27-08-2020, 03:49 AM
என்னாச்சு நிஷா?
ஒ... ஒண்ணுமில்ல கதிர் - குரல் தழுதழுக்கச் சொன்னாள்.
ஏய்.... இங்க பாரு நீ இப்படிப் பண்ணா அப்புறம் நான் உன்கிட்ட எதையும் சொல்லமாட்டேன்
அவள், பதில் பேசாமல், அந்தத் துணிகளை அணைத்துப் பிடித்துக்கொண்டு, அப்படியே அவன் மடியில் படுத்துக்கொண்டாள்.
என்னை ஒன்சைடா இவ்ளோ டீப்பா இங்கே கதிர் லவ் பண்ணிட்டு இருந்திருக்கானே! என்று நினைக்க நினைக்க நிஷாவுக்கு வியப்பாக இருந்தது. நான் இவ்வளவு valuable ஆன பெண்ணா என்று பெருமையாக இருந்தது. இத்தனை நாளும் இந்த அன்பை மனதுக்குள்ளேயே வைத்துக்கொண்டு எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பான்? என்று நினைக்கும்போது அவனது ஏக்கங்களுக்கு மருந்தாக அவனை கட்டியணைத்துக்கொள்ளவேண்டும்போல் இருந்தது.
அவன், அவளது தலையை கோதிவிட்டுக்கொண்டிருந்தான். அவளது தோளில்... கையில்.. இதமாகத் தடவிக்கொடுத்துக்கொண்டிருந்தான். முடி அவள் கண்களில் விழாதவாறு ஒதுக்கிவிட்டுக்கொண்டிருந்தான். அவனது கேரிங்கில்... அவளுக்கு தூக்கம் வர, அவளை ரூமுக்கு கொண்டுபோய் அவள் நெற்றியில் முத்தம் கொடுத்துப் படுக்கவைத்தான்.
ரூம்ல அடிக்கடி அழுதுட்டு கிடக்குறியாமே... வேணும்னா அம்மாகூட படுத்துக்குறியா... இனிமே அப்படிலாம் அழக்கூடாது சரியா
முதல்லதான் அப்படி இருந்தேன் கதிர். இப்போதான் எனக்காக நீ இருக்கியே
குட். இனிமே நீ அழுறதையே நான் பார்க்கக்கூடாது சரியா
ம்..
குட் நைட் - அவன் அவள் நெற்றியில் முத்தமிட்டுச் சொன்னான்
கதிர்...
என்ன?
நிஷா கொஞ்சம் எழுந்து அவன் கண்ணத்தில் முத்தம் வைத்தாள். கதிரின் முகம் மலர்ந்தது.
நிஷா அவனைக் காதலோடு பார்த்துச் சிரித்துக்கொண்டே படுத்துக்கொண்டாள். அவளது முக பாவனைகளும் காதல் பார்வையும் கதிரை கொல்லாமல் கொல்ல... அவனுக்கு ஜிவ்வென்றிருந்தது. ப்பா.... என்று தலையை உதறிவிட்டு வாசலுக்கு நடந்தான்.
போவதற்கு மனசே இல்லாமல் வாசலில் நின்றான். அவளையே கண்கொட்டாமல் பார்த்தான். அவளும் அவனையே பார்த்துக்கொண்டு படுத்திருந்தாள்.
என்னடி இப்படிப் பார்க்குற?
எப்படிப் பார்க்குறேன்?
கத்தியால குத்துற மாதிரி
நிஷா சிரித்துக்கொண்டே மன நிறைவோடு தலையணைக்குள் முகத்தை அழுத்திக்கொண்டாள்.
முந்தின இரவு அவள் கண்ணீரில் நனைந்த தலையணை இன்று அவள் வெட்கத்தில் நனைந்து கொண்டிருந்தது.
ஒ... ஒண்ணுமில்ல கதிர் - குரல் தழுதழுக்கச் சொன்னாள்.
ஏய்.... இங்க பாரு நீ இப்படிப் பண்ணா அப்புறம் நான் உன்கிட்ட எதையும் சொல்லமாட்டேன்
அவள், பதில் பேசாமல், அந்தத் துணிகளை அணைத்துப் பிடித்துக்கொண்டு, அப்படியே அவன் மடியில் படுத்துக்கொண்டாள்.
என்னை ஒன்சைடா இவ்ளோ டீப்பா இங்கே கதிர் லவ் பண்ணிட்டு இருந்திருக்கானே! என்று நினைக்க நினைக்க நிஷாவுக்கு வியப்பாக இருந்தது. நான் இவ்வளவு valuable ஆன பெண்ணா என்று பெருமையாக இருந்தது. இத்தனை நாளும் இந்த அன்பை மனதுக்குள்ளேயே வைத்துக்கொண்டு எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பான்? என்று நினைக்கும்போது அவனது ஏக்கங்களுக்கு மருந்தாக அவனை கட்டியணைத்துக்கொள்ளவேண்டும்போல் இருந்தது.
அவன், அவளது தலையை கோதிவிட்டுக்கொண்டிருந்தான். அவளது தோளில்... கையில்.. இதமாகத் தடவிக்கொடுத்துக்கொண்டிருந்தான். முடி அவள் கண்களில் விழாதவாறு ஒதுக்கிவிட்டுக்கொண்டிருந்தான். அவனது கேரிங்கில்... அவளுக்கு தூக்கம் வர, அவளை ரூமுக்கு கொண்டுபோய் அவள் நெற்றியில் முத்தம் கொடுத்துப் படுக்கவைத்தான்.
ரூம்ல அடிக்கடி அழுதுட்டு கிடக்குறியாமே... வேணும்னா அம்மாகூட படுத்துக்குறியா... இனிமே அப்படிலாம் அழக்கூடாது சரியா
முதல்லதான் அப்படி இருந்தேன் கதிர். இப்போதான் எனக்காக நீ இருக்கியே
குட். இனிமே நீ அழுறதையே நான் பார்க்கக்கூடாது சரியா
ம்..
குட் நைட் - அவன் அவள் நெற்றியில் முத்தமிட்டுச் சொன்னான்
கதிர்...
என்ன?
நிஷா கொஞ்சம் எழுந்து அவன் கண்ணத்தில் முத்தம் வைத்தாள். கதிரின் முகம் மலர்ந்தது.
நிஷா அவனைக் காதலோடு பார்த்துச் சிரித்துக்கொண்டே படுத்துக்கொண்டாள். அவளது முக பாவனைகளும் காதல் பார்வையும் கதிரை கொல்லாமல் கொல்ல... அவனுக்கு ஜிவ்வென்றிருந்தது. ப்பா.... என்று தலையை உதறிவிட்டு வாசலுக்கு நடந்தான்.
போவதற்கு மனசே இல்லாமல் வாசலில் நின்றான். அவளையே கண்கொட்டாமல் பார்த்தான். அவளும் அவனையே பார்த்துக்கொண்டு படுத்திருந்தாள்.
என்னடி இப்படிப் பார்க்குற?
எப்படிப் பார்க்குறேன்?
கத்தியால குத்துற மாதிரி
நிஷா சிரித்துக்கொண்டே மன நிறைவோடு தலையணைக்குள் முகத்தை அழுத்திக்கொண்டாள்.
முந்தின இரவு அவள் கண்ணீரில் நனைந்த தலையணை இன்று அவள் வெட்கத்தில் நனைந்து கொண்டிருந்தது.