23-08-2020, 01:11 AM
(This post was last modified: 23-08-2020, 01:25 AM by Dubai Seenu. Edited 1 time in total. Edited 1 time in total.)
மறுநாள் -
நிஷா ரொம்ப லேட்டாகத்தான் எழுந்தாள். அடித்துப் பிடித்துக்கொண்டு ஆட்டோவில் ஸ்கூலுக்குப் போனாள். ரொம்ப ரொம்ப சந்தோஷமாக, சென்னை ஸ்கூலுக்குள் நடந்து திரிந்ததுபோல் பூரிப்போடு நடந்தாள். முடியை அழகாக வாரி, க்ளிப் போட்டிருந்தாள். புடவையை, பழையமாதிரி சிரத்தை எடுத்து நேர்த்தியாகக் கட்டியிருந்தாள்.
புத்தகத்தை மார்பில் வைத்து அணைத்துப் பிடித்துக்கொண்டு வேக வேகமாக ஸ்டைலாக அந்த ஸ்கூல் வராண்டாவில் நடந்தாள். குட் மார்னிங்க் சொன்ன மாணவிகளுக்கு சந்தோஷமாக பதில் சொன்னாள். இது எங்க ஊரு. இது எங்க ஊரு ஸ்கூல். எங்க ஊர் மக்களுக்கு அறிவை போதிக்கிற ஸ்கூல். என் திறமையையும் அறிவையும் கடின உழைப்பையும் உங்களுக்கு கொடுக்கப்போகிறேன் டியர்ஸ்... என்று மனம் நிறையச் சொல்லிக்கொண்டு அவள் வகுப்புக்குள் நுழைந்தாள்.
கதிர், அவளைத் தூங்கவைத்த கையோடு வயலுக்குப் போயிருந்தான். பதினோரு மணிவாக்கில் வீட்டுக்கு வந்தவன், அதிகாலையில் நிஷா தன்னைக் கட்டிப்பிடித்துக்கொண்ட இடத்தையே பார்த்துக்கொண்டு நின்றான். ஒரு இனம்புரியாத சந்தோஷம். மழையில் நனைந்ததுபோல் இருந்தது. அவள் தனக்கு உணர்ச்சிப்பூர்வமாக ஐ லவ் யூ சொன்னதை நினைத்து நினைத்து மகிழ்ந்தான். நிஷா... நிஷா.... என்று அவள் பெயரை சொல்லிக்கொண்டே படுத்துக்கிடந்தான். பின் மனசே இல்லாமல் தோட்டக் காட்டுக்குப் போனான். அங்கேயும்கூட.... இரட்டை ஜடையில் அங்கே நிஷா முகம் நிறைய சிரிப்போடு நடந்து சென்ற நாட்களை நினைத்துப்பார்த்துக்கொண்டிருந்தான்.
மாலை ஒரு 6 மணிவாக்கில்,
டிராக்டரை நிறுத்திவிட்டுக் கதிர் இறங்கினான். கம்மாயில் குளித்துவிட்டு ஈரத்துணிகளோடு வந்திருந்தான். நிஷாவையே நினைத்து நினைத்து... முகமலர்ச்சியோடு வந்திருந்தான். தன் ரூமுக்குள் போய் வேஷ்டி உடுத்திக்கொண்டு, சட்டை போட்டுக்கொண்டு வந்தான். லக்ஷ்மி, அவள் பாட்டுக்கு அவள் வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தாள். இவன், ஆடு, மாடுகளை ஒரு பார்வை பார்த்துவிட்டு வந்து முற்றத்தில், கட்டிலில் உட்கார்ந்தான்.
அவனுக்குப் பின்னால் கொலுசுச் சத்தம் கேட்டது. நிஷா இறங்கி வந்து, அவனைக் கடந்து, கிச்சனுக்குள் போனாள். அவனுக்கு டீ கலந்தாள்.
