25-07-2020, 11:11 PM
(This post was last modified: 26-07-2020, 12:26 AM by Dubai Seenu. Edited 1 time in total. Edited 1 time in total.)
மூன்று நாட்கள் ஆகியிருந்தது.
நிஷா அழுதுகொண்டே இருந்தாள். சாப்பிடாமல் கிடந்தாள். அந்த வீட்டில் அனைவருக்கும் கஷ்டமாக இருந்தது.
சீனு அவளிடம் அழுது கெஞ்சி இனிமேல் இப்படி பண்ணவே மாட்டேன் நீதான் என் உயிர் என்று கதறுவான் அழுது தவிப்பான் என்று எதிர்பார்த்தாள். ஆனால் அதில் பாதி கூட நடக்கவில்லை. நொந்துபோனாள்.
எனக்கு வேணும், என் மதிப்பையெல்லாம் நானே கெடுத்துக்கிட்டேன். நான் ஒரு அசிங்கம். நான் ஒரு அரிப்பெடுத்தவ. நான் ஒரு துரோகி. நான் ஒரு பைத்தியக்காரி. நான் ஒரு ஏமாளி.
அவள் தன்னைத்தானே திட்டினாள். அழுது அழுது ஓய்ந்தாள். அழகிழந்து கிடந்தாள்.
மலர், பாட்டியின் ஊரிலிருந்து திரும்பி வந்தாள். நிஷாவின் விஷயம் கேள்விப்பட்டதும் அவளைக் கேவலமாகப் பார்த்தாள்.
இவங்க ஆஹா ஓஹோன்னு இவளை புகழும்போதே நெனச்சேன். உள்ளே ஓட்டையாத்தான் இருக்கும்னு.
மலர், தன் மாமனாரிடம் நல்ல பெயர் எடுப்பதற்காக, கதிரை நான் சம்மதிக்க வைக்கிறேன் என்று வாக்கு கொடுத்தாள். கதிரின் அம்மாவிடம் பேசினாள். நல்ல படிப்பு, கம்யூனிகேஷன் இருக்கு அப்புறம் ஏன் விவசாயம் பார்க்கணும்? என்றாள். சீக்கிரம் நானும் ராஜ்ஜும் அங்கே விருந்துக்கு வருகிறோம் அப்போ விவரமாக பேசுவோம் என்றாள். நிஷாவை காப்பாற்றியதிலிருந்து, அவன் தீபாவுக்கு ஏற்றவன், கிராமத்தில் இருக்கவேண்டியவன் அல்ல என்று இவர்கள் முடிவு செய்துவிட்டார்கள்.
எல்லோரும் அவளை மதிப்போடு பார்த்தார்கள்.
நிஷா ரொம்ப down ஆக இருந்தாள். ராஜ் ஆறுதல் சொன்னான்.
நீ கவலைப்படாதே நிஷா உன்ன கண்ணன்கிட்ட சேர்த்து வைக்கவேண்டியது என் பொறுப்பு.
வேணாம்ணா. அவர் ஒத்துக்கறதுக்கு வாய்ப்பு குறைவு
எனக்காக வா நிஷா. இந்த விஷயத்துல அடம் பிடிக்கக்கூடாது.
அவன் நிஷாவைக் கூட்டிக்கொண்டு போனான். கண்ணன் இப்போது வேறு வீட்டில் இருந்தார். காலிங்க் பெல் அடித்ததும் காவ்யா வந்து கதவைத் திறந்தாள்.
நிஷா, முகத்தில் எந்த உணர்ச்சியுமற்று இருந்தாள். ராஜ் பவ்யமாக நின்றான்.
கண்ணனை பார்க்கணும்
வ... வாங்க
கண்ணன் நிஷாவை பார்த்தார். அவள் அழுது அழுது முகம் வீங்கியிருப்பது தெரிந்தது.
ராஜ் அவரிடம் கெஞ்சினான். அவள் உணர்ச்சிகளுக்கு அடிமையாகி தப்பு செய்துவிட்டாள். திருந்திவிட்டாள். இனி உங்களுக்காக மட்டுமே வாழுவாள். அவளை தயவுசெய்து ஏத்துக்கோங்க என்றான்.
கண்ணனுக்கு அவர்களைப் பார்க்கப் பாவமாக இருந்தது. ஆனால் சூழ்நிலை முற்றும் மாறியிருந்தது. இந்த சில மாதங்களில் என்னென்னவோ நடந்துவிட்டது.
அவர் தயங்கித் தயங்கிச் சொன்னார்.
