அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
பாகம் - 55 

தன்னைக்காட்டிலும் பேரன்புடன் அவனை யாராலும் காதலிக்க முடியாது என்ற அதீத நம்பிக்கையில், நீ என்னைத்தான் காதலித்தாக வேண்டும் என்று கட்டளையிட்ட மது, அதே நம்பிக்கையுடன், வாழ்வின் அடுத்த அத்தியாயத்தையும் எதிர்கொண்டிருக்கலாம். அல்லது மணியின் எண்ணப்படி எதுவும் ஆகாது என்று எதிர்காலத்தை எண்ணி வருந்தாமல், நிகழ்காலத்தில் இன்பமாய் இருந்திருக்கலாம். எப்போதும் தங்கள் உறவின் ஆளுமையாக இருந்த மது, மணி ஹைதராபாத்தில், தனியாக தவித்து, தன்னை தவிர்த்த போதும், அதே ஆளுமையுடன் செயல்பட்டு, அங்கு செல்லாமல் இருந்து இருக்கலாம். அவனை சமாதானப் படுத்துவதற்காக, அந்த ட்ரெயின் டிக்கெட் புக் செய்யாமல், அவனுடன் விமானத்திலேயே கோயம்புத்தூர் வந்திருக்கலாம். ஹைதராபாத்தில், அவனுக்கு உதவும் என்று நினைப்பில், சிவாகுருவின் நம்பரை, முன்பின் அறியாதவர்களிடம் கொடுக்காமல் இருந்திருக்கலாம். தன் தாயிடம் சொன்னதைப் போல, ரயில் நிலையத்திலிருந்து, வீட்டுக்கு வராமல், நேத்ராவிடம் சென்றிருக்கலாம். அதுவரை, தங்கள் உறவு வெளிஉலக்கிற்கு தெரியாமல், ஏன் தங்கள் குடும்பத்துக்கே தெரியாமல், சர்வ ஜாக்கிரதையாக இருந்துவந்த, சிவகாமியும், சிவகுருவும், இன்னும் கொஞ்சம் கவனத்துடன் இருந்திருக்கலாம். ஹைதராபாத்தில், மது, சந்தித்தவர்கள் மூலம், சிவகுருவுக்கு, மது, மணியின் காதல், தெரியாமல் இருந்திருக்கலாம். தன்னுடன் மனைவி போல் வாழ்ந்தவளிடம், கொஞ்சம் கருணையுடன், தன் இச்சை புத்தியை கட்டுப்படுத்திக் கொண்டு, மதுவைப்பற்றி சிவகுரு பேசாமல் இருந்திருக்கலாம். சிவகுருவின் சாமியார் அண்ணன், சாமியாராக போகாமல், ஒரு சராசரி வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம். சாமியாராய் போன பின்பும், சிவகுருவுக்கு சுபாவிற்குமான, திருமணத்தை, எதிர்க்காமல் இருந்திருக்கலாம். சிவகுருவும், சுபாவும், மணியை, ஒரு சராசரி பெற்றோரைப் போல பாசம் காட்டி வளர்த்து இருக்கலாம். மணியை, மது, கடைசிவரை தம்பியாகவே பார்த்திருக்கலாம். மணி, மதுவிற்கு முன்பாக பிறந்திருக்கலாம்.

வாழ்வின் ஏதோ ஒரு இக்கட்டான நிலையில், நமக்கு கிடைத்த உதவியோ, கிடைக்காமல் போன உதவியோ, நம்மை வெகுவாக பாதித்து இருக்கும். அப்படி ஒரு நிகழ்வு, எல்லோரது வாழ்விலும் வந்திருக்கும். இங்கு வாழ்க்கையில், எதுவுமே தன்னிச்சையாக நடப்பதில்லை, நமக்கு தக்க சமயத்தில் கிடைத்த உதவிக்கு, அதன் பின்னாலான சங்கிலி தொடர்களில், எந்தவித இடையூறும் இல்லாமல் இருந்திருக்கும். நமக்கு கிடைக்காமல் போன உதவியின் பின்னால் ஏதோ ஒரு இடையூறு நிகழ்ந்திருக்கும். அப்படி, இவர்களின் வாழ்க்கையில் நடந்த இடையூறும் காரணமாகத்தான், விதியின் செயலால், இல்லை!! இல்லை!! குழப்ப விதியின் கோட்பாட்டால், தங்கள் வாழ்வின் அஸ்திவாரம் என நம்பியிருந்த நம்பிக்கை அனைத்தும் பிடிங்கி எறியப்பட, மது டெல்லியில், வாழ்க்கையே வெறுத்து, வெம்பி போய், கண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தாள். மணியோ, இங்கு கோயம்புத்தூரில், உயிர்வாழவே விருப்பம் இல்லாமல், தன்னை மாய்த்துக் கொள்ள துணிந்து, உணர்வில்லாமல் கிடக்கிறான் மருத்துவமனையில்.

