அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
பாகம் - 27

டேய்!! உண்மையிலேயே பைசன் பாக்கலாமா?”, சந்தேகத்தோடு, என் அருகில் இருந்த நேத்ரா கேக்க

கண்டிப்பா பாக்கலாம்!!, ஒரு பெரிய கூட்டமே வந்திருக்காம்!!, போட்டோஸ் பாத்தேல” நான், அவள் சந்தேகத்துக்கு விடையளிக்க, பரப்பலாறு அணை வியூவ், வலது புறம் தெரிய, இருட்டும் முன், பழனி மலையின் கிழக்கு சரிவில், ஆடலூர் அருகே இருக்கும் எங்கள் காஃபி எஸ்டேட்டை அடைந்து விடும் முனைப்பில், காரை விரட்டினேன். மது, பின் சீட்டில் அமர்ந்து இருந்தாள், நேத்ரா சண்டையிட்டு எறிக்கொள்ள, இன்னும் கோபத்தோடு இருப்பது போல நடித்துக் கொண்டிருந்தாள். நேத்ராவுக்கு காடும், காட்டு விலங்குகளும் பிடிக்கும் என்பதால், நேற்று, எங்கள் எஸ்டேட் அருகே, மேனேஜர் எடுத்து எனக்கு அனுப்பிய, காட்டெருமை கூட்டத்தின் போட்டவை, அவளுக்கு நான் அனுப்ப, அவளின் நச்சரிப்பாள், இன்று இந்த பயணம். காலையிலேயே தாத்தாவிடம் சொல்லி எல்லா ஏற்பாடுகளும் செய்தாக்கிவிட்டது. மொபைலில் நான் அனுப்பிய போட்டோக்களை பார்த்துக் கொண்டிருந்தவள்

நீ உண்மையிலேயே இதுக்கு முன்னாடி பைசன் பாத்திருக்கியா?”, நான் சொன்னதை நம்பாமல் கேட்டவளிடம்

டார்லிங்!! நான் எட்டாவது வரைக்கும் கொடைக்கானல்தான் படிச்சேன்!! எங்க ஸ்கூல் கிரவுண்டுக்கே வரும், அடிக்கடி. அதுவும் இல்லமா, இந்த பழனி ஹில்ஸ்ல எங்களுக்கு ரெண்டு எஸ்டேட் இருக்கு, பைசன் என்ன, த்ரீ, ஃபோர் டைம்ஸ், சிறுத்ததையே பாத்திருக்கேன்!!”, நான், என் பெருமையை பீத்த, ஒரு மணி நேரத்தில் எங்கள் எஸ்டேட்டை அடைந்தோம்

---------------------------- 

நான்கு மணி நேரம் கழித்து 

உண்மையிலேயே, சீட்டா நம்மள அட்டாக் பன்னும்னு பயந்துட்டேன் டா!!”, என்றாள் மது பரவசத்தில் 

ஆமா பா!! நானும் அப்படித்தான் நினைச்சேன், பட், அது நம்ம பாத்து, பயந்து, தெரிச்சு ஓடிருச்சு!!” மதுவிடம் இருந்த அதே பரவசத்தோடு நேத்ராவும் சொல்ல,

சும்மா!! பொய், இங்க சீட்டாவே கிடையாது" என்றேன், பார்க்க முடியாத ஏமாற்றத்தில், நான் 

அப்போ, நீ முன்னாடியே பார்த்திருக்கேன்னு, வரும் போது சொன்னதெல்லாம், பொய்யா கோபாாால்?” மது நாடக தன்மையோடு என் காலை வார, நான் அசடு வழிந்தென். இருவரும் , ஹை ஃபைவ் அடித்துக் கொண்டு என்னைப் பார்த்து சிரித்தார்கள்

சும்மா இரவு டின்னர் சாப்பிட்ட உடன், எஸ்டேட் ஜீப்பில் ஒரு ரவுண்ட் போக, அவர்கள் இருவரும் சிறுத்தை என்று சொல்ல, முன்னால் சீட்டில் அமர்ந்திருந்த நான் பார்க்கும் முன் அது ஓடி மறைந்தது. இருவரும், சிறுத்தையை பார்த்ததை பற்றியே பேசிக்கொண்டிருக்க, எனக்கு தூக்கம் வருவதாக சொல்லி, என் ரூம்க்கு சென்று படுத்தேன். எப்படியும் குட்நைட் சொல்லவாவது, மது வருவாள் என்று எதிர் பார்த்தபடியே தூங்கிப்போனேன்

---------------------------------

மறுநாள் காலை

டேய், எரும!! எழுந்திரு டா!! எவ்வளவு நேரம் எழுப்புறது!!” என் போர்வையை, மது உருவினாள், சில் என்ற குளிர், என் உடலை தாக்க, எழுந்து அமர்ந்து, அவள் கைகளில் இருந்து போர்வையை பறித்து, என்னை மூடிக்கொண்டு

வெயில் வரட்டும்!! அப்புறம் போலாம்!!” பாதி கண்ணை திறந்து, அவளைப் பார்த்துக் கொண்டு கெஞ்ச