ஸாரி ராஜ்... காவ்யா இப்போ கர்ப்பமா இருக்கா.
அதுவரை அமைதியாய்... தலைகுனிந்து நின்றுகொண்டிருந்த நிஷா ஓஓஓஓஓ.... என்று தாங்கமுடியாமல் முகத்தை மூடிக்கொண்டு அழுதாள். ராஜ் கோபமாக கண்ணனின் சட்டையைப் பிடித்து உலுக்கி, தள்ள.... அவர் சோபாவில் போய் விழுந்தார். சோபாவோடு சேர்ந்து சாய்ந்து தரையில் கிடந்தார்.
அவரை எதுவும் செய்யாதேண்ணா.... நிஷா பதறிக்கொண்டு அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினாள்.
இது அநியாயம். டிவோர்ஸ் அப்ளை பண்ணி ஒரு வருஷம் முடியறதுக்குள்ள நீங்க இப்படிப் பண்ணது அநியாயம்
அவன் கண்ணனைப் பார்த்துக் கத்த, அவர் அமைதியாகச் சொன்னார். நிஷா வேற எந்த விஷயத்துல தப்பு பண்ணியிருந்தாலும் நான் மன்னிச்சு ஏத்துக்கிட்டிருப்பேன் ராஜ். வேற எந்த விஷயத்துல தப்பு பண்ணியிருந்தாலும்!
இதுக்கு காரணம் நீங்க. நீங்க அவளை கவனிக்காம விட்டுட்டு அவளை குத்தம் சொல்றீங்களா. உங்கள..... - அவன் பல்லைக் கடித்துக்கொண்டு அவரை சட்டையைப் பிடித்துத் தூக்கினான்.
அண்ணா ப்ளீஸ். வா போகலாம்.
நிஷா அவனைப் பேசவிடாமல் தடுத்துவிட்டு கண்களைத் துடைத்துக்கொண்டே திரும்பி நடந்தாள். அவருடைய தப்பு... திருத்தக்கூடியது. தன்னுடைய தப்பு... திருத்த முடியாதது.
என்ன நிஷா இப்படி ஆகிடுச்சு? என்றான் ராஜ். அவர் மேல கேஸ் போடப்போறேன் என்றான்.
அந்தப் பொண்ணு காவ்யா பாவம்ணா. அவ வாழ்க்கையை நான் கெடுக்க விரும்பல.
நிஷா நீ ரொம்ப நல்லவ. உனக்கு ஏன் இப்படிலாம் நடக்குது. நீ எப்படிம்மா தப்பு பண்ணுன?
என் நிலைமைக்கு சீனு மட்டும் காரணம் இல்லைண்ணா. நானும்தான் காரணம். என் ஆசைகளை புருஷன்கிட்ட தனிச்சிக்கணும்னு நினைக்காம, அதுக்கு என்ன பண்ணனும்னு யோசிக்காம சுலபமா ஒரு வழி கிடைச்சதேன்னு படுகுழில போய் விழுந்துட்டேன். என்ன மன்னிச்சிடுண்ணா உங்களை எல்லாம் ரொம்ப கஷ்டப்படுத்துறேன் என்று அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்.
இப்போ.. நான் கர்ப்பமா இருக்கவேண்டியது!!! - அவள் குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
அவள் அழுகை அவன் நெஞ்சைப் பிளந்தது.
அவனுக்கு என்னென்னவோ தோன்றியது. சீனு... நிஷாவை பற்றி தப்பாக யாரிடமும் சொல்லவில்லை. அவளை வீடியோ எடுக்கவில்லை. பின்னாடி அவளை மிரட்டலாம் என்று எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால்... அவன் நிஷாவுக்காக எந்த ரிஸ்க்கும் எடுக்கத் தயாராக இல்லை. நிஷாவை மட்டுமே நினைத்துக்கொண்டும் இல்லை. கையில் வந்து விழுந்தால் லாபம் என்று இருந்திருக்கிறான். நிஷாவை நல்லா யூஸ் பண்ணியிருக்கிறான். என் தங்கையின் வாழ்க்கையை கெடுத்திருக்கிறான். இதையெல்லாம் கவனிக்காமல் நான்... ச்சே... இனிமேலும் இப்படி இருந்துவிடக்கூடாது.
நிஷாவின் குணத்துக்கும் அழகுக்கும் ஊரில் ஒரு நல்ல கணவன் கண்டிப்பாகக் கிடைப்பான்.