***************

சம்பவம் நடந்து மூன்று நாள் கழித்து,

அன்று கல்லூரிக்கு விடுமுறை, என்பதால் தாமதமாகவே எழுந்தால் மது. குளித்து முடித்து உடை மாற்றுவதற்காக, உள்ளாடை அணியும் போது தான் கண்ணில் பட்டது அது. தங்கள் காதலின் முத்திரையாக, அவள் குத்திக் கொண்ட டேட்டூ, வலது பக்க மார்பில், மணியின் பற்களின், உதடுகளின் அச்சு. தனது மார்பில் குத்தப்பட்டிருந்த பச்சை, அவள் காதலின் முத்திரையை, வெருமையாக பார்த்துக் கொண்டிருந்தவள், அப்படியே, ஒடுங்கி உட்கார்ந்து, அழ ஆரம்பித்தாள்.

மனதெல்லாம் காதலோடும், கனவுகளோடும் கோயம்புத்தூர் சென்றவளுக்கு, பச்சை மரத்தில் விழுந்த இடியாக வந்தது அந்த வீடியோ. அது பற்றவைத்த நெருப்பில், அவள் காதலும் கனவுகளும் அழிவு போக, பித்துப்பிடித்ததுபோல் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தவள்

"எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணு பிரதீப்!!" அழைத்துப்போக வந்த பிரதீப்பிடம் கேட்க, அவனும் தலையாட்டினான்.

"இத, எங்க அம்மா பெயருக்கு மாற்றி எழுதணும்" விற்க முடிவு செய்திருந்த பத்திரத்தை அவனிடம் நீட்ட, குழம்பிப்போன அவன் என்ன ஏது என்று கேட்டதற்கு,

"ப்ளீஸ், என்ன நேத்ரா வீட்டுல ட்ராப் பண்ணு!! பிளீஸ்!!" மதுவின் முகம் பார்த்தே, ஏதோ சரியில்லை என்று அவனுக்கு தோன்ற, நேத்துராவுக்கு "லீவ் எடுத்துக்கொண்டு உடனே உன் வீட்டுக்கு வா" என்று மெசேஜ் அனுப்பிவிட்டு, மது கேட்டுக் கொண்டதைப் போலவே நேத்ராவின் வீட்டில் அவளை இறக்கி விட்டான்.

"முடிஞ்சா இன்னைக்கு ஈவினிங்குள்ள இத முடிச்சு கொடு!!" பத்திரத்தைக் நீட்டியவளிடம் அதை வாங்கிக் கொண்டு, நேத்ராவிடம் கண்ணைக் காட்டிவிட்டு, மது பணித்த பணியை செய்ய கிளம்பினான், பிரதீப்.

"என்னாச்சு பானு, ஏன் டல்லா இருக்க?" என்று கேட்ட நேத்ராவிடம்,

"சொல்றேன்!!” தலையாட்டிய மது.

"எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு!!, நான் கொஞ்ச நேரம் படுத்துக்கவா?" கேட்டவாறே படுக்கையறைக்கு சென்ற மது, போர்வைக்குள் தன்னை புதைத்துக்கொண்டாள்.

வெம்பி புழுங்கும் மதிய வேளையிலும், போர்வையைப் போர்த்திக் கொண்டு தூங்கும் மதுவின் அருகில் வந்த நேத்ரா, அவளது நெற்றியை தொட்டுப் பார்த்து, காய்ச்சல் இல்லை என்று உறுதி செய்து கொண்டதும், ஏசியை போட்டு விட்டு வெளியே வந்து, பிரதீப்புக்கு அழைத்தாள். "விற்க வேண்டும் என்று சொன்ன சொத்தை, தற்போது அம்மா பெயருக்கு மாற்ற சொல்கிறாள்" என்று பிரதீப் சொல்ல, குழம்பிப்போனவள், தன் தோழிக்காக வருந்தினாள். மாலை எழுந்து வந்த மது, தனக்கு பசிப்பதாக கூற, அவளின் பசி தீர்க்க, உணவு சமைத்துக் கொடுத்த நேத்ரா, அவள் சாப்பிட்டு முடித்ததும் என்ன ஏது என்று கேட்க, மீண்டும் தனக்கு சோர்வாக இருக்கிறது என்ற மது, படுக்கை அறைக்குச் சென்று போர்வைக்குள் சுருண்டு கொண்டாள்.

