Fantasy தாலி மட்டும் தான் கட்டினேன்
தாலி மட்டும் தான் கட்டினேன் - Ep25

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நண்பர்களே!! நீண்ட நாட்கள் பின்பு பதிவிட்டிருக்கிறேன்.. முன்பு இருந்த நேர்த்தி, சுவாரசியம் இந்த பதிவில் இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை.. ஆனால் கதையை விட்ட இடத்தில் இருந்து அப்படியே தொடர்ந்து கதை ஓட்டம் மாறுபடாமல் கொண்டு வந்திருக்கிறேன். 

இதற்கு முந்தைய பதிவின் இறுதியை சற்று படித்து விட்டு, இந்த பதிவை தொடருங்கள்..

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தன் வயதில் கிட்டத்தட்ட பாதி வயதுடைய இளைஞனை, இரு மார்பு பந்துகளும் பிதுங்கி ரவிக்கையின் மேல் விளிம்பை தாண்டுமளவு கட்டி அணைத்தாலோ அல்லது அந்த இளைஞனால் அணைக்கப்பட்டாலோ, எந்த ஒரு பெண்ணும் தடுமாறி தான் போவாள். 

மஞ்சுவும் அப்படித்தான்.. ஆனால் ராகுலால் அவள் பெரிய மார்பு பந்துகள் இரண்டும் நசுக்கப்பட்டதால், அவள் மனதில் காமம் ஏறவில்லை மாறாக கலக்கி விட்ட முட்டையை போல அவள் மனம் குழம்பிக் கொண்டிருந்தது. ராகுல் முதலில் அவளை கட்டி அணைத்த போது, விளையாட்டு, வெகுளி பையன் என்று நினைத்த அவள் மனம், ராகுல் அவள் உடலை நெருக்கி தன் உடலோடு இறுக்க இறுக்க குழம்பிக் கொண்டிருந்தது.. அவள் கைகள் இரண்டும் அவன் முதுகை பட்டும் படாமலும் பிடித்திருந்தது.. குழம்பிய மனம் அவனுடைய நடத்தையில் சந்தேகத்தை உருவாக்கி கேள்வி கேட்டு பதிலும் சொல்லிக் கொண்டது..

என்னாச்சு இந்த பையனுக்கு? வயசுல பெரியவங்க ன்னு கூட பாக்காம இப்படி கட்டி பிடிக்கிறான்? நோக்கம் வேற மாதிரி இருக்குமோ? அய்யோ ச்சீ சின்ன பையனை போய் இப்படி நினைக்குறேனே, மரகதத்தோட மகன் அப்படிலாம் இருக்க மாட்டான், அவ அப்டி வளத்துருக்க மாட்டா?  அவளோட மகன் எனக்கும் மகன் மாதிரி தான்.. ச்சீ என்ன பொம்பள நான்..

என்னதான் அவளுக்கு அவளே சமாதான படுத்தினாலும், ராகுலின் ஆண்மை அவளின் வயிற்றில் முட்டிய அந்த தருணத்தில் பெண்களுக்கே உரிய பாதுகாப்பு அமைப்பு (Defensive Mechanism) சக்கரத்தை சுழல வைக்க, அவள் கைகள் இரண்டும் அனிச்சையாக அவன் தோளை பற்றி மென்மையாக அணைப்பிலிருந்து விடுபட முயற்சிக்க, ராகுல் விடவில்லை, இறுக்கமாக இன்னொரு அழுத்தம் குடுக்க அவள் முலை காம்புகள் நசுங்கி அவளை இம்சித்தது..

சங்கட சூழ்நிலையில்  விடுபட முடியாமல் அவள் தவிக்க, புலியின் உருமலைப் போன்று தொண்டை செருமும் சத்தம் கம்பீரமாக வீட்டு வாசலில் இருந்து வந்தது..

அனைவரின் விழிகளும் வாசலை நோக்க, கலையின் தந்தையும் மஞ்சுவின் கணவனுமான ராஜாராம் வெள்ளை வேட்டி சட்டையில் மிடுக்காக கம்பீரமாக நின்று கொண்டிருந்தார்..

ராஜாராமை பார்த்து ராகுலின் உடலில் நரம்பு மண்டலம் மொத்தத்திலும் சின்ன நடுக்கம் பரவ, அவன் கைகள் தானாக மஞ்சுவை விடுவிக்க, அவள் நழுவி இரண்டு அடிகள் நகர்ந்து நின்றாள்.. நடுவீட்டில் வேறொரு இளைஞனுடன் கட்டிப்பிடித்து நின்றதை கணவன் கண்டது, அவளுக்கு உடல் முழுவதும் நடுக்கத்தை கொடுக்க, உடலில் வியர்வை பூத்து அவளால் அந்த இடத்தில நிற்க முடியவில்லை.. அவளின் கணவன் ராஜாராமை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தரையை பார்த்தபடி "என்னங்க உக்காருங்க, நான் போய் காபி போட்டு கொண்டு வரேன்" என்று நடுங்கிய  சொல்லிவிட்டு  நகர்ந்து சென்றாள்..

