நினைத்தாலே இனிக்கும்(முடிவுற்றது )
#34
"இன்னும் புரியவில்லையா ராஜகுமாரா .நான் உன்னை மணம் புரிந்துகொள்ள விரும்புகிறேன்"இது அவ.

"யூமீன் கல்யாணமா அடிப்பாவி.எங்க அம்மா திட்டுவாங்கடி"இது நான்.

"பரவாயில்லை நாம் ரகசிய திருமணம் செய்துகொள்வோம்"ங்கிறா.

"அதுக்கு நீ என்னடா சொன்னே "

நானா "போடி போடி இவள"னு சொல்லிட்டு ஒரே ஓட்டமா வீட்டுக்கு ஓடி வந்துட்டேன்.

"ச்சீ ஆம்பிளயாட நீயெல்லாம்"

"டேய் நீ வேற அவ இன்னும் வயசுக்கு கூட வரலடா மச்சி "

"ஓ!அப்போ வயசுக்கு வந்தா ஐ லவ் யூ னு சொல்லுவியா"

" காலம் பூரா அந்த தூயதமிழ் கூட என்னால குடும்பம் நடத்த முடியாதுடா.ஏதோ தப்பு பண்ணா சிலப்பதிகாரம்,நளவெண்பா வில் இருந்தெல்வாம் மேற்கோள் காட்டி அட்வைஸ் பண்ணுவாடா".

"ஆனா இதெல்லாம் ஓவர்டா கிச்சுகிச்சு தாம்பளம் விளையாடினதுக்கெல்லாம் லவ் வருமாடா நானும் ஓருத்தங்க கூட கிச்சு கிச்சு தாம்பளம் விளையாடினேன் ஆன அவங்களுக்கு லவ் வருமான்னு தெரியலையேடா"என நான் லேசாக தலை சாய்த்து என் பின்னாள் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த என் ஆசை டீச்சரின் காதருகே சொன்னேன்.

சற்றும் தாமதிக்காமல் அவள் என் காதருகே 
"செருப்பு பிஞ்சிடும்" என்றாள்.

நான் கடுப்பாகி நாற்காலிக்கு இடையே கைவிட்டு யாரும் அறியா வண்ணம் அவள் இடுப்பை கிள்ளிவிட்டேன்
Like Reply


Messages In This Thread
RE: நினைத்தாலே இனிக்கும் - by johnypowas - 16-03-2019, 10:10 AM



Users browsing this thread: 1 Guest(s)