மறுநாள் நினைத்ததைப் போல, தான் விற்க நினைத்த சொத்தை, சிவகாமியின் பெயரில் எழுதி விட்டு, தன் பெயரில் வங்கிக் கணக்கில் இருந்த, அனைத்து தொகையையும் சிவகாமியின் பெயருக்கு காசோலையாக எழுதி, இரண்டையும் சிவகாமிக்கு கொரியர் அனுப்பிவிட்டு, நேத்ரா வீட்டுக்கு வந்தால் மது. வந்தவள், தனது உடமைகளை பேக் செய்ய, அதுவரை பொறுத்துக் கொண்டிருந்த நேத்ரா, பிரதீப்பிடம் கண்ணை காட்ட, அவன் புரிந்து கொண்டு வெளியே சென்றதும்

"என்ன தாண்டி ஆச்சு?, ஏன் இப்படி இருக்க?, ஏதாச்சு சொல்லு? சொன்னாதான, ஏதாவது பண்ண முடியும்?" சற்று அதட்டலாகவே, மதுவின் தோளைப் பிடித்து உலுக்க

தன் மொபைலை எடுத்து நோண்டியவள், அந்த வீடியோவை ஓடச் செய்து, நேத்ராவின் பக்கம் திருப்பினாள்.

"ச்சீ" என இரண்டு நொடியிலேயே முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

"நான் கிளம்புறேன்!!, டெல்லி போயிட்டு உனக்கு கூப்பிடுறேன்!!" மது வெளியேற, அவளை இந்த நிலையில் அனுப்ப மனமில்லாமல், தடுக்கவும் தெம்பில்லாமல், தவித்துப் போய் நின்றாள் நேத்ரா. தான் கண்ட காட்சி கொடுத்த அதிர்ச்சியிலிருந்து, விலகாமல்.

*************

இரவு, டெல்லி திரும்பிய மது செய்த முதல் காரியம், பழைய சிம்கார்டை தூக்கி எறிந்தது தான். அந்த சிம்கார்டோடு சேர்த்து, கோயம்புத்தூரின் மொத்த உறவுகளைத் துறந்து இருந்தாள், அவள். பிறகு விடுதி அறைக்கு வந்தவள், மீண்டும் சுருண்டு படுத்துக் கொண்டாள். கோபம், விரக்தி, இழப்பின், சோகத்தின் வலி என்று எதையுமே உணரும் நிலையில் அவள் இல்லை. இப்பொழுது அவள் ஆசை ஆசையாய் குத்திக்கொண்ட அவள் காதலின் முத்திரையை பார்க்கும் வரைக்கும்.

மூன்று நாள், இல்லாத மொத்த உணர்வுகளும் தன்னை ஆட்கொள்ள, ஆற்றுவார் தேற்றுவார் இல்லாமல் முடிவே இல்லாத, தீராத கண்ணீரில் தீக்குளித்தாள். நேரம், செல்லச்செல்ல அவளின் கண்ணீரும், அழுகையும், கூடியதே தவிர, கொஞ்சமும் குறையவில்லை, குறைவதற்கான அறிகுறியும் தெரியவில்லை.

****************

"ஏண்டா கண்ணு!! வந்ததுல இருந்து மூஞ்ச தூக்கி வச்சுக்கிட்டு இருக்க?" எட்டு வயதான மணியிடம், அவனது பெரியாச்சி கெஞ்சிக் கொண்டு இருக்க,

"ஹும்" அவளிடம் மீண்டும் சினந்து கொண்டவன், தன் தாத்தா வந்ததை கண்டதும், அவரை நோக்கி ஓடினான்.

"ராஜா குட்டி, எதுக்கு கோவமா இருக்காரு?" பேரனுக்கும் தன் அக்காவுக்குமான உரையாடலைக் கேட்டுக் கொண்டு வந்தவர், அவனை தூக்கிக்கொண்டார்.