இவ்வளவு நேரம் ராகுலின் அட்டகாசத்தால் செய்வதறியாது தவித்துக் கொண்டிருந்த கலை சோஃபாவிலிருந்து துள்ளிக் குதித்து போய் அவளுடைய அப்பாவை கட்டிப்பிடித்து அவள் முகத்தை அவர் மார்பில் புதைத்து கண்களில் தேங்கி இருந்து சில துளி கண்ணீரை அவருடைய வெண்மை சட்டையில் துடைத்துவிட்டு தலையை நிமிர்ந்து அவர் முகத்தை காக்க வந்த தெய்வத்தை போல் பார்த்தாள்.

ராஜாராம்: (கலையின் தலையை ஆதரவாக தடவி கொடுத்து சிரித்தவாறு) அட!!! என்னடா தங்கம் அப்பாவை ரொம்ப வருஷம் கழிச்சு பாக்குற மாதிரி ஓடி வந்து கட்டிப்பிடிக்குற.

கலை: "ஒண்ணுமில்ல வந்து உக்காருங்க ப்பா" என்று அவர் கையை பிடித்து இழுத்து ஒரு தனி சோஃபாவில் உக்கார வைத்துவிட்டு ராகுலை பார்த்து முறைத்தாள்..

பதற்றத்தால் வியர்த்த நெற்றியை துடைத்துக் கொண்டிருந்த ராகுலின் பக்கம் ராஜாராமின் கண்கள் சென்றது. அதை உணர்ந்த ராகுலும் அவரை பார்த்து பற்கள் தெரிய சிரித்தான்..

ராஜாராம் பதிலுக்கு தன் உதட்டின் இரு ஓரத்தையும் சின்னதாய் அகட்டி கடமைக்கென சின்ன புன்னகை காட்டி விட்டு பேச ஆரம்பித்தார்.. 

ராஜாராம் என்பவர் விருந்தோம்பல் அறிந்த நல்ல குணமுடைய சிறந்த மனிதர். அப்படிப்பட்டவர் ராகுலிடம் இப்படி நடந்து கொள்வதன் காரணம் என்ன? மஞ்சுவும் ராகுலின் அம்மா மரகதமும் சிறுவயது முதலே தோழிகள், ஆதலால் இரு குடும்பத்தாரும் ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகம்.. ராகுலின் குணாதீசியங்களில் ஓரளவை ராஜாராம் முன்கூட்டியே அறிந்தவர் தான், அதுவே இன்று ராகுல் அவரின் மனைவியை அனைத்திருந்த விதத்தை கண்டு கோபமுற்றதே அவர் நடத்தையின் காரணம்..

"என்ன தம்பி!! நம்ம வீடு பக்கம்?"

"இல்ல அங்கிள், அது.. அ..:" ராகுலுக்கு எங்கே இருந்து ஆரம்பிப்பது என தெரியாமல் திணறினான். மஞ்சுவிடம் நேர்த்தியாக சொன்ன அனைத்தையும் தலைகீழாக உளறினான்.. "அங்கிள் அது.... ஆண்ட்டி க்கு மேனேஜர் போஸ்டிங் கொடுக்க நாங்க மு... முடிவு பண்ணிருக்கோம்" திக்கி திக்கி சொன்னான்.

ராஜாராமோ மஞ்சுவை போல தாம் தீமென்று குதிக்கவில்லை.. மாறாக அவர் புருவங்கள் இரண்டும் சுருங்கியது, கை விரல்கள் பத்தும் ஒன்றோடு ஒன்று பின்னியது, சோஃபாவில் சாய்ந்திருந்த அவரின் முதுகு நிமிர்ந்தது.. அவரின் விழிகள் ராகுலை உற்று நோக்கி ஆராய்ந்தது..

ராஜாராமின் திடகாத்திரமான தோற்றமே ராகுலுக்கு சற்று பதற்றத்தை ஆரம்பம் முதலே கொடுத்துக் கொண்டிருக்க, ராஜாராமின் இந்த பார்வை அவனை மேலும் ஆட்டியது..

ராஜாராம் பேச ஆரம்பித்தார்..

"அப்படியா!! எதுக்கு மேனேஜர் போஸ்டிங் இப்போ??" ராஜாராம் சோஃபாவில் உக்காந்தவாறே பின்னால் திரும்பி அடுப்பாங்கரையில் காஃபி போட்டுக் கொண்டிருந்த மஞ்சுவை ஒருமுறை பார்த்து விட்டு திரும்பி ராகுலிடம் "மேடம் அப்படி என்ன சாதிச்சுட்டாங்க??"

"என் அம்மாவை ஏமாத்துன மாதிரி, முடிஞ்சா எங்கப்பா வ ஏமாத்தி பாருடா பாப்போம் நாயே!! ஒழுங்கா ஓடி போயிரு.. இல்லேன்னா எங்கப்பா கிட்ட உதை வாங்கிட்டு தான் போவ" என்று கலை தன் மனதுக்குள் கருவிக்கொண்டு ராகுலை முறைத்துக் கொண்டிருந்தாள்..

