நினைத்தாலே இனிக்கும்(முடிவுற்றது )
#21
நான் வாங்கிகொண்டேன்.அங்கிள் வாங்க உங்கள வெளிய நிக்க வச்சே பேசிட்டு இருக்கேன்.

"இல்லம்மா.கொஞ்சம் வேல இருக்கு .நான் கிளம்பறேன் இன்னொரு நாளைக்கு நீ ஃபிரீயா இருக்கும்போது வரேன்.நீயும் ஸ்கூலீக்கு கிளம்பிட்ட"

"ம்ம்...சரி அங்கிள் நீங்க செய்ற உதவிக்கெல்லாம் நான் என்ன கைமாறு செய்ய போறேனு தெரியல"

"அட விடுமா..இப்பதானே சொன்னேன்.நீ என் பொண்ணு மாதிரின்னு"


பின் அவரிடம் விடை பெற்று கொண்டு குடையை எடுத்துகொண்டு பஸ் ஸ்டாப்பிற்கு வந்தேன்.அவன் நின்றுகொண்டிருந்தான்.மழை இன்னும் நிற்கவில்லை அதனால் நான் அவன் நின்றுகொண்டிருந்த நிழற்குடைக்கு அருகில் இருந்த டீக்கடையின் கீற்று கொட்டகைக்குள் நுழைந்தேன்.கீற்றுகளுக்கு இடையே உள்ள இடைவெளியில் அவனை பார்த்தேன்.அவன் எதைபற்றியோ தீவிரமாக சிந்தித்துகொண்டிருந்தான்.என்னை பார்த்ததாக தெரியவில்லை.நானும் வெளிபடுத்திகொள்ளவில்லை.


பேருந்து வந்தது நான் சென்று ஏறினேன் அவன் வரவில்லை ஏன் என் தெரியவில்லை நான் குடையை எடுத்து விரித்து பிடித்த படி மெதுவாக இறங்கி பஸ்ஸில் ஏறினேன்.அவன் யாருக்காகவோ காத்திருப்பது போல் இருந்தது.


குடை என் முகத்தை மறைத்திருப்பதால் அவன் என்னை பார்த்திருக்க வாய்ப்பில்லை.நான் ஏறியவுடன் பஸ் புறப்பட்டது.நான் ஜன்னல் வழியே பார்த்தேன் அவன் நொடிக்கொருமுறை தலையை வெளியே நீட்டி பார்த்துகொண்டிருந்தான் "யாருக்காக காத்திருக்கிறான் இவன்...?" 


நான் பள்ளிக்கு 9.00 க்கு தான் வந்தேன்.பிரின்ஸ்பால் ரூமிற்கு சென்று சைன் பண்ணிவிட்டு ஸ்டாப்ரூமிற்கு சென்று பேக்கை வைத்துவிட்டு மாலதியிடம் சிறிது நேரம் பேசிகொண்டிருந்த போது மணி ஒலித்தது.பின் இருவரும் பிரேயர் ஹாலுக்கு சென்றோம்.


அவன் வந்துவிட்டானா என பிரேயர் ஹாலில் அவன் முகத்தை தேடினேன். அவன் இன்னும் வரவில்லை "என்ன பண்ணிட்டு இருக்கான் இன்னும்"
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: நினைத்தாலே இனிக்கும் - by johnypowas - 06-03-2019, 11:38 AM



Users browsing this thread: 1 Guest(s)