15-12-2020, 07:41 AM
(This post was last modified: 15-12-2020, 09:51 AM by Dubai Seenu. Edited 2 times in total. Edited 2 times in total.)
மணி பத்தைத் தாண்டியது.
வீணாவோடு காம மயக்கத்தில் கிடந்த சீனுவுக்கு, போன் அடித்துக்கொண்டே இருக்கும் சத்தம் கேட்க, வீணாவின் சங்குக் கழுத்திலிருந்து முகத்தை விலக்கிப் பார்த்தான்.
20 கால்களுக்கு மேல் வந்திருந்தது. பதறியடித்துக்கொண்டு போன் பண்ணினான். அப்பாவின் தழுதழுத்த குரல் - அம்மாவை ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கோம்டா. எங்கடா நீ இருக்க? நேத்து நைட்டுலேர்ந்து உனக்கு ட்ரை பண்ணிட்டு இருக்கோம்
சீனு அலறியடித்துக்கொண்டு ஓடினான். அந்த பெரிய ஹாஸ்பிடலில்.. அப்பாவைப் பார்த்தான். எங்கடா போய்த் தொலைஞ்ச? என்று அவர் வேதனையோடு அழுதார்.
சரியான நேரத்துல அமவுண்ட் ரெடி பண்ணீங்க. இவர்தான் உங்க பையனா? சுத்தமா பொறுப்பில்லாம இருக்காரு?
சீனு கூனிக் குறுகிப்போய் நின்றான். எனக்கு உயிர் கொடுத்த அம்மாவை கவனிக்காமல் இப்படி எங்கேயோ கேவலமான செயல் செய்துகொண்டிருந்திருக்கிறேனே என்று அழுதான்.
நெஞ்சு வலிக்குதுன்னு நேத்து மயங்கிட்டா. நான் என்னடா பண்ணுவேன்? பக்கத்து கிளினிக்குல சேர்த்துட்டு ஒவ்வொருத்தர்ட்டயா காசு கேட்டு ஓடுனேன். அதான் எல்லா காசையும் நீ கரியாக்கிட்டியே. கடைசியில காசு கேட்டு நிஷா வீட்டுக்கு ஓடினேன். இப்போ பரவால்ல. சொந்தக்காரங்க எத்தனையோ பேரு இருக்காங்கடா. ஆனா கூட இருந்து பார்க்க யாரும் இல்லடா. நாம அந்த நிலமைல இருக்கோம்
சீனு உள்ளே ஓடினான். சின்னதாய் அதிர்ந்தான். அங்கே அம்மாவின் கையை ஆறுதலாகப் பிடித்துக்கொண்டு... இவனுக்கு முதுகு காட்டிக்கொண்டு... நிஷா உட்கார்ந்திருந்தாள். இவன் வந்து நின்றதும் திரும்பினாள்.
நி.. நிஷா.... - இவன் குரல் கரகரத்தது.
அவன் கண்ணத்தில் ஒரு அறை விழுந்தது. வலிக்குமளவுக்கு உரமாக விழுந்தது.
அம்மாவை பார்த்துக்கறதைவிட உனக்கு வேற என்ன வேலை? நைட்டெல்லாம் போன் கூட எடுக்கலையாம்? - அவள் கூர்மையாக அவனைப் பார்த்துக் கேட்க, அவன் பதில் சொல்ல முடியாமல்.. கண்ணத்தைப் பிடித்துக்கொண்டு தலைகுனிந்து நின்றான். அழுதான்.
நிஷா வந்துட்டா. இனிமேல் அவன் சரியாகிடுவான் பாருங்க... என்று சந்திரனைப் பார்த்து லேசாக சிரித்துக்கொண்டே முனகினாள் பார்வதி.
சீனு அம்மாவிடம் மன்னிப்பு கேட்டான். அவள் கைகளை பிடித்துக்கொண்டு சோகமாக உட்கார்ந்தான்.
அம்மா நான் நிஷா சொல்றமாதிரி நல்லபடியா நடந்துக்கறேன்மா. என்ன மன்னிச்சிடும்மா
பார்வதி மெல்லிய சத்தத்தில் சொன்னாள். நிஷாவுக்கு கல்யாணமாம் சீனு. நாம எல்லாரும் போகணும்.
சிறிது நேரம் கழித்து, அவன் நிஷாவை எதிர்கொள்ள, நிஷாவின் கேள்விகள் அவனைத் துளைத்தன.