"அ... அது அங்கிள்" என்ற ராகுல் எச்சியை தொண்டைக்குள் முழுங்கினான்.. "அங்கிள் போன வருஷம் நல்ல ப்ராஃபிட், அதுல ஆண்ட்டி நல்லா ஒர்க் பண்ணாங்க.. அதான்.." சொல்லிவிட்டு ராஜாராமை பார்த்து மறுபடியும் பல்லை இளித்துக் காட்டினான்.. கலையின் வேலை பறித்து மஞ்சுவிடம் நாடகமாடியதை போல் அவனால் ராஜாராமிடம் ஆட முடியவில்லை, அவன் ராஜாராமிடம் பேச்சை வளர்ப்பதை முற்றிலுமாக தவிர்த்தான். விட்டால் போதும் இங்கிருந்து இப்பொழுது ஓடி விடலாம் என்றிருந்தான்..

ராஜாராமின் கம்பீரத்தையும் தெளிவையும் கிஷோர் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான்.. மறுபக்கம் ராகுலின் இந்த பதற்றத்தையும் ஆச்சரியத்துடன் பார்த்து வியப்புற்றான்..

ராஜாராம்: அதே கூர்மையான பார்வையுடன் "ம்ம்ம்ம்..." என்றார்.. அந்த ம்ம்ம் என்ற ஒலியே சிங்கத்தின் சின்ன உறுமலை போன்று தோன்றியது ராகுலுக்கு.. மேலும் அவனை கேள்வியால் துளைக்க விரும்பாமல்  "சரி.. சாப்பிட ஆண்ட்டி ஏதாச்சும் கொடுத்துச்சா" என்றார்.

ராகுல் வாயை திறப்பதற்குள், கையில் தட்டுடனும் அதில் ஐந்து டம்ளருடனும் வந்த மஞ்சு "இல்லங்க, தம்பியும் இப்போ தான் வந்துச்சு.. அதான் எதுவும் குடுக்கல" என்று சொல்லிவிட்டு எல்லாருக்கும் காஃபி கொடுத்துவிட்டு  கடைசியாக பாவமாக உட்கார்ந்திருந்த கிஷோருக்கும் முறைத்துக் கொண்டே கொடுத்தாள்..

அப்பொழுது தான் கலைக்கு அருகிலிருந்த கிஷோரை கவனித்த ராஜாராம் கையிலிருந்த காஃபியை கீழே வைத்துவிட்டு முகத்தில் சின்ன புன்னகையுடன் "தம்பி யாரும்மா? இவ்ளோ நேரம் நான் கவனிக்கவே இல்ல" என்று கலையிடம் கேட்டார்..

"அப்பா!! இது கிஷோர்.. இவர்ர்ர்ர்..." என்று அடுத்து என்ன சொல்வதெனயறியாமல் தயங்கிக் கொண்டிருக்க 

அவளது தயக்கத்தை பார்த்து மனதில் ஒன்று ஊகித்த ராஜாராம் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு வெளியில் சாதாரணமாக "உன்னோட பிரண்ட் ஆ!! ம்மா"

அவருக்கு தன் மகள் கலையின் மீது அதீத நம்பிக்கை எப்பொழுதும்.. எதை தேர்ந்தெடுத்தாலும் சரியாக இருக்கும் என்று ஆழமான நம்பிக்கை அவருக்கு.. இங்கு நாம் கவனிக்க வேண்டியது, என்னதான் கலை அவளுடைய வாழ்க்கைக்கு ஒரு முரண்பாடான, உலகத்துக்கு ஒவ்வாத ஒரு கொள்கையை பிடித்துக் கொண்டிருந்தாலும் அந்த கொள்கையுடனே வாழ்க்கையை வாழ, அவள் தேர்தெடுத்த கிஷோர் பத்துக்கு பதினைந்து பொருத்தத்தில் இருந்தான். ஆக இங்கு ராஜாராம் தன் மகள் மீது கொண்டிருந்த நம்பிக்கை சரிதான் போலும்.. மேலும் ராஜாராம் அவருடைய கூர்மையான பார்வையை கிஷோரின் மேல் சில வினாடிகள் மேய விட்டு ஆராய்ந்து நல்ல சாதுவான பையன் தான் என்று முடிவுக்கு வந்திருந்தார்..

ராஜாராம் ராகுலிடம் நடந்து கொண்ட விதத்தையும் கிஷோரிடம் நடந்து கொண்ட விதத்தையும் கண்டு உள்ளுக்குள் சந்தோசத்துடன்  "ஆ.. ஆமாப்பா" என்று புன்னகையுடன் ராஜாராமிடம் சொன்னாள்..
Like Reply


Messages In This Thread
RE: தாலி மட்டும் தான் கட்டினேன் - by manaividhasan - 22-08-2020, 12:21 PM



Users browsing this thread: 4 Guest(s)