மேல காட்டு!!" என்று உருமினான். அவள் கைகளை உதறிவிட்டு, அந்த வீட்டை விட்டு வெளியேறினான்.
************
மறுநாள் அலுவலகத்தில்.
"என்னாச்சுப் பா!! திடீர்னு நிறைய சேஞ்ச் பண்ணி இருக்க?" நேற்று செய்த மாற்றங்களால், தன்னை கையெழுத்து போட சொல்ல வருவான் என்று எதிர்பார்த்து காத்திருந்த சிவகுரு, அவன் வரமால் போகவே, மணியை தேடி வந்தார், அவன் அலுவலக அறைக்கு.
"இப்போ அதுல என்ன பிராப்ளம்?" வந்தவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஆனால் எதிர்பார்த்து காத்திருந்தான்.
"இல்லப் பா!! இன்னும் கொஞ்ச எக்ஸ்பீரியன்ஸ் கெயின் பண்ணிக்க!! ஸ்டாக்ல லிஸ்ட் பண்ணினதுக்கு அப்புறம், எனக்கு ஒரு ரெண்டு வருஷம் மட்டும் டைம் கொடு!! நான் எல்லாத்தை ஸ்ட்ரீம்லைன் பண்ணினதுக்கு அப்புறம், நானே உன்னை சேர்மன் ஆக்குறேன்" நேர்த்தியாக காய்நகர்த்தியா சிவகுரு.
"சிவகுரு சார்!! இது என்னோட கம்பெனி!! என்னை சேர்மன் ஆக்க என்னால மட்டும்தான் முடியும்!!" அசைந்து கொடுப்பதாய் இல்லை மணி.
"சரி ஒத்துகிறேன்!! நான் பண்ணது தப்புதான்!! இல்லன்னு சொல்லல!! நான் பண்ண தப்ப, சரி பண்றதுக்கு எனக்கு ஒரு வாய்ப்பு கொடு!! நமக்குள்ள இருக்க பிரச்சனையெல்லாம் தொழில்குள்ள கொண்டு வராத!!" சிவகுரு மேலும் இறங்க
"தேவை இல்லாம ட்ராமா பண்ணி!! என் டைம் வேஸ்ட் பண்ணாதீங்க!! நீங்க கெளம்பலாம்!!" பிடித்த பிடியில் நின்றான் மணி.
"உனக்கு புரியல, இந்த மொத்த குழுமமும் என்னோட உழைப்பு!! நான் மட்டும் கோர்ட்டுக்குப் போனா, குறைஞ்சபட்சம் எனக்கு 30% பர்சன்டேஜ்டாவது கிடைக்கும்!!. தேவை இல்லாம குடும்பத்துக்குள்ள புதுசா குழப்பத்த கொண்டு வராத!!" மிஞ்சினாலும், சத்தத்தை உயர்த்தவில்லை சிவகுரு.
“............................” நிமிர்ந்து சிவகுருவை, ஏளனமாக பார்த்து, சத்தம் வராமல் சிரித்தான்.
"நீ பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்லை!! என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு!! இது என்னோட கம்பெனி!! என்னோட முப்பது வருஷ உழைப்பு!! அவ்வளவு ஈசியா நீ என்னை தூக்க முடியாது!!" பொறுமை இழந்த சிவகுரு, தன் கையிலிருந்த காகிதத்தைக் கசக்கி எறிந்தான். சிவகுருவின் கோபத்தை சற்றும் மதியாத மணி, மொபைலை எடுத்து நோண்டிக்கொண்டிருந்தான். "டிங்" என்ற சத்தத்தோடு, சிவகுருவின் மொபைலுக்கு ஒரு மெசேஜ் வர, அந்த மெசேஜை பார்க்குமாறு கண்களால் சொன்னான் மணி.
தனக்கு வந்த மெசேஜை எடுத்துப் பார்த்த சிவகுருவின் முகம் வெளிறியது, மனம் பதறியது, உடல் உதறியது. மணியும், சிவகாமியும், கடைசியாக கூடிக் களித்ததைப் பார்த்து சுயஇன்பம் செய்து கொண்டிருந்த சிவகுருவின் வீடியோ அது, அவனது குரூரமே அவனை வீழ்த்தியது. ஒருவேளை, சிவகாமி இறந்துவிட்டால், அவள் மானத்தையாவது காப்பாற்றலாம் என்று அவளது வீட்டில் இருந்த CCTV வீடியோ பதிவு அடங்கியிருந்த ஹார்ட் டிஸ்கை எடுத்து வந்த மணி, சத்தியமாக நினைத்துக்கூட பார்க்கவில்லை, அது சிவகுருவை அடித்து வீழ்த்த உதவும் என்று. அந்த குளிரூட்டப்பட்ட அறையிலும், வியர்த்து கொட்ட, அப்படியே சோர்ந்து, மணியின் முன்னால் போடப்பட்டிருந்த இருக்கையில் சோர்ந்து விழுந்தான். ஒரு குரூரமான புன்னகை, மணியின் முகத்தில். இன்டர்காமில் தொடர்புகொண்டு சங்கரபாணியை அழைத்தான்.
