05-08-2020, 10:10 PM
அடுத்தடுத்த சில நாட்களில் - நிஷா தன்னால் முடிந்த அளவுக்கு, எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன் வேலையில் முழு கவனத்தையும் செலுத்தினாள். ஸ்கூல் முடிந்து வந்த பிறகு, ட்யூஷன் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தாள். TNPSC, UPSC, RRB என்று விதம் விதமான தேர்வுகளுக்கு தயாராவது எப்படி என்று அங்குள்ள மாணவ மாணவிகளுக்கு சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தாள். அவரவர்களின் படிப்பை கேட்டறிந்து, அவர்கள் என்னென்ன வேலைவாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சொல்லிக்கொடுத்தாள்.
அதில் ஒரு மாணவன், கதிர் அண்ணா இந்த ஊர்ல சந்தோஷமாத்தானே இருக்கார். நான் அவரை மாதிரி இருந்துட்டுப் போறேனே எதுக்கு வெளியூர்ல போய் வேலை பார்க்கணும்... என்க, அவளுக்கு கதிரை நினைத்து ஆச்சரியமாக இருந்தது.
ஒரு வாரத்தில், அவள் அந்த ஊரில் அனைவருக்கும் தெரிந்தவள் ஆனாள்.
அடுத்து நிஷாவோடு பைக்கில் வரும்போதெல்லாம் அவன் ஸ்ப்ளெண்டரை சைக்கிள் போல் ஓட்டவேண்டியிருந்தது. வரும் வழியெல்லாம்,
டீச்சர் நல்லாயிருக்கீங்களா
டீச்சரம்மா நீங்க நல்லா சொல்லிக்கொடுக்குறீங்களாமே
குட் ஈவினிங்க் டீச்சர்!
என்னம்மா நிஷா ஊர்ல உங்கப்பன் நல்லாயிருக்கானா
இவ்ளோ நாளா எங்கம்மா இருந்த. இப்போதான் புள்ளைங்க இங்கிலிஷ் பேச ஆரம்பிச்சிருக்கு...
நீ வந்தபிறகுதான்மா என் மகனும் ஒரு வேலைல சேர்ந்துடுவான்னு நம்பிக்கை வந்திருக்கு...
ஒரு பெரிசு, நிஷாவிடமே போன் வாங்கி, மோகனுக்கு கால் பண்ணியது. டேய்.. நீ இந்த ஊருக்கு நல்லது எதுவும் செய்யலைன்னு நெனச்சேன். உன் பொண்ணு..... அத சரி செஞ்சிட்டாடா
கதிர் கண்கள் விரிய அவளைப் பார்த்தான். இரவில், தூங்கும்போது அவனுக்குள் சில கேள்விகள் ஓடிக்கொண்டேயிருந்ததன.
மனிதர்களை, அவர்களது தவறுகளை மட்டும் வைத்து எடைபோடுவது சரியா தவறா
மனிதர்களை, அவர்களது past-ஐ வைத்து, இவர்கள் இப்படித்தான் என்று எடைபோடுவது சரியா தவறா
சரியா தவறா
சரியா தவறா
சரியா தவறா
அவன் தன்னைத்தானே கேள்வி கேட்டுக்கொண்டிருந்தான். அப்போது கதிர்... கதிர்.. என்று நிஷா தயங்கித் தயங்கி கூப்பிடும் சத்தம் கேட்டது.
என்ன நிஷா?
உங்க போன் என்னாச்சு? ஆப்னு வருதாமே
ஆமா... கவனிக்கல
தீபா உங்ககிட்ட பேசணுமாம். இந்தாங்க.
போனை கொடுத்துவிட்டு, அமைதியாக போய் முற்றத்து கட்டிலில் உட்கார்ந்து இருந்தாள். விரைவில் தீபாவுக்கும் கதிருக்கும் கல்யாணம் நடக்கும். வருகிறவர்கள் எல்லாம் என்னைப்பற்றி கேள்வி கேட்பார்கள். அவர்கள் முன்னாடி அப்பா அம்மா தலைகுனிந்து நிற்பார்கள். காவ்யா மட்டும் கர்ப்பமாக இல்லாமல் இருந்திருந்தால் அவர் காலில் விழுந்தாவது கெஞ்சியிருக்கலாம்.
நான் எப்படி இருந்தவள்! எப்படி இருக்கவேண்டியவள்! ஆனால் இப்போது?? - அவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. மனம்விட்டு அழவேண்டும்போல் இருந்தது.
இவன் பேசி முடித்துவிட்டு அவளிடம் போனை கொடுக்க வந்தான்.
அழுகையை மறைத்துக்கொண்டு நார்மலாகப் பேசினாள். உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா?
கேளு நிஷா
என்ன முடிவு பண்ணியிருக்கீங்க? ஐ மீன்... உங்க பியூச்சர் பத்தி...
பியூச்சர் இங்கதான்
இப்படி சொன்னா எப்படி... ஊருக்கு நல்லது பண்றதுக்கு பணமும் அவசியம்தானே... நீங்க அங்கேர்ந்தே guide பண்ணலாமே...
முதல்ல நீங்க இந்தளவு என்னை கேட்குற அளவுக்கு நான் தகுதியானவன் இல்லை நிஷா
உங்களை நீங்களே குறைச்சு நினைச்சுக்கிட்டு இருக்கீங்க
அய்யோ டீச்சர்... என்ன.. motivation class - ஆ?