"எதுக்கு தாத்தா எனக்கு மணிகண்டன்னு என்று பேர் வச்சீங்க?" தாத்தாவிடமும் முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள, அவன் கன்னத்தில் முத்தமிட்டவர்

"அது, நம்ம பழனி ஆண்டவர் பேருடா!!" தான் முத்தமிட்ட கன்னத்தை, முகத்தை சுளித்தவாறு துடைத்துக் கொண்டிருந்த, மணியைப் பார்த்து சிரித்தார்.

"ரொம்ப, ஓல்ட் நேம் தாத்தா, எனக்கு பிடிக்கல, ஸ்கூல்ல பிரெண்ட்ஸ் எல்லாம் கிண்டல் பண்றாங்க!!" மணியின் கோபத்திற்கான காரணம் உணர்ந்து அவர் மேலும் சிரிக்க

"இப்படித்தான், ஸ்கூல்ல எல்லாரும் சிரிக்கிறாங்க!!" அழுகும் பாவனைக்கு மணியின் முகம் மாற,

"தங்கம் சாப்டீங்களா?" பேரனின் முகம் மாறுதலை கண்டவர், சிரிப்பை விடுத்து, பேச்சை மாற்றினார்.

"எனக்கு வேற பேரு வையுங்க!!" அவன் விடுவதாக இல்லை.

"சரி மாத்திடலாம், உனக்கு புடிச்ச பெயர் என்னன்னு சொல்லு, அதையே உனக்கு வெச்சுடுவோம்!!.....…......" என ஆரம்பித்து ஏதேதோ பேசி அவனை சமாதானப்படுத்தினார்.

எப்போதும் போல இரவு உணவை முடித்துக் கொண்டு, தன் மடியில் படுத்து கிடக்கும் மணியிடம் கதையை கதை பேசிக் கொண்டிருந்தவர்,

"உனக்கு, முதல்ல வேற பேருதான் வைக்கனும்னு நினைச்சேன்!!" மெதுவாக ஆரம்பித்தார் மணியின் தாத்தா.

"அது என்ன பேரு?" பெயர் என்றதும், உற்சாகத்துடன் வினவினான் மணி.

"முத்துரதம்!!" அவர் சொன்னதும், முகம் சுளித்தாள் மணி.

"என்ன முஞ்சு எப்படியோ போகுது?" தன் கணவன் பெயரை கேட்டதும் முகம் சுளித்த பேரனை, வம்புக்கு இழுத்தால் சிவகுருவின் அம்மா, மணியின் பெரியாச்சீ.

"நல்லாவே இல்ல!!" சுளித்த முகத்தை மாற்றவில்லை மணி.

"அது என் வீட்டுக்காரர் பேரு!!, அந்தப் பேரு வாங்குவதற்கு எல்லாம் குடுத்து வச்சிருக்கணும்!!" தன் கணவனின் பெயர் பற்றி அவனது பெரியாச்சீ மணியிடம் பீற்றிக் கொள்ள

"அப்போ எதுக்கு எனக்கு மணிகண்டன் பேரு வச்சீங்க?" திடீரென்று எதோ நினைத்தவன் தாத்தாவிடம் கேட்க

"உங்க பெரியப்பா பேரு என்ன?" கேள்வி கேட்டவ னிடம், கேள்வி கேட்டார், தாத்தா.

"என் பெயர் தான்!!"

"உன் பேற என் மகனுக்கு வைக்கல!! என் மகன் பேரன் தான் உனக்கு வச்சிருக்கோம்!!" வந்ததில் இருந்து தன்னிடம் முகம் கொடுத்து பேசாமல், இப்பொழுது தன் தம்பியின் மடியில் படுத்துக்கொண்டு, காலாட்டிக் கொண்டிருக்கும் தன் பேரனின் செயலால், பொருமிய அந்த கிழவி. தன் அக்காவை, பேசாமல் இருக்கும் படி செய்கையால் சொன்னவர்

"நீ, உன், பெரியப்பாவா பாத்திருக்கியா?" மீண்டும் தன் பேரனிடம் கேட்டார்

"இல்லையே!!, அவர்தான், நான் பிறக்குறதுக்கு முன்னாலேயே, சாமி ஆயிட்டாரே!!" உதட்டைப் பிதுக்கினான் மணி.