"சார் ஸைன் பன்னிடுவார், அவர் ஸைன் பண்ணிக் கொடுத்ததும்!! அடுத்து ஆக வேண்டிய வேலையைப் பாருங்க!!" என்று உள்ளே வந்தவரிடம் சொல்ல, அவரோ சிவகுருவின் நிலை பார்த்து பதறிப் போனார். ஒரு காகிதத்தை எடுத்து தன் தந்தையை நோக்கி நகர்த்தி வைத்தான், எதுவும் சொல்லாமல் அதை நிமிர்ந்து பார்த்தவன், சற்றுமுன் தான் கசக்கி எரிந்த, அந்த கடிதத்தின் மற்றொரு பிரதியில், எதுவும் சொல்லாமல் கையெழுத்திட்டார்.
"பிரஸ் மீட் எப்போ வைக்கணும்னு சார் சொல்லுவார், அவர் கிட்ட கேட்டுக்கிட்டு அதுக்கு தகுந்த மாதிர் ஏற்பாடு பன்னிருங்க!!" என்று சங்கரபாணியிடம், தன் தந்தை கையெழுத்திட்ட அந்த காகிதங்களை கொடுக்க, வாங்கிப் படித்தவரின், கை நடுங்க ஆரம்பித்தது.
" கவலைப்படாதீங்க, புது சேர்மேனோட செகராட்டரியும் நீங்க தான்!! வாங்குரா சம்பளத்துக்கு விசுவாசமா இருங்க!! பிரஸ் மீட் முடியிரவரைக்கும் இந்த விஷயம் வெளிய போகக்கூடாது!! இப்போ போயி, ஆக வேண்டியதா பாருங்க!!" தான் யார் என்பதை, சங்கரபாணியின் மூலம் மொத்த நிர்வாகத்துக்கும் தெரிவிக்க விரும்பினான். அவன் சொன்னதை தெளிவாக விளங்கிக்கொண்ட சங்கரபாணி, அறையிலிருந்து வெளியேறினார்.
*******************
தள்ளி வைத்து மணியை பலவீனப்படுத்திய சிவகுரு, அவனை தள்ளி வைத்த காரணத்தினாலேயே, மணியின் பலம் என்ன என்பதையும், அறிந்திருக்கவில்லை. தோல்விகளால், மணி எப்பொழுதும் துவண்டது இல்லை. தன் டென்னிஸ் ஆட்ட திறமையில், அதீத நம்பிக்கையுடன் ஸ்பெயின் சென்றவனுக்கு, அவனது ஆட்டத்தின் அடிப்படையே தவறு என்று சொல்லப்பட்ட போது கூட, அதை சரி செய்து, தன் திறமையை நிரூபித்தானே ஒழிய, துவண்டு விடவில்லை. என்னதான், எதிரியின் பலம் அறிந்து திட்டமிட்டு விளையாடினாலும், கனநொடி சிந்தனையில் முடிவெடுத்து, அதை செயல்படுத்துவதில் தான், டென்னிஸ் ஆட்டத்தில், ஒரு வீரனின் வெற்றி அடங்கியிருக்கிறது. அவ்வளவு, அறிவாற்றல் தேவைப்படும் விளையாட்டில், கில்லி அவன்.
ஆர்வத்தின் பெயரிலேயே, எந்த ஒரு பின்னடைவையும் சமாளித்து முன்னேறும் அவன், தேவை என்று வரும்போதுஇன்னும் வீரியத்துடன் செயல்படுவான் என்பதை அறிந்துகொள்ளும் வாய்ப்பையும் மணியை தள்ளிவைத்து சேர்த்தே இழந்திருந்தான் சிவகுரு. சாதாரணமாக இருக்கும் ஒரு மனிதனின் திறனைக் காட்டிலும் வலியில் இருப்பவன் அது சிந்தனையும் சூழ்நிலையை உணர்ந்து கொள்ளும் திறனும் எப்பொழுதும் அதிகமாகவே இருக்கும். சின்ன வலியே ஒருவனது ஆற்றலை அதிகரிக்கும் போது, அந்த வலி யையே வைராக்கியமாய் பற்றிக்கொண்ட மணியின் ஆற்றல் தான், அவனை மொத்தமாக வழிநடத்தியது. வலி, ஒருவனை ஆக்கவும் செய்யும் அழிக்கவும் செய்யும். மணியின் வலி அவனை ஆக்கியது, சிவகுருவை அழித்தது.