ஏய்....
நிஷா அவனைப்பார்த்து லேசாகச் சிரித்தாள். கதிருக்கு மின்னல் அடித்ததுபோல் இருந்தது.
அதற்கு மேலும் அவனோடு நிற்கவேண்டாம் என்று, குட்நைட் சொல்லிவிட்டு மேலே போனாள்.
அதில் ஒரு மாணவன், கதிர் அண்ணா இந்த ஊர்ல சந்தோஷமாத்தானே இருக்கார். நான் அவரை மாதிரி இருந்துட்டுப் போறேனே எதுக்கு வெளியூர்ல போய் வேலை பார்க்கணும்... என்க, அவளுக்கு கதிரை நினைத்து ஆச்சரியமாக இருந்தது.
ஒரு வாரத்தில், அவள் அந்த ஊரில் அனைவருக்கும் தெரிந்தவள் ஆனாள்.
அடுத்து நிஷாவோடு பைக்கில் வரும்போதெல்லாம் அவன் ஸ்ப்ளெண்டரை சைக்கிள் போல் ஓட்டவேண்டியிருந்தது. வரும் வழியெல்லாம்,
டீச்சர் நல்லாயிருக்கீங்களா
டீச்சரம்மா நீங்க நல்லா சொல்லிக்கொடுக்குறீங்களாமே
குட் ஈவினிங்க் டீச்சர்!
என்னம்மா நிஷா ஊர்ல உங்கப்பன் நல்லாயிருக்கானா
இவ்ளோ நாளா எங்கம்மா இருந்த. இப்போதான் புள்ளைங்க இங்கிலிஷ் பேச ஆரம்பிச்சிருக்கு...
நீ வந்தபிறகுதான்மா என் மகனும் ஒரு வேலைல சேர்ந்துடுவான்னு நம்பிக்கை வந்திருக்கு...
ஒரு பெரிசு, நிஷாவிடமே போன் வாங்கி, மோகனுக்கு கால் பண்ணியது. டேய்.. நீ இந்த ஊருக்கு நல்லது எதுவும் செய்யலைன்னு நெனச்சேன். உன் பொண்ணு..... அத சரி செஞ்சிட்டாடா
கதிர் கண்கள் விரிய அவளைப் பார்த்தான். இரவில், தூங்கும்போது அவனுக்குள் சில கேள்விகள் ஓடிக்கொண்டேயிருந்ததன.
மனிதர்களை, அவர்களது தவறுகளை மட்டும் வைத்து எடைபோடுவது சரியா தவறா
மனிதர்களை, அவர்களது past-ஐ வைத்து, இவர்கள் இப்படித்தான் என்று எடைபோடுவது சரியா தவறா
சரியா தவறா
சரியா தவறா
சரியா தவறா
அவன் தன்னைத்தானே கேள்வி கேட்டுக்கொண்டிருந்தான். அப்போது கதிர்... கதிர்.. என்று நிஷா தயங்கித் தயங்கி கூப்பிடும் சத்தம் கேட்டது.
என்ன நிஷா?
உங்க போன் என்னாச்சு? ஆப்னு வருதாமே
ஆமா... கவனிக்கல
தீபா உங்ககிட்ட பேசணுமாம். இந்தாங்க.
போனை கொடுத்துவிட்டு, அமைதியாக போய் முற்றத்து கட்டிலில் உட்கார்ந்து இருந்தாள். விரைவில் தீபாவுக்கும் கதிருக்கும் கல்யாணம் நடக்கும். வருகிறவர்கள் எல்லாம் என்னைப்பற்றி கேள்வி கேட்பார்கள். அவர்கள் முன்னாடி அப்பா அம்மா தலைகுனிந்து நிற்பார்கள். காவ்யா மட்டும் கர்ப்பமாக இல்லாமல் இருந்திருந்தால் அவர் காலில் விழுந்தாவது கெஞ்சியிருக்கலாம்.
நான் எப்படி இருந்தவள்! எப்படி இருக்கவேண்டியவள்! ஆனால் இப்போது?? - அவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. மனம்விட்டு அழவேண்டும்போல் இருந்தது.
இவன் பேசி முடித்துவிட்டு அவளிடம் போனை கொடுக்க வந்தான்.
அழுகையை மறைத்துக்கொண்டு நார்மலாகப் பேசினாள். உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா?
கேளு நிஷா
என்ன முடிவு பண்ணியிருக்கீங்க? ஐ மீன்... உங்க பியூச்சர் பத்தி...
பியூச்சர் இங்கதான்
இப்படி சொன்னா எப்படி... ஊருக்கு நல்லது பண்றதுக்கு பணமும் அவசியம்தானே... நீங்க அங்கேர்ந்தே guide பண்ணலாமே...
முதல்ல நீங்க இந்தளவு என்னை கேட்குற அளவுக்கு நான் தகுதியானவன் இல்லை நிஷா
உங்களை நீங்களே குறைச்சு நினைச்சுக்கிட்டு இருக்கீங்க
அய்யோ டீச்சர்... என்ன.. motivation class - ஆ?
ஏய்....
நிஷா அவனைப்பார்த்து லேசாகச் சிரித்தாள். கதிருக்கு மின்னல் அடித்ததுபோல் இருந்தது.
அதற்கு மேலும் அவனோடு நிற்கவேண்டாம் என்று, குட்நைட் சொல்லிவிட்டு மேலே போனாள்.