இன்னும் அப்படியேதான் இருக்கேல்ல? -
அவன் பதில் பேசாமல் தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு நின்றான். நிஷா அவனைத் தனியாகக் கூட்டிக்கொண்டு போனாள்.
உன்னால உனக்கு நல்லது பண்ணவங்க யாருக்காவது உன்னால ஒரு பைசா பிரயோஜனம் இருக்காடா?
உன்ன ஒரு கோர்ஸ் படிக்கச்சொன்னேனே அது என்னாச்சு?
இப்படி காமம் காமம்னு அதையே நினைச்சுட்டு இருந்தா உன்னால எதுலயும் கான்செண்ட்ரேட் பண்ணமுடியாது. இது உனக்கு எப்போதான் உரைக்கும்??
என்னால முடியல நிஷா. நான் ட்ரை பண்ணேன். ஆனா...
நிஷா உதட்டில் மெல்லிய சிரிப்பு வந்தது. அவன் அருகில் வந்தாள். அவன் தலையை கோதிவிட்டாள்.
எனக்காக... உன்ன சேஞ்ச் பண்ணிக்க மாட்டியா சீனு? ப்ளீஸ். உன் நிஷாவுக்காக.
சீனுவுக்கு இதயம் வேகமாக அடித்தது. காமம் சுத்தமாக வடிந்துபோய் அவளை கண்ணீரோடு பார்த்தான்.
உன் தேவதை நிஷாவுக்காக. செய்வியா??
சீனு இமைகளை மூடிக்கொண்டு தலையை மேலும் கீழுமாக அசைத்தான்.
நீ கவலைப்படாதே நிஷா. நான் ஒழுங்கா இருப்பேன். நான் கோர்ஸ்லாம் சீக்கிரம் கம்ப்ளீட் பண்ணிடுவேன். அம்மா அப்பாவை நல்லா பார்த்துக்கிடுறேன்.
நிஷா அவன் நெற்றியில், பாசமாக ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, பார்வதியிடம் போனாள். சீனு சரியாகிடுவான் என்றாள்.
சீனு பொசுக்கென்று அவள் காலில் விழுந்தான்.
என்ன மன்னிச்சிடு நிஷா. ப்ளீஸ். எப்பவும் என்ன வெறுத்துடாத
அழுதான்.
அப்போதே பார்வதி பாதி குணமாகியிருந்தாள்.
வீணாவோடு காம மயக்கத்தில் கிடந்த சீனுவுக்கு, போன் அடித்துக்கொண்டே இருக்கும் சத்தம் கேட்க, வீணாவின் சங்குக் கழுத்திலிருந்து முகத்தை விலக்கிப் பார்த்தான்.
20 கால்களுக்கு மேல் வந்திருந்தது. பதறியடித்துக்கொண்டு போன் பண்ணினான். அப்பாவின் தழுதழுத்த குரல் - அம்மாவை ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கோம்டா. எங்கடா நீ இருக்க? நேத்து நைட்டுலேர்ந்து உனக்கு ட்ரை பண்ணிட்டு இருக்கோம்
சீனு அலறியடித்துக்கொண்டு ஓடினான். அந்த பெரிய ஹாஸ்பிடலில்.. அப்பாவைப் பார்த்தான். எங்கடா போய்த் தொலைஞ்ச? என்று அவர் வேதனையோடு அழுதார்.
சரியான நேரத்துல அமவுண்ட் ரெடி பண்ணீங்க. இவர்தான் உங்க பையனா? சுத்தமா பொறுப்பில்லாம இருக்காரு?
சீனு கூனிக் குறுகிப்போய் நின்றான். எனக்கு உயிர் கொடுத்த அம்மாவை கவனிக்காமல் இப்படி எங்கேயோ கேவலமான செயல் செய்துகொண்டிருந்திருக்கிறேனே என்று அழுதான்.
நெஞ்சு வலிக்குதுன்னு நேத்து மயங்கிட்டா. நான் என்னடா பண்ணுவேன்? பக்கத்து கிளினிக்குல சேர்த்துட்டு ஒவ்வொருத்தர்ட்டயா காசு கேட்டு ஓடுனேன். அதான் எல்லா காசையும் நீ கரியாக்கிட்டியே. கடைசியில காசு கேட்டு நிஷா வீட்டுக்கு ஓடினேன். இப்போ பரவால்ல. சொந்தக்காரங்க எத்தனையோ பேரு இருக்காங்கடா. ஆனா கூட இருந்து பார்க்க யாரும் இல்லடா. நாம அந்த நிலமைல இருக்கோம்
சீனு உள்ளே ஓடினான். சின்னதாய் அதிர்ந்தான். அங்கே அம்மாவின் கையை ஆறுதலாகப் பிடித்துக்கொண்டு... இவனுக்கு முதுகு காட்டிக்கொண்டு... நிஷா உட்கார்ந்திருந்தாள். இவன் வந்து நின்றதும் திரும்பினாள்.