அவன் இந்த நேரத்துல காபி, டீ எதுவும் குடிக்க மாட்டானேம்மா.. எரிஞ்சு விழுவான்... என்றாள் லக்ஷ்மி. நிஷாவின் முகம் வாடுவதை பார்த்துவிட்டு, சரி சரி, கலந்துட்ட.. போய் கொடுத்துப் பாரு.. என்றாள்.
நிஷா வந்து அவன் முன்னால் நின்றுகொண்டு டீ க்ளாஸை பிடித்தவாறு கையை நீட்டிக்கொண்டு நின்றாள்.
கதிர் அவளை நிமிர்ந்து பார்த்தான். என் அழகி... இப்போ.. கொஞ்ச நேரத்துக்கு முன்புதான் குளித்திருப்பாள் போல. நன்றாக தலை வாரி, பொட்டு வைத்து, சூப்பராக புடவை கட்டி, வந்து நிற்கிறாள். சென்னையில் இருப்பதுபோல் கட்டியிருக்கிறாள். முகத்தில் ஒரு பொலிவு தெரிகிறது. கழுத்தில்... மெல்லியதாய் ஒரு அடிஷனல் செயின் போட்டிருக்கிறாள். இன்றுதான் போட்டிருக்கிறாள். இப்போதுதான் என் நிஷா முக மலர்ச்சியோடு இருக்கிறாள்.
டீ... என்றாள்.
கதிர் அவளை ரசித்துப் பார்த்துக்கொண்டே வாங்கினான். ஆசையோடு குடித்தான். அவளோடு என்னென்னவோ பேசவேண்டும் என்று இருந்தது. ஆனால் வார்த்தைகள் வரவில்லை. அவள்.. அவனை ஏறிட்டுப் பார்க்காமல், தன் ரூமை நோக்கி நடந்தாள். படிகளில் ஏறினாள். கதிர் அவளைத் திரும்பிப் பார்த்தான். அவள், கால் கொலுசுகளை காட்டிக்கொண்டு படிகளில் நடக்கும் அழகை ரசித்துப் பார்த்தான்.
ஏண்டா... நான் போட்டுக் கொடுத்தா கரிச்சுக் கொட்டுவ? இன்னும் கொஞ்ச நேரத்துல சாப்பிடப் போறோம். இப்போ எதுக்கு டீ???? ன்னு கத்துவ?
ரூமுக்குள் நுழையப்போன நிஷா, வெட்கத்தோடு, உள்ளே நுழையாமல் நின்றாள். அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தாள்.
நீ என்னைக்காவது நிஷா மாதிரி டேஸ்ட்டா டீ போட்டிருக்கியா? என்றான்.
நிஷா, செயினைப் பிடித்து விரல்களால் வருடிக்கொண்டே நின்றாள். அங்கே லக்ஷ்மி அவனிடம் கேட்டுக்கொண்டிருந்தாள்.
உனக்கு என்ன பிடிக்கும் எது டேஸ்ட்டா இருக்கும்னு எனக்கு தெரியாதா? நேத்து கறிக்குழம்பு பத்தி ஒண்ணுமே சொல்லலையே நீ. நல்லா சாப்டியா?
குழம்பு சுமார்தான். ஆனா எலும்பு நல்லா..... டேஸ்ட்டா இருந்தது..ம்ம்ம்ம்ம்.... இன்னொரு நாள் அதுமாதிரி வேணும்
நிஷாவுக்கு... ஜிவ்வென்றிருந்தது. அவனை ஓரக்கண்ணால் பார்த்து ரசித்துவிட்டு ரூமுக்குள் போனாள்.