"உங்க பெரியப்பா சாமியா ஆனதும், உங்க ஆச்சீ அழுதுக்கிட்டே இருந்தா!! அவ அழுததை பார்த்து, "ஐயோ பாவம்"னு இரக்கப்பட்ட கடவுள், அவ பையன, சின்ன குழந்தையாக்கி, உங்க அம்மா வயித்துக்குள்ள வச்சுட்டாரு, அப்புறம் நீ பொறந்த!! அதனாலதான் உனக்கு மணிகண்டன்னு பேரு வச்சோம்!!" எப்பொழுதும் போல் அவர் மணிக்கு கதை சொல்ல,

ஏன் என்ன ஆச்சி வயித்துல வைக்காம, அம்மா வயித்துல வச்சாரு கடவுள்?” என்ற பேரனின் துடுக்குத்தனத்தில் பெரியவர்கள் சிரிக்க

"அப்ப நான் சாமியா?" கதையில் சுவாரசியமாய் இருந்த மணி, பெருமிதத்துடன் கேட்டான்.

"ஆமா, உங்க பெரியப்பா மாதிரி, நீயும் எங்க குல சாமிதான்!!" உவகையால் பேரனின் கன்னம் தடவினார். அதைத் தொடர்ந்து விடாமல் கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்க, அவரும் சளைக்காமல் பதில் சொன்னார். அவரிடம் படுத்துக்கொண்டே பேசிக்கொண்டு இருந்தவன், நான் தூங்கிப் போனேன்.

"மணிகண்டா!!, மணிகண்டா!!" என்று அவன் பெயரை சொல்லி யாரோ அழைக்க, எழுந்தவன், இருபது வயது மணிகண்டன். சின்ன வயதில் நடந்தது கனவாக வர, எழுந்தவன் பேயறைந்தது போல் விழித்துக் கொண்டிருந்தான்.

"என்னாச்சு தங்கம்!!" என்று கேட்ட தன் பெரியாச்சீயிடம், ஒன்றும் இல்லை என்பது போல் தலையை ஆட்ட,

"இன்னும் சாப்பிடல தங்கம்!!" விபத்தில் சிக்கி உயிர் பிழைத்து வந்த, தன் பேரனின் தலைதடவி, கலங்கிய கண்களுடன் பெருமூச்சு விட்டாள் அந்த மூதாட்டி.

**************

அந்த ஆக்சிடென்ட் நடந்த இரண்டு வாரங்கள் கழித்து, ஹாஸ்பிடலில் இருந்து வீட்டுக்கு வந்த நாளில், இவனது அறைக்கு வந்த தாத்தா

"போதும் டா தங்கம்!! இனிமேல் நீ இங்க இருக்க வேண்டாம்!! நம்ம வீட்டுக்கே வந்துரு" என்று சொல்லி, அவன் கைகளை பிடித்துக் கொண்டு அழுதவர், அடுத்த நாளே, அவனை அழைத்துக் கொண்டு பழனி சென்றுவிட்டார். பழனி வந்தும், இவன் எதுவும் பேசாமல் எதையோ பறிகொடுத்தது போல் இருக்க, என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துப் போயினர் பெரியவர்கள் மூவரும். பின் யாரோ சொல்லித்தான், அவனை, அவனது பெரியப்பாவின் சமாதிக்கு அழைத்துச் சென்றார் அவனது தாத்தா. அங்கு தான் அவன் வாழ்க்கையே மாறப் போகிறது என்று தெரியாமல். அழைத்துச் சென்றவர், அங்கிருந்த விபூதியை எடுத்து நெற்றியில் பூசிவிட்டு, அவனுடன் சேர்ந்து அப்படியே அருகில் இருந்த திண்டில் அமர்ந்து விட்டார். இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

**************

"தூங்கிட்டியா தம்பி?" என்றவாறு மணியன் அறையில் நுழைந்தார் தாத்தா. கண்ணைத் திறந்து பார்த்தவன், எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்க, சற்றுமுன் "மானாட்டம் துள்ளித்திரிஞ்ச புள்ள, இப்படி பொட்டி பாம்பா சுருண்டு கிடக்கிறானே" என்று அழுதபடி, மூக்கைச் சிந்திய, தன் மனைவி வருந்தி அழுத்துதான், நினைவுக்கு வந்தது மணியின் தாத்தாவுக்கு. மணி இப்படி எதுவும் பேசாமல் பித்துப் பிடித்தவன் போல் இருப்பதை பார்க்கமாட்டாமல் தான், அவனை கோயம்புத்தூரில் இருந்து பழனிக்கு, அழைத்து வந்தார் அவனது தாத்தா. பெரியவர்கள், மூவரும் என்னென்னவோ பேசிப் பார்த்தும், பேசுவேனா என்று இருந்தான் மணி.