சாப்பாடு வந்துருச்சு!!, சீக்கிரம் ரெடி ஆகி வா!! டென் மினிட்ஸ் டைம்!! இல்லனா பச்ச தண்ணிய, தலைல ஊத்திருவேன்!!” என்று என்னை மிரட்டி விட்டு, அவள் வெளியே செல்ல, அங்கும் இங்கும் ஆடியது, அவளது குதிரைக் கொண்டை. அவளது குதிரைக் கொண்டையின் ஆட்டம் என்னை காலையிலேயே உசுப்பேத்த, நான் கிளம்பி ரெடி ஆகி, வெளியே சென்று, வராண்டாவில், அவள் அருகே அமர்ந்தேன், பதினைந்து நிமிடம் கழித்து

எரும!! பூரி ஜில்லுனு ஆயிடுச்சு!!” கரித்துக் கொண்டே, என்னைப் பார்த்தவள், பின் 

டேய்!! குளிக்கலையா?, ச்சீ" என்று முகம் சுளித்தாள்

கொடைக்கானல் வந்தா, ஃபர்ஸ்ட் டே குளிக்க கூடாது, இது எங்க பண்பாடு!!” என்று, நான் சிரித்துக் கொண்டே கூற,

அழுக்கு பையா!!” மது சலித்துக் கொண்ட சமயம், சூடாக இன்னொரு ஹாட் பாக்ஸ் நிறைய பூரியை, வேலையாள் கொண்டு வந்து குடுத்தார். சாப்பிட்டு முடித்து, காபியை குடித்துக் கொண்டே நான் மதுவைப் பார்க்க, என்னை கண்டுகொள்ளாமல், காபியை குடித்தவாரே, மீண்டும் நேற்று இரவு பார்த்த, சிறுத்தையை, பற்றியே பேசிக் கொண்டிருந்தனர், நேத்ராவும், மதுவும்

ஒரு பிளாக் நிற, ஜீன்ஸ்சும், தடித்த, குளிர் தாங்கக் கூடிய, முழுக்க கை, ரவுண்ட் நெக் காலர் வைத்த ஒரு கிரே கலர், டி-ஷர்ட் போட்டிருந்தாள், மது. மொத்த டி-ஷர்ட்டும் தொள தொளவென்று இருக்க, கழுத்தையும், இடுப்பையும் இருக்கி பிடித்திருந்தது. அவளது முகத்தில் ஏனோ இன்று கூடுதல் எழில், அவள் அழகு என்னை கட்டிப் போட்டதென்றால், அவளது சின்னஞ்சிறு அசைவுக்கு ஏத்தவாறு, அலை அலையாக நாலாபுறமும் நாட்டியமாடும், அவளது குதிரை கொண்டை மயிர் கற்றொ, என்னை இதுவரை நான் எட்டியிரத கிளர்ச்சியில் தள்ளியது. கையில் இருந்த காபியை பருகியவாரே, கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன், என்னவளை

என்ன டார்லிங்?!! அவளையே பாத்துகிட்டு, காபியோட சேர்த்து காப்பையும், முழுங்கிறாத!!” என்று ஏதோ பெரிய ஜோக் அடித்துவிட்டதாக நிணைத்து சிரித்த நேத்ராவை, கேவலமாக ஒரு பார்வை பார்க்க, என் தலையில் தட்டிவிட்டு, எழுந்து, அவர்கள் அறையை நோக்கி, கை கழுவ சென்றாள். அவள் சொன்னதையும், அடித்ததையும் கண்டு கொள்ளாமல், நான் மதுவையே பார்த்துக் கொண்டிருந்தேன், கன்னங்கள் பூரிக்க. நேத்ராவின் எள்ளலுக்கு சிரித்தவள், கண்களில் காதலோடு என்னைப் பார்த்து, "என்ன?” என்று புருவம் உயர்த்தி கேட்டாள், மது

நான் எதுவும் சொல்லாமல், தலையை மட்டும் இருபுறமும் அசைத்தேன், கண்களால் அவளை பருகிக் கொண்டு. கண்களில் காதல் பொங்க, உதடு குவித்து ஒரு முத்தத்தை என்னைப் பார்த்து காற்றில் பறக்கவிட, மீண்டும் தலையை மட்டும் இருபுறமும் அசைத்தேன். கண்களில் குறும்போடு, சுற்றி பார்த்துக் கொண்டே எழுந்தவள், என் மடியில் உக்கார, அவளுக்கு வசதியாக, கையில் இருந்த காப்பி, கப்பை கீழே வைத்தேன். என் மடியில் அமர்ந்தவள், நேத்ரா சென்ற திசையை பார்க்க, அவளது, தலை அசைவில், அவளின் குதிரைக் கொண்டை, என் முகத்தை தழுவிக் கொண்டது. அவள் மயிரகற்றின் தீண்டலையும், அதன் வாசத்தையும், கண்களை முடி, பெரு மூச்செடுத்து, என் அணுக்களில் எல்லாம் நிரப்பிக் கொண்டிருக்க, அவள் மயிர்கற்று என் முகத்தை விட்டு அகன்றது