அவளுக்கு வேலையே ஓடவில்லை. மறுநாள் பாடம் நடத்த, சில நோட்ஸ்கள் எடுக்கவேண்டி இருந்தது. ஆனால் அதற்கு எல்லாம் மனமில்லாமல் கிடந்தாள். ஸாரி தீபா... ஸாரி அப்பா...ஸாரி அம்மா... கதிர் எனக்கு கண்கண்ட கடவுள் மாதிரி. ஆமா.. அப்படித்தான் அன்னைக்கு ஷாப்பிங்க் மால்ல வந்து காப்பாத்தினான். நம்ம நிஷா என்றான். என்னைச் சிறுவயதிலிருந்தே காதலித்திருக்கிறான். நான் இவனுக்கானவள். இவன் என் ஆளு. இவனை என்னால மிஸ் பண்ண முடியாது அப்பா. யாருக்காகவும்.. எதற்காகவும் மிஸ் பண்ணமுடியாது. இவன் எனக்கு வேணும்... ப்ளீஸ் தீபா... கதிரை நான் எடுத்துக்கிடுறேன்... - முழங்கால்களை கட்டிக்கொண்டு, தாடையை முழங்கால்களில் வைத்துக்கொண்டு, தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தாள்.
எழுந்து ஊஞ்சலில் உட்கார்ந்துகொண்டாள். ஆடினாள். கடவுளே.... எனக்கு ஏன் எந்த வேலையுமே ஓடமாட்டேங்குது.... என்று இறங்கினாள். நடந்தாள். சோபாவில் சாய்ந்துகொண்டு தரையில் உட்கார்ந்தாள். மௌனமான நேரம் பாடலில் வரும் ஜெயப்ரதா போல... கால் கொலுசு தெரிய.... நேரம்போவதே தெரியாமல் உட்கார்ந்திருந்தாள். கதிர் என்மேல் எவ்வளவு ஆசைகளை வைத்திருந்திருக்கிறான்!
ஒவ்வொரு பெண்ணுக்குமே... இதுமாதிரி... அவள் வாழ்க்கையில் ஒருவன் இருப்பான் என்று அவளுக்குத் தோன்றியது. ஆனால் அதில் பலருக்கும்.. கடைசிவரை அந்த அன்பை... உணர முடியாமல்.. அல்லது வெளிப்படுத்த முடியாமலேயே போய்விடுகிறதோ... என்று நினைத்துக்கொண்டே உட்கார்ந்திருந்தாள்.
நிஷா ரொம்ப லேட்டாகத்தான் எழுந்தாள். அடித்துப் பிடித்துக்கொண்டு ஆட்டோவில் ஸ்கூலுக்குப் போனாள். ரொம்ப ரொம்ப சந்தோஷமாக, சென்னை ஸ்கூலுக்குள் நடந்து திரிந்ததுபோல் பூரிப்போடு நடந்தாள். முடியை அழகாக வாரி, க்ளிப் போட்டிருந்தாள். புடவையை, பழையமாதிரி சிரத்தை எடுத்து நேர்த்தியாகக் கட்டியிருந்தாள்.
புத்தகத்தை மார்பில் வைத்து அணைத்துப் பிடித்துக்கொண்டு வேக வேகமாக ஸ்டைலாக அந்த ஸ்கூல் வராண்டாவில் நடந்தாள். குட் மார்னிங்க் சொன்ன மாணவிகளுக்கு சந்தோஷமாக பதில் சொன்னாள். இது எங்க ஊரு. இது எங்க ஊரு ஸ்கூல். எங்க ஊர் மக்களுக்கு அறிவை போதிக்கிற ஸ்கூல். என் திறமையையும் அறிவையும் கடின உழைப்பையும் உங்களுக்கு கொடுக்கப்போகிறேன் டியர்ஸ்... என்று மனம் நிறையச் சொல்லிக்கொண்டு அவள் வகுப்புக்குள் நுழைந்தாள்.
