அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
#67
பாகம் - 15


என்னடா, இப்படி மடத்தனம் பண்ணிட்டே, செத்த இன்னைக்கு, உன்ன கொல்லப் போறா!, என்னை நானே திட்டிக் கொண்டு டைனிங் ஏரியாவில் தேட, அங்கு என்னை முறைத்தவாறு இருந்தாள். நான் அவளுக்கு எதிர் இருக்கையில் சென்று அமர்ந்தேன், அமைதியாக. தலையைக் குனிந்தவாரே, அங்கிருந்த மெனு காரட்டைப் புரட்டினேன். சிறிது நேரத்துக்கு பிறகு நான் நிமிர்ந்து பார்க்க, இன்னும் என்னை முறைத்தவாரே இருந்தாள்.

நான் அவளைப் பார்த்து கண்களால் கெஞ்ச, வெயிடரை அழைத்தவள், ஒரு பீர் சொன்னாள். நான் கண்களால் கெஞ்சிக் கொண்டே, டேபிளில் இருந்த அவள் கைகள் பிடிக்க போக, அவளின் முறைப்பின் வன்மம் கூடியது, நான் கையை எடுத்துக் கொண்டேன். சிறிது நேரதில் ஒரு டீன் பீர் வந்தது

மேடம், ஓபன் பன்னிரலாமா?”னு வெயிடர் கேக்க

எஸ் பிளீஸ்"னு மது சொல்ல, பீர் ஓபன் பண்ணி,, அவள் அருகில் வைத்தார் வெயிடர்,

பீரை எடுத்து என் பக்கம் வைத்தாள், நான் அமைதியாக முன்னால் இருந்த டேபிளை பார்த்துக் கொண்டிருந்தேன்,

எடுத்துக் குடி!”னு அவள் சொல்ல, நான் தலை குனிந்தபடி, அமைதியாக இருந்தேன்.

பச்,,,,எடுத்துக் குடி, டைம் ஆச்சு, கிளம்பனும்!”னு அவள் சொல்ல, நான் நிமிர்ந்து பார்த்தேன்.

அவள் பார்த்த பார்வையில்,, "முன்னால் இருக்கும் பீரை குடித்து விட்டு, பின்னால் வரப்போகும் தாக்குதலுக்கு ரெடியா இருனு" இருந்த அர்த்தத்தை நானே புரிந்து கொண்டு பீரை எடுத்து ஒரு கலப் இறக்க, குமாட்டிக் கொண்டு வந்தது. அதன் ருசி எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அப்படியே டேபிளில் இருந்த கிளாஸில்,, வாயில் இருந்த பீரை துப்பினே. வ்வோக்னு சொல்லி, வாயில் போட ஏதாவது கிடைக்குமானு தேட, சிரிப்பு சத்தம், மது சிரித்துக் கொண்டிருந்தாள்.

அப்பாடா என்று இருந்தது, அவள் சிரிப்பதை நான் பார்ப்பதை உணர்ந்தவள், சிரிப்பாதை நிறுத்திக் கொண்டாள். எனக்கு நன்றாக புரிந்தது இது வழக்கமான கோபம் இல்லை, கொஞ்ச நாள் என்னய்யா வச்சு செய்வானு. சரி நடப்பது நடக்கட்டும்னு பழினி முருகன் மேல பாரத்தப் போட்டுட்டு, அவளைப் பார்த்தேன்,, முறைத்தபடியே இருந்தாள், ஆனால் முகத்தில் பழைய கோபம் இல்லை. நான் வெயிடர் அழைத்து ஒரு கோக் கேட்டு வாங்கி குடித்த பின்தான், அந்த பீரின் ருசி வாயில் இருந்து போனது. கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக்கொண்டு, மதுவைப் பார்த்து

“ரொம்ப.., சாரி மது, பிளீஸ் இந்த ஒருதடவா மன்னிச்சிறு, என் பிறந்தநாளும் அதுவுமா, என் கூட பேசாம இருக்காதே,,,பிளீஸ்,,வேணும்னா ரெண்டு அடி கூட அடிச்சுக்கோ"னு நான் கெஞ்ச, அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கவே, நான் தலையை குனிந்து கொண்டேன். எழுந்து என் அருகில் வந்தவள்

போலாம்!”னு சொல்ல, நான் பதில் ஏதும் பேசாமல், தரையைப் பார்த்துக் கொண்டு இருந்தேன்.

"எண்ணப் பாரு!”னா, நான் அசையாது இருந்தேன்

டேய்,, இப்போ பார்க்க போறியா இல்லையா?”னு

அவள் திரும்பவும் கேக்க, நிமிர்ந்து அவளைப் பார்த்தேன், கன்னத்தில் பளார்னு வலிக்கும் படியாகவே அடித்தாள்.