**************
தான் நினைத்தப்போலவே, சிவகுருவை, அடித்து வீழ்த்திவிட்டாலும், மணியின் மனம் ஏனோ அடங்கவில்லை. எதிர்ப்பே காட்டாமல் சிவகுரு விழுந்துவிட, செத்த பாம்பை அடித்தது போலவே தோன்றியது அவனுக்கு. ஆற்றமாட்டாதவன், அழுவலகத்திலேயே நெடுநேரம் அமர்ந்திருந்தவன், நெடுநேரம் கழித்தே வீட்டிற்க்கு சென்றான்.
"நான் உன் கூட, கொஞ்சம் பேசணும்?" மணியை எதிர்பார்த்து காத்திருந்த சிவகுரு, அவன் வீட்டினுள் நுழைந்ததும் சொல்ல, அதை காதில் கூட வாங்காமல், நேராக மேலே, அவன் அறைக்குச் செல்ல தயாரானான் மணி.
"டேய் உன்ன தான்!!" சிவகுருவின் சத்தம் உயர்ந்தது, நின்றவன் திரும்பி சிவகுருவை முறைத்தான்.
"பர்சனலா உங்க கூட பேசறது எனக்கு ஒன்னும் இல்ல!! ஆபீஸ் விஷயமா இருந்தா, நாளைக்கு ஆபீஸ்ல பேசிக்கலாம்!!" பொறுமையாக சொன்னவன், சிவகுருவை வெறுப்பேத்த வேண்டும் என்றே தனது அறைக்கு போகாமல், ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து, டிவியை போட்டான். சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்த சிவகுரு,
"நான் இல்லாமல், ஒரு ஆறு மாசம் கூட உன்னால நம்ம கம்பெனிகளை நடத்த முடியாது, திரும்பி வந்து என் கால்ல விழுவே!!" கர்ஜித்த சிவகுருவை, மணியின் உதாசீனப் பார்த்துவிட்டு,
“சாரி Mr.சிவகுரு, ஃப்யூச்சர் குரூப்ஸ் என்னோடது!!” மேலும் சிவகுருவை தூண்டிவிட்டான். சோபாவில் இருந்து எழுந்து கொண்டான், மணி கைகலப்புக்கு ஆயத்தயமாய் இருந்தான். ஏனோ, சிவகுருவை தன் கைகளால் அடித்து துவைக்காமல், அவன் மனம் அடங்காது என்று தோன்றியது.
"டேய்!! இப்பவும் சொல்றேன், தொழில் வேற, வாழ்க்கை வேற!! நீ ரெண்டு வருஷம், பெருசா புடுங்கி கிழிச்சிட்டனு நினைக்கிறாயா? நீ பண்ண தாப்பையெல்லாம், நான் சரி பண்ணி இருக்கேன்!! நீயே சேர்மன் இருந்துக்கோ, ஆனா என்ன இப்படி மொத்தமாக வெளியே அனுப்பாத" மணியின் சட்டையை கொத்தாகப் பிடித்து காட்டு கத்தலில் ஆரம்பித்த சிவகுருவின், கெஞ்சும் பார்வையில் முடித்தான். தன் சட்டையைப் பற்றியிருந்த சிவகுருவின் கைகளை பலமாக தட்டிவிட்டான் மணி. தடுமாறிக் கீழே சிவகுரு விழவும், சத்தம் கேட்டு சுமா கீழே இறங்கி வரவும் சரியாக இருந்தது.
தன் மகன் தன்னை நெருங்காவிடாமல் வருத்தியாதை பொறுத்துக் கொண்டிருந்த சுமாவால், தன் கணவனை, தன் மகன் அவமானப்படுத்தப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை, நேராக மணியிடம் வந்தவள்,
"நானும் பாக்குறேன்!! உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க? அவர் உங்க அப்பா" வெடித்து சிதறினாள், The Hell Broke Loose. சிவகுருவை அப்பா என்று தன் அம்மா சொல்ல, மொத்தத்தையும் இழந்தான் மணி. அவளை ஏலனமாக ஒரு பார்வை பார்த்தவன், அதைவிட ஏளனமாக ஒரு சிரிப்பை உதிர்த்து
"நீ என்ன இவனுக்கு பெத்தியா? இல்ல, என் பெரியப்பாவுக்கா?" தன்னில் மிச்சம் இருந்த மனிதத்தையும் மொத்தமாக இழந்தான் மணி. மணியின் கேள்வியில் துடித்துப் போனவள் அவனை அடிக்க ஆரம்பித்தாள். இரண்டாவது அடியிலேயே, தன் தாயின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டவன்
"இந்த கோபத்தை எல்லாம் உன் புருஷன் மேல காட்டு!!" என்று உருமினான். அவள் கைகளை உதறிவிட்டு, அந்த வீட்டை விட்டு வெளியேறினான்.
************