கதிர், அவளைத் தூங்கவைத்த கையோடு வயலுக்குப் போயிருந்தான். பதினோரு மணிவாக்கில் வீட்டுக்கு வந்தவன், அதிகாலையில் நிஷா தன்னைக் கட்டிப்பிடித்துக்கொண்ட இடத்தையே பார்த்துக்கொண்டு நின்றான். ஒரு இனம்புரியாத சந்தோஷம். மழையில் நனைந்ததுபோல் இருந்தது. அவள் தனக்கு உணர்ச்சிப்பூர்வமாக ஐ லவ் யூ சொன்னதை நினைத்து நினைத்து மகிழ்ந்தான். நிஷா... நிஷா.... என்று அவள் பெயரை சொல்லிக்கொண்டே படுத்துக்கிடந்தான். பின் மனசே இல்லாமல் தோட்டக் காட்டுக்குப் போனான். அங்கேயும்கூட.... இரட்டை ஜடையில் அங்கே நிஷா முகம் நிறைய சிரிப்போடு நடந்து சென்ற நாட்களை நினைத்துப்பார்த்துக்கொண்டிருந்தான்.
மாலை ஒரு 6 மணிவாக்கில்,
டிராக்டரை நிறுத்திவிட்டுக் கதிர் இறங்கினான். கம்மாயில் குளித்துவிட்டு ஈரத்துணிகளோடு வந்திருந்தான். நிஷாவையே நினைத்து நினைத்து... முகமலர்ச்சியோடு வந்திருந்தான். தன் ரூமுக்குள் போய் வேஷ்டி உடுத்திக்கொண்டு, சட்டை போட்டுக்கொண்டு வந்தான். லக்ஷ்மி, அவள் பாட்டுக்கு அவள் வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தாள். இவன், ஆடு, மாடுகளை ஒரு பார்வை பார்த்துவிட்டு வந்து முற்றத்தில், கட்டிலில் உட்கார்ந்தான்.
அவனுக்குப் பின்னால் கொலுசுச் சத்தம் கேட்டது. நிஷா இறங்கி வந்து, அவனைக் கடந்து, கிச்சனுக்குள் போனாள். அவனுக்கு டீ கலந்தாள்.
அவன் இந்த நேரத்துல காபி, டீ எதுவும் குடிக்க மாட்டானேம்மா.. எரிஞ்சு விழுவான்... என்றாள் லக்ஷ்மி. நிஷாவின் முகம் வாடுவதை பார்த்துவிட்டு, சரி சரி, கலந்துட்ட.. போய் கொடுத்துப் பாரு.. என்றாள்.
நிஷா வந்து அவன் முன்னால் நின்றுகொண்டு டீ க்ளாஸை பிடித்தவாறு கையை நீட்டிக்கொண்டு நின்றாள்.
கதிர் அவளை நிமிர்ந்து பார்த்தான். என் அழகி... இப்போ.. கொஞ்ச நேரத்துக்கு முன்புதான் குளித்திருப்பாள் போல. நன்றாக தலை வாரி, பொட்டு வைத்து, சூப்பராக புடவை கட்டி, வந்து நிற்கிறாள். சென்னையில் இருப்பதுபோல் கட்டியிருக்கிறாள். முகத்தில் ஒரு பொலிவு தெரிகிறது. கழுத்தில்... மெல்லியதாய் ஒரு அடிஷனல் செயின் போட்டிருக்கிறாள். இன்றுதான் போட்டிருக்கிறாள். இப்போதுதான் என் நிஷா முக மலர்ச்சியோடு இருக்கிறாள்.
டீ... என்றாள்.
கதிர் அவளை ரசித்துப் பார்த்துக்கொண்டே வாங்கினான். ஆசையோடு குடித்தான். அவளோடு என்னென்னவோ பேசவேண்டும் என்று இருந்தது. ஆனால் வார்த்தைகள் வரவில்லை. அவள்.. அவனை ஏறிட்டுப் பார்க்காமல், தன் ரூமை நோக்கி நடந்தாள். படிகளில் ஏறினாள். கதிர் அவளைத் திரும்பிப் பார்த்தான். அவள், கால் கொலுசுகளை காட்டிக்கொண்டு படிகளில் நடக்கும் அழகை ரசித்துப் பார்த்தான்.