ஏமாற்றத்தில், முடியிருந்த கண்களை திறக்கும் முன், அவளது தேன் சொட்டும், ஈர இதழ்கள், என் இதழ்களை தீண்டி, தின்ன, திறக்க முயன்ற கண்களை மூடிக்கொண்டு, அவள் இடையை என் கைகளால் பின்னி, அவளை இன்னும் என்னோடு சேர்த்து அனைத்துக் கொண்டேன். என் பின்னந்தலை முடிகளை அவளது ஒரு கை பற்ற, அவசர அவசரமாக, என் வாயினுள் நுழைந்து, நாலா பக்கமும், நாவினால் தீண்ட, ஒரு கையை, அவளது டி-ஷர்ட்க்குள் நுழைத்து, அவளது உடல் சூட்டை உணர்ந்தேன். ஏதோ சத்தம் கேட்க, பட்டென அவள் எழுந்து, ட்-ஷர்ட்டை சரி செய்தவாரே, அறையினுள் நோக்க, நான் அரைமயக்கத்தில் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்
வெட்க சிரிப்பு சிரித்தவள், என்னை நோக்கி குனிய, அவள் முகத்தை ஏந்த சென்ற என் கைகளை, தடுத்து பிடித்தவள், மேலும் குனிந்து உன் உதடுகளில், அவள் உதடுகளை ஒற்றி எடுத்து, என்னைப் பார்த்து "போதுமா?” என்று செய்கையில் கேட்டாள். "இன்னும் வேணும்" என்பதைப் போல, கண்களை மூடி, அண்ணார்ந்து, என் உதடுகளை அவளை நோக்கி காட்ட, அரை நொடிக்கும் குறைவாகவே நீடித்த, ஐந்தாறு முத்தங்களை இட்டவள், முத்தத்தை விட மெதுவாக என் உதடுகளில், கையால் அடித்து, அவள் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள். நான் கண் கொட்டாமல் அவளையே, பார்த்துக் கொண்டிருக்க, கை கழுவிவிட்டு வந்த நேத்ரா, மதுவை மறைத்துக் கொண்டு என் முன் நிக்க, நான் நிமிர்ந்து அவளைப் பார்த்தேன்.

இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு, என்னை முறைத்துக் கொண்டு இருந்தாள். அவளப் பார்த்து அசட்டு சிரிப்பு ஒன்றை உதிர்த்தேன், என்னவள் தந்த முத்தத்தின் கிறக்கத்தில்

எப்பா...… சாமி!! முடியல!!, கண்ணாலேயே பேசுரேனு, சவாடிக்காத!!” முகத்தில் எரிச்சலுடன், நான் மீண்டும் சிரித்தேன்.

காட்டேறுமே கட்டுறேன்னு கூட்டிட்டு வந்துட்டு!!, நீங்க பண்ணுற கருமத்த, எல்லாம் பாக்கா முடியல!! ஏறுமைய பாக்காட்ட கூட பரவா இல்ல!! இந்த கருமத்த பாக்க வச்சு என்ன சாவடிக்காத!!” அவள் தலையில் அடித்துக் கொள்ள, எழுந்த நான்

எங்களப் பார்த்து பொறாம படுறியா டார்லிங்!!” என்று, அவள் கன்னத்தை கிள்ள போக, என் கையை தட்டி விட்டவள்

ஆமா சாமி, பொறாம தான் படுறேன்!!” தலையை குணிந்தவாறு கை எடுத்துக் கும்பிட

ரெடி ஆகுங்க!!, நான் போய் வண்டி ரெடியானு கேட்டுட்டு வர்றேன்!!”, நேத்ராவின் கன்னத்தை கிள்ளி விட்டு, சொல்ல

கொஞ்சுர வேலை எல்லாம் அவகிட்ட வச்சுக்கோ!!” என்று கிளம்பிய, என் முதுகில் அடித்து விட்டு, அவள் சொல்ல, ஒரு பத்தடி சென்று, திரும்பி அவளைப் பார்த்துக் கொண்டே, மேட்டுக்குடி, கவுண்டமணி ஸ்டைலில்,

உன்னதான் கொஞ்சுவேன்!! என்னா இப்போ, நீ தான என் டார்லிங்!!”, என்று சொல்லி, கவுண்டமணி போலவே ஒரு ரொமான்டிக் லுக் விட, நேத்ரா என்னை முறைக்க, கண்டு கொள்ளாமல் அவளைப் பார்த்து, காற்றில் ஒரு முத்தத்தை பறக்க விட, என் மேல் எறிவதற்கு ஏதாவது கிடைக்குமா என்று சுற்றி தேடினாள், நான் ஓட்டம் பிடித்தேன். ஆனால் அதற்கு முன் மதுவின் ரொமான்டிக் லுக்கை கவனிக்க தவறவில்லை.

---------------------------------------------
[+] 4 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 20-08-2020, 03:14 PM



Users browsing this thread: 4 Guest(s)