விபத்தின் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியில், பயத்தில், அமைதியாய் இருப்பதாக அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆழ்கடல் பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும், அடி நீரோட்டத்தின் இழுப்பு அளவிட முடியாத அளவு இருக்கும். அதேபோலத்தான் வெளியில் அமைதியாக இருந்தாலும், மணி என் உள்ளம் அலைக்கழிக்கப் பட்டுக்கொண்டிருந்தது. சிவகுருவின் எதிர்வினையை கொஞ்சம் அவன் எதிர்நோக்கி இருந்தாலும், இப்படி நடக்கும் என்பது அவன் சிந்தனைக்கு அப்பாற்பட்டது. மருத்துவமனையில் விழித்து, உயிருடன் தான் இருக்கிறோம் என்றவன் உணர்ந்த, அடுத்த கணம் அவன் சிந்தித்தது, எப்படித் தன்னை மாய்த்துக் கொள்வது என்பதுதான். தாத்தாவின் அழுகையே, அந்த எண்ணத்தை, அவனை கை விட வைத்தது தற்காலியமாக.

சிவகாமி தன் பிறப்பை பற்றி சொன்னது ஒரு புறம் புழுவைப் போல அவனது மூளையை அரித்துக் கொண்டு இருந்தது என்றால், மது அந்த வீடியோவை பார்த்து விட்டாள் என்ற உண்மை அவன் உள்ளத்தை குடைந்து கொண்டிருந்தது.

"பொண்டாட்டியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட போல் ஒரு நாளும் அந்த ஆள் நடந்ததில்லையே?”

"ஒருவேளை சிவகாமி ஆன்ட்டி பொய் சொல்லி இருப்பாங்களோ?”

"இல்லை!! இல்லை!! அந்தாளு என்ன வெறுக்குறதுக்கு வேற என்ன காரணம் இருக்க முடியும்?”

"புருஷன் சந்தேகப்படுவது கூட புரியாத முட்டாளா அவள்?”

"அந்த வீடியோ எப்படி அந்தாள் கைக்கு போச்சு?”

என்று ஒரு நொடி, அமைதியாக தெளிவாக சிந்தித்தால், அடுத்த நொடி

"ஏதாவது பண்ணனும், கண்டிப்பா அந்தாள பழிவாங்கியே தீரனும்!!

"உயிரைக் கொடுத்தாவது, டென்னிஸ் பெரியாளாகி, இவன் என் அப்பாவே இல்லன்னு ஊருக்கே சொல்லணும்!!"

ஆத்திரத்தில் அடக்கமுடியாமல் திரியும் அவன் சிந்தனை

"வலது உள்ளங் கைகளையும், விரலையும் மட்டும் ஏழு எலும்பு முறிவு? இடது காலையும், சின்னதா ஒரு எலும்பு முறிவு?"

"கை சரியாகி, பழையபடி ஸ்ட்ராங்கா ஆகுறதுக்கு, எப்படியும் ஒரு வருஷம் ஆகும்!!, பழையபடி விளையாட முடியுமா?"

"மது வந்த வீடியோவை பாத்துட்டாளே?!!"

"மது முகத்துல இனி நான் எப்படி முழிப்பேன்?"

"சிவகாமி ஆண்ட்டி மோகத்துல நான் எப்படி முழிப்பேன்? என்னை எவ்வளவு நம்பினார்கள்?"

"அந்தாளு ஒருவேளை அந்த வீடியோவை தாத்தாக்கு அனுப்பினா? ...............ஐயோ!!”

"என்ன, இப்போ, இந்த உலகத்தில, மனுஷனா மதிக்கிறதுக்கு, பாசம் காட்டுறதுக்கு மிச்சமிருக்கிறது தாத்தாவும், ஆட்சிகளும் தான், இவங்களுக்கும் அந்த அசிங்கம் தெரிஞ்சா? ......”

அய்யோ!!அய்யோ!! என அவன் மனம் கதற

நிமிடத்துக்கு ஒரு கேள்வியேன, அவனைக் கொன்று தின்று செறித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு நொடியும் செத்துவிடு!! என்று அவனுக்குள், அந்த மிருகம் கட்டளையிடும், பின் மருத்துவமனையில் சிறு குழந்தை என கதறி அழுத அவனது தாத்தாவின் அழுகை, அவனது நினைவு அவனது மனஉறுதியை எல்லாம் கரைத்துவிடும்.

********************
[+] 2 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 14-12-2020, 03:25 PM



Users browsing this thread: 7 Guest(s)