நீ கவலைப்படாதே நிஷா. தீபாவுக்கும் கதிருக்கும் கல்யாணம் நடக்குறதுக்குள்ள உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை நாங்க அமைச்சுத் தருவோம்.... என்றான்.
நிஷா அழுதுகொண்டே இருந்தாள். சாப்பிடாமல் கிடந்தாள். அந்த வீட்டில் அனைவருக்கும் கஷ்டமாக இருந்தது.
சீனு அவளிடம் அழுது கெஞ்சி இனிமேல் இப்படி பண்ணவே மாட்டேன் நீதான் என் உயிர் என்று கதறுவான் அழுது தவிப்பான் என்று எதிர்பார்த்தாள். ஆனால் அதில் பாதி கூட நடக்கவில்லை. நொந்துபோனாள்.
எனக்கு வேணும், என் மதிப்பையெல்லாம் நானே கெடுத்துக்கிட்டேன். நான் ஒரு அசிங்கம். நான் ஒரு அரிப்பெடுத்தவ. நான் ஒரு துரோகி. நான் ஒரு பைத்தியக்காரி. நான் ஒரு ஏமாளி.
அவள் தன்னைத்தானே திட்டினாள். அழுது அழுது ஓய்ந்தாள். அழகிழந்து கிடந்தாள்.
மலர், பாட்டியின் ஊரிலிருந்து திரும்பி வந்தாள். நிஷாவின் விஷயம் கேள்விப்பட்டதும் அவளைக் கேவலமாகப் பார்த்தாள்.
இவங்க ஆஹா ஓஹோன்னு இவளை புகழும்போதே நெனச்சேன். உள்ளே ஓட்டையாத்தான் இருக்கும்னு.
மலர், தன் மாமனாரிடம் நல்ல பெயர் எடுப்பதற்காக, கதிரை நான் சம்மதிக்க வைக்கிறேன் என்று வாக்கு கொடுத்தாள். கதிரின் அம்மாவிடம் பேசினாள். நல்ல படிப்பு, கம்யூனிகேஷன் இருக்கு அப்புறம் ஏன் விவசாயம் பார்க்கணும்? என்றாள். சீக்கிரம் நானும் ராஜ்ஜும் அங்கே விருந்துக்கு வருகிறோம் அப்போ விவரமாக பேசுவோம் என்றாள். நிஷாவை காப்பாற்றியதிலிருந்து, அவன் தீபாவுக்கு ஏற்றவன், கிராமத்தில் இருக்கவேண்டியவன் அல்ல என்று இவர்கள் முடிவு செய்துவிட்டார்கள்.
எல்லோரும் அவளை மதிப்போடு பார்த்தார்கள்.
நிஷா ரொம்ப down ஆக இருந்தாள். ராஜ் ஆறுதல் சொன்னான்.
நீ கவலைப்படாதே நிஷா உன்ன கண்ணன்கிட்ட சேர்த்து வைக்கவேண்டியது என் பொறுப்பு.
வேணாம்ணா. அவர் ஒத்துக்கறதுக்கு வாய்ப்பு குறைவு
எனக்காக வா நிஷா. இந்த விஷயத்துல அடம் பிடிக்கக்கூடாது.
அவன் நிஷாவைக் கூட்டிக்கொண்டு போனான். கண்ணன் இப்போது வேறு வீட்டில் இருந்தார். காலிங்க் பெல் அடித்ததும் காவ்யா வந்து கதவைத் திறந்தாள்.
நிஷா, முகத்தில் எந்த உணர்ச்சியுமற்று இருந்தாள். ராஜ் பவ்யமாக நின்றான்.
கண்ணனை பார்க்கணும்
வ... வாங்க
கண்ணன் நிஷாவை பார்த்தார். அவள் அழுது அழுது முகம் வீங்கியிருப்பது தெரிந்தது.
ராஜ் அவரிடம் கெஞ்சினான். அவள் உணர்ச்சிகளுக்கு அடிமையாகி தப்பு செய்துவிட்டாள். திருந்திவிட்டாள். இனி உங்களுக்காக மட்டுமே வாழுவாள். அவளை தயவுசெய்து ஏத்துக்கோங்க என்றான்.
கண்ணனுக்கு அவர்களைப் பார்க்கப் பாவமாக இருந்தது. ஆனால் சூழ்நிலை முற்றும் மாறியிருந்தது. இந்த சில மாதங்களில் என்னென்னவோ நடந்துவிட்டது.
அவர் தயங்கித் தயங்கிச் சொன்னார்.
ஸாரி ராஜ்... காவ்யா இப்போ கர்ப்பமா இருக்கா.
