15-12-2020, 07:37 AM
(This post was last modified: 15-12-2020, 07:38 AM by Dubai Seenu. Edited 1 time in total. Edited 1 time in total.)
காரை எடுக்காமல், நிஷா அவரையே பார்த்துக்கொண்டிருந்தது கண்ணனுக்கு ஆறுதலாக இருந்தது. உற்சாகமாக இருந்தது. சுகமாக இருந்தது.
அண்ணன் சொல்லிக்கிட்டிருந்தான். உங்களுக்கு ஆபத்து இருக்கிறதாமே. பார்த்து கவனமா இருங்க கண்ணன்.
சரி நிஷா. நீயும்தான். பத்திரம்.
சரிங்க என்று தலையசைத்துவிட்டு மனதேயில்லாமல் நிஷா அங்கிருந்து கிளம்பினாள்.
ஏதாவது ஒரு மேஜிக் செய்து அந்த தேவதையை தன் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போய்விடமாட்டோமா என்று.... கண்ணன் அவள் காரையே பார்த்துக்கொண்டு நின்றார்.
இதைத் தூரத்திலிருந்து கவனித்துக்கொண்டிருந்த வினய்க்கு ஆச்சரியமாக இருந்தது. அடிப்பாவி நிஷா உனக்கும் கண்ணனுக்கும் நடுவுல எதுவோ பிரச்சனை என்றல்லவா நினைத்தேன்? நீங்கள் என்னடாவென்றால்...... - அவன் தலையை உதறினான்.
வீட்டுக்கு வந்த நிஷாவுக்கு வேலை எதுவுமே ஓடவில்லை. திருமணமான நாள் முதல்... படுக்கையறை தவிர, கண்ணன் தன்னை மனம் நோகாமல் விழுந்து விழுந்து கவனித்துக்கொண்ட அனைத்தும் ஞாபகம் வந்தன.
கதிர்... நீ என்னை கண்ணன் மாதிரி பார்த்துக்கிட்டா போதும்டா.
டிவியில் அண்ணி மலர் நடத்தும் ஷோ ஓடிக்கொண்டிருந்தது. மலர் ஒரு குடும்பத்துக்குப் புத்திமதி சொல்லிக்கொண்டிருந்தாள்.
அண்ணிக்கு இருக்குற பக்குவம், தெளிவுகூட நமக்கு இல்லாமல் போயிடுச்சே என்று வருத்தப்பட்டாள். அந்த நாள், புயலுக்கு முந்தைய நாள்போல் அமைதியாக கழிந்துகொண்டிருந்தது.
அண்ணன் சொல்லிக்கிட்டிருந்தான். உங்களுக்கு ஆபத்து இருக்கிறதாமே. பார்த்து கவனமா இருங்க கண்ணன்.
சரி நிஷா. நீயும்தான். பத்திரம்.
சரிங்க என்று தலையசைத்துவிட்டு மனதேயில்லாமல் நிஷா அங்கிருந்து கிளம்பினாள்.
ஏதாவது ஒரு மேஜிக் செய்து அந்த தேவதையை தன் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போய்விடமாட்டோமா என்று.... கண்ணன் அவள் காரையே பார்த்துக்கொண்டு நின்றார்.
இதைத் தூரத்திலிருந்து கவனித்துக்கொண்டிருந்த வினய்க்கு ஆச்சரியமாக இருந்தது. அடிப்பாவி நிஷா உனக்கும் கண்ணனுக்கும் நடுவுல எதுவோ பிரச்சனை என்றல்லவா நினைத்தேன்? நீங்கள் என்னடாவென்றால்...... - அவன் தலையை உதறினான்.
வீட்டுக்கு வந்த நிஷாவுக்கு வேலை எதுவுமே ஓடவில்லை. திருமணமான நாள் முதல்... படுக்கையறை தவிர, கண்ணன் தன்னை மனம் நோகாமல் விழுந்து விழுந்து கவனித்துக்கொண்ட அனைத்தும் ஞாபகம் வந்தன.
கதிர்... நீ என்னை கண்ணன் மாதிரி பார்த்துக்கிட்டா போதும்டா.
டிவியில் அண்ணி மலர் நடத்தும் ஷோ ஓடிக்கொண்டிருந்தது. மலர் ஒரு குடும்பத்துக்குப் புத்திமதி சொல்லிக்கொண்டிருந்தாள்.
அண்ணிக்கு இருக்குற பக்குவம், தெளிவுகூட நமக்கு இல்லாமல் போயிடுச்சே என்று வருத்தப்பட்டாள். அந்த நாள், புயலுக்கு முந்தைய நாள்போல் அமைதியாக கழிந்துகொண்டிருந்தது.