உனக்கு பிறந்தநாள், அதனால இத்தொட விடுறேன், ஆனா நாளைக்கு முதல் வேலையா நீயே என்னத்தேடி வந்து அடி வாங்குற!"னு அவள் சொல்ல,

அவள் அடித்ததை டைனிங் ஏரியால இருந்த பலர் பாத்தாலும், எனக்கு,, அப்பாடா,, இன்னைக்கு தப்பிச்சோம்னு இருந்தது, அவளப்பார்த்து பாவமாக தலையாட்ட, லேசாக சிரித்தவள்,

வா போலாம்னு" சொல்லி,,

நான் எழுந்ததும் அவள், என் தோள்களில் கை போட்டுக் கொள்ள, நான் கொஞ்சம் மகிழந்து பழனி மலை ஆண்டவனுக்கு நன்றி சொன்னேன், அடுத்த ஆப்பு இன்னும் சில நொடில இருக்கும்னு,, எனக்கு எப்படி தெரியும்!?.

பப் வாசல் அருகே வரும் போது,

ஹே, நீயும் கிளம்பிட்டியா?” ஜினாலியின் சத்தம் கேக்க, திரும்பி சத்தம் வந்த பக்கம் பார்க்க, அவள் அப்போதுதான் ஃபிரெஷ்-ஆகி, ரெஸ்ட்ரூம் விட்டு வெளிய வந்தாள்.

ஹே! பானு நீ எப்போ வந்தே?”னு சொல்லி, பானுவை சோசியல் ஹக் பண்ணிட்டு,, என்னிடம் திரும்பியவள்

ஹாப்பி பர்த்டே எகைன் ஹேண்ட்ஸம்"னு சொல்லி என் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு, எங்கள் இருவருக்கும் பாய் சொல்லி கிளம்பினாள்.

ஜினாலி கொடுத்த முத்தத்தின் இன்ப அதிர்ச்சியில் இருந்து விடு பட்டு, மதுவைப் பார்க்க, திரும்பவும் வேதாளம் முருங்கை மரம் எறியிருந்தது. வேகமாக வெளியே சென்றவள், லிப்டுக்குள் சென்று பட்டனை அழுத்த, நானும் எறிக்கொண்டேன். லிப்ட் டோர் அடைக்கவும், என்னைப் பார்த்து திரும்பியவள் "பளார்" என் கன்னத்தில் அறைந்தாள். இந்த முறை நான் எதிர்பார்க்க வில்லை, நன்றாகவவே வலித்தது, இருந்தும் ஏனோ எனக்கு கோபம் வரவில்லை.

என்ன இருந்தாலும் தப்பு என் மீது என்ற காரணம், ஜினாலியின் முத்தத்தால் கிடைத்த சந்தோஷம், இவை எல்லாத்தையும் விட மதுதானே என்கிற எண்ணம் காரணமாக இருக்கலாம். லிப்ட் நிறதும் வெளியேறினாள், நானும் அவளைப் பின் தொடர்ந்தேன், சுற்றிப் பார்த்து சிறிது குழப்பம் அடைந்தேன்,

மது, ஃபுளோர் மாறிட்டோம், இது தர்ட் ஃபுளோர்!"னு சொல்ல,

நின்று,, என்னைப் பார்த்து முறைத்தாள், அந்த முறைப்புக்கு "மூடிக்கிட்டு இரு, எல்லாம் தெரிஞ்சு தான் பண்ணுறேன்"னு அர்த்தம், அது புரிய, நான் அமைதியானேன். சென்றவள் ஸ்மார்ட் காரட் வச்சு ஒரு அறையை திறந்து உள்ளே சென்றாள், சில நொடிகள் தாமதித்து, நானும் குழப்பத்துடன் நுழைய, அவள் அங்கே இருந்த சோபாவில் அமர்ந்தது என்னையே முறைத்துக் கொண்டிருந்தாள். எனக்கு என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே அமைதியாக போய் அங்கிருந்த சேரில் அமர்ந்தேன்.

"ச்செ!" எவ்வளவு கேவலமா நடந்துக் கிட்டேன்!!, என் பிறந்தநாளுனு காலையில் இருந்து என் கூடவே இருந்துருக்கா!!, நான் ரெம்ப ஆசப்பட்டேனு இந்த பப்புக்கு கூட்டிடு வந்தா!!, தாத்தா கூட இன்னைக்கு "கூடப் பிறந்த அக்காவ இருந்த கூட இவ்வளவு பாசமா இருப்பானு சொல்ல முடியாது மா" சொன்னப்பா கூட என்ன விட்டுக்கொடுக்காம பேசினவள!!, அந்த ஜினாலி வந்ததும், அம்போனு விட்டுட்டு, அவ கூட ஆட போய்டேனே. இவள திரும்பிக் கூட பார்க்கலையே, எவ்வளவு அவமானமா இருந்திருக்கும் மதுவுக்குனு,, நினைக்க என் மேல எனக்கே வெறுப்பு!!, அடக்க முடியாத கோபம்!!.