ஏண்டா... நான் போட்டுக் கொடுத்தா கரிச்சுக் கொட்டுவ? இன்னும் கொஞ்ச நேரத்துல சாப்பிடப் போறோம். இப்போ எதுக்கு டீ???? ன்னு கத்துவ?
ரூமுக்குள் நுழையப்போன நிஷா, வெட்கத்தோடு, உள்ளே நுழையாமல் நின்றாள். அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தாள்.
நீ என்னைக்காவது நிஷா மாதிரி டேஸ்ட்டா டீ போட்டிருக்கியா? என்றான்.
நிஷா, செயினைப் பிடித்து விரல்களால் வருடிக்கொண்டே நின்றாள். அங்கே லக்ஷ்மி அவனிடம் கேட்டுக்கொண்டிருந்தாள்.
உனக்கு என்ன பிடிக்கும் எது டேஸ்ட்டா இருக்கும்னு எனக்கு தெரியாதா? நேத்து கறிக்குழம்பு பத்தி ஒண்ணுமே சொல்லலையே நீ. நல்லா சாப்டியா?
குழம்பு சுமார்தான். ஆனா எலும்பு நல்லா..... டேஸ்ட்டா இருந்தது..ம்ம்ம்ம்ம்.... இன்னொரு நாள் அதுமாதிரி வேணும்
நிஷாவுக்கு... ஜிவ்வென்றிருந்தது. அவனை ஓரக்கண்ணால் பார்த்து ரசித்துவிட்டு ரூமுக்குள் போனாள்.
அவளுக்கு வேலையே ஓடவில்லை. மறுநாள் பாடம் நடத்த, சில நோட்ஸ்கள் எடுக்கவேண்டி இருந்தது. ஆனால் அதற்கு எல்லாம் மனமில்லாமல் கிடந்தாள். ஸாரி தீபா... ஸாரி அப்பா...ஸாரி அம்மா... கதிர் எனக்கு கண்கண்ட கடவுள் மாதிரி. ஆமா.. அப்படித்தான் அன்னைக்கு ஷாப்பிங்க் மால்ல வந்து காப்பாத்தினான். நம்ம நிஷா என்றான். என்னைச் சிறுவயதிலிருந்தே காதலித்திருக்கிறான். நான் இவனுக்கானவள். இவன் என் ஆளு. இவனை என்னால மிஸ் பண்ண முடியாது அப்பா. யாருக்காகவும்.. எதற்காகவும் மிஸ் பண்ணமுடியாது. இவன் எனக்கு வேணும்... ப்ளீஸ் தீபா... கதிரை நான் எடுத்துக்கிடுறேன்... - முழங்கால்களை கட்டிக்கொண்டு, தாடையை முழங்கால்களில் வைத்துக்கொண்டு, தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தாள்.
எழுந்து ஊஞ்சலில் உட்கார்ந்துகொண்டாள். ஆடினாள். கடவுளே.... எனக்கு ஏன் எந்த வேலையுமே ஓடமாட்டேங்குது.... என்று இறங்கினாள். நடந்தாள். சோபாவில் சாய்ந்துகொண்டு தரையில் உட்கார்ந்தாள். மௌனமான நேரம் பாடலில் வரும் ஜெயப்ரதா போல... கால் கொலுசு தெரிய.... நேரம்போவதே தெரியாமல் உட்கார்ந்திருந்தாள். கதிர் என்மேல் எவ்வளவு ஆசைகளை வைத்திருந்திருக்கிறான்!
ஒவ்வொரு பெண்ணுக்குமே... இதுமாதிரி... அவள் வாழ்க்கையில் ஒருவன் இருப்பான் என்று அவளுக்குத் தோன்றியது. ஆனால் அதில் பலருக்கும்.. கடைசிவரை அந்த அன்பை... உணர முடியாமல்.. அல்லது வெளிப்படுத்த முடியாமலேயே போய்விடுகிறதோ... என்று நினைத்துக்கொண்டே உட்கார்ந்திருந்தாள்.