நி.. நிஷா.... - இவன் குரல் கரகரத்தது.
அவன் கண்ணத்தில் ஒரு அறை விழுந்தது. வலிக்குமளவுக்கு உரமாக விழுந்தது.
அம்மாவை பார்த்துக்கறதைவிட உனக்கு வேற என்ன வேலை? நைட்டெல்லாம் போன் கூட எடுக்கலையாம்? - அவள் கூர்மையாக அவனைப் பார்த்துக் கேட்க, அவன் பதில் சொல்ல முடியாமல்.. கண்ணத்தைப் பிடித்துக்கொண்டு தலைகுனிந்து நின்றான். அழுதான்.
நிஷா வந்துட்டா. இனிமேல் அவன் சரியாகிடுவான் பாருங்க... என்று சந்திரனைப் பார்த்து லேசாக சிரித்துக்கொண்டே முனகினாள் பார்வதி.
சீனு அம்மாவிடம் மன்னிப்பு கேட்டான். அவள் கைகளை பிடித்துக்கொண்டு சோகமாக உட்கார்ந்தான்.
அம்மா நான் நிஷா சொல்றமாதிரி நல்லபடியா நடந்துக்கறேன்மா. என்ன மன்னிச்சிடும்மா
பார்வதி மெல்லிய சத்தத்தில் சொன்னாள். நிஷாவுக்கு கல்யாணமாம் சீனு. நாம எல்லாரும் போகணும்.
சிறிது நேரம் கழித்து, அவன் நிஷாவை எதிர்கொள்ள, நிஷாவின் கேள்விகள் அவனைத் துளைத்தன.
இன்னும் அப்படியேதான் இருக்கேல்ல? -
அவன் பதில் பேசாமல் தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு நின்றான். நிஷா அவனைத் தனியாகக் கூட்டிக்கொண்டு போனாள்.
உன்னால உனக்கு நல்லது பண்ணவங்க யாருக்காவது உன்னால ஒரு பைசா பிரயோஜனம் இருக்காடா?
உன்ன ஒரு கோர்ஸ் படிக்கச்சொன்னேனே அது என்னாச்சு?
இப்படி காமம் காமம்னு அதையே நினைச்சுட்டு இருந்தா உன்னால எதுலயும் கான்செண்ட்ரேட் பண்ணமுடியாது. இது உனக்கு எப்போதான் உரைக்கும்??
என்னால முடியல நிஷா. நான் ட்ரை பண்ணேன். ஆனா...
நிஷா உதட்டில் மெல்லிய சிரிப்பு வந்தது. அவன் அருகில் வந்தாள். அவன் தலையை கோதிவிட்டாள்.
எனக்காக... உன்ன சேஞ்ச் பண்ணிக்க மாட்டியா சீனு? ப்ளீஸ். உன் நிஷாவுக்காக.
சீனுவுக்கு இதயம் வேகமாக அடித்தது. காமம் சுத்தமாக வடிந்துபோய் அவளை கண்ணீரோடு பார்த்தான்.
உன் தேவதை நிஷாவுக்காக. செய்வியா??
சீனு இமைகளை மூடிக்கொண்டு தலையை மேலும் கீழுமாக அசைத்தான்.
நீ கவலைப்படாதே நிஷா. நான் ஒழுங்கா இருப்பேன். நான் கோர்ஸ்லாம் சீக்கிரம் கம்ப்ளீட் பண்ணிடுவேன். அம்மா அப்பாவை நல்லா பார்த்துக்கிடுறேன்.
நிஷா அவன் நெற்றியில், பாசமாக ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, பார்வதியிடம் போனாள். சீனு சரியாகிடுவான் என்றாள்.
சீனு பொசுக்கென்று அவள் காலில் விழுந்தான்.
என்ன மன்னிச்சிடு நிஷா. ப்ளீஸ். எப்பவும் என்ன வெறுத்துடாத
அழுதான்.
அப்போதே பார்வதி பாதி குணமாகியிருந்தாள்.