நினைத்தாலே இனிக்கும்(முடிவுற்றது )
#17
பிறகு ஒரு நிமிடம் கூட தாமதிக்க வில்லை அடுத்த பஸ்ஸில் ஏறி இருவரும் சென்றோம்.

அவளை மறக்க முயன்றேன். அது முடியவில்லை.அவள் என்னை ஏமாற்றியும், ஏன்?என்று தெரியவில்லை ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு எனக்கு அவளை ஞாபகபடுத்தி கொண்டே இருந்தது.

வீட்டிற்கு வந்து என்னால் சும்மாக இருக்க முடிய வில்லை.அவள் ஞாபகமாகவே இருந்தது.அவளை மறக்க வேண்டும்,அதற்கு ஒரு வழிதான் உள்ளது முடிவு செய்தேன்.

நேராக ஒயின்ஷாப்புக்கு சென்றேன்.ஒரே ஒரு பியர்,அடிச்சிட்டு வந்துபார்த்தா அவ ஞாபகம் இன்னும் அதிகமாயிடிச்சி,அட இது என்னடா கொடுமை என்று நினைத்து கொண்டேன்.என் வேதனையை யாரிடமாவது சொல்லி அழ வேண்டும் போல் இருந்தது எனக்கு அதற்கு சரியான ஆள் நம்ம வினோத் தான் என முடிவு செய்து எனது சைக்கிளை எடுத்துகொண்டு வினோத் வீட்டை நோக்கி சென்றேன்.

வினோத் வீட்டை அடைந்தேன்.என்னை தடுத்த காம்பௌண்ட் கேட்டை ஒரு கையால் தள்ளி விட்டு உள்ளே சென்றேன்.

"வினோத்.!வினோத்"என்று கூப்பிட்டேன்.

அவன் வெளியே எட்டி பார்த்து."டேய் !வாடா உள்ள வா!"என்றான்.நான் சைகையால் தண்ணி அடிச்சிருக்கேன்,நீ வெளிய வாடா என்றேன்.என் நண்பன் என்னை புரிந்து கொண்டு வெளியே வந்தான்.இருவரும் சைக்கிளை எடுத்துகொண்டு வெளியே வந்தோம்.எப்பொழுதும் கூடிபேசும் இடமான பெரிய கோவில் அருகே இருக்கும் மண்டபத்தின் திட்டின் மீது அமர்ந்தோம்.

அவன் கேட்டான் "ஏன்டா திடீர்னு சரக்கு அடிச்ச அன்னிக்கு என்கிட்ட இனிமே சரக்கே அடிக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணி கொடுத்தே"என்று

"அவள நினைக்காம ஒரு நிமிஷம் கூட இருக்க முடியல மச்சி"

தலையில் அடித்துகொண்டான்"டேய்!நீ திருந்தவே மாட்டியா அவதான் உன்ன கண்டுக்கவே மாட்டேங்கிறா அப்புறம் ஏன்டா அவ முந்தானையே பிடிச்சிகிட்டு அலையிற. "

"இல்லடா அவள மறக்க முடியலடா.எங்க பார்த்தாலும் அவ முகமாவே தெரியுது எனக்கு என்னாச்சினே தெரியலடா,ஆனா இந்த செகண்ட் ஒன்னு மட்டும் உண்மை டா அவ இல்லாம என்னால வாழவே முடியாதுன்னு நினைக்கிறேன்டா"என்றேன்.

"மச்சி!நீ ஒண்ண நல்லா புரிஞ்சிக்கோ அவ ஒண்ணும் நாலாவகுப்பு படிக்கிற பாப்பா இல்ல.நீ மிட்டாய் வாங்கி கொடுத்ததும் உன் பின்னாடியே வர,அவ நமக்கு டீச்சர் நீ என்னமோ இந்த வருஷம் 11TH பாஸாக மாட்டேன்னு நினைக்கிறேன்"

"நான் பாஸாகலன்னா கூட பரவாயில்லடா.நாளைக்கு போய் அவள பார்த்து ஏன் என் மேல உங்களுக்கு இவ்வளவு கோபம் னு "கேக்க போறேன்.

"மச்சி!நாளைக்கா அதுக்கு அவசியமே இல்ல.அதோ பாரு உன் ஆளு கோயிலுக்கு வந்துகிட்டு இருக்கா"என்றான்.

நான் திரும்பிபார்த்தேன்.அவளேதான் சிகப்பு கலர் காட்டன் சுடிதாரில் தலையில மல்லிகை பூவோடும் கையில் அர்ச்சனை தட்டோடும் ஒரு தேவதை போல் நடந்து வந்து கொண்டிருந்தாள்.
Like Reply


Messages In This Thread
RE: நினைத்தாலே இனிக்கும் - by johnypowas - 05-03-2019, 09:57 AM



Users browsing this thread: 1 Guest(s)