அதுவரை அமைதியாய்... தலைகுனிந்து நின்றுகொண்டிருந்த நிஷா ஓஓஓஓஓ.... என்று தாங்கமுடியாமல் முகத்தை மூடிக்கொண்டு அழுதாள். ராஜ் கோபமாக கண்ணனின் சட்டையைப் பிடித்து உலுக்கி, தள்ள.... அவர் சோபாவில் போய் விழுந்தார். சோபாவோடு சேர்ந்து சாய்ந்து தரையில் கிடந்தார்.
அவரை எதுவும் செய்யாதேண்ணா.... நிஷா பதறிக்கொண்டு அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினாள்.
இது அநியாயம். டிவோர்ஸ் அப்ளை பண்ணி ஒரு வருஷம் முடியறதுக்குள்ள நீங்க இப்படிப் பண்ணது அநியாயம்
அவன் கண்ணனைப் பார்த்துக் கத்த, அவர் அமைதியாகச் சொன்னார். நிஷா வேற எந்த விஷயத்துல தப்பு பண்ணியிருந்தாலும் நான் மன்னிச்சு ஏத்துக்கிட்டிருப்பேன் ராஜ். வேற எந்த விஷயத்துல தப்பு பண்ணியிருந்தாலும்!
இதுக்கு காரணம் நீங்க. நீங்க அவளை கவனிக்காம விட்டுட்டு அவளை குத்தம் சொல்றீங்களா. உங்கள..... - அவன் பல்லைக் கடித்துக்கொண்டு அவரை சட்டையைப் பிடித்துத் தூக்கினான்.
அண்ணா ப்ளீஸ். வா போகலாம்.
நிஷா அவனைப் பேசவிடாமல் தடுத்துவிட்டு கண்களைத் துடைத்துக்கொண்டே திரும்பி நடந்தாள். அவருடைய தப்பு... திருத்தக்கூடியது. தன்னுடைய தப்பு... திருத்த முடியாதது.
என்ன நிஷா இப்படி ஆகிடுச்சு? என்றான் ராஜ். அவர் மேல கேஸ் போடப்போறேன் என்றான்.
அந்தப் பொண்ணு காவ்யா பாவம்ணா. அவ வாழ்க்கையை நான் கெடுக்க விரும்பல.
நிஷா நீ ரொம்ப நல்லவ. உனக்கு ஏன் இப்படிலாம் நடக்குது. நீ எப்படிம்மா தப்பு பண்ணுன?
என் நிலைமைக்கு சீனு மட்டும் காரணம் இல்லைண்ணா. நானும்தான் காரணம். என் ஆசைகளை புருஷன்கிட்ட தனிச்சிக்கணும்னு நினைக்காம, அதுக்கு என்ன பண்ணனும்னு யோசிக்காம சுலபமா ஒரு வழி கிடைச்சதேன்னு படுகுழில போய் விழுந்துட்டேன். என்ன மன்னிச்சிடுண்ணா உங்களை எல்லாம் ரொம்ப கஷ்டப்படுத்துறேன் என்று அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்.
இப்போ.. நான் கர்ப்பமா இருக்கவேண்டியது!!! - அவள் குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
அவள் அழுகை அவன் நெஞ்சைப் பிளந்தது.
அவனுக்கு என்னென்னவோ தோன்றியது. சீனு... நிஷாவை பற்றி தப்பாக யாரிடமும் சொல்லவில்லை. அவளை வீடியோ எடுக்கவில்லை. பின்னாடி அவளை மிரட்டலாம் என்று எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால்... அவன் நிஷாவுக்காக எந்த ரிஸ்க்கும் எடுக்கத் தயாராக இல்லை. நிஷாவை மட்டுமே நினைத்துக்கொண்டும் இல்லை. கையில் வந்து விழுந்தால் லாபம் என்று இருந்திருக்கிறான். நிஷாவை நல்லா யூஸ் பண்ணியிருக்கிறான். என் தங்கையின் வாழ்க்கையை கெடுத்திருக்கிறான். இதையெல்லாம் கவனிக்காமல் நான்... ச்சே... இனிமேலும் இப்படி இருந்துவிடக்கூடாது.
நிஷாவின் குணத்துக்கும் அழகுக்கும் ஊரில் ஒரு நல்ல கணவன் கண்டிப்பாகக் கிடைப்பான்.
நீ கவலைப்படாதே நிஷா. தீபாவுக்கும் கதிருக்கும் கல்யாணம் நடக்குறதுக்குள்ள உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை நாங்க அமைச்சுத் தருவோம்.... என்றான்.