[Image: USUlRcZ.jpg]

சின்ன விசும்பல் சத்தம் கேட்கவும், நான் பட்டுனு அவளைப் பார்க்க, அவள் கைகளில் முகம் புதைத்து அழுது கொண்டிருந்தாள். எனக்கு என்ன செய்யுறதுனு தெரியல, அவள்ட்ட பேசுனா இன்னும் கோபாபடுவானு மட்டும் நல்ல தெரிஞ்சது. கொஞ்ச நேரம் அவளையே பார்க்க, அவள் அழுவதைப் பொறுக்க முடியாமல், எழுந்து,, ரூம்மை விட்டு வெளியேறி, அருகிலேயே சுவற்றில் தலையை முட்டிக்கொண்டு நின்றேன், என்ன செய்வதென்று அறியாமல்

நான் வெளியே வந்து பத்து நொடி கூட இருக்காது,,,என் தோளில் யாரோ தட்ட,,,பார்த்தால் மது,,,அதே முறைப்புடன், ஆனால் இந்தமுறை அந்த முறைப்பில் கொஞ்சம் இரக்கமும், பரிதவிப்பும் இருந்தது. நான் ஏன் ரூம்மை விட்டு வெளியே சென்றேன் என்ற பரிதவிப்பு. கண்களை துடைத்திருப்பாள் போல, ஓரங்களில் ஈரம் இருந்தது. கதவை முழுதாக திறந்து, என்னை உள்ளே போக சொல்லி கண்களாலும், தலை அசைத்தும் சொன்னாள். நான் சிலை போல அப்படியே நின்று கொண்டிருக்க, இப்பொழுது அவள் முறைப்பின் கணம் கூடியது. நான் அவளப் பாவமாக பார்த்தவாறே, உள்ளே செல்ல, கதவை அடைத்துவிட்டு வந்தவள், நேராக பாத்ரூம் சென்றாள்.

நான் நேராக சென்று அவள் அமர்ந்திருந்த சோபாவில் அமர்ந்தேன், முகம் கழுவிட்டு வந்தவள், என் அருகில் என்னைப் பார்த்தவாறு அமர்ந்ததாள்,

சாரி டா, என்ன இருந்தாலும் உன்ன எல்லோர் முன்னலையும் அடிச்சிருக்க கூடாது, ஏன்னு தெரியல,,, இப்போ எல்லாம் என் கை ரெம்ப நீளுது, சாரிடா!”னு சொல்லி, என்ன இரு கன்னங்களையிம் கையில் ஏந்தி, அவளப் பார்க்கும் மாறு திருப்ப, நான் தான இவளிடம் மன்னிப்புக் கேக்கணும், தப்பு எல்லாம் என் மேல இருந்தும், என் மீது இவள் காட்டும் கரிசனத்தில் நெக்குருகி, இவளைப் பார்த்து திரும்பி அமர்ந்து,

நான் தான் சாரி சொல்லணும், தப்பு என் மேலதான், நீ அடிச்சதெல்லாம் சரிதான்!”னு சொல்ல

உண்மையிலேயே ஜினாலிய லவ் பண்ணுரியா?”னு அவள் கேக்க, எனக்கு எதுக்கு இவள் இப்போ சம்பந்தமே இல்லமா கேக்குறா? ஒரே குழப்பம்!. பதில் சொல்லாமல் அவளையே பார்க்க,, 

சாரிடா, பிறந்த நாளுனு கூடப் பாக்காம,, ரெண்டு தடவ அடிச்சசுட்டேன்!”னு அவள் மறுபடியும் மன்னிப்புக் கேக்க, உள்ளுக்குள் கொஞ்சம் நிம்மதி, இப்போதைக்கு அவா கூட ஆடுநடுனத வச்சு சண்ட போட மாட்டானு 

அடிச்சத நினச்செல்லாம்,, நீ பீல் பண்ணாதே,, நீ தான அடிச்ச,,, இட்ஸ் ஓகே"னு சொல்லி நான் அவளின் கன்னத்தை கிள்ள 

ரொம்ப வலிச்சதா?”னு என் கன்னங்களை தடவிக் கொண்டே, வருத்தத்தோடு கேக்க, அவள் வறுத்தப் படுவதை தாங்காத நான் 

வேற ஏதாவது பேசுவோமே, நீ அடிச்சதையே நினச்சு பீல் பண்ணாத!”நான் சொல்ல 

ஐ லவ் யு! டா!”னு அவள் சொல்ல, சிரித்தவாரே எப்பொழுதும் போல 

மீ டூ,, மது"னு சொல்லி 

வாஞ்சையாக,, அவளைக் கட்டிப் பிடிக்க போக, அதற்கு முன்,, அவளே முன் நகர்ந்து, பிடித்திருந்த கைகளால் என் முகத்தை இழுத்து, என் உதடுகளில் முத்தமிட்டாள்

-------------------------------------------
[+] 7 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 14-07-2020, 10:26 PM



Users browsing this thread: 8 Guest(s)